Friday, May 14, 2021

இராமானுசர் நூற்று அந்தாதி - அரண் யார் ?

இராமானுசர் நூற்று அந்தாதி - அரண் யார் ?


எத்தனையோ சமய பெரியவர்கள் தோன்றி இருக்கிறார்கள். மக்கள் உய்த்தேற உபதேசம் செய்து இருக்கிறார்கள். நல் வழி காட்டி இருக்கிறார்கள். அறம் போதித்து இருக்கிறார்கள். 


அப்படி செய்ததால் அவர்களுக்கு பாவம் வரும், அவர்கள் வீடு பேறு பெற முடியாது என்று யாரும் சொல்லாவில்லை. அப்படி சொன்ன பின்னும், எனக்கு தீங்கு வந்தாலும் பரவாயில்லை, மக்களுக்கு நன்மை வந்தால் போதும் என்று தான் அறிந்த உண்மையை உலகுக்குச் சொன்னவர் இராமானுசர். 


இறைவனை தொழுவதும், அவன் நாமத்தை சொல்வதற்கும் உங்களுக்கு உரிமை இல்லை, நீங்கள் அப்படி செய்தால் பாவம் என்று சொல்லி வந்த போது, அப்படி அல்ல, வாருங்கள், நீங்களும் இறைவனின் திருவடியை தொழலாம், நீங்களும் இறைவனின் பிள்ளைகள் தான் என்று அனைவரையும் ஒன்று சேர்த்தவர் இராமானுஜர். 


அவர் மட்டும் இல்லை என்றால், அந்தப் பாவப்பட்ட மக்களுக்கு யார் காவல் என்று கேட்கிறார் திருவரங்கத்து அமுதனார்.


பாடல் 

 

சரணம் அடைந்த தருமனுக்காப்,பண்டு நூற்றுவரை

மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்கவைத்த

கரண வையுமக் கன்றென்றி ராமா னுசனுயிர்கட்கு

அரணங் கமைத்தில னேல்,அர ணார்மற்றிவ் வாருயிர்க்கே?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_14.html


(please click the above link to continue reading)


சரணம் அடைந்த = சரணம் அடைந்த 


தருமனுக்காப் = தருமன் முதலிய பஞ்ச பாண்டவர்களுக்காக 


பண்டு = முன்பு 


நூற்றுவரை = கௌரவர்களை 


மரணம் அடைவித்த = மரணம் அடையச் செய்த 


மாயவன் தன்னை = திருமால் தன்னை 


வணங்க வைத்த = வணங்க வைத்த 


கரணவையு = கரணம் இவை  (கரணம் என்றால் உறுப்புகள். வணங்கும் தலை, கூப்பும் கைகள்) 


உமக் கன்று = உமக்கு அன்று 


என்று = என்று 


இ ராமா னுசன் = இராமானுசன் 


உயிர்கட்கு = உயிர்களுக்கு 


அரணங் கமைத்தில னேல் = அரண் அங்கு அமைத்திலனேல் = அரணம் அமைக்கவில்லை என்றால் 


அர ணார் = அரண் ஆர் 


மற்றிவ் வாருயிர்க்கே? = மற்று இவ் ஆருயிற்கே ?


குறிப்பிட்ட மக்கள் மட்டும்தான் இறைவனை தொழ முடியும்; வீடு பேறு அடைய முடியும் என்று சொல்லி வந்த காலத்தில், அப்படி அல்ல  எல்லோரும் இறைவனை தொழ முடியும் என்று "வான் கருணை" யை வியந்து பாராட்டுகிறார் திருவரங்கத்து அமுதனார். 



No comments:

Post a Comment