Friday, January 20, 2023

கந்தரனுபூதி - என்று அருள்வாய் ? பாகம் 1

                

 கந்தரனுபூதி -  என்று அருள்வாய் ?  பாகம் 1 




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


குகன் !


முன்பொரு காலத்தில் கங்கை கரை ஓரம் ஒரு முனிவர் தன்னுடைய மகனுடன் வசித்து வந்தார். ஒரு நாள், அந்த பையன் தன் தந்தையிடம் "தந்தையே, உலகில் பெரிய கடவுள் யார்" என்று கேட்டான். அவரும் முருகன் தான் தனிப் பெரும் கடவுள் என்றார். 


அப்படி இருக்கும் போது ஒரு நாள், அவர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் அந்நாட்டின் மன்னன் அந்த முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தான். முனிவர் இல்லாததைக் கண்டு வருந்தினான். அப்போது, முனிவரின் மகன், "மன்னா, வந்த காரியம் என்ன" என்று கேட்டான். 


"நான் வேட்டைக்கு வந்த இடத்தில், தவறுதலாக ஒரு முனிவர் மேல் அம்பை விட்டு விட்டேன். அவரும் இறந்ததால், ப்ரம்மஹத்தி தோஷம் என்னை துரத்துகிறது" என்றான். 


முனிவரின் மகனோ, "இதற்கா வருந்துகிறீர்கள். நான் பரிகாரம் சொல்கிறேன். இதோ இந்த கங்கையில் மூழ்கி, மூன்று முறை முருகா என்று சொல்லுங்கள், பிரம்மஹத்தி ஓடிவிடும்" என்றான். 


மன்னனும் அவ்வாறே செய்ய, ப்ரம்மஹத்தி விலகியது. 


முனிவர் திரும்பி வந்தார். நடந்ததை கேட்டு அறிந்து, மகன் மேல் மிகுந்த கோபம் கொண்டார். "முருகன் நாமத்தை ஒரு முறை சொன்னாலே ஓராயிரம் பிரம்மஹத்தி விலகுமே...நீ மூன்று முறை சொல்லச் சொல்லி இருக்கிறாய். முருக நாமத்தின் அருமை தெரியாத நீ கல்வி அறிவு இல்லாத வேடனாகப் போ" என்று சாபம் தந்தார். 


பின், கோபம் தணிந்து, சாப விமோசனமாக "நீ கங்கை கரையில் குகன் என்ற பெயரோடு வேடனாக பிறப்பாய். இராமன் வருவான். அவனுக்கு பணிவிடை செய்து உன் சாபம் விலகப் பெறுவாய்" என்று அருளினார். 


அந்த முனிவனின் மகன்தான் இராமாயணத்தில் குகனாக வந்தான் என்று ஒரு கதை உண்டு. 


குகன் என்றால் குகையில் வாழ்பவன். 


பக்தர்களின் மனம் என்ற குகையில் இருப்பவன் குகன். 


"அருள்வாய் குகனே" என்பார் அருணகிரிநாதர். 




உருவாய் அருவாய், உளதாய் இலதாய்

மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.



முருகன் !


முருகு என்ற சொல்லுக்கு அழகு, இளமை என்று பொருள்.  என்றும் அழகோடு இருப்பவன், என்றும் இளமையோடு இருப்பவன் முருகன். 



குமரன் !


குமாரன் என்பதன் மரூஉ. இளையவன்.


"முருகன், குமரன், குகன் என்று உன் நாமத்தை கூறு உள்ளம் உருகும் படி என்று அருள்வாய்?  வானவரும், மண்ணில் உள்ளவரும் வணங்கும் குருவடிவாணவனே, எட்டு குணங்கள் நிறைந்தவனே" 


 என்று உருகுகிறார் அருணகிரியார். 


பாடல் 


முருகன் குமரன் குகன் என்று மொழிந்து 

உருகும் செயல் தந்து உணர்வு என்று அருள்வாய் ? 

பொரு புங்கவரும் புவியும் பரவும் 

குருபுங்கவ ! எண்குண பஞ்சரனே 


பொருள் 



(pl click the above link to continue reading)



முருகன் = முருகன் 


குமரன் = குமரன் 


குகன் = குகன் 


என்று மொழிந்து  = என்று கூறி 


உருகும் = மனம் உருகும் 


செயல் தந்து = செயலைத் தந்து 


உணர்வு என்று அருள்வாய் ?  = உணர்வை என்று அருள்வாய்? 


பொரு புங்கவரும் = உன்னுடன் போரிட்ட வானவர்களும் 


புவியும் = புவியில் உள்ளவர்களும் 


பரவும்  = போற்றி பரவும் 


குருபுங்கவ ! = குரு வடிவானவனே  


எண்குண பஞ்சரனே  = எட்டு விதமான குணங்களின் வடிவானவனே 






 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html





]




No comments:

Post a Comment