Monday, November 30, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என் தலை மேல் அசைமின்கள்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என் தலை மேல் அசைமின்கள் 


Poetry is the language of hearts என்று சொல்லுவார்கள். கவிதையை இதயத்தில் இருந்து படிக்க வேண்டும். மூளையில் இருந்து அல்ல. கவிதையின் உயிர் அது சொல்லம் உணர்சிகளில் இருக்கிறது. 


அந்த உணர்வை தொட்டு விட்டால், "அட" என்று வியக்க வைக்கும். இல்லை என்றால் "இதுல என்ன இருக்கு" என்று கேள்வி கேட்கத் தோன்றும். 


பெரும்பாலான பிரபந்தப் பாடல்களை படிக்கும் போது, அர்த்தம் கை நழுவிப் போய் விடுகிறது. உணர்ச்சி ஒட்டிக் கொண்டு விடுகிறது. 


அப்படிப்பட்ட பாசுரம் ஒன்று கீழே. 


அது அந்தக் காலம். அவளுக்கு அவன் மேல் அவ்வளவு காதல். செல் போன்களும், whatsapp களும் இல்லாத காலம். கார் பஸ் கிடையாது. தபால் தந்தி கிடையாது. அவன் இருப்பதோ வெகு தொலைவில். அவளால் நினைத்தால் கூட அங்கே செல்ல முடியாது. என்ன செய்வாள் பாவம். 


மறுகிக் கொண்டு இருக்கிறாள். காதல் ஒரு பக்கம். ஏக்கம் ஒரு பக்கம். காண முடியவில்லையே என்ற தவிப்பு மறு பக்கம். 


யார் கிட்டவாவது சொல்லி விடலாம் என்றால் யாரிடம் சொல்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கிறாள். 


அங்கே சில மேகங்கள் மிதந்து சென்று கொண்டிருந்தன. ஒரு வேளை இந்த மேகங்கள் அவன் இருக்கும் இடம் போகுமோ ? இதுக கிட்டா சொல்லி விட்டால் ஒரு வேளை அவனுக்கு என் காதல் எண்ணம் போய்ச் சேருமோ என்று நினைக்கிறாள். 


அவள்: ஏய் மேகங்களே, எனக்கு ஒரு உதவி செய்வீங்களா? 

மேகம்: என்ன உதவி சொல்லு..

அவள்: நீங்க அவன் இருக்கும் ஊருக்குப் போனால், என் நிலை பற்றி அவனிடம் சொல்லுவீர்களா?


மேகம்: அதெல்லாம் முடியாது. எங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு. இதெல்லாம் முடியாது. நேரம் இல்லை. 


அவள் யோசிக்கிறாள். இந்த மேகங்களை விட்டால் வேறு வழியும் இல்லை. என்ன செய்யலாம் என்று. 


அவள்: சரி, ஒண்ணு செய்யுங்க. போற போக்கில் உங்க காலை என் தலை மேல் வச்சிட்டு போங்க. அவன் இருக்கிற ஊர்ல போய் நீங்க மழை பெய்யும் போது, என் கூந்தலின் வாசம் அவனுக்குத் தெரியும். அதில் இருந்து அவனுக்கு என் நினைவு வரும். அது போதும் எனக்கு. 


என்ன இது ஏதோ தமிழ் பட சீன் மாதிரி இருக்கு. இதுக்கும் நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்கும் என்ன சம்பந்தம்? இப்படி எல்லாம் கூடவா பாசுரம் இருக்கு? இருக்காது. 


பாடல் 

இசைமின்கள் தூதென் றிசைத்தா லிசையிலம், என்தலைமேல்

அசைமின்க ளென்றா லசையிங்கொ லாம்,அம்பொன் மாமணிகள்

திசைமின் மிளிரும் திருவேங் கட்த்துவன் தாள்சிமயம்

மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே.


சீர் பிரிக்காமல் புரியாது 


இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம், என் தலை மேல்

அசைமின்கள் என்றால்  அசையும் கொல்லோ ? அம் பொன் மா மணிகள்

திசை மின்மிளிரும் திருவேங் கட்த்து அவன் தாள் சிமயம்

மிசை மின்மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_30.html

(click the above link to continue reading)

இசைமின்கள் = சொல்லுங்கள் 

தூது = தூது 

என்று இசைத்தால் = என்று கூறினால் 

இசையிலம் = ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள் 


என் தலை மேல் = என் தலை மேல் 


அசைமின்கள் என்றால் = உங்கள் காலை வைத்து விட்டு போங்கள் என்றால் 

அசையும் கொல்லோ ?  = கேட்பீர்களா? 

