Saturday, December 5, 2020

திருக்குறள் - வாழ்க்கை எப்படி நகர்கிறது?

 திருக்குறள் - வாழ்க்கை எப்படி நகர்கிறது?


ஒரு நல்ல வாழக்கை என்பது எப்படி இருக்கும் என்று வள்ளுவர் வடிவமைத்துக் காட்டுகிறார். அவர் புதிதாக ஒன்றும் கண்டு பிடித்துச் சொல்லவில்லை. இருப்பதை ஆழ்ந்து , உன்னிப்பாக கவனித்து வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறார். 


அவர் காட்டும் வாழ்க்கைக்கு வெளியே ஒன்றை நம்மால் சிந்திக்க முடியுமா என்பது சந்தேகமே.


சரி, அப்படி என்ன தான் சொல்லி இருக்கிறார்? 


பொதுவாக நமது இந்திய வாழ்க்கை முறை என்பது நான்கு கூறுகளாக பிரிக்கப் படுகிறது. நாம் அறிந்தது தான். 


பிரம்மச்சரியம் - இளமைக் காலம், கல்வி கற்கும் காலம். 

க்ரஹஸ்தம் - திருமணம் முடித்து, இல்வாழ்க்கையில் ஈடுபடுவது 

வானப்ரஸ்தம் - பொறுப்புகளை அடுத்த தலைமுறையிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கி வழி விடுவது

சன்யாசம் - வீடு, சமூகம் இவற்றை துறந்து கானகம் செல்வது 


இதில் ஒன்றும் பெரிய மாற்றம் நாம் கண்டுவிட முடியாது. இளமையில் கல்வி கற்காமல் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று யாரும் சொல்ல முடியாது. 


வாழ்க்கை இப்படித்தான் போகும். ஆற்றோட்டம் போன்ற இயற்கை கதி இது. சிலர் திருமணம் முடிக்காமல் இருக்கலாம், சிலர் சாகும் வரை வீட்டுப் பொறுப்பை சுமந்து கொண்டு அடுத்த தலைமுறைக்கு வழி விடாமல் இருக்கலாம். அது அங்கொன்றும், இங்கொன்றுமாக விதி விலக்காக இருக்கமே அன்றி அதுவே பொது விதியாக இருக்காது. 


வள்ளுவர் இந்த நான்கை சுருக்கி இரண்டாக ஆக்கினார். 


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_5.html


click the above link to continue reading



இல்லறம், துறவறம் என்று. வாழ்க்கை இந்த இரண்டுக்குள் அடங்கிவிடும் என்கிறார். 


இரண்டுமே அறம் தான். 


இல்லறம் - எல்லாம் சேர்ப்பது, உறவுகள், பொருள், என்று சேர்ப்பது. 


துறவறம் - எல்லாவற்றையும் விடுவது. 


சேர்ப்பதும் அறம், விடுவதும் அறம். 


அது எப்படி இரண்டும் அறமாக முடியும்? 


சரி, அது ஒரு புறம் இருக்கட்டும்...அறம் மட்டும் தான் குறிக்கோள் என்றால் பின் ஏன் பொருள், இன்பம் என்று மேற்கொண்டு சொன்னார்? அது எப்படி இங்கே பொருந்தும்? 


துறவறத்துக்கும் காமத்துப் பாலுக்கும் என்ன சம்பந்தம் ? 


இல்லறம், துறவறம் என்று இரண்டு அறங்கள் இருந்தால் எதை எடுப்பது, எதை விடுவது ?


எல்லாரும் துறவியாக போக முடியுமா? 


இப்படி பல கேள்விகள் இருக்கின்றன.


அனைத்துக்கும் விடை காண்போம். 


1 comment: