Friday, August 4, 2023

திருக்குறள் - தீவினையச்சம் - தொகுப்புரை

திருக்குறள் - தீவினையச்சம் - தொகுப்புரை 


திருக்குறளும் அதன் உரையும் மிக கட்டுக் கோப்பாக எழுதப்பட்டுள்ளது. எப்படி இப்படி ஆராய்ந்து, ஒரு ஆற்றோட்டமான ஒரு ஒழுங்கில் எழுதி இருக்கிறார்கள். 


வாழ்க்கையை அறம், பொருள், இன்பம், வீடு என்று பிரித்துக் கொள்கிறார்கள். நாம் வாழ்வில் செய்யும் எந்த ஒரு காரியமும் இந்த நான்கில் ஒன்றில்தான் இருக்க முடியும். இதற்கு வெளியே எதுவும் கிடையாது. 


இதில் வீடு என்பது அறிவால் அறிய முடியாது, என்பதால் அதை விட்டு விட்டு மற்ற மூன்றையும் மூன்று பாலாக பிரித்துக் கொண்டு நூல் செய்தார். 


அதில்  அறம் என்பதை இல்லறம், துறவறம் என்று பிரித்துக் கொள்கிறார். 


முதலில் இல்லறத்தை பற்றி சொல்லத் தொடங்கி, ஒவ்வொரு அதிகாரமாக,ஒவ்வொரு அதிகாரமும் அது எப்படி அங்கு வந்தது, அதற்கு முன் உள்ள அதிகாரம் என்ன, அடுத்து வரும் அதிகாரம் என்ன என்று ஒரு ஒழுங்கில் எழுதினார். 


இதில், பரிமேலழகர் செய்த நுண்ணிய வேலை என்ன என்றால், ஒரு அதிகாரத்துக்குள் உள்ள பத்து குறள்களும் எப்படி அந்த வரிசையில் வந்தன, அதில் உள்ள உட்பிரிவுகள் என்னென்ன என்று விளக்கியது. 


நாம் தீவினையச்சம் என்ற அதிகாரம் பார்த்தோம். அதில் உள்ள குறள்கள் எப்படி தொகுக்கப்ட்டு இருக்கின்றன என்று நம்மால் புரிந்து கொள்ள முடியாது. பரிமேல் அழகர் அதை நமக்கு எடுத்துக் காட்டுகிறார். 


https://interestingtamilpoems.blogspot.com/2023/08/blog-post_4.html


(please click the above link to continue reading)


முதல் மூன்று குறள்கள் நாம் ஏன் தீவினைக்கு அஞ்ச வேண்டும் என்று கூறுகிறது என்கிறார். 


1. தீவினையார் அஞ்சார் விழுமியர் அஞ்சுவர்

தீவினை என்னும் செருக்கு.


2. தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.


3. அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல்.


அடுத்து வரும் ஆறு பாடல்களில், தீவினை செய்தார்க்கு தீமை வந்து சேரும் என்று கூறுகிறார். 



4. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு


5. இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்

இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.


6. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான்


7. எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென்று அடும்.


8. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடிஉறைந் தற்று.


9. தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்

துன்னற்க தீவினைப் பால்


கடைசி ஒரு பாட்டில், தீவினை செய்யாமல் இருப்பவர்களுக்கு தீமை ஒன்றும் வராது என்றும் கூறினார் என்கிறார். 



10. அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின்.


இதுவரை மன, மொழி, மெய்யால் தவிர்க்க வேண்டியவற்றை கூறினார். 


அடுத்து என்ன கூற வேண்டும் ?


செய்ய வேண்டாதவற்றை பற்றி கூறினார். 


இனி செய்யவேண்டியவற்றைப் பற்றி கூற உள்ளார். 


ஒப்புரவு அறிதல் பற்றி கூற இருக்கிறார். 


ஒப்புரவு அறிதல் என்றால் என்ன?


 



1 comment:

  1. Don't know what to say, the service you're rendering to our society is really remarkable. God bless you with health , abundance of wealth and success . Pls do continue this .

    ReplyDelete