Thursday, December 31, 2020

திருக்குறள் - விலங்கும் மக்களும்

திருக்குறள் - விலங்கும் மக்களும் 


மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

பெரும்பாலானோர் சொல்லுவது, மனிதனுக்கு சிரிக்கத் தெரியும், விலங்குகளுக்கு அது தெரியாது என்பது தான். 


பல வேறு பாடுகள் இருந்தாலும், வள்ளுவர் ஒன்றைச் சொல்கிறார்.


கல்வி அறிவு. அதுதான் வேறுபாடு என்கிறார். விலங்குகள் தானே கற்றுக் கொள்ளவதில்லை. நூல் அறிவு இல்லாதவை. சரி/தவறு, நல்லது/கெட்டது, உயர்ந்தது/தாழ்ந்தது என்று ஒன்றும் தெரியாது. மனதுக்கு பட்டதை செய்யும். 


மனிதராய் பிறந்தும், கல்வி அறிவு இல்லாதவர்களை என்ன என்று சொல்லுவது? விலங்குகளுக்கு கல்வி அறிவு இல்லை. கல்வி அறிவு இல்லாதவை விலங்குகள்.


வள்ளுவர் அப்படி நேரே சொல்லவில்லை. 


விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கிறதோ அந்த அளவு வேறுபாடு நூல் அறிவு பெற்றவர்களுக்கும் , அந்த அறிவு பெறாதவர்களுக்கும் இருக்கிறது என்கிறார். 


நுண்மையான வேறுபாடு. 


பாடல் 

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்


பொருள் 


click the following link to continue reading


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_31.html


விலங்கொடு = விலங்கோடு ஒப்பிட்டு பார்த்தால் 

மக்கள் அனையர் = மக்கள் எப்படியோ அப்படி 

இலங்குநூல் = சிறந்த நூல் 

கற்றாரோடு  = கற்றவர்களோடு 

ஏனை யவர் =கல்லாதவர் 


நாங்களும் தான் எவ்வளவோ வாரப் பத்திரிகை, நாவல், whatsapp இல் வரும் அறிவு பூர்வமான   செய்திகள்,  செய்தித்தாள் போன்றவற்றைப் படிக்கிறோம்  என்று கூறலாம். 


"இலங்கு நூல்" என்றார். இலங்குதல் என்றால் தெளிவு தருதல், வெளிச்சம் தருதல், உண்மையை விளங்கச் செய்தல் என்று பொருள். 


இலங்கு + அண்  = இலக்கணம். மொழியை விளங்கச் செய்வது இலக்கணம். 


இலக்கம் - இருக்கும் இடத்தை சரியாக சுட்டுவது, அளந்து சொல்லுவது. குத்து மதிப்பாக இல்லாமல், சரியாக சொல்லுவதால் அது இலக்கம்.  இலக்கம் என்றால் குறிக்கோள் என்றும் பொருள் உண்டு. 


இலங்கு நூல் என்றால் ஏதோ ஒரு நூல் அல்ல.  தெளிவு தரும் நூல் சந்தேகத்தை தீர்க்கும் நூல், வழி நடத்தும் நூல். 


அவற்றைப் படிக்காதவர்களும், விலங்கும் ஒன்று தான் என்று வள்ளுவர் சொல்லாமல் சொல்கிறார். 

கொஞ்சம் கடினமான வார்த்தைப் பிரயோகம்தான். 

சிந்தித்துப் பார்ப்போம். 


கண்ட நூல்களையும் படிப்பதை விட்டு விட்டு நல்ல நூல்களை தேடிச் சென்று படிப்போம். 


குப்பைகளை படிப்பதை விட படிக்காமல் இருப்பதே நல்லது. 






Tuesday, December 29, 2020

திருக்குறள் - நாள் என்ற வாள்

 திருக்குறள் - நாள் என்ற வாள் 


கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும் எதுவும் நமக்கு அவை நடப்பதாகவே தெரிவதில்லை. திடீரென்று ஒரு நாள் எல்லாம் மாறிப் போய் இருக்கும்.


நாளும் எடை கூடிக் கொண்டே போகும். ஒரு நாள் 10 கிராம், 15 கிராம் என்று கூடும் போது தெரியாது. ஒரு மாதத்தில் 300 கிராம், மூன்று மாதத்தில் கிட்டத்த்தட்ட ஒரு கிலோ, ஒரு வருடத்தில் 4 கிலோ என்று கூடிய பின் தான் தெரியும், அடடா, உடல் எடை கூடி விட்டதே என்று. 


இனிப்பு, எண்ணெய் பலகாரம் எல்லாம் சாப்பிடும் போது தெரியாது. இன்னிக்கு ஒரு நாள் மட்டும், இந்த ஒரு ஐஸ் க்ரீம் மட்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே போய் , பின் பெரிதாகி விடும். 


அது போல, 


இந்த காலம் ஒன்று இருக்கிறதே, அது கூறு படாதது. நாம், நம் வசதிக்காக  நாள், கிழமை, வாரம், மாதம், வருடம், மணி, நிமிடம், நொடி என்று பெயர் வைத்து  இருக்கிறோம். காலத்தில் அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. இந்தப் பிரிவுகள் இல்லாத காலத்தை  நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். 


நீங்கள் பிறந்தது முதல் இறப்பது வரை உள்ள காலத்தை ஒரு அலகு (unit ) என்று கூட வைத்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு பெயர் வைத்துக் கொள்ளலாம். 


இந்த பூமியில் ஒரு நாள் என்பதும், சனி கிரகத்தில் ஒரு நாள் என்பதும் ஒன்று அல்ல. 


இந்த காலம் என்பது ஒரு நீண்ட துணி போல இருக்கிறது. தொடக்கமும் முடிவும் இல்லை. 


நாம் பிரித்து வைத்துக் கொண்டு  பிறந்த நாள், திருமண நாள், இத்தனை நாள் வாழ்ந்தோம், இந்த உடம்பு வலி சரியாக இத்தனை நாள் ஆகும் என்றெல்லாம் கணக்குப் போடுகிறோம்.


போடலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை. 


ஆனால், 


வள்ளுவர் சொல்கிறார்,


இந்த காலம் இருக்கிறதே அது ஒரு கூரிய கத்தி போன்றது. அந்த கத்தியின் கூரான பக்கத்தில்   நம் உயிர் இருக்கிறது. நமக்குத் தெரியாமலேயே அந்த காலம் என்ற  வாள் நம் உயிரை நாளும் வெட்டிக் கொண்டே இருக்கிறது. 


ஒவ்வொரு நாளும், அந்த வாள் கொஞ்சம் வெட்டுகிறது. மிக மிக சிறிய வெட்டு என்பதால்  நமக்குத் தெரிவதில்லை. 


கொஞ்சம் நரைக்கும்,  கண்ணாடி போட வேண்டி வரும்,  அங்கொன்றும், இங்கொன்றும்  பல் ஆடும், தோல் சற்றே சுருங்கும். சட்டென்று சிலவை ஞாபகம் வராது. 


நாம் கண்டு கொள்ளுவதில்லை. 


இந்த வாள் , உயிரை அரிந்து கொண்டே இருக்கிறது. 


ஒரு நாள் மொத்தமாக அரிந்து போட்டு விடும். 


ஒவ்வொரு நாளும் அது அரிவதை உணர்பவர்கள் வெகு சிலரே. மொத்தமாக அரிந்து விடுமே,  அதற்குள் ஏதாவது செய்ய வேண்டுமே என்று நினைப்பவர்கள் , ஏதாவது செய்வார்கள். 


மற்றவர்கள்,  நாளைக்கு என்ன சமையல் செய்யலாம், என்ன சாப்பிடலாம், என்று  சிந்தித்துக் கொண்டு இருப்பார்களோ?


யாருக்குத் தெரியும்?


பாடல் 


நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_29.html

click the above link to continue reading




நாள்என  = நாள் என்று 

ஒன்றுபோல் காட்டி = ஒன்று உண்மையாக இருப்பது போல காட்டி 

உயிர்ஈரும் = உயிரை அறுக்கும் 

வாளது = வாள் அது 

உணர்வார்ப் பெறின் = உணர்வு உடையவர்கள் அதைப் பெற்றால் 


"காட்டி" என்பதால், அது உண்மையில் இல்லை என்பது புலனாகும். 


"பெறின்" என்பதால், பெற மாட்டார்கள் என்று அர்த்தம். அல்லது, பெறுவது கடினம் என்று அர்த்தம்.  படித்தால் தேர்ச்சி பெறலாம் என்றால், படிப்பது கடினம் என்று  அறிந்து கொள்ளலாம். 


"உணர்வார்" என்பதால், இது உணரப் பட வேண்டிய ஒன்று. படித்து "அறிய" பட வேண்டிய ஒன்று அல்ல.


காலம் உயிரை அறுப்பதை கற்பனை செய்து பாருங்கள். 


ஆழமான குறள் .




Saturday, December 26, 2020

திருக்குறள் - நிலையின என்று உணரும்

திருக்குறள் - நிலையின என்று உணரும் 


ஒரு திருமண வீட்டுக்குப் போகிறோம்.  விழா சிறப்பாக நடந்து முடிந்தது. பொண்ணு மாப்பிள்ளை எல்லோரும் அவரவர் ஊருக்கு கிளம்பிப் போய் விட்டார்கள். நீங்கள் மட்டும், அங்கேயே இருப்பீர்களா அல்லது நீங்களும் கிளம்பி விடுவீர்களா?  அடா, என்ன அருமையான அலங்காரம், சுவையான சாப்பாடு,  நல்ல இசை, எத்தனையோ சொந்த பந்தம்...இவற்றை எல்லாம் எப்படி விட்டு விட்டுப் போவது என்று அங்கேயே இருப்பீர்களா அல்லது, வந்தமா, எல்லோரையும் பார்த்தோமா, மண மக்களை வாழ்த்தினோமா, மொய் எழுதினோமா, சாப்பிட்டோமோ , கிளம்பினோமா என்று இருப்பீர்களா?


ஏன் அந்த கல்யாண மண்டபத்திலேயே இருக்க வேண்டியது தானே. சுகமாகத்தானே இருந்தது. 

இருக்க மாட்டோம். ஏன் என்றால், அது நிரந்தரமான இடம் அல்ல. வந்த வேலை முடிந்தால் கிளம்பி விட வேண்டும். 

சுற்றுலா போகிறோம். புதிய இடம். அற்புதமான சூழ்நிலை. சுவையான உணவு. பெரிய கட்டிடங்கள், மலைகள், அருவி, கடற்கரை.  அங்கேயே இருந்து விடுவோமா? அல்லது ஆயிரம் ஆனால் நம்ம வீடு மாதிரி ஆகுமா என்று கிளம்பி விடுவோமா?


சுற்றுலா சென்ற இடம் எவ்வளவு இனிமையாக இருந்தாலும், அங்கிருந்து கிளம்பி விடுவோம் அல்லவா? 

ஏன் என்றால் அது நிரந்தரமான இடம் அல்ல. 

இல்லை இந்த கல்யாண மண்டபத்திலேயே தான் இருப்பேன் அல்லது இந்த சுற்றுலா தலத்திலேயே தான் இருப்பேன் என்று யாரவது ஆடம் பிடித்தால், அவர்களை பற்றி  என்ன நினைப்பீர்கள்? 


ஏதோ கொஞ்சம் நட்டு கழண்ட கேஸ் என்று தானே நினைப்பீர்கள். 


இந்த உலகில் உங்கள் இடம் நிரந்தரம் என்று உங்களுக்குத் சொன்னது யார்?

இந்த உலகம் தோன்றிய காலம் தொட்டு நீங்கள் இங்கே இருக்கிறீர்களா? அல்லது இந்த உலகம் முடியும் வரை இருப்பீர்களா? 


இது உங்களின் நிரந்தர இடம் அல்ல. வந்தீர்கள், பார்த்தீர்கள், அனுபவித்தீர்கள்,  கிளம்ப வேண்டியதுதான். 


இல்லை, இங்கேயே இருப்பேன்.  அது எப்படி, அதுவும் இதுவும் ஒண்ணா, நான் இங்கேயே இருப்பேன், அது மட்டும் அல்ல, இந்த கல்யாண வீட்டுக்கு வந்தவர்கள் யாரும்  போகக் கூடாது, எல்லோரும் எப்போதும் இங்கேயே இருக்க வேண்டும்  என்று சொல்லுவது யாரும் எங்கும் போகக் கூடாது என்று சொல்லுவீர்களா?


அப்படிச் சொன்னால், அது மதியீனம் அல்லவா?


பாடல் 

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_26.html


click the above link to continue reading


நில்லாத வற்றை  = நிலை இல்லாதவற்றை 

நிலையின = நிலையானவை 

என்றுணரும் = என்று உணரும் 

புல்லறி வாண்மை = குறைந்த அறிவு, சிற்றறிவு 

 கடை. = கீழ்மையானது. 


இந்த உலகத்தில் உங்கள் இடம் நிரந்தரமானது அல்ல. கொஞ்ச நாள் சுத்தி பாத்துட்டு  கிளம்பி விட வேண்டும். எல்லோருக்கும் தான். 

இல்லை, நான் என்றென்றும் இங்கேயே இருப்பேன், என் கூட உள்ளவர்களும் இங்கேயே இருக்க வேண்டும்  என்று சொல்லும் அறிவு - "கடை" 


அது மட்டும் அல்ல, எத்தனை நிலை இல்லாதவற்றை பிடித்துக் கொண்டு, அது நிலைக்க வேண்டும்  பாடு படுகிறீர்கள். 


இளமை நிற்குமா? எத்தனை டை அடித்தாலும், பௌடர் போட்டாலும், லிப் ஸ்டிக்,  facial, நகை, நட்டு என்று போட்டாலும், அது நிற்காது. நில்லாது ஓடி விடும். அதுக்கா இந்தப் பாடு?


செல்வம். நிற்குமா? என்ன பாடு பட்டாலும், போகும் போது போய் விடும். வாழ் நாளை எல்லாம்  அதற்காக செலவழிக்க வேண்டுமா?


இந்த உடம்பு?  எப்போது வேண்டுமானாலும் சரியும். எனவே தான் அதற்கு சரீரம் என்று  பெயர். 


நிலை இல்லாதவற்றை , உங்களால் நிலைக்கப் பண்ண ஒரு காலும் முடியாது. 


முதலில் எது எல்லாம் நிலை இல்லாதது என்று அறிய வேண்டும். 


அது, அறிவின் முதல் படி. 



Friday, December 25, 2020

கம்ப இராமாயணம் - நம் பகை பேர்த்தனர்

 கம்ப இராமாயணம் - நம் பகை பேர்த்தனர் 


துன்பம் வரும்போது துவண்டு போவது இயற்கை. ஏன் நமக்கு மட்டும் இப்படி நிகழ்கிறது என்று மனம் சோர்ந்து போவதும் இயல்புதான். யாராவது ஆறுதல் சொன்னால் கூட "உனக்கு வந்தால் தெரியும்..." என்று மனம் சலித்துக் கொள்ளும். 

என்ன தான் செய்வது? வந்த துன்பமோ போவதாகத் தெரியவில்லை. நாம் செய்வதற்கோ ஒன்றும் இல்லை. ஆறுதல் சொல்லியும் ஒன்றும் ஆகப் போவது இல்லை. 

மன அழுத்தம் அதிகமாகிக் கொண்டே போகும். அது வேறு பல துன்பங்களில் நம்மை ஆழ்த்தி விடும். 


அந்த மாதிரி சமயங்களில் நல்ல இலக்கியங்கள் மனதை சற்றே இளகச் செய்யும். ஒரு புன்முறுவலை கொண்டு வரும். நமக்கு வந்தது ஒன்றும் பெரிதில்லை. இதை விட பெரிய துன்பம் எல்லாம் வந்து இருக்கிறது மற்றவர்களுக்கு என்று மனம் கொஞ்சம் தெம்பு பெரும். 


கிட்கிந்தா காண்டம்.  கார் காலம். 


மழை பொழிகிறது. காடு.  குளிர். எங்கும் ஈரம். மரம் செடி கொடிகளில் நீர்   சொட்டிக் கொண்டு இருக்கிறது. தரை எல்லாம் சேறும் சகதியுமாக இருக்கிறது. சில நாட்களாக மழை விட்ட பாடில்லை.  

இராமன் தனித்து இருக்கிறான். 

இதில் எங்காவது சந்தோஷத்துக்கு இடம் இருக்கிறதா? சீதையைக் காணவில்லை. இராமன் தனித்து இருக்கிறான். மழைக் காலம். இதில் மகிழ்ச்சி எங்கே இருக்கிறது? 

கம்பன் ஆரவாரமான மகிழ்ச்சியை காட்டுகிறான் இந்த இடத்தில்.


எப்படி?


"இராமனும்,  வானரங்களும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். இனி நம் பகைவர்கள் எல்லோரும் அழிந்தார்கள் என்று தேவர்கள் பேசி, ஆராவாரம் செய்தது போல மேகம் இடி இடித்தது. இராமனையும் வானரங்களையும் தேவர்கள் வாழ்த்தி மலர் பொழிவது போல மழை பொழிந்தது" 

என்று கம்பன் இந்த இடத்தைக் காட்டுகிறான். 