அம் பொன் மா மணிகள் = பொன்னும் மணியும் 

திசை = திசைகள் தோறும் 

மின்மிளிரும் = மின்னல் போல் வெளிச்சம் தரும் 

திருவேங் கட்த்து = திரு வேங்கடத்தில் 

அவன் தாள் சிமயம் = சிகரத்தின் மேல் உள்ள அவன் திருவடிகளில் 

மிசை மின்மிளிரிய = மின்னல் அடித்துக் கொண்டு

போவான்  = போகும் 

வழிக் கொண்ட மேகங்களே. = அந்த வழியாக (போகும்) மேகங்களே 


என்னையும் தொட்டு, அவனையும் தொடும் போது, அவன் என்னை தொட்டதாகவே நான் உணர்வேன். அவன் நேரில் வந்து என்னைத் தொட விட்டால் என்ன. இந்த மேகங்களின் ஊடாக அவன் என்னைத் தொடுவதாக உணர்வேன் என்கிறாள். 


வருகின்ற அருள் நேராக அவனிடம் இருந்து வர வேண்டும் என்று அல்ல. எப்படியோ, யார் மூலமோ, எந்த வடிவிலோ வந்து சேரும். 


வந்து சேர்ந்து கொண்டு இருக்கிறது. 


காற்றாக, நீராக, உணவாக, உறவாக எத்தனையோ வகைகளில்...


உணர்வுடையார் பெருவறுனர் ஒன்றும் இல்லார்க்கு ஒன்றும் இல்லை. 

Sunday, November 22, 2020

திருக்குறள் - எண்ணும் எழுத்தும்

 திருக்குறள் - எண்ணும் எழுத்தும் 


பாடல் 


எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்என்ப வாழும் உயிர்க்கு


பொருள் 


எண்ணென்ப = எண்கள் என்று சொல்லப்படுபனவும் 

ஏனை = மற்ற 

எழுத்தென்ப = எழுத்து என்று சொல்லப் படுவதும் 

இவ்விரண்டும் = இந்த இரண்டும் 

கண்என்ப = கண் போன்றது என்று சொல்லுவார்கள் 

வாழும் உயிர்க்கு = வாழும் உயிர்களுக்கு 


https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_22.html


click the above link to continue reading


எண்ணும் , எழுத்தும் இரண்டு கண் போன்றது. உயர்வானது, சிறப்பானது....என்று தானே நமக்கு பொருள் தெரிகிறது? அப்படித்தான் நமக்குச் சொல்லித் தந்து இருப்பார்கள். 

இதைச் சொல்ல வள்ளுவர் வேண்டுமா? யாருக்குத்தான் தெரியாது? 


அதற்கு பின் வருவோம்...

எதற்காக படிக்கிறோம்? பள்ளிக்கூடம், கல்லூரி அதன் பின் மேல் படிப்பு என்று படிக்கிறோமே எதற்காக? பெரும்பாலானோர் சொல்லுவது "நல்லா படித்தால் நல்ல வேலை கிடைக்கும், நல்ல வருமானம் கிடைக்கும், நல்ல வாழ்கை வாழலாம்". அது ஓரளவு உண்மையும் கூட. 

ஆனால், படிப்பின் நோக்கமே வேறு. நாம் அதை வருமானத்துக்குப் பயன் படுத்துகிறோம் என்பது வேறு விடயம். படிப்பின் நோக்கம் அறத்தை அறிந்து கொள்வது. உண்மையை புரிந்து கொள்வது. 

பணம் எப்படியும் வரும். படித்துதான் வர வேண்டும் என்று இல்லை. எனவே, பணம் சம்பாதிக்க படிக்க வேண்டிய அவசியம் இல்லை. 

அறிவின் நோக்கம், அடிப்படை அறத்தை அறிந்து கொள்வது. 

வாழ்வில் அறம் இல்லாவிட்டால் எவ்வளவு செல்வம் இருந்தாலும், புகழ், செல்வாக்கு இருந்தாலும் மனதில் நிம்மதி, மகிழ்ச்சி இருக்காது. 


தவறான வழியில் பணம் வந்து விட்டால், நிம்மதியும், சந்தோஷமும் இருக்குமா? 


சரி, அதுக்கும் இந்த குறளுக்கும் என்ன சம்பந்தம்?


"கண் என்ப வாழும் உயிர்க்கு"...கண் என்ன செய்யும்? பார்க்கும். கண் என்பது தானே அறிந்து கொள்ளும் கருவி. காது அப்படியல்ல. யாராவது சொன்னால் தான் கேட்டுக் கொள்ள முடியும். தானே காது ஒன்றை கேட்டுக் கொள்ள முடியாது. 


அறம் என்று சொல்கிறீர்களே, அப்படி என்றால் என்ன? என்று கேட்டால், பதிலை வேறு யாரோ சொல்ல வேண்டும், நீங்கள் கேட்கத் தயார் என்று ஆகி விடுகிறது அல்லவா?


வள்ளுவர் சொல்கிறார், யாரிடமும் கேட்காதே. நீயே "பார்". உன்னைச் சுற்றி உள்ளவற்றைப் பார். நீ எதைப் பார்கிராயோ, அதில் இருந்து அறம் என்பது என்ன என்று அறிந்து கொள்...என்கிறார். 


இல்லையே, அப்படி ஒண்ணும் குறளில் இல்லையே? அறம் என்ற வார்த்தையே குறளில் இல்லையே. வள்ளுவர் அறத்தைப் பார்க்கச் சொன்னார் என்று எங்கு இருக்கிறது?


வருவோம்...


எல்லோருக்கும் கண் இருக்கிறது. ஆனால், பார்வை ஒன்றாக இருக்கிறதா? ஒரே விஷயத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பார்க்கிறார்கள். 


ஒரு பெண் ஒரு பையனை அடிக்கிறாள் அல்லது கண்டிக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். 


"என்ன இவ...சரியான இராட்சசியா இருப்பா போல இருக்கே...அந்தச் சின்னப் பிள்ளையை இப்படியா அடிப்பது/திட்டுவது" என்று சிலர் சொல்லலாம். 


"அடா, அந்த பெண்ணுக்குத் தான் அந்தப் பிள்ளையின் மேல் எவ்வளவு அக்கறை. நாளை பின்ன இப்படி தவறு செய்து ஊருக்குள்ள கெட்ட பேர் வாங்கிரக் கூடாதே என்று அடிப்பது கடினமாக இருந்தாலும், அதைச் செய்கிறாளே..." என்று சிலர் பாராட்டலாம். 


செயல் ஒன்றுதான். "பார்வை" வேறு படுகிறதுஅல்லவா ?


படித்தவனின் பார்வை ஊடுருவி உண்மை என்ன, அறம் என்ன என்று பார்க்கும்.


அப்படிப் பார்க்க கண்ணுக்குப் பின்னால், கண் காண்பதை சரியாக விளக்கம் சொல்ல அறிவு வேண்டும். 


அந்த அறிவு எண்களையும் , எழுத்துக்களையும் ஒழுங்காக படித்தால் தான் வரும். 


மொத்தம் மூன்று பேரைச் சொல்கிறார் வள்ளுவர் இந்தக் குறளில்...


எண் என்ப -  எண் என்று சொல்லுவார்கள் 

எழுத்து என்ப - எழுத்து என்று சொல்லுவார்கள் 

கண் என்ப - கண் என்று சொல்லுவார்கள். 


இதில் முதல் சொன்ன இருவரையும் பரிமேல் அழகர் "அறிவில்லாதவர்கள்" என்று சொல்கிறார். காரணம், அறிவு என்பது எண் , எழத்து என்று பிரிந்து இருப்பது அல்ல. எல்லாம் ஒன்று தான். 


எண் என்று சொல்லுபவர்களையும், எழுத்து என்று சொல்லுபவர்களையும் விட்டு விட்டு, "கண்" என்று சொல்லுபவர்களை சிறந்தவர்கள் என்கிறார் பரிமேல் அழகர். 


இரண்டு கண் தான், அதில் எது சிறந்து, எல்லாம் ஒன்று தான். அதில் பேதம் பார்க்க முடியாது என்பதால். 


எதுக்கு எடுத்தாலும், அறம் என்றால் என்ன, அது எப்படி இருக்கும், அது காலத்துக்கு காலம் மாறுமா, எல்லாருக்கும் ஒரே அறமா என்றெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டுத் திரியாமல், நீயே "பார்"த்து தெரிந்து கொள் என்கிறார். 


அந்தப் பார்வை சரியாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு பின் புலத்தில் எண்ணும் எழுத்தும் இருக்க வேண்டும். 


பார்வையில் உள்ள பழுதை, அறிவு நீக்கும். 




Thursday, November 19, 2020

திருக்குறள் - எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து

 திருக்குறள் - எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து


ரொம்ப பாடு பட்டு பணம் சம்பாதிக்கிறோம். நமக்கு நன்றாகத் தெரியும் நாம் சேர்த்த செல்வம் எல்லாம் நாம் செலவழிக்கப் போவது இல்லை என்று. நமக்குப் பின் நம் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் உதவும் என்று சேர்கிறோம். 


நமக்குப் பின்னும் நம் பிள்ளைகள் துன்பப் படக் கூடாது என்று சொத்து சேர்த்து வைத்து விட்டுப் போக நினைக்கிறோம். 


ஆனால், நாம் சேர்த்தது வைத்த சொத்து அவர்களுக்கு போகும் என்பது என்ன நிச்சயம்? அது பத்திரமாக அவர்களுக்கு சென்று சேர்வதற்கு ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா? 


இருக்கிறது என்கிறார் வள்ளுவர். யாருடைய சொத்து அவர்களின் வாரிசுகளுக்கு பயன் படும் என்று சொல்கிறார். 


யார் ஞாயமாக, நடுவு நிலையில் நின்று வாழ்கிறார்களோ அவர்கள் சொத்து சிதைவின்றி அவர்களின் வாரிசுகளுக்குப் போய் சேரும் என்கிறார். 


பாடல் 


செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி

எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_19.html


click the above link to continue reading


செப்பம் = நடுவு நிலைமை 

உடையவன் = உள்ளவன் 

ஆக்கம் = சேர்த்த சொத்து 

 சிதைவின்றி = ஒரு குறைவும் இன்றி 

எச்சத்திற்கு = அவனின் வாரிசுகளுக்கு 

ஏமாப்பு = காவல், இன்பம் தரும் 

உடைத்து  = உடையது 


நடுவு நிலைமை என்றால் ஒரு பாற் சாராமல், நீதி, நேர்மை, ஞாயம் என்று இருப்பது. 


