Monday, May 17, 2021

இராமானுசர் நூற்றந்தாதி - என் பெய்வினை

இராமானுசர் நூற்றந்தாதி - என் பெய்வினை 


தர்மத்தை பசுவுக்கு ஒப்பிட்டுச் சொல்லும் போது, அந்த பசு கிருத  யுகத்தில் நான்கு கால்களில் நின்றதும் என்றும், திரேதா யுகத்தில் மூன்று கால்களில் நின்றதும் என்றும், துவாபர யுகத்தில் இரண்டு கால்களில் நின்றது என்றும், இப்போது கலி காலத்தில் ஒரு காலில் நிற்கிறது என்றும் சொல்லுவார்கள். 


பசு, கால் என்பதெல்லாம் ஒரு குறியீடு. அதாவது, தர்மம் தன் நிலை இழக்கும் என்பது அர்த்தம். ஒரு காலில் ஒரு பசு எவ்வாறு உறுதியாக நிற்க முடியும். 


கலி காலத்தில் அறம் தேய்ந்து, மறம் ஓங்கி நிற்கும். கலியின் ஆதிக்கம் ஓங்க ஓங்க, நாட்டில் அநீதியும், அதர்மமும் தலையெடுக்கும். 


யார் இதை தடுத்து நிறுத்துவது? அறத்தை யார் எடுத்துச் சொல்வது? மக்களை யார் நல் வழிப் படுத்துவது ? 


அவ்வப்போது பெரியவர்கள் தோன்றி அறத்தை உபதேசித்து மக்களை நல் வழிப் படுத்துகிறார்கள். 


அப்படி தோன்றிய பெரியவர்களில் ஒருவர் இராமானுஜர். 


அவர் தன்னுடைய தவ வலிமையால், இந்த பூமியை பீடித்த கலியை வென்று வீழ்த்தினார். அப்படி செய்த பின்னும், இந்த உலகம் ஒளி பெற்று விளங்கவில்லை. காரணம், கலியின் கொடுமை தணிந்தாலும், நாம் செய்த வினைகளின் பலன் நம்மை விட்டுப் போகாது. இராமானுஜர் அதையும் விடவில்லை. கலியின் கொடுமையை அழித்த அவருக்கு நம் வினையின் தொகுதியை அழிப்பது என்ன பெரிய காரியமா? அதையும் அழித்தார் அவர். அவர் பெருமை சொல்லவும் முடியுமோ என்கிறார் திருவரங்கத்து அமுதனார்.


பாடல்  


நிலத்தைச்  செறுத்துண்ணும்  நீசக் கலியை,  நினைப்ப‌ரிய- 

ப‌லத்தைச் செறுத்தும் பிறங்கியதில்லை,  என் பெய்வினைதென்- 

புலத்தில் பொறித்த அப்புத்தகச் சும்மை பொறுக்கியபின்* 

நலத்தைப் பொறுத்தது*  இராமானுசன் தன் நயப்புகழே


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_17.html


(please click the above link to continue reading)


நிலத்தைச் = பூமியை 

செறுத்துண்ணும் = கோபித்து அழிக்கும் 

நீசக் கலியை = மோசமான கலியின் 

நினைப்ப‌ரிய = நினைபதற்கு முடியாத பெரிய 

ப‌லத்தைச்  = பலத்தை 

செறுத்தும் = அடக்கியும் 

பிறங்கியதில்லை =இந்த உலகம் ஒளி விடவில்லை 

 என் = என்னுடைய் 

பெய்வினை = பெய் வினைகள் 

தென் புலத்தில் = தெற்கு திசையில் 

பொறித்த = எழுதப்பட்ட 

அப்புத்தகச் சும்மை = அந்த புத்தகத்தை 

பொறுக்கியபின் = எடுத்து மாறிய பின்  

நலத்தைப் பொறுத்தது = நலத்தை தருவது 

இராமானுசன் தன் நயப்புகழே = இராமானுசன் தன் நவிலக் கூடிய புகழே 


பெய் வினை: அதாவது, வினைகளை ஒவ்வொன்றாக செய்யவில்லையாம். 

மழை பெய்வது போல மொத்த வினையும் ஒன்றாக செய்து விட்டாராம். அவ்வளவு வினைகள ஒன்றாகச் செய்து விட்டால், எப்போது அவற்றை அனுபவித்து தீர்ப்பது? அதற்கு எத்தனை பிறவி வேண்டுமோ? அதை எல்லாம் ஒருங்கே அழித்தார் இராமனுசர்.


"தென் புலத்தில் பொறித்த அப்புத்தகம்" எமனுடைய துணையாள் சித்திர குப்தன் நாம் செய்யும் நல் வினை தீ வினைகளை எழுதி வைப்பான் என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் புத்தகத்தில் உள்ள நம் வினையின் தொகுதிகளை அழித்து நமக்கு நல்லது செய்வார் என்பது கூற்று. 


என்னே குருபக்தி 




No comments:

Post a Comment