Tuesday, March 23, 2021

திருக்குறள் - அமைப்பு முறை

 திருக்குறள் - அமைப்பு முறை 


எதை ஒன்றைச் செய்யப் போனாலும், சொல்லப் போனாலும், முதலில் எது முக்கியமோ அதை சொல்லில் பின் முக்கியத்வம் குறைந்தவற்றை சொல்ல சொல்லவோ, செய்யவோ வேண்டும். 


ஒரு சபையில் வரவேற்புரை வாசிப்பது என்றால் முதலில் தலைவர், பின் செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள் என்று என்று ஒரு வரிசைப் படுத்திக் கொண்டு சொல்ல வேண்டும். 


"இங்கே வந்திருக்கும் செக்யூரிட்டி அவர்களே, மைக் செட் போடுபவரே, chair கொண்டு வந்து போட்டவரே, மின் விளக்கு போட்டவரே, peon அவர்களே, தலைமை தாங்க வந்திருக்கும் தலைமை நீதிபதி அவர்களே எல்லோருக்கும் என் பணிவான வணக்கம்" என்று சொல்லலாமா?



திருக்குறளை சொல்ல வந்த வள்ளுவர் ஏன் முதலில் அறத்துப் பாலை வைத்தார்? இன்பத்துப் பாலை வைத்து இருந்தால் ஒரு மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா. படிக்க ஒரு ஆர்வம், கிளர்ச்சி தோன்றும் அல்லவா? இரு ஈர்ப்பு இருக்கும் தானே?  அதை அடுத்து பொருள் செய்யும் வழியை சொல்லி இருக்கலாம். "பணக்காராவது எப்படி" என்று சொல்லவந்தால் யார் தான் படிக்க மாட்டார்கள். அதை விட்டு விட்டு ஏன் அறத்துப் பாலில் ஆரம்பிக்கிறார்? 



அதற்கு முன்னால், நம் சமய கோட்பாடுகள், இலக்கியங்களின் நம்பிக்கை பற்றி ஒன்று சொல்ல வேண்டும். 


இந்த சொர்க்கம், தேவந்திர லோகம் என்பதெல்லாம் நம் சமயங்களைப் பொறுத்த வரை நிரந்தரமான இருப்பிடம் அல்ல. செய்த நன்மைக்குத் தகுந்தவாறு கொஞ்ச நாள் இருந்து விட்டு திருப்பியும் பிறக்க வேண்டியது தான். நாயாகவோ, நரியாகவோ, பூனையாகவோ, பூரி கிழங்காவோ வந்து பிறக்க வேண்டியதுதான். 


இந்த சொர்கத்தையும் தாண்டி இருக்கும் இடம் தான் வீடு பேறு என்பது. அது இறைவனோடு இரண்டற கலப்பது என்று ஆகும். 


இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_23.html

(please click the above link to continue reading)

காமம் என்பது இந்த உலகில் நமக்கு கொஞ்சம் சந்தோஷம் தருவது. அதுவும் அவ்வப்போது தரும். ஒரு நாளில், ஒரு சில நிமிடங்கள் இன்பம் தரும். இன்பம் தான். ஆனால், பெரிய இன்பம் என்று சொல்ல முடியாது. 


பொருள் இருக்கிறதே, அது இம்மைக்கும், மறுமைக்கும் இன்பம் தரும். தான தர்மங்கள் செய்து இந்திரர் போன்ற இறையவர் பதங்களை அடையலாம் என்று முன்பு கூறினார் அல்லவா, அங்கு போகலாம். இங்கே பொருள் சுகம் தரும், புகழ் தரும், மறுமைக்கு சுவர்க்கம் போன்ற இன்பங்களைத் தரும். 


அறம் இருக்கிறதே, அது இம்மைக்கும், மறுமைக்கும் வழி செய்வதோடு, வீடு பேறு அடையவும் வழி செய்யும் என்பதால், அதிக நன்மை செய்யும் அறத்துப் பாலை முதலில் வைத்தார். 


இதுவரை படித்த வரை, திருக்குறளின் பின் இருக்கும் தீர்கமான சிந்தனையும், தெளிவும் ஓரளவுக்கு உங்களுக்குப் புரிந்து இருக்கும். இவ்வளவு யோசித்து எழுதியவர்கள்  தவறாக எதையாவது சொல்லி இருப்பார்களா? சுயநலமாக எதையாவது சொல்லி இருப்பார்களா? என்று சிந்திக்க வேண்டும். 


திருக்குறளை வாசிப்பதற்கு முன்னால், அது பற்றிய உங்களின் உயர்ந்த மற்றும் தாழ்ந்த கருத்துகளை சற்று தள்ளி வையுங்கள். அவர் என்ன சொல்ல வருகிறார் என்று கவனியுங்கள். அதை உள்வாங்கிக் கொள்ளுங்கள்.  நல்லது என்று நினைத்தால் கடைப் பிடியுங்கள். இல்லை என்றால் விட்டு விடுங்கள். 


