Tuesday, August 10, 2021

திருக்குறள் - இல்லதும், உள்ளதும்

 

திருக்குறள் - இல்லதும், உள்ளதும் 



முந்தைய குறளில் ஒருவனுக்கு மனைவி சரியாக அமையாவிட்டால் அவனிடம் என்ன இருந்தும், அவன் ஒன்றும் இல்லாதவனாகவே கருதப்படுவான் என்று பார்த்தோம்.  


மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினு மில்


இதன் பொருளையும் விளக்கத்தையும் இறுதியில் உள்ள உள்ள இணைய தளத்தில் காணலாம். 






இனி அடுத்த குறளுக்குப் போவோம். 


மனைவி நல்லவளாக அமையாவிட்டால் என்ன இருந்தும் அது ஒன்றும் இல்லாதது போலத்தான் என்று கூறி விட்டார். 


சரி, அவள் நல்லவளாக அமைந்து விட்டால்? 


நல்லவளாக அமைந்து விட்டால் அவளுடைய கணவனுக்கு இந்த உலகில் அதை விட வேறு என்ன செல்வம் இருக்க முடியும் என்று கேட்கிறார். 


அதாவது, அவள்தான் அனைத்து சிறப்புக்கும் காரணம். அவன் பெருமை, புகழ், மானம், செல்வம் அனைத்தும் அவள்  கையில் தான் உள்ளது என்கிறார். 


கணவன் என்னதான் படித்து, உழைத்து உயர்ந்தாலும், மனைவி சரி இல்லை என்றால் அதனால் ஒரு பயனும் இல்லை. 


கணவன் படிக்கவில்லை, பெரும் பொருள் சேர்க்கவில்லை, புகழ் இல்லை என்றாலும், அவனுக்கு ஒரு நல்ல மனைவி வாய்த்து விட்டால் அவனிடம் இல்லாதது ஒன்றும் இல்லை. எல்லாம் அவனுக்கு வாய்த்தது போல என்கிறார். 

பாடல் 


இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_10.html


(please click the above link to continue reading)



இல்லதென் = இல்லது என்? என்ன இல்லை? 


இல்லவள் மாண்பானால் = இல்லவள் (மனைவி) மாண்பு உடையவள் ஆனால் (நற்குண நற்செய்கைகள் உள்ளவள் ஆனால்) 


உள்ளதென் = உள்ளது என்? என்ன இருக்கிறது? 


இல்லவள் = மனைவி 


மாணாக் கடை = மாண்பு இல்லாதவள் ஆன போது 


இல்லது என், உள்ளது என் என்று இரண்டு கேள்விகள் கேட்கிறார். 


மனைவி மாண்பு உடைவள் ஆனால் இல்லாது ஒன்றும் இல்லை. 


மாண்பு இல்லாதவள் ஆனால் உள்ளது ஒன்றும் இல்லை. 


உடனே, நம்ம உள்ளூர் கொடி பிடிக்கும் கும்பல் ஒன்று "பார்த்தீர்களா...நாங்க தான் எல்லாம்...நீங்க ஒன்றும் இல்லை" என்று கோஷம் போடத் தொடங்கி விடும். 


வள்ளுவர் எல்லா மனைவிகளையும் சொல்லவில்லை. 


நற்குண, நற்செய்கைகள் உள்ள பெண்களை மட்டும் தான் சொல்கிறார். 


மாண்பு என்ற சொல்லை குறித்துக் கொள்ள வேண்டும். 


சமைத்து போடுவது, துணி துவைப்பது,  வீட்டை சுத்தம் செய்வது மட்டும் மாண்பு என்ற பட்டியலில் இல்லை. 


நற்குண நற்செய்கைகள் என்னென்ன என்று முந்தைய ப்ளாகில் படித்து அறிந்து கொள்க. 


மாண்புடைய மனைவியை பற்றி மட்டும் தான் சொல்கிறார். 


கொடி பிடிக்கும் முன் அதை சிந்திக்க வேண்டும்.  


ஊருக்கே நன்மை செய்யும் மனைவிகளைப் பற்றிக் கூறுகிறார். தனிக் குடித்தனம் போக நினைக்கும் பெண்களைப் பற்றி அல்ல. 


பெண்ணின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் வள்ளுவர், அதற்கான தகுதி பற்றியும் கூறுகிறார்.


முந்தைய ப்ளாகின் முகவரி 



https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_8.html

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. பெண்கள் தனிக்குடித்தனம் போக விரும்புவது பிடிக்கவில்லையா?! (ஹாஹாஹா என்று சிரிக்கத் தோன்றுகிறது!)

    ReplyDelete
  3. நல்ல விளக்கம் அண்ணா

    ReplyDelete