Friday, March 12, 2021

திருக்குறள் - உரைப்பாயிரம் - ஒரு முன்னோடம்.

 திருக்குறள் - உரைப்பாயிரம் - ஒரு முன்னோடம். 


உலகிலே ஆயிரக்கணக்கான நூல்கள் இருக்கின்றன.  எவராலும் அனைத்து நூல்களையும் படித்து விட முடியாது. எனவே நூல்களை தெரிந்து எடுத்துப் படிக்க வேண்டும். 


இந்த நூல் எது பற்றியது, இதை எழுதியவர் யார், யாருக்காக எழுதப் பட்டது, எதைப் பற்றி எழுதப் பட்டது  என்றெல்லாம் தெரிந்து கொண்டு இது நமக்குச் சரியான நூல் தானா என்று அறிந்து கொண்டு பின் படிக்க வேண்டும். 


இருக்கும் காலம் கொஞ்சம். படிக்க வேண்டியதோ மலை [போல இருக்கிறது. நூல்களை தேர்வு செய்வதில் கவனம் இல்லை என்றால், தேவை இல்லாதவற்றை படிப்பது மட்டும் அல்ல, தேவையானவற்றை படிக்காப் பிழையும் நிகழ்ந்து விடும். 


சரி, நூலை பற்றிய இவ்வளவு செய்திகளை எங்கிருந்து தெரிந்து கொள்வது ? 


இதற்குத்தான் அந்தக் காலத்தில் பாயிரம் என்று ஒன்று வைத்தார்கள். 


பாயிரம் என்றால் முகவுரை என்று வைத்துக் கொள்ளலாம். பாயிரத்தில் மேலே சொன்ன அனைத்து விடயங்களும் இருக்கும். அதைப் படித்தாலே அந்த நூலின் தன்மை தெரிந்து விடும். 


பாயிரம் பொதுச் சிறப்பு என இரு பாற்றே (நன்னூல் 2)


அந்தப் பாயிரம் பொது, சிறப்பு என்று இருவகைப் படும். 


இதில் பொதுப் பாயிரம் என்றால் என்ன என்று நன்னூல் கூறுகிறது. 


நூலே நுவல்வோன் நுவலும் திறனே

கொள்வோன் கோடல் கூற்றாம் ஐந்தும்

எல்லாநூற்கும் இவை பொதுப் பாயிரம்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_12.html

(click the above link to continue reading)


எப்படி சொற்களை சிக்கனம் பிடித்து எழுதி இருக்கிறார்கள் என்று பாருங்கள். 

முதல் அடியின் கடைசிச் சொல் "திறனே". திறனே என்றால் திறன், இயல்பு, பெருமை என்று வைத்துக் கொள்ளலாம். இப்போது பொருள் என்ன என்று சிந்திக்கலாம்.


நூலே  = நூலின் திறம். அந்தத் திறத்தை இங்கு வந்து பொருத்திக் கொள்ள வேண்டும். அதாவது நூலின் தன்மை. 

நுவல்வோன் = நுவல்வோன் திறம் = மீண்டும் அந்தத் திறன் என்ற வார்த்தையை இங்கே பொருத்த வேண்டும். அதாவது, நூல் ஆசிரியனின் தன்மை. 


நுவலும் திறனே = சொல்லும் திறன், இயல்பு, வழி. 


கொள்வோன் = கொள்வான் திறம். மீண்டும் அந்த திறம் என்ற வார்த்தையை இங்கே பொருத்த வேண்டும். கேட்கும் மாணவனின் தன்மை. முதலாம் வகுப்பு மாணவனா அல்லது முனைவர் பட்டம் படிப்பவனா என்று வாசகனின் இயல்பு 

கோடல் கூற்றாம் = மாணவன் நூல் பொருளை கேட்கும் இயல்பு 

ஐந்தும் = இந்த ஐந்தும் 

எல்லாநூற்கும் = எல்லா நூல்களுக்கும் 

இவை பொதுப் பாயிரம் = இது பொதுப் பாயிரமாக இருக்கும். 


அதாவது, நூலின் அடக்கம், அதில் என்ன சொல்லி இருக்கிறது, யார் எழுதினார்கள், யாருக்காக எழுதினார்கள், எப்படி படிக்க வேண்டும், என்ற ஐந்தும் எல்லா நூலுக்கும் பொதுவாக சொல்லப் பட வேண்டும். 

பரிமேலழகர் தன் நூலுக்கு உரைப்பாயிரம் செய்கிறார். 


அது என்ன என்பதை அடுத்த ப்ளாகில் காண இருக்கிறோம்.



Thursday, March 11, 2021

திருக்குறள் - ஒரு முன்னுரை

 திருக்குறள் - ஒரு முன்னுரை 


திருக்குறளை பள்ளியில் படித்து இருக்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில குறள்கள் ஒவ்வொரு வகுப்பிலும் இருக்கும். அதில் சில குறள்கள் மனப்பாடச் செய்யுள் பகுதியில் வரும். அதை மனப்பாடம் பண்ணி அப்படியே எழுத்து பிசகாமல் எழுத வேண்டும். 


மற்றபடி எத்தனை மதிப்பெண் உண்டோ, அதற்கு தகுந்தாற்  போல பதில் எழுதினால் போதும். இரண்டு மதிப்பெண் என்றால் நான்கு வரி எழுத வேண்டும். பத்து மதிப்பெண் என்றால் சற்று விரித்து எழுத வேண்டும். 


இடையிடையே இலக்கண குறிப்பு, சொல் இலக்கணம், அணி இலக்கணம், யாப்பு இலக்கணம் என்று சில கேள்விகள் வரும். 

மதிப்பெண் பெறுவது மட்டுமே நோக்கமாக இருந்தது. 

அதற்குப் பின், சில புத்தகங்களில் மேற்கோளாக சில பல குறள்கள் வந்திருக்கலாம். 


நமது குறள் பரிச்சியம் அவ்வளவுதான். 


"நல்லா சுருக்கமா அழகா எழுதி இருக்கிறார்" என்று சொல்லி விட்டு போய் விடுவோம். 


திருக்குறள் என்ற பிரமாண்டத்தை, அதன் விஸ்வரூபத்தை நாம் அறியவே இல்லை. 

சொன்னால்தானே தெரியும். 


இந்த ப்ளாகில் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பல குறள்களை நாம் பார்த்தோம்.    அது குறளுக்கு நான் செய்த தவறு. பிழை. 


திருக்குறளை அப்படி படித்து இருக்கக் கூடாது. 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_11.html

(click the above link to continue reading)


குறளில், முதலில் இருந்து கடைசி வரை ஒரு ஒழுங்கு இருக்கிறது. ஒரு வரைமுறை இருக்கிறது. அதை, அதன் போக்கில் படித்தால்தான் முழுவதும் விளங்கும். 


அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்தால், குருடர்கள் யானையை பார்த்த கதையாகி விடும். 


பரிமேல் அழகர் அடி பற்றி திருக்குறளை முதலில் இருந்து எழுத ஆசை. 


பரிமேலழகர் உரையும் மிகவும் இறுக்கமான உரை. ஆனால் மிக அழகானது. ஆழமானது. அவர் அளவுக்கு வேறு யாரும் உரை செய்து இருக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம். 


இந்தத் திருக்குறள் என்ற நூல் என்னதான் சொல்ல வருகிறது? இதை ஏன் நாம் படிக்க வேண்டும்? படித்தால் என்ன பலன் ? இதை எழுதியதன் நோக்கம் என்ன? என்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டு, அதற்கு பதில் தரும் முகமாக உரைப்பாயிரம் செய்கிறார் பரிமேலழகர். 


நாளை முதல் அவர் கை பிடித்து குறளுக்குள் செல்வோம். 



Tuesday, March 9, 2021

இராமாயணம் - விடத்தை அமுது என வேண்டுவான்

 இராமாயணம் - விடத்தை அமுது என வேண்டுவான் 


மனதில் தோன்றும் உணர்ச்சிகளை நம்மால் தயக்கம் இல்லாமல் வெளிப் படுத்த முடிகிறதா? மனதுக்குள்ளேயே வைத்து பூட்டி வைத்துக் கொள்கிறோம். 


அன்பை, காதலை, பாசத்தை வார்த்தைகளால் நாம் அதிகம் வெளிப் படுத்துவது இல்லை என்றே நினைக்கிறேன். 


கோபத்தை, எரிச்சலை, எளிதாக காட்டி விடுகிறோம். 


எத்தனை முறை மனைவியை/கணவனை புகழ்ந்து இருப்போம், உன்னை நேசிக்கிறேன் என்று சொல்லி இருப்போம்? "அதெல்லாம் சொல்லித்தான் தெரியணுமாக்கும்" என்று சொல்லாமலேயே விட்டு விடுகிறோம்.


பயிற்சி இல்லை. நம் பெற்றோர் அப்படி பேசி நாம் கேட்டது இல்லை. நாமும் அப்படி பேசிப் பழகவில்லை. 


சினிமாவில் பார்க்கும் போது உருகிப் போகிறோம். 


நம் இலக்கியங்கள் நமக்கு அதைச் சொல்லித் தருகின்றன. எப்படி மனதில் தோன்றும் எண்ணங்களை வார்த்தைகளாக வெளிப்படுத்துவது என்று. 


சீதை அசோகவனத்தில் இருக்கிறாள். 


இராவணன் அங்கே வருகிறான். தன் காதலை உருகி உருகி வெளிப் படுத்துகிறான்.


பாடல் 


அவ்விடத்து அருகு எய்தி அரக்கன் தான்

‘எவ்விடத்து எனக்கு இன் அருள் ஈவது

நொவ் விடக் குயிலே! நுவல்க ‘என்றனன்

வெவ் விடத்தை அமுது என வேண்டுவான்.


பொருள்  


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post.html

pl click the above link to continue reading


அவ்விடத்து = அசோகவனத்துக்கு 

அருகு எய்தி = அருகில் வந்து 

அரக்கன் தான் = இராவணன் 

‘எவ்விடத்து = எந்த இடத்தில் 

எனக்கு = எனக்கு 

இன் அருள் ஈவது = உன் அருளைத் தருவது 

நொவ் விடக் குயிலே!  = வருந்தும் சிறிய இடையை கொண்ட குயிலே 

 நுவல்க ‘என்றனன் = சொல் என்றான் 

வெவ் விடத்தை  = வெம்மையான விஷத்தை 

அமுது என வேண்டுவான். = அமுதம் என்று நினைத்து அதை விரும்பும் இராவணன் 


மேலும் சில பாடல்கள் இருக்கின்றன. 


இராவணன் ஒரு அரக்கன். அவன் மாற்றான் மனைவியை வஞ்சகமாக கவர்ந்து வந்து விட்டான் என்பதெல்லாம் ஒரு பக்கம் தள்ளி வைத்து விடுங்கள். 


அவன் மனதில் தோன்றிய உணர்சிகளை எவ்வளவு அழகாக வார்த்தைகளில் வடிக்கிறான் என்று மட்டும் பாருங்கள். 


பேசப் படிப்போம். 

Saturday, February 27, 2021

திருக்குறள் - எப்படி பேச வேண்டும்

 திருக்குறள் - எப்படி பேச வேண்டும் 

அலுவலகத்தில், தொழில் செய்யும் இடத்தில், அல்லது வேறு எங்காவது ஏதாவது பதவி வகித்தால், அங்கே எப்படி பேச வேண்டும் என்று வள்ளுவர் சொல்லித் தருகிறார்.

இது மந்திரிகளுக்கு சொன்னது. இருந்தும், நாம் ஒருவருக்கு யோசனை சொல்லும் இடத்தில் இருந்தால், ஒருவருக்கு கீழே வேலை செய்தால்,  நாமும் மந்திரி மாதிரிதான். இது நமக்கும் பொருந்தும். 

நமக்கு மட்டும் அல்ல, நம் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் பொருந்தும். அவர்களுக்கும் சொல்லித் தாருங்கள். 


பாடல் 

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்

கேட்பினும் சொல்லா விடல்


பொருள்

Click the following link to continue

https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post_27.html

வேட்பன = (அரசன்/மேலதிகாரி ) விரும்பியவற்றை 

சொல்லி = சொல்லி 

வினையில = வினை இல்லாதவற்றை 

எஞ்ஞான்றும் = எப்போதும் 

கேட்பினும் = கேட்டால் கூட 

சொல்லா விடல் = சொல்லாமல் விட்டு விட வேண்டும் 


மேலதிகாரி விரும்பியதை சொல்லணும், விரும்பாததை சொல்லக் கூடாது...பொதுவா  ஜால்ரா அடிக்கணும் அப்படின்னு வள்ளுவர் சொல்லுகிறாரா?  இல்லை. 


இதெல்லாம் பரிமேலே அழகர் உரை இல்லாமல் நம்மால் சத்தியமாய் புரிந்து கொள்ள முடியாது. 


எப்படி பொருள் எடுக்கிறார் என்று பாருங்கள். 


வினையில என்ற சொல்லை எடுத்துக் கொள்கிறார்.  வினை என்றால் வேலை, தொழில், முயற்சி என்று பொருள். வினையால் விளைவது பலன், ஒரு நன்மை. வினையில என்றால் பலன் இல்லாத என்று பொருள் கொள்கிறார். பலன் இல்லாதவற்றை  பேசக் கூடாது. 


சரி.  


அடுத்தது, "கேட்பினும்" என்ற சொல்லை எடுக்கிறார். சில சமயம் மேல் அதிகாரி நம்மைக் கூப்பிட்டு சும்மா பேசுவார். டீ குடித்துக் கொண்டோ அல்லது மாலை வேளையில் வேறு ஏதாவது அருந்திக் கொண்டோ பேச்சு வரும். நம்மோடு பேச விரும்புவார். அவரே விரும்பினாலும்  பலன் இல்லாதவற்றைப் பற்றி பேசக் கூடாது.  மேல் அதிகாரி கேட்டால் கூட பலன் இல்லாதவற்றைப் பற்றி பேசக் கூடாது. 


அடுத்தது, "எஞ்ஞான்றும்": எப்பவாவது, கொஞ்சம் ஜாலியாக இருக்கும் போது அரட்டை அடிக்கலாமா என்றால் கூடவே கூடாது என்கிறார். ஒரு போதும் அப்படி பேசக் கூடாது என்கிறார். 


"கேட்பினும்"...கேட்டால் கூட பலன் தராதவற்றைப் பற்றி பேசக் கூடாது. அதற்கு எதிர் மறையாக, கேட்காவிட்டால் கூட பலன் தருபவற்றைப் பற்றி பேச வேண்டும். அரசனோ, அதிகாரியோ கேட்காவிட்டால் கூட, பலன் தரும் என்றால் அதைப் பற்றி பேச வேண்டும். சொல்ல வேண்டும். "என் கிட்ட கேட்டா சொல்லுவேன்..."என்று சும்மா இருக்கக் கூடாது. 


அதிகாரிகள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் பலன் உள்ளவற்றை அவர்களிடம் சொல்ல வேண்டும். 


அதிகாரிகள் கேட்டால் கூட, பலன் இல்லாதவற்றை சொல்லக் கூடாது. 


இதை எப்போதும் பழக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். 


தேவை இல்லாமல் அரட்டை அடிப்பது, கோள் சொல்லுவது, போட்டுக் கொடுப்பது, புரணி பேசுவது, இட்டு கட்டி சொல்லுவது , பொய் சொல்லுவது என்பனவற்றை  விட்டு விட வேண்டும். 


பலன் இருந்தால் பேசு. இல்லை என்றால் மௌனமே சிறந்தது. 



Friday, February 26, 2021

கம்ப இராமாயணம் - மடம் என்றால் என்ன ?

கம்ப இராமாயணம் - மடம் என்றால் என்ன ?


பெண்களுக்கு உரிய குணங்களில் மடம் என்று ஒரு குணம் உண்டு என்று சொல்கிறார்கள். அது என்ன ? 


மடம் என்றால் மடத்தனமா? அப்படி இருக்க வாய்ப்பில்லை. 


யோசித்துப் பார்த்ததில் எனக்குத் தோன்றியது என்ன என்றால், "தன் பெருமை, தன் அருமை, தன் வலிமை தான் அறியாமல் இருப்பது" தான் மடமை என்று தோன்றுகிறது. 


கம்ப இராமயணத்தில் ஒரு உதாரணம் பார்ப்போம். 


சீதையின் ஆற்றல் அளவற்றதாக இருக்கிறது.


இராமனின் ஆற்றலை விட பலப் பல மடங்கு பெரியது சீதையின் ஆற்றல் என்று தெரிகிறது. 


இலங்கைக்குப் போய், இராவனனனோடு சண்டையிட்டு, அவனை கொல்வதற்கு இராமன் படாத பாடு படுகிறான். வானரங்கள் துணை வேண்டி இருந்தது. கொஞ்சம் தேவர்களும் உதவி செய்தார்கள். 


இத்துனூண்டு இலங்கையை அழிக்க இந்தப் பாடு. 


சீதை சொல்கிறாள் "எல்லை நீத்த இந்த உலகங்கள் யாவையும் என் சொல்லினால் சுடுவேன்" என்கிறாள். இருந்த இடத்தில் இருந்து கொண்டே, அத்தனை உலகையும் என் சொல்லினால் சுடுவேன் என்கிறாள். 


அனுமனுக்கு சிரஞ்சீவி பட்டம் தருகிறாள். என்றும் இறவா வரம். எந்தக் கடவுளை வேண்டி எவ்வளவு தவம் செய்தாலும், இறவா வரம் மட்டும் தர மாட்டார்கள். சீதையோ, கேட்காமலேயே இந்த பிடி என்று சாகா வரம் தருகிறாள். 


அவ்வளவு ஆற்றல். 

அப்பேற்பட்ட ஆற்றல் உள்ள சீதை, துன்பம் தாளாமல் தூக்குப் போட்டு சாகப் போகிறாள்.  உலகை அழிக்கும் ஆற்றல் கொண்ட சீதை, இராவணனை அழித்து தன் துன்பத்தை போக்கிக் கொள்ள முடியாமல், தற்கொலை செய்து கொள்ளத் துணிகிறாள். 


என்ன என்று சொல்லுவது? 


தன் வலிமை தனக்குத் தெரியாமல் அடங்கிக் கிடப்பது தான் பெண்ணின் மடம் என்று சொல்கிறார்களோ ? 


சீதை தற்கொலைக்கு முயன்ற அந்தப் பாடல் 


பாடல் 


எய்தினள் பின்னும் எண்ணாத எண்ணி ‘ஈங்கு

உய்திறம் இல்லை! ‘என்று ஒருப்பட்டு ஆங்கு ஒரு

கொய்தளிர்க் கொம்பிடைக் கொடி இட்டே தலை

பெய்திடும் ஏல்வையில் தவத்தின் பெற்றியால்.


