Saturday, December 12, 2020

நாலடியார் - எது வறுமை?

நாலடியார் - எது வறுமை?


நிறைய பேர் நினைக்கிறார்கள், படிப்பது எதற்கு? பணம் பண்ணத்தானே என்று. பணம் எப்படி பண்ணினால் என்ன? சட்டத்துக்கு புறம்பான செயல்களை செய்யாமல் செல்வம் சேர்க்க முடியும் என்றால், படிப்பு எதற்கு? 


படிக்காத முட்டாள்கள் எவ்வளவோ பேர் பெரும் செல்வம் சேர்க்கவில்லையா? அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என்று படிப்பு அறிவு கொஞ்சம் கூட இல்லாதவர்கள் செல்வத்தில் புரள்கிறார்களே, பின் படிப்பின் தேவை தான் என்ன?


பலருக்கு இந்த கேள்வி ரோ சங்கடமான ஒன்று. 


சில பேர் நிறைய படிப்பார்கள். பலப் பல பட்டங்கள் இருக்கும். நாலு காசு பண்ணத் தெரியாது. புத்தக அறிவு, பட்டங்கள் இவை தான் கல்வியா?


நாலடியார் விளக்குகிறது. 


சில பேர் ஆண்கள் போல் தோற்றம் அளிப்பார்கள். ஆனால் அவர்களிடம் ஆண்மைக் குணம் இருக்காது. பெண் குணம் மிகுந்து இருக்கும். பேடிகள் என்று சொல்லுவார்கள். அவர்கள், பெண்கள் அணியும் நகைகளை அணிந்து கொள்வார்கள். அவர்களைப் போல உடை உடுத்துவார்கள். 


அது பார்த்து இரசிக்கும் படியாகவா இருக்கும்? அதே நகைதான், அதே உடை தான். இருந்தாலும் சற்று அருவெறுப்பாக இருக்காது? ஆண் தோற்றத்தில் உள்ள ஒரு அலி உதடுச் சாயம் பூசிக் கொண்டு வந்தால் பார்க்க எப்படி இருக்கும்?


அறிவில்லாதவன் கையில் உள்ள செல்வம் அப்படி இருக்குமாம்?  அவனிடம் செல்வம் இருக்கும். அளவுக்கு அதிகமாக செல்வம் இருக்கும். ஆனால், அலி அணிந்த நகைகள் போல பொருத்தம் இல்லாமல் இருக்கும். 


சரி, அறிவு உள்ளவன் என்றால் யார்? படித்து பட்டம் பெற்றவனா? உலகத்தில் உள்ள பெரிய பெரிய நிறுவங்களின் தலைவர்கள் ரொம்ப படித்தவர்கள் அல்ல. நாட்டின் தலைவர்கள் படித்தவர்கள் அல்ல. அவர்கள் முட்டாள்களா என்றால் இல்லை. 


நாலடியார் கூறுகிறது, "நுண்ணர்வு இன்மை வறுமை" என்று. 

அது இருந்தால் பெரும் செல்வம் உள்ளது மாதிரி. 

நுண் அறிவு அல்ல, நுண் உணர்வு.

ஒரு மருத்துவரிடம் போகிறீர்கள். இந்த இடத்தில், இந்த மாதிரி வலி இருக்கிறதுஎன்று சொல்கிறீர்கள். உடனே அவர் மனதில் அந்த வலிக்கு இதுதான் காரணமாக இருக்கும் என்று முடிவு பண்ணுகிறார். அதை உறுதி செய்ய சில பல சோதனைகள் செய்கிறார். அந்த முடிவு செய்யும் ஆற்றல் தான் நுண்ணர்வு. 

படிப்பு, அனுபவம், இவற்றைத் தாண்டி வருவது. 

என்ன சாப்பிட்டால் உடம்பில் என்ன நடக்கும் என்று பல பேருக்குத் தெரியும். ஆனால், நாம் உண்ட உணவினால் நம் மன நிலை எப்படி பாதிக்கப் படுகிறது என்ற நுண் உணர்வு வெகு சிலருக்கே இருக்கும். 