பாடல் 


தீர்த்தனும் கவிகளும் செறிந்து, நம் பகை

பேர்த்தனர் இனி' எனப் பேசி, வானவர்

ஆர்த்தென, ஆர்த்தன மேகம்; ஆய் மலர்

தூர்த்தன ஒத்தன, துள்ளி வெள்ளமே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_81.html

click the above link to continue reading


தீர்த்தனும் = இராமனும் 

கவிகளும் = வானரங்களும் 

செறிந்து = ஒன்று சேர்ந்ததால் 

நம் பகை = நம் (தேவர்ககளின்) பகை 

பேர்த்தனர் இனி' = அழித்தனர் இனி 

எனப் பேசி, = என்று பேசிக் கொண்டு 

 வானவர் = தேவர்கள் 

ஆர்த்தென, = சந்தோஷத்தில் சப்தம் எழுப்பிய மாதிரி 

ஆர்த்தன மேகம் = மேகங்கள் இடி இடித்தன 

ஆய் மலர் = ஆராய்ந்து எடுக்கப்பட்ட மலர்களை 

தூர்த்தன ஒத்தன = பொழிந்ததை போன்று இருந்தது 

துள்ளி வெள்ளமே. =துள்ளி வரும் மழை துளிகள் 


இதனால் இராமனின் சோகம் போய் விட்டது என்று கூறவில்லை. 


இந்த சோக சூழ்நிலையிலும் இப்படி ஒரு அழகான பாடலைத் தரும் கம்பனின்  கவித் திறம்  இரசிக்கும் படி இருக்கிறது அல்லவா.


ஏதோ ஒரு வகையில், இலக்கியங்கள் மனதுக்கு ஒத்தடம் தருகின்றன. 


"வாழ்க்கைனா அப்படித்தான் இருக்கும் " என்று ஒரு பக்குவத்தைத் தருகின்றன. 


உண்டா, இல்லையா?

திருக்குறள் - செல்வத்தின் இயல்பு

 திருக்குறள் - செல்வத்தின் இயல்பு 


ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இயல்பு இருக்கும். நீரின் இயல்பு கீழ் நோக்கி பாய்வது. நெருப்பின் இயல்பு சுடுவது.


செல்வத்தின் இயல்பு? 


செல்வத்தின் இயல்பு, ஒரு இடத்தில் நில்லாமல் சுற்றிக் கொண்டே இருப்பது. செல்வம் என்றாலே "செல்வோம்" என்று தான் அர்த்தம். 


செல்வம் நம் கையில் வந்தவுடன், அது நம்மை விட்டு செல்வதற்குள் ஏதாவது செய்ய வேண்டும். 

செல்வம் சக்தி வாய்ந்தது. அதை வைத்து நாம் பலவற்றை சாதித்துக் கொள்ளலாம். என்ன சாதிப்பது என்பது தான் கேள்வி. 

பெரும்பாலானோர் அதை பல விதமான சொத்துக்களில் முதலீடு செய்வார்கள். வீடு, மனை, நிலம், தங்கம், ஷேர், bonds என்று முதலீடு செய்வார்கள். வட்டி வரும், சிலவற்றின் மதிப்பு உயரும். உங்கள் பணத்தைக் கொண்டு யாரோ   அதை நல்ல விதமாக செலவழித்து அதன் மூலம் நிறைய பணம்   சம்பாதித்து, அந்த இலாபத்தில் உங்களுக்கு கொஞ்சம் தருகிறார்கள். 


அதாவது, நீங்கள் மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக வாழ் நாள் எல்லாம் உழைக்கிறீர்கள். 


வள்ளுவர் சொல்கிறார், "நிலையற்ற செல்வத்தை பெற்றால், நிலையான செயல்களை செய்ய வேண்டும்" என்று. 


பாடல் 


அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

அற்குப ஆங்கே செயல்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_25.html

Click the aove link to continue reading


அற்கா = நிலையில்லா 

இயல்பிற்றுச் = இயல்பை உடையது 

செல்வம் = செல்வம் 

அதுபெற்றால் = அந்த செல்வத்தைப் பெற்றால் 

அற்குப = நிலைத்தவற்றை 

 ஆங்கே = அப்போது 

செயல் = செய்ய வேண்டும்.


"அது பெற்றால்" ....பெற்றால் என்பது சந்தேகமானது. கடினமானது என்று பொருள்.  "நன்றாக படித்தால், முதல் மாணவனாக வரலாம்" என்று சொன்னால், படிப்பது என்பது எளிதான காரியம் அல்ல என்பது புலப்படும். 


"நிலையான" என்றால் என்ன?


இதுதான் மிகப் பெரிய கேள்வி. வாழ்வில், எது நிலையானது? 


எவை நிலையானவை என்று வள்ளுவர் சொல்லவில்லை. நாம் தான் சிந்தித்து கண்டு பிடிக்க வேண்டும். 


இளமை? ஆரோக்கியம் ? பிள்ளைகள் ? வீடு ? தங்கம், தகரம் போன்ற உலோகங்கள்? சுவர்க்கம்? புண்ணியம் ?  பாவம் ? அறிவு?


எது நிலையானது? எப்போதும் இருப்பது? மாறாதது?


இதற்கு விடை கண்டு பிடித்து விட்டால், நிலையில்லாதவற்றை நாம் செய்து கொண்டு இருக்க மாட்டோம். 


இவ்வளவு சொன்ன வள்ளுவர் அதை ஏன் சொல்ல்லாமல் விட்டார்? அவருக்கே தெரியாதோ?


இல்லை. வள்ளுவர் எதைச் சொன்னாலும், " அது எப்படி நிலையானது ?" என்று நம்  மனம் கேள்வி கேட்கும். வாதம் செய்யும். எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாது. 


நாமே கண்டு பிடித்தால்தான் உண்டு. 


கண்டு பிடிப்பது மிக எளிமையானது. வாதம் செய்யாமல் இருந்தால். 


முயன்று பாருங்கள்.  முரண்பாடு கொண்டு, எதிர் வாதம் செய்யாமல், அமைதியாக  தேடினால் கிடைக்கும். 




Monday, December 21, 2020

திருக்குறள் - செல்வம்

 திருக்குறள் - செல்வம் 


நிலை இல்லாதவற்றை நிலை என்று நினைக்கும் புல்லறிவாண்மை கடை என்று முதல் குறளில் கூறினார்.


அப்படி என்றால் எது எல்லாம் நிலை இல்லாதது என்ற கேள்வி பிறக்கும் அல்லவா?


இரண்டு விடயங்கள் நிலை இல்லாதவை - ஒன்று செல்வம் , இன்னொன்று இந்த உடம்பு. 


நாம் இரண்டும் நிலையானவை என்று நினைத்து அவற்றை சேர்க்க, பாதுகாக்க படாத பாடு படுகிறோம்.


மருந்து, மாத்திரை, ஸ்கேன், அது இது என்று இந்த உடம்பை எப்படியாவது நிரந்தரமாக இருக்கப்  பண்ணி விடலாம் என்று நினைக்கிறோம். 


இந்த உடம்பு அழியும்.  என்ன செய்தாலும் அழியும். மாற்றவே முடியாது. 


அதே போல் தான் செல்வம். பணத்தை அதில் முதலீடு செய்யலாம், இதில் போடலாம் என்று போட்டு, அதை எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் அது  நம்மை விட்டு போகத்தான் போகிறது. 

அது எப்படி போகும். அங்க வீடு வாங்கி போட்டு இருக்கிறேன், இங்கே மனை, அந்த  கம்பெனி ஷேர், இந்த வங்கியில் நிரந்தர வைப்பு , கொஞ்சம் தங்கம் என்று  பிரித்து பிரித்து போட்டு இருக்கிறேன். எப்படி இந்த செல்வம் என்னை விட்டுப் போகும்  என்று கேட்கலாம்.

நம்மை விட ஆயிரம் மடங்கு செல்வம் இருந்த அரசர்கள் இருந்தார்கள். அவர்களிடம் கோட்டை, கொத்தளம், ஆள், அம்பு, சேனை என்று எல்லாம் இருந்தது. எங்கே அந்த செல்வம்?


இராஜ இராஜ சோழனின் வாரிசுகள் எங்கே? அசோக சக்ரவர்த்தியின் பிள்ளைகள் எங்கே?  

வரலாறு பேரரசுகளை புரட்டிப் போட்டு இருக்கிறது. பெரும் பணக்காரர்கள் இருந்த இடம் இடம் தெரியாமல் செத்தார்கள். 

நாம் நம் செல்வத்தை காத்து விட முடியும் என்று நினைக்கிறீர்களா? ஒருக்  காலும் முடியாது. 


உள்ளங்கை நீர் போல அது ஒழுக்கிக் கொண்டே இருக்கும். 

நன்றாக சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கு செல்வம் எப்படி வந்தது என்று.  வருகின்ற காலத்தில் பல இடங்களில் இருந்து வரும். 

சம்பளம் வரும், வட்டி வரும், வாடகை வரும்,  ஷேர் இருந்தால் டிவிடெண்ட் வரும்,  வாங்கிப் போட்ட சொத்துக்களின் மதிப்பு உயரும். இப்படி பல வழிகளில்  செல்வம் வரும். இங்கிருந்து கொஞ்சம், அங்கிருந்து கொஞ்சம் என்று  பல விதங்களில் வந்து குவிந்து விடும். எனக்கு இவ்வளவு சொத்தா என்று நீங்களே வியப்பீர்கள்.


மனதில் நன்றாக பதிவு செய்து கொள்ளுங்கள். ஒரு நாள் இவை அனைத்தும் போகும். 


