Monday, May 31, 2021

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 10 - இறுதிப் பாகம்

        

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 10 - இறுதிப் பாகம் 



பாடல் 


 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/10.html


(pl click the above link to continue reading)


சுவை = சுவை 


ஒளி = ஒளி 


ஊறு = தொடு உணர்ச்சி 


ஓசை = ஓசை 


நாற்றம் = மூக்கால் நுகர்வது 


மென் றைந்தின் = என்ற ஐந்தின் 


வகை = கூறுபாடுகளை 


தெரிவான் = ஆராய்ந்து அறிபவன் 


கட்டே உலகு = கண்ணதே உலகம் 


( இதன் முந்தைய பகுதிகளை கீழே காணலாம்)


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_20.html







)

ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்பதில் ஐந்தின் வகை பற்றி நாம் சிந்திக்க இருக்கிறோம். 


இதுவரை 


1. மூலப் பிரகிருதியும் அதில் இருந்து பிறந்த பிரகிருதி 

2.  மான் அல்லது மஹத் 

3. அகங்காரம் 

4. மனம் 

5,6,7,8,9 - ஐந்து ஞானேந்திரியங்கள் 

10 - கை 

11 - கால் 

12 - பாயு (மல ஜலம் வெளியேற்றும் உறுப்புகள்) 

13 - வாக்கு 

14 - பிறப்பு உறுப்புகள் 

15 சுவை 

16 ஒளி 

17 ஊறு 

18 ஓசை 

19 நாற்றம் 

வரை சிந்தித்தோம். 


ஞானேந்திரியங்களும், கண்மேந்திரியங்களும், தன் மாத்திரைகள்  தோன்றி விட்டன. 


அடுத்ததாக, பஞ்ச பூதங்கள் பற்றி சொல்கிறது சாங்கியம். 


20 = ஆகாயம், வெளி 


21 - நீர் 


22 - நிலம் 


23 - நெருப்பு 


24 - காற்று 


இந்த ஐந்து பூதங்களும், ஐந்து புலன்களோடு தொடர்பு கொண்டவை என்று முந்தைய ப்ளாகில் பார்த்தோம். 


வெளி அல்லது ஆகாயம், காது, கேட்டல் என்பதோடும் 

நிலம், மணம், மூக்கு என்பதோடும் 

நெருப்பு, ஒளி, கண் என்பதோடும் 

நீர், சுவை, நாக்கு என்பதோடும் 

காற்று, தோல், தொடு உணர்வோடும் 


தொடர்பு பட்டன என்று பார்த்தோம். 


ஒரு புறம் இந்த உலகம், பஞ்ச பூதங்கள், ஞான மற்றும் கன்மேந்திரியங்கள், மற்றும் தன் மாத்திரைகள். 


இவை எல்லாம் ஒரு புறம். 


இவற்றை அனுபவிப்பது யார் என்ற பெரும் கேள்வி நிற்கிறது?


கண் அனுபவிக்குமா ? கண்ணுக்குத் தெரியுமா அது ஒரு அழகான பூவை பார்க்கிறது என்று? கண்ணின் வேலை அதற்கு வரும் ஒளியை உள்ளே செல்லுத்துவது. அதற்கு வேறு ஒன்றும் தெரியாது. 

மூளை பார்க்குமா? மூளை பார்க்கும் என்றால் எல்லோரும் ஒரே விதமாக அல்லவா பார்க்க வேண்டும்?


இசை அறிந்தவன் அது இன்ன இராகம் என்கிறான். சுருதி சரி இல்லை என்கிறான். இசை அறியாதவனுக்கு அது ஒரு இனிய சத்தம் அவ்வளவுதான்.  கல்யாணியும், காம்போதியும் இசை அறியாதவனுக்கு ஒன்றுதான். 


கேட்பது காது அல்ல, மூளை அல்ல. முன் சேர்த்த ஞாபகம், அறிவு, கல்வி, அனுபவம் எல்லாம் சேர்ந்த ஒன்று. 


ஒரு பெண்ணைப் பார்த்தால், அவளுடைய தகப்பன் அவளை மகள் என்கிறான், கணவன் மனைவி என்கிறான், பிள்ளை அம்மா என்கிறான். அவள் யார்? பார்ப்பவரின் கோணத்தில் இருந்து பார்ப்பது மாறுபடுகிறது. 


இசை அறிந்தவனுக்கு கல்யாணி. அறியாதவனுக்கு சத்தம். 


உலகம் என்பது நம் உள்ளே உள்ள ஏதோ ஒன்றின் அனுபவப் பொருளாக இருக்கிறது.  


காது சுத்தமாக கேட்கவில்லை என்றால் இசையை எப்படி அனுபவிப்பது? 


அனுபவிக்க இசையும் வேண்டும், கேட்கும் காதும் வேண்டும்,  அதை அறியும் அறிவும் வேண்டும். ஆனால் இந்த மூன்றும் இசையை அனுபவிப்பது அல்ல. 


அந்த அனுபவிக்கும் பொருளை "புருஷன்" என்கிறார்கள். 


24 தத்துவங்கள் மேலே சொன்னது. 


இவற்றை அனுபவிக்கும் புருஷன்  25 ஆவது தத்துவம் என சாங்கிய தத்துவம் மொத்தம் 25.


சாங்கியர்கள் இந்த 25 ஓடு நிறுத்திக் கொண்டார்கள். சைவ சமயம் மேலும் செல்கிறது. சைவ சித்தாந்தம் 36 தத்துவங்களை கொண்டது. 


ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்

பேறா அடியேன், பெறுமாறு உளதோ?

சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்

கூறா உலகம் குளிர்வித்தவனே.


என்பார் அருணகிரிநாதர். 

ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்


ஆறு ஆறு = 6 x 6 = 36 தத்துவம். 


புருஷன் ஒரு புறம், பிரகிருதி மறு புறம், இவை சேர்ந்த இருபத்தி ஐந்து தத்துவங்கள், இவற்றை அறிவான் கட்டே தங்கும் உலகு என்கிறார் வள்ளுவர். 


புரிந்த மாதிரியும் இருக்கிறது.  புரியாத மாதிரியும் இருக்கிறது அல்லவா. 


நம்மவர்கள் மிக ஆழமாக சிந்தித்து இருக்கிறார்கள். 


சரியோ, தவறோ அது அப்புறம். முதலில் அவை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.


சாங்கிய தத்துவம் பற்றி நிறைய செய்திகள் வலை தளங்களில் கிடைக்கும்.  படித்துப் பாருங்கள். பிரமிப்பு ஏற்படும். எந்த அளவுக்கு நாம் அறிவுத் துறையில் முன்னேறி இருந்திருக்கோம் என்று புரியும். 


சாங்கிய தத்துவத்தை நான் முழுவதுமாக அறிந்து கொண்டு சொல்லவில்லை. இப்படி ஒன்று இருக்கிறது என்று எடுத்துக் காட்டி இருக்கிறேன். நான் கூறியவற்றில் பிழை இருக்கலாம். அது என் அறியாமையில் விழைந்த பிழைதானே அன்றி தத்துவத்தில் உள்ள பிழை அன்று. 


ஆர்வம் உள்ளவர்கள் மேலும் படித்து உணர்வார்களாக. 


இதை அத்தனையும் ஒன்றே முக்கால் அடியில் சொல்லிவிட்டு போய் விட்டார் வள்ளுவர். 


இதற்குள் இவ்வளவு இருக்கும் என்பது பரிமேலழகர் இல்லவிட்டால் நமக்கு தெரிந்தே இருக்காது. 


இனி அடுத்த குறளுக்குச் செல்வோமா ?


Sunday, May 30, 2021

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 9

       

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 9



பாடல் 


 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/9.html


(pl click the above link to continue reading)


சுவை = சுவை 


ஒளி = ஒளி 


ஊறு = தொடு உணர்ச்சி 


ஓசை = ஓசை 


நாற்றம் = மூக்கால் நுகர்வது 


மென் றைந்தின் = என்ற ஐந்தின் 


வகை = கூறுபாடுகளை 


தெரிவான் = ஆராய்ந்து அறிபவன் 


கட்டே உலகு = கண்ணதே உலகம் 


( இதன் முந்தைய பகுதிகளை கீழே காணலாம்)


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_20.html






)

ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்பதில் ஐந்தின் வகை பற்றி நாம் சிந்திக்க இருக்கிறோம். 


இதுவரை 


1. மூலப் பிரகிருதியும் அதில் இருந்து பிறந்த பிரகிருதி 

2.  மான் அல்லது மஹத் 

3. அகங்காரம் 

4. மனம் 

5,6,7,8,9 - ஐந்து ஞானேந்திரியங்கள் 

10 - கை 

11 - கால் 

12 - பாயு (மல ஜலம் வெளியேற்றும் உறுப்புகள்) 

13 - வாக்கு 

14 - பிறப்பு உறுப்புகள் 


வரை சிந்தித்தோம். 


ஞானேந்திரியங்களும், கண்மேந்திரியங்களும் தோன்றி விட்டன. 


இனி அடுத்து வருவது தன் மாத்திரைகள். 


தன் மாத்திரைகள் என்றால் உணர்வு கூறு அல்லது உணர்வின் அடிப்படை என்று கொள்ளலாம். 


முதலில் அவை என்ன என்று பார்த்து விடுவோம். பின் அவை எப்படி மற்றவற்றோடு சேர்கிறது என்று பார்ப்போம். 


சுவை, ஒளி, ஊறு , ஓசை, நாற்றம் (மணம் முகர்தல்) என்ற இந்த ஐந்தும் தன் மாத்திரைகள் என்று அழைக்கப் படுகின்றன


இவை நாம் அறிந்தது தான்.


ஆனால், நாம் அறியாத ஒன்றை சாங்கிய தத்துவம் கூறுகிறது. 


இந்த தன் மாத்திரைகளில் இருந்து தான் பஞ்ச பூதங்கள் தோன்றின என்று. 


நாக்கு சுவையை அறிகிறது. 

கண் காண்கிறது 

செவி கேட்கிறது.


இதற்கும், பஞ்ச பூதங்களுக்கும் என்ன தொடர்பு?


நாக்கு சுவையை அறிகிறது அல்லவா? அப்படி நாக்கு சுவையை அறிய நீர் வேண்டும். நீர் இல்லாவிட்டால் நாக்கு சுவையை அறிய முடியாது. நாக்கு வறண்டு போய் விட்டால், சுவை தெரியாது.  நாக்கு எப்போதும் ஈரப் பதமாகவே இருக்கும்.  நீண்ட நேரம் வெயிலில் அலைந்து திரிந்து, நீர் குடிக்காமல் இருந்தால், நா வறண்டு விடும். அந்த நேரம் உணவு உண்டால் சுவை தெரியாது. உமிழ் நீரில் உணவு கரைந்தால்தான் சுவை தெரியும். 


எனவே, நாக்கு, சுவை, நீர் இவை தொடர்பு பட்டன என்று தெரிகிறது. 



மூக்கு, முகர்ந்து பார்க்கிறது. வாசனை என்பது நிலத்தோடு தொடர்பு பட்டது.  மண் வாசனை என்று சொல்கிறோம் அல்லவா. நீரில் வாசனை இல்லை. தீயில் வாசனை இல்லை. வெளியில் வாசனை இல்லை. மண்ணில் இருந்து தான் வாசனை பிறக்கிறது.  எனவே மூக்கு, வாசனை, மண் இவை தொடர்பு பட்டன என்று தெரிகிறது. 




கண் காண்கிறது. கண் காண வேண்டும் என்றால் பழுதுபடாத கண், அந்த கண் இயங்கும் உடல், அது இயங்க உணவு, பிராண வாயு எல்லாம் இருந்தாலும் போதாது. ஒளி வேண்டும். நல்ல இருட்டில் ஒரு புத்தகத்தை வாசிக்க முடியுமா?  ஒளி வேண்டும் என்றால் நெருப்பு வேண்டும். எங்கே ஒளி இருக்கிறதோ, அங்கே நெருப்பு அல்லது சூடு இருக்கும். ஒளி தரும் பல்பை தொட்டுப் பாருங்கள். சூடாக இருக்கும்.  எனவே, கண், காணுதல், ஒளி, நெருப்பு என்று இவை தொடர்பு பட்டன என்று தெரிகிறது. 


காது கேட்கிறது. கேட்க வேண்டும் என்றால் காதுக்கும், ஒலி எழுப்பும் இடத்துக்கும் இடையே இடைவெளி வேண்டும். அந்த இடைப்பட்ட இடத்தில் காற்று நிரம்பி இருக்க வேண்டும். ஆகாயம் என்றால் வெளி. இடை வெளி. இரண்டு பொருளுக்கு இடையே உள்ள இடம் தான் வெளி அல்லது ஆகாயம் என்று அழைக்கப் படுகிறது. ஆகாயம் என்றால் மேலே பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நான்கு சுவர்களுக்குள் உள்ள இடம் ஒரு ஆகாயம். குடத்துக்குள் உள்ள இடம் ஆகாயம். எனவே , கேட்டல், காது, ஆகாயம் என்று இவை தொடர்பு பட்டன என்று தெரிகிறது. 


அதே போல் தோல்  தொடு உணர்ச்சியைத் தருகிறது. தோல் எப்போதும் காற்றோடு தொடர்பு கொண்டு உள்ளது.  புழுக்கமாக இருந்தாலும், ரொம்ப குளிர்ந்தாலும் நாம் உடலை மூடிக் கொள்கிறோம் அல்லது மின் விசிறியை சுழல விடுகிறோம். ரொம்ப குளிர்கிறது என்று யாரும் கண்ணை மூடிக் கொள்வது இல்லை. எனவே, தோல், தொடு உணர்ச்சி (ஊறு ), காற்று என்ற பஞ்ச பூதம் இவை ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டன என்று புரிகிறது. 


சாங்கியம் ஒரு படி மேலே போகிறது. 


இந்த பஞ்ச பூதங்கள், அந்த ஐந்து தன் மாத்திரைகளோடு தொடர்பு பட்டது என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 


ஆனால், இந்த தன் மாத்திரையில் இருந்து தான் அந்த பூதங்கள் தோன்றின என்கிறார்கள். 


அது எனக்கு விளங்கவில்லை. பல புத்தகங்கள் வாசித்து விட்டேன், சில பெரியவர்கள் சொல்வதையும் கேட்டேன். பிடிபடவில்லை என்பதே உண்மை. 


ஐந்தறிவான் கட்டே தங்கும் உலகு 


என்கிறார் வள்ளுவர். எனக்கு புரியவில்லை. எனவே, என்னிடம் உலகம் தங்காது என்று புரிகிறது. புரிந்து கொள்ள இன்னும் நேரம் வரவில்லை போலும்.  எனக்குப் புரியவில்லை என்பதால் அது தவறு என்று சொல்ல மாட்டேன். அல்லது புரிந்து போல் காட்டிக் கொள்ளவும் மாட்டேன். புரியவில்லை. முயற்சி தொடர்கிறது. வாசிப்பவர்களுக்கு ஆர்வம் இருப்பின், மேலும்  தொடர்ந்து சென்று அறிவார்களாக. 


