ஆசாரக் கோவை - ஒரு அறிமுகம்
வாழ்வில் கடை பிடித்து ஒழுக வேண்டிய நெறிமுறைகளை தொகுத்து தருகிறது ஆசாரக் கோவை.
இதை இதை செய்ய வேண்டும், இதை இதை செய்யக் கூடாது என்று பட்டியல் போட்டு தருகிறது.
சமஸ்க்ரிதத்தில் இது போன்ற நூல்களை ஸ்மிர்திகள் என்று சொல்வார்கள்.
இது தமிழில் உள்ள ஸ்ம்ருதி என்று சொல்லலாம். பல வட மொழி நூல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது இந்த நூல்.
இதில் உள்ள பல வழி முறைகளை இன்று கடைபிடிக்க முடியுமா என்பது சந்தேகமே. இருந்தாலும், அறிந்து கொள்வது நல்லது தானே. முடிந்தவரை கடை பிடிக்காலாம்.
இதில் சொல்லப் பட்ட வழி முறைகளுக்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நூல் எழுதிய ஆசிரியரே, "இது முன்னோர் சொன்னது"., "இது கற்று அறிந்தோர் சொன்னது", என்று குறிப்பிடுகிறார்.
பல பாடல்கள் மிக மிக அருமையாக இருக்கிறது.
முதல் பாடலிலேயே ஆசிரியர் நேராக விசயத்துக்கு வந்து விடுகிறார்.
எது ஆசாரத்துக்கு வித்து ? அடிப்படை என்று ஆரம்பிக்கிறார்:
எட்டு விதமான குணங்கள் ஆசாரத்திற்கு வித்து என்கிறார்:
அவையாவன: