Sunday, March 26, 2023

கந்தரனுபூதி - அருள் சேரவும் எண்ணுமதோ

                         

 கந்தரனுபூதி -    அருள் சேரவும் எண்ணுமதோ 




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


உண்மையைத் தேடும் அந்த நீண்ட பயணத்தில் காமம் என்பது ஒரு தடைக் கல். 


அது ஒரு வேற்றுப்  பாதை. அதில் பயணம் செய்ய ஆரம்பித்தால், அது நம்மை வேறு எங்கோ கொண்டு போய் விடும். 


எதற்காக பயணத்தை ஆரம்பித்தோம் என்று தெரியாது. வழி தப்பி வேறு எங்கோ போய் விடுவோம். 


பின், ஏன் அந்த இடத்துக்கு வந்தோம், எப்படி வந்தோம் என்று வருந்திப் பயன் இல்லை. 



அருணகிரிநாதர் சொல்கிறார், "காமம் வந்து விட்டால், இறை அருளைப் பெறும் எண்ணம் வராது" என்று. 



பாடல் 




கூர்வேல் விழிமங்கையர் கொங்கையிலே 

சேர்வேனருள் சேரவு மெண்ணுமதோ 

சூர் வேரொடு குன்று தொளைத்த நெடும் 

போர் வேல புரந்தர பூபதியே 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_26.html

(pl click the above link to continue reading)



கூர்வேல் = கூர்மையான வேலைப் போன்ற 

விழி = கண்களை உடைய 

மங்கையர் = பெண்களின் 

கொங்கையிலே = மார்பகங்களின் மேல் 


சேர்வேன் = சேர்பவனான நான் 


அருள் = உனது அருளை 


சேரவு = சேர்வதற்கு, அடைவதற்கு 


மெண்ணுமதோ = எண்ண முடியுமா ? (முடியாது) 


சூர் = சூர பத்மனை  


வேரொடு = அடியோடு 


குன்று = கிரௌஞ்ச மலையை 


தொளைத்த = துளைக்கும் படி விட்ட 


நெடும் = நீண்ட 


போர் வேல = போர் செய்யும் வேலைக் கொண்ட 


புரந்தர பூபதியே  = தேவர் உலகின் காவலனே 


அப்படி என்றால் காமமே கூடாதா? கூடாது என்றால் பின் ஏன் இறைவன் அதைப் படைக்க வேண்டும்?

ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லாமலே படைத்து இருக்கலாமே ?


உயிர் வாழ உணவு தேவைதான். அதற்காக அதை அளவுக்கு அதிகமாக உண்டு கொண்டே இருந்தால் என்ன ஆகும்?


இங்கே "மங்கையர்" என்று பன்மையில் குறிப்பிடுகிறார். மங்கை என்று ஒருமையில் அல்ல. 


அதாவது, பல பெண்களிடம் சென்று காமம் அனுபவிக்கும் ஆசையில் இருந்தால் எங்கே இறை அருள் பற்றி சிந்தனை வரும்  என்ற நோக்கில் கூறி இருக்கிறார் என்று உரை ஆசிரியர்கள் கூறுவாரகள்.





 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


 யாமோதிய கல்வியும் பாகம் 2


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


உதியா மரியா


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html


மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html


உபதேசம் உணர்தியவா 


]




No comments:

Post a Comment