Sunday, February 16, 2014

திருக் கோத்தும்பீ - பொய்யான செல்வம்

திருக் கோத்தும்பீ - பொய்யான செல்வம் 


செல்வம் வேண்டும் என்று நாளும் அலைகிறோம் . அதற்குத்தானே இத்தனை ஓட்டமும். அலைச்சலும்.

செல்வம் கிடைத்து விட்டால் நிம்மதி, அமைதி, மகிழ்ச்சி எல்லாம் வந்துவிடும் என்று நினைக்கிறோம்.

அப்படி, ஓடி ஆடி அலைந்து செல்வத்தை பெற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் ?

அது அவர்களுக்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் தந்திருக்கிறதா ?

பாண்டியன் அரசவையில் மந்திரியாக இருந்தவர் மாணிக்க வாசகர். பணமும், அதிகாரமும் தேவைக்கு அதிகமாகவே இருந்திருக்கும்.

அதையெல்லாம் பொய் என்கிறார் மணிவாசகர்.

பாடல்

பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்
மெய்யாக் கருதிக்கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயாவென் ஆரூயிரே அம்பலவா என்றவன்றன்
செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.


பொருள்


பொய்யாய = பொய்யான

செல்வத்தே = செல்வங்களை

புக்கழுந்தி = புக்கு அழுந்தி

நாள்தோறும் = நாள் தோறும்

மெய்யாக் கருதிக் = உண்மைய என்று கருதி

கிடந்தேனை = இருந்தவனை

ஆட்கொண்ட = ஆட்கொண்ட

ஐயா = ஐயா 

என் ஆரூயிரே = ஏன் ஆருயிரே

அம்பலவா  = அம்பலத்தில் ஆடுபவனே

என்றவன்றன் = என்று அவன் தன்

செய்யார் மலரடிக்கே = சிவந்த தாமரை போன்ற மலரடிகளுக்கே

சென்றூதாய் = சென்று ஊதாய் 

கோத்தும்பீ. = கோ+தும்பீ = அரச தும்பியே

செல்வம் நில்லாதது. அதனால் தான் அதற்கு "செல்வம்" ...எப்ப வேண்டுமானாலும் செல்வோம் என்று அது சொல்லாமல் சொல்கிறது.

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு.

என்பது வள்ளுவம்.



No comments:

Post a Comment