Showing posts with label இராவணன். Show all posts
Showing posts with label இராவணன். Show all posts

Wednesday, May 30, 2012

கம்ப இராமாயணம் - இராவணனை கொன்றது இராமன் அல்ல!


கம்ப இராமாயணம் - இராவணனை கொன்றது இராமன் அல்ல!


உலகம் எல்லாம் நினைத்து கொண்டு இருக்கிறது இராவணனை கொன்றது இராமன் என்று.

மண்டோதரி சொல்கிறாள், இராமன் அல்ல இராவணனை கொன்றது, மாரன் (மன்மதன்) என்று.

நாள் எல்லாம் அந்த மன்மதன் இராமன் மேல் மலர் கணை தொடுக்காமல் இருந்திருந்தால், இராவணன் சீதையின் மேல் இவ்வளவு காதல் கொண்டு இருக்க மாட்டான், அவனுக்கும் இந்த அழிவு வந்து இருக்காது என்கிறாள். 
மன்மதனின் கணையும், தேவர்களின் வரமும் இராவணனை கொன்றது என்கிறாள்.


'ஆர் அனார்உலகு இயற்கை அறிதக்கார்அவை ஏழும் ஏழும் அஞ்சும்
வீரனார் உடல் துறந்துவிண் புக்கார்கண் புக்க வேழ வில்லால்,
நார நாள் மலர்க் கணையால்நாள் எல்லாம் தோள் எல்லாம்நைய எய்யும்
மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரேவரத்தினாலே!

ஆர் அனார், = யார் அது

உலகு இயற்கை = இந்த உலகத்தின் இயற்கையை

அறிதக்கார்? = அறிய தக்கவர் (யாரும் இல்லை)

அவை ஏழும் ஏழும் அஞ்சும் = அந்த ஈரேழு உலகும் அஞ்சும்

வீரனார் = வீரனான இராவணன்

உடல் துறந்து, = உடலை துறந்து, விட்டு விட்டு

விண் புக்கார் = வானகம் போனான்

கண் புக்க = கணுக்கள் உள்ள (கரும்பு)

வேழ வில்லால், = கரும்பு வில்லால்

நார நாள் மலர்க் கணையால் = மணம் வீசும் மலர்க் கணையால்

நாள் எல்லாம் = எப்போதும்

தோள் எல்லாம் நைய = தோள் வலிக்க வலிக்க

எய்யும் மாரனார் = எய்யும் மன்மதன்

தனி இலக்கை = இராவணன் மார்பில் அம்பு எய்யும் தைரியம் மன்மதன் ஒருவனுக்கு மட்டும் தான் இருந்தது. "தனி இலக்கு"
மனித்தனார் அழித்தனரே, = அந்த மார்பை, அந்த இலக்கை மனிதன் அழித்து விட்டானே

வரத்தினாலே = வரத்தினாலே (ஆற்றலாலே என்று சொல்லவில்லை.)

(Appeal: If you like this blog, please click g+1 button below to express your liking)

Tuesday, May 29, 2012

கம்ப இராமாயணம் - இராவணன் தழுவிய பெண்கள்


கம்ப இராமாயணம் - இராவணன் தழுவிய பெண்கள்


இராவணன் இறந்து கிடக்கிறான்.

குப்புற விழுந்து கிடக்கிறான்.

அகன்ற மார்பு. பரந்து விரிந்த இருபது கைகள். 

பார்பதர்ற்கு அவன் நிலத்தை கட்டி பிடித்து கொண்டு கிடப்பது போல 

இருக்கிறது. 

விபீஷணன் அவன் மேல் விழுந்து கதறி கதறி அழுகிறான்.

மண்டோதரி புலம்பலை விட சோகம் ததும்பும் பாடல்கள் விபீஷணன் துக்கம் ததும்பும் பாடல்கள்.

அதில் இருந்து இன்னொரு பாடல்...

Saturday, May 26, 2012

கம்ப இராமாயணம் - பார்வை எனும் விஷம்


கம்ப இராமாயணம் - பார்வை எனும் விஷம்


மனிதன் எல்லா இன்பத்தையும் தனியாக அனுபவிக்க முடியும், காதலும் கலவியும் தவிர.

