Monday, January 9, 2023

திருவாசகம் - திரு அம்மானை - என்வினையை ஓட்டுகந்து

              

திருவாசகம் - திரு அம்மானை  -   என்வினையை ஓட்டுகந்து




(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


நேற்று மதியம் என்ன சாப்பிட்டாய் என்று கேட்டால் ஞாபகம் இருக்கும். அதற்கு முந்தைய தினம்? போன வாரம், போன மாதம், போன வருடம் ? கட்டாயம் ஞாபகம் இருக்காது. 


நாம் உண்டது, ஒரு சில நாட்களில் மறந்து போகிறது.


அது நல்லதுதான். அது முக்கியமான விடயம் இல்லை என்பதால் நம் மூளை அவற்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது இல்லை. 


நம் போன பிறப்பு என்ன என்று கேட்டால் ஞாபகம் இருக்குமா?  


மணிவாசகர் சொல்கிறார், "யானையாக, புழுவாக, மனிதராய், தேவராய் மற்றும் வேற பிறவிகளாக பிறந்து இறந்து இருப்பவனை, அவன் என் பிறவித் தொடரை நிறுத்தி, என்னையும் தன் குழுவில் சேர்த்துக் கொண்ட அவன் திருவடிகளை போற்றி பாடுவோம்"




பாடல் 


ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய்

ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த்தேனை

ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஓட்டுகந்து

தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய

கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும்

வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_9.html


(pl click the above link to continue reading)


ஆனையாய்க் = உருவத்தில் பெரிய யானையாய் 


கீடமாய் = உருவத்தில் சிறிய புழுவாய் 


மானுடராய்த் = மனிதராய் 


தேவராய் = தேவராய் 


ஏனைப் = மற்ற 


பிறவாய்ப் = பிறவிகளாக 


பிறந்திறந் தெய்த்தேனை = பிறந்து, இறந்து இருப்பவனை 


ஊனையும் = என் ஊனையும் 


நின்றுருக்கி = நின்று உருக்கி 


என்வினையை = என்னுடைய வினைகளை 


ஓட்டுகந்து = உகந்து (உவந்து = விரும்பி) ஓட விட்டு. அதாவது, என் வினைகளை விருப்போடு விலக்கி 


தேனையும் = தேனையும் 


 பாலையுங் = பாலையும் 


கன்னலையும் = கரும்புச் சாரையும் 


ஒத்தினிய = ஒத்து, இனிய 


கோனவன்போல் = அரசன் போல் 


வந்தென்னைத் = வந்து என்னை 


தன் = தன்னுடைய 


தொழும்பிற் = அடியார் கூட்டத்தில் 


கொண்டருளும் = சேர்த்துக் கொண்டு அருளும் 


வானவன் = வானில் உறைபவன் 


பூங்கழலே = பூ போன்ற திருவடிகளை 


பாடுதுங்காண் அம்மானாய்.  = பாடிடுவோம் அம்மானாய் 


"

எழுகடல் மணலை அளவிடி னதிக

     மெனதிடர் பிறவி ...... அவதாரம்"


ஏழு கடலில் உள்ள மணலை கூட எண்ணி விடலாம், அதை விட அதிகம் எனது முற்பிறவிகளின் எண்ணிக்கை என்பார் அருணகிரிநாதர். 


"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்பார் மனிவாசகர்.


பிறவிகள் இருக்கிறதா என்று நமக்குத் தெரியவில்லை. பிறவிகளின் தொடர்பு புரியவில்லை. 


இன்றைய அறிவியல் பரிணாம வளர்ச்சி பற்றி கூறுகிறது. ஒன்றில் இருந்து ஒன்று வந்தது என்று சொல்கிறது. 


குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று சொல்கிறது. 


ஆனால் நம் ஆன்மீகம், மனிதன் குரங்காகவும் ஆகலாம் என்கிறது. நம் அறிவுக்கு அது எட்டவில்லை. 


"ஊனை உருக்கி" என்று பல இடங்களில் மணிவாசகர் சொல்கிறார். 


ஏதோ ஒன்றில் மனம் இலயித்து விட்டால் பசி மறந்து போகும். ஒரு வேலையும் இல்லாமல் சும்மா இருந்தால், எதையாவது சாப்பிடுவோமா என்று தோன்றும். அறிவுப் பசி, ஆன்மத் தேடல் இருந்து விட்டால் பசி தூக்கம் போய் விடும். உடல் தானே இளைக்கும். 


மூன்று வேளையும் மூக்கு பிடிக்க உண்டால் தூக்கம்தான் வரும். 


தேடுவோம். 





முன்னுரை:

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html


அறைகூவி, வீடு அருளும்


வாரா வழியருளி


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html


அந்தம் இலா ஆனந்தம்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html


தாய்போல் தலையளித்திட்டு


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html


கல்லைப் பிசைந்து கனி ஆக்கி

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html


காட்டாதன எல்லாம் காட்டி

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html


தாயான தத்துவனை




பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1


பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 2



வியப்புருமாறு 




கண்ணார் கழல்காட்டி



அப்பாலைக்கு அப்பாலை 


)


No comments:

Post a Comment