வள்ளுவர் அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறார்.


சினிமா தியேட்டரில் ஒரு படம் ஓடுகிறது என்று வைத்துக் கொள்வோம். படம் பார்க்க பலர் வருவார்கள். வரும்போது ஒவ்வொருவராக வருவார்கள். ஆறு மணி படம் என்றால் சிலர்  ஐந்து மணிக்கு வருவார்கள், சிலர் 5:10 க்கு வருவார்கள், சிலர் 5:30 வருவார்கள். 


படம் முடிந்தவுடன் எல்லோரும் ஒன்றாகப் போய் விடுவார்கள். முதலில் வந்தவன் முதலில் போகவும், கடைசியாக வந்தவன் கடைசியாகப் போகவும் என்று இருக்காது. 


வரும் போது ஒன்று ஒன்றாக வருவார்கள். போகும் போது ஒன்றாகப் போவார்கள். 


அது போல, செல்வம் வரும் போது தனித்தனியாக வரும். போகும் போது மொத்தமாக போய் விடும். 

பாடல் 


கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_21.html

(click the above link to continue reading)

பொருள் 


கூத்தாட்டு = கூத்தாடும் 

அவைக் = கொட்டகை, இன்று தியேட்டர் 

குழாத்து = கூட்டம் 

அற்றே  = போல 

பெருஞ்செல்வம் = பெரிய செல்வம் 

போக்கும்  = போகும் 

அது = அந்த செல்வம் 

விளிந் தற்று = ஒழிந்து போகும். 


கொட்டகைக்கு எப்படி பல இடங்களில் இருந்து ஆட்கள் வருவார்களோ, அது போல  செல்வம் பல இடங்களில் இருந்து வரும். 


படம் முடிந்தவுடன் எல்லோரும் அவரவர் இடத்துக்குப் போவது போல, செல்வம் வந்த வழியே போய் விடும். 


தனித்தனியே வந்து, ஒன்றாகப் போய் விடும்.


சரி, ஒத்துக் கொள்வோம். அதுக்கு என்ன இப்ப? இருக்கிற செல்வத்தை எல்லாம் தூக்கி தெருவில் போட்டு விடுவோமா?  செல்வம் சேர்க்காமலே இருந்து விடுவோமா? பொருள் என்பதற்கு ஒரு அதிகாரமே வைத்து இருக்கும் வள்ளுவர் என்னதான் சொல்கிறார்   என்று கேட்டால்...


மேலும் சிந்திப்போம்....




Sunday, December 20, 2020

திருவாசகம் - நான் யார் ?

திருவாசகம் - நான் யார் ?

நமக்கு ஊரில் உள்ள அனைவரையும் அறிந்து கொள்ள ஆசை. 

எந்த நடிகர்/நடிகை எந்தப் படத்தில் நடிக்கிறார்கள், அது எப்போது வெளி வருகிறது. 


நடிகர் இல்லாவிட்டால் அரசியல் தலைவர். இல்லை என்றால் ஆன்மீகத் தலைவர். அவர் எங்கே எப்போது உபன்யாசம் செய்யப் போகிறார். 

அதுவும் இல்லாவிட்டால் "என் மனைவியை புரிந்து கொள்ளவே முடியவில்லை", "அவருக்கு என்னதான் வேண்டும்", "வர வர இந்தக் காலத்துப் பிள்ளைகளை புரிந்து கொள்ளவே முடியவில்லை" ....

என்று மற்றவர்களை புரிந்து கொள்ளவே நாம் முயற்சி செய்கிறோம். அது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். 

நம்மை நாம் புரிந்து கொள்ள சிறிதும் முயற்சி செய்வது இல்லை. 


"என்னைப் பற்றி எனக்கு என்ன புரியாது. என்னைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும்" என்று நாம் நினைக்கிறோம். அது சரி அல்ல. நாம் நம்மை புரிந்து கொள்ள முயற்சி செய்வதே இல்லை. 


"நான் யார்" என்ற இரண்டு வார்த்தை தான் இரமண மகரிஷியின் உபதேசமாக இருந்தது. 

எப்போதாவது நாம் "நான் யார்" என்ற கேள்வியை கேட்டது உண்டா? 

நான் என்பது இந்த உடலா, நினைவா, உயிரா, உறவுகளின் கலவையா? கணவனா? மனைவியா? பிள்ளையா? அறிவாளியா? முட்டாளா? பணக்காரனா? ஏழையா?


நான் என்பது யார்? 


நமக்குள் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் பல விஷயங்களை திணித்து வைத்து இருக்கிரறார்கள். பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், நாம் பார்த்த சினிமாக்கள்,  படித்த புத்தகங்கள் என்று எல்லோரும் சேர்ந்து நம் மண்டைக்குள்   உட்கார்ந்து இருக்கிறார்கள். நான் என்பது தனி ஒருவன் இல்லை. பெரும் கும்பல் உள்ளே இருக்கிறது. 


இதில் உண்மையான நான் யார்?


நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா? நீங்கள் நம்பவில்லை, உங்களுக்கு சின்ன வயது முதல்  அப்படி நம்பும்படி சொல்லப் பட்டது. நீங்களும் அதை கடை பிடிக்கிறீர்கள். ஒரு நாத்திக குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இருந்தால், நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பீர்கள். நீங்கள் நம்புவது என்பது பெரிய விஷயம் இல்லை.  


சுத்த சைவம், ரொம்ப ஆச்சாரம், எல்லாமே கற்பித்தவை. நமது என்று சொந்தமாக  எதுவம் இல்லை.  சைவ வீட்டில் பிறந்ததால் நான் சைவமாக இருக்கிறேன். இதில் என் பெருமை என்ன? 


இந்த கும்பலை விரட்டி விட்டு யோசித்துப் பாருங்கள். நீங்கள் யார் என்று தெரியும். 


மாணிக்க வாசகர் தன்னைத்தானே கேட்கிறார்.  


"நான் யார்? என் உள்ளம் என்பது என்ன? என் அறிவு/ஞானம் என்பது என்ன? என்னை யார் அறிவார்" என்று. 


மாணிக்கவாசகருக்கு அந்த கேள்வி எழுந்து இருக்கிறது. 


பாடல் 


நானார்என் உள்ளமார் ஞானங்களாரென்னை யாரறிவார்

வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி

ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்

தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ.


சீர் பிரித்த பின்


நான் யார் ? என் உள்ளம் யார் ? ஞானங்கள் யார் ? என்னை யார் அறிவார் ?

வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதி மயங்கி 

ஊனாரும் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் 

தேனார் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ 


என் ஞானங்கள் இல்லாமல் போனது.

இவை அனைத்தும் போன பின் என்னை யார் அறிவார் ? 

அந்த இறைவன் என்னை ஆட்கொள்ளவில்லை என்றால் இதுவெல்லாம் என்னவாகி இருக்கும் ?

ஆட் கொண்டபின் என்ன ஆயிற்று ?


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_20.html


click the above link to continue reading

நான் யார் ? = நான் யார்

என் உள்ளம் யார் ? = என் உள்ளம் யார்

ஞானங்கள் யார் ? = ஞானங்கள் யார் அல்லது எது 

என்னை யார் அறிவார் ? = என்னை யார் அறிவார் ?

வானோர் பிரான் = வானில் உள்ள பிரான்

என்னை ஆண்டிலனேல் = என்னைஆட் கொள்ளவில்லை என்றால்

மதி மயங்கி = மதி மயங்கி

ஊனாரும் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் = இறைச்சி இருந்த உடைந்த மண்டை ஓட்டில் பிச்சை எடுத்து உண்ணும் அம்பலத்தில் ஆடும் அவன்

தேனார் கமலமே = தேன் உள்ள தாமரை மலருக்கு

சென்று ஊதாய் கோத்தும்பீ = சென்று பாடுவாய் தும்பியே 


இறைவன் என்னை ஆட்கொள்ளமால் விட்டு விட்டால், நான் என்ன ஆகி இருப்பேன் என்று பதறுகிறார். 


தேடுங்கள். நீங்கள் யார் என்று அறிய முயற்சி செய்யுங்கள். 


Know Thyself என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். 


நம்மை அறிவதை விட்டு விட்டு, உலகில் உள்ள எல்லோரையும் அறிய நினைக்கிறோம்.  என்ன ஒரு அறிவீனம்.


Thursday, December 17, 2020

திருக்குறள் - தூக்கமும் விழிப்பும்

 திருக்குறள் - தூக்கமும் விழிப்பும் 


எந்த ஒரு காரியத்தையும் முதன் முதலில் செய்யும் போது ஒரு பயம் இருக்கும். கார் ஓட்ட கற்றுக் கொள்ளும் போது, நீச்சல் கற்றுக் கொள்ளும் போது, புதிதாக ஒன்றை சமைக்கும் போது ஒரு பயம் இருக்கத்தான் செய்யும். 


பழக பழக பயம் போய் விடும். 


உள்ளதுக்குள் பெரிய பயம் மரண பயம் தான். நாம் பழகியவர்களை விட்டு விட்டுப் போக வேண்டும். அல்லது நாம் நேசிப்பவர்கள் நம்மை விட்டு விட்டுப் போய் விடுவார்களோ என்ற பயம். கொஞ்சம் பழகினால் பயம் விட்டுப் போய் விடும். ஆனால், மரணத்தை எப்படி பழகுவது? 

இயற்கை அதற்கும் ஒரு வழி செய்து வைத்து இருக்கிறது. 


தினம் தினம் தூங்கி எழும்புகிறோம் அல்லவா? 


தூக்கத்தில் என்ன நடக்கிறது? பிள்ளைகள், கணவன்/மனைவி, அப்பா, அம்மா உடன் பிறப்பு, நட்பு  என்று ஏதாவது தெரிகிறதா? அருகில் உறங்கும் கணவனோ மனைவியோ கூட தெரிவது இல்லை. மரணத்துக்கும் அந்த தூக்கத்துக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?  


ஐயோ, தூங்கப் போனால், என் பிள்ளையின் நினைவு எனக்கு அற்றுப் போய் விடுமே, என் பெற்றோரை நான் மறந்து போவேனே என்று யாராவது தூங்காமலே இருப்பார்களா? அல்லது, பிள்ளையை, கணவனை , மனைவியை தூங்க விடாமல் இருப்பார்களா?


அந்த தூங்கும் நேரத்தில் உங்களுக்கும் இந்த உலகுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. உறவு இல்லை. நினைவு இல்லை. பழக்கம் இல்லை. இன்ப துன்ப அனுபவம் இல்லை. 


இருந்தும் ஒரு பயமோ, தயக்கமோ இல்லாமல் தினமும் தூங்கப் போகிறோம். மற்றவர்களை தூங்கப் பண்ணுகிறோம். 

வள்ளுவர் சொல்கிறார்

பாடல் 

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_17.html

click the above link to continue reading 


உறங்கு வதுபோலும் = தூங்குவதைப் போல 

 சாக்காடு  = இறப்பு 

உறங்கி = தூங்கிய பின் 

விழிப்பது போலும் = விழித்து எழுவதைப் போல 

பிறப்பு = பிறப்பு 


நித்தம் நித்தம் இறந்து பிறக்கிறோம். இதில் என்ன பயம். இறந்தால் பிறக்க மாட்டோம் என்ற பயம் இருக்கிறதா? உறங்கினால், விழிப்போம் என்று யாராவது உங்களுக்கு உத்தரவாதம் தந்து இருக்கிறார்களா? இல்லையே?  

சரி, ஒரு நாள் சரியாக உறங்காவிட்டால் மறு நாள் எப்படி இருக்கும்? எவ்வளவு சோர்வாக இருக்கும்? 

ஒரு நாள் நன்றாக உறங்கினால், "நேற்று சுகமாக உறங்கினேன்" என்று சொல்கிறோம். உறங்கின அனுபவம் இருக்குமா?  உறங்கும் போது ஒன்றுமே தெரியாது. இருந்தும் அது சுகமாக இருந்தது என்று சொல்கிறோம். 


உறக்கம் ஒரு சுகம். உறக்கம் சரியாக வராதவர்களை கேட்டுப் பாருங்கள் தெரியும். உறக்கம் ஒரு வரம். 


அது போல, இறப்பும் ஒரு சுகம். ஒரு வரம். அதை அறிந்து கொண்டால் வாழ்கை சுகமாக இருக்கும். தூக்கத்துக்கு பயந்து கொண்டு தூங்காமல் இருக்க முடியுமா? 


அது  போலத்தான் இறப்பும். 


ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். உண்மை புலப்படும். 







Saturday, December 12, 2020

நாலடியார் - எது வறுமை?

நாலடியார் - எது வறுமை?


நிறைய பேர் நினைக்கிறார்கள், படிப்பது எதற்கு? பணம் பண்ணத்தானே என்று. பணம் எப்படி பண்ணினால் என்ன? சட்டத்துக்கு புறம்பான செயல்களை செய்யாமல் செல்வம் சேர்க்க முடியும் என்றால், படிப்பு எதற்கு? 


படிக்காத முட்டாள்கள் எவ்வளவோ பேர் பெரும் செல்வம் சேர்க்கவில்லையா? அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என்று படிப்பு அறிவு கொஞ்சம் கூட இல்லாதவர்கள் செல்வத்தில் புரள்கிறார்களே, பின் படிப்பின் தேவை தான் என்ன?


பலருக்கு இந்த கேள்வி ரோ சங்கடமான ஒன்று. 


சில பேர் நிறைய படிப்பார்கள். பலப் பல பட்டங்கள் இருக்கும். நாலு காசு பண்ணத் தெரியாது. புத்தக அறிவு, பட்டங்கள் இவை தான் கல்வியா?


நாலடியார் விளக்குகிறது. 


சில பேர் ஆண்கள் போல் தோற்றம் அளிப்பார்கள். ஆனால் அவர்களிடம் ஆண்மைக் குணம் இருக்காது. பெண் குணம் மிகுந்து இருக்கும். பேடிகள் என்று சொல்லுவார்கள். அவர்கள், பெண்கள் அணியும் நகைகளை அணிந்து கொள்வார்கள். அவர்களைப் போல உடை உடுத்துவார்கள். 


அது பார்த்து இரசிக்கும் படியாகவா இருக்கும்? அதே நகைதான், அதே உடை தான். இருந்தாலும் சற்று அருவெறுப்பாக இருக்காது? ஆண் தோற்றத்தில் உள்ள ஒரு அலி உதடுச் சாயம் பூசிக் கொண்டு வந்தால் பார்க்க எப்படி இருக்கும்?


அறிவில்லாதவன் கையில் உள்ள செல்வம் அப்படி இருக்குமாம்?  அவனிடம் செல்வம் இருக்கும். அளவுக்கு அதிகமாக செல்வம் இருக்கும். ஆனால், அலி அணிந்த நகைகள் போல பொருத்தம் இல்லாமல் இருக்கும். 


சரி, அறிவு உள்ளவன் என்றால் யார்? படித்து பட்டம் பெற்றவனா? உலகத்தில் உள்ள பெரிய பெரிய நிறுவங்களின் தலைவர்கள் ரொம்ப படித்தவர்கள் அல்ல. நாட்டின் தலைவர்கள் படித்தவர்கள் அல்ல. அவர்கள் முட்டாள்களா என்றால் இல்லை. 


நாலடியார் கூறுகிறது, "நுண்ணர்வு இன்மை வறுமை" என்று. 

அது இருந்தால் பெரும் செல்வம் உள்ளது மாதிரி. 

நுண் அறிவு அல்ல, நுண் உணர்வு.

ஒரு மருத்துவரிடம் போகிறீர்கள். இந்த இடத்தில், இந்த மாதிரி வலி இருக்கிறதுஎன்று சொல்கிறீர்கள். உடனே அவர் மனதில் அந்த வலிக்கு இதுதான் காரணமாக இருக்கும் என்று முடிவு பண்ணுகிறார். அதை உறுதி செய்ய சில பல சோதனைகள் செய்கிறார். அந்த முடிவு செய்யும் ஆற்றல் தான் நுண்ணர்வு. 

படிப்பு, அனுபவம், இவற்றைத் தாண்டி வருவது. 

என்ன சாப்பிட்டால் உடம்பில் என்ன நடக்கும் என்று பல பேருக்குத் தெரியும். ஆனால், நாம் உண்ட உணவினால் நம் மன நிலை எப்படி பாதிக்கப் படுகிறது என்ற நுண் உணர்வு வெகு சிலருக்கே இருக்கும். 


நம் உணர்வுகள், செயல் பாடுகள், சிந்தனை, எல்லாம் நாம் உண்ணும் உணவில் இருந்து வருகிறது. எந்த உணவை உண்டால், எப்படி நம் மனம் மாறுகிறது என்ற நுண் உணர்வு இருக்க வேண்டும். யாரிடம் பேசினால் நம் மனம் எப்படி மாறுகிறது என்று தெரிய வேண்டும். எதைப் படித்தால் எப்படி பாதிக்கப் படுகிறோம் என்று அறியும் அறிவு வேண்டும்.


கூர்மையான அறிவு. அது இல்லாவிட்டால், அது தான் வறுமை என்கிறது நாலடியார். அந்த உணர்வு இருந்தால், அது தான் செல்வம். 


பாடல் 


 நுண் உணர்வு இன்மை வறுமை; அஃது உடைமை

பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம்;-எண்ணுங்கால்,

பெண் அவாய், ஆண் இழந்த பேடி அணியாளோ,

கண் அவாத் தக்க கலம்?


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_12.html

Please click the above link to continue reading



நுண் உணர்வு இன்மை வறுமை; = நுண் உணர்வு இல்லாமல் இருப்பது வறுமை.  இருப்பது செல்வம். 

