Sunday, January 29, 2023

கந்தரனுபூதி - யாமோதிய கல்வியும் பாகம் 2

                  

 கந்தரனுபூதி -  யாமோதிய கல்வியும் பாகம் 2




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 




பாடல் 



யாமோதிய கல்வியும் எம்மறிவுந்

 தாமேபெறவேலவர் தந்ததனாற்

 பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்

 நாமேல் நடவீர் நடவீர் இனியே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

(pl click the above link to continue reading)


யாமோதிய = யாம் ஓதிய. ஓதுதல் என்றால் திரும்பச் திரும்பச் சொல்லுதல். மனப்பாடம் செய்தல். 


கல்வியும் = கல்வியும் 


எம்மறிவுந் = கல்வியில் இருந்து வரும் அறிவும் 


 தாமே = நாமே 


பெற = பெற்றுக் கொள்ள 


வேலவர் = வேலைக் கொண்டவர் (முருகர்) 


தந்ததனாற் = தந்த அதனால் 


 பூமேல் = பூமியின் மேல். அதில் உள்ள உயிர்கள், பொருள்கள் மேலும் 


மயல்போய் = மையல் போய். ஆசை போய். 


அற = அறம் 


மெய்ப் = உண்மை 


புணர்வீர் = சென்று அடைவீர் 



 நாமேல் = நாவின் மேல் 


நடவீர் நடவீர் இனியே! = செல்லுங்கள், செல்லுங்கள் இனியே. அதாவது அவன் திருநாமத்தை சொல்லிக் கொண்டு செல்லுங்கள் 


" தாமேபெறவேலவர் தந்ததனாற்"


என்ற இந்த வரிக்கு என்ன அர்த்தம்? பல உரைகளில் "தாமே" என்பதை "நாமே" என்று எடுத்துக் கொண்டு உரை செய்கிறார்கள். அது நாமே என்றால் ஏன் அருணகிரிநாதர் அப்படியே சொல்லி இருக்கலாமே? தாமே என்பதற்கும் நாமே என்பதற்கும் ஒரு யாப்பிலக்கண வேறுபாடு ஒன்றும் இல்லையே?


எனவே, எனக்குத் தோன்றியதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். சரியா தவறா என்று தெரியாது. தவறென்றால், ஆன்றோர் பொறுக்க.


இதற்கு முந்தைய வரியில் 


"நாமோதிய கல்வியும் அறிவும்" என்று சொல்கிறார். 


கல்வி வேறு, அறிவு வேறு என்று தெரிகிறது அல்லவா?


கல்வி என்பது வெளியில் இருந்து உள்ளே செல்வது. அறிவு என்பது உள்ளே இருந்து வெளியில் வருவது. 


நாம் பிறக்கும் போதே ஏதோ ஒரு அறிவுடன் பிறக்கிறோம். நாம் கற்கும் கல்வி அந்த அறிவை வெளியே கொண்டு வரும். 


வயற்காட்டில் நீர் பாய்சுபவர்கள் முதலில் அந்த எந்திரதுகுள் ஒரு சொம்பு நீரை விட்டு அந்த அந்த எந்திரத்தை ஒரு சுற்று சுற்றி விடுவார்கள். அது டப் டப் என்று தொடங்கி கிணற்றில் உள்ள நீரை வெளியே கொண்டு வரும். 


ஆங்கிலத்தில் priming the pump என்று சொல்லுவார்கள். 


முதலில் கொஞ்சம் நீரை விட வேண்டும். பின் அது உள்ளுக்கு இருக்கும் நீரை வெளியே கொண்டு வரும். 


அது போல, நாம் கற்ற கல்வி, அறிவாக வெளியே வர வேண்டும். 


சரி, அந்த வரிக்கும்,இந்த வரிக்கும் என்ன சம்பந்தம். 


ஒரு வீட்டில் அப்பாவும், அம்மாவும் பெரிய படிப்பு படித்து இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து இருக்கும். அதற்கு ஒரு வயது ஆகும் போது, அவர்கள் அந்த குழந்தைக்கு அம்மா, அத்தை, அப்பா என்று சொல்லித் தருவார்கள். அந்தக் குழந்தையும், தட்டுத் தடுமாறி மழலை மொழியில் அம்மம்மா, அப்பப்பா என்று சொல்லும். 


பெற்றோர் பூரித்துப் போவார்கள். இன்னிக்கு என் பிள்ளை அம்மான்னு சொல்லுச்சு என்று போன் போட்டு அவர்கள் அம்மா அப்பாவிடம் சொல்லி மகிழ்வார்கள். 


அம்மா அப்பா என்று சொல்லுவது என்ன பெரிய கடினமான செயலா? அவர்களுக்குத் தெரியாதா? அவர்கள்தானே சொல்லித் தந்தார்கள். 


இருந்தும் பிள்ளை சொன்னால் அது பெரிய மகிழ்ச்சி. 


அது போல இறைவன் தந்த அறிவும், கல்வியும், அவனை நாம் போற்ற, அவனை நாம் அறிந்து கொள்ள, அவன் அருளியது.  அவனை அறிந்து, அவனை அடைய அவன் நமக்குத் தந்தது. 


நாமே அவனிடம் அடைக்கலம் ஆகும் போது, நம் கல்வியும், அறிவும் அவனை சேர்ந்து விடுகிறதுதானே. 


அவன் கொடுத்தான், அவனே பெற்றுக் கொண்டான். 


தாமே பெற வேலவர் தந்ததனால் 


அதாவது, அறிவும், கல்வியும் இறைவனை அடைய வழி செய்ய வேண்டும். 


இதையே வள்ளுவரும்


கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின் 


என்பார்.


கல்வி, உயிர்களை இறைவனிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 


மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில்,


அம்மா, பிள்ளைக்கு அப்பாவை அறிமுகம் செய்கிறாள். 


அப்பா, பிள்ளைக்கு குருவை அறிமுகம் செய்கிறார். 


குரு, பிள்ளைக்கு இறைவனை அறிமுகம் செய்கிறார். 


குரு தரும் கல்வி இறைவனிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 


இது என் கருத்து. சரியோ, தவறோ தெரியாது. 


சரி என்றால் நல்லது. 


இல்லை என்றால் தள்ளி விடவும். 



 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 


]




No comments:

Post a Comment