Monday, June 5, 2023

கந்தரனுபூதி - யானாகிய என்னை விழுங்கி

கந்தரனுபூதி -   யானாகிய என்னை விழுங்கி 



(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


நான் என்பது என்ன?


இது ஒரு மிகப் பெரிய கேள்வி. உன்னையே நீ அறிவாய் என்பது மகா வாக்கியம். 


நான் என்பது இந்த உடம்பா? இல்லை. 


இந்த உடம்புக்குள் இருக்கும் நினைவுகள், ஞாபகங்களா?  


யோசித்துப் பாருங்கள், உங்கள் அனைத்து ஞாபகங்களும் மறந்து போய்விட்டது என்றால் எப்படி இருக்கும் என்று. 


உங்கள் பெயர், உங்கள் ஊர், அப்பா, அம்மா, கணவன், மனைவி, பிள்ளைகள், நட்பு, சுற்றம், படித்த பாடங்கள், பார்த்த சினிமா , கேட்ட பாடல்கள் எல்லாம் மறந்து போய் விட்டது என்றால் நீங்கள் யார்? 


சரி, என் நினைவுகள் மட்டுமா நான்? எத்தனையோ விடயங்களை மறந்து போயிருக்கிறேன். அதானால் என்ன கெட்டு போய்விட்டது?  


இல்லை என்றால் உடலுக்குள் இருக்கும் உயிரா? மனமா? சித்தமா ...எதுதான் நான்?


நான் என்பது இவையெல்லாம் கடந்த ஒன்றா?  


"நான்" என்று சொல்லும் போது , நான் வேறு, இந்த உலகம் வேறு என்று பிரித்துப் பார்க்கிறேன். நான் என்ற எண்ணம் போய் விட்டால் , நான் வேறு, உலகம் வேறு என்பது இல்லமால் போகும் அல்லவா?



ஆற்று நீர், கடலோடு சேர்ந்தால், இரண்டு வேறு வேறு நீர் இருக்காது அல்லவா?



குடத்துக்குள் ஒரு வெளி இருக்கிறது. குடத்துக்கு வெளியே ஒரு வெளி இருக்கிறது. குடம் உடைந்து போனால், இரண்டு வெளியும் ஒன்றாகி விடும் அல்லவா? 


நான், எனது என்ற அகங்கார மமகாரம் போய் விட்டால், எப்படி இருக்கும்?


நன்றாக இருக்கும் என்று சொல்லக் கூட முடியாது. யாருக்கு நன்றாக இருக்கும் என்ற கேள்வி வரும். நான்   இல்லை என்றால்   நன்றாக இருக்கும் என்று சொல்லுவது யார்?


அருணகிரிநாதர் வியக்கிறார். மலைத்துப் போகிறார். 


பாடல் 


ஆனா வமுதே யயில்வேலரசே 


ஞானா கரனே நவிலத்தகுமோ 


யானா கிய என்னை விழுங்கிவெறும் 


தானாய் நிலைநின்றது தற்பரமே 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/06/blog-post.html


(pl click the above link to continue reading)


ஆனா வமுதே = ஆனாத + அமுதே = அழிவு இல்லாத அமுதம் போன்றவனே 


அயில்வேலரசே = அயில் + வேல் + அரசே = கூரிய வேலாயுதத்தை உடைய தலைவனே 

 


ஞானா கரனே = ஞானமே வடிவானவனே 


நவிலத்தகுமோ = சொல்ல முடியுமா?

 

யானா கிய = நான் என்று சொல்லப்படும் 


என்னை = என்னை 


விழுங்கி = உள் வாங்கி 


வெறும் = வெறுமனே


தானாய் = தான் மட்டுமாய் தனித்து  


நிலைநின்றது = நிலையாக நின்றது 


தற்பரமே = மேலான பொருளே 


நான் என்ற என்னை விழுங்கி, தனக்குளே ஒன்றாக்கிக் கொண்ட உயர் பொருளே என்கிறார். 


எது உண்டது? எதை உண்டது? உண்ட பின் நின்றது எது?


அவருக்குத் தெரிகிறது. ஆனால், அதை சொல்ல முடியவில்லை. சொன்னால் புரியாது என்று நினைத்து இருக்கலாம். 


"நவிலத் தகுமோ" என்கிறார். 


சொல்ல முடியுமா என்று கேட்கிறார்.  


நானே இல்லை என்ற பின் சொல்ல யார் இருக்கிறார்கள்?  எப்படிச் சொல்ல முடியும்?


அனுபவம் மட்டும் நிற்கிறது. 


என்னை அது தன்னுள் கொண்டுவிட்டது. இப்போது நான் அதுவாகிவிட்டேன் என்று சொல்லலாம். ஆனால், அப்படியும் சொல்ல முடியாது. ஏன் என்றால் நான் என்பதே இல்லையே.


யோசனை செய்து பாருங்கள். 

 



 [


மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html

மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html

மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html

மெய்யியல் - பகுதி 4

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html

மெய்யியல் - பகுதி 5 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html

மெய்யியல் - பகுதி 6 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html

மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html

நின்று தயங்குவதே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html

வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html

விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html

 பரிசென் றொழிவேன் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html

எதிரப் படுவாய்

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html

மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html

அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html

முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html

என்று அருள்வாய் ? 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/1.html

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_24.html

யாமோதிய கல்வியும் பாகம் 1 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

 யாமோதிய கல்வியும் பாகம் 2

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html

உதியா மரியா

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html

மிடியென் றொரு பாவி

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html

உபதேசம் உணர்தியவா 

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_18.html

கருதா மறவா

https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_23.html

வள்ளிபதம் பணியும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_4.html

அடியைக் குறியா

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_21.html

அருள் சேரவும் எண்ணுமதோ 

https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_26.html

அலையத் தகுமோ

https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post.html

நினைந்திலையோ  

https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post_29.html

மின்னே நிகர்வாழ்வை

https://interestingtamilpoems.blogspot.com/2023/05/blog-post_16.html


]






No comments:

Post a Comment