Tuesday, March 21, 2023

கந்தரனுபூதி - அடியைக் குறியா

                        

 கந்தரனுபூதி -   அடியைக் குறியா 




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 

கந்தரநுபூதி ஆரம்பிக்கும் போது மெய்யியல் பற்றி சில பதிவுகளில் வாசித்தோம். இந்த பதிவின் இறுதியில் அந்தப் பதிவுகளின் வலை தள முகவரி இருக்கிறது. 


சைவ சித்தாந்தத்தின் அடிப்படை பதி, பசு, பாசம் என்ற மூன்று. 


பதி = இறைவன் 

பசு = உயிர்கள் 

பாசம் = இந்த உயிர்களை காட்டும் கயிறு. கயிறு என்றாலும் பாசம் என்றாலும் ஒன்றுதான். பாசக்கயிறு என்று நாம் சேர்த்துச் சொல்கிறோம். நடு சென்டர் என்பதுமாதி. 


இந்த மூன்றும் ஆதியில் இருந்தே இருக்கிறது.


இதில் பதி முழு ஞானம் உள்ளது. 


பசு முழுமையற்ற ஞானம் உடையது. 


பாசம் ஒரு ஆசையாய் பொருள். 


ஆதியில் இருந்த பசு, ஞானம் உள்ள இறைவனைப் பற்றாமல் ஞானமே இல்லாத அறியாமையில், அகங்காரத்தைப் பற்றி விடுகிறது. 


பின் அந்த அஞ்ஞான இருளில் இருந்து வெளிவர முயல்கிறது. அதுவே மூல கன்மம் என்று அழைக்கப் படுகிறது. 


நியாப்பப்படி பார்த்தால் ஆத்மா இறைவனைத்தான் பற்ற வேண்டும். 


பற்றுகிறதா? இல்லையே. 


அதை விடுத்து உலகியல் அனுபவங்களில் மூழ்கி விடுகிறது. 


சரி, ஆத்மாதான் அறிவு இல்லாமல் இப்படி போகிறது என்றால், இறைவன் அதை சரி செய்யக் கூடாதா? 


முடியும், ஆனால் மாட்டான். 


ஏன்?


இறைவனுக்கு ஒரு பற்றும் இல்லை. அவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன். ஆத்துமாக்களை காப்பாற்ற நினைத்தால் அவற்றின் மேல் இறைவனுக்கு விருப்பு வந்து விட்டது என்று ஆகி விடும். 


அருணகிரிநாதர் புலம்புகிறார் 


"என்னால் இந்த அறியாமை இருளை விட்டு வர முடியவில்லை. நீயும் உதவி செய்ய மாட்டேன் என்கிறாய். இது முறையோ முறையோ " என்று கேட்கிறார். 


தான் விடாதது ஒரு முறையோ .


இறைவன் வது ஏற்றுக் கொள்ளாதது இரண்டாவது முறையோ . 



பாடல் 


அடியைக் குறியா தறியாமையினான் 

முடியக் கெடவோ முறையோ முறையோ 

வடிவிக்ரம வேன் மகிபா குறமின் 

கொடியைப் புணரும்குண பூதரனே 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_21.html


(pl click the above link to continue reading)


அடியைக் = திருவடிகளை 



குறியா = குறித்து அறியாது 



தறியாமையினான்  = எனது அறியாமையினால் 



முடியக் = இறுதிவரை 


கெடவோ = நான் அழியவோ 



முறையோ முறையோ = அது முறைதானா, முறைதானா 



வடி = வடிவான 



விக்ரம வேன் = கூரான வேலை உடையவனே 



மகிபா = மகி + பா = மகி என்றால் உலகம். பா என்றால் பரிபாலனம் செய்வது 



குறமின் = மின்னல் போன்ற வடிவுடைய குற வள்ளியின் 

 



கொடியைப் = கொடி போன்றவளே 



புணரும் = சேரும் 



குண பூதரனே = குணங்களின் இருப்பிடம் ஆனவனே, குணங்களை காப்பவனே, குணங்களின் தலைவனே 



கொஞ்சம் இலக்கணம் படிப்போமா?


முறையோ முறையோ என்று இரண்டு முறை வருகிறது. 


பள்ளியில் படிக்கும் பொழுது இரட்டை கிளவி, அடுக்குத் தொடர் என்று படித்து இருக்கிறோம். 


பிரித்தால் பொருள் தந்தால் அடுக்குத் தொடர் இல்லை என்றால் இரட்டைக் கிளவி (சொல்). 


நீர் சல சல என்று ஓடியது, அவன் வள வள என்று பேசினான். இதில் உள்ள சல, வள என்பவை பிரித்தால் பொருள் தராது. 


முறையோ முறையோ என்பதில் பிரித்தால் பொருள் தரும். 


சொல்ல வந்தது அது அல்ல. 




இப்படி ஒரு சொல்லை பல முறை அடுக்க ஒரு இலக்கணம் இருக்கிறது. 



இலக்கணம் தெரியாமலேயே நாம் அவற்றை பயன் படுத்திக் கொண்டு இருக்கிறோம். 



உதாரணமாக, வீட்டில் பாம்பு வந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். 



பாம்பு பாம்பு என்று சத்தம் போடுவோமா அல்லது பாம்பு என்று சொல் சொல்லுவோமா? 



இரண்டு முறை சொன்னாலும், அதே பொருள் தானே ? ஏன் இரண்டு முறை சொல்ல வேண்டும். 



அது ஆபத்தைக் குறிக்கிறது. 



யாராவது தவறு செய்து விட்டால் "ஐயோ ஐயோ...இப்படியா செய்வது" என்று சொல்கிறோம். 



வாழ்க வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறோம். 



இப்படித் சொல்லை அடுக்க மூன்று விதிகள் இருக்கிறது. 



அசை நிலை, பொருள் நிலை, இசை நிறை என்று. 



அசை என்றால் அர்த்தம் இல்லாமல் வருவது. 


ஆ ஆ, ஏ ஏ - அசை நிலை 


பொருள் நிலையில் விரைவு, அச்சம், உவகை, அவலம் என்று நான்கு பகுதிகள் உண்டு. 


வா வா...வண்டி போகப் போகுது - விரைவு 


அருமை அருமை - உவகை 


ஐயோ ஐயோ, அல்லது அச்சோ அச்சோ - அவலம் 


தீ, தீ ; பாம்பு பாம்பு - அச்சம் 


இந்தப் பாடலில் உள்ள முறையோ முறையோ அவலம். அவலம் என்றால் துன்பம். 


எல்லாம் என் தலை எழுத்து தலை எழுத்து என்று சொல்வது போல. 


அசைநிலை பொருள்நிலை இசைநிறைக்கு ஒருசொல்

இரண்டு மூன்று நான்கு எல்லைமுறை அடுக்கும்


(நன்னூல் : 395)


குண பூதரனே என்று முடிகிறது. 


தரன் என்றால் காப்பவன்.  


கங்கையை தலையில் வைத்து காப்பவன் கங்காதரன் 



தரணீதரன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். 


 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


 யாமோதிய கல்வியும் பாகம் 2


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


உதியா மரியா


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html


மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html


உபதேசம் உணர்தியவா 


]




No comments:

Post a Comment