இது மிக மிக கடினம். 

ஒரு சமுதாயத்தில் நாம் வாழும் போது நமக்கு உதவி செய்தவர்கள் இருப்பார்கள். கொஞ்சம் உதவி செய்தவர்கள், அதிகம் உதவி செய்தவர்கள், நெருங்கியவர்கள், உறவினர், நண்பர் என்று பலர் இருப்பார்கள். நமக்கு வேண்டியவருக்கும், மற்ற ஒருவர்க்கும் ஒரு சிக்கல் என்றால் நாம் நடுவு நிலைமையாக இருக்க முடியுமா? நமக்கு வேண்டியவர்களுக்கு சாதமாகத்த்தானே பேசுவோம். 


அப்படிச் செய்தால், நாம் நடு நிலை பிறழ்ந்தவர்கள் ஆவோம். 

ஒரு வீட்டின் தலைவன்/தலைவி, ஒரு பெரிய குடும்பத்தின் தலைவன், தலைவி, ஒரு நிறுவனத்தின் தலைவர், ஒரு நாட்டின் தலைவர் , ஒரு அதிகாரி, நீதிபதி என்று அனைவரும் நடு நிலையோடு இருக்க வேண்டும். 


தனக்கு ஒரு ஞாயம் பிறருக்கு ஒரு ஞாயம் என்று இருக்கக் கூடாது. 


அம்மாவுக்கும், மனைவிக்கும் இடையிலேயே நடு நிலை பேண முடிவதில்லை. 


தெரிந்தே நடு நிலை மாறி செயல் படுபவர்களின் செல்வம் அவர்களின் வாரிசுகளுக்குப் போய் சேராது என்கிறார் வள்ளுவர். 

போகிறதே, போகிறதை பார்கிறோமே என்றால், போகலாம், அது அவர்களுக்கு நன்மை செய்யாது, அது அவர்களுக்கு காவல் இருக்காது. ஏமாப்பு என்றால் அது தான் அர்த்தம். 


அப்பாவின் சொத்தை குடித்தே அழித்த பிள்ளைகள் எத்தனை, சூதில் விட்ட பிள்ளைகள் எத்தனை, கண்ட விதத்தில் ஊதாரித்தனமாக செலவழித்த பிள்ளைகள் எத்தனை, அந்த சொத்துக்காக, அந்தப் பிள்ளையை கொன்று அதை அபகரித்தவர்கள் எத்தனை...


என் கணவன்/மனைவி, என் பிள்ளை, என் பெற்றோர், என் உடன்பிறப்பு என்று நடு நிலை தவறி மற்றவர்களுக்கு துன்பம் விளைவிக்கக் கூடாது. 


பெரிய விஷயம். நாம் அதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவது இல்லை. 


கவலைப் பட வேண்டும். 



Wednesday, November 18, 2020

கந்தர் அலங்காரம் - தலை எழுத்தை அழிக்க

கந்தர் அலங்காரம் - தலை எழுத்தை அழிக்க

விதி என்று ஒன்று இருக்கிறதா? அப்படி இருந்தால் அதை மாற்ற முடியுமா? மாற்றவே முடியாது என்றால் எதற்கு இந்த கோவில், பூஜை, கடவுள் எல்லாம். அனைத்தும் விதிப்படித்தான்  நடக்கும் என்றால், நாம் வெறும் பொம்மைகள் தானா?

விதியை மதியால் வெல்ல முடியுமா என்ற கேள்வி இருந்து கொண்டே தான் இருக்கிறது. 

அது இருக்கட்டும். பின்னால் வருவோம். 

நமது பக்தி இலக்கியங்களில் எங்கெல்லாம் இறைவன் திருவடி என்று வருகிறதோ, அங்கெல்லாம் "ஞானம்"  என்று போட்டுக் கொள்ளலாம்.  இறைவன் திருவடி என்பது ஞானத்தின் குறியீடு. 

ஞானத்தை இரண்டு வகையாக பிரிக்கிறார்கள்.  படித்து வருவது, அனுபவ அறிவு. 

பர ஞானம், அபர ஞானம் என்று சொல்லுவார்கள்.

நமது கடவுள்களைப் பார்த்தால், பல தலைகள், பல கரங்கள் இருக்கும். ஆனால் எல்லா  கடவுளுக்கும் இரண்டு கால்கள்தான். பத்து கால், பன்னிரண்டு கால் உள்ள தெய்வங்கள் கிடையாது. விஸ்வ ரூபம் எடுத்தால் கூட ஆயிரம் தலைகள், ஆயிரம் கைகள் வரும்,ஆனால் திருவடிகள் இரண்டு மட்டும் தான். 

ஞானம் வரும் போது தலை எழுத்து அழியும். அல்லது, ஞானத்தைக் கொண்டு 
தலை எழுத்தை அழிக்கலாம். 