காதலுக்கு இன்னொரு உயிர் வேண்டும்.

என் சந்தோஷத்திற்கு என்னை விட நீ முக்கியம் என்று ஒருவன்/ள் ஒத்துக்கொள்ளும் இடம் காதல்.

இராவணன் காதலுக்கு ரொம்ப ஏங்கி இருப்பானோ ?

அவனுக்கு வேண்டியது எல்லாம் கிடைத்தது, அவன் வீரத்திற்கு பயந்து 
அவன் வேண்டி கிடைக்காதது, ஜானகியின் காதல்.


போரில் இராவணன் இறந்த பின், விபீஷணன் அவன் மேல் விழுந்து அழுகிறான்...

எந்த விஷமும், உண்டால் தான் உயிரைப் பறிக்கும்.

ஆனால், இந்த சீதை என்ற விஷமோ கண்ணில் பார்த்த மாத்திரத்திலேயே உன் உயிரை பறித்து விட்டதே என்று புலம்புகிறான்.



உண்ணாதே உயிர்உண்ணாது ஒருநஞ்சு சனகி என்னும் பெருநஞ்சு உன்னைக்
கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர்நீயும் களப்பட்டாயே
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்றினித்தான் எண்ணுதியோ எண்ணில் ஆற்றல்
அண்ணாவோ அண்ணாவோ அசுரர்கள்தம் பிரளயமே அமரர் கூற்றே

உண்ணாதே = சாப்பிடாமல்

உயிர்உண்ணாது = உயிரை எடுக்காது

ஒருநஞ்சு = எந்த நஞ்சும்

சனகி என்னும் = ஜானகி என்ற

பெருநஞ்சு = பெரிய நெஞ்சு

உன்னைக் = உன்னை

கண்ணாலே நோக்கவே = கண்ணால் பார்த்த மாத்திரத்தில்

போக்கியதே உயிர் = உன் உயிரை போக்கி விட்டதே

நீயும் = நீயும்

களப்பட்டாயே = களத்தில் இறந்து பட்டாயே

எண்ணாதேன் = சிந்திக்கத் தெரியாதவன் (என்று நீ சொல்லிய)

எண்ணிய சொல் = நான் சிந்தித்து சொல்லிய சொல்லை

இன்றினித்தான் = இன்று இனிதான்

எண்ணுதியோ = எண்ணப் போகிறாயோ?

எண்ணில் ஆற்றல் = எண்ணிலாத ஆற்றல் (கொண்ட)

அண்ணாவோ அண்ணாவோ = அண்ணனே அண்ணனே

அசுரர்கள் தம் பிரளயமே = அசுரர்களின் பிரளயம் போல உள்ளவனே

அமரர் கூற்றே = அமரர்களின் (தேவர்களின்) எமனே


Sunday, May 6, 2012

கம்ப இராமாயணம் - திருவடி சுமந்த அனுமன்


கம்ப இராமாயணம் - திருவடி சுமந்த அனுமன்


யுத்த காண்டம். 

இராவணன் களம் புகுகிறான். தேரில் வருகிறான். 

இராமன் தரையில் நிற்கிறான். 

அனுமன் இராமனை தன் தோளில் ஏற்றி கொள்கிறான். 

சாதாரண நிகழ்வு தான். 

ஆனாலும் கம்பன் யார் யார் எல்லாம் எப்படி எல்லாம் பாதிக்கப் பட்டார்கள் இதனால் என்று கற்பனை செய்கிறான்.

உலகளந்த பெருமானை தன் தோளில் தாங்கிய அனுமனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

திருமாலை தூக்கிச் சுமந்த கருடனுக்கு பொறாமை.

மாலோனை தாங்கிய ஆதி சேஷனுக்கு தலை நடுக்கம். 

நம்மால் தான் முடியும் என்றிருந்தோம், அனுமன் இராமனை தூக்கி தன் தோளில் வைத்து கொண்டானே என்று.