15 சுவை 

16 ஒளி 

17 ஊறு 

18 ஓசை 

19 நாற்றம் 


என்ற ஐந்து தன் மாத்திரைகளைச் சேர்த்து மொத்தம் இதுவரை  19 தத்துவங்கள் ஆகிவிட்டது. 


இன்னும் ஆறு தத்துவங்கள் இருக்கின்றன. 


அடுத்த ப்ளாகில் அவற்றை சிந்திப்போம். அதோடு இந்த 25 தத்துவங்களும் பூர்த்தி அடையும். (அப்பாட, ஒரு வழியாக முடியப் போகிறது என்று தோன்றுகிறதோ?)


இன்னும் ஒரே ஒரு ப்ளாகு தான். பல்லைக் கடித்துக் கொண்டு அதையும் வாசித்து விடுங்கள். மனதின் ஓரத்தில் ஒரு பொறியாய்  கிடக்கட்டும். யாருக்குத் தெரியும்? அது என்று பற்றி பெரு நெருப்பாய் விளைந்து பயன் செய்யும் என்று. 





Saturday, May 29, 2021

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 8

      

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 8



பாடல் 


 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/8.html


(pl click the above link to continue reading)


சுவை = சுவை 


ஒளி = ஒளி 


ஊறு = தொடு உணர்ச்சி 


ஓசை = ஓசை 


நாற்றம் = மூக்கால் நுகர்வது 


மென் றைந்தின் = என்ற ஐந்தின் 


வகை = கூறுபாடுகளை 


தெரிவான் = ஆராய்ந்து அறிபவன் 


கட்டே உலகு = கண்ணதே உலகம் 


( இதன் முந்தைய பகுதிகளை கீழே காணலாம்)


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_20.html




)

ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்பதில் ஐந்தின் வகை பற்றி நாம் சிந்திக்க இருக்கிறோம். 


இதுவரை 


1. மூலப் பிரகிருதியும் அதில் இருந்து பிறந்த பிரகிருதி 

2.  மான் அல்லது மஹத் 

3. அகங்காரம் 

4. மனம் 

5,6,7,8,9 - ஐந்து ஞானேந்திரியங்கள் 


வரை சிந்தித்தோம். 


இனி மேலே செல்வோம். 


கண் என்ற ஞானேந்திர்யம் பார்க்கும். எவ்வளவு தூரம் வரை பார்க்கும்?  நாம் இருக்கும் இடத்தில் உள்ளதைப் பார்க்கலாம். சாளரத்தை திறந்து வைத்தால் இன்னும் கொஞ்சம் தூரம் தெரியும். அடுத்த தெருவில், அடுத்த ஊரில், அடுத்த நாட்டில் உள்ளதை பார்க்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? இருந்த இடத்தில் இருந்தே கண் பார்க்குமா என்றால் பார்க்காது. 


அந்தக் கண்ணை அந்த இடத்துக்குக் கொண்டு சென்றால் பார்க்கும். அங்கு எப்படி போவது? போவதற்கு கால் என்ற கருவி வேண்டும். வேண்டும். 


நாக்கு சுவைக்கும். பல்வேறு விதமான சுவைகளை அறிந்து சொல்லும். ஆனால், அதுவே உணவை வாயில் போட்டுக் கொள்ளுமா?  உணவை எடுத்து வாயில் போட கை என்ற கருவி வேண்டும். காலால் உணவை வாயில் போட முடியுமா? 


சரி, காலும் கையும் இருந்தால் போதுமா?  இவை அனைத்தும் வேலை செய்ய சக்தி வேண்டாமா? ஒருவனை பத்து நாள் பட்டினி போட்டுவிட்டு, அவன் முன் இனிமையான ஒரு இராகத்தைப் பாடி, இது என்ன இராகம் சொல் என்றால் சொல்லுவானா? பசி காதை அடைக்குது, ஒண்ணுமே கேட்கவில்லை என்று தானே சொல்லுவான். 


சரி, உணவு கொடுக்கலாம், சக்தி கிடைக்கும். ஆனால், அதன் கழிவுகளை வெளியேற்ற வேண்டுமே? போட்டுக் கொண்டே இருந்தால் போதுமா? கழிவுகள் வெளியேற வேண்டாமா? ஞானேந்திரியங்கள் சரியாக வேலை செய்ய வேண்டுமானால் கழிவுகள் வெளியேற வேண்டும்.  தினம் மூன்று வேளை சாப்பிடலாம் ஆனால் மல ஜலம் கழிக்கக் கூடாது என்றால் எப்படி இருக்கும்? வயிறு வெடித்து இறந்து போவான். 


சரி, கை,கால், உணவு, மல ஜலம் கழிக்க ஏற்பாடு செய்தாகி விட்டது. போதுமா? ஞானேந்திரியங்கள் வேலை செய்யுமா? முடியாது. இன்னும் ஒரு முக்கியமான ஒன்று வேண்டும். அது தான் வாயு. பிராண வாயு, சுவாசம் இல்லாமல் எதுவும் வேலை செய்யாது. நமக்கு வெளிப்படையாகத் தெரிவது மூச்சு காற்று ஒன்று தான். ஆயுர் வேதத்தில் நம் உடம்பில் பல் வேறு விதமான வாயுக்கள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். சில வாயுக்குள் கீழ் நோக்கி செல்லும், சில மேல் நோக்கி செல்லும் என்றெல்லாம் வகுத்து வைத்து இருக்கிறார்கள். 


கீழே செல்ல வேண்டிய வாயு மேலே வந்தால், acidity என்கிறோம். நெஞ்சை கரிக்கிறது என்கிறோம். ஏப்பம் வருகிறது. வாயு குத்துகிறது என்கிறோம். உடம்பு பூராவுமே காற்றின் ஓட்டத்தில் இயங்குகிறது என்கிறார்கள். 


இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் மிக வலிமையான பாத்திரங்கள் யார் யார்? அனுமனும், பீமனும். இருவரும் வாயு குமாரார்கள். உடம்புக்கு வலிமை சேர்ப்பது வாயு. வாயுவை கட்டுப் படுத்தினால் வலிமை வரும் என்று சொல்லாமல் சொன்ன விடயம் அது. 


சரி, கை, கால், மல ஜல உறுப்புகள், வாயு எல்லாம் இருந்தால் போதுமா? நான் இருந்தேன், இவற்றை அறிந்தேன். ஒரு நாள் நான் இறந்து போவேன். அப்படி எல்லோரும் இறந்து போவார்கள். அப்புறம்? யார் இந்த ஐந்தை அறிவார்கள்? பிறவி தொடர வேண்டும் அல்லவா?உயிர்கள் நிலைக்க வேண்டும் அல்லவா? எனவே அதற்கு தேவையான பிறப்பு உறுப்புகள் வேண்டும். 


எனவே, ஐந்து ஞானேந்திரியங்கள் இயங்க  ஐந்து கன்மேந்திரியங்கள் வேண்டும். 


கர்மம் + இயந்திரம் = கன்மேந்திரியம் 


வேலை செய்யும் உறுப்புகள். 


அவையாவன

10 - கை 

11 - கால் 

12 - பாயு (மல ஜலம் வெளியேற்றும் உறுப்புகள்) 

13 - வாக்கு 

14 - பிறப்பு உறுப்புகள் 


இதில் வாக்கு என்பது எப்படி செயற் கருவி ஆகும்? 


தெருவில் போய்க் கொண்டு இருக்கிறோம். நம்மிடம் ஒருவர் "மணி என்ன ?" என்று கேட்கிறார். நாம் கடிகாரத்தைப் பார்த்து மணி சொல்கிறோம். நம்மை செயல் பட வைத்தது எது? அவர் கேட்ட கேள்வி. அந்த வாக்கு நம்மை செயல் பட வைத்தது.  நாம் ஒருவரிடம் வழி கேட்கிறோம். அவர் சொல்கிறார். அல்லது தெரியாது என்கிறார். அவரை செயல் பட வைத்தது எது? நம் வாக்கு. 


வாக்கு ஒரு செயல் கருவியாகவும் செயல் படும். 


ஐம்பூதங்களை அறிந்து கொள்ள இந்த பதினான்கு தத்துவங்கள் போதுமா? 


போதாது. இன்னும் கொஞ்சம் வேண்டும்.


அவை என்னென்ன?  


மேலும் சிந்திப்போம். 


(ரொம்ப அலுப்பாக இருக்கிறதோ? எப்படா இது முடியும் என்று இருக்கிறதோ?)


Thursday, May 27, 2021

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 7

     

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 7 



பாடல் 


 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/7.html


(pl click the above link to continue reading)


சுவை = சுவை 


ஒளி = ஒளி 


ஊறு = தொடு உணர்ச்சி 


ஓசை = ஓசை 


நாற்றம் = மூக்கால் நுகர்வது 


மென் றைந்தின் = என்ற ஐந்தின் 


வகை = கூறுபாடுகளை 


தெரிவான் = ஆராய்ந்து அறிபவன் 


கட்டே உலகு = கண்ணதே உலகம் 


( இதன் முந்தைய பகுதிகளை கீழே காணலாம்)


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_20.html



)

ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்பதில் ஐந்தின் வகை பற்றி நாம் சிந்திக்க இருக்கிறோம். 


இதுவரை 


1. மூலப் பிரகிருதியும் அதில் இருந்து பிறந்த பிரகிருதி 

2.  மான் அல்லது மஹத் 

3. அகங்காரம் 


இது வரை பார்த்தோம். 


4. மனம்: அகங்காரத்துக்கு மூன்று குணங்கள் உண்டு என்று பார்த்தோம். அதில் சாத்வீகம் மிகுந்து நிற்கும் போது அதில் இருந்து வெளிப்படுவது மனம். அகங்காரம், புத்தி, சித்தம், மனம் என்பன ஒன்று போல் தோன்றினாலும், அவற்றிற்கு தனித்தனியே வேலைகள் உண்டு. அவற்றைச் சிந்திக்க தலைப்பட்டால் இன்னும் விரியும். ஆர்வம் உள்ளவர்கள் தேடுவார்களாக.  


மனம் என்பது வெளிப்படையாகத் தெரிவது இல்லை. அது எப்படி இருக்கும், கறுப்பா, சிவப்பா? பெரியதா, சிறியதா? அது எப்படி வேலை செய்கிறது என்று நமக்குத் தெரிவதில்லை. அது உள்ளே இருக்கிறது என்பதால் அதற்கு "அந்தக் கரணம்" என்று பெயர். 


நம் உடலில் உள்ள கருவிகளை இரண்டு விதமாக பிரிக்கலாம்....செயற் கருவி, உணர்வு கருவி என்று. 


மனம் என்பது செயல் கருவியாகவும் இருக்கிறது, உணர்வு கருவியாகவும் இருக்கிறது. 


இது பற்றி மேலும் சிந்திக்க இருக்கிறோம். 


5,6,7,8,9 - ஐந்து ஞானேந்திரியங்கள்: மனதில் இருந்து ஐந்து ஞானேந்திரியங்கள் தோன்றுகின்றன.   ஞானேந்திரியங்களுக்கு உணர்வு கருவிகள் என்று பெயர். அவையாவன கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்பன. 


இதில் என்ன ஞானம் இருக்கிறது? 


இதில் ஞானம் இல்லை. ஆனால், இவற்றின் மூலம் நாம் ஞானத்தைப் பெறுகிறோம். 


நமக்கு ஞானம் அல்லது அறிவு எப்படி வருகிறது. 


படித்து வரலாம் (கண்)

கேட்டு வரலாம் (காது)

இப்படி ஒவ்வொரு கருவிகள மூலமாக நாம் அறிவைப் பெறுகிறோம். ஞானத்தைப் பெற உதவுதால் இவை ஞானேந்திரியங்கள் என்று அழைக்கப் படுகின்றன. 


இது எப்படி உருவாகிறது என்றால், அகங்காரத்தில் உள்ள முக்குண கூட்டால், சத்வம் மிகும் போது, ரஜோ குணத்தின் உதவியோடு இந்த ஞானேந்திரியங்கள் தோன்றுகின்றன என்று சாங்கிய தத்துவம் கூறுகிறது. 


இந்தப் புலன்கள் அல்லது ஞானேந்திரியங்கள் தனித்து இயங்க முடியாது. அவை இயங்க இன்னும் கொஞ்சம் வேண்டும். 


அவை என்னென்ன ?


நாளையும் சிந்திப்போம். 



Wednesday, May 26, 2021

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 6

    

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 6



பாடல் 


 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/5_26.html


(pl click the above link to continue reading)


சுவை = சுவை 


ஒளி = ஒளி 


ஊறு = தொடு உணர்ச்சி 


ஓசை = ஓசை 


நாற்றம் = மூக்கால் நுகர்வது 


மென் றைந்தின் = என்ற ஐந்தின் 


வகை = கூறுபாடுகளை 


தெரிவான் = ஆராய்ந்து அறிபவன் 


கட்டே உலகு = கண்ணதே உலகம் 


( இதன் முந்தைய பகுதிகளை கீழே காணலாம்)


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_20.html



)

ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்பதில் ஐந்தின் வகை பற்றி நாம் சிந்திக்க இருக்கிறோம். 


மூலப் பிரகிருதியும் அதில் இருந்து பிரகிர்தியும் தோன்றியது என்று பார்த்தோம்.  அதைத் தொடர்ந்து ஆத்மா உண்டானதையும், அந்த ஆத்மாவுக்கு பிரகிருதியே ஒரு அனுபவ களமாக ஆனதையும் சிந்தித்தோம். 


அடுத்தது, அகங்காரம் பற்றி சிந்திக்க இருக்கிறோம் 


உலகைப் பற்றி ஆராய முற்பட்டபோது, மேலை நாட்டினர் தங்களுக்கு வெளியே உள்ள பொருள்களை பற்றி சிந்திக்கத் தலைப் பட்டார்கள். 


ஏன் ஆப்பிள் கீழே விழுகிறது, ஏன் நீராவி பொருள்களை தள்ளுகிறது, ஏன் காந்தம் இழுக்கிறது, என்று வெளி உலகை ஆராயத் தலைப்பட்டார்கள். 


கீழை நாடுகள், உள்நோக்கி தேடத் தொடங்கினார்கள். அவர்களுக்கு வெளி உலகம் ஒரு பெரிய சவாலாகத் தெரியவில்லை.  அக உலகைப் புரிந்து கொண்டால் வெளி உலகை புரிந்து கொள்ள முடியும் என்று நினைத்தார்கள். 


அது அப்படி இருக்கட்டும். 


அகங்காரம். அகம் என்றால் உள், கரம் என்றால் தன்மை. நமது உள் தன்மை பற்றியது அகங்காரம். நான், எனது, என்ற எண்ணங்களை தோற்றுவிப்பது.  நம்மை உலகில் இருந்து பிரித்து அறியச் செய்வது. நான் வேறு, உலகம் வேறு என்ற அறிவைத் தருவது அகங்காரம். 


இந்த அகங்காரத்தில் இருந்து தான் மனம், புத்தி, சித்தம், ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியகள் எல்லாம் தோன்றுகின்றன. 


மொத்தம் பதினாறு விடயங்கள் இந்த அகங்காரத்தில் இருந்து தோன்றுகின்றன. 


