Showing posts with label அனுமன். Show all posts
Showing posts with label அனுமன். Show all posts

Monday, July 30, 2012

கம்ப இராமாயணம் - பிறவிப் பெருங்கடலை தாண்ட


கம்ப இராமாயணம் - பிறவிப் பெருங்கடலை தாண்ட


சீதை அனுமனை கேட்கிறாள் "நீ எப்படி இந்த கடலை தாண்டினாய்"

அனுமன்: "அம்மா, உன் துணைவனின் (இராமனின்) திருவடிகளை ஒரு மனத்தோடு சிந்திப்பவர்கள், முடிவே இல்லாத மாயா என்ற கடலையே கடந்து விடுவார்கள். அது போல, அந்த திருவடியை மனத்தில் நினைத்துக் கொண்டு இந்த கடலை தாண்டினேன்

பிறவிப் பெருங்கடலையே தாண்டும் போது, இந்த கருங் கடல் எம்மாத்திரம் 

Sunday, June 17, 2012

கம்ப இராமாயணம் - மாசு என்று வீசினேன்


கம்ப இராமாயணம் - மாசு என்று வீசினேன் 


அனுமன் சீதையை அசோகவனத்தில் பார்க்கிறான்.

அவனுக்கு துக்கம் தாங்கவில்லை.

"என் தோளின் மேல் ஏறிக்கொள், இப்போதே உன்னை இராமனிடம் சேர்பித்து விடுகிறேன்..மத்தது எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்" என்றான். 

சீதை பதில் சொல்கிறாள்....

"துன்பம் தரும் விலங்குகளைப் போல உள்ள இந்த இலங்கை எம்மாத்திரம் ? 

எல்லையில்லா இந்த உலகம் அனைத்தையும் என் ஒரு சொல்லினால் சுட்டு எரித்து விடுவேன்.

நான் அப்படி செய்தால், அது இராமனின் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று நினைத்து அந்த எண்ணத்தை கூட குற்றம் என்று நினைத்து தூக்கி எரிந்து விட்டேன்" என்றாள்

நினைத்துப் பாருங்கள்.

ஒரு வேளை சீதை அவளே இராவணனை எரித்து விட்டு, நேரே இராமன் முன் வந்து நின்றால், எப்படி இருந்திருக்கும்?

இராமனை பற்றி இந்த உலகம் என்ன நினைக்கும் ?

கட்டிய மனைவியை எதிரியிடம் இருந்து காப்பாற்றத் தெரியாதாவன் என்று அல்லவா நினைக்கும்?

அந்த நினைப்புக்கு இடம் தரா வண்ணம் சீதை பொறுமை காத்தாள்.

அந்தப் பாடல்

Sunday, May 6, 2012

கம்ப இராமாயணம் - திருவடி சுமந்த அனுமன்


கம்ப இராமாயணம் - திருவடி சுமந்த அனுமன்


யுத்த காண்டம். 

இராவணன் களம் புகுகிறான். தேரில் வருகிறான். 

இராமன் தரையில் நிற்கிறான். 

அனுமன் இராமனை தன் தோளில் ஏற்றி கொள்கிறான். 

சாதாரண நிகழ்வு தான். 

ஆனாலும் கம்பன் யார் யார் எல்லாம் எப்படி எல்லாம் பாதிக்கப் பட்டார்கள் இதனால் என்று கற்பனை செய்கிறான்.

உலகளந்த பெருமானை தன் தோளில் தாங்கிய அனுமனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

திருமாலை தூக்கிச் சுமந்த கருடனுக்கு பொறாமை.

மாலோனை தாங்கிய ஆதி சேஷனுக்கு தலை நடுக்கம். 

நம்மால் தான் முடியும் என்றிருந்தோம், அனுமன் இராமனை தூக்கி தன் தோளில் வைத்து கொண்டானே என்று.

மாணியாய் உலகு அளந்த நாள்அவனுடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்;
காணி ஆகப் பண்டு உடையனாம் ஒரு தனிக் கலுழன்
நாணினான்மற்றை அனந்தனும்தலை நடுக்குற்றான்.

மாணியாய் = மாவலிக்காக

உலகு அளந்த நாள் = அன்று உலகு அளந்த நாள்

அவனுடை வடிவை = அவனுடைய வடிவை (குள்ள உருவமா ? உலகளந்த பெரிய உருவமா ?)

ஆணியாய் = ஆழமாக, தெளிவாக

உணர் மாருதி = உணர்ந்த மாருதி

அதிசயம் உற்றான் = அதிசயம் அடைந்தான். அவ்வளவு பெரிய ஆளை நம் தோளில் தூக்கி விட்டோமே என்று அவனுக்கு ஆச்சரியம்

காணி ஆகப் = காணி என்றால் பரம்பரை உரிமை. பிறப்பால் கிடைக்கும் உரிமை.

பண்டு உடையனாம் = முன்பே உடைய

ஒரு தனிக் கலுழன் = கலுழன் என்றால் கருடன். ஒரு தனிச் சிறப்பு மிக்க கருடனும்

நாணினான் = வெட்கம் அடைந்தான்

மற்றை அனந்தனும் = ஆதி சேடனும்

தலை நடுக்குற்றான். = தலை நடுக்கம் கொண்டான்


Wednesday, May 2, 2012

கம்ப இராமாயணம் - கண்டனன், கண்களால் ?




கம்ப இராமாயணம் - கண்டனன், கண்களால் ?


அந்த காலத்தில் புகை படம் கிடையாது. 

இராமன் கானகத்தில் இருக்கிறான். சீதையை பற்றி அனுமனிடம் அடையாளம் சொல்லி அனுப்ப வேண்டும். என்ன சொல்லுவது ?