மாணியாய் உலகு அளந்த நாள்அவனுடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்;
காணி ஆகப் பண்டு உடையனாம் ஒரு தனிக் கலுழன்
நாணினான்மற்றை அனந்தனும்தலை நடுக்குற்றான்.

மாணியாய் = மாவலிக்காக

உலகு அளந்த நாள் = அன்று உலகு அளந்த நாள்

அவனுடை வடிவை = அவனுடைய வடிவை (குள்ள உருவமா ? உலகளந்த பெரிய உருவமா ?)

ஆணியாய் = ஆழமாக, தெளிவாக

உணர் மாருதி = உணர்ந்த மாருதி

அதிசயம் உற்றான் = அதிசயம் அடைந்தான். அவ்வளவு பெரிய ஆளை நம் தோளில் தூக்கி விட்டோமே என்று அவனுக்கு ஆச்சரியம்

காணி ஆகப் = காணி என்றால் பரம்பரை உரிமை. பிறப்பால் கிடைக்கும் உரிமை.

பண்டு உடையனாம் = முன்பே உடைய

ஒரு தனிக் கலுழன் = கலுழன் என்றால் கருடன். ஒரு தனிச் சிறப்பு மிக்க கருடனும்

நாணினான் = வெட்கம் அடைந்தான்

மற்றை அனந்தனும் = ஆதி சேடனும்

தலை நடுக்குற்றான். = தலை நடுக்கம் கொண்டான்


Saturday, April 21, 2012

கம்ப இராமாயணம் - திரிந்த பாற்கடல்


கம்ப இராமாயணம் - திரிந்த பாற்கடல்


நல்ல குணங்கள் எவ்வளவு இருந்தாலும், ஒரே ஒரு கெட்ட குணம் இருந்தால் அந்த கெட்ட குணம் எல்லா நல்ல குணங்களையும் அழித்து விடும்.

பால் எவ்வளவு இருந்தாலும், அதில் ஒரு துளி தயிரை விட்டால் அது திரிந்து போகும். 

அது போல, இராவணின் அளவற்ற வரங்கள் என்னும் பாற்க் கடலில், சீதை என்ற ஒரு துளி பட்டதும் அது திரிந்து போயிற்று என்று புலம்புகிறாள் மண்டோதரி இந்தப் பாடலில்.


--------------------------------------------------------------------------------------------------------------------------------
அரை கடை இட்டு அமைவுற்ற முக்கோடி ஆயுவும் முன் அறிஞர்க்கேயும்

உரை கடையிட்டு அளப்ப அரிய பேர் ஆற்றல், தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை;

திரை கடையிட்டு அளப்ப அரிய வரம் என்னும் பாற்கடலைச் சீதை என்னும்

பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ, தவப் பயனின் பெருமை பார்ப்பேன்?
-------------------------------------------------------------------------------------------------------------


அரை கடை இட்டு அமைவுற்ற முக்கோடி ஆயுவும் = இராவணன் அறிய பெரிய தவங்கள் செய்து சிவனிடம் மூன்றரை கோடி ஆயுள் பெற்றான். முக்கோடி என்றால் (1000000000000000000000 ). ஒண்ணு போட்டு அதற்கு பக்கத்தில் 21 பூஜியங்கள். இவ்வளவு ஆயுசு இருந்தால் இவன் எல்லோரையும் ரொம்ப படுத்துவான் என்று உணர்ந்த திருமால், முனிவன் வடிவில் சென்று "மூன்றரை கோடி என்பது கொஞ்சம் அரை குறையாய் இருக்கிறது. அது என்ன அரை கோடி? பேசாமல் இன்னொரு அரை கோடி கேட்டு வாங்கிக்கொள், மொத்தம் நாலு கோடியாய் இருக்கட்டும் என்றார். 'முன்னம் பெற்ற மூன்றரை கோடி ஒழிய அரை கோடி வேண்டும்" என கேட்டுப் பெற்றான். அவன் கேட்ட படியே, முதலில் பெற்ற மூன்றரை கோடி அழிந்து வெறும் அரைக் கோடி தான் நின்றது. 

அந்த அரைக் கோடி வாழ் நாளும் கடை பட்டு போனது சீதையால்.