பொருள் 



click the above link to continue reading


எய்தினள் = சென்று அடைந்தாள் 

பின்னும் = மேலும் 

எண்ணாத எண்ணி  = பலவற்றையும் எண்ணி 

‘ஈங்கு = இங்கு 

உய்திறம் இல்லை!  = வாழ வேறு வழி இல்லை 

‘என்று = என்று 

 ஒருப்பட்டு  = முடிவு செய்து 

ஆங்கு ஒரு = அங்குள்ள ஒரு 

கொய்தளிர்க் = தளிர் விட்ட 

கொம்பிடைக் = கொம்பின் மேல் 

கொடி இட்டே= படர்ந்து கிடந்த ஒரு கொடியில் 

தலை பெய்திடும் =  தலையை சேர்த்திடும் 

ஏல்வையில் = நேரத்தில் 

 தவத்தின் பெற்றியால். = அவள் செய்த தவத்தின் காரணமாக 



சீதை உலகை என் சொல்லால் சுடுவேன் என்ற பாடல் 


அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?

எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்.

பொருள் 

அல்லல் = துன்பம் (தரும்)

மாக்கள் = விலங்குகள் (மனிதப் பண்பு அற்றவர்கள்)

இலங்கை அது ஆகுமோ? = (நிறைந்த) இந்த இலங்கை மட்டும் என்ன

எல்லை நீத்த = எல்லையே இல்லாத

உலகங்கள் யாவும் = அனைத்து உலகங்களையும்

என் சொல்லினால் = என் சொல்லினால்

சுடுவேன்; = சுட்டு எரித்து விடுவேன்

அது = அப்படி செய்தால், அது

தூயவன் = இராமனின்

வில்லின் ஆற்றற்கு = வில்லின் ஆற்றலுக்கு

மாசு என்று வீசினேன். = குற்றம் என்று வீசினேன்


சீதை அனுமனுக்கு சிரஞ்சீவி பட்டம் அளித்த பாடல்  


பாழிய பணைத் தோள் வீர! துணை இலேன் பரிவு தீர்த்த 

வாழிய வள்ளலே! யான் மறு இலா மனத்தேன்என்னின், 
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம், உலகம் 
ஏழும் ஏழும் வீவுற்ற ஞான்றும், இன்று என இருத்தி' என்றாள். 



பொருள்

பாழிய = வீரம் பொருந்திய

பணைத் தோள் வீர! = பனை மரம் போல் உறுதியான தோள்களை கொண்ட வீரனே

துணை இலேன் = ஒரு துணையும் இல்லாமல் தவித்துக் கொண்டு  இருந்தேன்

பரிவு தீர்த்த = வருத்தம் தீர்த்த
 
வாழிய வள்ளலே! = வாழிய வள்ளலே (உயிர் கொடுத்த வள்ளல்)

யான் = நான்

மறு இலா மனத்தேன்என்னின் = கறை படியாத மனம் உள்ளவள் எனின் 
 
ஊழி = ஊழிக் காலம்

ஓர் பகலாய் ஓதும் = ஒரு பகலாய் இருக்கும்

யாண்டு எலாம் = இங்கு உள்ள எல்லாம்

உலகம் ஏழும் ஏழும் = ஏழேழு உலகமும்

வீவுற்ற ஞான்றும் = வீழுகின்ற போதும்

இன்று என இருத்தி' என்றாள் = இன்று போல் இருப்பாய் என்று வாழ்த்தினாள்

எழுபது என்பது வயது ஆகும் போது உடம்பிற்கு அத்தனை நோயும் வந்து விடுகிறது....கற்ப கோடி ஆண்டு வாழ்ந்தால் உடம்பு எப்படி இருக்கும்...பல் விழுந்து, தோல் சுருங்கி, கண் பார்வை இழந்து, ஞாபகம் அற்றுப் போய்...அது ஒரு வரமா ? எனவே சீதை "இன்று என இருத்தி" என்றாள்.  இன்று போல் ஆரோக்கியமாக இரு என்று வாழ்த்தினாள்.