 அஃது உடைமை = அது இருந்தால் 

பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் =  அது கிடைத்தற்கு அரிய் பெரிய செல்வம் 

எண்ணுங்கால், = நினைத்துப் பார்த்தால் 

பெண் அவாய் = பெண்மை குணம் நிறைந்து 

ஆண் இழந்த பேடி = ஆண்மைக் குணம் இழந்த பேடி 

அணியாளோ, = அணிந்திருக்கும் 

கண் அவாத் தக்க  = கண்கள் விரும்பும் 

கலம்? = அணிகலம் 


நுண் உணர்வு இல்லாதவன் பெற்ற செல்வம், பேடி அணிந்த அணிகலன் போல.


என்ன ஒரு உதாரணம்!




Thursday, December 10, 2020

திருக்குறள் - முப்பால்

 திருக்குறள் - முப்பால் 


வாழ்வின் அடிப்படை துறவறம் என்று பார்த்தோம். துறவறம் தான் நோக்கமா? எல்லாவற்றையும் விடுவதற்கா வாழ்கை என்றால் இல்லை. 

வாழ்வின் நோக்கம் வீடு பேறு. வீடு பேறு அடைய துறவறம் வேண்டும். வீட்டின் வாயில் துறவறம். அதன் வழியாகத்தான் போயாக வேண்டும். 

வீடு என்றால் என்ன, அதை ஏன் அடைய வேண்டும் என்று பின்னால் சிந்திக்க இருக்கிறோம். 

இப்போது, துறவறம் நோக்கம் , முக்கியம் என்றால் பின் இல்லறம் எதற்கு? நேரே துறவுக்கு போய் விட்டால் என்ன? 

பிரமச்சரியம், துறவறம், வீடு என்று இருந்தால் என்ன? எதுக்கு நடுவில் இல்லறம்? 

சரி இல்லறம் இருந்து விட்டுப் போகிறது. இந்த அறம் பொருள், இன்பம் என்று மூன்றாக பிரித்து இருக்கிறாரே, பொருளும் இன்பமும் எதற்கு? 

இப்படி பல சிக்கலான கேள்விகள் எழுகின்றன.


சிக்கலை அவிழ்போம். 


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_10.html


click the above link to continue reading


வாழ்வின் நோக்கம் - வீடு பேறு.


வீடு பேறு அடைய முக்கியமான தேவை - துறவு. 


துறவு நிலைக்குப் போகவேண்டுமானால் - அருள் வேண்டும். 


அருள் வர வேண்டும் என்றால் முதலில் அன்பு வேண்டும். 


அன்பு மனதில் சுரக்க வேண்டும் என்றால் பிள்ளை வேண்டும். 


பிள்ளை வேண்டும் என்றால் கணவன் மனைவி உறவு வேண்டும். இன்பம் வேண்டும்.  


குடும்பம் நன்றாக நடக்க வேண்டும் என்றால் பொருள் வேண்டும். 


எனவே முதலில் இல்லறம். இல்லறம் சிறப்பாக நடக்க, காமம், இன்பம் என்ற ஒரு எதிர்பார்ப்பு, தேவை. அவை செவ்வனவே நடக்க பொருள். இவற்றை அனுபவித்து கடக்கும் போது தானே துறவறம் வந்து நிற்கும். 


துறவு வந்தால், வீடு வரும். 


இது வள்ளுவர் வகுத்துக் காட்டும் அறம், வாழ்கை நெறி. 


நீங்கள் நினைக்கலாம், "வீடு பேறு என்று ஒன்று கிடையாது. அல்லது வேண்டாம்" என்று வைத்து விட்டால், பின் வள்ளுவம் பூராவும் விழுந்து விடும் அல்லவா?


ஆம். சரிதான். ஆனால், வீடு பேறு வாழ்வின் நோக்கம் இல்லை என்று எடுத்துக் கொண்டால், பின் வேறு என்ன என்று சொல்ல வேண்டும். அந்த புதிய நோக்கத்தை அடைவது எப்படி என்று சொல்ல வேண்டும். 


வள்ளுவர் மிக மிக ஆழமாக சிந்தித்து திருக்குறளைப் படைத்து இருக்கிறார். 


அதற்கு இணையாக ஒன்றை சிந்திப்பது என்பது மிக மிக கடினமான காரியம். 


அறத்துப் பால். 

அதன் உள்ளே இல்லறம், துறவம் என்ற இரண்டு பெரிய அறங்கள். 


இல்லறம் நடக்க  இன்பத்துப் பால். 


இல்லறம், இன்பம், பிள்ளை இவற்றை கொண்டு செல்ல பொருட் பால் என்று பிறந்தது முதல், வீடு பேறு வரை ஒவ்வொரு கட்டமாக பிரித்து கை பிடித்து கூட்டிச் செல்கிறார். 


பால், இயல், அதிகாரம், குறள் என்று முதலில் இருந்து இறுதி வரை ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டது. 


ஒரு முழு வாழக்கைக்கும் ஒரு வழிகாட்டி. 


இப்படி ஒரு நூலை காணவே முடியாது.


இனி திருகுறளுக்குள் போவோம். 


Tuesday, December 8, 2020

திருக்குறள் - அன்பும் அருளும்

 திருக்குறள் - அன்பும் அருளும் 


துறவத்துக்கு அன்பு எப்படி அடிப்படையாக இருக்கிறது என்று பார்த்தோம். அன்பு இருந்தால், எதையும் மகிழ்வோடு துறக்க முடியும். 


அதெல்லாம் சரி, நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நாம் தருகிறோம். அது எல்லாம் துறவறம் என்று எப்படிச்  சொல்லுவது? 


நாம் ஒரு பூங்காவில் அமர்ந்து இருக்கிறோம். நம் பிள்ளையோ, பேரப் பிள்ளையோ அங்கு விளையாடிக் கொண்டு இருக்கிறது. ஓடும் போது கால் தடுக்கி கீழே விழுந்து விடுகிறது. பதறிப் ஓடிப் போய் தூக்குவோம் இல்லையா. 


சரி. 


வேறு யாரோ ஒரு பிள்ளை கீழே விழுந்து விடுகிறது. நமக்கு என்ன, நம்ம பிள்ளை இல்லையே என்று இருப்போமா அல்லது அந்தப் பிள்ளையையும் அதே மாதிரி ஓடிப் போய் தூக்குவோமா? 


பெரும்பாலானோர் தன் பிள்ளை மாதிரியே மற்ற பிள்ளைகள் விழுந்தாலும் பதறிப் போய் தூக்குவார்கள். சிலர் தூக்காமல் இருக்கலாம். 


நம் பிள்ளை மேல் நாம் செய்வது அன்பு. மற்ற பிள்ளை மேல் நாம் செய்வது கருணை. 


இது எப்படி ஆரம்பிக்கிறது என்றால், முதலில் தான் தான் என்று இருந்தவன், (ள்), பின் தன் மனைவிக்கு என்று பாடு படுகிறான். அவள் என்ன சொன்னாலும், அவளை பாதுகாக்க, அவளை மகிழ்ச்சிப் படுத்த பாடு படுகிறான்.  

அடுத்த கட்டம் பிள்ளைகள்.  ஒரு எதிர் பார்ப்பும் இல்லாமல், பிள்ளைகள் மேல் அன்பு படர்கிறது. 


அடுத்த நிலை, தன் குடும்பம் தாண்டி மற்றவர்கள் மேலும் பரிவு கொள்வது. ஒரு ஏழைக்கு சோறு போடுவது, பணம் தானம் செய்வது, பக்கத்து வீட்டில் முடியாவிட்டால் ஓடிப் போய் உதவி செய்வது என்று அந்த வட்டம் பெரிதாகிக் கொண்டே வருகிறது. 

https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_8.html

click the above link to continue reading 


அன்பு கொஞ்சம் கொஞ்சமாக அருளாக மாறும். வீடு தாண்டி அது தன் கிளை விரிக்கும். 


தனக்கு தனக்கு என்பது சுயநலம் என்றால், என் மனைவி, என் பிள்ளை என்பதும் சற்றே பெரிய சுயநலம். அவ்வளவுதான். 

எப்படி பிள்ளைக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி இருக்கிறதோ, அந்த மகிழ்ச்சி மற்றவருக்கு செய்யும் போதும் வரும். 


வரணும். வரவில்லை என்றால், மனம் விரியவில்லை என்று அர்த்தம். 


குகனையும், சுக்ரீவனையும், வீடனனையும் தம்பியாக, தன் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அந்த அருள் வரும். 


எல்லாம் என் குடும்பம்தான் என்ற எண்ணம் வரும். அப்படி வரும் போது, கொடுப்பது எளிதாகும். விடுவது சுகமாகும். 


மனம் விரிய விரிய மகிழ்ச்சி பொங்கும். 


நாம் ஒரு ஐஸ் கிரீம் சாப்பிடுவதை விட நம் பிள்ளை சாப்பிடுவதை இரசிப்பது எவ்வளவு சுகம். பேரப் பிள்ளை சாப்பிடுவதை இரசிப்பது இன்னும் சுகம். 


தான் ஈட்டிய பொருளால் இன்னொரு உயிர் சுகப் படுவதை காண்பது இன்னொரு சுகம். 


