Monday, August 9, 2021

கம்ப இராமாயணம் - குறையாத அன்பு

 கம்ப இராமாயணம் -  குறையாத அன்பு 


எனக்கு சில சமயம் தோன்றும், இராமயணத்தை பேர் மாற்றி சீதாயணம் என்று வைத்து இருக்கலாம் என்று. 


யோசித்துப் பார்ப்போம். 


கணவன் அலுவலகத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வருகிறேன் என்று சொல்கிறான். ஆனால், வீடு வந்து சேரும் போது நேரம் தாழ்ந்து விடுகிறது. எத்தனை மனைவிகள் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வார்கள்? 


மனைவியின் பிறந்த நாளை மறந்து விடுகிறான்...


எங்கோ அழைத்துப் போகிறேன் அல்லது வாங்கித் தருகிறேன் என்று சொல்லிவிட்டு அதைச் செய்யாமல் எவ்வளவு கோபமும் வருத்தமும் வரும் அவன் மனைவிக்கு. 


அப்படியே சீதையை பார்ப்போம். பெரிய சக்ரவர்த்தியின் மூத்த மகன், பெரிய பலசாலி (வில்லை ஒடித்தவன்), அவனை திருமணம் செய்து கொள்கிறாள். அவள் மனதில் என்னவெல்லாம் ஆசைகள் இருந்திருக்கும்? 


ஆனால், கிடைத்தது என்ன? வன வாசம். அங்கேயும் கணவனோடு இருக்க முடியவில்லை. இராவணன் வந்து தூக்கிக் கொண்டு போய் விட்டான். 


இன்றைய பெண்களை (பெரும்பாலனா) நினைத்துப் பார்ப்போம். "நீங்க வேணும்னா காட்டுக்குப் போயிட்டு வாங்க, நான் என் அப்பா வீட்டுக்குப் போகிறேன். திரும்பி வந்து என்னைக் கூட்டிக் கொண்டு போங்கள் " என்று பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி இருப்பார்கள். "உங்க தலை எழுத்து காட்டுல போய் அவதிப் படணுமுன்னு எழுதி இருக்கு ..." என்று அங்கலாய்த்துக் கொண்டு போய் விடுவார்கள். 


சீதை ஒரு இடத்தில் கூட இராமனையோ, மாமியார் மாமனரையோ குறை சொல்லவில்லை. 


அசோக வனத்தில் சிறை இருக்கிறாள். அனுமன் வருகிறான். சீதையை கண்டு கொள்கிறான். சீதை அவனைப் பார்க்கவில்லை. அனுமன் ஒரு மந்திரத்தின் மூலம் அங்கே காவலுக்கு இருந்த அரக்கிகளை உறங்கப் பண்ணி விடுகிறான். 


அப்போது சீதை தனக்குத் தானே பேசத் தொடங்குகிறாள்....


பாடல் 


துஞ்சாதாரும் துஞ்சுதல் கண்டாள் துயர் ஆற்றாள்

நெஞ்சால் ஒன்றும் உய்வழி காணாள் நெகுகின்றாள்

அஞ்சா நின்றாள் பல்நெடு நாளும் அழிவுற்றாள்

எஞ்சா அன்பால் இன்ன பகர்ந்து ஆங்கு இடர் உற்றாள்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_9.html


(please click the above link to continue reading)



துஞ்சாதாரும் = உறங்காதவர்களும் (காவல் அரக்கிகள்) 


துஞ்சுதல் கண்டாள் = தூங்குவதை பார்த்தாள் 


துயர் ஆற்றாள் = துக்கம் தாளாமல் 


நெஞ்சால் = மனதில் 


ஒன்றும் உய்வழி காணாள் = துயரில் இருந்து விடுபடும் வழி ஒன்றையும் காண 

முடியாமல் 



நெகுகின்றாள் = வருந்தினாள் 


அஞ்சா நின்றாள் = அஞ்சி நின்றாள் 


பல்நெடு நாளும் = ரொம்ப நாளாக 


அழிவுற்றாள் = துன்புற்று இருந்தாள் 


எஞ்சா அன்பால் = குறைவு படாத அன்பால் 


இன்ன பகர்ந்து = இவற்றை சொல்லி 


ஆங்கு இடர் உற்றாள். = அங்கு துன்பம் அடைந்து நின்றாள் 


இவ்வளவு துயரத்துக்கு இடையிலும், அவள் மனதில் அன்பு குறையவே இல்லை.


அன்பு மட்டும் இருந்து விட்டால், எந்த பெரிய துயரையும் தாங்கிவிடலாம் போல. 



1 comment: