Saturday, January 30, 2021

திருக்குறள் - இதுவும் மாசற்றார் கோள்

 திருக்குறள் - இதுவும் மாசற்றார் கோள் 


மூன்று விதத்தில் நாம் பிறருக்கு தீமை செய்கிறோம் என்று பார்த்தோம். அவை

- பலன் நோக்கிச் செய்தல்

- செற்றம் (பகை) பற்றிச் செய்தல் 

- சோர்வால் (மறதியால்) செய்தல் 

சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா செய்யாமை மாசற்றார் கோள் என்று பலன் கருதி இன்னா செய்யாமை பற்றி முதல் குறளில் சொன்னார். 


இப்போது, செற்றம் பற்றி இன்னா செய்வதைப் பற்றி கூறப் போகிறார். 


நம் மேல் பகை கொண்டு, பொறாமை கொண்டு, நமக்கு ஒருவன் கெடுதல் செய்தாலும், அதை மறுத்து அவனுக்கு கெடுதல் செய்யாமல் இருப்பது மாசற்றவர்களின் கொள்கை. 


பாடல் 

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_30.html

(click the above link to continue reading)

கறுத்து = பகைமை கொண்டு, கோபம் கொண்டு, 

இன்னா  = தீமை 

செய்தவக் கண்ணும் = செய்த அந்த போதும் 

 மறுத்து = அதை மறுத்து 

இன்னா = அவருக்கு தீமை 

செய்யாமை = செய்யாமல் இருப்பது 

மாசற்றார் கோள் = குற்றமற்றவர்களின் கொள்கை 


அதாவது பழிக்குப் பழி, பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்று போகக் கூடாது என்கிறார். 


மகாத்மா காந்தி கூறினார் "கண்ணுக்கு கண் என்று ஆரம்பித்தால் இந்த உலகமே வெகு சீக்கிரம் குருடாகி " விடும் என்று. 


மறுத்து என்ற சொல்லுக்கு பரிமேல் அழகர் மிக அழகான விளக்கம் தருகிறார். 


"உட்கொள்ளாது" என்று கூறுகிறார். 


யோசித்துப் பார்த்தால் தெரியும், ஒருவர் ஒன்று சொல்கிறார், உடனே அது நம்முள் ஒரு எதிர் விளைவை ஏற்படுத்துகிறது. 


"கடவுள் இருக்கிறார்" என்று சொன்னால், "யார் சொன்னா...எங்கே நிரூபி பார்போம்" என்று வாதம் செய்யத் தொடங்கி விடுகிரோறம். 


"அந்தத் தலைவர் நல்லவர்" என்றால், "ஹா அவர் இலட்சணம் எனகுத் தெரியாதா" அவர் செய்த தவறுகளை எடுத்துக் காட்ட ஆரம்பித்து விடுகிறோம். 


இதுதான் நமக்கு வேலையா? ஒவ்வொருவர் சொல்லுவதற்கும், செய்வதற்கும் எதிர் வினை செய்து கொண்டே இருந்தால் நாம் போய் சேர வேண்டிய இடத்தை எப்போது அடைவது. 


தெருவில் போகும் போது நாய் குரைக்கும். "என்னைப் பார்த்த குரைத்தாய்" என்று பதிலுக்கு நாமும் நின்று அதைப் பார்த்து குரைத்துக் கொண்டு இருக்க முடியுமா? அப்படிச் செய்தால் , இந்த உலகம் நம்மைப் பற்றி என்ன நினைக்கும்? 


அதை கண்டு கொள்ளாமல் மேலே போய் விட வேண்டும். முட்டாள்களுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டே இருந்தால், காலம்தான் விரயம் ஆகும். 


நாம் அவனை கண்டு கொள்ளாமல் போய் விட்டால், இவன் நம்மை சீண்டக் கூட மாட்டேன் என்கிறான் என்று வேறு இடம் போய் விடுவார்கள். மாறாக, அவனோடு சரிக்கு சரி நின்றால், நம் நிலை தான் தாழும். 


Don't fight with the pig in the mud, the pig will enjoy it என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. 


கீழ் மக்களுக்கு வம்புக்கு சண்டை பிடிப்பதும், முரண் படுவதும் இயற்கை. நாம் அவர்களுக்கு நிகராக நம் நிலைமையை தாழ்த்திக் கொள்ள கூடாது. 


சரி தானே?


கொஞ்சம் இலக்கணம் படிப்போமா? 


வீட்டுக்குள் அம்மா வருகிறாள்.  மதிய நேரம்..ஒரு இரண்டு மணி இருக்கும். மகனைப் பார்த்து கேட்கிறாள் "என்னடா ...மத்யானம் சாப்டியா" என்று. 


மகன் சொல்கிறான் "வேலை ரொம்ப இருக்கு...காலையிலும் சாப்பிடலை" அப்படின்னு. 


அப்படினா, மத்யானமும் சாப்பிடலைன்னு தெரியுதுல?  


காலையில் சாபிடல அப்படின்னு சொல்லி இருந்தால், சரி , மத்யானம் சாப்பிட்டு இருப்பான் என்று நினைக்க இடம் இருக்கு. 


காலையிலு"ம்" என்று ஒரு "ம்" போட்டதால காலையிலும் சாபிடல, மத்தியானமும் சாப்பிடலைன்னு தெரியுதுல.


அந்த "ம்" க்கு இறந்தது தழுவிய எச்ச உம்மை என்று பெயர். 


ஆங்கில பரீட்சை எப்படி செய்து இருக்கிறாய் என்று கேட்டாலும் "அதை ஏன் கேக்குற...தமிழும் சரியா செய்யல" என்றால் ஆங்கிலம், தமிழ் இரண்டும் சரியா செய்யல என்று நாம் புரிந்து கொள்கிறோம் அல்லவா. 


இங்கே, குறளில், 


கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள்


என்றார். 


முந்தைய குறளில் 


சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் 

பிறர்க்கு இன்னா செய்யாமை மாசற்றார் கோள் 


என்றார். 


இங்கே இரண்டாவது குறளில் "செய்யாமையு'ம்' மாசற்றார் கோள் என்று இருந்திருக்க வேண்டும். 


அதுவும் மாசற்றார் கோள் , இதுவும் மாசற்றார் கோள் என்பதால், இரண்டாவதாக வந்த "செய்யாமை" என்பதை 'செய்யாமையும்"  என்று இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லை. 


எனவே, அது "இறந்தது தழுவிய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கி (மறைந்து) நின்றது " என்று உரைக் குறிப்பு எழுதுகிறார் பரிமேல் அழகர். 


எவ்வளவு தூரம் உன்னிப்பாக ஒரு நூலை படித்து இருக்கிறார்கள். 


அப்படி படிக்க வேண்டும். 




Friday, January 29, 2021

திருக்குறள் - மாசற்றார் கோள்

 திருக்குறள் - மாசற்றார் கோள் 

மூன்று விதத்தில் நாம் மற்றவர்களுக்கு தீமை செய்கிறோம் என்று முந்தைய ப்ளாகில் பார்த்தோம். 


அதில் முதலாவது, நமக்கு ஒரு பயன் வேண்டி மற்றவர்களுக்கு துன்பம் செய்தல். 

பிறரை ஏமாற்றுவது, பிறர் பொருளை களவு எடுப்பது, ஒருவருக்கு வர வேண்டிய உழைப்பின் பலனை தட்டிப் பறிப்பது, நம்மிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக மற்றவர்களை உதாசீனப் படுத்தி மகிழ்வது, மற்ற உயிர்களை துன்புறத்தி அதில் இன்பம் காண்பது...என்று பல விதங்களில் நமக்கு ஒரு பலன் வேண்டி மற்றவர்களை துன்புறுத்துகிறோம். 

இதில் மற்றவர்கள் என்பது மனிதர்கள் மட்டும் அல்ல, விலங்குகளும் சேரும். 


அப்படி, நமக்கு ஒரு பலன் கிடைக்கும் என்றாலும், பிறருக்கு இன்னல் தரமால் இருப்பது பெரியவர்களின் கோட்பாடு என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_29.html

click the above link to continue reading


சிறப்புஈனும் = சிறப்பினைத் தரும் 

செல்வம் பெறினும் = செல்வத்தைப் பெற்றாலும் 

பிறர்க்கு = மற்றவர்களுக்கு 

இன்னா செய்யாமை = துன்பம் செய்யாமல் இருப்பது 

மாசற்றார் கோள். = குற்றமற்றவர்களின் கொள்கை, கோட்பாடு.


சரி, இது ஒரு எளிமையான குறள் போலத்தானே இருக்கிறது என்று நாம் நினைப்போம். 

இதற்கு பரிமேல் அழகர் தந்த உரையை படித்தால் தெரியும் எவ்வளவு நுட்பமாக, எவ்வளவு ஆழமாக படித்து உரை செய்து இருக்கிறார் என்று. 


ஒவ்வொரு வார்த்தையும் ஒரு தங்கச் சுரங்கம். 

"சிறப்புஈனும்" என்றால் என்ன அர்த்தம்? கன்றினை ஈனும் என்றால், எது கன்றினை ஈனும்? ஒரு பசு மாடு கன்றினை ஈனும். அது போல, இங்கே சிறப்பு ஈனும் எது சிறப்பு? பரிமேல் அழகர் யோசிக்கிறார்.  எது சிறந்தது? பக்தி, வீரம், காதல், அன்பு, அதிகாரம், ...எது சிறந்தது, சிறப்பு வாய்ந்தது என்று யோசித்து முடிவுக்கு வருகிறார். 


"யோகம்" தான் உள்ளதிற்குகுள் சிறந்தது. ஏன் என்றால், அது இம்மைக்கும், மறுமைக்கும் பலன் தர வல்லது. எனவே, சிறப்பு என்றால் அது யோகம் தான். அதைவிட சிறந்து ஒன்றும் இல்லை. 

அந்த யோகம் ஈனும் என்றால், யோகத்தில் ஈடுபட்டால் கிடைக்கும் என்று அர்த்தம். என்ன கிடைக்கும் ? அட்டமா சித்திகள் கிடைக்கும். ஞானம் கிடைக்கும். வீடு பேறு கிடைக்கும். 


எனவே, அந்தப் பலன்களை சிறப்பு ஈனும் செல்வம் என்றார். செல்வமாவது அந்த யோகம் தரும் பலன்கள்.


அப்படி, அவ்வளவு சிறப்பான யோகம் தரும் பலன்கள் கிடைத்தால் கூட, மற்றவர்களுக்கு  துன்பம் செய்ய மாட்டார்கள் "மாசற்றவர்கள்" என்கிறார். 


"மாசற்றவர்கள்" என்றால் யார்?  முற்றும் துறந்த துறவிகள், மயக்கம், குழப்பம், ஐயம், திரிபு போன்றவை இல்லாதவர்கள். அவர்களிடம் ஒரு குற்றமும் இருக்காது. 


எவ்வளவுதான் சிறந்த நன்மை கிடைக்கும் என்றாலும், மற்றவர்களுக்கு துன்பம் செய்யக் கூடாது. அல்லது பிறருக்கு துன்பம் தந்து அதன் மூலம் கிடைக்கும் நன்மை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதை வேண்டாம் என்று ஒதுக்கி விட வேண்டும். 