அது துறவிக்கு மட்டுமே வாய்த்த வரம். 


துறவு என்பது சுகம். துறக்காமல் இருப்பதுதான் கடினம். துன்பம். 


சரி, இதெல்லாம் திருக்குறளில் எங்கே இருக்கிறது?  


நாளை முதல் அதை சிந்திக்க இருக்கிறோம். 

 


Monday, December 7, 2020

திருக்குறள் - துறவறம் நோக்கிய வாழ்க்கை

 திருக்குறள் - துறவறம் நோக்கிய வாழ்க்கை 


வாழ்க்கையின் ஒவ்வொரு படியும் துறவறம் நோக்கித்தான் அமைகிறது. 


துறவறம் என்றால் ஏதோ கடினமான ஒன்று என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இல்லவே இல்லை. அது போல் சுகம் எதுவும் இல்லை. 


துறவறம் என்றால் என்ன? நமக்கு வேண்டியதை, விரும்பியதை மகிழ்ச்சியோடு விடுவது. சர்க்கரை நோய் வந்தவன் "நான் சர்க்கரையை துறந்து விட்டேன்" என்று சொல்லுவது பெரிய துறவறம் அல்ல. அதைத் துறக்காவிட்டால் உயிர் போய் விடும். 


பந்தயத்தில் கடைசியில் வந்தவன் "நான் தங்கப் பதக்கத்தை துறந்து விட்டேன் " என்று சொல்லுவது நகைப்பு இடமானது. 


ஆசைப் பட்டதை, விரும்பியதை, ஒரு நிர்பந்தமும் இல்லாமல், மகிழ்ச்சியோடு விட்டு விடுவது. 

நடக்கிற காரியமா?


நடக்கும். 


வாலிப வயதில், வெளியே போய் விட்டு வந்தவுடன், நேரே குளிர் சாதன பெட்டியை திறந்து அதில் என்ன இருக்கிறதோ அதை உண்பது வழக்கமாக இருக்கும். நல்ல பலகாரம் செய்தால் இன்னும் இரண்டு கொடு என்று இருப்பது எல்லாம் தனக்கு என்று உண்ணும் ஆர்வம் இருக்கும். 


அவனுக்கு திருமணம் ஆகி விடுகிறது. மனைவி வந்து விடுகிறாள். வீட்டுக்கு வருகிறான். பசி. குளிர் சாதன பெட்டியைத் திறக்கிறான். டப்பாவில் ஏதோ ஒரு இனிப்பு ஒரே ஒரு துண்டு இருக்கிறது. நாக்கில் எச்சில் ஊறுகிறது. சாப்பிடப் போனவன், ஒரு கணம் நினைப்பான். 'அட, அவளுக்கு இதை ஊட்டி விட்டால் எப்படி இருக்கும்" என்று. அவள் முகத்தில் தோன்றும் சந்தோஷத்தை பார்க்க எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பான். சரி, இருக்கட்டும், அவளுக்கு என்று வைத்து விடுவான். 


அவளும் அப்படித்தான். "இது அவருக்கு ரொம்ப பிடிக்கும்" என்று அவனுக்கு என்று எடுத்து வைத்து விடுவாள். 

பிடித்த ஒன்றை, மகிழ்வோடு மற்றவர்க்கு என்று துறந்து விடுவது. 

'அதெல்லாம் ஒண்ணும் இல்லை...அவளுக்கு எதுக்கு...அவ நல்லா சாப்பிட்டு இருப்பாள்...' என்று நினைத்தால் கூட 


கொஞ்ச நாள் கழித்து,அவர்களுக்கு பிள்ளை பிறக்கிறது....


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_7.html

click the above link to continue reading.


ஏதோ ஒரு நல்ல தின் பண்டம். "அடடா இதை பிள்ளைக்கு கொடுக்கலாமே" என்று இருவரும் நினைப்பார்களா மாட்டார்களா? 


கணவன் மனைவி இடையிலாவது ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதனால் அவளுக்கு அல்லது அவனுக்கு கொடுத்தேன் என்று இருக்கலாம். 


சின்ன பிள்ளையிடம் என்ன எதிர்பார்ப்பு இருக்கும்? அது சந்தோஷப் படுவதை பார்ப்பது  ஒரு சந்தோஷம்.


தான் பசித்து இருந்தாலும்,பிள்ளைக்கு என்று எடுத்து வைப்பார்கள்தானே? அப்படி எடுத்து வைக்காத பெற்றோரை நாடு கடத்தினாலும் தகும். தனக்கு தனக்கு என்று பிள்ளைக்கு முன் உண்ணும் பெற்றோரை எதில் சேர்ப்பது? 


துறக்கிரோமா இல்லையா?  மனைவிக்காக, கணவனுக்காக, பிள்ளைக்காக துறக்கிரோமா இல்லையா?


எவ்வளவு நேரம், பணம், உடல் உழைப்பு, சந்தோஷம் என்று அனைத்தையும் துறக்கிரோமா இல்லையா? அதும் மகிழ்ச்சியோடு. சரி தானே. 


ஏன் அப்படி செய்கிறோம்? 


காரணம் அன்பு. 


யோசித்துப் பாருங்கள், இதுவரை எத்தனை துறந்து இருக்கிரீர்கள் என்று. 


கடினமாக உழைத்து, யாரி யாரிடமோ ஏச்சும் பேச்சும் வாங்கி, சம்பாதித்து மனைவிக்கு நகை, புடவை, பிள்ளைகளுக்கு உடை,  கல்வி, என்று எத்தனை வருடம் நமக்கு வேண்டியதை துறக்கிறோம், குடும்பத்துக்காக. 


எல்லாவற்றையும் விட பெரிய துறவறம், அழகை துறப்பது. கொஞ்சம் பணம் போனாலும் போகட்டும், நேரம் போனாலும் போகட்டும்....அழகு போனால் போகட்டும் என்று யாராவது சொல்வார்களா? 


பிள்ளை பெறும் போது பெண்கள் தங்கள் அழகை எவ்வளவு துறக்கிறார்கள். 


வயிறு பெருத்து, பெற்ற பின் வயிறு எல்லாம் சுருக்கம் விழுந்து, மார்பகங்கள் கட்டு தளர்ந்து...எவ்வளவு கஷ்டம். சட்டென்று பத்து பதினைந்து வயது கூடிய மாதிரி இருக்கும். 


எந்தப் பெண்ணாவது மாட்டேன் என்று சொல்கிறாளா? பிள்ளை பெறுவது பெரிய மகிழ்ச்சி தான். இளமை போனாலும் பரவாயில்லை என்று பெறுகிறார்களே? 


சாபத்தால் முதுமை அடைந்தான் யயாதி. முடியவில்லை. அவனால் அதை தாங்க முடியவில்லை. பிள்ளையிடம் இளமையை யாசகம் பெற்றான்.  அத்தனை தாய் மார்களும் இளமையை பணயம் வைத்துத்தான் பிள்ளை பெறுகிறார்கள். 


அதுவும் மகிழ்வுடன். 


காரணம் அன்பு. 


வாழ்கை என்ற ஜீவ நதி அன்பென்ற கடலை நோக்கி காலம் காலமாக ஓடிக் கொண்டே இருக்கிறது. 


அதன் போக்கில் எத்தனை இழப்புகள், துறப்புகள்..எல்லாம் மன நிறைவோடு, திருப்தியோடு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. 


துறவு நோக்கித்தான் வாழ்கை நகர்கிறது. 


மேலும் சிந்திப்போம்.....




Sunday, December 6, 2020

திருக்குறள் - அறமெனும் வாழ்க்கை

 திருக்குறள் - அறமெனும் வாழ்க்கை 


பொதுவாகச் சொல்லப்படும் பிரம்மச்சரியம், இல்வாழ்கை, வானப்ரஸ்தம், சன்யாசம் என்ற வாழ்க்கையின் நான்கு கூறுகளை வள்ளுவர் இரண்டுக்குள் அடக்குகிறார். 


இல்லறம், துறவறம் என்ற இரண்டில் அதை அடக்குகிறார். 


எப்படி ?


பிரம்மச்சரியம் என்பது இல்வாழ்வின் முதல் பகுதி. எனவே அதை இல்லறத்தில் சேர்த்து விட்டார். 


வானப்ரஸ்தம், சன்யாசம் என்ற இரண்டும் துறவறத்தின் இரண்டு படிகள் என்பதால் அவற்றை துறவரத்தோடு சேர்த்து விட்டார். 


இல்லறம், துறவறம் - இதுதான் வாழ்கை. 


எங்கே இதற்கு வெளியே ஒரு அமைப்பை சிந்தியுங்கள் பார்ப்போம்? முடியாது. 


எப்படி சுத்தினாலும், இந்த இரண்டுக்குள் வந்துதான் ஆக வேண்டும். 


இந்த இரண்டில் வேண்டுமானால் மேலும் சில பிரிவுகளை நாம் உண்டு பண்ணிக் கொள்ளலாம். பெரும் பகுதி என்பது இது தான். 


