Thursday, May 17, 2018

தேவாரம் - கண்டு அறியாதன கண்டேன்

தேவாரம் - கண்டு அறியாதன கண்டேன் 


முன்னுரையாக கீழே உள்ள பதிவைப் படித்து விடுங்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2018/05/blog-post_16.html

நீங்கள் ஆண் என்றால், உங்களுக்குள் இருக்கும்  பெண்ணையும்,
நீங்கள் பெண் என்றால், உங்களுக்குள் இருக்கும் ஆணையும்

அடையாளம் கண்டு சேர்வதே உண்மையான இறை தரிசனம் ஆகும்.

மேல் சொன்னப் பாடலில் , ஆண் யானையும், பெண் யானையும் ஒன்றாக வருவதைக் கூறினார்.

இங்கே, சேவலும் , பெண் கோழியும் கூடி குளிர்ந்து வருவதைக் கண்டதாகவும், அதுவே இறை தரிசனம் என்றும் கூறுகிறார்


பாடல்

போழ் இளங்கண்ணியினானைப் பூந்துகிலாளொடும் பாடி,
“வாழியம், போற்றி! என்று ஏத்தி, வட்டம் இட்டு ஆடா வருவேன்,
ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்றபோது,
கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்;-
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்!


உரை
 

போழ் இளங்கண்ணியினானைப் = இளமையான பிறைச் சந்திரனை தலையில் அணிந்தவனை

 பூந்துகிலாளொடும் = பூக்கள் போன்ற மென்மையான ஆடை அணிந்த உமா தேவியோடும்


 பாடி = பாடி

“வாழியம், போற்றி! என்று ஏத்தி, = வாழ்க, சிறக்க என்று உயர்த்திப் பாடி

வட்டம் இட்டு ஆடா வருவேன் = சுற்றி சுற்றி ஆடி வருவேன்


ஆழிவலவன் = திருமால்

நின்று = நின்று

ஏத்தும் = போற்றும்

ஐயாறு அடைகின்றபோது, = திருவையாறு அடைகின்ற போது

கோழி =  சேவல்

பெடையொடும் = பெண் கோழியோடு

கூடிக்  = கூடி

குளிர்ந்து = உள்ளமும் உடலும் குளிர்ந்து

 வருவன கண்டேன் = வருவதைப் பார்த்தேன்

கண்டேன் = கண்டேன்

அவர் திருப்பாதம் = அந்தக் காட்சியில் நான் இறைவனின் பாதங்களைக் கண்டேன்

கண்டு = கண்ட போது

அறியாதன கண்டேன்! = இதுவரை காணாத காட்சியினை கண்டேன்

கூடிய பின் , குளிர்தல்.

அந்தக் குளிர்ச்சியில் இறைவனை காணலாம்.

நாவுக்கரசர் சொல்கிறார்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/05/blog-post_17.html

1 comment:

  1. ஆண் யானையும் பெண் யானையும் சேர்ந்து இருப்பதுவும், கோழியும் சேவலும் சேர்ந்து இருப்பதுவும் இயற்க்கைக்கு ஒத்த இனிய காட்சிகள். அவற்றைப் பார்க்கும்போது இறைவனைக் காண்கிறார்.

    பாடலுக்கு நன்றி.

    ReplyDelete