வள்ளுவர் மோசமானவர். ஆணாதிக்க சிந்தனை உள்ளவர். கடவுள் நம்பிக்கை கொண்ட மூட மதியாளர், பகுத்தறிவு இல்லாதவர் என்று நம் மேதா விலாசம் கொண்டு அவரை எடை போட்டு நிந்திப்பதால் அவருக்கு ஒன்றும் நட்டம் இல்லை. நட்டம் நமக்குத் தான். 


உயர்ந்த நூல்களை படிக்கும் போது, அவற்றின் மூலம் நம்மை உயர்த்திக் கொள்வது எப்படி என்று சிந்திக்க வேண்டுமே அல்லாது, அதை எப்படி நம் நிலைக்கு கீழே கொண்டு வரலாம் என்று சிந்திக்கக் கூடாது. 


"சிறியன சிந்தியாதான்" என்று கம்பர் சொன்னது போல, சிறியனவற்றை சிந்திக்கக் கூட கூடாது. 


ஒரு திறந்த மனத்தோடு திருக்குறளைப் படிப்போம். 


Monday, March 22, 2021

திருக்குறள் - அமைப்பு முறை - பாகம் 1

 திருக்குறள் - அமைப்பு முறை  - பாகம்  1 


திருக்குறளுக்குள் போவதற்கு முன்னால், அந்தப் புத்தகம் எப்படி அமைக்கப் பட்டு இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம். 

ஒரு பிறந்த நாள் விழாவில் கேக்கும், மெழுகும் இருக்கும். மெழுகை ஊதி அணைத்து விட்டு, அந்த கேக்கை அப்படியே எடுத்து உண்ண முடியுமா?


முடியாது அல்லவா?


அதை நீள வாக்கில் வெட்டி, பின் குறுக்கு வாக்கில் வெட்டி, பின் அதை சிறு சிறு துண்டுகளாக்கித் தானே உண்ண முடியும். 


அது போல அறம் சொல்ல வந்த வள்ளுவர், தன் நூலை நம்மால் ஜீரணிக்கக் கூடிய அளவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி நமக்கு ஊட்டி விடுகிறார். 


முதலில், குறளை மூன்றாகப் பிரிக்கிறார்.  அந்தப் பிரிவுகளுக்கு பால் என்று பெயர்.  

https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1_22.html


(click the above link to continue)

அவை, அறத்துப் பால், பொருட்பால், இன்பத்துப் பால் என்ற மூன்றும் ஆகும். 


சரி, மூன்றாக பிரித்தால் போதுமா, என்றால் முடியாது. இப்பவும் பெரிசாக இருக்கும். இன்னும், சின்ன துண்டாக வேண்டும். 


எனவே பாலை, இயல்களாகப் பிரிக்கிறார். 


அறத்துப் பாலை நான்கு இயல்களாகப் பிரிக்கிறார். 


பாயிர இயல்

இல்லற இயல்

துறவற இயல் 

ஊழியில் 


என்று நான்கு இயல்களாகப் பிரிக்கிறார். 


சரி, போதுமா என்றால், இல்லை, இன்னும் சின்னதாக வேண்டும்.


ஒவ்வொரு இயலையும் அதிகாரமாக பிரிக்கிறார். 

பாயிரவியலை நான்கு அதிகாரமாக பிரிக்கிறார். 


கடவுள் வாழ்த்து 

வான் சிறப்பு

நீத்தார் பெருமை

அறன் வலியுறுத்தல் 


என்ற நான்கு அதிகாரமாக பிரிக்கிறார். 


சரி,போதுமா, இல்லை, இன்னும் சின்னதாக வேண்டும். 


ஒரு அதிகாரத்தை பத்து பாடலாக பிரிக்கிறார். 


குறள் > பால்> இயல் > அதிகாரம் > குறள் 


என்று நூலை வகுத்துக் கொள்கிறார்.


இனி, எதை முதலில் சொல்வது, எதை பின்னால் சொல்வது என்ற சிக்கல் எழும். 


அதற்கும் காரணம் இருக்கிறது. 


எவ்வளவு தூரம் யோசித்து நூல் செய்திருக்கிறார்கள் என்று பாருங்கள். 


இப்படி ஒரு ஒழுங்கு கிடைக்குமா?


அறம், பொருள், இன்பம், வீடு

அறம் என்பது ஒழுக்கம், வழக்கு , தண்டம் 

ஒழுக்கம் மட்டுமே அறம் அது இல்லறம், துறவறம் என்று இரண்டு.


இப்படி எல்லாவற்றையும் பகுதி பகுதியாக பிரித்து தந்து இருக்கிறார்கள். 


நாம் அதை படித்து அதன் படி நடக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி. 



Sunday, March 21, 2021

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - இறுதிப் பாகம்

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் -  இறுதிப் பாகம் 


பரிமேலழகரின் உரைப் பாயிரம் எப்படி ஒரு அழகான நீரோடை போல் செல்கிறது என்று பாருங்கள். 


வாழ்கைக்குத் தேவையான நான்கு  - அறம், பொருள், இன்பம், வீடு 

அதில் வீட்டினை நேரே சொல்லி விளக்க முடியாது என்பதால், அதை சொல்லாமல், அறம் , பொருள், இன்பம் பற்றி மட்டும் கூற எடுத்துக் கொள்கிறார்.