 
பாடல் 

-------------------------------------------------------------------------------------- 
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே
-------------------------------------------------------------------------------------
 
சீர் பிரிச்சு பார்க்கலாம்
 
------------------------------------------------------------------------------------------------
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேன் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங் கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே
-------------------------------------------------------------------------------------------------
 
பொருள் 


click the above link to continue reading

 
 
சேல் பட்டு - மீன்கள் துள்ளி விளையாடியதில்

அழிந்தது - அழிந்தது

செந்தூர் வயல் பொழில் - திரு செந்தூரில் உள்ள வயல்கள் (அவ்வளவு தண்ணி 
இருக்குமாம் வயலில் , மீன் நீந்தும் அளவுக்கு)

தேன் கடம்பின் - தேன் வழிகின்ற கடம்ப பூ உள்ள

மால் பட்டு - மாலை பட்டு

அழிந்தது - அழிந்தது

பூங் கொடியார் மனம் - பெண்களின் மனம்

மா மயிலோன் - பெரிய மயில் மேல் உள்ள முருகன்

வேல் பட்டு - வேலினால்

அழிந்தது - அழிந்தது

வேலையும் சூரனும் வெற்பும்  - காவலை உடைய சூர பத்மனின் கோட்டையும், மலையும்

அவன் - அந்த முருகனின்

கால் பட்டு - திருப் பாதம் பட்டு

அழிந்தது - அழிந்தது

இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே
 
முருகப் பெருமானின் திருவடி பட்டு நம் தலை எழுத்து மாறும் என்கிறார் அருணகிரிநாதர்.

ஞானம் பெருகட்டும். பண்டை வினைகள் ஓயட்டும். 


Monday, November 16, 2020

கம்ப இராமாயணம் - அமிழ்தால் செய்த நஞ்சு

 கம்ப இராமாயணம் - அமிழ்தால் செய்த நஞ்சு 


இராவணன் சீதையை கொண்டு வந்ததை கண்டித்து வீடணன் சொன்னான், கும்பகர்ணன் சொன்னான், இந்திரசித்து சொன்னான், மாரீசன் சொன்னான். 


ஆனால் மண்டோதரி ஒரு இடத்தில் கூட சொன்ன மாதிரி தெரியவில்லை. 

மண்டோதரி கண்டித்து இருக்க வேண்டாமா? ஒரு வேளை சம உரிமை இல்லாதோ காலமோ? வாழ்கை துணை நலம் என்கிறார்களே. கணவன் செய்வதெல்லாம் சரி என்று ஏற்றுக் கொள்வது சரிதானா? மண்டோதரியை கற்பில் சீதைக்கு இணையாக காட்டுவான் கம்பன். அனுமனே முதலில் மண்டோதரியைக் கண்டு சீதை என்று ஒரு கணம் மயங்கினான் என்று கம்பன் பதிவு செய்கிறான். 

கற்பின் எல்லைதான் என்ன? 


கணவன் இன்னொரு பெண்ணை பலவந்தமாக கொண்டு வந்தால், பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா?


கணவன் தீயில் குதி என்றால் குதிப்பதா? 


சிந்திக்க வேண்டிய விஷயம். 


இந்திரசித்து இறந்து போகிறான். தலையில்லா அவன் உடலை இராவணன் சுமந்து வருகிறான். இறந்த தன் மகனைப் பார்த்து மண்டோதரி அழுகிறாள். அந்த ஒரு இடத்தில் சீதை பற்றி அவள் பேசுகிறாள். 


"அஞ்சினேன் அஞ்சினேன் அந்த சீதை என்ற அமிழ்தால் செய்த நஞ்சால் நாளை இலங்கை வேந்தனும் இப்படி தலை இல்லாமல் இறந்து கிடப்பானே என்று நினைத்து அஞ்சினேன் அஞ்சினேன் " என்றாள்.


பாடல் 


‘பஞ்சு எரி, உற்றது என்ன

    அரக்கர்தம் பரவை எல்லாம்

வெஞ்சின மனிதர் கொல்ல,

    விளிந்ததே மீண்டது இல்லை;

அஞ்சினேன் அஞ்சினேன்; அச்

    சீதை என்று அமிழ்தால் செய்த

நஞ்சினால் இலங்கை வேந்தன்

    நாளை இத்தகையன் அன்றோ? ‘


பொருள்

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_16.html

click the above link to continue reading 

‘பஞ்சு எரி, உற்றது என்ன = பஞ்சில் தீ பற்றியது போல 

அரக்கர்தம் = அரக்கர்களின் 

பரவை எல்லாம் = படைகள் எல்லாம் 

வெஞ்சின மனிதர் கொல்ல = கொடிய சினம் கொண்ட மனிதர்கள் கொல்ல 

விளிந்ததே மீண்டது இல்லை; = இறந்தன, மீண்டும் வரவில்லை 

அஞ்சினேன் அஞ்சினேன்;  = அஞ்சினேன், அஞ்சினேன் 

அச் சீதை என்று = அந்த சீதை என்ற 

அமிழ்தால் செய்த = அமிழ்தால் செய்த 

நஞ்சினால்  = விஷத்தால் 

இலங்கை வேந்தன் = இராவணன் 

நாளை இத்தகையன் அன்றோ? ‘ = நாளை இந்த மாதிரி தலை துண்டிக்கப்பட்டு இறந்து கிடப்பானே என்று 


கணவன் செய்வது தவறு என்று தெரிகிறது. அதனால் அவன் அழிவான் என்று தெரிகிறது. இருந்தும் அவனோடு சண்டை போடவில்லை. 