இந்த அகங்காரமும் முக்குண கூட்டு உடையது. 


ஒவ்வொரு குணமும் அதோடு இணையும் போது பல்வேறு விடயங்கள் தோன்றுகின்றன. 


எது எப்படி தோன்றுகிறது என்பதை நாளை பார்ப்போம். 




பிரக்ருதி என்பது ஒரு ஆற்றல் என்று சொல்கிறார்கள். இந்த ஆற்றலை அறியும் ஒரு பொருள் வேண்டும் அல்லவா? ஆற்றல் என்பது தானே பரிணமிக்க முடியாது. ஆற்றல் என்றால் அது எதன் மீதாவது செயல் பட்டால்தான் அது ஆற்றல் என்று தெரியும். 


உதாரணமாக, புவிஈர்ப்பு விசை பொருள்களை தன் பால் இழுக்கிறது. காந்தம் இழுக்கிறது. ஆற்றல், விசை என்பது அது அல்லாத ஒன்றின் மேல் செயல்பட்டாக வேண்டும். அந்த ஒன்றுதான் ப்ரஞ்கை அல்லது புருஷன் அல்லது ஆத்மா என்று கூறுகிறார்கள். ஒரு universal consiousness. உலகாளாவிய தண்ணுர்வு என்று கொள்ளலாம். 


இந்த பிரக்ருதி ஆத்மாவோடு கலக்கும் போது இந்த உலகம் பிறக்கிறது. அதுதான் படைப்பின் முதல். தொடக்கம். 


பிரக்ருதி ஆத்மாவோடு கலந்து உலகம் பிறந்தாலும், அந்த ஆத்மா அனுபவிக்கும் களமாகவும் அது இருக்கிறது. 


முதல் தத்துவம் பிறந்து விட்டது. அதாவது நாம் காணும், அனுபவிக்கும் இந்த உலகம் பிறந்து விட்டது. 


இனி அடுத்த தத்துவத்துக்குள் நுழைவோம். 


இரண்டாவது தத்துவம் "மான்". இதை  மஹத் என்பார்கள். ஆத்மா பிரக்ருதியை உணர, அதோடு சம்பந்தப் படுத்த இது உதவுகிறது. இதில் இருந்து தான் இந்திரியங்கள், அவை அறியும் உணர்வுகள், எல்லாம் பிறக்கின்றன.  இந்த "மான்" இலும் சத்வ, ரஜோ, தமோ குணங்கள் உண்டு. 

அதில் இருந்துதான் உயிர்கள் அந்தக் குணங்களைப் பெறுகின்றன. 

இந்த "மான்: என்பது எந்த ஒரு உடலோடும் சம்பந்தப் படாதது. ஒரு பேருணர்வு. எப்படி உடல் இல்லாமல் உணர்வு மட்டும் இருக்க முடியும் என்பது பற்றி அறிய மேலும் இதை ஆழமாக படிக்க வேண்டும். 


பிரக்ருதியில் இருந்து மஹத் அல்லது "மான்" என்பது உருவாயிற்று. 


அதன் அடுத்த பரிணாம வளர்ச்சி அகங்காரம் என்று கூறப் படுவது. 




Monday, May 24, 2021

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 5

   

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 5 



பாடல் 


 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/5.html


(pl click the above link to continue reading)


சுவை = சுவை 


ஒளி = ஒளி 


ஊறு = தொடு உணர்ச்சி 


ஓசை = ஓசை 


நாற்றம் = மூக்கால் நுகர்வது 


மென் றைந்தின் = என்ற ஐந்தின் 


வகை = கூறுபாடுகளை 


தெரிவான் = ஆராய்ந்து அறிபவன் 


கட்டே உலகு = கண்ணதே உலகம் 


( இதன் முந்தைய பகுதிகளை கீழே காணலாம்)


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_20.html



)

ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்பதில் ஐந்தின் வகை பற்றி நாம் சிந்திக்க இருக்கிறோம். 


மூலப் பிரகிருதியும் அதில் இருந்து பிரகிர்தியும் தோன்றியது என்று பார்த்தோம். 


பிரக்ருதி என்பது ஒரு ஆற்றல் என்று சொல்கிறார்கள். இந்த ஆற்றலை அறியும் ஒரு பொருள் வேண்டும் அல்லவா? ஆற்றல் என்பது தானே பரிணமிக்க முடியாது. ஆற்றல் என்றால் அது எதன் மீதாவது செயல் பட்டால்தான் அது ஆற்றல் என்று தெரியும். 


உதாரணமாக, புவிஈர்ப்பு விசை பொருள்களை தன் பால் இழுக்கிறது. காந்தம் இழுக்கிறது. ஆற்றல், விசை என்பது அது அல்லாத ஒன்றின் மேல் செயல்பட்டாக வேண்டும். அந்த ஒன்றுதான் ப்ரஞ்கை அல்லது புருஷன் அல்லது ஆத்மா என்று கூறுகிறார்கள். ஒரு universal consiousness. உலகாளாவிய தண்ணுர்வு என்று கொள்ளலாம். 


இந்த பிரக்ருதி ஆத்மாவோடு கலக்கும் போது இந்த உலகம் பிறக்கிறது. அதுதான் படைப்பின் முதல். தொடக்கம். 


பிரக்ருதி ஆத்மாவோடு கலந்து உலகம் பிறந்தாலும், அந்த ஆத்மா அனுபவிக்கும் களமாகவும் அது இருக்கிறது. 


முதல் தத்துவம் பிறந்து விட்டது. அதாவது நாம் காணும், அனுபவிக்கும் இந்த உலகம் பிறந்து விட்டது. 


இனி அடுத்த தத்துவத்துக்குள் நுழைவோம். 


இரண்டாவது தத்துவம் "மான்". இதை  மஹத் என்பார்கள். ஆத்மா பிரக்ருதியை உணர, அதோடு சம்பந்தப் படுத்த இது உதவுகிறது. இதில் இருந்து தான் இந்திரியங்கள், அவை அறியும் உணர்வுகள், எல்லாம் பிறக்கின்றன.  இந்த "மான்" இலும் சத்வ, ரஜோ, தமோ குணங்கள் உண்டு. 

அதில் இருந்துதான் உயிர்கள் அந்தக் குணங்களைப் பெறுகின்றன. 

இந்த "மான்: என்பது எந்த ஒரு உடலோடும் சம்பந்தப் படாதது. ஒரு பேருணர்வு. எப்படி உடல் இல்லாமல் உணர்வு மட்டும் இருக்க முடியும் என்பது பற்றி அறிய மேலும் இதை ஆழமாக படிக்க வேண்டும். 


பிரக்ருதியில் இருந்து மஹத் அல்லது "மான்" என்பது உருவாயிற்று. 


அதன் அடுத்த பரிணாம வளர்ச்சி அகங்காரம் என்று கூறப் படுவது. 




Sunday, May 23, 2021

கம்ப இராமாயணம் - இன்று காண்டி

கம்ப இராமாயணம் - இன்று காண்டி 


இராமாயணத்தில் என்னை மிகவும் பாதித்த இடம் இந்திர சித்தன் போரும் மரணமும். 


தந்தை மாற்றான் மனைவியை கவர்ந்து வந்து வைத்து இருக்கிறான். அந்தப் பெண்ணுக்கு இதில் உடன் பாடு இல்லை. இந்திரசித்து அது தவறு என்று இராவணனிடம் சொல்கிறான். இராவணன் கேட்டான் இல்லை. 


"சரி நான் போருக்குப் போகிறேன்" என்று இந்திரசித்து கிளம்புகிறான். ஒரு பெண்ணின் மேல் கொண்ட ஆசையால், பெற்ற மகனை இழக்க ஒருவன் துணிவானா? அப்படி ஒரு காதலா? தன்னை இழக்கலாம்? தான் விரும்பிய பெண் கிடைக்கவில்லை என்று சிலர் தற்கொலை கூட செய்து கொள்கிறார்கள். அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவள் இல்லாமல் வாழ்கை இல்லை என்று ஒரு ஆடவன் நினைப்பது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. 


பெற்ற பிள்ளையை பணயம் வைக்க ஒரு தந்தை நினைப்பானா? 


பிள்ளை மேல் பாசம் இல்லையா? அல்லது சீதை மேல் கொண்ட காதல் அவ்வளவு ஆழமானதா?  


இந்திரசித்து போருக்கு போகும் அந்த இடம், நம்மை பதற வைக்கிறது. அடடா, இந்த பிள்ளை இறந்து போகப் போகிறானே என்று நாம் பச்சாதாப் படுகிறோம். 


போருக்கு புறப்படும் முன் இந்திரசித்து சொல்கிறான் 


" ஐயனே, உன் மற்ற பிள்ளைகள் போரில் இறந்து போய் விட்டார்கக்ல் என்று நீ வருந்தாதே. இன்று என் போர்த் தொழிலைப் பார். இந்த குரங்கு கூட்டம் அத்தனையும் கொன்று அவற்றின் உடலை பிணங்களின் குப்பையாக செய்து விடுகிறேன். இராம இலக்குவர்களின் உயிரற்ற உடலை சீதையும், அந்த தேவர்களும் காணும் படி செய்கிறேன்"  என்று 


பாடல் 


வணங்கி, ‘நீ, ஐய! “நொய்தின் மாண்டனர் மக்கள்” என்ன

உணங்கலை; இன்று காண்டி, உலப்பு அறு குரங்கை நீக்கி,

பிணங்களின் குப்பை; மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை

கணங் குழைச் சீதைதானும், அமரரும் காண்பர்’ என்றான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_23.html

(please click the above link to continue reading)


வணங்கி,  = இராவணனை வணங்கி 


‘நீ, ஐய!  = ஐயா நீ 


“நொய்தின் மாண்டனர் மக்கள்” என்ன = உன் பிள்ளைகள் இறந்து போய் விட்டார்கள் என்று  


உணங்கலை; = வருந்தாதே


இன்று காண்டி = இன்று பார் 


உலப்பு அறு = அளவற்ற 


குரங்கை நீக்கி, = குரங்கு கூட்டத்தை ஒழித்து 


பிணங்களின் குப்பை; = பிணக் குப்பையாக மாற்றி விடுகிறேன்  


மற்றை நரர் = மனிதர்களான இராம இலக்குவர்களின் 


உயிர் பிரிந்த யாக்கை  = உயிரற்ற உடலை 


கணங் குழைச் சீதைதானும் = காதணி கொண்ட சீதையும் 


அமரரும் காண்பர்’ என்றான். = தேவர்களும் காண்பார்கள் என்றான் 



Saturday, May 22, 2021

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 4

  

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 4



பாடல் 


 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/4.html

(pl click the above link to continue reading)


சுவை = சுவை 


ஒளி = ஒளி 


ஊறு = தொடு உணர்ச்சி 


ஓசை = ஓசை 


நாற்றம் = மூக்கால் நுகர்வது 


மென் றைந்தின் = என்ற ஐந்தின் 


வகை = கூறுபாடுகளை 


தெரிவான் = ஆராய்ந்து அறிபவன் 


கட்டே உலகு = கண்ணதே உலகம் 







( இதன் முதல் பகுதியை கீழே காணலாம்)


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html


இதன் இரண்டாம் பகுதியை கீழே காணலாம்)

https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_20.html

இதன் மூன்றாம் பகுதியை கீழே காணலாம்)


)

ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்பதில் ஐந்தின் வகை பற்றி நாம் சிந்திக்க இருக்கிறோம். 


மூலப் பிரகிருதி பற்றி முந்தைய ப்ளாகில் சிந்தித்தோம். 


மூலப் பிரகிருதி என்பது வெளிப்படாத பேரியற்கை என்கிறார்கள். அதில் இருந்து வெளிப்பட்டது பிரகிருதி என்பது. 


கருவுறாத தாய், பின் கருவுற்று, பிள்ளை பெறுவது போல..பிள்ளை என்பது வெளிபடாமல் நின்றது. சிக்கல் என்ன என்றால் இந்த உதாரணத்தில் நமக்குத் தாய் ஒன்று இருப்பது தெரிகிறது. ஆனால், மூலப் பிரகிருதி என்ன என்பது நமக்குத் தெரியாது. 


ஒரு வழியாக ஒரு வெளிப்பட்ட ப்ரிபஞ்சத்துக்கு நாம் வந்துவிட்டோம். இந்த பிரகிருதி என்பது மூன்று குணங்களின் சங்ககமாகும்.  வெளிப்பட்ட பிரபஞ்சம் என்றால் இன்னும் இந்த சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள் என்று வரவில்லை. அவை இனி வரப் போகின்றன.  இது ஒரு ஆற்றல் வடிவமாக இருக்கிறது. அறிவியலில் force field என்று கூறுவார்களே அது போல. 


ஆற்றலில் இருந்து பொருள் வந்தது என்பது சாங்கிய வாதம். 


நவீன அறிவியல் என்ன சொல்கிறது ? 


பொருளும் சக்தியும் ஒன்றுதான் என்று கூறுகிறது. 


E = m c^2

இது ஐன்ஸ்டீனின் மகத்தான கண்டு பிடிப்பு. பொருளும் ஆற்றலும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டவை. ஒன்று மற்றொன்றாக மாற முடியும் என்று சொல்கிறார். 


ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன். நவீன அறிவியலில் இருந்து சில மேற்கோள் காட்டுவதால், இது இரண்டும் ஒன்றுதான் என்று சொல்ல வரவில்லை. நம்மவர்கள் எல்லாவற்றையும் அன்றே கண்டு பிடித்து விட்டார்கள் என்று சொல்ல வரவில்லை. நம்மவர்கள் மிக ஆழமாக சிந்தித்து இருக்கிறார்கள். இப்படி இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். இவற்றிற்கு ஒரு ஆதாரமும் இல்லை. இவற்றை நிரூபணம் பண்ண முடியாது. 


நான் அந்த தத்துவங்களை சொல்லிக் கொண்டு இருக்கிறேன். அவை சரி தவறு என்று வாதம் செய்யவில்லை. ஆர்வம் உள்ளவர்கள் மேலும் தேடுவார்களாக. 



சத்துவ, ரஜஸ், தமோ என்ற முக்குணங்களின் கலவையே இந்த பிரகிருதி.


மனிதர்களில் இந்த முக்குணங்கள் பற்றி பேசும் போது நாம் சத்துவ குணம் என்பது கல்வி, தவம், தானம், வீடு பேறு என்பனவற்றிற்கு ஆதாரம் என்றும், தமோ குணம் என்பது கோபம், சோம்பல், காமம் முதலியவற்றிற்கு ஆதாரம் என்று, ரஜோ குணம் என்பது முயற்சி, ஆவல், உழைப்பு, தேடல் இவற்றிற்கு ஆதாரம் என்றும் சொல்கிறோம். 


பிரகிருதியில் இது எப்படி பொருந்தும் என்று கேட்டால், 


ரஜஸ் என்பது விரிதல், வியாபித்தல்  என்றும் 

தமோ அல்லது தமஸ் என்பது சுருங்குதல் 

சத்துவம் என்பது நிலைத்து நிற்பது 

என்று பொருள் படும். 