நாம் அவ்வாறு செய்கிறோமா? பெரிய நன்மை என்ன பெரிய நன்மை, ஒரு சின்ன நன்மை கிடைத்தால் கூட போதும், பிறருக்கு தீமை செய்ய நாம் தயங்குவதே இல்லை. 


ஓட்டுக்கு பணம் வாங்குவதில் இருந்து, இலஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பதில் இருந்து, பில் போடாமல் சாமான்கள் வாங்குவதில் இருந்து சின்ன சின்ன நன்மைகளுக்காக எவ்வளவு பெரிய தீமைகளையும் நாம் செய்யத் தயாராக இருக்கிறோம். 


அப்படி செய்யக் கூடாது என்று நன்மை நோக்கி பிறருக்கு தீமை செய்வதை விலக்குவதைப் பற்றி கூறுகிறார். 


நமக்கு ஒரு நன்மை வருகிறது என்பதற்காக பிறருக்கு துன்பம் செய்யலாமா?




 


 செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள்.





Thursday, January 28, 2021

திருக்குறள் - இன்னா செய்யாமை

திருக்குறள் - இன்னா செய்யாமை

இன்னா என்றால் துன்பம். இனிய என்பதன் எதிர்பதம். 

நாம் பிறருக்கு எப்போது துன்பம் செய்வோம்? அவர்கள் மேல் கோபம் வந்தால் துன்பம் செய்வோம். 


அது மட்டும் தானா? கோபம் இல்லாமல் துன்பம் செய்ய முடியாதா? செய்யாமல் இருக்கிறோமா?

இந்தக் கேள்வி வள்ளுவருக்கு வந்து இருக்கிறது. யோசித்து எழுதி இருக்கிறார். 


வெகுளாமை என்று ஒரு அதிகாரம். அதாவது கோபம் கொள்ளாமை. அதற்கு அடுத்த அதிகாரமாய் இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தை வைக்கிறார் வள்ளுவர். 


அதாவது கோபம் இல்லாமலும் பிறருக்கு தீங்கு செய்ய முடியும் என்று சொல்கிறார். 


அவை என்னென்ன காரணங்கள் என்று பரிமேல் அழகர் விளக்குகிறார். 


"அஃதாவது, தனக்கு ஒரு பயன் நோக்கியாதல் ,செற்றம் பற்றியாதல். சோர்வானாதல் ஓர் உயிர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை. இன்னா செய்தல் வெகுளி ஒழியவும் நிகழும் என்பது அறிவித்தற்கு , இது வெகுளாமையின்பின் வைக்கப்பட்டது"


என்பது அவர் உரை. 


உரைக்கு உரை காண வேண்டி இருக்கிறது. 

click the following link to continue reading 

https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_28.html


"அஃதாவது" என்றால் எஃதாவது? இன்னா செய்வது, தீங்கு செய்வது என்பது. 


"தனக்கு ஒரு பயன் நோக்கியாதல்" = நமக்கு ஒரு பலன் வேண்டி பிறருக்கு தீங்கு செய்து விடலாம். பணம் கொடுத்து பிள்ளைக்கு கல்லூரியில் இடம் வாங்கி விடலாம். அதனால், படித்த ஒருவனுக்கு இடம் கிடைக்காத தீங்கு நேர்ந்து விடும். 

அடுத்தது,


செற்றம் பற்றியாதல் = செற்றம் என்றால் பகை. ஒருவர் மேல் பகை கொண்டு அவருக்கு தீங்கு செய்து விடலாம். 


மூன்றாவதாக, 

"சோர்வானாதல்" - மறந்து போய், தெரியாமல் தீமை செய்து விடலாம்.  காலையில் எழுந்து சுடச் சுட காப்பி குடிக்கிறோம். அந்த காப்பியில் உள்ள பாலுக்கு அந்த மாடு எவ்வளவு துன்பப் பட்டிருக்கும். நீங்கள் அந்த தீங்கை செய்யவில்லை. ஆனால், உங்களால், அந்த தீங்கு நிகழ்கிறது. தெரியாமல் மற்றொருவர் காலை மிதித்து விடுகிறோம். நடக்கும் போது தெரியாமல் எறும்பு, போன்ற சின்ன உயிர்கள் மிதிபட்டு சாகின்றன. வேண்டும் என்றா செய்தோம். தெரியாமல் நிகழ்வது. 


இப்படி மூன்று விதமாக இன்னை செய்தல் நிகழ்கிறது. 


அது பற்றி மேலும் மிக விரிவாக சிந்திக்க இருக்கிறோம். 




Monday, January 25, 2021

கம்ப இராமாயணம் - அறிவை நோக்கினான்

 கம்ப இராமாயணம் - அறிவை நோக்கினான் 


எங்கு சென்று எல்லாம் அடங்க வேண்டும் ? 

புலன்களை அடக்கு அடக்கு என்கிறார்களே,  அடக்கி எங்கே வைப்பது? ஆசையை அடக்கு என்றால் எதில் அடக்கி வைப்பது. புலியை அடக்கு என்றால் அடக்கி ஏதோ ஒரு கூண்டில் தானே போட்டு வைக்க வேண்டும். 


சித்திரகூட பர்வத மலை பக்கம். அந்தி நேரம். இராமனும் சீதையும் தங்க இலக்குவன் குடிசை அமைத்து முடித்து விட்டான். 

இருள் கவியும் நேரம். 


ஆண் குரங்கும், பெண் குரங்கும், பகல் எல்லாம் ஆடி ஓடி களைத்துப் போய், எந்த மரப் பொந்தில் சென்று இரவில் தூங்கலாம் என்று பார்த்துக் கொண்டு இருக்கின்றன. 

ஆண் யானையும், பெண் யானையும் தாங்கள் சென்று ஓய்வு எடுக்கும் இடத்தை நோக்கிச் சென்றன. 

பகலில் இரை தேடச் சென்ற பறவைகள் நீண்ட தொலைவில் உள்ள தங்கள் கூட்டை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தன. 

இராமன் இவற்றை எல்லாம் பார்க்கிறான். தன் புலன்களை ஒடுக்கி அறிவில் நிறுத்துவதைப் பற்றி எண்ணிக் கொண்டு இருக்கிறான். 


பாடல் 

மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின;

தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின;

நிந்தை இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின;

அந்தியை நோக்கினான், அறிவை நோக்கினான்.


பொருள் 

(please click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_25.html


மந்தியும் கடுவனும்  = ஆண் மற்றும் பெண் குரங்குகள் 

மரங்கள் நோக்கின; = ஓய்வு எடுக்கும் மரத்தை நோக்கின 

தந்தியும் பிடிகளும் = ஆண் யானையும் பெண் யானையும் 

தடங்கள் நோக்கின; = தாங்கள் செல்ல வேண்டிய பாதையை நோக்கின 

நிந்தை இல் = குற்றமற்ற  

சகுந்தங்கள் = பறவைகள்

நீளம் நோக்கின; = தாங்கள் செல்ல வேண்டிய தூரத்தை நோக்கின 

அந்தியை நோக்கினான் = மாலைப் பொழுதை நோக்கினான் 

அறிவை நோக்கினான். = அறிவை நோக்கினான் 


எப்படி விலங்குகள் எல்லாம் தங்கள் கூட்டை அடைவதைப் பற்றி சிந்திதனவோ, அது போல, அலை பாய்ந்த மனதை அறிவில் அடக்கும் வழி பார்த்து நின்றான் இராமன். 


முதல் தரம் படிக்கும் போது சற்று தவறுதலாக படித்து விட்டேன். 


ஆண் குரங்கு பெண் குரங்கைப் பார்த்தது...மரத்தில் சென்று இரவை கழிக்கலாம் என்று. 

ஆண் யானைகள் தங்கள் இணையான பெண் யானைகளை அழைத்துக் கொண்டு சென்றன.


பறவைகளும் கூடு நோக்கிச் சென்றன. 


இராமன் மாலை நேரத்தைப் பார்த்தான், சீதையைப் பார்த்தான் என்று நினைத்து, "அறிவை நோக்கினான்" என்பதை "அரிவையை நோக்கினான்" என்று வாசித்து விட்டேன். 


ஒரு வேளை அது தான் சரியோ என்று பல பதிப்புகளை சரி பார்த்தேன். நான் வாசித்தது தவறு தான். 


ஏனோ, அந்த கவி ஓட்டம் சரியாக இருப்பதாக எனக்குப் படுகிறது. 


"அந்தி நோக்கினான் அரிவை நோக்கினான்" அரிவை என்றால் பெண். 


என்று தான் இருக்க வேண்டும் என்று என் மனம் சொல்கிறது. 


உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, அதை எடுத்துக் கொள்ளுங்களேன்.


Saturday, January 23, 2021

ஆசாரக் கோவை - தானறிந்த வழியில் தெய்வம் தொழு

ஆசாரக் கோவை - தானறிந்த வழியில் தெய்வம் தொழு 


நம் மனம் கால நிலை வேறுபாட்டால் மாறும் இயல்பு உடையது. நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் தெரியும். காலையில் உங்கள் மனம் எப்படி இருக்கிறது, மதியம் எப்படி இருக்கிறது, மாலை மற்றும் இரவில் எப்படி இருக்கிறது என்று. நேரம் மாற மாற மனம் மாறும். அது கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதால் நாம் அந்த மாற்றத்தை உணர்வது இல்லை. 


சில காரியங்களை,சில நேரத்தில் தான் செய்ய முடியும். மாற்றிச் செய்தால் என்ன என்று கேட்கலாம். செய்யலாம். அவ்வளவு சிறப்பாக இருக்காது. 


நீங்கள் இதை சோதித்துப் பார்க்கலாம். ஒரு நாள் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து , குளித்து, நல்ல உடை உடுத்துப் பாருங்கள். உங்கள் மனம் எப்படி இருக்கிறது என்று. இன்னொரு நாள் காலை பத்து பதினொரு மணிவரை தூங்கி விட்டு எழுந்து, குளிக்காமல் உணவு உண்டு, இருந்து பாருங்கள். உங்கள் மனம் எப்படி வேலை செய்கிறது என்று. வித்தியாசம் தெரியும். 


சரி, இப்படி காலத்தோடு சேர்ந்து மனம் மாறுகிறது என்றால், அது சட்டென்று மாறாது. ௮ மணிக்கு மேல் இந்த மன நிலை என்று மாறாது. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்குப் போகும். 


அப்படி போகும் போது, இந்த இடைப்பட்ட நேரத்தில் கொஞ்சம் குழப்பம் வரும்.  அந்த இடைப்பட்ட நேரங்களை சந்தி நேரம் என்பார்கள். இரண்டு கால நேரங்கள் சந்திக்கும் இடம். அந்த நேரத்தில் மனதில் சற்று குழப்பம் வரும். அந்தக் குழப்பத்தை போக்க, இறை வழிபாடு செய்யச் சொன்னார்கள். 


சந்தி நேரத்தில் செய்யும் வழிபாட்டுக்கு "சந்தியா வந்தனம்" என்று பெயர். 


மனதை ஒரு நிலைப் படுத்தி, ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு அதை மென்மையாக கொண்டு செல்லும் வழி. 


இருள் விலகி பகல் வரும் ஒரு சந்தி - அதிகாலை. 