மண்டோதரி நினைத்து இருக்கலாம்....


இராவணனுக்குத் தெரியாதா ? முக்கோடி வாழ்நாள், முயன்று உடைய பெரிய தவம், நாரதர் முனிவருக்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவு, கூற்றையும் ஆடல் கொண்ட வீரம், அட்ட திக்கு யானைகளோடு போரிட்ட தோள் வலி, அவனுக்குத் தெரியாததையா தான்  சொல்லி விடப் போகிறேன் என்று நினைத்து இருக்கலாம். 


சுக்ரீவனின் மனைவியை வாலி வைத்துக் கொண்டான். வாலியின் மனைவி தாரை அதை எதிர்த்து ஒன்றும் சொல்லவில்லை. 


வலிமையான ஆண்களின் பின்னால் இருக்கும் பெண்கள் ஒன்றும் சொல்லுவது இல்லையோ? 









Sunday, November 15, 2020

திருக்குறள் - நோக்கக் குழையும் விருந்து

 திருக்குறள் - நோக்கக் குழையும் விருந்து


விருந்து என்பதை ஒரு அறமகாச் சொன்னவர்கள் நம்மவர்கள். விருந்தின் மேன்மைப் பற்றி சொல்லாத இலக்கியம் இல்லை. கணவனை பிரிந்த மனைவி கூட, அவள் பிரிவை பற்றி கவலைப் படாமல், "ஐயோ, நான் யாரையும் விருந்துக்கு அழைக்க முடியவில்லையே, அவர் எப்படி விருந்தினர் வந்தால் சமாளிப்பாரோ" என்று வருந்துகின்ற காட்சிகளை காண்கிறோம். 


அதெல்லாம் சரி, விருந்து கொடுப்பவன் எப்படி கொடுக்க வேண்டும், என்பதற்கு ஆயிரம் விதிமுறை சொல்லி இருக்கிறார்கள். இந்த விருந்தினன் எப்படி இருக்க வேண்டும் என்று ஏதாவது சொல்லி இருக்கிறார்களா? 


வீட்டுக்கு விருந்துக்கு வருபவன் எப்படி இருக்க வேண்டும்? அவனுக்கு ஏதாவது விதி இருக்கிறதா ?


சிலர் இருக்கிறார்கள். 


முதலில், சொல்லாமல் கொள்ளாமல் வந்து தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவார்கள். வந்தவனை போ என்றா சொல்ல முடியும். நாம் ஏதோ ஒரு அவசரத்தில் அல்லது ஒரு சங்கடத்தில் இருப்போம்.  அவன் பாட்டுக்கு வந்து உட்கார்ந்து கொண்டு ஊர் கதை எல்லாம் பேசிக் கொண்டு இருப்பான். நம் அவஸ்தை தெரியாமல். 


இன்னும் சிலர் இருக்கிறார்கள்,  வீட்டில் வந்து என்ன பேசலாம், என்ன பேசக் கூடாது என்ற இங்கிதம் தெரியாதவர்கள். மனைவி, பிள்ளைகள் இருக்கும் போது எதைப் பேசலாம், எதைப் பேசக் கூடாது என்ற பாகுபாடு இல்லாமல், கண்டதையும் பேசிக் கொண்டு இருப்பது. நாம் இங்கே நெளிந்து கொண்டு இருப்போம். அதைப் பற்றியெல்லாம் ஒரு கவலையும் இல்லாமல், பேசிக் கொண்டே போவான். 


மூன்றாவது, நேரத்தின் அருமைதெரியாதவர்கள். நாம் எப்படி எல்லாமோ எடுத்துச் சொல்லி பார்ப்போம். "அவசரமா வெளியே போகணும், ஒருவரை பார்க்கப் போகணும்" என்றெல்லாம் சொல்லிப் பார்போம். ம்ஹும்...ஒரு அசைவும் இருக்காது. 


நான்காவது, வீட்டின் நிலைமை புரியாமல் சில பேர் உட்கார்ந்து கழுத்தை அறுத்துக் கொண்டு இருப்பார்கள். மனனவி எங்கோ வெளியே போக கிளம்பிக் கொண்டு இருப்பாள். "நல்ல காப்பி கிடைக்குமா" என்று உரிமையோடு கேட்டு நடு வீட்டில் உட்கார்ந்து கொள்வார்கள். 


இன்னும் சிலர், ஒரு வீட்டில் எவ்வளவு சுதந்திரம் எடுத்துக் கொள்ளலாம், என்ற இங்கிதம் தெரியாதவர்கள். வீட்டுக்கு வந்தால், ஹாலில் உட்கார வேண்டும். அடுப்படிக்கு உள்ளே போவது, படுக்கை அறையை எட்டிப் பார்ப்பது, அங்குள்ள புத்தகங்களை எடுத்துப் போட்டு புரட்டுவது, என்று அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்துக் கொள்வார்கள்.  சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது. 