நம் உணர்வுகள், செயல் பாடுகள், சிந்தனை, எல்லாம் நாம் உண்ணும் உணவில் இருந்து வருகிறது. எந்த உணவை உண்டால், எப்படி நம் மனம் மாறுகிறது என்ற நுண் உணர்வு இருக்க வேண்டும். யாரிடம் பேசினால் நம் மனம் எப்படி மாறுகிறது என்று தெரிய வேண்டும். எதைப் படித்தால் எப்படி பாதிக்கப் படுகிறோம் என்று அறியும் அறிவு வேண்டும்.


கூர்மையான அறிவு. அது இல்லாவிட்டால், அது தான் வறுமை என்கிறது நாலடியார். அந்த உணர்வு இருந்தால், அது தான் செல்வம். 


பாடல் 


 நுண் உணர்வு இன்மை வறுமை; அஃது உடைமை

பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம்;-எண்ணுங்கால்,

பெண் அவாய், ஆண் இழந்த பேடி அணியாளோ,

கண் அவாத் தக்க கலம்?


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_12.html

Please click the above link to continue reading



நுண் உணர்வு இன்மை வறுமை; = நுண் உணர்வு இல்லாமல் இருப்பது வறுமை.  இருப்பது செல்வம். 

 அஃது உடைமை = அது இருந்தால் 

பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் =  அது கிடைத்தற்கு அரிய் பெரிய செல்வம் 

எண்ணுங்கால், = நினைத்துப் பார்த்தால் 

பெண் அவாய் = பெண்மை குணம் நிறைந்து 

ஆண் இழந்த பேடி = ஆண்மைக் குணம் இழந்த பேடி 

அணியாளோ, = அணிந்திருக்கும் 

கண் அவாத் தக்க  = கண்கள் விரும்பும் 

கலம்? = அணிகலம் 


நுண் உணர்வு இல்லாதவன் பெற்ற செல்வம், பேடி அணிந்த அணிகலன் போல.


என்ன ஒரு உதாரணம்!




Thursday, December 10, 2020

திருக்குறள் - முப்பால்

 திருக்குறள் - முப்பால் 


வாழ்வின் அடிப்படை துறவறம் என்று பார்த்தோம். துறவறம் தான் நோக்கமா? எல்லாவற்றையும் விடுவதற்கா வாழ்கை என்றால் இல்லை. 

வாழ்வின் நோக்கம் வீடு பேறு. வீடு பேறு அடைய துறவறம் வேண்டும். வீட்டின் வாயில் துறவறம். அதன் வழியாகத்தான் போயாக வேண்டும். 

வீடு என்றால் என்ன, அதை ஏன் அடைய வேண்டும் என்று பின்னால் சிந்திக்க இருக்கிறோம். 

இப்போது, துறவறம் நோக்கம் , முக்கியம் என்றால் பின் இல்லறம் எதற்கு? நேரே துறவுக்கு போய் விட்டால் என்ன? 

பிரமச்சரியம், துறவறம், வீடு என்று இருந்தால் என்ன? எதுக்கு நடுவில் இல்லறம்? 

சரி இல்லறம் இருந்து விட்டுப் போகிறது. இந்த அறம் பொருள், இன்பம் என்று மூன்றாக பிரித்து இருக்கிறாரே, பொருளும் இன்பமும் எதற்கு? 

இப்படி பல சிக்கலான கேள்விகள் எழுகின்றன.


சிக்கலை அவிழ்போம். 


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_10.html


click the above link to continue reading


வாழ்வின் நோக்கம் - வீடு பேறு.


வீடு பேறு அடைய முக்கியமான தேவை - துறவு. 


துறவு நிலைக்குப் போகவேண்டுமானால் - அருள் வேண்டும். 


அருள் வர வேண்டும் என்றால் முதலில் அன்பு வேண்டும். 


அன்பு மனதில் சுரக்க வேண்டும் என்றால் பிள்ளை வேண்டும். 


பிள்ளை வேண்டும் என்றால் கணவன் மனைவி உறவு வேண்டும். இன்பம் வேண்டும்.  


குடும்பம் நன்றாக நடக்க வேண்டும் என்றால் பொருள் வேண்டும். 


எனவே முதலில் இல்லறம். இல்லறம் சிறப்பாக நடக்க, காமம், இன்பம் என்ற ஒரு எதிர்பார்ப்பு, தேவை. அவை செவ்வனவே நடக்க பொருள். இவற்றை அனுபவித்து கடக்கும் போது தானே துறவறம் வந்து நிற்கும். 


துறவு வந்தால், வீடு வரும். 


இது வள்ளுவர் வகுத்துக் காட்டும் அறம், வாழ்கை நெறி. 


நீங்கள் நினைக்கலாம், "வீடு பேறு என்று ஒன்று கிடையாது. அல்லது வேண்டாம்" என்று வைத்து விட்டால், பின் வள்ளுவம் பூராவும் விழுந்து விடும் அல்லவா?


ஆம். சரிதான். ஆனால், வீடு பேறு வாழ்வின் நோக்கம் இல்லை என்று எடுத்துக் கொண்டால், பின் வேறு என்ன என்று சொல்ல வேண்டும். அந்த புதிய நோக்கத்தை அடைவது எப்படி என்று சொல்ல வேண்டும். 


வள்ளுவர் மிக மிக ஆழமாக சிந்தித்து திருக்குறளைப் படைத்து இருக்கிறார். 


அதற்கு இணையாக ஒன்றை சிந்திப்பது என்பது மிக மிக கடினமான காரியம். 


அறத்துப் பால். 

அதன் உள்ளே இல்லறம், துறவம் என்ற இரண்டு பெரிய அறங்கள். 


இல்லறம் நடக்க  இன்பத்துப் பால். 


இல்லறம், இன்பம், பிள்ளை இவற்றை கொண்டு செல்ல பொருட் பால் என்று பிறந்தது முதல், வீடு பேறு வரை ஒவ்வொரு கட்டமாக பிரித்து கை பிடித்து கூட்டிச் செல்கிறார். 


பால், இயல், அதிகாரம், குறள் என்று முதலில் இருந்து இறுதி வரை ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டது. 


ஒரு முழு வாழக்கைக்கும் ஒரு வழிகாட்டி. 


இப்படி ஒரு நூலை காணவே முடியாது.


இனி திருகுறளுக்குள் போவோம். 


Tuesday, December 8, 2020

திருக்குறள் - அன்பும் அருளும்

 திருக்குறள் - அன்பும் அருளும் 


துறவத்துக்கு அன்பு எப்படி அடிப்படையாக இருக்கிறது என்று பார்த்தோம். அன்பு இருந்தால், எதையும் மகிழ்வோடு துறக்க முடியும். 


அதெல்லாம் சரி, நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நாம் தருகிறோம். அது எல்லாம் துறவறம் என்று எப்படிச்  சொல்லுவது? 


நாம் ஒரு பூங்காவில் அமர்ந்து இருக்கிறோம். நம் பிள்ளையோ, பேரப் பிள்ளையோ அங்கு விளையாடிக் கொண்டு இருக்கிறது. ஓடும் போது கால் தடுக்கி கீழே விழுந்து விடுகிறது. பதறிப் ஓடிப் போய் தூக்குவோம் இல்லையா. 


சரி. 


வேறு யாரோ ஒரு பிள்ளை கீழே விழுந்து விடுகிறது. நமக்கு என்ன, நம்ம பிள்ளை இல்லையே என்று இருப்போமா அல்லது அந்தப் பிள்ளையையும் அதே மாதிரி ஓடிப் போய் தூக்குவோமா? 


பெரும்பாலானோர் தன் பிள்ளை மாதிரியே மற்ற பிள்ளைகள் விழுந்தாலும் பதறிப் போய் தூக்குவார்கள். சிலர் தூக்காமல் இருக்கலாம். 


நம் பிள்ளை மேல் நாம் செய்வது அன்பு. மற்ற பிள்ளை மேல் நாம் செய்வது கருணை. 


இது எப்படி ஆரம்பிக்கிறது என்றால், முதலில் தான் தான் என்று இருந்தவன், (ள்), பின் தன் மனைவிக்கு என்று பாடு படுகிறான். அவள் என்ன சொன்னாலும், அவளை பாதுகாக்க, அவளை மகிழ்ச்சிப் படுத்த பாடு படுகிறான்.  

அடுத்த கட்டம் பிள்ளைகள்.  ஒரு எதிர் பார்ப்பும் இல்லாமல், பிள்ளைகள் மேல் அன்பு படர்கிறது. 


அடுத்த நிலை, தன் குடும்பம் தாண்டி மற்றவர்கள் மேலும் பரிவு கொள்வது. ஒரு ஏழைக்கு சோறு போடுவது, பணம் தானம் செய்வது, பக்கத்து வீட்டில் முடியாவிட்டால் ஓடிப் போய் உதவி செய்வது என்று அந்த வட்டம் பெரிதாகிக் கொண்டே வருகிறது. 

https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_8.html

click the above link to continue reading 


அன்பு கொஞ்சம் கொஞ்சமாக அருளாக மாறும். வீடு தாண்டி அது தன் கிளை விரிக்கும். 


தனக்கு தனக்கு என்பது சுயநலம் என்றால், என் மனைவி, என் பிள்ளை என்பதும் சற்றே பெரிய சுயநலம். அவ்வளவுதான். 

எப்படி பிள்ளைக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி இருக்கிறதோ, அந்த மகிழ்ச்சி மற்றவருக்கு செய்யும் போதும் வரும். 


வரணும். வரவில்லை என்றால், மனம் விரியவில்லை என்று அர்த்தம். 


குகனையும், சுக்ரீவனையும், வீடனனையும் தம்பியாக, தன் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அந்த அருள் வரும். 


எல்லாம் என் குடும்பம்தான் என்ற எண்ணம் வரும். அப்படி வரும் போது, கொடுப்பது எளிதாகும். விடுவது சுகமாகும். 


மனம் விரிய விரிய மகிழ்ச்சி பொங்கும். 


நாம் ஒரு ஐஸ் கிரீம் சாப்பிடுவதை விட நம் பிள்ளை சாப்பிடுவதை இரசிப்பது எவ்வளவு சுகம். பேரப் பிள்ளை சாப்பிடுவதை இரசிப்பது இன்னும் சுகம். 


தான் ஈட்டிய பொருளால் இன்னொரு உயிர் சுகப் படுவதை காண்பது இன்னொரு சுகம். 


அது துறவிக்கு மட்டுமே வாய்த்த வரம். 


துறவு என்பது சுகம். துறக்காமல் இருப்பதுதான் கடினம். துன்பம். 


சரி, இதெல்லாம் திருக்குறளில் எங்கே இருக்கிறது?  


நாளை முதல் அதை சிந்திக்க இருக்கிறோம். 

 


Monday, December 7, 2020

திருக்குறள் - துறவறம் நோக்கிய வாழ்க்கை

 திருக்குறள் - துறவறம் நோக்கிய வாழ்க்கை 


வாழ்க்கையின் ஒவ்வொரு படியும் துறவறம் நோக்கித்தான் அமைகிறது. 


துறவறம் என்றால் ஏதோ கடினமான ஒன்று என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இல்லவே இல்லை. அது போல் சுகம் எதுவும் இல்லை. 


துறவறம் என்றால் என்ன? நமக்கு வேண்டியதை, விரும்பியதை மகிழ்ச்சியோடு விடுவது. சர்க்கரை நோய் வந்தவன் "நான் சர்க்கரையை துறந்து விட்டேன்" என்று சொல்லுவது பெரிய துறவறம் அல்ல. அதைத் துறக்காவிட்டால் உயிர் போய் விடும். 


பந்தயத்தில் கடைசியில் வந்தவன் "நான் தங்கப் பதக்கத்தை துறந்து விட்டேன் " என்று சொல்லுவது நகைப்பு இடமானது. 


ஆசைப் பட்டதை, விரும்பியதை, ஒரு நிர்பந்தமும் இல்லாமல், மகிழ்ச்சியோடு விட்டு விடுவது. 

நடக்கிற காரியமா?


நடக்கும். 


வாலிப வயதில், வெளியே போய் விட்டு வந்தவுடன், நேரே குளிர் சாதன பெட்டியை திறந்து அதில் என்ன இருக்கிறதோ அதை உண்பது வழக்கமாக இருக்கும். நல்ல பலகாரம் செய்தால் இன்னும் இரண்டு கொடு என்று இருப்பது எல்லாம் தனக்கு என்று உண்ணும் ஆர்வம் இருக்கும். 


அவனுக்கு திருமணம் ஆகி விடுகிறது. மனைவி வந்து விடுகிறாள். வீட்டுக்கு வருகிறான். பசி. குளிர் சாதன பெட்டியைத் திறக்கிறான். டப்பாவில் ஏதோ ஒரு இனிப்பு ஒரே ஒரு துண்டு இருக்கிறது. நாக்கில் எச்சில் ஊறுகிறது. சாப்பிடப் போனவன், ஒரு கணம் நினைப்பான். 'அட, அவளுக்கு இதை ஊட்டி விட்டால் எப்படி இருக்கும்" என்று. அவள் முகத்தில் தோன்றும் சந்தோஷத்தை பார்க்க எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பான். சரி, இருக்கட்டும், அவளுக்கு என்று வைத்து விடுவான். 


அவளும் அப்படித்தான். "இது அவருக்கு ரொம்ப பிடிக்கும்" என்று அவனுக்கு என்று எடுத்து வைத்து விடுவாள். 

பிடித்த ஒன்றை, மகிழ்வோடு மற்றவர்க்கு என்று துறந்து விடுவது. 

'அதெல்லாம் ஒண்ணும் இல்லை...அவளுக்கு எதுக்கு...அவ நல்லா சாப்பிட்டு இருப்பாள்...' என்று நினைத்தால் கூட 


கொஞ்ச நாள் கழித்து,அவர்களுக்கு பிள்ளை பிறக்கிறது....


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_7.html

click the above link to continue reading.


ஏதோ ஒரு நல்ல தின் பண்டம். "அடடா இதை பிள்ளைக்கு கொடுக்கலாமே" என்று இருவரும் நினைப்பார்களா மாட்டார்களா? 


கணவன் மனைவி இடையிலாவது ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதனால் அவளுக்கு அல்லது அவனுக்கு கொடுத்தேன் என்று இருக்கலாம். 


சின்ன பிள்ளையிடம் என்ன எதிர்பார்ப்பு இருக்கும்? அது சந்தோஷப் படுவதை பார்ப்பது  ஒரு சந்தோஷம்.


தான் பசித்து இருந்தாலும்,பிள்ளைக்கு என்று எடுத்து வைப்பார்கள்தானே? அப்படி எடுத்து வைக்காத பெற்றோரை நாடு கடத்தினாலும் தகும். தனக்கு தனக்கு என்று பிள்ளைக்கு முன் உண்ணும் பெற்றோரை எதில் சேர்ப்பது? 


துறக்கிரோமா இல்லையா?  மனைவிக்காக, கணவனுக்காக, பிள்ளைக்காக துறக்கிரோமா இல்லையா?


எவ்வளவு நேரம், பணம், உடல் உழைப்பு, சந்தோஷம் என்று அனைத்தையும் துறக்கிரோமா இல்லையா? அதும் மகிழ்ச்சியோடு. சரி தானே. 


ஏன் அப்படி செய்கிறோம்? 


காரணம் அன்பு. 


யோசித்துப் பாருங்கள், இதுவரை எத்தனை துறந்து இருக்கிரீர்கள் என்று. 


கடினமாக உழைத்து, யாரி யாரிடமோ ஏச்சும் பேச்சும் வாங்கி, சம்பாதித்து மனைவிக்கு நகை, புடவை, பிள்ளைகளுக்கு உடை,  கல்வி, என்று எத்தனை வருடம் நமக்கு வேண்டியதை துறக்கிறோம், குடும்பத்துக்காக. 


எல்லாவற்றையும் விட பெரிய துறவறம், அழகை துறப்பது. கொஞ்சம் பணம் போனாலும் போகட்டும், நேரம் போனாலும் போகட்டும்....அழகு போனால் போகட்டும் என்று யாராவது சொல்வார்களா? 


பிள்ளை பெறும் போது பெண்கள் தங்கள் அழகை எவ்வளவு துறக்கிறார்கள். 


வயிறு பெருத்து, பெற்ற பின் வயிறு எல்லாம் சுருக்கம் விழுந்து, மார்பகங்கள் கட்டு தளர்ந்து...எவ்வளவு கஷ்டம். சட்டென்று பத்து பதினைந்து வயது கூடிய மாதிரி இருக்கும். 


எந்தப் பெண்ணாவது மாட்டேன் என்று சொல்கிறாளா? பிள்ளை பெறுவது பெரிய மகிழ்ச்சி தான். இளமை போனாலும் பரவாயில்லை என்று பெறுகிறார்களே? 


சாபத்தால் முதுமை அடைந்தான் யயாதி. முடியவில்லை. அவனால் அதை தாங்க முடியவில்லை. பிள்ளையிடம் இளமையை யாசகம் பெற்றான்.  அத்தனை தாய் மார்களும் இளமையை பணயம் வைத்துத்தான் பிள்ளை பெறுகிறார்கள். 


அதுவும் மகிழ்வுடன். 


காரணம் அன்பு. 


வாழ்கை என்ற ஜீவ நதி அன்பென்ற கடலை நோக்கி காலம் காலமாக ஓடிக் கொண்டே இருக்கிறது. 


அதன் போக்கில் எத்தனை இழப்புகள், துறப்புகள்..எல்லாம் மன நிறைவோடு, திருப்தியோடு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. 


துறவு நோக்கித்தான் வாழ்கை நகர்கிறது. 


மேலும் சிந்திப்போம்.....




Sunday, December 6, 2020

திருக்குறள் - அறமெனும் வாழ்க்கை

 திருக்குறள் - அறமெனும் வாழ்க்கை 


பொதுவாகச் சொல்லப்படும் பிரம்மச்சரியம், இல்வாழ்கை, வானப்ரஸ்தம், சன்யாசம் என்ற வாழ்க்கையின் நான்கு கூறுகளை வள்ளுவர் இரண்டுக்குள் அடக்குகிறார். 


இல்லறம், துறவறம் என்ற இரண்டில் அதை அடக்குகிறார். 


எப்படி ?


பிரம்மச்சரியம் என்பது இல்வாழ்வின் முதல் பகுதி. எனவே அதை இல்லறத்தில் சேர்த்து விட்டார். 


வானப்ரஸ்தம், சன்யாசம் என்ற இரண்டும் துறவறத்தின் இரண்டு படிகள் என்பதால் அவற்றை துறவரத்தோடு சேர்த்து விட்டார். 


இல்லறம், துறவறம் - இதுதான் வாழ்கை. 


எங்கே இதற்கு வெளியே ஒரு அமைப்பை சிந்தியுங்கள் பார்ப்போம்? முடியாது. 


எப்படி சுத்தினாலும், இந்த இரண்டுக்குள் வந்துதான் ஆக வேண்டும். 


இந்த இரண்டில் வேண்டுமானால் மேலும் சில பிரிவுகளை நாம் உண்டு பண்ணிக் கொள்ளலாம். பெரும் பகுதி என்பது இது தான். 


வள்ளுவர் பார்வையில் இல்லறத்த்தின் நோக்கம் துறவறம் தான். 


அதானே...கடைசியில் எல்லோரையும் கையில் ஒரு சட்டியை கொடுத்து சாமியாராகப் போகச் சொல்லுவதுதான் இந்த இலக்கியங்களின் நோக்கம். 


எப்பப் பாரு, நிலையாமை, துறவறம், சாவு என்று இதையே பேசிக் கொண்டு இருப்பது. 


சந்தோஷமாக வாழ வழி சொல்லுவதே இல்லை. யார் இதை எல்லாம் படிப்பார்கள் என்ற அலுப்பு வரலாம்.


நம்பினால் நம்புங்கள்....நம்பாவிட்டால் உங்கள் இஷ்டம்...நாளும் நீங்கள் துறவறம் நோக்கித் தான் நகர்ந்து கொண்டு இருக்கிரீர்கள். நீங்கள் அறிவது இல்லை. 