அப்படித்தான் கண்ணகியும். 

மதுரையை எரித்த கண்ணகி, மாதவி பின்னால் போன கோவலனை தடுத்தாள் இல்லை. 

மென்மையான அந்த பெண்மைக்கு பின்னால் அபரிதமான ஆற்றல் இருக்கிறது. அது தெரியாமல் இருப்பது தான் பெண்மையின் மேன்மையோ ?




Friday, February 19, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ளமே காதல் செய்து

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ளமே காதல் செய்து  


வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழி லரங்கந் தன்னுள்

கள்ளனார் கிடந்த வாறும் கமலநன் முகமும் கண்டு

உள்ளமே வலியைப் போலும் ஒருவனென் றுணர மாட்டாய்

கள்ளமே காதல் செய்துன் கள்ளத்தே கழிக்கின் றாயே.


அன்பு செய்வதைத் தவிர இங்கு வேறு என்ன வேலை இருக்கிறது? எதன் மீதாவது, யார் மீதாவது அன்பு செய்து கொண்டே இருப்பது ஒன்று தான் வேலை. அன்பு செய்வதை விட்டு விட்டு, பின் வேறு என்ன செய்வது? அன்பு இல்லாவிட்டால், எதற்கு எதையும் செய்ய வேண்டும்.


நமக்கு மட்டும் அல்ல, அந்த இறைவனுக்கும் அது தான் வேலை. தன்னைத் தானே அன்பு செய்து கொள்ள முடியுமா? இப்படி பல்லாயிரம் உயிர்களைப் படைத்து அவை ஒவ்வொன்றின் உள்ளிருந்தும் அன்பை கொடுத்தும், பெற்றும் இடை விடாமால் அன்பை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். 


அன்பு என்பது கொடுப்பது மட்டும் அல்ல, பெறுவது மட்டும் அல்ல, கொடுக்கவும், பெற்றுக் கொள்ளவும் காத்துக் கிடப்பதும், ஏங்கி நிற்பதும், கிடைக்காமல் தவிப்பதும் எல்லாம் அன்பு தான். 


தெரியாமல் அன்பு செய்வது, மற்றவருக்குத் தெரியாமல் அவர் மனதை திருடிக் கொள்வது, மனதை பறி கொடுத்து நிற்பது..எல்லாம் அன்பின் வெளிப்பாடுதான். 


வைகுண்டத்தில் இருக்க வேண்டியதுதானே. இங்கு எதற்கு வர வேண்டும்? அன்பு வேண்டித்தான். 

அன்பு என்பது என்ன என்றே புரியாத மனங்களும் இருக்கின்றன. ஒரு கண் பார்வையில், ஒரு வார்த்தையில், ஒரு தொடலில், அன்பு கொட்டிக் கிடக்கும். அறிந்து கொள்ளும் மனம் இருந்தால், இங்கே அன்பின்றி வேறு ஒன்றும் இல்லை என்று தெரியும். 


வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழி லரங்கந் தன்னுள்

கள்ளனார் கிடந்த வாறும் கமலநன் முகமும் கண்டு

உள்ளமே வலியைப் போலும் ஒருவனென் றுணர மாட்டாய்

கள்ளமே காதல் செய்துன் கள்ளத்தே கழிக்கின் றாயே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post_19.html


click the above link to continue reading.