வள்ளுவர் பார்வையில் இல்லறத்த்தின் நோக்கம் துறவறம் தான். 


அதானே...கடைசியில் எல்லோரையும் கையில் ஒரு சட்டியை கொடுத்து சாமியாராகப் போகச் சொல்லுவதுதான் இந்த இலக்கியங்களின் நோக்கம். 


எப்பப் பாரு, நிலையாமை, துறவறம், சாவு என்று இதையே பேசிக் கொண்டு இருப்பது. 


சந்தோஷமாக வாழ வழி சொல்லுவதே இல்லை. யார் இதை எல்லாம் படிப்பார்கள் என்ற அலுப்பு வரலாம்.


நம்பினால் நம்புங்கள்....நம்பாவிட்டால் உங்கள் இஷ்டம்...நாளும் நீங்கள் துறவறம் நோக்கித் தான் நகர்ந்து கொண்டு இருக்கிரீர்கள். நீங்கள் அறிவது இல்லை. 


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_6.html

click the above link to continue reading 


நீங்கள் விரும்பி சில அடிகள், நீங்கள் விரும்பாமல் சில அடிகள் என்று ஒவ்வொரு நாளும் துறவறம் நோக்கித் தான் நடை போட்டுக் கொண்டு இருக் கிறீர்கள்.


இல்லியே...நான் வாழ்கையை அனுபவிக்க அல்லவா துடித்துக் கொண்டு இருக்கிறேன். மனைவி, பிள்ளைகள், சொத்து, சுகம், உறவு, பட்சணம், விருந்து, பூஜை, புனஸ்காரம், டிவி, whatsapp என்று வாழ்க்கையை முழுவதுமாக அனுபவித்துக் கொண்டு தானே இருக்கிறேன். எங்கே துறவறம் நோக்கி நடக்கிறேன் என்று நீங்கள் கேட்கலாம்.


சொல்கிறேன். ஆச்சரியப் பட்டுப் போவீர்கள்.



Saturday, December 5, 2020

திருக்குறள் - வாழ்க்கை எப்படி நகர்கிறது?

 திருக்குறள் - வாழ்க்கை எப்படி நகர்கிறது?


ஒரு நல்ல வாழக்கை என்பது எப்படி இருக்கும் என்று வள்ளுவர் வடிவமைத்துக் காட்டுகிறார். அவர் புதிதாக ஒன்றும் கண்டு பிடித்துச் சொல்லவில்லை. இருப்பதை ஆழ்ந்து , உன்னிப்பாக கவனித்து வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறார். 


அவர் காட்டும் வாழ்க்கைக்கு வெளியே ஒன்றை நம்மால் சிந்திக்க முடியுமா என்பது சந்தேகமே.


சரி, அப்படி என்ன தான் சொல்லி இருக்கிறார்? 


பொதுவாக நமது இந்திய வாழ்க்கை முறை என்பது நான்கு கூறுகளாக பிரிக்கப் படுகிறது. நாம் அறிந்தது தான். 


பிரம்மச்சரியம் - இளமைக் காலம், கல்வி கற்கும் காலம். 

க்ரஹஸ்தம் - திருமணம் முடித்து, இல்வாழ்க்கையில் ஈடுபடுவது 

வானப்ரஸ்தம் - பொறுப்புகளை அடுத்த தலைமுறையிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கி வழி விடுவது

சன்யாசம் - வீடு, சமூகம் இவற்றை துறந்து கானகம் செல்வது 


இதில் ஒன்றும் பெரிய மாற்றம் நாம் கண்டுவிட முடியாது. இளமையில் கல்வி கற்காமல் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று யாரும் சொல்ல முடியாது. 


வாழ்க்கை இப்படித்தான் போகும். ஆற்றோட்டம் போன்ற இயற்கை கதி இது. சிலர் திருமணம் முடிக்காமல் இருக்கலாம், சிலர் சாகும் வரை வீட்டுப் பொறுப்பை சுமந்து கொண்டு அடுத்த தலைமுறைக்கு வழி விடாமல் இருக்கலாம். அது அங்கொன்றும், இங்கொன்றுமாக விதி விலக்காக இருக்கமே அன்றி அதுவே பொது விதியாக இருக்காது. 


வள்ளுவர் இந்த நான்கை சுருக்கி இரண்டாக ஆக்கினார். 


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_5.html


click the above link to continue reading



இல்லறம், துறவறம் என்று. வாழ்க்கை இந்த இரண்டுக்குள் அடங்கிவிடும் என்கிறார். 


இரண்டுமே அறம் தான். 


இல்லறம் - எல்லாம் சேர்ப்பது, உறவுகள், பொருள், என்று சேர்ப்பது. 


துறவறம் - எல்லாவற்றையும் விடுவது. 


சேர்ப்பதும் அறம், விடுவதும் அறம். 


அது எப்படி இரண்டும் அறமாக முடியும்? 


சரி, அது ஒரு புறம் இருக்கட்டும்...அறம் மட்டும் தான் குறிக்கோள் என்றால் பின் ஏன் பொருள், இன்பம் என்று மேற்கொண்டு சொன்னார்? அது எப்படி இங்கே பொருந்தும்? 


துறவறத்துக்கும் காமத்துப் பாலுக்கும் என்ன சம்பந்தம் ? 


இல்லறம், துறவறம் என்று இரண்டு அறங்கள் இருந்தால் எதை எடுப்பது, எதை விடுவது ?


எல்லாரும் துறவியாக போக முடியுமா? 


இப்படி பல கேள்விகள் இருக்கின்றன.


அனைத்துக்கும் விடை காண்போம். 


Tuesday, December 1, 2020

திருக்குறள் - வாழ்வின் நோக்கம்

 திருக்குறள் - வாழ்வின் நோக்கம் 


இந்த வாழ்வின் நோக்கம் என்ன? நாம் ஏதோ ஒன்றை சாதிக்க வேண்டும் என்று நினைத்துப் பிறக்கவில்லை. இந்த நாட்டில், இந்த மதத்ததில், இந்த மொழி பேசும் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று நினைத்து நாம் பிறக்கவில்லை. நம் பிறப்பு நம் கையில் இல்லை. 


ஒரு நோக்கமும் இன்றி பிறந்து விடுகிறோம். பிறந்த பின் என்ன செய்வது? எப்படி வாழ்வது? இந்த வாழ்கையை எப்படி செம்மையாக கொண்டு செல்வது? என்று எப்படி கண்டு பிடிப்பது?

நம் வாழ்க்கைக்கு ஒரு குறிக்கோள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கைக்கு என்று பொதுவாக ஏதாவது குறிக்கோள் இருக்கிறதா? 


சரி அப்படி இருந்தால், எல்லார் வாழ்கையும் ஒரே மாதிரி ஆகி விடாதா?  திருக்குறள் என்று இல்லை, எந்த ஒரு நூலும் வாழ்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா ?


இப்படி யோசிப்போம். எத்தனையோ அறிவியல் விதிகள் இருக்கின்றன. உலகில் உள்ள பொருள்கள், உயிர்கள் உட்பட அந்த விதிகளுக்கு உட்பட்டுத்தான் இயங்குகின்றன. அதனால் என்ன குறைந்து போய் விட்டது? 


எப்படி அறிவியல் விதிகள் உலகியல் பொருள்களை விளக்கம் செய்கின்றனவோ, அது போல் திருக்குறள் போன்ற நூல்கள் வாழ்வியலை நமக்கு விளக்கம் செய்கின்றன. 


ஆயிரக்கணக்கான பேரின் வாழ்க்கைகளை கூர்ந்து நோக்கி, வாழ்வின் பின்னால் இப்படி ஒரு சில விதிகள் இருக்கின்றன என்று கண்டு சொல்கின்றன இந்த நூல்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post.html

click the above link to continue reading



அவை என்ன விதிகள் ? அந்த விதிகளை தெரிந்து கொள்வதால் நமக்கு என்ன பயன்? தெரியாவிட்டால் என்ன ஆகி விடும்?  அந்த விதிகளை எப்படி நம் வாழ்வில், நமக்கு இன்பம் தரும் படி பயன் படுத்திக் கொள்வது?


இவை பற்றி சிந்திப்போம். 


விதிகளை தெரிந்து கொள்வதால் அதன் படி நடக்க வேண்டும் என்று இல்லை. 

உயரத்தில் இருந்து குதித்தால் கீழே விழுவோம், விழுதால் அடி படும், வலிக்கும் என்பது விதி. 


இல்லை நான் குதித்துப் பார்கிறேன். ஒருவேளை நான் கீழே விழாமல் காற்றில் மிதந்தாலும் மிதக்கலாம்...யார் கண்டது என்று குதித்து முயற்சி செய்து பார்க்கலாம். தவறு ஒன்றும் இல்லை. 


விதிகள் தெரிந்தால், அதை கடை பிடித்தால் , வாழ்கை நன்றாக இருக்கும். அவ்வளவுதான். 


அப்படி என்ன பெரிய விதிகளை திருக்குறள் கண்டு சொல்லி விட்டது?


பார்ப்போம்.