Showing posts with label naaladiyaar. Show all posts
Showing posts with label naaladiyaar. Show all posts

Tuesday, June 12, 2012

நாலடியார் - அம்மாவா ? காதாலனா?


நாலடியார் - அம்மாவா ? காதாலனா?


அவள் காதலனோடு செல்ல முடிவு செய்து விட்டாள்.

யாரிடமும் சொல்லவில்லை. 

அவள் இருக்கும் வீடு, அப்பா, சகோதரர்கள், தோழிகள், வீட்டில் உள்ள சாமான் எல்லாவற்றையும் பார்க்கிறாள். இதை எல்லாம் விட்டு விட்டு போகப் போகிறோம் என்று அவளுக்குள் சோகம் ததும்புகிறது.

யாரிடம் சொல்வாள். சொல்லிவிட்டா ஓடிப் போக முடியும்.

அவளுடைய அம்மாவைப் பார்க்கிறாள். எப்படி இந்த அம்மாவை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்று மனம் தவிக்கிறது.

என்றும் இல்லாத வழக்கமாய் அம்மாவை கட்டிக் கொள்கிறாள். ரொம்ப இறுக்கமாக அணைத்துக் கொள்கிறாள்.

அம்மாவிற்கு அப்போது ஒன்றும் புரியவில்லை.

கடைசியில் வீட்டை விட்டு காதலனோடு சென்று விட்டாள்.

அம்மா, தனிமையில் இருந்து யோசிக்கிறாள்.

"பாவம் ரொம்ப பயந்து விட்டாள் போல இருக்கிறது. அது தான் அவ என்னை அப்படி கட்டி கட்டி பிடிச்சாளா. அப்ப எனக்கு தெரியல ஏன் அந்த குழந்தை என்னை கட்டி கட்டி பிடிச்சுதுன்னு...ஹ்ம்ம்...இப்ப தெரியுது" என்று பெரு மூச்சு விடுகிறாள்.

நாலடியார் தரும் அந்தப் பாடல்

Thursday, June 7, 2012

நாலடியார் - பெண்ணே உன்னை வணங்குகிறேன்


நாலடியார் - பெண்ணே உன்னை வணங்குகிறேன்


ஒரு தாய் தனியே இருந்து யோசிக்கிறாள். 

அவளுடைய மகள் காதலனோடு சென்று விட்டாள்.

அவளோ செல்வச் சீமாட்டி. பணக்கார வீட்டுப் பெண்.

காதலன் ஒரு ஏழை பையன். எப்படி எல்லாம் செல்லமாய் வளர்ந்த பெண் இப்ப அந்த வீட்டில் போய் எப்படி எல்லாம் துன்பப் படப் போகிறாளோ என்று தவிக்கிறாள். 

"அந்த பெண் சின்னவளாக இருக்கும் போது ஒரு நாள், காலில் மருந்தாணி இட, அந்த மருதாணி குழம்பை பஞ்சில் தொட்டு தொட்டு வைத்தேன், அது கூட வலிக்கிறது "பைய , பைய" என்று காலை இழுத்துக் கொண்டாள். இப்ப அந்த காட்டில் கல்லிலும் முள்ளிலும் எப்படி தான் நடந்து போவாளோ" என்று எண்ணி எண்ணி சோகத்தில் ஆழ்கிறாள்.


Wednesday, June 6, 2012

நாலடியார் - உப்பு போட்ட காதல்


நாலடியார் - உப்பு போட்ட காதல்

நாலடியார் என்ற நூலிலும் காமத்துப் பால் உண்டு.

(ஹை...ஜாலி)

என் காதலியையை கட்டி அணைக்காவிடில் அவள் உடம்பில் பசலை நிறம் வந்து விடும்.

அதுக்காக எப்ப பார்த்தாலும் கட்டி அணைத்து கொண்டே இருக்க முடியுமா ?

ஊடல் இல்லாத காமம் உப்பில்லாத பண்டம் போல. காதலுக்கு சுவை சேர்பதே ஊடல் தானே.

காதலில் ஊடி, பின் கூடுவது ஒரு சிறந்த technique ஆகும்.