அதில், அறம் என்பது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தாலும், விலக்கியன ஒழித்தலும் என்றார். 


அவ்வறமானது , ஒழுக்கம், வழக்கு, தண்டம் என்ற மூன்று கூறுகளை கொண்டது என்றார். 

இதில் வழக்கு, தண்டம் என்பது பற்றி முந்தைய ப்ளாகில் பார்த்தோம். 


இப்போது மேலே செல்வோம். 


"இவற்றுள் வழக்குந் தண்டமும் உலகநெறி நிறுத்துதற் பயத்தவாவதுஅல்லது ஒழுக்கம் போல மக்களுயிர்க்கு உறுதி பயத்தற் சிறப்பிலவாகலானும், அவைதாம் நூலானேயன்றி உணர்வுமிகுதியானுந் தேயவியற்கையானும் அறியப்படுதலானும், அவற்றை ஒழித்து, ஈண்டுத் தெய்வப்புலமைத் திருவள்ளுவராற் சிறப்புடைய ஒழுக்கமே அறமென எடுத்துக்கொள்ளப்பட்டது."


ஒரே வரியில் சொல்லி விட்டுப் போய்விட்டார். 

நாம் பிரித்து பொருள் கொள்வோம். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_21.html

(please click the above link to continue reading)

என்ன சொல்ல வருகிறார் என்றால், இந்த மூன்றில் , வழக்கையும் தண்டத்தையும் பற்றி வள்ளுவர் கூறவில்லை.  ஏன் கூறவில்லை என்பதற்கு பரிமேலழகர் விளக்கம் கூறுகிறார். 

முதற் காரணம்: 

"இவற்றுள் வழக்குந் தண்டமும் உலகநெறி நிறுத்துதற் பயத்தவாவது அல்லது "


இந்த மூன்றில் (ஒழுக்கம், வழக்கு, தண்டம் என்ற மூன்றில்) வழக்கும், தண்டமும் இந்த உலகில் நம்மை நெறிப் படுத்த உதவும். அவ்வளவுதான். அதைத் தவிர வேறு ஒன்றும் செய்யாது .

அதாவது, இம்மைக்கும், மறுமைக்கும் அவை உதவி செய்யாது. ஒருவர் மேல் வழக்கு போடுகிறோம். அதை வெல்கிறோம். மற்றவனுக்கு தண்டனை கிடைக்கிறது. இதனால், நமக்கு இந்த உலகில், வாழ்வில் ஒரு சிறு நன்மை கிடைக்கலாம். ஆனால், அது நமக்கு வீடு பேறு அடையவோ, இறைவன் அடி சேரவோ உதவாது. அது முதல் காரணம். 

இரண்டாவது காரணம். 

"ஒழுக்கம் போல மக்களுயிர்க்கு உறுதி பயத்தற் சிறப்பிலவாகலானும்"

வழக்கும் தண்டமும், ஒழுக்கத்தைப் போல மக்களுடைய உயிர்க்கு உறுதி பயக்காது. உறுதி என்றால் நன்மை. அந்த சிறப்பு கிடையாது அவற்றிற்கு. 


"அவைதாம் நூலானேயன்றி உணர்வுமிகுதியானுந் தேயவியற்கையானும் அறியப்படுதலானும்"


மேலும், வழக்கு தண்டம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு வழக்கு என்று வருகிறது என்றால், தவறு செய்தவனுக்குத் தெரியும் அல்லவா, தான் தவறு செய்து விட்டான் என்பது. 


உணர்வு மிகுதியால் தவறு அவனுக்கே தெரியும் என்கிறார். ஒருவன் பொய் சொல்கிறான் என்றால், அவனுக்கு நல்ல உணர்சிகள் இருந்தால், அவன் மனமே அவனுக்குச் சொல்லும், அது தவறு என்று.  அதைத்தான் "உணர்வு மிகுதியான்" என்றார். அதுவே பழகிப் போய் விட்டால், பின் தோன்றாது. 


மேலும் 


"தேய இயற்கையானும்" தெரியும் என்கிறார். கொலை செய்தால் தண்டனை உண்டு என்று  யாருக்கும் சொல்லித் தர தேவை இல்லை.  ஒருவன் இயற்கையாகவே அதை அறிந்து கொள்வான். சிறு வயது முதல், அவன் கேட்கும் செய்திகள், பேச்சுகள், செய்தித் தாள்கள் போன்றவை அவனுக்கு அதைச் சொல்லித் தரும். 

"அவற்றை ஒழித்து" - அதை விட்டு விட்டு . எதை விட்டு விட்டு ? வழக்கு தண்டம் என்ற அந்த இரண்டையும் விட்டுவிட்டு. 


"ஈண்டுத்" = இங்கு 

தெய்வப்புலமைத் திருவள்ளுவராற் = தெய்வ அருள் பெற்ற திருவள்ளுவரால் 


சிறப்புடைய ஒழுக்கமே = சிறந்ததான ஒழுக்கமே 


அறமென எடுத்துக்கொள்ளப்பட்டது." = அறம் என்று எடுத்துக் கொள்ளப் பட்டது. (மற்ற இரண்டையும் விட்டு விட்டார்) 


சரி, ஒழுக்கத்தை மட்டுமே அறம் என்று எடுத்துக் கொண்டதற்கு காரணம் சொன்னார். 