அதாவது இந்த பிரகிருதி அல்லது வெளிப்பட்ட உலகம் என்பது விரியும், சுருங்கும், நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது. 


நவீன அறிவியலிலும் இது பற்றி பேசுகிறார்கள். பெரு வெடிப்பில் தொடங்கி இந்தப் பேரண்டம் விரிந்து கொண்டே போகிறது என்கிறார்கள். இப்படி விரிந்து கொண்டே போனால், ஒரு நாள், புவி ஈர்ப்பு விசை காரணமாக அந்த விரிதல் நின்று போகும் பின் இந்த பேரண்டம் சுருங்கும். இறுதியில் Big Crunch என்று மீண்டும் ஒரு புள்ளியில் போய் முடியும் என்கிறார்கள்.  சிலர், அப்படி அல்ல, இது ஒருநாளும் சுருங்காது, விரிந்து கொண்டே போகும் என்கிறார்கள். அது பற்றிய தெளிவான முடிவு இன்னும் எட்டப் படவில்லை. 


இந்த அண்டமானது சுருங்கி விரியும் தன்மை கொண்டது என்று இப்போதைக்கு புரிந்து கொள்வோம். 


இனி ஒரு முக்கியமான விடயம் வருகிறது. 


இந்தப் பிரகிருதியானது ஆத்மாவோடு கலக்கிறது என்கிறார்கள். அப்படி கலக்கும் போது  இந்த உலகம் உண்டாகிறது என்கிறார்கள். 


மேலும் சிந்திப்போம். 


(ரொம்ப தள்ளிப் போகிறோமா ? விட்டு விடலாமா ? தேவைப் படுபவர்கள் சாங்கிய தத்துவம் பற்றி படித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு மேலே போய்விடலாமா என்று கூடத் தோன்றுகிறது. இருந்தாலும், இதெல்லாம் இருக்கிறது என்று அறிந்து கொண்டால் நல்லது தானே. மேலே படிக்க உதவியாக இருக்குமே என்றும் தோன்றுகிறது. 


என்ன செய்யலாம்? )


Friday, May 21, 2021

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 3

 

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 3 



பாடல் 


 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/3_21.html


(pl click the above link to continue reading)


சுவை = சுவை 


ஒளி = ஒளி 


ஊறு = தொடு உணர்ச்சி 


ஓசை = ஓசை 


நாற்றம் = மூக்கால் நுகர்வது 


மென் றைந்தின் = என்ற ஐந்தின் 


வகை = கூறுபாடுகளை 


தெரிவான் = ஆராய்ந்து அறிபவன் 


கட்டே உலகு = கண்ணதே உலகம் 







( இதன் முதல் பகுதியை கீழே காணலாம்)


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html


இதன் இரண்டாம் பகுதியை கீழே காணலாம்)

https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_20.html


)

ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்பதில் ஐந்தின் வகை பற்றி நாம் சிந்திக்க இருக்கிறோம். 


நாம் ஒன்றை அறிந்து கொள்ள என்னென்ன வேண்டும்?


அறிபவன், அறிந்து கொள்ளும் பொருள்,  அறிதல் அல்லது அறியும் அனுபவம் இந்த மூன்றும் நிகழ வேண்டும் அல்லவா?


அறிந்து கொள்ளும் பொருள்கள் எப்படி உருவாகின்றன என்று சாங்கிய தத்துவம் விளக்குகிறது. 


அதை புரிந்து கொள்வதற்கு முன்னால், இன்றைய நவீன அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். 


இன்றைய அறிவியல், இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரு பெரு வெடிப்பில் (Big Bang) இருந்து தோன்றியது என்கிறது.  இந்த அண்ட சராசரம் எல்லாம் ஒரு புள்ளியில் குவிந்து இருந்தது. அந்த புள்ளி ஒரு நாள் வெடித்து இந்த பேரண்டம் உருவானது என்கிறது. 


சரி. வெடிப்பதற்கு முன்னால் என்ன இருந்தது என்று கேட்டால், அது ஒரு அபத்தமான கேள்வி என்கிரார்கள். காலமே அந்த வெடிப்பில் இருந்து தான் தொடங்கியது. எனவே அதற்கு "முன்னால்" என்ற கேள்வியே வராது என்கிறார்கள். காலத்தின் தொடக்கம் பெரு வெடிப்பு. Time Zero அது தான். அதற்கு முன்னால் என்று கேட்டால், அதற்கு முன்னால் காலம் இருந்தது என்று ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். அதற்கு முன்னால் காலம் என்பதே கிடையாது என்கிறார்கள். 


எப்படி என்று சிந்திப்போம். 


காலம் என்பது என்ன? இரண்டு நிகழ்வுகளுக்கு இடைப்பட்ட ஒன்று தானே காலம். சூரியன் உதிப்பதற்கும், மறைவதற்கும் இடைப்பட்ட ஒன்றை நாள் என்கிறோம். பூமி சூரியனை ஒரு சுற்று சுற்றி வர ஒரு வருடம் என்கிறோம். பூமி சுத்தாவிட்டால், வருடம் என்று எதைச் சொல்வது? நாள் என்று எதைச் சொல்வது. நொடி என்றால் நொடி முள் ஒரு புள்ளியில் இருந்து அடுத்த புள்ளிக்கு செல்ல எடுத்துக் கொள்ளும் காலம். 


ஒன்றுமே இல்லை, ஒரு சலனமும் இல்லை, என்றால் காலம் என்ற ஒன்று இருக்க முடியாது என்பது அவர்கள் வாதம். 


ஆனால், சாங்கிய தத்துவத்தில் என்ன சொல்கிறார்கள் என்றால், முதலில் இந்த பேரண்டம் வெளிப்படாமல் இருந்தது. பின் அது வெளிப்பட்டது என்கிறார்கள். 


உதாரணமாக, நீங்கள் பாட்டு கற்றுக் கொள்ளப் போகிறீர்கள். உங்களுக்குள் உள்ள சங்கீதம் வெளிப்படவில்லை. உள்ளே இருக்கிறது. அது வெளிப்படாத விதமாக இருக்கிறது. 


விதைக்குள்ளே மரம் வெளிப்படாமல் இருக்கிறது. சாத்திய கூறுகள் இருக்கின்றன. ஆனால், அது வெளிப்படவில்லை. 


மரத்தைப் பார்த்தால், இவ்வளவு பெரிய மரம், அந்த சின்ன விதைக்குள் இருந்தது என்று எப்படி நம்புவது? 


இந்த உலகம் அனைத்தும் முதலில் ஒரு வெளிப்படாத நிலையில் இருந்தது. உலகம் என்று சொன்னால் ஐந்து பூதங்களும், நாமும், நம் அறிவும் அங்கிருந்து தான் வந்தது. 


அந்த நிலைக்கு, மூலப் பிரகிருதி என்று பெயர். 


பிர என்றால் முன்னது. 

கிருதி என்றால் படைப்பு.


படைப்புக்கு முந்தைய நிலை. பிரசவம் என்றால் பிள்ளை வெளி வருதற்கு முந்தைய நிலை. தயாராக இருக்கிறது. ஆனால் பிள்ளை இன்னும் வெளி வரவில்லை. 


அது போல, இந்த உலகம் பிறக்க தயாராக இருக்கிறது. ஆனால் இன்னும் தோன்றவில்லை. 


இதுதான் ஆதி. இதுதான் தொடக்கம். இங்கிருந்துதான் இருபத்து ஐந்து தத்துவங்களும் பிறக்கின்றன. 


பிறப்பதற்கு முந்தைய நிலையில் இருந்து இன்று வரை இந்த உலகம் எப்படி பரிணாம வளர்ச்சி பெற்றது என்பதை சாங்கிய தத்துவம் விளக்குகிறது. 


இந்த மூலப் பிரகிருதியில் இருந்து பிரகிருதி தோன்றுகிறது. அதுதான் முதல் தத்துவம். 


மேலும் வளரும் 


(பின் குறிப்பு - திருக்குறளுக்கு இவ்வளவு விரிவு தேவையா என்று ஆயாசமாக இருந்தால், இங்கே நிறுத்திவிட்டு அடுத்த குறளுக்குப் போய் விடலாம். என்ன சொல்கிறீர்கள்?)


Thursday, May 20, 2021

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 2

 

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 2 


இந்த குறளுக்கு எப்படி விளக்கம் சொல்லுவது என்ற மலைப்பில் சில நாட்கள் போய் விட்டன. ஒன்று மிக விரிவான ஆழமான குறள்.  இரண்டாவது, முழுவதுமாக புரிந்த மாதிரியும் இருக்கிறது, புரியாத  மாதிரியும் இருக்கு. 


முடிந்தவரை விவரிக்க முயற்சி  செய்கிறேன். 


பாடல் 


 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_20.html

(pl click the above link to continue reading)



சுவை = சுவை 

ஒளி = ஒளி 


ஊறு = தொடு உணர்ச்சி 


ஓசை = ஓசை 


நாற்றம் = மூக்கால் நுகர்வது 


மென் றைந்தின் = என்ற ஐந்தின் 


வகை = கூறுபாடுகளை 


தெரிவான் = ஆராய்ந்து அறிபவன் 


கட்டே உலகு = கண்ணதே உலகம் 


( இதன் முதல் பகுதியை கீழே காணலாம்)


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html

)


"ஐந்தின் வகை தெரிவான்" ஐந்தின் வகை என்றால் என்ன ?  


இந்த ஐந்து பூதங்களின் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிதல் என்று பொருள் எடுக்கிறார் பரிமேலழகர். 


இவற்றின் கூறுபாடுகளை அறிந்து கொள்வது என்றால், நாம் தத்துவங்களை முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும். 


இந்த பஞ்ச பூதங்கள் எப்படி தோன்றின? எங்கிருந்து தோன்றின ? அதை தோற்றுவித்தவர் யார்? எப்போது தோற்றுவிக்கப்பட்டது?  இந்த பஞ்ச பூதங்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு?  நாம் அவற்றை எவ்வாறு அறிந்து கொள்கிறோம்? நாம் அறிந்தது மட்டும்தான் உண்மையா? நம் புலன்களும், கருவிகளும் நுண்மையாக நுண்மையாக நமக்கு மேலும் மேலும் ஆழ்ந்த உண்மைகள் புலப்படுகின்றனவே.  அப்படியானால், நாம் இன்று அறிந்து வைத்து இருப்பது முடிவானது அல்ல என்று தெரிகிறது. அப்படியானால், அவற்றிற்கு ஒரு முடிவே இல்லையா? இந்த பஞ்ச பூதங்களை நாம் முழுவதுமாக அறிந்து கொள்ளவே முடியாதா?


இந்தக் கேள்விகள் ஒரு புறம் இருக்கட்டும். இவற்றிற்கு நாம் கட்டாயம் விடை காண்போம் 


அதற்கு முன், 


இந்தக் கேள்விகள் ஒன்றும் இன்று எழுந்தவை அல்ல. காலம் காலமாக மனிதன் இந்தக் கேள்விகளை கேட்டு, அவற்றுக்கு விடை தேடி அலைந்து கொண்டு இருக்கிறான். 


எவ்வளவோ பெரியவர்கள் வந்து இந்தக் கேள்விகளுக்கு பல விதங்களில் விடை தந்து இருக்கிறார்கள். 


ஒவ்வொருவரும் ஒரு வழியில் போய் இருக்கிறார்கள். 


பல அறிஞர்கள், பல தத்துவங்கள். 


ஒவ்வொரு மதமும் ஒரு தத்துவத்தை முன் நிறுத்துகிறது. நாங்கள் சொல்லும் தத்துவமே உண்மை என்றும் மற்றவை எல்லாம் பொய் என்றும் சண்டையிட்டுக் கொண்டும் இருக்கின்றன. 


நாம் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளத்தான் வேண்டும். 


ஆனால், எங்கோ ஒரு இடத்தில் தொடங்க வேண்டும் அல்லவா? உலகம் முழுவதும் சுத்திப் பார்க்க வேண்டும் என்றாலும், ஏதோ ஒரு இடத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும் அல்லவா?  அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படியும் உலகம் முழுவதையும் சுற்றப் போகிறோம். 


எந்த தத்துவமும் உயர்ந்ததும் அல்ல. தாழ்ந்ததும் அல்ல. அவை உண்மையை அறிய ஒரு கருவி அவ்வளவுதான். 


எனவே, அந்தத் தத்துவம் சரி, இது தவறு என்று வீணான வாதங்களை நாம் விட்டு விடுவோம். 


பரிமேலழகர் சாங்கிய தத்துவத்தை எடுக்கிறார். 


நீங்கள் சாங்கிய தத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். அது இந்தியாவின் பழமையான தத்துவம்.  பகவத் கீதை போன்ற நூல்களுக்கு முந்தையது. கீதையில் சாங்கிய யோகம் என்று ஒரு பகுதியே உண்டு. 


திருவள்ளுவர் சாங்கிய தத்துவம் பற்றி கூறவில்லை. பரிமேலழகர் உரையில் அதைக் கொண்டு வருகிறார். 


நீங்கள் எந்தத் தத்துவத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.  


"ஐந்தினை" அறிய வேண்டும். எப்படி அறிந்தால் என்ன? 


எனவே, நாம் சாங்கிய தத்துவத்தில் இருந்து ஆரம்பிப்போம். 


சாங்கிய தத்துவத்தில் மொத்தம் 25 தத்துவங்கள் உண்டு. 


அவற்றை இனி வரும் ப்ளாகுகளில் நாம் காண இருக்கிறோம். 





Tuesday, May 18, 2021

இராமானுசர் நூற்றந்தாதி - உனக்கு இது இழுக்கு இல்லையா?

இராமானுசர் நூற்றந்தாதி -  உனக்கு இது இழுக்கு இல்லையா?


கடல் பரந்து கிடக்கிறது. அதில் இருந்து கொஞ்சம் நீர் முகந்து கொண்டால், கடலின் அளவு குறைந்தா போய் விடப் போகிறது?  எவ்வளவு முகந்தாலும் கடலின் அளவு குறையாது.  அது போல

இராமானுசரே உம்முடைய கருணை கடல் போன்றது. எவ்வளவு பேருக்கு எவ்வளவு கொடுத்தாலும் குறையாது. 


ஆனால்  


கடல் கொடுக்கும், ஆனால் கொடுப்பதனால் அந்த கடலின் பெருமை ஒன்றும் பெரிதாகி விடுவது இல்லை. ஆனால், இராமானுசரே, கொடுக்க கொடுக்க உம் கருணையின் பிரகாசம் மேலும் மேலும் ஒளி விட்டுக் கொண்டே இருக்கிறது. 

அவ்வளவு பெருமை வாய்ந்த கருணைக் கடலான நீர் வினைகளால் பீடிக்கப் பட்ட என் மனத்துள் வந்து புகுந்தாய். நான் எவ்வளவு கீழானவன். என் மனதில் வந்து புகுந்தால் அதனால் உனக்கு ஒரு இழுக்கு வந்து விடாதா என்று என் நெஞ்சு கவலைப் படுகிறது என்கிறார் திருவரங்கத்து அமுதனார். 