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_6.html

click the above link to continue reading 


நீங்கள் விரும்பி சில அடிகள், நீங்கள் விரும்பாமல் சில அடிகள் என்று ஒவ்வொரு நாளும் துறவறம் நோக்கித் தான் நடை போட்டுக் கொண்டு இருக் கிறீர்கள்.


இல்லியே...நான் வாழ்கையை அனுபவிக்க அல்லவா துடித்துக் கொண்டு இருக்கிறேன். மனைவி, பிள்ளைகள், சொத்து, சுகம், உறவு, பட்சணம், விருந்து, பூஜை, புனஸ்காரம், டிவி, whatsapp என்று வாழ்க்கையை முழுவதுமாக அனுபவித்துக் கொண்டு தானே இருக்கிறேன். எங்கே துறவறம் நோக்கி நடக்கிறேன் என்று நீங்கள் கேட்கலாம்.


சொல்கிறேன். ஆச்சரியப் பட்டுப் போவீர்கள்.



Saturday, December 5, 2020

திருக்குறள் - வாழ்க்கை எப்படி நகர்கிறது?

 திருக்குறள் - வாழ்க்கை எப்படி நகர்கிறது?


ஒரு நல்ல வாழக்கை என்பது எப்படி இருக்கும் என்று வள்ளுவர் வடிவமைத்துக் காட்டுகிறார். அவர் புதிதாக ஒன்றும் கண்டு பிடித்துச் சொல்லவில்லை. இருப்பதை ஆழ்ந்து , உன்னிப்பாக கவனித்து வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறார். 


அவர் காட்டும் வாழ்க்கைக்கு வெளியே ஒன்றை நம்மால் சிந்திக்க முடியுமா என்பது சந்தேகமே.


சரி, அப்படி என்ன தான் சொல்லி இருக்கிறார்? 


பொதுவாக நமது இந்திய வாழ்க்கை முறை என்பது நான்கு கூறுகளாக பிரிக்கப் படுகிறது. நாம் அறிந்தது தான். 


பிரம்மச்சரியம் - இளமைக் காலம், கல்வி கற்கும் காலம். 

க்ரஹஸ்தம் - திருமணம் முடித்து, இல்வாழ்க்கையில் ஈடுபடுவது 

வானப்ரஸ்தம் - பொறுப்புகளை அடுத்த தலைமுறையிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கி வழி விடுவது

சன்யாசம் - வீடு, சமூகம் இவற்றை துறந்து கானகம் செல்வது 


இதில் ஒன்றும் பெரிய மாற்றம் நாம் கண்டுவிட முடியாது. இளமையில் கல்வி கற்காமல் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று யாரும் சொல்ல முடியாது. 


வாழ்க்கை இப்படித்தான் போகும். ஆற்றோட்டம் போன்ற இயற்கை கதி இது. சிலர் திருமணம் முடிக்காமல் இருக்கலாம், சிலர் சாகும் வரை வீட்டுப் பொறுப்பை சுமந்து கொண்டு அடுத்த தலைமுறைக்கு வழி விடாமல் இருக்கலாம். அது அங்கொன்றும், இங்கொன்றுமாக விதி விலக்காக இருக்கமே அன்றி அதுவே பொது விதியாக இருக்காது. 


வள்ளுவர் இந்த நான்கை சுருக்கி இரண்டாக ஆக்கினார். 


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_5.html


click the above link to continue reading



இல்லறம், துறவறம் என்று. வாழ்க்கை இந்த இரண்டுக்குள் அடங்கிவிடும் என்கிறார். 


இரண்டுமே அறம் தான். 


இல்லறம் - எல்லாம் சேர்ப்பது, உறவுகள், பொருள், என்று சேர்ப்பது. 


துறவறம் - எல்லாவற்றையும் விடுவது. 


சேர்ப்பதும் அறம், விடுவதும் அறம். 


அது எப்படி இரண்டும் அறமாக முடியும்? 


சரி, அது ஒரு புறம் இருக்கட்டும்...அறம் மட்டும் தான் குறிக்கோள் என்றால் பின் ஏன் பொருள், இன்பம் என்று மேற்கொண்டு சொன்னார்? அது எப்படி இங்கே பொருந்தும்? 