பகல் விலகி இருள் வரும் நேரம் - மாலைச் சந்தி 

இந்த இரண்டு நேரங்களும் சற்று அழுத்தம் வாய்ந்தவை. எனவே இந்த நேரங்களில் வழிபாடு செய்யச் சொன்னார்கள். 


பாடல் 


நாளந்தி கோறின்று கண்கழீஇத் தெய்வத்தைத்

தானறியு மாற்றாற் றொழுதெழுக அல்கந்தி

நின்று தொழுதல் பழி.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_23.html


(pl click the above link to continue reading)


நாளந்தி = நாள் அந்தி = அதி காலையில் 

கோறின்று = கோல் தின்று  என்றால் குச்சியால் பல் துலக்கி 

கண்கழீஇத் = முகம் கழுவி 

தெய்வத்தைத் = தெய்வத்தை 

தானறியு மாற்றாற் றொழுதெழுக = தான் அறியும் ஆற்றான் தொழுது எழுக. இது மிக முக்கியமானது. உனக்கு தெரிந்த மாதிரி தெய்வத்தை தொழு. அந்த புத்தகத்தில் சொல்லி இருக்கிறது, அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று செய்யாமல். உன் மனதுக்கு பிடித்த மாதிரி, உன் அறிவுக்கு எட்டிய வரை தெய்வத்தைத் தொழு. 


 அல்கந்தி = மாலையில் 

நின்று தொழுதல் பழி. = நின்று தொழக் கூடாது. அமர்ந்து இறை வழிபாடு செய்ய வேண்டும். நாள் எல்லாம் வேலை செய்த பின் உடல் களைத்துப் போய் இருக்கும். நின்று செய்தால், மேலும் சோர்வு வரும். மனம் சலிக்கும். எப்படா இந்த வழிபாடு முடியும் என்று. எனவே, நன்றாக அமர்ந்து, நிதானமாக வழிபாடு செய்ய வேண்டும். 


உள் உணர்வை கூர்மையாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். நம் மனம் எப்படி வேலை செய்கிறது என்று அவ்வப்போது கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி உள் உணர்வு கூர்மையானால், வழிபாடு செய்யும் போது என்ன நிகழ்கிறது என்று தெரியும். இல்லை என்றால், ஏதோ எல்லோரும் செய்கிறார்கள் நானும் செய்கிறேன் என்று வாய் ஏதோ முணுமுணுக்கும், கை ஒரு வேலை செய்யும், கண் ஒரு பக்கம் போகும், காது வேறு எதையோ கேட்டுக் கொண்டிருக்கும். அது அல்ல வழிபாடு. 


வழிபாட்டுக்கு முன்னும் பின்னும் உள்ள மன நிலையின் வேறுபாடு தெரியாவிட்டால், பின் எதற்கு வழிபாடு செய்வது? செஞ்சாலும் ஒண்ணு தான், செய்யாவிட்டாலும் அதே தான் என்றால், எதற்கு நேரத்தை விரயம் பண்ண வேண்டும்? 


கூர்ந்து கவனியுங்கள். 


உணவு உண்ட பின் உங்கள் மனம் எப்படி இருக்கிறது என்று கவனியுங்கள். 


காப்பி குடித்தவுடன் மனம் மாறும். 


எண்ணையில் பொறித்த இனிப்பு பலகாரம் சாப்பிட்டால் மனம் மாறும். 


பழைய சோற்றில் எருமை தயிர் விட்டு சாப்பிட்டால் மனம் மாறும். 


அந்த மாற்றத்தை கவனிக்கத் தெரிய வேண்டும். 


தெரிந்தால், இந்த ஆசாரங்களின் தேவை மற்றும் அர்த்தம் புரியும். இல்லை என்றால்....என்ன சொல்ல..ஏதோ ஒரு பொழுது போக்கு என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான். 



Friday, January 22, 2021

திருக்குறள் - வலியார் முன் தன்னை நினைக்க

 திருக்குறள் - வலியார் முன் தன்னை நினைக்க 


பாடல்களுக்கு உரை எழுதுவது, விளக்கம் சொல்லுவது என்பது பெரிய கலை. அதற்கு மிக விரிந்த நூல் அறிவு வேண்டும். எந்த நூலுக்கு உரை சொல்கிறோமோ அந்த நூல் எழுதப்பட்ட கால கட்டத்தின் பழக்க வழக்கங்கள், நெறி முறைகள், மொழி பயன்பாடு இவை எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும். 


அவை எல்லாவற்றையும் விட முக்கியம், மூல நூல் எழுதிய ஆசிரியனின் நோக்கம் புரிந்து எழுத வேண்டும். 

திருக்குறள் போன்ற நூல்களுக்கு உரை சொல்லுவது என்றால், திருவள்ளுவர் என்ன நினைத்தார், அவர் நோக்கம் என்ன என்று அறிந்து உரை சொல்ல வேண்டும். இல்லை என்றால், அது உரை சொல்பவனின் நோக்கமாகத்தான் இருக்குமே அல்லாமல், வள்ளுவர் சொல்ல வந்ததாக இருக்காது. 


திருவள்ளுவர் என்ன நினைத்தார் என்று அறிந்து கொள்ள வேண்டுமானால், அவர் அளவு படித்து இருக்க வேண்டும். நடக்கிற காரியமா அது? 

எனவே, நான் முதலிலேயே சொல்லி விடுகிறேன். நான் சொல்லுவது என் கருத்துக்களே அன்றி வள்ளுவரின் கருத்து அல்ல. வள்ளுவரின் கருத்துகளை  அறிய வேண்டும் என்றால், பரிமேல் அழகர் போன்ற அறிஞர்களின் உரைகளை படிக்க வேண்டும். 

அருளுடைமை பற்றி சொல்ல வந்த வள்ளுவர், எப்படி இன்னொரு உயிரின் மேல் அருள் செலுத்துவது என்று சொல்லித் தருகிறார்.


அருள் செய்ய வழி முறை, வேறு எங்காவது கேட்டது உண்டா?  


பாடல் 


வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_93.html

(click the above link to continue reading)


வலியார்முன் = நம்மை விட வலியவர்கள் முன் 

தன்னை நினைக்க  = நம்மை நினைத்துக் கொள்ள வேண்டும் 

தான் தன்னின் = நாம் நம்மை விட 

மெலியார்மேல்  = மெலிந்தார் மேல் 

செல்லும் இடத்து = செல்கின்ற போது 


மெலிந்தவர்கள் என்றால் எடை குறைந்தவர்கள் என்று அர்த்தம் அல்ல. வலிமை குன்றியவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். 

இந்தக் குறள் பற்றி பல முறை யோசித்துப் பார்த்து இருக்கிறேன். நாம் யாரை வருத்தி இருக்கிறோம். நாம் யாரை மிரட்டி, பணிய வைத்து இருக்கிறோம். ஒரு உயிரைக் கூட கொன்று தின்றதில்லை. அப்படியானால், நான் மிக அருள் உடையவனா? அப்படி ஒன்றும் தெரியவில்லை. பின் இந்தக் குறளை எப்படி புரிந்து கொள்ளுவது?


பல தரம் காரில் போகும் போது, சில பிச்சைகாரர்கள் பிச்சை கேட்டு நிற்பார்கள். கண்டும் காணாத மாதிரி போய் விடுவேன். அவர்கள் மேல் ஒரு பக்கம் பரிதாப உணர்வு ஏற்பட்டாலும், ஏதோ ஒரு வெறுப்பும் இருக்கிறது. வேலை செய்து பிழைத்தால் என்ன?  இந்தப் பணத்தை வைத்து குடிப்பான், இப்படி பிள்ளைகளை பழக்கி பிச்சை எடுக்க வைக்கிறார்கள், இதை எல்லாம் நாம் ஊக்கு விக்கக் கூடாது என்றெல்லாம் மனம் நினைக்கும். 


நான் ஒன்றை வேண்டி ஒருவரிடம் நின்று, அவர் என்னை இப்படி உதாசீனம் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்கிறேன். அவர் மனதில் ஆயிரம் சிந்தனைகள் ஓடலாம். கடைசியில் நான் நிராகரிக்கப் பட்டேன் என்பது தான் என்னைப் பொறுத்தவரை நிகழ்ந்த உண்மை. வலிக்கும் தானே. 

எனக்கு வேண்டியது பணமோ பொருளோ இல்லாமல் இருக்கலாம். ஒரு அன்பு, ஒரு கனிவான சொல், ஒரு ஆறுதல் வார்த்தை, ஒரு அரவணைப்பு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

நான் வேண்டி நின்ற அவர் என்னை பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டால், எவ்வளவு வலிக்கும். அதை நினைத்துப் பார்த்தால், இந்த போக்குவரத்து நிறுத்தங்களில்  பிச்சை எடுப்பவர்களை பார்த்து முகம் திருப்பிக் கொண்டு செல்லத் தோன்றுமா? 


நமக்கும் ஒரு தேவை வரும். நாமும் யாரிடமாவது சென்று நிற்போம். அப்போது நம் நிலைமை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தால் , நமக்கு மற்றவர்கள் மேல் அருள் தானே பிறக்கும். 


வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மேல்,   காவல்காரன் மேல், வண்டி ஓட்டுபவர் மேல், என்று அனைத்து மக்கள் மீது அருள் சுரக்கும்.


நமக்கு அப்படி ஒரு காலம் வராது என்று நினைக்கக் கூடாது. 


சிவ பெருமானை மண்டை ஓட்டில் பிச்சை எடுக்க வைத்தது காலம். 

உலகளந்த பெருமாளை, கூனி குறுகி வாமன உருவில் மூன்று அடி நிலம் பிச்சை எடுக்க வைத்தது காலம். 


மும்மூர்த்திகளின் கதி இதுவென்றால், நாம் எம்மாத்திரம். 


நினைத்துப் பாருங்கள். 


அருள் தானே சுரக்கும். யார் மேலும் ஒரு அன்பும், அருளும் பிறக்கும். 

வள்ளுவர் இதை நினைத்துச் சொன்னாரா என்று தெரியாது. என் மனதில் பட்டதைச் சொல்லுகிறேன். 






இராமானுசர் நூற்றந்தாதி - பின்னையும் பார்க்கில் நலமுளதே ?

 இராமானுசர் நூற்றந்தாதி - பின்னையும் பார்க்கில் நலமுளதே ?


சில் பள்ளிக்கூடங்கள், அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களை மட்டுமே தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள். படிக்கிற பிள்ளை எங்கும் படிக்கும். பின், பரீட்சை எல்லாம் முடிந்த பின், தங்கள் பள்ளி நூறு சதவீதம் வெற்றி பெற்று விட்டதாக விளம்பரம் செய்வார்கள். இதில் அவர்கள் பெருமை என்ன இருக்கிறது? ஒன்றும் இல்லை. 