பாடல் 


கொள்ளக் குறைவு அற்று இலங்கி*  கொழுந்து விட்டு ஓங்கிய உன் 

வள்ளல் தனத்தினால்*  வல்வினையேன் மனம் நீ புகுந்தாய்* 

வெள்ளைச் சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று* 

தள்ளுற்று இரங்கும்*  இராமாநுச! என் தனி நெஞ்சமே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_18.html


(please click the above link to continue reading)


கொள்ளக் குறைவு அற்று = எடுக்க எடுக்க குறையாமல் 


இலங்கி = விளங்கி 


கொழுந்து விட்டு ஓங்கிய = சுடர் விட்டுப் பிரகாசிக்கும் 


உன்  = உன் 


வள்ளல் தனத்தினால் = வள்ளல் தன்மையால் 


வல்வினையேன் = கொடிய வினைகள் உள்ள என் 


மனம் நீ புகுந்தாய் = மனத்தில் நீ புகுந்தாய் 


வெள்ளைச் சுடர் விடும் = களங்கம் ஏதும் இன்றி சுடர் விடும் 


உன் பெரு மேன்மைக்கு = உன்னுடைய பெரிய புகழுக்கு 


இழுக்கு இது என்று = இது இழுக்கு என்று 


தள்ளுற்று இரங்கும் =  தவித்தபடி ஏங்கும் 


இராமாநுச! = இராமாநுச!


என் தனி நெஞ்சமே! = துணை அற்ற என் தனி நெஞ்சமே 




Monday, May 17, 2021

இராமானுசர் நூற்றந்தாதி - என் பெய்வினை

இராமானுசர் நூற்றந்தாதி - என் பெய்வினை 


தர்மத்தை பசுவுக்கு ஒப்பிட்டுச் சொல்லும் போது, அந்த பசு கிருத  யுகத்தில் நான்கு கால்களில் நின்றதும் என்றும், திரேதா யுகத்தில் மூன்று கால்களில் நின்றதும் என்றும், துவாபர யுகத்தில் இரண்டு கால்களில் நின்றது என்றும், இப்போது கலி காலத்தில் ஒரு காலில் நிற்கிறது என்றும் சொல்லுவார்கள். 


பசு, கால் என்பதெல்லாம் ஒரு குறியீடு. அதாவது, தர்மம் தன் நிலை இழக்கும் என்பது அர்த்தம். ஒரு காலில் ஒரு பசு எவ்வாறு உறுதியாக நிற்க முடியும். 


கலி காலத்தில் அறம் தேய்ந்து, மறம் ஓங்கி நிற்கும். கலியின் ஆதிக்கம் ஓங்க ஓங்க, நாட்டில் அநீதியும், அதர்மமும் தலையெடுக்கும். 


யார் இதை தடுத்து நிறுத்துவது? அறத்தை யார் எடுத்துச் சொல்வது? மக்களை யார் நல் வழிப் படுத்துவது ? 


அவ்வப்போது பெரியவர்கள் தோன்றி அறத்தை உபதேசித்து மக்களை நல் வழிப் படுத்துகிறார்கள். 


அப்படி தோன்றிய பெரியவர்களில் ஒருவர் இராமானுஜர். 


அவர் தன்னுடைய தவ வலிமையால், இந்த பூமியை பீடித்த கலியை வென்று வீழ்த்தினார். அப்படி செய்த பின்னும், இந்த உலகம் ஒளி பெற்று விளங்கவில்லை. காரணம், கலியின் கொடுமை தணிந்தாலும், நாம் செய்த வினைகளின் பலன் நம்மை விட்டுப் போகாது. இராமானுஜர் அதையும் விடவில்லை. கலியின் கொடுமையை அழித்த அவருக்கு நம் வினையின் தொகுதியை அழிப்பது என்ன பெரிய காரியமா? அதையும் அழித்தார் அவர். அவர் பெருமை சொல்லவும் முடியுமோ என்கிறார் திருவரங்கத்து அமுதனார்.


பாடல்  


நிலத்தைச்  செறுத்துண்ணும்  நீசக் கலியை,  நினைப்ப‌ரிய- 

ப‌லத்தைச் செறுத்தும் பிறங்கியதில்லை,  என் பெய்வினைதென்- 

புலத்தில் பொறித்த அப்புத்தகச் சும்மை பொறுக்கியபின்* 

நலத்தைப் பொறுத்தது*  இராமானுசன் தன் நயப்புகழே


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_17.html


(please click the above link to continue reading)


நிலத்தைச் = பூமியை 

செறுத்துண்ணும் = கோபித்து அழிக்கும் 

நீசக் கலியை = மோசமான கலியின் 

நினைப்ப‌ரிய = நினைபதற்கு முடியாத பெரிய 

ப‌லத்தைச்  = பலத்தை 

செறுத்தும் = அடக்கியும் 

பிறங்கியதில்லை =இந்த உலகம் ஒளி விடவில்லை 

 என் = என்னுடைய் 

பெய்வினை = பெய் வினைகள் 

தென் புலத்தில் = தெற்கு திசையில் 

பொறித்த = எழுதப்பட்ட 

அப்புத்தகச் சும்மை = அந்த புத்தகத்தை 

பொறுக்கியபின் = எடுத்து மாறிய பின்  

நலத்தைப் பொறுத்தது = நலத்தை தருவது 

இராமானுசன் தன் நயப்புகழே = இராமானுசன் தன் நவிலக் கூடிய புகழே 


பெய் வினை: அதாவது, வினைகளை ஒவ்வொன்றாக செய்யவில்லையாம். 

மழை பெய்வது போல மொத்த வினையும் ஒன்றாக செய்து விட்டாராம். அவ்வளவு வினைகள ஒன்றாகச் செய்து விட்டால், எப்போது அவற்றை அனுபவித்து தீர்ப்பது? அதற்கு எத்தனை பிறவி வேண்டுமோ? அதை எல்லாம் ஒருங்கே அழித்தார் இராமனுசர்.


"தென் புலத்தில் பொறித்த அப்புத்தகம்" எமனுடைய துணையாள் சித்திர குப்தன் நாம் செய்யும் நல் வினை தீ வினைகளை எழுதி வைப்பான் என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் புத்தகத்தில் உள்ள நம் வினையின் தொகுதிகளை அழித்து நமக்கு நல்லது செய்வார் என்பது கூற்று. 


என்னே குருபக்தி 




Saturday, May 15, 2021

இராமானுசர் நூற்றந்தாதி - காரேய் கருணை இராமானுச

 இராமானுசர் நூற்றந்தாதி - காரேய் கருணை இராமானுச 


ஒரு சில நாட்களாய் பயங்கர வயிற்று வலி. மருத்துவரிடம் போகிறோம். அவர் சோதனை எல்லாம் செய்து விட்டு, ஒரு மாத்திரை தருகிறார். அதை சாப்பிட்ட சில மணி நேரத்தில் வலி இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது. எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். 


பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணியாச்சு. ஓரிரு நாட்களில் திருமணம். எதிர்பாராத செலவு வந்து விட்டது. கையில் காசு இல்லை. யார் யாரிடமோ கேட்டாகி விட்டது. கடைசி நிமிடத்தில் எல்லோரும் கை விரித்து விட்டார்கள். என்ன செய்வது என்று ஒரே தவிப்பு. கடைசியாக ஒரு நண்பரிடம் சென்று கேட்கிறோம். அவரோ, "இதை ஏன் முதல்லியே என் கிட்ட சொல்லல " என்று கோபித்துக் கொண்டு, நாம் எதிர் பார்த்ததை விட அதிகமாகவே தந்து, "முதல்ல போய் கல்யாணத்தை நல்ல படியா முடி...மத்தது எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்" என்று நம்மை அனுப்பி வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். 


நம் மனம் எவ்வளவு சந்தோஷப் படும். 


இப்படி நமக்கு வரும் ஒவ்வொரு துன்பத்தையும் யாரோ ஒருவர் வந்து உதவி பண்ணி நம்மை கை தூக்கி விடுகிறார். 


எல்லாம் குருவருள். 


மேகத்தின் தன்மை மழை பொழிவது. 


அது எங்கே பொழிய வேண்டும், இந்த நிலத்துக்கு சொந்தக்காரன் நமக்கு வேண்டியவன், அங்கே கொஞ்சம் நிறைய பொழிவோம். இந்த நிலத்துக்காரன் மோசமானவன், அவன் நிலத்தில் பெய்யக் கூடாது என்று பாகுபாடு எல்லாம் பார்ப்பது இல்லை. 


எல்லோருக்கும் பொதுவாக அது பொழிகிறது. விருப்பு வெறுப்பு கிடையாது. நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடு கிடையாது. 


இராமானுசரே, உம்முடைய கருணை அந்த கார் மேகத்தைப் போன்றது. உம்முடைய அந்த கருணை உள்ளத்தை யார் அறிவார்கள்? யாரும் அறிய மாட்டார்கள்.  எப்பப் பார்த்தாலும் ஏதாவது ஒரு துன்பத்தைப் பற்றிக் கொண்டு தவிக்கின்றேன் நான். நான் அந்த துன்பங்களை பிடித்துக் கொண்டிருக்கிறேன் இல்லை என்றால் அது என்னைப் பிடித்துக் கொள்கிறது.  எப்படியோ இந்த துன்பங்கள் என்னை தேடி வந்து அடைந்து விடுகின்றன. வருவது மட்டும் அல்ல, என் கூடவே நிரந்தரமாய் தங்கியும் விடுகின்றன. ஒண்ணு போனா இன்னொன்னு வந்து விடுகிறது.  நீர் வந்து என்னை இந்தத் துன்பக் கடலில் இருந்து கரை ஏற்றிய பின், உன்னுடைய பெருமைகளை எல்லாம் நினைக்கும் போது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் திருவரகத்து அமுதனார். 


பாடல் 


காரேய் கருணை இராமானுச! இக்கடலிடத்தில்

ஆரே அறிபவர் நின்னருளின் தன்மை?! அல்லலுக்கு

நேரே உறைவிடம் நான்! வந்து நீ என்னை உய்த்த பின் உன்

சீரே உயிர்க்குயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_15.html


(please click the above link to continue reading)


காரேய் = நீர் கொண்ட கரிய மேகம் 


கருணை இராமானுச! = கருணை கொண்ட இராமானுசரே 


இக்கடலிடத்தில் =  இந்தப் பிறவி என்ற கடலில் 


ஆரே அறிபவர் = யார் அறிவார்கள் 


நின்னருளின் தன்மை?! = உன் அருளின் தன்மையை 


அல்லலுக்கு = துன்பத்துக்கு 


நேரே உறைவிடம் நான்! = எப்போதும் இருப்பிடம் நான் 


வந்து நீ என்னை  = நீ வந்து 


உய்த்த பின் = என்னை காப்பாற்றிய பின் 


உன் சீரே  = உன் பெருமைகளை 


உயிர்க்குயிராய் = உயிருக்கும் உயிராய் 


அடியேற்கு இன்று தித்திக்குமே! = அடியேனாகிய எனக்கு இன்று தித்திகின்றது 




Friday, May 14, 2021

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 1

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 1 


இந்த குறளுக்கு எப்படி விளக்கம் சொல்லுவது என்ற மலைப்பில் சில நாட்கள் போய் விட்டன. ஒன்று மிக விரிவான ஆழமான குறள்.  இரண்டாவது, முழுவதுமாக புரிந்த மாதிரியும் இருக்கிறது, புரியாத  மாதிரியும் இருக்கு. 


முடிந்தவரை விவரிக்க முயற்சி  செய்கிறேன். 


பாடல் 


 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html


(pl click the above link to continue reading)



சுவை = சுவை 

ஒளி = ஒளி 


ஊறு = தொடு உணர்ச்சி 


ஓசை = ஓசை 


நாற்றம் = மூக்கால் நுகர்வது 


மென் றைந்தின் = என்ற ஐந்தின் 


வகை = கூறுபாடுகளை 


தெரிவான் = ஆராய்ந்து அறிபவன் 


கட்டே உலகு = கண்ணதே உலகம் 


இதில் என்ன சிக்கல் இருக்கிறது. ஐம்புலன்களை அறிந்தவன் கண்ணதே உலகம்.  அதுதான் தெளிவாக இருக்கிறதே. இதில் இன்ன குழப்பம் என்று நாம் நினைக்கலாம். 


"கட்டே உலகு" : உலகம் என்றால் என்ன?  இது தெரியாதா, உலகம் என்றால் இந்த பூமி, நிலா, சூரியன், பால் வெளி, அண்டம், இந்த பூமியில் உள்ள புல் பூண்டு, உயிரினங்கள், மலை, காடு, கல், மண் எல்லாம் சேர்ந்ததுதான் உலகம். 


சரி, இந்த ஆராய்ச்சிக்கு பூமியையும் அதில் உள்ள பொருள்களையும் எடுத்துக் கொள்வோம்.  சரியா?


இந்த உலகம் பொருள்களால் நிறைந்தது. உயிருள்ள பொருள்கள், உயிர் இல்லாத பொருள்கள் என இரண்டு வகையான பொருள்கள் இருக்கின்றன. 


ஒவ்வொரு பொருளுக்கும் சில குணங்கள் இருக்கின்றன அல்லவா?


இலட்டு என்றால் மஞ்சள் நிறத்தில் இருக்கும், இனிப்பாக இருக்கும், சிறிய பந்து போல இருக்கும், ஏலக்காய், கிராம்பு மணத்தோடு இருக்கும். இதே போல் ஒவ்வொரு பொருளுக்கும், அதன் குணங்களை கூற முடியும். 


பசு மாடு, தாமரைப் பூ, மலை, இரயில், நாற்காலி,  படிக்கட்டு, புத்தகம் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அவற்றிற்கு குணங்கள் இருக்கும். மனிதர்களுக்கும் குணங்கள் உண்டு. உயரம், குள்ளம், கறுப்பு, சிவப்பு, குண்டு, ஒல்லி என்று மனிதர்களுக்கு மனிதர் குண வேறுபாடு உண்டு. 


இதுவரை சரி தானே?


இனி அடுத்த நிலைக்குப் போவோம். 


பொருளில் குணங்கள் இருக்கிறதா? அல்லது குணங்களின் தொகுப்பு பொருளா? 


இலட்டில் இனிப்பு, மென்மை, மஞ்சள், ஏலக்காய் மணம் இருக்கிறதா அல்லது இந்த குணங்கள் எல்லாம் சேர்ந்த ஒன்றுக்கு இலட்டு என்று பெயரா?


இலட்டில் இருந்து இந்த குணங்களை எடுத்து விட்டால் என்ன ஆகும்? 


மஞ்சள் நிறம் இல்லை. 

உருண்டையாக இல்லை. 

இனிப்பாக இல்லை. 

மணம் இல்லை.


அதை இலட்டு என்று கூற முடியுமா? 


முடியாது அல்லவா?


எனவே, பொருள் என்பது குணங்களின் தொகுப்பு என்று புரிகிறது அல்லவா?


