Tuesday, August 19, 2014

சிவ புராணம் - புகழுமாறு ஒன்று அறியேன்

சிவ புராணம் - புகழுமாறு ஒன்று அறியேன் 



இன்று அறிவியல் "அனைத்தையும் விளக்கும் தத்துவம்" (A Theory of  Everything ) என்பது பற்றி  பேசுகிறது.

http://en.wikipedia.org/wiki/Theory_of_everything

அறிவியலில் இன்று பலப் பல தத்துவங்கள் இருக்கின்றன. ஆனால் அனைத்தையும் விளக்கும் ஒரு தியரி இல்லை. புவி ஈர்ப்பு விசைக்கு ஒன்று, மின் காந்த சக்திக்கு ஒன்று, அணு விசைக்கு ஒன்று என்று பல்வேறு கோட்பாடுகள்  உள்ளன. சில சமயம் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாகவும் உள்ளது.

உலகில் உள்ள அனைத்தையும் விளக்கும் கோட்பாடு எது என்று அறிவியல் மிகத் தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறது.

மாணிக்க வாசகர்  சொல்கிறார், விண்ணிலும்,மண்ணிலும் நிறைந்து அனைத்திலும் விளங்கும் ஒளியாய் இருப்பவனே என்று இறைவனை  குறிப்பிடுகிறார்.

எங்கும் நிறைந்து, அனைத்தையும் விளக்கும் ஒளி அவன்.

உன்னுடைய அளவற்ற பெருமைகளில் ஒன்றைக் கூட அறியாமல், உன்னை புகழுகின்ற ஒன்றையும் நான் அறியவில்லையே என்று அவை அடக்கத்துடன் குறிப்பிடுகிறார்.

பாடல்

விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்


சீர் பிரித்த பின்

விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கும் ஒளியாய் 
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர் 
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 


பொருள்

விண் நிறைந்து = விண்ணில் எங்கும் நிறைந்து

மண் நிறைந்து = விண்ணில் மட்டும் அல்ல, இந்த மண்ணிலும் நிறைந்து

மிக்காய் = இவற்றைத் தாண்டி அனைத்து இடத்திலும்

விளங்கும் = விளங்கும்

ஒளியாய் = ஒளி  போன்றவனே.அனைத்தையும் காட்டும் ஒளி போன்றவனே

எண் இறந்து = எண்ணிக்கை இல்லாமல். எண்ணிப் பார்க்க முடியாத

எல்லை இலாதானே = இது இப்படித்தான் என்ற வரை முறை கடந்தவனே

 நின் பெரும் சீர் = உன்னுடைய பெருமைகளை

பொல்லா வினையேன் = பொல்லாத வினைகளை உடைய நான்

 புகழுமாறு ஒன்று அறியேன் = புகழ்ந்து சொல்ல ஒன்றும் அறிய மாட்டேன் 

1 comment:

  1. இதற்கும் Theory of Everything-க்கும் என்ன சம்பந்தம்?!

    நமக்கு ஒன்று இன்னும் தெரியவில்லை என்றால், அது சும்மா கடவுள் என்று மழுப்பிவிடுவது சரியல்ல.

    ReplyDelete