Monday, May 10, 2021

நல்வழி - இரை தேடும் போது இறையும் தேடு

நல்வழி  - இரை தேடும் போது இறையும் தேடு 


அரிதற்கு அரிதான இந்த மானிடப் பிறவியை பெற்றும், அதை நல்ல வழியில் பயன் படுத்தாமல் செல்வம் சேர்பதிலேயே செலவிடுகிறோம். கடைசியில் சேர்த்த செல்வம் அனைத்தையும் அனுபவிப்பதும் கிடையாது. ஏதோ வங்கியில், ஏதோ ஒரு நிறுவனத்தின் பங்குகளில், ஏதோ வங்கி லாக்கரில் கிடக்கும். அருமையான வாழ்வை இதற்காகவா செலவிடுவது என்று கேட்கிறாள் ஔவை. 


பாடல் 


 சேவித்துஞ் சென்றிரந்துந் தெண்ணீர்க் கடல்கடந்தும்

    பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம்

    பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்

    நாழி அரிசிக்கே நாம்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_10.html


(please click the above link to continue reading)


சேவித்துஞ்  = கும்பிடு போட்டு 

சென்றிரந்துந் = சென்று பிச்சை பெற்று.  பிச்சை என்றால் தெருவில்தான் எடுக்க வேண்டும் என்று அல்ல. பதவி உயர்வு வேண்டி, சம்பள உயர்வு வேண்டி நிற்பதும் பிச்சை தான். 


தெண்ணீர்க் கடல்கடந்தும் = நாடு விட்டு நாடு சென்றும் 


பாவித்தும் = ஒன்றும் இல்லாதவனை பெரிய ஆள் என பாவித்தும் 


பாராண்டும் = நாட்டை / நிறுவனத்தை  ஆண்டும் 


பாட்டிசைத்தும் = செல்வர்களை, உயர் அதிகாரிகளை புகழ்ந்து பாடியும் (இன்றைய மொழியில் சொல்வது என்றால் ஜால்ரா போட்டும்) 


போவிப்பம் = செலவழிக்கின்றோம் 


பாழின் உடம்பை = அழியும் இந்த உடம்பை 


வயிற்றின் கொடுமையால் = பசியின் கொடுமையால் 


நாழி அரிசிக்கே நாம் = ஒரு நாழி அரிசிக்கே நாம் 


அரிசி என்றால் அரிசியோடு முடிவது அல்ல. 


அரிசி, காய் கறி, பழம், பால் தயிர், மோர், அதை வைக்கும் பாத்திரம், அதை  வைக்கும் வீடு, வேண்டும் போது அவற்றை வாங்க செல்வம் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். வெண்பாவில் எல்லாவற்றையும் சொல்ல முடியாது. 


சாப்பாடு, பொருள் தேடல் இது மட்டும்தானா வாழ்க்கை. 


விலங்குகள் கூடத்தான் இரை தேடுகின்றன, கூடு கட்டிக் கொள்கின்றன, இன விருத்தி செய்கின்றன, எதிர் காலத்துக்கு சேமித்து வைக்கின்றன. 


இரையோடு கொஞ்சம் இறையும் தேடுவோம். 




No comments:

Post a Comment