Wednesday, November 24, 2021

திருக்குறள் - அன்புடைமைக்குப் பின்

 திருக்குறள் - அன்புடைமைக்குப் பின் 


திருக்குறளின் அதிகார முறைமையே நம்மை பிரமிக்க வைக்கும். 


முதலில் இந்த உலகைப் படைத்த கடவுளுக்கு கடவுள் வாழ்த்துச் சொன்னார். 


அடுத்தது, 


படைத்த உலகத்தை காக்க வேண்டி இறைவன் அளிக்கும் கொடையான மழையைப் போற்றி வான் சிறப்பு பற்றி கூறினார். 


உலகம் வந்தாகி விட்டது, மழையால் அது நிலை பெற்று விட்டது, இந்த உலகில், அதில் உள்ள இயற்கையின் இரகசியங்களை அறிந்து சொல்லும் நீத்தார் பெருமை பற்றி கூறினார். 


அடுத்தது, 


அவர் சொல்லும் அறங்களின் பெருமை பற்றி அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரத்தை வைத்தார்.


அடுத்தது, அறம் என்பது இல்லறம், துறவறம் என்று இரண்டாகப் பிரியும். எனவே இல்லறம் பற்றி சொல்ல மேற்கொண்டு இல்வாழ்க்கை என்ற அதிகாரம் செய்தார். 


அடுத்தது, அந்த இல்லறம் சிறக்க வேண்டும் என்றால், ஒரு பெண்ணின் துணை வேண்டும். எனவே, "வாழ்க்கை துணை நலம்" பற்றி கூறினார். 


அடுத்தது, திருமணம் செய்து கொண்டு, மனைவியோடு இல்லறம் நடத்தும் போது அன்பின் விரிவாக்கம் நிகழும். அதன் அடுத்த கட்டமாக "புதல்வர்களைப் பெறுதல்" பற்றி கூறினார். 


அடுத்தது, மனைவி, பிள்ளைகள் என்று ஆகி விட்டது. அந்த இல்லறம் சிறக்க வேண்டும் என்றால் அங்கு அன்பு பெருக வேண்டும். எனவே, "அன்புடைமை" பற்றி கூறினார். 


அடுத்து என்னவாக இருக்கும் ?


கணவன், மனைவி, பிள்ளைகள், அன்பு செய்யும் இல்லறம் என்று ஆகி விட்டது. 


அடுத்து என்ன? 


இல்லறம் விரிய வேண்டும். தன் வீட்டை கடந்தும் அன்பு பெருக வேண்டும், அதற்காக 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_24.html


Please click the above link to continue reading



"விருந்தோம்பல்" 


பற்றி கூறப் போகிறார். 


வீடு என்று ஒன்று இருந்தால்,  நாலு பேர் வந்து போக வேண்டும். 


நான், என் மனைவி, என் பிள்ளை என்று இருக்க முடியுமா?  சுற்றம் சூழ இருக்க வேண்டாமா?


எப்படி விருந்தை போற்றுவது என்று கூற இருக்கிறார். 


விருந்தை போற்றுவதை ஒரு அறமாகச் சொன்னது நம் மொழியாகத்தான் மட்டும் இருக்கும். 


விருந்தை எல்லோரும் உபசரிப்பார்கள்.  ஆனால், அதை தர்மமாக, அறமாகச் சொன்னது நம் நாட்டுக்கே உரிய பண்பாடு, கலாசாரம். 


விருந்தினர்களை தெய்வத்துக்கு இணையாக வைத்து போற்றியது நம் நாடு. 


அதிதி தேவோ பவா 


என்று போற்றியது நம் நாடு. 


விருந்தோம்பலில் உச்சம் தொட்டு காட்டுவார் வள்ளுவர். 


விருந்தோம்பல் பற்றி இனி வரும் நாட்களில் சிந்திப்போம். 




No comments:

Post a Comment