பழைய நண்பர்களை வெகு நாள் கழித்து சந்திக்க நேர்ந்தால், அவர்களுடைய சில அடிப்படை குணங்கள் மாறி இருக்காலம். "என்னடா அந்தக் காலத்தில் எதுக்கு எடுத்தாலும் கோபப்பட்டு சண்டைக்கு போவ...இப்ப ரொம்ப அமைதியா ஆளே மாறிட்டியே" என்று சொல்லி இருப்போம்.  "குண்டு குண்டுன்னு இருப்ப...இப்ப துரும்பா இளைச்சு ஆள் அடையாளமே தெரியலையேடா" 


குணம் மாறினால், "ஆளே மாறிட்டியே" என்று சொல்ல நேர்கிறது அல்லவா? 


எனவே, உலகம் என்பது பொருள்களால் அல்ல குணங்களால் நிறைந்தது என்று தெரிகிறது அல்லவா? 


சரி, குணங்கள் எங்கிருந்து வருகின்றன? 


ஒருவனுக்கு மிளகாய் பஜ்ஜியை கண்ணில் கண்டாலே கண்ணில் நீர் வரும். இன்னொருவனோ, என்ன மிளகாய் பஜ்ஜி காரமே இல்லை என்று நறுக் நறுக் கென்று தின்று கொண்டிருப்பான். 


ஒருவனுக்கு குளிர் வாட்டும், இன்னொருவன் என்ன கச கச என்று இருக்கிறது. கொஞ்சம் மின் விசிறியை போட்டா என்ன என்பான். 


குணம் பொருளில் தங்கி இருக்கிறதா, அல்லது பொருளை பார்ப்பவனில் தங்கி இருக்கிறதா? 


குணம் பொருளில் தங்கி இருக்கிறது என்றால், எல்லோரும் ஒன்றையே சொல்ல வேண்டும். ஒவ்வொருத்தரும் ஒன்று சொல்வதனால், அது பொருளை அனுபவிப்பவனை பொறுத்து அமைகிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?


எனவே, உலகம் என்பது பொருளில் இருந்து குணத்துக்கு மாறி, குணத்தில் இருந்து அதை அனுபவிப்பவனுக்கு போய் விட்டது. 


அப்படி என்றால், இந்த உலகம் பார்பவனை பொறுத்தது என்று நம்மால் சிந்திக்க முடிகிறது அல்லவா?


இதை யோசித்துக் கொண்டு இருங்கள். 


நாளை மேலும் சிந்திக்க இருக்கிறோம்.

இராமானுசர் நூற்று அந்தாதி - அரண் யார் ?

இராமானுசர் நூற்று அந்தாதி - அரண் யார் ?


எத்தனையோ சமய பெரியவர்கள் தோன்றி இருக்கிறார்கள். மக்கள் உய்த்தேற உபதேசம் செய்து இருக்கிறார்கள். நல் வழி காட்டி இருக்கிறார்கள். அறம் போதித்து இருக்கிறார்கள். 


அப்படி செய்ததால் அவர்களுக்கு பாவம் வரும், அவர்கள் வீடு பேறு பெற முடியாது என்று யாரும் சொல்லாவில்லை. அப்படி சொன்ன பின்னும், எனக்கு தீங்கு வந்தாலும் பரவாயில்லை, மக்களுக்கு நன்மை வந்தால் போதும் என்று தான் அறிந்த உண்மையை உலகுக்குச் சொன்னவர் இராமானுசர். 


இறைவனை தொழுவதும், அவன் நாமத்தை சொல்வதற்கும் உங்களுக்கு உரிமை இல்லை, நீங்கள் அப்படி செய்தால் பாவம் என்று சொல்லி வந்த போது, அப்படி அல்ல, வாருங்கள், நீங்களும் இறைவனின் திருவடியை தொழலாம், நீங்களும் இறைவனின் பிள்ளைகள் தான் என்று அனைவரையும் ஒன்று சேர்த்தவர் இராமானுஜர். 


அவர் மட்டும் இல்லை என்றால், அந்தப் பாவப்பட்ட மக்களுக்கு யார் காவல் என்று கேட்கிறார் திருவரங்கத்து அமுதனார்.


பாடல் 

 

சரணம் அடைந்த தருமனுக்காப்,பண்டு நூற்றுவரை

மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்கவைத்த

கரண வையுமக் கன்றென்றி ராமா னுசனுயிர்கட்கு

அரணங் கமைத்தில னேல்,அர ணார்மற்றிவ் வாருயிர்க்கே?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_14.html


(please click the above link to continue reading)


சரணம் அடைந்த = சரணம் அடைந்த 


தருமனுக்காப் = தருமன் முதலிய பஞ்ச பாண்டவர்களுக்காக 


பண்டு = முன்பு 


நூற்றுவரை = கௌரவர்களை 


மரணம் அடைவித்த = மரணம் அடையச் செய்த 


மாயவன் தன்னை = திருமால் தன்னை 


வணங்க வைத்த = வணங்க வைத்த 


கரணவையு = கரணம் இவை  (கரணம் என்றால் உறுப்புகள். வணங்கும் தலை, கூப்பும் கைகள்) 


உமக் கன்று = உமக்கு அன்று 


என்று = என்று 


இ ராமா னுசன் = இராமானுசன் 


உயிர்கட்கு = உயிர்களுக்கு 


அரணங் கமைத்தில னேல் = அரண் அங்கு அமைத்திலனேல் = அரணம் அமைக்கவில்லை என்றால் 


அர ணார் = அரண் ஆர் 


மற்றிவ் வாருயிர்க்கே? = மற்று இவ் ஆருயிற்கே ?


குறிப்பிட்ட மக்கள் மட்டும்தான் இறைவனை தொழ முடியும்; வீடு பேறு அடைய முடியும் என்று சொல்லி வந்த காலத்தில், அப்படி அல்ல  எல்லோரும் இறைவனை தொழ முடியும் என்று "வான் கருணை" யை வியந்து பாராட்டுகிறார் திருவரங்கத்து அமுதனார். 



Tuesday, May 11, 2021

திருமந்திரம் - இடிகரை நிற்குமோ

திருமந்திரம் - இடிகரை நிற்குமோ 


ஆற்றில் நீர் ஓடிக் கொண்டிருக்கும் போது பார்க்க மிக அழகாக இருக்கும். சுளுத்திக் கொண்டு ஓடும் நீர், அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிதக்கும் இலை தளைகள், கொஞ்சம் நுரை அங்கே, கொஞ்சம் சுழி இங்கே என்று ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டே இருக்கும் ஆற்று நீரின் ஓட்டம். 


ஆறு அப்படி ஓடிக் கொண்டிருக்கும் போது, அதன் இரண்டு கரையிலும், ஆற்றின் நீர் அந்த கரையை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கொண்டே இருக்கும். 


சட்டென்று ஒரு கட்டி மண் விழும், ஒரு கல் மெல்ல புரண்டு ஆற்றோட்டத்தில் அடித்துக் கொண்டு போகும். 


ஆற்றின் கரைக்கு இடி கரை என்று பெயர். இடிந்து கொண்டே இருக்கும் கரை. வினையெச்சம். இடிந்த கரை, இடிந்து கொண்டே இருக்கும் கரை, இனியும் இடியும் கரை. 


அது போல, நம் வாழ்வும். 


ஒரு நாள் சந்தோஷம், ஒரு நாள் உற்றார் உறவினர் கூட கொண்டாட்டாம், ஒரு நாள் பிரிவு, புது உறவுகள் வரவு,  பழைய உறவுகள் விட்டுப் போதல், ஆரோக்கியம் பல நாள், அங்கொன்றும், இங்கொன்றுமாக நோய் சில நாள் என்று ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில், அதன் மொத்த நாளையும் இந்த கால வெள்ளம் அரித்துக் கொண்டே இருக்கும். 


ஒவ்வொரு நாளும் கொஞ்சம் அரித்து எடுக்கும். 


இளமை போகும். ஞாபகம் போகும்.  அழகு போகும். கொஞ்சம் கொஞ்சமாக. 


நமக்கு முன் வந்தவர்கள் எத்தனையோ பேர். எல்லோரும் முடிந்து போய் விட்டார்கள். இன்று இருப்பவர்களுக்கும், இனி வரப் போகிறவர்களும் நிரந்தரமாய் இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஒன்றும் இல்லை. எத்தனை மாத்திரை, மருந்து, சிகிச்சை, சோதனை செய்தாலும் என்ன? இடிகரை நிற்காதது போல, நம் வாழ்வும் நிலைக்காது என்கிறார் திருமூலர். 


பாடல் 

 

முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர் 

பின்னை வந்தவர்கென்ன பிரமாணம் 

முந்நூறு கோடி உறுகதி பேசிடில் 

என்ன மாயம் இடிகரை நிற்குமோ 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_11.html


(please click the above link to continue reading)




முன்னம் வந்தனர் = நமக்கு முன்னால் வந்தவர்கள் 


எல்லாம் முடிந்தனர்  = எல்லோரும் இறந்து போய் விட்டார்கள் 


பின்னை வந்தவர்கென்ன பிரமாணம் = பின்னால் வரப் போகிறவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் ?


முந்நூறு கோடி  =  முந்நூறு கோடி


உறுகதி பேசிடில்  = பிழைக்கின்ற வழி பற்றி சிந்தித்தாலும் 


என்ன மாயம் = என்ன மாயம் 


இடிகரை நிற்குமோ  = இடி கரை நிற்குமோ? (நிற்காது என்பது பொருள்) 


அலோபதி, ஹோமியோபதி, அன்குபஞ்சர், ஆயுர்வேதம், கபசுர குடிநீர், நோய் தடுப்பு ஊசி என்று ஆயிரம் இருந்தாலும், இடிகரை இடிவதை தடுத்து நிறுத்த முடியாது. 


இருக்கின்ற வரை, அதை நல்ல வழியில் பயன் படுத்த வேண்டும். 






திருக்குறள் - பெரியரும் சிறியரும் - பாகம் 3

  

திருக்குறள் - பெரியரும் சிறியரும் - பாகம் 3 


நீத்தார் பெருமை சொல்லிக் கொண்டு வந்த வள்ளுவர், நீத்தார் செயற்கரிய செய்வார் என்றும் மற்றவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்றும் கூறுகிறார். 


பாடல் 


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/3.html


(please click the above link to continue reading)


செயற்கரிய = செய்வதற்கு கடினமான 


செய்வார் = (செயல்களை) செய்வார் 


பெரியர் = பெரியவர்கள் 


சிறியர் = சிறியர் 


செயற்கரிய = செய்வதற்கு கடினமான செயல்களை 


செய்கலா தார் = செய்ய மாட்டார்கள் 


அரிய செயல்கள் என்று பரிமேலழகர் கூறுவது "இயமம், நியமம் முதலிய எண்வகை யோக உறுப்புகளை "


இதில் 


இயமம்

நியமம் 

ஆசனம் 

பிரணாயாமம் 


என்ற நான்கையும் நேற்று சிந்தித்தோம். 


இனி வரும் நான்கும் தான் உண்மையிலேயே யோக முயற்சிகள்.  முதல் நான்கும் யோகத்திர்கான முன்னேற்பாடுகள்.


அடுத்த நான்கு  அங்கங்கள் 


பிரத்தியாகாரம் 

தாரண

தியானம் 

சமாதி 


நம் மனம் எப்போதும் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். ஒன்றில் இருந்து மற்றதற்கு தாவிக் கொண்டே இருக்கும். இதில் கவனிக்க வேண்டியது என்ன என்றால், நல்லதும் கெட்டதும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். 


ஒருவருக்கு எப்போதும் நல்ல எண்ணங்களே தோன்றும் என்று கூற முடியாது. அதே போல் ஒருவருக்கு எப்போதும் தீய எண்ணங்களே தோன்றும் என்றும் கூற முடியாது. 


ஆனால், ஒரு எண்ணமும் இல்லாமல் மனம் இருக்காது. 


எனவே, பதஞ்சலி கூறுகிறார்,  ஒரு கெட்ட எண்ணம் வந்தால், உடனே ஒரு நல்ல எண்ணத்தை கொண்டு வர வேண்டும். இல்லை என்றால் மனம் அந்த கெட்ட எண்ணத்தின் பின்னேயே போய் கொண்டிருக்கும். 


யார் மேலாவது கோபம் அல்லது பொறாமை வந்தால், அவரின் நல்ல குணங்களை பற்றி சிந்திக்க வேண்டும், அவர் நமக்கு செய்த நன்மைகளை சிந்திக்க வேண்டும். அது முடியாவிட்டால், வேறு யாராவது நமக்கு செய்த நன்மைகளை சிந்திக்க வேண்டும். எவ்வளவோ பேர் நமக்கு நல்லது செய்திருக்கிறார்கள். இவன் ஒருவன் நமக்கு ஒரு தீங்கு செய்கிறான், சரி விடு நல்லதை நினைப்போம் என்று மனதை தீய எண்ணங்களில் இருந்து நல்லவற்றிற்கு மாற்ற வேண்டும். 


அவ்வளவு தூரம் ஏன் போக வேண்டும். கணவன் மனைவி சண்டையில், ஏதோ ஒரு காரணமாக பேச்சு முத்தி, சண்டை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். "இவள் எனக்காக எவ்வளவு செய்திருக்கிறாள்...பாவம் என்னை நம்பி வந்தவள்" என்று நினைக்கும் போது கோபம் தணியும். அதே போல், "...பாவம் இந்த முனுஷன் இந்த குடும்பத்துக்காகா எவ்வளவு தியாகம் செய்கிறார்" என்று அவர் செய்யும் நல்லவற்றை நினைக்க வேண்டும். 


இதற்கு பிரத்தியாகாரம் என்று பெயர். 


அடுத்தது, தாரணை.  


இப்படி கெட்ட எண்ணங்களை நல்ல எண்ணங்களுக்கு மாற்றிக் கொண்டே இருந்தால், நாளடைவில் மனம் நல்லவற்றையே சிந்திக்கத் தலைப்படும். மனைவி மேல் கோபம் வந்தவுடன், உடனேயே அவளின் நல்ல குணங்கள் பற்றி சிந்திக்கப் பழகி விட்டால், எப்போதும் அவள் நல்ல குணங்களே தோன்றிக் கொண்டு இருக்கும்.  இது அனைத்து விதமான கெட்ட / நல்ல எண்ணங்களுக்கும் பொருந்தும். 


ஆனால், இப்படி நல்லது கெட்டது என்று மாறி மாறி போகும் மனதை நல்லதில் மட்டுமே இலயிக்க விடுவது தாரணை என்று பெயர். தாரணை என்றால் ஒழுக்கு. ஒரு பாத்தரத்தில் நீரை வைத்து அதில் ஒரு ஓட்டை போட்டு விட்டால் எப்படி நீர் கீழே வருமோ, அதற்கு தாரணை என்று பெயர். இன்னும் சொல்லப் போனால், நீர் கூட கொஞ்சம் சிதறும். எண்ணெய் உள்ள பாத்திரம் என்று சொல்லுவார்கள். ஒரே மாதிரி, சிந்தாமல் சிதறாமல் வரும். தாரை தாரையாக ஒழுகுகிறது என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம் அல்லவா. 