முன் அறிஞர்க்கேயும் உரை கடையிட்டு = அறிஞர்கள் எல்லாம் கூடி அவன் ஆற்றலை சொல்லப் புகுந்தாலும் சொல்ல முடியாத அளவுக்கு (உரை கடை இட்டு). 

அளப்ப அரிய பேர் ஆற்றல் = அளக்க முடியாத அளவுக்கு பெரிய ஆற்றல்

தோள் ஆற்றற்கு = தோளின் ஆற்றலுக்கு 

உலப்போ இல்லை; = அழிவே இல்லை

திரை கடையிட்டு = திரை என்றால் அலை. அலையை எல்லையாகக் கொண்ட

அளப்ப அரிய வரம் என்னும் பாற்கடலைச் = அளக்க முடியாத நீ (இராவணன்) பெற்ற பாற்கடல் போன்ற வரங்களை

சீதை என்னும் = சீதை என்ற

பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ = பாலுக்கு பிரை குத்திய மாதிரி, அந்த பாற்கடல் போன்ற வாரங்களுக்கு சீதை என்ற பிரை இட்டதால் அழிந்து போவதனை அறிவேனோ? 

தவப் பயனின் பெருமை பார்ப்பேன்? = நீ செய்த தவங்களின் பெருமையை மட்டுமே எண்ணி இருந்து விட்டேன். உன் தவறும் குறையும் அதை அழிக்கும் என்பதை அறியவில்லை என்பது பொருள்.




Friday, April 20, 2012

கம்ப இராமாயணம் - மனச் சிறையில் கரந்த காதல்



கம்ப இராமாயணம் - மனச் சிறையில் கரந்த காதல்


இராமனின் அம்பு பட்டு இராவணன் இறந்து கிடக்கிறான். உடல் எல்லாம் அம்பு.எவ்வளவு பெரிய ஆள் இராவணன். கூற்றையும் ஆடல் கொண்டவன்.

மண்டோதரி அவன் மேல் விழுந்து புலம்புகிறாள்.

அந்த புலம்பலையும் இலக்கியச் சுவையோடு தருகிறான் கம்பன்....

Wednesday, April 11, 2012

கம்ப இராமாயணம் - Ravanan's Romance


இராவணன் வணங்கா முடியன். எதற்கும் எந்த காலத்தும் தலை வணங்காதவன்.

அதை எப்படி கற்பனை கலந்து இரசனையோடு சொல்வது ?

கம்பன் யோசிக்கிறான்.

காதல் புரியும் போது எந்த ஆணும், பெண்ணிடம் இறங்கி வந்து தான் ஆக வேண்டும். ஆனால், இராவணன், அந்த சமயத்தில் கூட தலை வணங்க மாட்டானாம்...

கம்பனின் கற்பனை வளம் நிறைந்த அந்தப் பாடல்....

Tuesday, April 10, 2012

கம்ப இராமாயணம் - இராவணின் தோரணை


சூர்பனகை இராவணனிடம் சீதையை பற்றி சொல்லுகிறாள். கொஞ்சம் flash back ... 

அவள் வருவதற்கு முன் இராவணன் எப்படி அரசவையில் வீற்று இருக்கிறான் என்று பார்போம்.

கம்பன் இராமனை இரசித்த அளவுக்கு இராவணனையும் இரசித்தான் என்றே சொல்ல வேண்டும்.

அவன் இருந்த தோரனையை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறான்.

ஒருவரை பற்றி சொல்லுவது என்றால், அது அவரை மற்றும் குறிப்பாக சொல்லுவதாக இருக்க வேண்டும். 

அவருக்கு இரண்டு கண்ணு, நடுவுல ஒரு மூக்கு இருக்கும்
என்று சொல்லுவது எவ்வளவு அபத்தம். 

அது தான் எல்லோருக்கும் இருக்கிறதே.

உயரமா, சிவப்பா, கண்ணாடி போட்டு இருப்பாரு, மூக்கு மேல கூட ஒரு மச்சம் இருக்கும் அப்படின்னு சொன்னா கொஞ்சம் தெளிவா இருக்கும்.

இராவணனை பற்றி சொல்லணும்.

பெரிய வீரன், பராகிரம சாலி. பக்தன். அப்படின்னு சொன்னா போதுமா ? அவனுக்குன்னு சில விஷயங்கள் இருக்குல ? அதைப் பற்றி சொல்லணும். அது ராமனுக்கு கூட பொருந்தாது.

கம்பன் சொல்லுகிறான்.

இராவணன் வைரம், வைடூரியம், இரத்தினம் போன்ற விலை உயர்ந்த கற்கள் அணிந்த தங்க நகைகளை அணிந்து இருக்கிறான். 

அதில் சூரிய ஒளி பட்டு சிதறுகிறது. அவன் நடந்து வரும் வழி எல்லாம் அப்படி ஒரு ஒளி வீசுகிறது. 

அவன் இருபது தோள்கள். அப்படி இப்படி அசையும் போது அந்த ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன் தலைகள் நெளியும் போது எப்படி இருக்கமோ அப்படி இருக்கிறது.

சந்திரன், சூரியன் மற்ற கோள்கள் எல்லாவற்றையும் பிடித்து இலங்கையில் அடைத்து வைத்து இருக்கிறான்.

அவை எல்லாம் வரிசையாக, வாய் பொத்தி நிற்கின்றன. 

அவற்றை போல இருக்கிறது அந்த அணிகலன்களில் உள்ள மணிகள்.
.
----------------------------------------------------------
வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின்
தொகை வழங்க, வயிரக் குன்றத்

தோள் எலாம் படி சுமந்த விட அரவின்
பட நிரையின் தோன்ற, ஆன்ற

நாள் எலாம் புடை தயங்க, நாம நீர்
இலங்கையில் தான் நலங்க விட்ட

கோள் எலாம் கிடந்த நெடுஞ் சிறை அன்ன
நிறை ஆரம் குலவ மன்னோ

------------------------------------------------------------
வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின்
தொகை வழங்க,

கூர்மையான ஒளி வழங்கும் மணிகள் கத்தை கத்தையாய் ஒளி வீச. அவன் நடக்கும் போது ஒளிக் கற்றைகள் அங்கும் இங்கும் ஜ்வலிகின்றன.


வயிரக் குன்றத் தோள்

குன்று போல் உயர்ந்த தோள்கள். வைரம் போல் உறதியான தோள்கள்.

எலாம் =நம்மை மாதிரி அவனுக்கு இரண்டு தோளா ? இருபது தோள். அந்த தோள்கள் எல்லாம்.

படி சுமந்த விட அரவின் =அரவு என்றால் பாம்பு. விடம் என்றால் விஷம். உலகை சுமந்த விஷம் கொண்ட பாம்பின் (ஆதி சேஷனின் )

பட நிரையின் தோன்ற =அதன் படம் எப்படி நெளியுமோ அதுபோல் தோன்ற

ஆன்ற நாள் எலாம் புடை தயங்க =இங்கு நாள் என்றால் கோள்கள். அந்த கோள்கள் எல்லாம் ஒரு பக்கம் தயங்கி நிற்க (புடை = பக்கம் )

நாம நீர் இலங்கையில் =நீர் சூழ்ந்த இலங்கையில்

தான் நலங்க விட்ட =அவன் அந்த கோள்களை உருட்டி விளையாடுவானாம்

கோள் எலாம் கிடந்த நெடுஞ் சிறை =அந்த கோள்களை எல்லாம் சிறையில் பூட்டி வைத்து இருக்கிறான்.

அன்ன =அது போல 

நிறை ஆரம் குலவ மன்னோ =அவன் மேனியில் தவழும் ஆபரணங்களில் உள்ள மணிகள் அந்த கோள்களை போல இருக்கிறதாம்.


எப்படி அந்த கோள்களை எல்லாம் கட்டி வைத்து இருக்கிறானோ , அதுபோல இருக்கிறதாம் அவன் மேல் இருக்கும் மணி ஆரங்கள்.

இராவணனுக்கு மட்டுமே பொருந்தும் உதாரணம்.