அது போல, 


ஆரவமுதனார் சொல்கிறார், 


"இராமானுசரே, நான் ஒன்றுக்கும் உதவாதவன். என்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை. இனி மேலும் நல்லது செய்ய வாய்ப்பு இல்லை. ஆனால், அதற்காக நீர் எனக்கு அருள் செய்யாமல் போனால், மற்றவர்கள் உம்மை பற்றி என்ன நினைப்பார்கள்? நல்லவர்களுக்கு மட்டும் தான் நீர் அருள் செய்வீர். எம்மை போன்ற கதி அற்றவர்களை நீர் கண்டு கொள்ள மாட்டீர் என்று உம்மைத்தான் பரிகாசம் செய்வார்கள். எனவே, நீர் எனக்கு அருள் செய்வதுதான் உமக்கு நல்லது"


என்று நகைச்சுவைப் பட இராமானுசரின் பெருமையை எடுத்துக் கூறுகிறார். 


அதாவது, சரண் என்று அடைந்து விட்டால், அது யாராக இருந்தாலும், அவர்களுக்கு அருள் செய்வது இராமனுசரின் இயல்பு என்று எளிமையாக கூறுகிறார். 


பாடல் 


என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல்குணத்த

உன்னையும் பார்க்கில் அருள்செய்வ தேநலம் அன்றியென்பால்

பின்னையும் பார்க்கில் நலமுள தே?உன் பெருங்கருணை

தன்னையென் பார்ப்பர் இராமா னுச! உன்னைச் சார்ந்தவரே?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_22.html

Click the above link to continue reading


என்னையும் பார்த்தென் = என்னையும் பார்த்து என் 

இயல்வையும் பார்த்து = என் குணத்தையும் பார்த்து 

எண்ணில் = எண்ண முடியாத 

பல்குணத்த = பல குணங்களை கொண்ட 

உன்னையும் = உன்னையும் (இராமானுசரையும்) 

பார்க்கில் = பார்த்தால் 

அருள் செய்வதே நலம் = நீர் எனக்கு அருள் செய்வதே நல்லது 

அன்றியென்பால் = மாறாக, என் பால் 

பின்னையும் பார்க்கில் = மேலும் பார்த்துக் கொண்டே இருந்தால் 

நலமுள தே? = நல்லாவா இருக்கு 

உன் பெருங்கருணை = உன்னுடைய பெரும் கருணை 

தன்னையென் பார்ப்பர் = தன்னை என்ன என்று நினைத்துப் பார்ப்பார்கள்? 

இராமா னுச! = இராமானுசரே 

உன்னைச் சார்ந்தவரே? = உன்னுடைய அடியவர்கள் 


பணக்காரனுக்குத் தான் உதவி செய்வேன் என்றால், அது உதவியா? அவனுக்கு தேவை இல்லை. பிச்சை காரனுக்குத்தான் பசிக்கும், உணவு வேண்டும். சீ சீ , நீ பிச்சைகாரன், உனக்கு எல்லாம் உதவி செய்ய முடியாது என்றால் நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? 


ஆரவமுதனார் சொல்கிறார்,


என்னைப் பார்த்து

என் இயல்பைப் பார்த்து 

பின்னும் பார்த்து 


என்று. 


அதாவது, நான் இப்போது மோசம். இனிமேல் ஏதாவது நல்லது செய்யக் கூடிய வாய்ப்புள்ள குணம் ஏதாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. சரி, இப்ப இல்லை, பின்னாளில் வருமா என்றால் வராது. 


எனவே, இராமானுசரே, பேசாமல் யோசிப்பதை விட்டு விட்டு எனக்கு நீர் அருள் செய்யும்.இல்லை என்றால், எனக்கு ஒன்றும் இல்லை. உம் அடியவர்கள் உம்மைப் பற்றி வேறுவிதமாக நினைப்பார்கள் என்கிறார். 


அருமையான பாடல். எவ்வளவு மோசமான ஆளுக்கும் அருள் செய்வார் என்பது பொருள். 


மூல நூலை தேடித் பிடித்துப் படியுங்கள். தேன் சொட்டும் பாடல்கள். 



Thursday, January 21, 2021

ஆசாரக் கோவை - முந்தையோர் கண்ட முறை

ஆசாரக் கோவை - முந்தையோர் கண்ட முறை 


ஏன் ஆசாரம் வேண்டும் என்று முந்தைய பிளாகில் சிந்தித்தோம். இனி, என்னவெல்லாம் ஆசாரம் இருக்கிறது, அதை எப்படி கடை பிடிக்க வேண்டும் என்று சிந்திப்போம். 

பாடலை படிக்கும் முன், கொஞ்சம் இலக்கணம், கொஞ்சம் நம் கலாச்சாரம் இரண்டையும் தெரிந்து கொள்வோம். 


தமிழர்கள் காலத்தை இரண்டாகப் பிரித்தார்கள். 


சிறு பொழுது, பெரும் பொழுது. 


ஒரு நாளின் வேறு வேறு பகுதிக்கு சிறு பொழுது என்று பெயர்.


ஒரு ஆண்டின் வேறு வேறு பகுதிக்கு பெரும் பொழுது என்று பெயர். 


6  - 10  -  காலை 

10 - 2 - நண்பகல் 

2 - 6 - ஏற்பாடு 

6 - 10 - மாலை 

10 - 2 - யாமம் 

2 - 6 - வைகறை 


இந்த அதிகாலை 2 முதல் 6 மணிவரை உள்ள நேரம் இருக்கிறதே, இதை ப்ரம்ம முகூர்த்தம்  என்று சொல்லுவார்கள். 

படிக்க, பாராயணம் செய்ய, நல்ல காரியங்கள் தொடங்க சிறந்த நேரம் என்று சொல்லுவார்கள். 

சாத்வீக குணம் உச்சம் பெற்று இருக்கும் நேரம். 


ஆசாரக் கோவை சொல்கிறது - வைகறையில் படுக்கையில் இருந்து எழுந்து விட வேண்டும். 

எழுந்த உடன், அன்று செய்ய வேண்டிய நல்ல வேலைகளை பட்டியல் போட்டுக் கொள்ள வேண்டும். மனதில் சிந்திக்க வேண்டும்.  அந்த ரிப்போர்ட் அனுப்பனும், இதில் முதலீடு செய்ய வேண்டும், இன்னாரை பார்க்க வேண்டும், அந்த பதிலை இன்று போட்டு விட வேண்டும், என்று என்னவெல்லாம் நல்ல காரியங்கள் செய்ய வேண்டி இருக்கிறதோ, அதை சிந்தித்து மனதில் குறித்துக் கொள்ள வேண்டும். 

பின் தந்தையையும், தாயையும் தொழ வேண்டும். 


பாடல் 

 வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்

நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதின்

தந்தையும் தாயும் தொழுது எழுக!’ என்பதே-

முந்தையோர் கண்ட முறை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_21.html


click the above link to continue reading


வைகறை யாமம் துயில் எழுந்து = யாமம் தாண்டி, வைகறையில் துயில் எழுந்து. வைகறை ஆறு மணி வரை இருக்கிறதே என்று அதுவரை தூங்கக் கூடாது. யாமம் தாண்டிய வைகறையில் எழ வேண்டும். 

தான் செய்யும் = நாம் செய்ய வேண்டிய 

நல் அறமும்  = நல்ல அறச் செயல்களையும் 

ஒண் பொருளும் = சிறந்த பொருள்களையும் 

சிந்தித்து = மனதில் சிந்தித்து 

வாய்வதின் = வாய்த்த, 

தந்தையும்  = தந்தையையும் 

தாயும் தொழுது எழுக!’ = தாயையையும் தொழுது எழுக 

என்பதே- = எனபதே 

முந்தையோர் கண்ட முறை. = முன்னோர் கண்டா நல்ல வழி 


இது ஆசாரக் கோவை சொல்வது அல்ல. இப்படித்தான் நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்று அது   சொல்கிறது. 


5 am club என்று ஒரு ஆங்கில நூல் எழுதினால், காசு போட்டு வாங்கி படித்து விட்டு, பிரமாதம் என்று சொல்கிறார்ககள். 

அதற்கு ஆயிர கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே இதையெல்லாம் சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார்கள். 


அதி காலை எழுந்து பாருங்கள். அதன் சுகம் தெரியும். 

நாள் முழுவதும் ஒரு புத்துணர்ச்சியோடு இருப்பதை உணர்வீர்கள். 


இப்படி, பல பாடல்கள் இருக்கின்றன.


மூல நூலை தேடிப் பிடித்து படித்து பயன் அடையுங்கள். 





Wednesday, January 20, 2021

கம்ப இராமாயணம் - கல்லும் மரங்களும் உருக நோக்கும் காதலன்

 கம்ப இராமாயணம் - கல்லும் மரங்களும் உருக நோக்கும் காதலன் 


வீடணன் செய்தது சரியா, தவறா என்ற வாதம் இன்று வரை தொடர்கிறது. 

என்னைப் பொறுத்தவரை சரி தவறு எல்லாம் அறிவு சம்பந்தப் பட்டது.  சாத்திரங்கள், சட்டங்கள், நடைமுறை பழக்க வழக்கங்கள் இவற்றைக் கொண்டு, தர்கா ரீதியாக அலசி ஆராய்ந்து எடுக்கப்படும் முடிவுகளை சரியா தவறா என்று விவாதம் செய்யலாம்.


அளவற்ற அன்பில், கருணையில் பிறக்கும் ஒரு செயலை எப்படி சரி தவறு என்று நிர்ணயம் பண்ணுவது. 


பிள்ளைக்கு உடம்பு சரியில்லை. சரியாக சாப்பிட மாட்டேன் என்கிறது. சோர்ந்து படுத்து இடுக்கிறது. ஊரெல்லாம் விழாக் கோலம். பக்கத்து வீடுகளில் இருந்து நிறைய பலகாரங்கள் வந்து கிடக்கிறது. அந்தப் பிள்ளையின் அம்மா உற்சாகமாக அவற்றை எடுத்து உண்பாளா ? அல்லது, அவற்றை வெறுத்து ஒதுக்குவாளா?


பிள்ளைக்குத் தானே உடம்பு சரி இல்லை. இவளுக்கு என்ன? சாப்பிட வேண்டியது தானே?  இவள் சாப்பிடாமல் விட்டால் பிள்ளைக்கு உடம்பு சரியாகுமா?  அவள் செய்தது சரியா தவறா என்று விவாதம் பண்ண முடியாது. 


எனக்குத் தெரிந்து எவ்வளவோ வீடுகளில் பிள்ளைகள் நலமாக இருக்க வேண்டும், கணவன் நலமாக இருக்க வேண்டும் என்று பெண்கள் பல விரதங்கள் இருக்கிறார்கள்.  பிள்ளை பிழைத்து வந்தால், இனி வாழ் நாள் எல்லாம் இனிப்பு சாப்பிடாமல் இருப்பேன்  என்றெல்லாம் தியாகம் செய்கிறார்கள். இவை எல்லாம் சரியா தவறா என்று விவாதம் பண்ண முடியாது. 


அன்புக்கு முன்னால் எல்லாம் சரி தான். 


கருணைக் கொலை என்று சொல்கிறார்கள்.  அன்புக்கு உரியவர் படும் பாடு தாங்க முடியாமல்  அவர்கள் நிம்மதியாகப் போய் சேரட்டும் என்று அவர்களுக்கு தரும்  சிகிச்சையை நிறுத்தி அவர்கள் உயிர் பிரிய வழி செய்கிறார்கள். அது கொலை தான். அதற்குப்   பெயர் கருணைக் கொலை. பல நாடுகள்   அதை அங்கீகரிக்கிறது. 


