Tuesday, January 3, 2023

திருவாசகம் - திரு அம்மானை - சேர்ந்து அறியாக் கையானை

             

திருவாசகம் - திரு அம்மானை  -    சேர்ந்து அறியாக் கையானை




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


இறைவனால் எல்லாம் முடியும். ஆனால் அவனுக்கும் ஒன்று தெரியாது. அது, இன்னொருவர் முன்னால் கை கூப்புவது. இறைவன் யார் முன்னால் எதற்காக கை கூப்பப் போகிறான். 


மணிவாசகர் சொல்கிறார் "சேர்ந்தறியா கையானை" என்று. 


இறைவன் இருக்கின்றானா இல்லையா என்ற கேள்வி அன்று தொட்டு இன்று வரை நடந்து கொண்டே இருக்கிறது. 


அவன் இருக்கிறான், இல்லாமலும் இருக்கிறான். 


உள்ளதில் அன்பு இருந்தால் அவன் இருப்பது தெரியும். அன்பு இல்லாவிட்டால் இறையை உணர முடியாது. 


அன்பே சிவம். 


அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே


என்பார் திருமூலர். 


அன்புதான் சிவம். 



பாடல் 


கைஆர் வளை சிலம்பக் காதுஆர் குழை ஆட

மைஆர் குழல் புரழத் தேன் பாய வண்டு ஒலிப்பச்

செய்யானை வெண் நீறு அணிந்தானைச் சேர்ந்து அறியாக்

கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு

மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை

ஐயாறு அமர்ந்தானைப் பாடுதும் காண் அம்மானை!


பாடல் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post.html


(pl click the above link to continue reading)


கைஆர் வளை சிலம்பக் = கைகளில் அணிந்த வளையல்கள் ஒலிக்க 


 காதுஆர் குழை ஆட = காதில் அணிந்த குழை ஆட 


மைஆர் குழல் புரழத் = மை போல் கறுத்த குழல் அலை பாய 



தேன் பாய = அந்தக் குழலில் சூடிய மலர்களில் இருந்து தேன் பாய்ந்து வர 


வண்டு ஒலிப்பச் = அந்தத் தேனை உருசிக்க வண்டுகள் ரீங்காரம் இட்டு வர 


செய்யானை = சிவந்த மேனி கொண்டவனை 


வெண் நீறு அணிந்தானைச் = திரு வெண்நீறு அணிந்தவனை 



சேர்ந்து அறியாக் கையானை  = இரண்டு கைகளை கூப்பி அறியாதவனை 



எங்கும் செறிந்தானை = எங்கும் நீக்கம் அற நிறைந்து இருப்பவனை 


அன்பர்க்கு மெய்யானை  = உள்ளதில் அன்பு உள்ளவர்களுக்கு உண்மையானவனை 



அல்லாதார்க்கு அல்லாத வேதியனை = உள்ளதில் அன்பு இல்லாதவர்களுக்கு அவனும் இல்லாமல் இருப்பவனை 


ஐயாறு அமர்ந்தானைப் = திருவையாற்றில் இருப்பவனை 


 பாடுதும் காண் அம்மானை! = பாடுவோம் அம்மானாய் 







முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 




கண்ணார் கழல்காட்டி



அப்பாலைக்கு அப்பாலை 


)


No comments:

Post a Comment