வெள்ளநீர் = வெள்ளம் போல் நீர் 

பரந்து  = விரிந்து 

பாயும்  = பாய்கின்ற 

விரிபொழி லரங்கந் தன்னுள் = மலர்கள் விரிந்த, விரிந்து கொண்டு இருக்கின்ற, இனியும் விரியும் படி உள்ள சோலைகளில் 


கள்ளனார் = கள்வன்.  அடியவர்களின் மனங்களை அவர்கள் அனுமதி இல்லாமலேயே திருடிக் கொள்ளும் கள்ளன் 

கிடந்த வாறும்  = சயனத்தில் இருந்தவாறும் 

கமலநன் முகமும் கண்டு = தாமரை போன்ற முகத்தை கண்டும் 


உள்ளமே = உன்னுடைய உள்ளமே 

வலியைப் = கடினமானது

போலும் = போலும் 

ஒருவனென் றுணர மாட்டாய் = அவன் ஒருவனே என்று உணர மாட்டாய் 

கள்ளமே = கள்ளத்தனமாக 

காதல் செய்துன் = காதல் செய்து 

கள்ளத்தே கழிக்கின் றாயே. = உன் வாழ்வை கள்ளத்தனமாக கழிக்கின்றாயே 


என்கிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார் 


கள்ளமே காதல் செய்து = எந்த காதலும் உண்மை கிடையாது. இன்றிருக்கும், நாளை போய் விடும். 


தவறானவற்றின் மேல் காதல் செய்து 

கள்ளத்தே கழிக்கின்றாயே = வீணாக கழிக்கின்றாயே 


திரு ஞான சம்மந்தர் சொல்லுவார் "என் உள்ளம் கவர் கள்வன்" என்று 


"தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை, சங்கரா, யார் கொலோ சதுரர்"...மணி வாசகர் 


அன்பே சிவம். 




Wednesday, February 17, 2021

திருக்குறள் - சார்பு

திருக்குறள் - சார்பு 


பாடல் 


சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய்

(அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:359)


பரிமேலழகர் உரை: சார்பு உணர்ந்து சார்புகெட ஒழுகின் - ஒருவன் எல்லாப் பொருட்கும் சார்பாய அச்செம்பொருளை உணர்ந்து, இருவகைப் பற்றும் அற ஒழுகவல்லனாயின்; சார்தரும் நோய் அழித்து மற்றுச் சார்தரா - அவனை முன் சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள் அவ்வுணர்வு ஒழுக்கங்களை அழித்துப் பின் சாரமாட்டா.

(ஆகு பெயரால் சாரும் இடத்தையும் சார்வனவற்றையும் 'சார்பு' என்றார். 'ஈண்டு' ஒழுக்கம் என்றது யோகநெறி யொழுகுதலை. அஃது இயமம், நியமம், இருப்பு, உயிர் நிலை, மன ஒடுக்கம், தாரணை, தியானம், சமாதி என எண்வகைப்படும். அவற்றின் பரப்பெல்லாம் ஈண்டுஉரைப்பின் பெருகும். யோக நூல்களுள் காண்க. 'மற்றுச் சார்தரா' என இயையும். சாரக்கடவனவாய் நின்ற துன்பங்களாவன: பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள்இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும் 'பிறந்த உடம்பான்முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும் அனுபவிக்கக்கடவனவாய்க் கிடந்தன. அவை விளக்கின் முன் இருள்போல ஞானயோகங்களின் முன்னர்க் கெடுதலான், 'அழித்துச்சார்தரா' என்றார். இதனை ஆருகதர் 'உவர்ப்பு' என்ப. பிறப்பிற்குக் காரணம் ஆகலான்' நல்வினைப் பயனும் 'நோய்'எனப்பட்டது. மேல் மூன்று உபாயத்தானும் பரம்பொருளைஉணரப் பிறப்பு அறும் என்றார். அஃது அறும்வழிக் கிடந்ததுன்பங்கள் எல்லாம் என் செய்யும் என்னும் கடாவைஆசங்கித்து. அவை ஞான யோகங்களின் முதிர்ச்சி உடையஉயிரைச் சாரமாட்டாமையானும், வேறு சார்பு இன்மையானும் 'கெட்டு விடும்'என்பது இதனால் கூறப்பட்டது.)