துறவறத்துக்கும் காமத்துப் பாலுக்கும் என்ன சம்பந்தம் ? 


இல்லறம், துறவறம் என்று இரண்டு அறங்கள் இருந்தால் எதை எடுப்பது, எதை விடுவது ?


எல்லாரும் துறவியாக போக முடியுமா? 


இப்படி பல கேள்விகள் இருக்கின்றன.


அனைத்துக்கும் விடை காண்போம். 


Tuesday, December 1, 2020

திருக்குறள் - வாழ்வின் நோக்கம்

 திருக்குறள் - வாழ்வின் நோக்கம் 


இந்த வாழ்வின் நோக்கம் என்ன? நாம் ஏதோ ஒன்றை சாதிக்க வேண்டும் என்று நினைத்துப் பிறக்கவில்லை. இந்த நாட்டில், இந்த மதத்ததில், இந்த மொழி பேசும் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று நினைத்து நாம் பிறக்கவில்லை. நம் பிறப்பு நம் கையில் இல்லை. 


ஒரு நோக்கமும் இன்றி பிறந்து விடுகிறோம். பிறந்த பின் என்ன செய்வது? எப்படி வாழ்வது? இந்த வாழ்கையை எப்படி செம்மையாக கொண்டு செல்வது? என்று எப்படி கண்டு பிடிப்பது?

நம் வாழ்க்கைக்கு ஒரு குறிக்கோள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கைக்கு என்று பொதுவாக ஏதாவது குறிக்கோள் இருக்கிறதா? 


சரி அப்படி இருந்தால், எல்லார் வாழ்கையும் ஒரே மாதிரி ஆகி விடாதா?  திருக்குறள் என்று இல்லை, எந்த ஒரு நூலும் வாழ்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா ?


இப்படி யோசிப்போம். எத்தனையோ அறிவியல் விதிகள் இருக்கின்றன. உலகில் உள்ள பொருள்கள், உயிர்கள் உட்பட அந்த விதிகளுக்கு உட்பட்டுத்தான் இயங்குகின்றன. அதனால் என்ன குறைந்து போய் விட்டது? 


எப்படி அறிவியல் விதிகள் உலகியல் பொருள்களை விளக்கம் செய்கின்றனவோ, அது போல் திருக்குறள் போன்ற நூல்கள் வாழ்வியலை நமக்கு விளக்கம் செய்கின்றன. 


ஆயிரக்கணக்கான பேரின் வாழ்க்கைகளை கூர்ந்து நோக்கி, வாழ்வின் பின்னால் இப்படி ஒரு சில விதிகள் இருக்கின்றன என்று கண்டு சொல்கின்றன இந்த நூல்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post.html

click the above link to continue reading



அவை என்ன விதிகள் ? அந்த விதிகளை தெரிந்து கொள்வதால் நமக்கு என்ன பயன்? தெரியாவிட்டால் என்ன ஆகி விடும்?  அந்த விதிகளை எப்படி நம் வாழ்வில், நமக்கு இன்பம் தரும் படி பயன் படுத்திக் கொள்வது?


இவை பற்றி சிந்திப்போம். 


விதிகளை தெரிந்து கொள்வதால் அதன் படி நடக்க வேண்டும் என்று இல்லை. 

உயரத்தில் இருந்து குதித்தால் கீழே விழுவோம், விழுதால் அடி படும், வலிக்கும் என்பது விதி. 


இல்லை நான் குதித்துப் பார்கிறேன். ஒருவேளை நான் கீழே விழாமல் காற்றில் மிதந்தாலும் மிதக்கலாம்...யார் கண்டது என்று குதித்து முயற்சி செய்து பார்க்கலாம். தவறு ஒன்றும் இல்லை. 


விதிகள் தெரிந்தால், அதை கடை பிடித்தால் , வாழ்கை நன்றாக இருக்கும். அவ்வளவுதான். 


அப்படி என்ன பெரிய விதிகளை திருக்குறள் கண்டு சொல்லி விட்டது?


பார்ப்போம்.