"அதுதான் நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபாடுடைமையின், சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புகள் ஒழித்து, எல்லார்க்கும் ஒத்தலிற் பெரும்பான்மையாகிய பொதுவியல்பு பற்றி இல்லறம் துறவறம் என இருவகை நிலையால் கூறப்பட்டது."



அந்த ஒழுக்கத்திலும் வர்ணத்துக்கு வர்ணம் மாறும், பிரமச்சரியம் போன்ற நிலைக்கு நிலை மாறும் ஒழுக்கத்தை விட்டு விட்டு, எல்லோருக்கும் பொதுவான அறத்தை மட்டும் சொல்ல நினைக்கிறார். 

" அதுதான் நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபாடுடைமையின்,"

இந்த ஒழுக்கம்  வர்ணாசிரம தகுதிக்கு ஏற்ப மாறும் இயல்பு உடையது. உதாரணமாக, ஒரு தவறை ஒரு சிறுவன் செய்தால் அவனுக்கு ஒரு தண்டனை, அதே தவறை ஒரு பெரிய ஆள் செய்தால் அவனுக்கு வேறு தண்டனை. தவறு ஒன்று தான், தண்டனை வேறு. முன்பு இருந்த சட்ட திட்டங்களில், ஒரே தவறுக்கு, ஒத்த வயதுடைய ஆட்களுக்கு , அவர்கள் சார்ந்த வர்ணம் பற்றி தண்டனை வழங்கப் பட்டது. 


உதாரணமாக, ஒரு பிராமணனை கொன்றால் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கும். ஒரு சூத்திரனை கொன்றால் சூத்திர ஹத்தி தோஷம் என்று ஒன்று கிடையாது. 

அது பற்றி சொல்லப் போனால், பிராமண, பிரமசாரிக்கு உள்ள ஒழுக்கம் என்ன, ஷத்ரிய பிரமசாரிக்கு உள்ள ஒழுக்கம் என்ன என்று மிக விரிவாக சொல்ல வேண்டும். 



"சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புகள் ஒழித்து,"


எனவே, அந்த அளவுக்கு உள்ளே போகாமல், 


"எல்லார்க்கும் ஒத்தலிற் பெரும்பான்மையாகிய பொதுவியல்பு பற்றி இல்லறம் துறவறம் என இருவகை நிலையால் கூறப்பட்டது."


எனவே, எல்லோருக்கும் பொதுவாக உள்ள இயல்புகள் பற்றி மட்டும் கூற வேண்டும் என்று  நினைத்து, அந்த பொது இயல்பான அறத்தை இரு கூறுகளாக பிரித்து இல்லறம், துறவறம் (இல்லம் + அறம், துறவு + அறம்). 


"அவற்றுள் இல்லறமாவது, இல்வாழ்க்கை நிலைக்குச் சொல்லுகின்ற நெறிக்கண் நின்று அதற்குத் துணையாகிய கற்புடைமனைவியோடும் செய்யப்படுவது ஆகலின், அதனை முதற்கண் கூறுவான் தொடங்கி,எடுத்துக்கொண்ட இலக்கியம் இனிது முடிதற் பொருட்டுக் கடவுள் வாழ்த்துக் கூறுகின்றார்."



"அவற்றுள்" அந்த இல்லறம், துறவறம் என்ற இரண்டனுள் 


 "இல்லறமாவது" = இல்லறம் என்றால் என்ன என்றால் 


"இல்வாழ்க்கை நிலைக்குச் " = இல்வாழ்கை நிலை 


"சொல்லுகின்ற நெறிக்கண் நின்று" = என்று சொல்லப்பட்டும் அந்த வழியில் நின்று 


அதற்குத் = எதற்கு? அந்த வழியில் செல்வதற்கு 


துணையாகிய = துணையாகிய 


கற்புடைமனைவியோடும் செய்யப்படுவது = கற்புடைய மனைவியோடு சேர்ந்து செய்யப்படும் என்பதால் 


ஆகலின், = ஆகவே 


அதனை முதற்கண் கூறுவான் தொடங்கி = அதை முதலில் கூற வேண்டும் என்று நினைத்து 


எடுத்துக்கொண்ட இலக்கியம் இனிது முடிதற் பொருட்டுக் =இந்த அறம் சொல்ல எடுத்துக் கொண்ட இலக்கியம் நல்லபடியாக பாடி முடிக்க வேண்டுமே என்று நினைத்து 


கடவுள் வாழ்த்துக் கூறுகின்றார். = கடவுள் வாழ்த்தினை கூறத் தொடங்குகின்றார்.


எப்படி வந்து சேர்ந்து விட்டார் பார்த்தீர்களா?

இனி,மொத்தமாக படித்துப் பாருங்கள் உரை புரியும்.


"இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தமில் இன்பத்து அழிவில் வீடும், நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடென்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கணவகையாற் கூறப்படாமையின், நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்.

