நாலடியார் - அம்மாவா ? காதாலனா?
அவள் காதலனோடு செல்ல முடிவு செய்து விட்டாள்.
யாரிடமும் சொல்லவில்லை.
அவள் இருக்கும் வீடு, அப்பா, சகோதரர்கள், தோழிகள், வீட்டில் உள்ள சாமான் எல்லாவற்றையும் பார்க்கிறாள். இதை எல்லாம் விட்டு விட்டு போகப் போகிறோம் என்று அவளுக்குள் சோகம் ததும்புகிறது.
யாரிடம் சொல்வாள். சொல்லிவிட்டா ஓடிப் போக முடியும்.
அவளுடைய அம்மாவைப் பார்க்கிறாள். எப்படி இந்த அம்மாவை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்று மனம் தவிக்கிறது.
என்றும் இல்லாத வழக்கமாய் அம்மாவை கட்டிக் கொள்கிறாள். ரொம்ப இறுக்கமாக அணைத்துக் கொள்கிறாள்.
அம்மாவிற்கு அப்போது ஒன்றும் புரியவில்லை.
கடைசியில் வீட்டை விட்டு காதலனோடு சென்று விட்டாள்.
அம்மா, தனிமையில் இருந்து யோசிக்கிறாள்.
"பாவம் ரொம்ப பயந்து விட்டாள் போல இருக்கிறது. அது தான் அவ என்னை அப்படி கட்டி கட்டி பிடிச்சாளா. அப்ப எனக்கு தெரியல ஏன் அந்த குழந்தை என்னை கட்டி கட்டி பிடிச்சுதுன்னு...ஹ்ம்ம்...இப்ப தெரியுது" என்று பெரு மூச்சு விடுகிறாள்.
நாலடியார் தரும் அந்தப் பாடல்