Saturday, February 18, 2023

கந்தரனுபூதி - உபதேசம் உணர்தியவா

                     

 கந்தரனுபூதி - உபதேசம் உணர்தியவா 




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


சமயப் பெரியவர்கள் இறைவன் பற்றியும், வாழ்க்கை, வினை என்பன பற்றியும் பல கருத்துகளை கூறுகிறார்கள். அதெல்லாம் சரியா? அவற்றை எப்படி ஏற்றுக் கொள்வது? அதற்கு என்ன அடிப்படை? சும்மா நம்பிக்கை என்று சொல்லிவிட்டால் போதுமா?  


அதுமட்டும் அல்ல, அந்த உண்மைகள் எல்லாம் என்றோ சொல்லப்பட்டவை. அவை இன்றைய நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந்துமா? அவற்றை கடைபிடிக்க முடியுமா என்றெல்லாம் கேள்விகள் எழும். 


உண்மையை அறிந்து கொள்ள முக்கியமான மூன்று வழிகளை சொல்கிறார்கள்.


அவற்றிக்கு பிரமாணங்கள் என்று பெயர்.


அவை,  காட்சிப் பிரமாணம், அனுமானப் பிரமாணம், ஆகமப் பிரமாணம் என்பன. 


காட்சிப் பிரமாணம் என்றால் காண்பது மட்டும் அல்ல, கேட்பது, உணர்வர்து, முகர்வது, எல்லாம் அடங்கும். அதாவது புலன்கள் வழியே அனுபவ பூர்வமாக அறிவது. 


நேற்று நான் ஒரு வெள்ளை யானை பறந்து போவதைப் பார்த்தேன் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?  ஏன் நம்ப மாட்டார்கள்?  ஒரு நம்பிக்கைதான் என்று சொல்லி நம்பவேண்டியது தானே? 


இல்லை. எனக்குக் காட்டு. நான் பார்த்தால் நம்புகிறேன் என்று சொல்லுவார்கள். 


இது ஒருவிதத்தில் உண்மையை அறிய உதவும் ஒரு கருவி. எதையும் பார்த்து, அறிந்து கொள்வது. 


அடுத்தது, அனுமானம். சிந்தித்து அறிவது. காலையில் எழுந்து வெளியே பார்த்தால் சாலை எல்லாம் ஈரமாக இருக்கிறது. இரவு மழை பெய்திருக்கிறது என்று அனுமானிக்கிறோம். நாம் பார்க்கவில்லை. இருந்தும், இதுதான் நடந்திருக்கும் என்று அனுமானிக்கிறோம் அல்லவா. 


அது, உண்மையை அறியும் இரண்டாவது வழி. 


மூன்றாவவது, சற்று சிக்கலான வழி. ஆகமப் பிரமாணம். அதாவது, பெரியவர்கள் சொல்வதை கேட்டு, அவர்கள் பிழையாக சொல்ல மாட்டார்கள் என்று அதை ஏற்றுக் கொள்வது. 


அது எப்படி முடியும் என்று கேட்டால், உடம்பு சரியில்லை என்று மருதுவரிட்ம் செல்கிறோம். அவர் ஒரு மருந்து எழுதித் தருகிறார். அதை வாங்கி உண்கிறோம். அதெல்லாம் முடியாது, இந்த மருந்து என்னை குணப்படுத்தும் என்று நிரூபி என்று யாரும் மருத்துவரிடம் வாதம் செய்வது இல்லை. மருத்துவம் படித்து இருக்கிறார். அவர் சொல்வது சரியாகத் தான் இருக்கும் என்று நம்புகிறோம். 


அது ஆகமப் பிரமாணம். 


இதில், ஒரு மருத்துவர் ஒன்று சொல்கிறார், மற்றொரு மருத்துவர் வேறொன்றைச் சொல்கிறார். எதை நம்புவது என்ற குழப்பம் வரலாம். 


உள்ளதுக்குள் மிகவும் அறிவும், அனுபவமும் உள்ள ஒரு மருத்துவர் சொல்வதை கேட்பதுதானே சரியான ஒன்றாக இருக்க முடியும்?


நம் பெரியவர்கள், இறைவனிடம் இருந்து அவர்கள் பெற்றதை நமக்குச் சொல்கிறார்கள். அதைவிட பெரிய ஆள் யார் இருக்கிறார். எனவே, அவர்கள் சொல்வது, இறைவன் சொல்வது மாதிரித்தான்.


அருணகிரிநாதர் சொல்கிறார், 


"யாராலும் எளிதாக அறிய முடியாத உண்மைப் பொருளை எனக்கு நீ உபதேசம் செய்தாய்" என்று. 


அருணகிரிநாதர் முருகனிடம் இருந்து நேரடியாக உபதேசம் பெற்றார். பின் பெற்ற உபதேசத்தை நமக்குச் சொல்கிறார். அதில் தவறு இருக்குமா?


பாடல்  




அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் 

உரிதா வுபதேச முணர்த்தியவா 

விரிதாரண விக்ரம வேளியையோர் 

புரிதாரக நாக புரந்தரனே 





பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_18.html


(pl click the above link to continue reading)


அரிதாகிய = யாராலும் எளிதில் அறிய முடியாத 


மெய்ப்பொருளுக்கு = உண்மையான பொருளை, ஞானத்தை 


அடியேன் = அடியவனான எனக்கு 

 

உரிதா = உரிதானது, பெற்றுக் கொள்ள தகுதியானவன் என்று 


வுபதேச = உபதேசம் செய்து 


முணர்த்தியவா  = என்னை உணரச் செய்தவனே 


விரிதாரண = தாரணை என்றால் விடாமல் மேலிருந்து கீழே வருவது. எண்ணை தாரை என்பார்கள். விரிந்த உன் அருளை சமமாக் எல்லோருக்கும் விடாமல் அருள்பவனே 


விக்ரம = பலம் பொருந்தியவனே 


வேள்   = வேள் என்றால் மன்மதன். மன்மதனைப் போல் அழகானவனே 


இமையோர் = கண் இமைக்காமல் இருக்கும் தேவர்களின் 


புரிதாரக நாக = அதாரமானவனே 


புரந்தரனே = காப்பவனே 


எனக்கு முருகன் நேரடியாகச் சொன்னார் என்கிறார். 



 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 


]




No comments:

Post a Comment