அன்புக்கு முன்னால், எதுவும் சரி தான். 


அதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், சட்டப் புத்தகங்களை தூக்கிக் கொண்டு வரக் கூடாது. மனம் நிறைய அன்பைக் கொண்டு வர வேண்டும்.   அவ்வளவு அன்பு வந்து விட்டால், இந்த விவாதங்கள் இருக்காது. 


இராமனிடம் அடைக்கலம் வேண்டி வீடணன் வருகிறான். 


அவன் வரும் அந்தக் காட்சியை கம்பன் காட்டுகிறான். படித்துப் பாருங்கள். அதற்குப் பின், சரியா தவறா என்ற வாதங்கள் எவ்வளவு அபத்தம் என்று புரியும். 


"இரண்டு கைகளையும் தலைக்கு மேல் கூப்பியபடி வருகிறான். அவன் மனதில் உள்ள அன்பும் கருணையும் கண்ணில் வெளிப்படுகிறது. அதைப் பார்த்து கல்லும் மரமும் உருகுகின்றன. இராமன் அவனை பார்த்த போது, தரையில் விழுந்து வணங்குகிறான்".


இது நான் சொல்லும் உரை. கம்பன் பாடலைப் பாருங்கள். மனம் உருகும்.


பாடல் 

கரங்கள் மீச் சுமந்து செல்லும் கதிர் மணி முடியன், கல்லும்

மரங்களும் உருக நோக்கும் காதலன், கருணை  வள்ளல்

இரங்கினன் நோக்கும்தோறும், இரு நிலத்து இறைஞ்சுகின்றான்;

வரங்களின் வாரி அன்ன தாள் இணை வந்து வீழ்ந்தான்.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_20.html


click the above link to continue reading


கரங்கள் = கைகளை 

மீச்  = மேலே 

சுமந்து = சுமந்து. கைகள் மேலே நிற்கவில்லை. தளர்ந்து விழுகின்றது. அதை தலையில் சுமந்து 

செல்லும் = செல்லுகின்ற 

கதிர் = ஒளி வீசும் 

மணி  = மணிகள் நிறைந்த 

முடியன் = கிரீடம் அணிந்த வீடணன் 

கல்லும் = கல்லும் 

மரங்களும் = மரங்களும் 

உருக = உருகும்படி 

நோக்கும் காதலன் = நோக்கும் காதலன் 


கருணை  வள்ளல் = கருணை வள்ளலான இராமன் 

இரங்கினன் = இரக்கம் கொண்டு 

நோக்கும்தோறும், = பார்க்கும் போதெல்லாம் 

இரு நிலத்து இறைஞ்சுகின்றான்; = நிலத்தில் விழுந்து வணங்குவான் 

வரங்களின் = வரங்களின் 

வாரி அன்ன = கடல் போன்ற 

தாள் இணை = இரண்டு திருவடிகளில் 

வந்து வீழ்ந்தான். = வந்து வீழ்ந்தான். வணங்கினான் என்று கூட இல்லை. வீழ்ந்தான்  என்கிறான் கம்பன். 


இராமனை சொல்லும் போது , "வரங்களின் கடல்" என்கிறான். எவ்வளவு கொடுத்தாலும் குறையாது. 


வீடணனின் தோற்றம் கண்டு கல்லும் மரமும் உருகியது. 


அப்படிப்பட்ட மனதில் குற்றம் இருக்குமா?  துரோக சிந்தனை இருக்குமா? பதவி ஆசை இருக்குமா? 


சரியா தவறா என்று ஆய்வு செய்வது அன்பில்லாதவர்,  அன்பு பற்றி அறியாதவர் செய்யும் செயல். 


அன்புக்கு மிஞ்சிய ஒரு அறம் இல்லை. 





Tuesday, January 19, 2021

ஆசாரக் கோவை - முந்தையோர் கண்ட முறை

 ஆசாரக் கோவை - முந்தையோர் கண்ட முறை


ஆசாரம் என்றால் ஒழுக்கம். ஒழுக்கம் என்றால் நம்மை விட உயர்ந்தவர்கள் செய்தவற்றை நாம் இடைவிடாமல் செய்வது. 

உயர்ந்தவர்கள் என்றால் அறிவில், அனுபவத்தில், ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள்.  இன்று என்ன ஆகி விட்டது என்றால் யார் சொல்வதை கேட்பது, யார் செய்வதை பின்பற்றுவது என்பதில் பெரிய குழப்பம் இருக்கிறது. 


அயோக்கியத்தனம் செய்பவன் எல்லாம் நல்லவன் என்று சினிமா மற்றும் பிற ஊடகங்கள் சித்தரிக்கத் தொடங்கிவிட்டன. மக்கள் குழம்ப ஆரம்பித்து விட்டார்கள். எது சரி, எது தவறு என்பதில் தடுமாற்றம் வருகிறது. 


யாரிடம் கேட்பது?


வக்கிரங்கள் எல்லாம் நடை முறையாகிக் கொண்டு வருகிறது. 


இந்த மாதிரி தருணங்களில், நமக்கு வழிகாட்ட ஆசாரக் கோவை போன்ற நூல்கள் உதவுகின்றன.


எதற்கு ஆசாரத்தை  கடை பிடிக்க வேண்டும்?


அது எல்லாம் அந்தக் காலத்தில் செய்தார்கள். இது கம்ப்யூட்டர் காலம். இப்ப வந்து ஆசாரம்   என்று பேசிக் கொண்டு என்று கேலி பேசுகிறார்கள். 


ஆசாரத்தை கடை பிடிப்பவர்கள் கூட அதைஏன் செய்கிறாய் என்று கேட்டால் பதில் தெரியாமல் விழிக்கிறார்கள். முன்னோர்கள் செய்தார்கள். நானும் செய்கிறேன். எல்லாம் ஒரு நம்பிக்கைதான் என்று ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்கள். 


ஆசாரம் என்றால் என்ன, அதை ஏன் கடைபிடிக்க வேண்டும் என்று அறிந்து கொண்டு கடைபிடிப்போம். 


மனித வாழ்க்கை அகம் புறம் என இரண்டாக இருக்கிறது. இரண்டாக இருந்தாலும், ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டுள்ளது. 


மனதை செம்மை செய்தால், வாழ்வு உயரும். மனதில் உள்ள அழுக்கை நீக்கினால், வாழ்வு சுகப்படும். 


பொறாமை, கோபம், வன்மம், துவேஷம்,  பொருந்தா காமம், பேராசை, கயமை போன்ற  கீழான எண்ணங்களை நீக்கினால், வாழ்வு எவ்வளவு சுகமாக இருக்கும். 


ஆனால், எப்படி நீக்குவது? 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_19.html


click the above link to continue reading


மனதை வெளியே எடுத்து, சுத்தம் செய்து திருப்பி உள்ளே வைக்க முடியுமா? 


முடியாது. மனதை நம்மால் நேரடியாக ஒன்றும் செய்ய முடியாது. 


ஆனால், மனமும், உடலும் நெருங்கிய தொடர்பு உள்ளவை. உடலை மாற்றினால் மனம் மாறும். 


நாலு நாள் குளிக்காமல் இருந்து பாருங்கள். உடல் அழுக்காக இருக்கும். ஆனால், மனமும் சோர்ந்து, குறுகி விடும். 


நல்ல வெந்நீர் வைத்தது குளித்து, புது ஆடை அணிந்து, கொஞ்சம் வாசனை திரவங்களை தெளித்தால், உடம்பு புத்துணர்ச்சி அடைவது மட்டும் அல்ல, மனமும்  துள்ளிக் கொண்டு நிற்கும். 


உடலை சரி செய்தால், மனம் சரியாகும்.  


இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 


ஆசாரம் என்பது உடலின் மூலம் மனதை சரி செய்யும் வித்தை. 


வெறும் ஆசாரத்தோடு நின்று விடக் கூடாது. 


காலையில் எழுந்து பல் விளக்கி குளித்து விட்டுத்தான் அடுப்பே பத்த வைப்பேன் என்று பெருமையாக சொல்வார்கள். 


ஏன்? குளிக்காமல் பத்த வைத்ததால் என்ன ஆகும் என்று கேட்டால் தெரியாது. 


காலையில் குளிக்கும் போது மனம் எப்படி சிலிர்க்கிறது என்று பார்க்க வேண்டும். இரவின் சோம்பல் எல்லாம் போய், உடம்பு புத்துணர்ச்சி பெறும் போது உள்ளமும் மகிழும். சுறுசுறுப்பாக இருக்கும். புத்தி நன்றாக வேலை செய்யும். 


குளிப்பதற்கு அல்ல ஆசாரம். மனதையும், புத்தியையும் தெளிவு படுத்த. 


எனவே, உடலை எப்படி ஒரு ஒழுக்க நிலையில் கொண்டு வர வேண்டும் என்று சொல்ல வருகிறது  ஆசாரக் கோவை. 


நமக்குத் தெரியுமா எப்படி உடம்பை, நாளை, மூளையை நெறி படுத்துவது என்று? தெரிந்தால் பின் ஆசாரக் கோவை படிக்க வேண்டாம். 


தெரிந்து கொள்ள விரும்பினால், ஆசாரக் கோவை நமக்கு வழி காட்டும். 


என்ன தான் சொல்கிறது என்று பார்ப்போமே.....கடை பிடிக்கறோமோ இல்லையோ, தெரிந்து கொள்வோமே...


தெரிந்து கொள்வோமா?

Tuesday, January 12, 2021

திருவாசகம் - ஒளி செய் மானிடம்

 திருவாசகம் - ஒளி செய் மானிடம் 


திருவாசகம் படிக்க படிக்க கண்ணில் நீர் நிறைவது என்னவோ உண்மைதான். 

நமக்கு கிடைத்து இருக்கும் கொடைகளை எண்ணிப் பாருங்கள். ஆரோக்கியமான உடல். இது நாள் வரை. கண் இல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருக்கும்? இரண்டு கால் இல்லாமல் இருந்திருந்தால்? எத்தனையோ குறைகள் இல்லாமல் இருக்கிறோம். என்றாவது அது பற்றி மகிழ்ந்தது உண்டா? திருப்தி அடைந்தது உண்டா? 

அறிவு இருக்கிறது. படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. படிக்க ஆயிரம் ஆயிரம் புத்தகங்கள் கொட்டிக் கிடக்கிறது. அறிவை அள்ளி அள்ளித் தர வரிசையில் நிற்கிறார்கள் அறிஞர் பெருமக்கள். 

அதெல்லாம் நமக்குத் தெரிவதில்லை. 

இருப்பதை எல்லாம் புறம் தள்ளி விட்டு, இல்லாததை கொண்டா என்று எவ்வளவு கீழ்மையாக நாம் நடந்து கொள்கிறோம். 


மணிவாசகர் உருகுகிறார். 


எனக்கு முன்னால் வந்தவர்கள், உன் கருணை வேண்டும் என்று உண்மையிலேயே வேண்டி, அதைப் பெற்றுக் கொண்டார்கள். எவ்வளவோ பெரிய ஆள் நீ. எனக்காக அருள் செய்ய வந்தாய். அந்தக் கருணையைக் கூட நான் புரிந்து கொள்ளவில்லை. என்னே என் கீழ் மதி 


என்று நொந்து கொள்கிறார். 


