Saturday, March 4, 2023

கந்தரனுபூதி - வள்ளிபதம் பணியும்

                       

 கந்தரனுபூதி -  வள்ளிபதம் பணியும் 




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


பிள்ளைகளை படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்து விடுகிறோம். அல்லது அவர்களே திருமணம் செய்து கொண்டு வாழ்வைத் தொடங்கி விடுகிறார்கள். 


இனி, நம் கடமை விட்டது, நமக்கும் அவர்களுக்கும் ஒரு பந்தமும் இல்லை. அவர்கள் குடும்பம், அவர்கள் வாழ்க்கை என்று ஒதுங்கி இருக்க முடியுமா?  


ஒவ்வொரு நாளும் அவர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்கள் துணை நன்றாக இருக்கிறார்களா, பேரப் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள் என்று நாம் அவர்கள் மேல் அக்கறையோடு இருப்போம் அல்லவா?  அவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் ஓடோடிப் போவோம். முடியாவிட்டால், தினமும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசுவோம், நமக்குத் தெரிந்த கடவுள்களுக்கு எல்லாம் மனுப் போடுவோம், விரதம் இருப்போம் அல்லவா?


சாதாரண மனிதர்களான நாமே இப்படி என்றால், இறைவன் நம் மீது (அவனுடைய பிள்ளைகள்)  எவ்வளவு அக்கறையோடு இருப்பான்?  நம்மால் முடிந்ததை நாம் நம் பிள்ளைகளுக்குச் செய்கிறோம்.  அதே போல் ஆண்டவனும் அவனால் முடிந்ததை அவன் பிள்ளைகளுக்குச் செய்வான்தானே?  


அவனால் முடியாதது என்ன? 


பக்தர்களுக்கு உதவ அவன் எப்போதும் காத்துக் கிடக்கிறான் என்ற இந்த செய்தி நம் பக்தி இலக்கியங்களில் எங்கும் பரவிக் கிடக்கிறது. 


ஆதி மூலமே என்று கூவிய யானையில் இருந்து பெரிய பெரிய ஞானிகள் வரை எல்லோருக்கும் ஓடி வந்து உதவி இருக்கிறான் என்கிறது நம் இலக்கியம். 


அருணகிரிநாதர் சொல்கிறார் 


வள்ளி ஒரு வேடுவர் குலப் பெண்.  அவளுக்கு அருள் செய்ய ஓடி வந்து, அவளைத் திருமணம் செய்து கொண்டு, "எனக்காக நீ எவ்வளவு தவம் செய்தாய்? இந்த காடு மேடெல்லாம் அலைந்து திருந்தாய். பாவம் நீ. இந்த பாதம் எவ்வளவு துன்பப் பட்டிருக்கும்" என்று அவள் பாதத்தை பிடித்து அவளுக்கு பணிவிடை செய்வானாம். அப்படிப்பட்ட முருகனை நான் அடைய தவம் செய்தது ஆச்சரியம் என்கிறார். 


பாடல் 


காளைக்குமரேசன் எனக் கருதித் 

தாளைப்பணியத் தவம் எய்தியவா 

பாளைக்குழல் வள்ளிபதம் பணியும் 

வேளைச்சுர பூபதி மேருவையே 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_4.html


(pl click the above link to continue reading)


காளைக் = காளை போல உறுதியும், பலமும் கொண்ட 


குமரேசன் = குமரேசன் 


எனக் கருதித் = என்று நினைத்து 


தாளைப் = திருவடிகளை 


பணியத்  = தொழ 


தவம் எய்தியவா  = தவம் செய்யும் பேறு பெற்றது எங்கனம் ?


பாளைக் = பனை மட்டை போல் அடர்ந்த 


குழல் = குழலை உடைய 


வள்ளி = வள்ளியின் 



பதம் பணியும்  = திருவடிகளைப் பணியும், அல்லது பணிவிடை செய்யும் 


வேளை = வேளைக்காரன் என்றால் படைத் தளபதி 


சுரபூபதி  = தேவர்களின் தலைவன் 


மேருவையே  = மேரு மலை போல உயர்ந்தவன் 


வள்ளியை முருகன் வந்து ஆட்கொண்டான். அது போல நம்மையும் ஆட்கொள்வான் என்பது கருத்து. அவள் தவம் செய்தாள். ஆண்டவனை அடைந்தாள்.


அது ஒரு செய்தி.


இன்னொரு செய்தி, 


எத்தனை பேர் மனைவிக்கு பணிவிடை செய்வார்கள்?  அவளும் ஒரு உயிர் தானே? அவளுக்கும் உடல் வலி, மன வலி எல்லாம் இருக்கும் தானே? மனைவியின் க் காலை பிடித்துவிட்டு பணிவிடை செய்பவர் எத்தனை பேர்?


மனைவியின் மேல் அன்பு வராவிட்டால், வேறு யார் மேல் அன்பு வரும்? ஆண்டவன் மேல் அன்பு எப்படி வரும்? 


கணவனை நம்பி, வீடு, வாசல், உடன் பிறப்பு, பெற்றோர், குல தெய்வம், தன் பெயரைக் கூட மாற்றிக் கொள்ளும் ஒரு பெண் மேல் அன்பு வராவிட்டால் வேறு எங்கு அன்பு வந்துவிடும். 


அன்பில்லாத இடத்தில் ஆண்டவன் எங்கு வருவான்?   


நான் ஆண், ஒரு பெண்ணுக்கு நான் பணிவிடை செய்வதா என்பது அகங்காரம். மனம் நெகிழ வேண்டும். அன்பில் கரைய வேண்டும். அன்பு என்று வந்து விட்டால், உயர்வு தாழ்வு, ஆண்/பெண் பேதம் எல்லாம் இல்லை. 


முருகனே வள்ளியின் பதம் பணிகிறான் என்றால் மற்றவர் எம்மாத்திரம்? 


சிந்தனைக்கு உரியது. 









 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


 யாமோதிய கல்வியும் பாகம் 2


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html


உதியா மரியா


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html


மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html


உபதேசம் உணர்தியவா 


]




No comments:

Post a Comment