அவற்றுள், அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.

அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.

வழக்காவது ஒருபொருளைத் தனித்தனியே எனது எனது என்றிருப்பார் அதுகாரணமாகத் தம்முள் மாறுபட்டு அப்பொருள்மேற் செல்வது. அது கடன்கோடன் முதற் பதினெட்டுப் பதத்ததாம்.

தண்டமாவது அவ்வொழுக்கநெறியினும் வழக்குநெறியினும் வழீஇயினாரை அந்நெறி நிறுத்துதற் பொருட்டு ஒப்பநாடி அதற்குத்தக ஒறுத்தல்.

இவற்றுள் வழக்குந் தண்டமும் உலகநெறி நிறுத்துதற் பயத்தவாவதுஅல்லது ஒழுக்கம் போல மக்களுயிர்க்கு உறுதி பயத்தற் சிறப்பிலவாகலானும், அவைதாம் நூலானேயன்றி உணர்வுமிகுதியானுந் தேயவியற்கையானும் அறியப்படுதலானும், அவற்றை ஒழித்து, ஈண்டுத் தெய்வப்புலமைத் திருவள்ளுவராற் சிறப்புடைய ஒழுக்கமே அறமென எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதுதான் நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபாடுடைமையின், சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புகள் ஒழித்து, எல்லார்க்கும் ஒத்தலிற் பெரும்பான்மையாகிய பொதுவியல்பு பற்றி இல்லறம் துறவறம் என இருவகை நிலையால் கூறப்பட்டது.

அவற்றுள் இல்லறமாவது, இல்வாழ்க்கை நிலைக்குச் சொல்லுகின்ற நெறிக்கண் நின்று அதற்குத் துணையாகிய கற்புடைமனைவியோடும் செய்யப்படுவது ஆகலின், அதனை முதற்கண் கூறுவான் தொடங்கி,எடுத்துக்கொண்ட இலக்கியம் இனிது முடிதற் பொருட்டுக் கடவுள் வாழ்த்துக் கூறுகின்றார்."


திருக்குறள் பற்றி இவ்வளவு தெளிவாக இதற்கு முன் எங்காவது கேட்டது உண்டா? பிரமிக்க வைக்கும் முன்னுரை. 


இனி, நூலுக்குள் செல்வோம். 




Saturday, March 20, 2021

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - ஒழுக்கம்

 திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - ஒழுக்கம் 



அவற்றுள், அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.


அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.


அறம் என்பது மூன்று கூறுகளை உடையது - ஒழுக்கம், வழக்கு, தண்டம் என்பன. 


ஒழுக்கம் என்றால் என்ன என்று முந்தைய ப்ளாகில் பார்த்தோம். 


அடுத்தது, வழக்கு என்றால் என்ன என்று சொல்ல வருகிறார். 


"வழக்காவது ஒருபொருளைத் தனித்தனியே எனது எனது என்றிருப்பார் அதுகாரணமாகத் தம்முள் மாறுபட்டு அப்பொருள்மேற் செல்வது. அது கடன்கோடன் முதற் பதினெட்டுப் பதத்ததாம்."


அதாவது, ஒரு பொருளை இரண்டு பேர் அது தங்களுடையது என்று சண்டையிட்டு கொள்ளுவது.  சில சமயம், சில பேர் ஒழுக்கக் குறைவு உடையவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மாறுபட்டு கருத்து உருவாகும். இதை வழக்கு என்பார்கள். 


வழக்கு வரும். வந்தால் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும். 


எனவே, அடுத்து "தண்டம்" பற்றி கூறுகிறார். 


பரிமேலழகர் என்ன சொல்கிறார் என்று பார்பதற்கு முன்னால், ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். 


தண்டனை என்றால் என்ன? அது எப்படி இருக்க வேண்டும்? அதன் நோக்கம் என்ன ? என்றெல்லாம் சிந்தித்துப் பாருங்கள். 


ஒரே வரியில் பரிமேலழகர் சொல்கிறார். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_20.html


(click the above link to continue reading)


"தண்டமாவது அவ்வொழுக்கநெறியினும் வழக்குநெறியினும் வழீஇயினாரை அந்நெறி நிறுத்துதற் பொருட்டு ஒப்பநாடி அதற்குத்தக ஒறுத்தல்."


தண்டனை என்பது அந்த ஒழுக்க நெறியில் இருந்து விலகியவர்களை, அந்த நெறியில் நிறுத்த, அதற்காக தண்டித்தல்.


அதாவது, தண்டனை என்பது ஒருவனை ஒழுக்க நெறியில் நிறுத்த உதவ வேண்டும்.  அவனை பயமுறுத்தவோ, அல்லது மற்றவர்களுக்கு ஒரு உதாரணம் போல் காட்டவோ அல்ல.  தவறு செய்தவனை திருத்த மட்டுமே தண்டனை உதவ வேண்டும்.


எனவே, ஒழுக்கம், வழக்கு, தண்டம் பற்றி பரிமேலழகர் கூறியதை புரிந்து கொண்டோம். 


அடுத்து என்ன என்பதை அடுத்த ப்ளாகில் பார்க்க இருக்கிறோம். 




Friday, March 19, 2021

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - ஒழுக்கம்

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - ஒழுக்கம் 


அவற்றுள் "ஒழுக்கமாவது", அந்தணர் முதலிய வருணத்தார், தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று, அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.


ஒழுக்கம் என்றால் என்ன? 

ஒழுக்கம் என்பது வர்ணத்துக்கும், நிலைக்கும் சொல்லப்பட்ட விதி முறைகள். 

ஒரு சமுதயாத்தை எப்படி பிரிக்கலாம் என்று சிந்தித்த நம் முன்னோர், சமுதாயத்தின் வேலை என்ன? அதன் அடிப்படையில் பிரிக்கலாம் என்று நினைத்தார்கள். 

எந்த ஒரு சமுதாயத்துக்கும் அடிப்படை உற்பத்தி. அது தமிழ் நாடாக இருக்கட்டும், இந்தியாவாக இருக்கட்டும், அமெரிக்காவாக இருக்கட்டும். எந்த நாட்டுக்கும், எந்த சமுதாயத்துக்கும் அடிப்படை உற்பத்தி.

உற்பத்தி என்றால் பொருள் (goods )மற்றும் சேவை (service). GST என்று வரி போடுகிறார்கள் அல்லவா? 

விவசாயி,சட்டி பானை செய்பவன், முடி திருத்துபவன், மருத்துவன், பொறியாளர் (engineer), விமானம் ஒட்டுபவன், இசை அமைப்பவன், வண்டி ஓட்டுபவன் என்று யாராக இருந்தாலும் இந்த உற்பத்தி என்ற துறைக்குள் வந்து விடுவான்.  உற்பத்தி அல்லது production . இது முதல் படி.  

சரி, உற்பத்தி செய்தாகி விட்டது. அடுத்து என்ன? ஒரு இடத்தில் உற்பத்தி செய்ததை அது தேவைப் படும் இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.  இது வியாபாரம் அல்லது distribution என்று  சொல்லப் படும்.இது இரண்டாவது படி. 

சரி உற்பத்தி செய்தாகிவிட்டது, விநியோகமும் செய்தாகி விட்டது. இரண்டு பிரிவு போதுமா என்றால் போதாது.   உற்பத்தி செய்வதில், விநியோகம் செய்வதில் நடை முறை சிக்கல்கள் வரும். சண்டை சச்சரவு வரும். போட்டி வரும். இவற்றை ஒழுங்கு படுத்த வேண்டும். அதற்கு மேலாண்மை அல்லது administration என்று பெயர். சட்டம், ஒழுங்கு, நெறிப் படுத்துதல், சமரசம் செய்தல் என்று  பல இருக்கிறது. 

சரி,  production, distribution, and administration வந்தாகி விட்டது. போதுமா என்றால் போதாது. 

இந்த மூன்றையும் செம்மை படுத்தி, அவற்றை மேம்படுத்த வேண்டும். அதற்கு research and development என்று பெயர். 

இந்த நான்கையும் தான் வர்ணம் என்று குறிப்பிட்டார்கள். 

உற்பத்தி செய்பவன் - சூத்திரன் - அவன் தான் மூல காரணம். 
விநியோகம் செய்பவன் - வைசியன் 
மேலாண்மை செய்பவன் - சத்ரியன் 
சிந்தித்து, படித்து, மேம்பட்ட, உயர்ந்த வழிகளை ஆராய்பவன் - பிராமணன் என்று வைத்தார்கள். 

இது பிறப்பின் அடிப்படையில் வருவது அல்ல. செய்யும் தொழிலின் அடிப்படையில் வருவது. 

சரி, சமுதயாத்தை பிரித்தாகி விட்டது. 

தனி மனிதனை என்ன செய்வது?


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_19.html

(click the above link to continue reading)

தனி மனித வாழ்க்கையை நான்கு பகுதிகளாக பிரித்தார்கள். 

பிரமச்சரியம் - கற்கும் பருவம். மாணவப் பருவம். 
இல்லறம் - திருமணம் முடிந்து குடும்ப வாழ்க்கை 
வனப்ரஸ்தம் - இல்லறத்தில் இருந்து கொண்டு பற்றற்று இருப்பது 
சன்யாசம் - காட்டுக்குச் சென்று தவம் செய்வது 

இதைத்தான் நிலை என்கிறார் பரிமேலழகர். 



ஒரு graph ஷீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் X axis க்கு பதில் வருணம் என்று போட்டுக் கொள்ளுங்கள்.

அதில் Y axis க்கு பதில் ஆச்சிரமம் என்று போட்டுக் கொள்ளுங்கள்.

இப்போது வருணம் என்ற கோட்டை நான்காகப் பிரியுங்கள். அந்தணன், வைசியன், சத்ரியன் மற்றும் சூத்திரன் என்றும்.

ஆசிரமம் என்ற கோட்டை நான்காகப் பிரியுங்கள் - பிரமச்சாரியம், கிரகச்சாரம், வானப்ரஸ்தம் மற்றும் துறவறம்

ஒவ்வொரு மனிதனும் இந்த 4 x 4 கட்டத்திருக்குள் ஏதோ ஒரு கட்டத்தில் இருந்தே ஆக வேண்டும்.

ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு கடமை உண்டு.

தனி மனிதனாக அவனுக்கு சில கடமைகள் உண்டு.

ஒரு சமுதாயத்தின் அங்கமாக அவனுக்கு சில கடமைகள் உண்டு.

சமுதாயக் கடமை - சூத்திரனாகவோ, வைசியனாகவோ,  கஷத்ரியனாகவோ,அந்தனனாகவோ அவனுக்கு சில கடமைகள் உண்டு.

அது போல தனி மனிதனாக பிரமச்சாரியாக, இல்லறத்தில் , வான பிரச்த்தத்தில், துறவறத்தில் அவனுக்கு சில கடமைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த இரண்டு கூறுகளைத்தான் பரிமேல் அழகர் இங்கே கூறுகிறார்:


அந்தணர் முதலிய வருணத்தார், - இது சமுதாயக் கடமை 

தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று = இது தனி மனிதக் கடமை 

அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல். = அவரவர்க்கு ஓதிய அறங்கள் என்று கூறவில்லை. அவ்வவற்றிற்கு என்று கூறுகிறார். ஏன் ? மேலே கூறிய 4 x 4 கட்டத்திற்கு என்று வகுத்த அறங்கள். எனவே  அவ்வவற்றிற்கு என்று கூறினார். 

இது ஒழுக்கம்.

இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இதை ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ, அது வேறு விஷயம். இது வள்ளுவர் வகுத்துக் கொண்ட வழி. இந்த வழியில் தான் பின்னால் வரும் குறள்கள் நிற்கும். 

அறத்தின் முதல் கூறு ஒழுக்கம். 

அடுத்து என்ன ? 

Thursday, March 18, 2021

தேவாரம் - அவ்வினைக்கு இவ்வினை

 தேவாரம் - அவ்வினைக்கு இவ்வினை 


எல்லாம் வினைப் பயன் என்று நாம் நினைக்கிறோம். நல்லதோ, கெட்டதோ எல்லாம் விதிப்படித்தான் நடக்கும். நல்லது செய்து இருந்தால் நல்லது வரும். அல்லது செய்து இருந்தால் துன்பம் வரும். இதில் நம் கையில் என்ன இருக்கிறது. விதியை நம்மால் மீற முடியுமா? 


ஊழிற் பெருந்தக்க யாவுள என்பார் வள்ளுவர்.


நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை, மைந்த விதியின் பிழை என்பார் கம்பர். 


அப்படி என்றால் நம் கையில் ஒன்றும் இல்லையா. நாம் சும்மா இருக்க வேண்டியது தானா. ஒரு முயற்சியும் செய்ய வேண்டாமா? 


திருஞான சம்பந்தர் சொல்கிறார். "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. வினையை மாற்றலாம்" என்று கூறுவதோடு நில்லாமல், அதற்கு வழியும் காட்டுகிறார். 


"முன்பு செய்த வினைகளுக்கு ஏற்ப இப்போது நமக்கு இன்ப துன்பமாகிய வினைகள் வருகிறது என்று சொல்லிக் கொண்டு சும்மா இருக்கிறீர்களே. இது உங்களுக்கு ஒரு ஊனம் இல்லையா. இறைவனை வழிபடுங்கள். அப்படி செய்தால் நாம் முன் செய்த வினைகள் நம்மை தீண்டாது. இது திருநீலகண்டத்தின் மீது ஆணை" என்று சத்தியமிட்டு கூறுகிறார். 


பாடல் 


அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!

உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?

கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்

செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.!


பொருள் 



click the above link to continue reading

அவ்வினைக்கு = முன்பு செய்த வினைகளுக்கு 


இவ்வினை ஆம் = இப்போது நடக்கும் வினைகள் (இன்ப துன்பங்கள்) 


என்று சொல்லும் அஃது அறிவீர்! = என்று சொல்லக் கேட்டு இருகிறீர்கள் 


உய்வினை = இதில் இருந்து தப்பிக்கும் வழியினை 


நாடாது இருப்பதும் = கண்டு பிடிக்காமல் இருப்பதும் 


உம்தமக்கு = உங்களுக்கு 


 ஊனம் அன்றே? = ஒரு குறை இல்லையா ?


கைவினை செய்து = கைகளால் தொழுது 


எம்பிரான் = எம்மை விட்டு எப்போதும் பிரியாதவன் 


கழல் போற்றுதும் = திருவடிகளை போற்றுங்கள் 


நாம் அடியோம் = நாம் இறை அடியவர்கள் 


செய்வினை = செய்த வினை 


வந்து = நம்மிடம் வந்து 


எமைத் தீண்டப்பெறா = நம்மை தீண்டாது 


திருநீலகண்டம்.! = திருநீலகண்டத்தின் மேல் ஆணை 


திருஞான சம்பந்தர் ஞானப் பால் உண்டு ஞானம் பெற்றவர். இறைவன் மேல் ஆணையிட்டு சொல்கிறார். 


பழைய வினைகள் தீர வேண்டும் என்ன்றால் என்ன செய்ய வேண்டும் என்று. 