பாடல் 


மாறு இலாத மாக் கருணை வெள்ளமே! வந்து முந்தி நின் மலர்கொள் தாள் இணை,

வேறு இலாப் பதப் பரிசு பெற்ற, நின் மெய்ம்மை அன்பர், உன் மெய்ம்மை மேவினார்;

ஈறு இலாத நீ, எளியை ஆகி வந்து, ஒளிசெய் மானிடம் ஆக, நோக்கியும்,

கீறு இலாத நெஞ்சு உடைய நாயினேன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_12.html


click the above link to continue reading


மாறு இலாத = மாற்றம் இல்லாத 

மாக் கருணை = பெரிய கருணை 

வெள்ளமே! = வெள்ளமே 

வந்து = இங்கு வந்து 

முந்தி = எனக்கு முன்னால் 

நின் மலர்கொள் = உன்னுடைய மலர் போன்ற 

தாள் இணை, = இரண்டு திருவடிகளை 

வேறு இலாப் = நீங்குதல் இல்லாத 

பதப் பரிசு பெற்ற = அந்தப் பாதங்களை அடையும் பரிசு பெற்ற 

நின் = உன் 

மெய்ம்மை அன்பர் = உண்மையான அன்பர்கள் 

உன் மெய்ம்மை மேவினார்; = உன்னை அடைந்தார் 

ஈறு இலாத நீ = முடிவே இல்லாத நீ 

எளியை ஆகி வந்து = எளிமையாக வந்து 

ஒளிசெய் மானிடம் ஆக = ஒளி பொருந்திய மானிட வடிவம் பெற்று 

நோக்கியும், = எனக்கு காட்சி தந்தும் 

கீறு இலாத  =  இளகாத 

நெஞ்சு உடைய = மனதை உடைய 

நாயினேன் = நாயைப் போன்றவன் 

கடையன் = கீழானவன் 

ஆயினேன் = ஆயினேன் 

பட்ட கீழ்மையே. = நான் பட்ட கீழ்மையே 


முக்தி வேண்டும், இறைவனை அடைய வேண்டும், அற வழியில் வாழ வேண்டும் என்பார்கள். சரி, எப்படி என்று சொன்னால், அதெல்லாம் சரிப்படாது,  நடை முறைக்கு ஒத்து வராது என்று தள்ளி விடுவார்கள். பின்னும், முக்தி அடைவது எப்படி,  இறைவனை அடைவது எப்படி என்று படிப்பார்கள். 


என்ன சொல்வது அவர்களை. 


இறைவன் எத்தனையோ வழிகளில் வந்து அருள் செய்கிறான். அது வேண்டாம், இது சரி இல்லை என்று தள்ளி விட்டுக் கொண்டே இருந்தால் என்ன செய்வது. உண்மையான  பக்தி உள்ளவர்கள், அருளை பெற்றார்கள். முக்தி அடைந்தார்கள். எனக்கு நீ எவ்வளவோ சொல்லியும், தந்தும் ஒன்றும் புரியாமல்  கடின நெஞ்சோடு வாழ்கிறேனே என்று உருகுகிறார் மணிவாசகர்.

பக்குவம் அடைந்து விட்டால், ஒரு வார்த்தை போதும். 




Monday, January 11, 2021

திருக்குறள் - எண்ணித் துணிக கர்மம்

திருக்குறள் - எண்ணித் துணிக கர்மம் 


எல்லோருக்கும் தெரிந்த குறள் தான். 


பாடல் 

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_11.html


click the above link to continue reading

எண்ணித் = நினைத்து , ஆராய்ந்து 

துணிக = துணிந்து செய்க 

கருமம்  = காரியங்களை 

துணிந்தபின் = செய்யத் தொடங்கிய பின் 

எண்ணுவம் = ஆராய்ந்து கொள்ளலாம் 

என்பது இழுக்கு. = என்பது குறை 


சரி, அதுக்கு என்ன இப்ப? அதுதான் தெரியுதே. 


எண்ணித் துணிக - ஆராய்ந்து செய்யணும். சரி, எதை ஆராயணும்?  அதுக்குத்தான் பரிமேல் அழகர் வேணும். 

இரண்டு விடயங்களை ஆராய்ந்து பின் ஒரு செயலை தொடங்க வேண்டும். அவை என்ன இரண்டு?


முதலாவது,  எதைச் செய்வது என்று யோசித்து முடிவு எடுக்க வேண்டும். நிறைய பேருக்கு என்ன  செய்ய வேண்டும் என்றே தெரிவதில்லை. திருமணம் செய்வதாக இருக்கட்டும் , மேல்படிப்பு, தொழில் தொடங்குவது, என்று எதை எடுத்தாலும்  ஆராய்ந்து செய்ய வேண்டும்.  வீடு வாங்குவது,  கார் வாங்குவது ...எதாக வேண்டுமானாலும் இருக்கட்டும். செய்வதற்கு முன்னால் ஆராய்ந்து   செய்ய வேண்டும்.


இரண்டாவது, எப்படி செய்வது என்று சிந்திக்க வேண்டும்.  திருமணம் முடித்தால், அதில் என்னென்ன பொறுப்புகள் வரும், அவற்றை எப்படி சமாளிப்பது, அதில் வரும் சிக்கல்கள் என்ன என்றெல்லாம் சிந்திக்க வேண்டும். முதல்ல கல்யாணம் பண்ணிக்குவோம், அப்புறம் யோசிப்போம் என்பது இழுக்கு.   


எதைச் செய்வது, எப்படி செய்வது என்று இரண்டையும் யோசிக்க வேண்டும். எல்லா காரியத்துக்கும்.  


அப்படிச் செய்யாவிட்டால் என்ன ஆகும்?  


இழுக்கு.


அப்படினா?  குறை, குற்றம். 

என்ன ஆயிரும் ?


முதலாவது, தொடங்கிய காரியம் வெற்றிகரமாக முடியாது. தோல்வியில் முடியும். எல்லோரும் நகைப்பார்கள். 


இரண்டாவது, பாதியில் விடவும் முடியாது. கட்டத் தொடங்கிய வீட்டை பாதியில் விட முடியுமா? குடும்ப பாரம் அதிகம் என்று விட்டு விட்டு ஓட முடியுமா? எனவே அது ஒரு சிக்கல்.


மூன்றாவது, அளவுக்கு அதிகமாக செலவு பண்ணி, இருக்குற சொத்தும், புகழும் போய் விடும். 


எனவே, துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு. 


எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று சிந்தித்து முடிவு எடுங்கள். 






Sunday, January 10, 2021

கம்ப இராமாயணம் - இந்திய கலாச்சாரம்

 கம்ப இராமாயணம் - இந்திய கலாச்சாரம் 


இந்திய கலாச்சாரம், இந்திய கலாச்சாரம் என்று சொல்கிறீர்களே, அப்படி என்றால் என்ன? என்னதான் உங்கள் கலாச்சாரம்? எதை வைத்துக் கொண்டு உங்கள் கலாச்சாரம் மற்றவற்றைவிட உயர்ந்தது என்று கூறுகிறீர்கள் என்று இளைய தலை முறையினர் கேட்கும் போது, பெரியவர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழிப்பதை நான் பார்த்து இருக்கிறேன். 

நம் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களை, நாம் போற்றும் கதா நாயகர்கள் மற்றும் நாயகிகள் மேல் ஏற்றிக் கொண்டாடுகிறோம். 

தனித் தனியாக பட்டியல் போட முடியாது. நல்ல கலாச்சார, பண்பாடுகளை உயர்ந்த பாத்திரங்களின் மேல் ஏற்றிச் சொல்லி விடுகிறோம். 

ஒரு வேளை அந்தக் கலாச்சாரம் மாறி இருந்தால், அந்த கதைகள், அந்தக் கதா பாத்திரங்கள் இன்னேரம் செல்லரித்துப் போய் இருக்கும். 


இன்றும் காலம் கடந்து நாம் அவற்றை கொண்டாடுகிறோம் என்றால், அந்தக் கதா பாத்திரங்கள் செய்ததுதான் நம் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் அடிப்படை. 


இன்று ஒரு பெரிய நாட்டில் தேர்தல் நடந்து, தோல்வி அடைந்த அதிபர் பதவியை விட மனம் இல்லாமல்  ஏதேதோ நடக்கிறது அந்த நாட்டில்.  பதவி என்பது பெரிய விடயம்தான். அதை விடுவது என்பது எளிய காரியம் இல்லை. 


எத்தனையோ கோடி மக்கள் எதிர்த்து ஒட்டுப் போட்டாலும்,  அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்  என்று அடம் பிடிப்பது ஒரு வகை கலாச்சாரம், பண்பாடு. 


அது சரி அல்ல, பதவி ஒன்றும் பெரிய விடயம் அல்ல. அதை விட பெரிய விடயங்கள் உலகில் இருக்கின்றன  என்று காட்டியது நம் கலாச்சாரம். 

ஏதோ அந்த நாட்டில் எல்லோரும் பதவி ஆசை பிடித்தவர்கள் என்று சொல்ல வரவில்லை. அதே போல் நம் நாட்டில் யாருக்குமே பதவி ஆசை இல்லை என்றும் சொல்ல வரவில்லை. 

நம் நாட்டின் உரை கல் எது என்று காண்பிப்பதுதான் என் வேலை. எதை நாம் பெரிதாக  கொண்டாடுகிறோம்? எது நமக்கு உயர்ந்தது ? எது நமது அளவு கோல் என்று காட்ட முயற்சி செய்கிறேன். 


இராமனுக்கு முடி சூட்டுவது என்று தசரத சக்கரவர்த்தி முடிவு செய்துவிட்டார். எல்லோருக்கும் அறிவித்தாகி விட்டது.  மனைவியிடம் அதைச் சொல்லப் போகிறார்.  போன இடத்தில், கைகேயி அந்த முடிவை மாற்றி, இராமனுக்கு செல்ல வேண்டிய  அரசை பரதனுக்கு என்று மாற்றுகிறாள். 


தெரிந்த கதை தான். 


வந்த அரசை விட மனம் வருமா? சின்ன பதவியா, விட்டு விட. ஆழி சூழ் உலகம்  அனைத்துக்கும் அதிபதி என்ற பட்டம். அதை விட மனம் வருமா?  வந்த பதவியை விடுங்கள். ஒரு பதவி உயர்வு வரவில்லை என்றால் எவ்வளவு கவலை வருகிறது. 

"உனக்கு அரசு கிடையாது. காட்டுக்குப் போ" என்று விரட்டி விடுகிறாள். 


இராமன் நினைத்து இருந்தால், கைகேயி தூக்கி சிறையில் போட்டு இருக்கலாம். யாரும் ஒன்றும் சொல்லி இருக்க மாட்டார்கள். 

அல்லது 

"சரி என்ன செய்ய. நம் விதி" என்று வருத்தத்துடன் ஏற்றுக் கொண்டு இருக்கலாம்.  அதுவும் இல்லை. 


அப்போது பூத்த செந்தாமரை போல மலர்ச்சியாக இருந்ததாம் இராமனின் முகம். ஒரு வாட்டம் இல்லை. ஒரு கவலை இல்லை. 


அப்பா, அம்மா சொல்லுக்கு முன்னால், பதவி ஒரு தூசு என்று நினைப்பது நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. 

