Showing posts with label முதுமொழிக் காஞ்சி. Show all posts
Showing posts with label முதுமொழிக் காஞ்சி. Show all posts

Tuesday, September 28, 2021

முதுமொழிக் காஞ்சி - கல்வியா ஒழுக்கமா ?

 முதுமொழிக் காஞ்சி - கல்வியா ஒழுக்கமா ?


கல்வியா ? ஒழுக்கமா? இதில் எது உயர்ந்தது என்று கேட்டால், நம் இலக்கியம் அத்தனையும் ஒட்டு மொத்தமாக கூறுவது ஒழுக்கத்தைத்தான். 


எவ்வளவுதான் கல்வி கற்று இருந்தாலும், ஒழுக்கம் இல்லை என்றால் ஒருவனை நம் இனம் மதிப்பது இல்லை. 


இராவணன் கல்லாத கல்வியா ?  அவன் கல்வியை யாரும் மதிக்கவில்லை. காரணம், அவனின் ஒழுக்கக் குறைவு. 


பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள், மிகப் படித்தவர்கள் ஒழுக்கம் குறைந்து நடந்தால் நாம் அவர்களை மதிப்போமா? 


அடடா எவ்வளவு படித்த மனிதர், எவ்வளவு செல்வம், செல்வாக்கு, அதிகாரம் உள்ளவர் என்று நினைப்போமா அல்லது இவ்வளவு இருந்தும் அவனுக்கு புத்தி போகுது பாரு என்று ஏளனம் செய்வோமா? 


படிப்பு, எப்போதும் படித்துக் கொள்ளலாம். ஒழுக்கம் சிறு வயதில் வந்தால்தான் உண்டு. அப்புறம் வராது. 


கற்ற கல்வி சில சமயம் மறந்து போய்விடும். தவறில்லை. மீண்டும் படித்துக் கொள்ளலாம். ஒழுக்கம் போனால்?  அந்தப் பெண் இது வரை ஒரே ஒரு தரம்தான் கற்பு தவறி நடந்து இருக்கிறாள் என்றால் சரியாகிவிடுமா? 


பாடல் 


ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்

ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_28.html


(Please click the above link to continue reading)



ஆர்கலி யுலகத்து  = ஆரவாரமான ஒலியை உடைய கடல் சூழ்ந்த உலகில் 


மக்கட் கெல்லாம் = மக்களுக்கு எல்லாம் 


ஓதலிற் = படிப்பை விட, கல்வி அறிவை விட 


 சிறந்தன் றொழுக்க முடைமை. = சிறந்தது ஒழுக்கம் உடைமை 


கல்வியை விட உயர்ந்தது ஒழுக்கம் உடைமை. 


இதெல்லாம் சின்ன வயதில் சொல்லித் தர வேண்டும். 


twinkle twinkle litter star

baa baa black sheep

eating sugar...no papa 


என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். 


வாழ்நாள் பூராவும் ஒருவனுக்கு துணை செய்யும் ஆழமான, அறிவுபூர்வமான, அனுபவ பூர்வமான எளிய பாடல்களை விட்டு விட்டு 


rain rain go away 


என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். 


சிந்திக்க வேண்டிய விடயங்கள்.