இன்னும் சிலர், நாசூக்கு என்பது அணு அளவும் இல்லாத ஆட்கள். சாப்பிட ஏதாவது கொடுத்தால், "ரொம்ப நல்லா இருக்கே, இன்னும் கொஞ்சம் இருக்கா" என்று நேரடியாக கேட்டு நம்மை சங்கடத்தில் ஆழ்த்துவார்கள். 


வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால், "இங்க வா, மாமா கிட்ட வா என்று அதை கன்னத்தைப் பிடித்து கிள்ளுவது " போன்ற அநாகரீகமான செயலில் ஈடு படுபவர்களும் உண்டு. 


இப்படிப் பட்ட ஆட்களுக்கு வள்ளுவர் ஏதாவது சொல்லி இருக்கிறாரா? 


சொல்லாமல் இருப்பாரா?


பாடல் 

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_83.html

(please click the above link to continue reading)


மோப்பக் = முகர்ந்து பார்த்தால் 

குழையும் =  வாடி விடும் 

அனிச்சம்  = அனிச்சம் மலர் 

முகந்திரிந்து = முகம் சற்றே மாறி 

நோக்கக் = பார்த்தால் 

குழையும் = வாடி விடும் 

விருந்து. = விருந்தினர் 


மலர்களில் மிக மென்மையானது அனிச்சம் மலர். அதை பறிக்கக் கூட வேண்டாம். முகர்ந்து பார்த்தாலே வாடி விடும். அவ்வளவு மென்மை. விருந்தினர்கள் அதை விட மென்மையானவர்கள். வீட்டில் இருப்பவர்கள் கொஞ்சம் முகம் மாறி பார்த்தாலே விருந்தினர்கள் வாடி விடுவார்கள். 


அதெல்லாம் சரி, அதுக்கும் இந்த விருந்தினர்க்கும் என்ன சம்பந்தம். 


வள்ளுவர் சொல்கிறார், ஒரு விருந்தினன் அந்த அளவுக்கு மென்மையா,  இருக்கணும். 

விருந்துக்கு போன வீட்டின் நிலை என்ன, அங்குள்ள கணவன் மனைவி உறவு எப்படி இருக்கு, எங்காவது கிளம்பிக் கொண்டு இருக்காங்களா, பேசலாமா, கூடாதா, என்று எல்லாவற்றிலும் ஒரு நாசுக்கு, பண்பாடு, ஒரு மென்மை இருக்க வேண்டும். 


அவன் தான் விருந்தினன். அவனைத்தான் விழுந்து விழுந்து உபசரிக்கச் சொல்கிறது நம் இலக்கியங்கள். 


மாறாக, இங்கிதம் தெரியாமல், பண்பாடு இல்லாமல், வீட்டின் சூழ் நிலை தெரியாதவனை விருந்து பாராட்டச் சொல்லவில்லை. 

எனவே, அப்படிப்பட்டவர்கள் வந்தால், தயங்காமல் மனதில் பட்டதைச் சொல்லி அவர்களின் எல்லையை காட்டுவது தவறு இல்லை. நீங்கள் செய்வதும் செய்யாததும் உங்கள் விருப்பம். நம் கலாச்சாரம், பண்பாடு, எல்லா விருந்தினரையும் ஒரு சேர பார்க்கச் சொல்லவில்லை. 







தேவாரம் - பறி நரி கீறுவது அறியீர்

 தேவாரம் - பறி நரி கீறுவது அறியீர் 


எப்ப வெளியே போனாலும் ஒரு ஐம்பது அல்லது அறுபது கிலோ மூட்டையை தூக்கிக் கொண்டுதான் போக வேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும்? கல்யாண வீட்டுக்குப் போனாலும், காய் கறி வாங்கப் போனாலும், அலுவலகம் போனாலும், கோவிலுக்குப் போனாலும் அந்த மூட்டையை சுமந்து கொண்டுதான் போக வேண்டும். 


முடியுமா?


ஆனால் , செய்கிறோமே. இந்த உடம்பை தூக்கிக் கொண்ண்டுதானே போகிறோம். எங்கு போனாலும், இந்த உடம்பை தூக்கிக் கொண்டு தான் போக வேண்டி இருக்கிறது. விட்டு விட்டுப் போக முடியுமா? 


நம்ம உடம்பு நமக்கு பாரமா? என்று கேட்கலாம். 


நாம் வெகு தூரம் நடப்பது இல்லை. எனவே தெரிவது இல்லை. பத்து கிலோ மீட்டர் நடந்து பாருங்கள் தெரியும், இந்த உடம்பு பாரமா இல்லையா என்று. பத்து மாடி ஏறிப் பாருங்கள் தெரியும். இந்த உடம்பை தூக்கிக் கொண்டு ஏற முடியாது என்று. மூச்சு வாங்கும். நின்று விடுவோம். 