அம்மா சொன்னால், காட்டுக்குக் கூட சிரித்த முகத்தோடு போகலாம் என்று இராமன் காட்டினான். ஒரு வேளை இராமன், "நான் ஏன் போக வேண்டும். சரியான காரணம் சொல்லுங்கள். வேண்டுமானால், அரசை இரண்டாக பிரித்து நான் ஒரு பக்கம் ஆள்கிறேன், பரதன் ஒரு பக்கம் ஆளட்டும் " என்று வாதம் பண்ணி இருக்கலாம். பண்ணி இருந்தால் கூட குற்றம் சொல்ல முடியாது. 

இன்று, இளைய தலைமுறையினர், அவர்களின் பெற்றோர்களை பார்த்து  கேட்கிறார்கள் "உனக்கு என்ன தெரியும்?" என்று. 


இராமன் கேட்டு இருக்கலாம். "அம்மா, நீ சும்மா ஒரு. உனக்கு ஒண்ணும் தெரியாது. இந்த அரசியல் எல்லாம் உனக்கு ஒண்ணும் புரியாது. வாய மூடிக்கிட்டு பேசாம இரு" என்று சொல்லி இருக்கலாம். அது உண்மையும் கூட. கைகேயிக்கு   என்ன தெரியும்? பிள்ளை பெற்றாள் , வளர்த்தாள். அரசியல் அறிவு அவளுக்கு உண்டா?


இராமன் அதெல்லாம் பேசவே இல்லை.  அம்மா சொன்னா கேக்கணும். அவ்வளவுதான். அவள் எனக்கு கெடுதல் செய்ய மாட்டாள் என்று ஆழமாக நம்பினான்.  


பாடல் 


இப்பொழுது எம் அனோரால்

    இயம்புதற்கு எளிதே! யாரும்

செப்ப(அ)ரும் குணத்து இராமன்

    திருமுகச் செவ்வி நோக்கில்

ஒப்பதே முன்பு; பின்பு அவ்

    வாசகம் உணரக் கேட்ட

அப்பொழுது அலர்ந்த செந்தா

    மரையினை வென்றது அம்மா!


பொருள் 

click the link below to continue reading

https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_10.html


இப்பொழுது = இப்போது 

எம் அனோரால் = எம் போன்ற கவிஞர்களுக்கு 

இயம்புதற்கு = சொல்வதற்கு 

எளிதே! = எளிதான காரியமா? இல்லை 

யாரும் = யாராலும் 

செப்ப = சொல்ல 

(அ)ரும் = முடியாத அருமையான 

குணத்து இராமன் = குணங்களை கொண்ட இராமன் 

திருமுகச் = திரு முகத்தின் 

செவ்வி  = அழகைப் 

நோக்கில் = பார்த்தால் 

ஒப்பதே = ஒரே மாதிரி இருந்தது 

முன்பு; பின்பு = முன்னும்,பின்னும் 

அவ் வாசகம் = கைகேயி சொன்ன வாசகம்  

உணரக் கேட்ட = உணர்ந்து, கேட்ட 

அப்பொழுது  = அந்தக் கணத்தில் 

அலர்ந்த = மலர்ந்த 

செந்தாமரையினை  = சிவந்த தாமரை மலரை 

வென்றது = விட அழகாக இருந்ததது 

அம்மா! = அம்மா என்பது வியப்புச் சொல் 


கைகேயி சொல்வதற்கு முன்னும், பின்னும் இராமனின் முகம் சிவந்த தாமரை மலர் அப்போதுதான் மலர்ந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்ததாம்.


இந்திய கலாச்சாரம் பெரிய கலாச்சாரமா என்று கேட்கும் குழந்தைகளுக்கு இராமாயணம்  சொல்லுங்கள். 


தாமரை போல் இருந்தது என்ற  உதாரணத்தின் பின்னால் போய் விடக் கூடாது. கருத்தைப் பற்றிக் கொள்ள வேண்டும். அதை எடுத்துச் சொல்ல வேண்டும். 


பதவி  போனால், வேலை போனால் நடுங்காமல் இருக்க முடியுமா? 

எப்படி வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள் என்று. 



Saturday, January 9, 2021

திருக்குறள் - செய்வன

 திருக்குறள் - செய்வன 

பெரும்பாலும் திருக்குறள் படிக்கும் போது, அறத்துப் பால் படிப்போம். ஒரே அறவுரையாக இருக்கும். சரி கொஞ்சம் மனதை இலகுவாக்குவோம் என்று இன்பத்துப் பால் படிப்போம். நடுவில் உள்ள பொருள் பால் போவதற்கு நேரம் கிடைப்பதில்லை. 


பொருள் பாலில், பொருள் சம்பாதிப்பது மட்டும் அல்ல, ஒரு நல்ல குடிமகனாக, சமுதாயத்தில் ஒரு நல்ல அங்கத்தினனாக இருப்பது என்பது பற்றி எல்லாம் வள்ளுவர் சொல்லி இருக்கிறார். 

ஒரு செயலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு அதிகாரம். அது எந்த செயலாக வேண்டுமானாலும் இருக்கட்டும். 

"தெரிந்து செயல் வகை" 


அதில் ஒரு குறள். 


செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்


பொருள் 

click to continue


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_9.html


செய்தக்க அல்ல = செய்வதற்கு தகுதி இல்லாதவற்றை 

செயக்கெடும் = செய்தால், கெடுதல் விளையும் 

செய்தக்க = செய்யத் தகுந்தவற்றை 

செய்யாமை யானும் கெடும் = செய்யாவிட்டாலும் கெடுதல் வரும் 


எது செய்யக் கூடாதோ, அதைச் செய்தால் கெடுதல் வரும். 


எதைச்  செய்ய வேண்டுமோ, அதை செய்யாமல் விட்டாலும் கெடுதல் வரும். 


புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு.  


சிந்திப்போம். 


செய்ய வேண்டியவற்றை செய்யாவிட்டால் என்ன கெடுதல் வந்து விடும்? அதனால் வர  வேண்டிய பலன் கிடைக்காமல் போகலாம். கெடுதல் எப்படி வரும்?

ஒவ்வொரு வருடமும், உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்று சோதனை செய்ய வேண்டும். (annual medical check up ). அதைச் செய்தால், நோயின் ஆரம்ப கால அறிகுறிகள் ஏதாவது இருந்தால், அதை உடனே கண்டு பிடித்து, மருந்து சாப்பிட்டு  குணப் படுத்திக் கொள்ளலாம். ஆண்டு மருத்துவ சோதனை செய்யாமல் விட்டால், நோய் முற்றி , பின்னாளில் எந்த மருந்துக்கும் சரியாகாமல்  துன்பப் பட நேரிடும். 


செய்ய வேண்டியதை, செய்யாமல் விட்டால் வரும் கெடுதல். 

உடற் பயிற்சி செய்ய வேண்டும். அதை செய்யாவிட்டால் கெடுதல் வருமா இல்லையா?


இளமையில் படிக்க வேண்டும். படிக்காவிட்டால்? 

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். செய்ய வேண்டியவற்றை  செய்யாமல் விட்டால்  துன்பம் வரும். 


இதில் முக்கியமான செய்தி என்ன என்றால், செய்ய வேண்டியது எது என்று நமக்குத் தெரியாமல்  இருப்பதுதான். 


பிள்ளைகளை கட்டிக் கொடுத்து, அதுக எல்லாம் செட்டில் ஆகிருச்சு. இனி என்ன இருக்கு செய்ய வேண்டியது என்று   சிலர் நினைக்கலாம். 

படிச்சோம், வேலைக்குப் போனோம்...சம்பாதித்தோம் , இனி என்ன செய்ய வேண்டியது இருக்கிறது , என்று சிலர் நினைக்கலாம். 

குடும்பம் ஒழுங்கா போய்கிட்டு இருக்கு. இதுல என்ன செய்ய வேண்டி இருக்கு என்று கேள்வி எழலாம். 

அதற்கு பதில் சொல்ல முடியும். இருந்தாலும், அவரவர்கள் சிந்தித்து முடிவுக்கு வருதலே நலம். 


அடுத்தது, செய்ய வேண்டாதவற்றை செய்தாலும் கெடுதல் வரும். 


புகை பிடிப்பது, மது அருந்துவது, அளவுக்கு அதிகமாக தூங்குவது, சோம்பேறியாக இருப்பது,  whatsapp ல் நேரத்தை செலவிடுவது,  facebook , youtube  என்று  நேரத்தை விரயம் பண்ணுவது,  கண்ட கண்ட சீரியல்களை பார்ப்பது, அரட்டை அடிப்பது  போன்ற செய்ய வேண்டாத காரியங்களை செய்தாலும் கெடுதல் வரும். 


இரண்டு பட்டியல் போடுங்கள்.


எதை எல்லாம் நிறுத்த வேண்டும் என்று ஒரு பட்டியல். 


எதை ஆரம்பிக்க வேண்டும்/ தொடர வேண்டும் என்று ஒரு பட்டியல். 


இந்தக் குறளை இன்னும் விரித்துச் சொல்லலாம்.  அவ்வளவு இருக்கிறது. இப்போதைக்கு இது போதும். 


பொருட்பாலில், ஒரு அதிகாரத்தில், ஒரு குறளில் இவ்வளவு இருக்கிறது. 


வேறு என்ன சொல்ல?




Tuesday, January 5, 2021

நளவெண்பா - இன் துணைமேல் வைத்து உறங்கும்

நளவெண்பா - இன் துணைமேல் வைத்து உறங்கும் 


அன்றில்  என்று ஒரு பறவை இருந்ததாம். இப்போது இல்லை. அந்தப் பறவை, தன் இணையை விட்டு பிரியவே பிரியாதாம். அவ்வளவு காதல். இரவு தூங்கும் போது கூட, இரண்டும் ஒன்றை ஒன்று கழுத்தை பின்னிக் கொண்டுதான் தூங்குமாம். 


அது மட்டும் அல்ல,

ஒரு கண் தூங்குமாம், இன்னொரு கண்ணால் தன் இணையை பார்த்துக் கொண்டே உறங்குமாம். தூக்கத்தில் கூட பிரிந்து இருக்க முடியாது அவைகளால். அப்படி ஒரு காதல். 


ஒரு நாள், ஒரு பெண் அன்றில் பறவை அழும் குரல் தமயந்திக்கு கேட்டதாம். 


ஏன்?


ஒரு வேளை ஆண் பறவை இரண்டு கண்ணையும் மூடி தூங்கி இருக்குமோ? அப்படிப்பட்ட  இரவு. எப்போதுமே முழுவதும் தூங்காத அன்றில் பறவை கூட அன்று தூங்கி விட்டதாம். 


அன்றில் தூங்கிய போதும், தமயந்தி தூங்கவில்லை. நளன் நினைப்பு அவளை தூங்க விடாமல்  பண்ணுகிறது. 


புகழேந்தியின் கற்பனை. 


