Wednesday, January 11, 2023

திருக்குறள் - புறங்கூறாமை - அறம்கூறும் ஆக்கம்

  

 திருக்குறள் - புறங்கூறாமை -  அறம்கூறும் ஆக்கம்


(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)


புறம் கூறி வாழ்வதை விட சாவது நல்லது என்கிறார் வள்ளுவர். 


புறம் கூறுவது அவ்வளவு மோசமானது என்பது ஒரு புறம் இருக்கட்டும், அது எப்படி சாவதை விட சிறந்ததாக முடியும்? இறந்த பின் ஒன்றும் இல்லையே. அதை விட சிறப்பு என்றால் அது எப்படி முடியும்?



பாடல்  



புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

அறம்கூறும் ஆக்கம் தரும்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_11.html


(pl click the above link to continue reading)



புறம்கூறிப் பொய்த்து  = ஒருவன் இல்லாத போது அவனை பழித்துக் கூறி நேரில் கண்ட போது புகழ்ந்து, அப்படி ஒரு பொய்யாக  


உ யிர் வாழ்தலின் = உயிர் வாழ்வதை விட 


சாதல் = இறப்பது 


அறம்கூறும் ஆக்கம் தரும் = அற நூல்கள் சொன்ன ஆக்கத்தைத் தரும் 


இறப்பது எப்படி ஆக்கம் தரும் என்ற கேள்விக்கு பரிமேலழகர் உரை செய்கிறார். 


ஒருவன் புறம் சொல்லி உயிர் வாழ்ந்து கொண்டிருந்தால், அவன் மேலும் மேலும் பாவத்தைச் செய்து கொண்டே இருப்பான். அந்தப் பாவங்கள் அவனுடைய பின் பிறவிகளில் அவனை வாட்டும்.


மாறாக,


அவன் இறந்து போனால், மேற் கொண்டு பாவம் செய்ய முடியாது. அவன் பாவச் சுமை குறையும். இனி வரும் பிறவிகள் நல்ல பிறவிகளாக அமையும். 


எனவே தான், புறம் சொல்லி பொய்த்து உயிர் வாழ்வதை விட சாவது அறம் கூறும் ஆக்கம் தரும் என்றார். 


எப்படி எழுதி இருக்கிறார்கள். எப்படி படித்து இருக்கிறார்கள். 





(அறன் அல்ல



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html



அறனழீஇ 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html



No comments:

Post a Comment