(இப்படி பத்துப் பாடல்கள் இருக்கின்றன. விரைந்து அவை அனைத்தையும் படித்து விடுங்கள்) 

இதையே மணிவாசகரும் "பழ வினைகள் பாறும் வண்ணம்" என்பார். பழைய வினைகள் அற்றுப் போகும் படி அவன் எனக்கு அருளினான் என்கிறார். 


முத்திநெறி அறியாத

    மூர்க்கரொடு முயல்வேனைப்

பத்திநெறி அறிவித்துப்

    பழவினைகள் பாறும்வண்ணஞ்

சித்தமலம் அறுவித்துச்

    சிவமாக்கி எனை ஆண்ட

அத்தன்எனக் கருளியவா

    றார்பெறுவார் அச்சோவே


எனவே, விதி என்று சோர்ந்து இருந்து விடாதீர்கள். 


பழைய வினைகளை சுட்டெரிக்க ஞான சம்பந்தரும், மணி வாசகரும் வழி சொல்லித் தந்து இருக்கிறார்கள். 


திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - வர்ணமும், நிலையும் - பாகம் 1

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - வர்ணமும், நிலையும்  -  பாகம் 1 


அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.


இதில் "அந்தணர் முதலிய வர்ணத்தார்" என்றும் "பிரமச்சரிய முதலிய நிலகைளில் இருந்தும்" என்று பரிமேலழகர் எழுதுகிறார். 


அவர் முதலிய என்று கூறியதால், வேறு பலவும் இருக்கின்றன என்று நமக்குப் புலனாகிறது. அவை என்னென்ன என்று சிந்திப்போம். 


ஒரு சமுதயாத்தில் பல தரப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். ஆண், பெண், குழந்தைகள், பெரியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், திருமணம் ஆனவர்கள், ஆகாதவர்கள், உடல் ஊனமுற்றோர் என்று பலவிதமான மக்கள் இருக்கிறார்கள். 


ஒரு சமுதாயம் சீராக செயல் பட வேண்டும் என்றால் அதற்கு சில சட்ட திட்டங்கள் வேண்டும், ஒழுங்கு முறை வேண்டும். யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று விட்டு விட்டால், அது நாடாக இருக்காது. காடாகி விடும். 


சட்டம் இயற்றுவது என்றால், மக்களை தொகுக்க வேண்டும். ஒன்று பட்ட ஒரு குழுவுக்கு ஒரு    சட்டம் சொல்லலாம். எல்லாருக்கும் ஒரு சட்டம் என்று போட முடியாது. 


ஏன் முடியாது? அப்படி போட்டால் என்ன? எதற்காக மக்களை பிரிக்க வேண்டும் என்ற கேள்வி எழும். 


சரி, சில சட்டங்களை அப்படி போட்டுப் பார்ப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1_18.html

(click the above link to read further)


"எல்லோரும் உழைத்து சாப்பிட வேண்டும் " என்று ஒரு சட்டம் போடுவோம். 

அது சரிதானே?


அப்படி என்றால் சிறு பிள்ளைகள் என்ன செய்யும்? வீட்டைப் பார்த்துக் கொள்ளும் பெண்கள் என்ன செய்வார்கள், வயதானவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களை விலக்க வேண்டும். 


சரி, எத்தனை பேரை விலக்குவது? அப்படி விலக்குவது என்று வந்து விட்டால், அவர்களை ஒரு குழுவாக செய்ய வேண்டும். எனவே, இந்தச் சட்டம் எல்லோருக்கும் பொருந்தாது, ஒரு சிலருக்கு மட்டும் தான் பொருந்தும். 


சரி, இன்னொரு சட்டம் போடுவோம். 


"எல்லோரும் திருமணம் செய்து கொண்டு தான் வாழ வேண்டும்"


சரி. நல்ல சட்டம் தான். நான்கு வயது பையன் எனக்கும் திருமணம் செய்து வை என்று கேட்டால் என்ன செய்வது?


"கொலை செய்வதும், அதை தூண்டுவதும் குற்றம்" என்று ஒரு சட்டம் போட்டால்,  நீதிபதிகள் தூக்கு தண்டனை விதிக்கிறார்கள். கொலை செய்யச் சொல்லி ஆணை இடுகிறார்கள். அவர்களை என்ன செய்வது? மருத்துவர் சிகிச்சை பலன் இன்றி நோயாளி இறந்து போகிறான். மருத்துவர் நோயாளியை கொன்று விட்டார் என்று சொல்ல முடியுமா? 


எனவே, விதி செய்வது என்றால் ஒரு குறிப்பிட்ட குழுவுக்கு, தொகுதிக்குத் தான் விதி செய்ய முடியும். 


எப்படி இந்த சமுதயாத்தை பிரிப்பது? எப்படி பிரித்தால், சரியான படி சட்ட திட்டங்களை வகுக்க முடியும் என்று ஆராய்ந்து உண்டாகியது தான் வர்ணமும், நிலையும் . இதை வட மொழியில் வர்ணாசிரம தர்மம் என்று கூறுவார்கள். 


அது என்ன தர்மம்?