பாடல் 


அன்றில் ஒருகண் துயின்றொருகண் ஆர்வத்தால்

இன்துணைமேல் வைத்துறங்கும் என்னுஞ்சொல் - இன்று

தவிர்ந்ததே போலரற்றிச் சாம்புகின்ற போதே

அவிழ்ந்ததே கண்ணீர் அவட்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_5.html


click the above link to continue reading


அன்றில் = அன்றில் பறவை 

ஒருகண் = ஒரு கண் 

துயின்றொருகண்  = துயின்று (தூங்கி) இன்னொரு கண் 

ஆர்வத்தால் = ஆர்வத்தால் 

இன்துணைமேல் = இனிய துணை மேல் 

வைத்துறங்கும் = வைத்து உறங்கும் 

என்னுஞ்சொல் = என்ற சொல் 

இன்று = இன்று 

தவிர்ந்ததே = தவறாகிப் போனதே 

போலரற்றிச் = என்பது போல் அரற்றி 

சாம்புகின்ற போதே = வருந்துகின்ற போதே 

அவிழ்ந்ததே = அவிழ்ந்ததே 

கண்ணீர் = கண்ணீர் 

அவட்கு. = அவளுக்கு 


கூந்தல் அவிழ்ந்தது என்று கூறுவது போல, கண்ணீர் அவிழ்ந்ததாம். துளி துளியாக வரவில்லை. மொத்தமாக அப்படியே வந்ததாம் தமயந்திக்கு. 


கொஞ்சும் தமிழ்.  இனிமையான கற்பனை.  



Sunday, January 3, 2021

கம்ப இராமாயணம் - கரு நாயிறு போல்பவர்

 கம்ப இராமாயணம் - கரு நாயிறு போல்பவர்


"இத்தனை நாள் என்னோடு ஒன்றாக இருந்தாயே என் மனமே. ஒரு நாள் கூட என்னை விட்டு நீ பிரிந்தது இல்லை. என்னோடு சேர்ந்து என் இன்ப துன்பங்களை அனுபவித்தாய். ஆனால், நேத்து வந்த இராமனைப் பார்த்தவுடன், என்னை விட்டு விட்டு அவன் பின்னால் போய் விட்டாய். இனி அவன் எப்ப வருவானோ, அப்ப அவனோடு தான் நீ வருவாய் போல் இருக்கிறது. உன்னைப் போல ஒரு நன்றி கெட்ட ஆளை நான் பார்த்ததே இல்லை"


என்று சீதை தன் மனதுக்குச் சொல்கிறாள். 


பாடல் 

கரு நாயிறு போல்பவர் காலொடு போய்.

வரு நாள். அயலே வருவாய்;- மன்னே!-

பெரு நாள். உடனே. பிரியாது உழல்வாய்;

ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_3.html

click the above link to continue reading


கரு நாயிறு = கருமையான ஞாயிறு

போல்பவர் = போல அவர் 

 காலொடு போய். = திருவடிகளை பற்றிக் கொண்டு 

வரு நாள் = அவர் திரும்பி வருகின்ற நாள் 

அயலே வருவாய் = வெளியே சென்ற நீ வருவாய் 

மன்னே!- = என் மனமே 

பெரு நாள் = ரொம்ப நாள் 

உடனே = கூடவே இருந்து 

பிரியாது  = பிரியாமல் 

உழல்வாய்;  = என்னோடு சேர்ந்து சுற்றிக் கொண்டு இருந்தாய் 

ஒரு நாள் தரியாது = ஒரே நாளில் என்னோடு இல்லாமல் 

ஒழிவார் உளரோ? = விட்டு விட்டுப் போய் விட்டாய். அப்படி செய்பவர்கள் கூட இருக்கிறார்களா? 


ஜொள்ளு விடுறதுக்கு இவ்வளவு பில்ட் - அப்பா?




Saturday, January 2, 2021

கம்ப இராமாயணம் - கொடியாய் விடியாய்

 கம்ப இராமாயணம் - கொடியாய் விடியாய் 


தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் பெண்கள் மிக நுணுக்கமானவர்கள். ஆண்களின் உணர்சிகள் என்னவோ கொஞ்சம் தான் இருக்கும் போல இருக்கிறது. கோபம், காமம், பசி, என்று மிக அழுத்தமான, அதீதமான உணர்சிகளாகவே இருக்கிறது. பெண்களின் உணர்வுகளும், அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதமும் மிக நுணுக்கமாகவும், மென்மையாகவும் இருக்கிறது. 


பெரும்பாலும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.  விதி விலக்குகள் இருக்கலாம். 

 மேலும், ஆணுக்கு பெண் சரி என்று கொடி பிடித்துக் கொண்டு பெண்களின் அந்த மென்மை, நுண்மை எல்லாம் காற்றில் பறக்க விட்டுக் கொண்டு இருக்கிறார்கள் - சிலர். 


அது ஒரு பக்கம் இருக்கட்டும். 


இராமன் வில்லை முறித்து விட்டான். மறு நாள் சுயம்வரம். இருவரும் தவிக்கிறார்கள். 

இராமனின் தவிப்பு இருக்கட்டும். சீதையின் நிலை என்ன. பெண்ணுக்குள்ளும் இந்த தவிப்பு இருக்குமா? இருந்தால் எப்படி இருக்கும்? 


இரவு நேரம். தூக்கம் வரவில்லை. இந்த இரவோ முடிவதாகக் காணோம். நீண்டு கொண்டே போகிறது. சீதை , அந்த இரவைப் பார்த்துச் சொல்கிறாள்

"ஏய் இரவே, வலிமை இல்லாத ஒருவர் மேல் யாராவது சண்டை போட்டு அவர்கள் உயிரை எடுக்க நினைப்பார்களா? நீ ஏன் என் உயிரை இப்படி வதைக்கிறாய்?  இரு இரு...நீ என்னை இப்படி கஷ்டப் படுத்துறேல ... விடியட்டும், இராமன் வருவான், அவன்கிட்ட சொல்லி உன்னை என்ன பண்றேன் பாரு " 


பாடல் 

உரவு ஏதும் இலார் உயிர் ஈதும்” எனா.

கரவே புரிவார் உளரோ? கதிரோன்

வரவே. எனை ஆள் உடையான் வருமே!-

இரவே! - கொடியாய். விடியாய்’ எனுமால்.


பொருள் 

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_2.html

உரவு = வலிமை 

ஏதும் இலார் = எதுவும் இல்லாதவர்களை 

உயிர் ஈதும்” எனா. = உயிரை தருவோம் என்று எண்ணாமல் 

கரவே = வஞ்சித்து (அவர்கள் உயிரை )

புரிவார் உளரோ?  = பறிப்பவர்கள் யாராவது இருப்பார்களா ?

கதிரோன் வரவே = கதிரவன் வரட்டும் 


எனை ஆள் உடையான் வருமே!- = எனை ஆளும் உடமை பெற்றவன் வருவான் (இராமன்) 

இரவே! - = ஏய் இரவே 

கொடியாய். = கொடுமையான ஒன்றே 

விடியாய் = நீ விடியாமல் இருக்கிறாய் 


எனுமால். = என்று கூறினாள் 


கம்பன் ஒரு ஆண்.  ஒரு பெண் நினைத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கூறுகிறான். 


அது சரித்தானா என்று பெண் வாசகிகள் கூறினால் நன்றாக இருக்கும். 




Friday, January 1, 2021

நாலடியார் - உரைப்பினும் நாய்குரைத் தற்று

நாலடியார் -  உரைப்பினும் நாய்குரைத் தற்று


பல பேருக்கு ஏதாவது கேள்வி கேட்க வேண்டும், வாதம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்கும். அப்படி ஏதாவது கேள்வி கேட்டு, வாதம் பண்ணினால் தான் தங்கள் அறிவுத் திறன் வெளிப் படுவாதாக அவர்கள் நினைக்கிறார்கள். 


ஆனால் விளைவு என்னவோ அதற்கு நேர் எதிர் மாறாக இருக்கிறது. 


வாயைத் திறந்து ஏதாவது சொல்லி, தங்கள் அறியாமையை அவர்கள் வெளிப் படுத்துவார்கள். 

அவர் சொன்னது தப்பு, அது எப்படி சரியாக இருக்கும், இந்தக் காலத்துக்குப் பொருந்துமா, இது எல்லாம் நடை முறை சாத்தியம் அல்ல என்று தங்கள் மேதா விலாசத்தை வெளிச்சம் போட்டு காட்டுவார்கள். 


கேள்வி கேட்க வேண்டும். சிந்திக்க வேண்டும். எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. 


ஆனால், அந்தக் கேள்விகள் உள் நோக்கி இருக்க வேண்டும். எதிரில் இருப்பவனை மடக்கவோ, தன் அறிவை வெளிக் காட்டவோ இருக்கக் கூடாது. உண்மை தேடும் முயற்சியாக இருக்க வேண்டும். கேள்வியை வைத்துக் கொண்டு பதில் தேட வேண்டும். எல்லோரையும் கேள்வி கேட்டுக் கொண்டுத் திரியக் கூடாது. 


சிலருக்கு கேட்பதோடு அந்த தேவை நின்று விடும். பதில் பற்றி எந்தக் கவலையும் இல்லை. பதிலை அவர்கள் கேட்பது கூட கிடையாது. அல்லது என்ன பதில் சொன்னாலும்,  அவர்கள் கொண்ட எண்ணம் மாறவே மாறாது.  பின் எதற்கு கேட்பது. 


நாலாடியர் சொல்கிறது. 


ஒரு பெரிய அறிஞர்கள் கூடிய சபை. அதில் ஒரு ஓரத்தில் ஒரு நாய் படுத்துக் கிடந்தது. அது பாட்டுக்கு ஒரு பக்கம் இருந்தது. அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. என்னடா இது, நம்மை யாரும் கண்டு கொள்ளவே இல்லையே, ஏதாவது சொல்வோம், கேட்போம், அவர்களை மடக்குவோம், திணற அடிப்போம் என்று நினைத்து கேள்வி கேட்டது. 


"இந்த நாய் எங்கிருந்து வந்தது, அதை அடித்து விரட்டுங்கள் " என்று அடித்து விரட்டி விட்டார்கள். 


பேசாமல் வாய் மூடி இருந்தால், நிம்மதியாக இருந்து இருக்கலாம். குரைத்து , நான் நாய், இங்கே இருக்கிறேன் என்று தன்னைத் தானே காட்டிக் கொடுக்க வேண்டுமா?


பாடல் 


கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து

நல்லறி வாள ரிடைப்புக்கு - மெல்ல

இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது

உரைப்பினும் நாய்குரைத் தற்று.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post.html

Please click the above link to continue reading



கல்லாது = படிக்காமலேயே 

நீண்ட ஒருவன் = வளர்ந்த ஒருவன் 

உலகத்து = உலகில் 

நல்லறி வாள ரிடைப்புக்கு = நல் + அறிவாளர் + இடை + புக்கு. அறிஞர்கள் மத்தியில் புகுந்து 

மெல்ல = மெல்ல 

இருப்பினும்  = இருந்தாலும் 

நாயிருந் தற்றே = நாய் இருந்தாற்போல 

இராஅது = இருக்க முடியாது 

உரைப்பினும் நாய்  = நாய் பேசினாலும் 

குரைத் தற்று. = அது நாய் குரைத்தது என்று தான் உலகம் கொள்ளும். 

அறிஞர்கள் முன் அமைதி காத்தல் நன்று. 


யார் அறிஞர் என்று தெரியாததால், எல்லோர் முன்னும், அமைதி காத்தல் நன்று.