இப்படி, நல்ல எண்ணங்களின் மேலேயே மனதை ஓடவிட்டாலும், ஒரு நல்ல எண்ணத்தில் இருந்து இன்னொரு நல்ல எண்ணத்திற்கு மனம் தாவும்.  ஒருவர் மேல் உள்ள நல்ல எண்ணத்தில் இருந்து இன்னொருவர் மேல் உள்ள நல்ல எண்ணமாக மாறும். அதுவும் மனச் சலனம் தான்.  


இப்படி பலவிதமான நல்ல எண்ணங்களில் இருந்து மன தை ஒன்றே ஒன்றின் மேல் செலுத்துவது தியானம் என்று பெயர். ஒன்றையே பற்றிக் கொள்ளுவது.  விடாமல் ஒன்றை மட்டுமே சிந்திப்பது. 


தியானம் கடந்து அடுத்து வருவது சமாதி. ஆதி + சமம். 


மனம் தொடக்கத்தில் எப்படி சலனம் அற்று இருந்ததோ அந்த நிலைக்கு செல்வது. சமாதி என்றால் ஏதோ இறந்த பின் புதைக்கும் இடம் அல்ல. ஆதி நிலைக்கு சமமமாக மனதை கொண்டு செல்வது. 


எனவே எண்வகை உறுப்புகள் என்பன

1.  இயமம்

2. நியமம்

3. ஆசனம் 

4. பிரணாயாமம் 

5. பிரத்தியாகாரம் 

6. தாரணை 

7. தியானம் 

8.  சமாதி 


இங்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 


நான் மேலே சொன்னது மிக மிக எளிமையான, புரிந்து கொள்ள வேண்டி சொன்னது.  யோகம் என்பது மிக மிக ஆழமான விடயம். நீங்கள் வலை தளத்தில் தேடினால் கோடிக் கணக்கான இணைய தளங்கள் கிடைக்கும். 


படித்துப் பாருங்கள்.   


இது ஒரு எளிய முன்னோட்டம். அவ்வளவே. 


இதில், ஒவ்வொன்றிலும் பலப் பல பிரிவுகள் உண்டு. ஆசனம் என்றால் அதில் பலவிதமான ஆசனம்.  தாரணை, தியானம் என்று ஒவ்வொன்றிலும் பல பிரிவுகள் உண்டு. 


யோக சாத்திரம் என்பது கடல் போன்றது.  பல வருடங்கள் பயில வேண்டிய ஒன்று. 


ஒரு ப்ளாகில் அடங்கும் விடயம் அல்ல. 


இதை ஒரு எளிய முன்னுரையாகக் கொண்டு, ஆர்வம் இருப்பின், மேலே தொடருங்கள். 


குருவருள் இருப்பின், யோக சித்திகள் கை கூடும். 


இந்த யோக பயிற்சி செய்து வீடு பேறு அடைவதை செயற்கரிய செயல் என்று வள்ளுவர் கூறுவதாக பரிமேலழகர் கூறுகிறார். 


ஐயன் ஒரு வரியில் கூறி விட்டுப் போய் விட்டார். அதை முழுவதுமாக தெரிந்து கொள்ள ஒரு ஆயுட்காலம் ஆகும். 


செயற்கரிய செயல் தான். 






இந்த நான்கையும் பற்றி நாளை சிந்திப்போம்.





இதன் முதல் பகுதியை கீழே காணலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_9.html



இதன் இரண்டாம்  பகுதியை கீழே காணலாம் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_10.html


Monday, May 10, 2021

நல்வழி - இரை தேடும் போது இறையும் தேடு

நல்வழி  - இரை தேடும் போது இறையும் தேடு 


அரிதற்கு அரிதான இந்த மானிடப் பிறவியை பெற்றும், அதை நல்ல வழியில் பயன் படுத்தாமல் செல்வம் சேர்பதிலேயே செலவிடுகிறோம். கடைசியில் சேர்த்த செல்வம் அனைத்தையும் அனுபவிப்பதும் கிடையாது. ஏதோ வங்கியில், ஏதோ ஒரு நிறுவனத்தின் பங்குகளில், ஏதோ வங்கி லாக்கரில் கிடக்கும். அருமையான வாழ்வை இதற்காகவா செலவிடுவது என்று கேட்கிறாள் ஔவை. 


பாடல் 


 சேவித்துஞ் சென்றிரந்துந் தெண்ணீர்க் கடல்கடந்தும்

    பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம்

    பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்

    நாழி அரிசிக்கே நாம்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_10.html


(please click the above link to continue reading)


சேவித்துஞ்  = கும்பிடு போட்டு 

சென்றிரந்துந் = சென்று பிச்சை பெற்று.  பிச்சை என்றால் தெருவில்தான் எடுக்க வேண்டும் என்று அல்ல. பதவி உயர்வு வேண்டி, சம்பள உயர்வு வேண்டி நிற்பதும் பிச்சை தான். 


தெண்ணீர்க் கடல்கடந்தும் = நாடு விட்டு நாடு சென்றும் 


பாவித்தும் = ஒன்றும் இல்லாதவனை பெரிய ஆள் என பாவித்தும் 


பாராண்டும் = நாட்டை / நிறுவனத்தை  ஆண்டும் 


பாட்டிசைத்தும் = செல்வர்களை, உயர் அதிகாரிகளை புகழ்ந்து பாடியும் (இன்றைய மொழியில் சொல்வது என்றால் ஜால்ரா போட்டும்) 


போவிப்பம் = செலவழிக்கின்றோம் 


பாழின் உடம்பை = அழியும் இந்த உடம்பை 


வயிற்றின் கொடுமையால் = பசியின் கொடுமையால் 


நாழி அரிசிக்கே நாம் = ஒரு நாழி அரிசிக்கே நாம் 


அரிசி என்றால் அரிசியோடு முடிவது அல்ல. 


அரிசி, காய் கறி, பழம், பால் தயிர், மோர், அதை வைக்கும் பாத்திரம், அதை  வைக்கும் வீடு, வேண்டும் போது அவற்றை வாங்க செல்வம் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். வெண்பாவில் எல்லாவற்றையும் சொல்ல முடியாது. 


சாப்பாடு, பொருள் தேடல் இது மட்டும்தானா வாழ்க்கை. 


விலங்குகள் கூடத்தான் இரை தேடுகின்றன, கூடு கட்டிக் கொள்கின்றன, இன விருத்தி செய்கின்றன, எதிர் காலத்துக்கு சேமித்து வைக்கின்றன. 


இரையோடு கொஞ்சம் இறையும் தேடுவோம். 




திருக்குறள் - பெரியரும் சிறியரும் - பாகம் 2

 

திருக்குறள் - பெரியரும் சிறியரும் - பாகம் 2


நீத்தார் பெருமை சொல்லிக் கொண்டு வந்த வள்ளுவர், நீத்தார் செயற்கரிய செய்வார் என்றும் மற்றவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்றும் கூறுகிறார். 


பாடல் 


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_10.html


(please click the above link to continue reading)


செயற்கரிய = செய்வதற்கு கடினமான 


செய்வார் = (செயல்களை) செய்வார் 


பெரியர் = பெரியவர்கள் 


சிறியர் = சிறியர் 


செயற்கரிய = செய்வதற்கு கடினமான செயல்களை 


செய்கலா தார் = செய்ய மாட்டார்கள் 


அரிய செயல்கள் என்று பரிமேலழகர் கூறுவது "இயமம், நியமம் முதலிய எண்வகை யோக உறுப்புகளை "


யோகம் என்றால் என்ன ? அது என்ன எண்வகை ?


யோகம் என்றால் இணைப்பது. 


எதோடு எதை இணைப்பது ? மனதையும், உடலையும் இணைப்பது.  அதை ஏன் இணைக்க வேண்டும்? இணைப்பதால் என்ன பலன்? இணைக்காவிட்டால் என்ன நிகழும் என்பது பற்றி அறிய யோக சூத்திரம் முழுவதும் படிக்க வேண்டும். 


இங்கு எட்டு யோக உறுப்புகளை பார்ப்போம். 


பதஞ்சலி எழுதிய யோக சூத்திரத்தில் யோகத்தை எட்டு அங்கங்களாக பிரிக்கிறார். 


முதல் நாலு பிரிவுகள் யோகம் செய்வதிற்கான ஆயத்த நிலைகள். இரண்டாவது நாலு பிரிவுகள் தான் யோகம் பற்றியவை. 


இவற்றைப் பார்ப்பதற்கு முன்னால், யோகம் பற்றிய சில சிந்தனைகளை நாம் சரி செய்து கொள்ள வேண்டும். 


யோகம் என்பது ஏதோ உடற் பயிற்சி அல்ல. இன்று யோகா என்பது ஏதோ உடல் பயிற்சி என்று ஆகிவிட்டது. அந்த யோகா, இந்த யோகா  என்று பலவிதமான யோகா நிலையங்கள் வந்து விட்டன. டிவி யிலும் பல யோகா பயிற்சிகள் சொல்லித் தருகிறார்கள். 


இது எல்லாம் ஆசனம் என்ற ஒரு பகுதி மட்டும் தான்.  மிஞ்சி மிஞ்சி போனால் பிரணாயாமம் கூட சேரலாம். அது இரண்டு மட்டுமே யோகம் அல்ல. 


அஷ்டாங்க யோகம் பற்றி சிந்திப்போம். 


முதல் நான்கு அங்கங்கள்:


இயமம்

நியமம் 

ஆசனம் 

பிரணாயாமம் 


இயமம் என்றால் விலக்கியன ஒழிதல். அதாவது எந்த தீய ஒழுக்கங்களை விலக்க வேண்டும் என்று உயர்ந்தவர்களும், உயர்ந்த நூல்களும் கூறுகின்றனவோ அவற்றை விலக்க வேண்டும். 


உதாரணமாக புகை பிடிப்பது, மது அருந்துவது, கொலை, களவு, போன்றவை.   யோகாசனம் ஒரு மணி நேரம் செய்து விட்டு பின் வெளியே வந்து புகை பிடிப்பது சரி அல்ல. 


யோகாசானத்தின் முதல் அங்கம், தீயவற்றை விட்டு விலகுவது. அதிகம் உண்பது, போதை தரும் பொருள்களை விடுவது,  சோம்பேறித்தனம், பொறாமை,கோபம் போன்றவற்றை விடுவது. இதற்கே ஒரு வாழ்நாள் போய்விடும் போல் இருக்கிறது. 


நியமம் என்பது நல்ல நூல்களில், உயர்ந்தவர்கள் கூறியவற்றை கடைபிடிப்பது. முதலில் தீயவற்றை விலக்குவது. பின் நல்லவற்றை கடைபிடிப்பது. தீய பழக்கங்களை விடாமல் நல்ல பழக்கங்களை கைக் கொள்ள முடியாது. 


மூன்றாவது, ஆசனம்.  ஆசனம் என்பது உடலை சம நிலைப் படுத்துவது. எந்த வேலை  செய்ய வேண்டும் என்றாலும், உடல் ஒத்துழைக்க வேண்டும். உடல் களைத்தால், வேலை நின்று விடும். யோக முயற்சி என்பது நீண்ட கால முயற்சி. அதற்கு உடல் நல்ல நிலையில் இருக்க வேண்டும். அதற்கு ஆசனம் பழக வேண்டும். 


நான்காவது, பிராணாயாமம். உடல் சம நிலை பட்டுவிட்டால், அடுத்து மூச்சு சமநிலை படவேண்டும்.  மூச்சு நிதானமானால், மன நிலை சமப்படும். 


மனதை கட்டுப் படுத்த வேண்டும் என்றால், மூச்சு சமப் படவேண்டும். மூச்சு சமப் பட வேண்டும் என்றால், உடல் சமப் படவேண்டும். அதற்கு நியமும், இயமும் வேண்டும். 


இந்த நான்கு அங்கங்களையும் கடந்த பின்னால்தான் உண்மையான யோக முயற்சிகள் தொடரும். 


அடுத்த நான்கு  அங்கங்கள் 


பிரத்தியாகாரம் 

தாரண

தியானம் 

சமாதி 


இந்த நான்கையும் பற்றி நாளை சிந்திப்போம்.





இதன் முதல் பகுதியை கீழே காணலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_9.html


Sunday, May 9, 2021

திருக்குறள் - பெரியரும் சிறியரும் - பாகம் 1

திருக்குறள் - பெரியரும் சிறியரும் - பாகம் 1 


நீத்தார் பெருமை சொல்லிக் கொண்டு வந்த வள்ளுவர், நீத்தார் செயற்கரிய செய்வார் என்றும் மற்றவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்றும் கூறுகிறார். 


பாடல் 


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_9.html


(please click the above link to continue reading)


செயற்கரிய = செய்வதற்கு கடினமான 


செய்வார் = (செயல்களை) செய்வார் 


பெரியர் = பெரியவர்கள் 


சிறியர் = சிறியர் 


செயற்கரிய = செய்வதற்கு கடினமான செயல்களை 


செய்கலா தார் = செய்ய மாட்டார்கள் 


இதில் செயற்கரிய செயல், அது அல்லாத செயல் என்ன என்று வள்ளுவர் சொல்லவில்லை.  யாரிடம் போய் கேட்பது? எப்படி அறிந்து கொள்வது?


இமயமலை மேல் ஏறுவது செயற்கரிய செயல்தான். எல்லோராலும் முடியாது. அதற்காக அங்கு ஏறியவர்கள் எல்லோரும் பெரியர் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?



பல கோடி சொத்து சேர்ப்பது,  பந்தயங்களில் தங்கப் பதக்கம் வாங்குவது எல்லாம் அரிய செயல் தான்.  பணக்கார்கள் எல்லோரும் பெரியவர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?



வீட்டு வேலை செய்வது,  பிள்ளைகளை பார்த்துக் கொள்வது எல்லோரும் செய்வதுதான். அதற்காக அதை செய்பவர்களை சிறியர் என்று கூற முடியுமா? 



சிக்கல்தானே. 


பரிமேலழகர் இல்லை என்றால் இந்த சிக்கலை நம்மால் விடுவிக்கவே முடியாது. 


அவர் உரையில், 


"செயற்கு அரிய ஆவன, இயமம்,நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புகள். 


செயற்கு எளிய ஆவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறி வழிகளால் புலன்களில் செலுத்தலும், வெஃகலும், வெகுள்தலும் முதலாயின. "


என்று குறிப்பிடுகிறார். 


அதாவது யோகம் செய்வது அரிய செயல் என்றும், புலன்களை பொறிகள் செல்லும் வழியில் செல்ல விடுதலும் சிறியர் செய்யும் செயல் என்கிறார். 


சிறியர் செயல் நமக்குப் புரிகிறது. 


சாப்பிடவேண்டும் என்று நினைத்தால் சாப்பிடுவது.  முன்பு எப்போது உண்டோம், எவ்வளவு உண்டோம், அது ஜீரணம் ஆகி இருக்குமா என்றெல்லாம் யோசிப்பது கிடையாது.  உணவைப் பார்த்தவுடன் ஒரு ஆசை. நாக்கில் எச்சில் ஊறுகிறது. உண்ணத் தலைப்படுகிறோம்.  


ஒவ்வொரு ஆசையும் அப்படியே யோசித்துக் கொள்ளுங்கள். 