இந்த உடம்பு ஒரு நாள் படுத்து விடும். இதை வைத்து எதாவது நல்லது செய்யலாம். நல்லவற்றை அறிந்து கொள்ளலாம். அறிந்தவற்றை பகிர்ந்து கொள்ளலாம். நாலு நல்ல வார்த்தை பேசலாம். ஏதாவது உருப்படியாக செய்யலாம். அதை விடுத்து சும்மா இந்த உடம்பை தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருக்கிறோம். 


ஒரு நாள், இந்த உடம்பை தீ கொள்ளும், அல்லது நிலம் கொள்ளும். 


சுந்தரர் சொல்கிறார் 


"இந்த உடம்பை சுமந்து கொண்டு திரிந்து துன்பப் படுகிறீர்கள். ஒரு நாள், இந்த உடம்பை புதைத்து விடுவார்கள். புதைத்த உடம்பை நரி தோண்டி எடுத்து கீறி தின்னும். அது உங்களுக்குத் தெரியுமா? தெரியாது. கூற்றுவன் ஒரு நாள் வருவான். அவன் வரும் போது அடடா நல்லது செய்யாமல் காலத்தை போக்கி விட்டோமே என்று வருந்தினால், செய்ய நினைத்த நல்ல காரியங்களை செய்திருந்தால் வரும் பலன் கிட்டாமல் போய் விடும். இருக்கிற போதே, வாழ் நாளின் குறைவை எண்ணி நல்லதை செய்யுங்கள். பசித்தவர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நல்ல நீரோடு, உணவு அளித்து, அவர்கள் மனம் மகிழும் படி பேசி இருப்பவர்கள் வணங்கும் கேதாரம் என்ற திருத் தலத்தில் உள்ள ஈசனை வழி படுங்கள் "


பாடல் 


பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர்

குறிகூவிய கூற்றங்கொளு நாளால் அறம் உளவே

அறிவானிலும் அறிவான்நல நறுநீரொடு சோறு

கிறிபேசிநின் றிடுவார்தொழு கேதாரமெ னீரே


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_15.html

(pl click the above link to continue reading)



பறியேசுமந் துழல்வீர் = பறி என்றால் உடம்பு. உடம்பை சுமந்து கொண்டு துன்பப் படுவீர்கள் 


பறி = இந்த உடம்பை 

நரிகீறுவ தறியீர் = நரி தனது கூரிய நகங்களால் கீறுவதை அரிய மாட்டீர்கள் 

குறி = குறித்த நாளில் 

கூவிய = கூவிக் கொண்டு வந்து 

கூற்றங்கொளு நாளால் = கூற்றுவன் உங்கள் உயிரை கொண்டும் செல்லும் நாளில் 


அறம் உளவே = அறம் உங்களுக்கு உளவாகுமா ? ஆகாது. செய்தால் தானே பலன் கிட்டும்.

அறிவானிலும் அறிவான்  = அறிந்து கொள்ளக் கூடியவர்களில் ஒருவராக 


நல நறுநீரொடு  சோறு = நல்ல நறுமணம் மிக்க நீரோடு, சோறும் தந்து 

கிறிபேசி  = அவர்கள் மனம் மகிழும் படி பேசி 

நின் றிடுவார்  = இருப்பவர்கள் 


தொழு = தொழும் , வணங்கும் 

கேதாரமெ னீரே = கேதாரம் என்று சொல்லுங்கள். 


திருவாசகத்தில், திரு அம்மாணையில் , மணிவாசகர் பாடுவார் 


கேட்டாயோ தோழி "கிறி" செய்த வாறொருவன்

தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்

காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டி

தாள்தா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி

நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த

ஆட்டான்கொண் டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய் 


கிறி செய்தவாறு  ஒருவன் = மனதை மயக்கும் படி பேசி ஒருவன். சிற்றின்பத்தின் உச்சம் தொட்டுக் காட்டிய பாடல் இது. ஒரு பெண் முதன் முதலாக ஒரு ஆடவனின் அருகாமை உணரும் பாடல். 


மாவலியிடம், அவன் மனம் மயங்கும் படி பேசி மூன்றடி நிலம் பெற்ற அந்தத் திருமாலை அல்லால் என் மனம் வேறு ஒன்றையும் போற்றாதே என்கிறது பிரபந்தம். 


சுருங்குறி வெண்ணை தொடுவுண்ட கள்வனை, வையமுற்றும்

ஒருங்குர வுண்ட பெருவயிற் றாளனை, மாவலிமாட்டு

இருங்குறள் ஆகி இசையவோர் மூவடி வேண்டிச்சென்ற

பெருங்"கிறி" யானையல் லால்,அடி யேன்நெஞ்சம் பேணலதே


இதில் உள்ள இறுதி இரண்டு சொற்கள் "நெஞ்சம் பேணலதே" . நெஞ்சம் பேணாது. நெஞ்சம் போற்றாது என்று பொருள். 


பேணுதல், போற்றுதல். 


தந்தை தாய் பேண். தாய் தந்தையரை போற்று. 


பெண் என்ற சொல் பேண் என்ற சொல்லில் இருந்து பிறந்தது. 


போற்றப் படுபவள், போற்றப்  பட வேண்டியவள் என்ற அர்த்தத்தில்.