யோசித்துப் பாருங்கள். அவ சிவப்பா, உயரமா, அழகா இருப்பா அப்படின்னு சொல்லாலாம். 

இது ஒரு அடையாளமா ? அனுமனும் சென்று சீதையை பார்த்து விட்டு வந்து சொல்கிறான் இராமனிடம். இராமன் எப்படி நம்புவான் ? 

யாரையாவது பார்த்து விட்டு வந்து சீதையை பார்த்ததாக நினைக்கலாம் அல்லவா ? 

பார்த்தது சீதை தான் என்று அனுமனுக்கும் சந்தேகம் வரக் கூடாது, அனுமன் சீதையை தான் பார்த்த்தான் என்று இராமனும் நம்ப வேண்டும். 

தெளிவு படுத்தவது கம்பன். 

சொல்லில் விளையாடுகிறான். 

கண்டனென்கற்பினுக்கு அணியைகண்களால்,
தெண் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக !இனிதுறத்திஐயமும்
பண்டு உள துயரும்என்றுஅனுமன் பன்னுவான்;

கண்டனென் = நான் கண்டேன்

கற்பினுக்கு அணியை = கற்புக்கு அணிகலமாய் திகழும் சீதையை

கண்களால் = கண்களால். அது என்ன கண்களால் ? எல்லாரும் 

கண்களால் தான் பார்ப்பார்கள். அது தான் முதல் வார்த்தையிலேயே சொல்லியாச்சே "கண்டெனன்" அப்படின்னு.

சொல்லுவது கம்பன். 

பயனிலாத சொல்லை சொல்லுவானா ? 

அவள் கற்பின் அணி என்பதை அவளுடைய கண்களை கொண்டு நான் கண்டு கொண்டேன் என்று அர்த்தம்.

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் 

கண்டெனன் கற்பினுக்கு அணியினை (அவளின்) கண்களால் என்று பொருள் கொள்ள வேண்டும்.

தெண் = தெளிந்த

திரை அலைகடல் = சுருள் சுருளாக அலைகளை கொண்ட கடல்

இலங்கைத் தென் நகர் = இலங்கை என்ற தெற்கில் உள்ள நகரில்

அண்டர் நாயக = தேவர்களின் நாயகனே

இனிதுறத்தி = இனி துறந்துவிடு

ஐயமும் = சந்தேகத்தையும்

பண்டு உள துயரும் = பழைய துயரையும்

என்றுஅனுமன் பன்னுவான்; = என்று அனுமன் சொல்லுவான் 

Friday, April 13, 2012

கம்ப இராமாயணம் - சீதை கேட்ட வரம்


கம்ப இராமாயணம் - சீதை கேட்ட வரம்


அசோகவனத்தில் அனுமன் சீதையை கண்டான். அப்போது, அனுமன் மூலம் சீதை இராமனிடம் ஒரு வரம் கேட்கிறாள்.

நான் ஒரு வேளை இந்த அசோகவனத்திலேயே இறந்து விட்டால், மீண்டும் பிறந்து வந்து இராமனின் திரு மேனியை தீண்டும் வரம் சீதை தொழுது வேண்டினாள் என்று இராமனிடம் சொல்லுவாய் என்றாள்.


இராமன் திருமேனி எப்படி பட்டது?....சீதையே சொல்லுகிறாள்....

கம்ப இராமாயணம் - இலங்கை வர்ணனை




வருணனை என்பது சற்று கடினமான காரியம்.

வாசகன் எளிதாக skip பண்ணக்கூடிய இடம் வருணனை. அதையும் தாண்டி, வாசகனை, அந்த வருணனையை படிக்க, இரசிக்க வைக்க வேண்டும் என்றால் ரொம்ப மெனக்கடனும்.

அதுவும், ஒரு ஊரைப் பற்றி வருணனை என்றால் இன்னும் கஷ்டம்.

ஒரு அழாகான பெண், அல்லது ஆண் என்றால் படிப்பவர்களுக்கு ஒரு ஆர்வம் இயற்கையாக இருக்கும்.

ஊரை பற்றி என்ன எழுத முடியும் ?


கம்பன் வர்ணிக்கும் ஒவ்வொரு இடமும் அத்தனை அருமை. அடடா என்று நம் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்கும் இடங்கள்.

கம்பனின் வருணனைகள் என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சியே பண்ணலாம்.


அனுமன் முதன் முதாலாய் இலங்கைக்குள் நுழைகிறான். இலங்கை எப்படி இருக்கிறது ?


மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும் என்று நாம் எழுதுவோம். கம்பன் என்ன சொல்கிறான்.

Thursday, April 12, 2012

கம்ப இராமயாணம் - இறைவனும் பக்தனும்





இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே உள்ள உறவு மிக நுணுக்கமானது.

அதை அருகில் இருப்பவர்கள் கூட அறிந்து கொள்ள முடியாது. 

பக்தன் இறைவனை அறிவான்.

இறைவன் பக்தனை அறிவான்.

இதை பக்தன் வெளியே சொன்னாலும் மற்றவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

பக்தனை விடுங்கள். இறைவனே சொன்னாலும் புரியாது.
 
இராமயணத்தில் ஒரு இடம். அனுமன் இராமனைப் பார்க்கிறான். அனுமனுக்கு இராமன் யார் என்று தெரிகிறது. இராமனுக்கும் அனுமனைப் புரிகிறது. ஆனால் அவர்கள் இடையே இருந்த லக்ஷ்மணனுக்கு அங்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை.

அந்த இடம்.....