அது என்ன இயமம், நியமம் என்ற  எண்வகை யோக உறுப்புகள் ? அவற்றை செய்வது அவ்வளவு கடினமா? அவற்றை செய்தால் என்ன கிடைக்கும்  ? 


எண்வகை யோக உறுப்புகளை நாளை சிந்திப்போம். அது சற்றே பெரிய தலைப்பு என்பதால், அதற்கென்று ஒரு ப்ளாக் இருப்பது நலம். 

Saturday, May 8, 2021

நல்வழி - இட்டு உண்டு இரும்

நல்வழி - இட்டு உண்டு இரும் 


கோவிட் வைரஸ் நாளும் வேகமாக பரவிக் கொண்டே இருக்கிறது.  இறப்பும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. 


அங்கொன்றும் இங்கொன்றுமாக யாரோ இறந்தார்கள் என்று கேள்விப் பட்டது போக, அந்த துக்கச் செய்தி நமக்கு அருகில் வந்து கொண்டே இருக்கிறது. அங்கே ஒரு நண்பர், இங்கே ஒரு உறவினர் என்று நமக்கு அருகில் வருகிறது. 


நம்மைச் சார்ந்தவர்கள் நம்மை விட்டுப் போகும் போது, அது செய்தி அல்ல. துக்கம் நெஞ்சை அறுக்கிறது. 


என்ன ஆறுதல் சொல்ல முடியும்?  ஈடு செய்ய முடியாத இழப்புகள் அல்லவா அவை. 


உடல் தளர்ந்து, மனம் தளர்ந்து போய் இருக்கும் அந்த சமயத்தில் ஔவை வாழ்வின் உண்மையை சொல்லிவிட்டுப் போகிறாள். 


உண்மை மட்டும் தான் நம்மை துக்கத்தில் இருந்து காக்கும். 


சத்தியத்திற்கு ஒரு பலம் இருக்கிறது. 


"எத்தனை வருடம் அழுது புரண்டாலும், இறந்து போனவர்கள் திரும்பி வரப் போவது இல்லை.  நாம் துக்கப் படுவது, அழுவதும் ஏதோ நமக்கு அது வராது என்ற நினைப்பில். நமக்கும் அதே வழிதான்.  இருக்கும் வரை, இதுக்கும் நமக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை பசித்தவருக்கு கொஞ்சம் உணவு அளித்து, நீங்களும் உண்டு, அமைதியாக இருங்கள்"


என்கிறாள். 


பாடல் 




ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்

    மாண்டார் வருவரோ மாநிலத்தீர்-வேண்டா

    நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்

    எமக்கென்னென் றிட்டுண் டிரும்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_56.html


(please click the above link to continue reading)


ஆண்டாண்டு தோறும்  = பலப் பல ஆண்டுகளாக 

அழுது புரண்டாலும் = அழுது புரண்டாலும் 

மாண்டார் = இறந்தவர்கள் 

வருவரோ = திரும்பி உயிரோடு வருவார்களா?  மாட்டார்கள் 

மாநிலத்தீர் = இந்த பெரிய உலகில் உள்ளவர்களே 

வேண்டா = அழ வேண்டாம் 

நமக்கும் = நமக்கும் 

அதுவழியே = அது தான் வழி 

நாம்போம் அளவும் = நாம் போகிற வரை 


எமக்கென்னென் றிட்டுண் டிரும். = எமக்கு என்ன என்று இட்டு உண்டு இரும்.


நம்மால் ஆவது என்ன ? ஒன்றும் இல்லை என்று உணர்ந்து, நாலு பேருக்கு பசிக்கு அன்னம் இட்டு, நீங்களும் உண்டு, பேசாமல் அமைதியாக இருங்கள் என்கிறாள். 


துக்கத்தை போக்க, அதையே நினைத்துக் கொண்டு இருக்காமல், மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்கிறாள் ஔவை. 


இது என்ன புதுசா இருக்கே. நாமே துக்கத்தில் இருக்கிறோம். நாம் எங்கிருந்து மற்றவர்களுக்கு  உதவி செய்வது? என்று நம் மனதில் கேள்வி எழலாம். 


நாம் துக்கத்தில் இருக்கும் போது, நம்மை விட பெரிய துக்கத்தில் இருப்பவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு உதவி செய்வதன் மூலம், நம்மை அறியாமலேயே நமக்குள் ஒரு தைரியம் பிறக்கும். நம்மால் இந்த நிலையில் கூட மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும் என்ற தைரியமும் தன்னம்பிக்கையும் துக்கத்தை விரட்டி அடிக்கும். 


மேலும், துக்கம் யாருக்குத்தான் இல்லை. எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் துக்கம் இருக்கிறது என்ற யதார்த்தம் மனதில் படும். ஏதோ நமக்கு மட்டும் வந்து விடவில்லை ...இது எல்லோருக்கும் வரும் ஒன்று தான் என்ற எண்ணம் மனதை கொஞ்சம் மென்மை படுத்தும். 


கிழவி சொல்கிறாள். தப்பாவா இருக்கும்?




திருக்குறள் - நீத்தார் பெருமை - இந்திரனே சாலும் கரி

 திருக்குறள் - நீத்தார் பெருமை - இந்திரனே சாலும் கரி 


ஐந்து பபுலன்களின் வழி செல்லும் ஆசைகளை நீத்தவனின் பெருமைக்கு இந்திரனே சாட்சி என்கிறார் வள்ளுவர். 


குறளுக்குள் போவதற்கு முன், ஒரு சில விடயங்களை புரிந்து கொள்வது நலம். 


இந்து சமயத்தில் எல்லாவற்றிற்கும் ஒரு கடவுள் உண்டு என்று வைத்து இருக்கிறோம்.  காற்று என்றால் அதற்கு ஒரு கடவுள் (வாயு பகவான்); தீ என்றால் அதற்கு ஒரு கடவுள் (அக்னி பகவான்) என்று எல்லாவற்றிற்கும் ஒரு கடவுள். அதே போல் சந்திரன் என்றால் ஒரு கடவுள், சூரியன் என்றால் ஒரு கடவுள். 



இது என்ன ஒரு அறிவு சார்ந்த விடயமாகத் தெரியவில்லையே. ஏதோ அறிவு குறைந்த அந்த நாட்களில் எழுதி இருப்பார்களோ? அதையே இன்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்களோ? 



இன்று சந்திரனுக்கு ராக்கெட் எல்லாம் அனுப்பி, ஆட்கள் அங்கே இறங்கி விட்டார்கள். இன்னும், அதை ஒரு சந்திர பகவான் என்று சொல்லுவது சரியா?



நம்மவர்கள் எந்த ஒரு பொருளுக்கும் இரண்டு வடிவம் உண்டு என்று நம்பினார்கள். ஒன்று தூல வடிவம். இன்னொன்று சூக்கும வடிவம். வடிவம் என்றால் ஒரு குறியீடு. 



நான் ஐந்து வயதாக இருக்கும் போது ஒரு மாதிரி இருந்தேன். ஐம்பது வயதில் வேறு மாதிரி இருக்கிறேன். ஆனால் இரண்டும் நான் தான். எப்படி? என் புகைப் படத்தை பார்த்தால் எனக்கே சந்தேகம் வருகிறது அது நான் தானா என்று.  



தூல வடிவம் மாறிக் கொண்டே வருகிறது. உயரம் கூடும், முகம் மாறும், முடி நரைக்கும், பல் விழும், தோல் சுருங்கும், குரல் மாறும். ஆனாலும், இவற்றிற்கு எல்லாம் அடிப்படையில் மாறாத "நான்" என்று ஒன்று இருக்கிறது அல்லவா? அது சூக்கும வடிவம். அது கண்ணுக்குப் புலப்படாத வடிவம். 



அந்த சூக்கும வடிவத்தைத் தான் நம்மவர்கள் தேவர்கள்/கடவுள்கள் என்று வழிப்பட்டார்கள். 



இன்றும் கூட, கடவுள் கோட்பாட்டை நம்பாதவர்கள் கூட தங்கள் முன்னவர்களின் சமாதியில் சென்று வழி படுகிறார்கள், பூ தூவுகிறார்கள். காரணம் என்ன? அந்த சமாதியின் சிமெண்டும், கல்லும், ஜல்லியும், வணக்கத்துக்கு உரியன என்பதலா? இல்லை. சமாதி தூல வடிவம். உள்ளே இருப்பதாக நம்பும் முன்னோர் சூக்கும வடிவம்.  சமாதியை வழிபடுவது அல்ல.



போட்டோ தூல வடிவம். அதில் உள்ளவர் சூக்கும வடிவம். 


அதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 


இப்படி பல தேவுக்கள் இருக்கிறார்கள். வருணன், அக்னி, வாயு என்று. இவர்களுக்கு எல்லாம் தலைவன் இந்திரன். 


சாதாரண மானிடர்கள் இந்த தேவுக்களை வழிபாடு செய்வார்கள். அக்னி வழிபாடு, சூரிய நமஸ்காரம் என்று. 


நாம் இவர்களை வழிபடுகிறோம். அவர்கள் இந்திரனை வழி படுகிறார்கள். அப்பேற்பட்ட இந்திரன் ஐந்து புலன்களையும் வென்ற ஒரு முனிவனிடம் சாபம் பெற்று நின்றான் என்றால் அந்த புலன்களை வென்ற முனிவர்களின் சக்திக்கு அவனே தான் சான்று?


அகலிகை என்ற முனி பத்தினியை இந்திரன் விரும்ப, அவளை தகாத முறையில் அடைய முயற்சி செய்கிறான். அவன் கபட நாடகத்தை அறிந்த கௌதமர், இந்திரனை சபித்து விடுகிறார். அது கதை. புராணம். 


புலனடக்கம் இல்லாததால் இந்திரன் சாபம் பெற்றான். 


புலனடக்கம் இருந்ததால் அந்த முனிவர் இந்திரனுக்கே சாபம் கொடுத்தார்.


எனவே, புலன் அடக்கத்தின் பெருமைக்கு இந்திரனே சாட்சி என்கிறார். 


இனி, குறளைப் பார்ப்போம். 


பாடல் 


ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_8.html


(please click the above link to continue reading)


ஐந்தவித்தான் = ஐந்து புலன்கள் வழி செல்லும் ஆசைகளை அறுத்தவன் 


ஆற்றல் = அவனுடைய ஆற்றல் 


அகல்விசும்பு ளார் = பெரிய வானத்தில் இருக்கும் தேவர்களின் 


கோமான் = அரசன் 


இந்திரனே = இந்திரனே 


சாலுங் கரி = அமையும் சான்று. கரி என்றால் சான்று. நிரூபணம். 




Friday, May 7, 2021

நல்வழி - துஞ்சுவதே மாந்தர் தொழில்

 நல்வழி - துஞ்சுவதே மாந்தர் தொழில்


சில சமயம் நாம் எவ்வளவோ முயன்றாலும் நம் முயற்சி பயனற்று போய் விடுவது உண்டு. அதே சமயம் சிலபேரை பார்க்கிறோம். அவன் என்ன செய்தாலும் அதில் வெற்றி வருகிறது. 


குருட்டாம்போக்கில் ஏதோ செய்வான், பணம் அள்ளிக் கொண்டு வரும். ரொம்ப முயற்சி செய்யாமலேயே நல்ல இடத்தில் பிள்ளைகளுக்கு வரன் அமையும், வேலையில் பணி உயர்வு கிடைக்கும், நல்ல மதிப்பும் மரியாதையும் அவனுக்கு கிடைக்கும் .


நமக்கோ, கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணம் கூட ஏதோ ஒரு வழியில் தேவை இல்லாமல் விரயம் ஆகும். பிள்ளைக்கு ஒரு மதிப்பெண்ணில் நல்ல ஒரு கல்லூரியில் இடம் கிடைக்காமல் போய் விடும். 


இதற்கு என்ன செய்வது?


இதை எப்படி புரிந்து கொள்வது. 


நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போனது ஒரு பக்கம். தகுதி இல்லாதவனுக்கு எல்லாம் கிடைப்பது மறு பக்கம். 


கோபமும், எரிச்சலும், பொறாமையும், வெறுப்பும் வரும் அல்லவா?


இது என்ன வாழ்க்கை? இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் என்ற சலிப்பு வரும் அல்லவா?


இதுவரை இந்த பிரச்னைக்கு ஒரு தெளிவான, அறிவியல் பூர்வமான தீர்வு இல்லை. 


ஔவை, தன் அனுபவத்தில் கூறுகிறாள். 


"என்ன தான் வருந்தி முயற்சி செய்தாலும், எது நமக்கு இல்லையோ அது நம்மிடம் வராது. சரி, வேண்டாம், போதும், போ என்று சொன்னாலும் சில சமயம் போகாது. இது எல்லாம் விதிப்படி நடக்கும். அதை நம்பாமல் இவற்றை எல்லாம் நெடுக நினைத்து நெஞ்சம் புண்ணாகி இறுதியில் வருத்தத்தில் இறந்து போவதே இந்த மக்களின் தொழிலாக இருக்கிறது"


பாடல் 


வருந்தி அழைத்தாலும் வாராத வாரா

பொருந்துவன போமினென்றாற் போகா-இருந்தேங்கி

நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து

துஞ்சுவதே மாந்தர் தொழில்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_7.html

(please click the above link to continue reading)


வருந்தி = கஷ்டப்பட்டு 


அழைத்தாலும் = கூப்பிட்டாலும் 


வாராத = எது நமக்கென்று இல்லையோ 


வாரா = அவை நம்மிடம் வராது 


பொருந்துவன = எது நமக்கென்று விதித்து இருக்கிறதோ 


போமினென்றாற் = அவற்றை போ என்று சொன்னாலும் 


போகா = போகாது 


இருந்தேங்கி = இருந்து ஏங்கி 


நெஞ்சம் = நெஞ்சம் 


புண்ணாக  = புண் ஆகும் படி 


நெடுந்தூரந் தாம் நினைந்து = நீண்ட நாட்களாக அவற்றை எண்ணி 


துஞ்சுவதே = பின் அந்த வருத்தத்திலேயே இறந்து போவது தான் 


மாந்தர் தொழில். = மனிதர்களின் வேலையாக இருக்கிறது 


நல்லதோ, கெட்டதோ - நமக்கு எது விதித்து இருக்கிறதோ அது நம்மை வந்து அடைந்தே சேரும். எது நமக்கு இல்லையோ அவை என்ன பாடு பட்டாலும் நம்மை வந்து சேராது. 


சரியான துணை அமையவில்லை. விட்டு விடலாம் என்றாலும் முடியாது. போ என்றால் போகாது. நோய் வந்து விட்டது.  மருந்து மாத்திரை என்று என்ன செய்தாலும், போகின்ற காலம் அல்லது போகாது. இருந்து படுத்திவிட்டுத் தான் போகும். 


இனிமேலாவது நல்லது வேண்டும், துன்பம் வேண்டாம் என்றால், நல்லது செய்ய வேண்டும். 


விதைப்பதைத் தானே அறுக்க முடியும். 


வெண்டை விதைத்து விட்டு கத்தரி அறுக்க நினைக்கலாமா?