Wednesday, September 3, 2014

இராமாயணம் - சீதையின் காலில் விழுந்த இராவணன்

இராமாயணம் - சீதையின் காலில் விழுந்த இராவணன் 



அசோக வனத்தில் சிறை இருந்த சீதையிடம் தன் மனதின் காதலை எடுத்து பலவாறு சொல்கிறான் இராவணன்.

கடைசியில் அவள் காலில் விழுகிறான்.

இராமயணத்தில் வேறு எங்கும் காணக் கிடைக்காத ஒரு நிகழ்வு. மிக அதிகமாக பேசப் படாத நிகழ்வு.

பாடல்

என்று உரைத்து, எழுந்து சென்று,
    அங்கு, இருபது என்று உரைக்கும் நீலக்
குன்று உரைத்தாலும் நேராக்
    குவவுத் தோள் நிலத்தைக் கூட,
மின்திரைத்து அருக்கன் தன்னை
    விரித்து மீன் தொகுத்தது ஒன்று
நின்று இமைக்கின்றது அன்ன
    முடி படி நெடிதின் வைத்தான்.


பொருள் 

என்று உரைத்து = என்று சொன்ன பின்

எழுந்து சென்று = எழுந்து சென்று

அங்கு = அங்கு

இருபது என்று உரைக்கும் = இருபது என்று சொல்லப்படும்

 நீலக் குன்று = நீல நிறக் குன்று என்று

உரைத்தாலும் = சொன்னாலும்

நேராக் = சரியாக இருக்காது. அதை விட சிறந்தது.

குவவுத் தோள்= திரண்ட தோள்கள்

நிலத்தைக் கூட = நிலத்தோடு சேர

மின்திரைத்து = மின்னல் சிதறும்

அருக்கன் தன்னை = சூரியன் தன்னை

விரித்து = கதிர்கள் போல் விரித்து

முன் தொகுத்தது = ஒன்றாக தொகுத்து வைத்து

ஒன்று நின்று = ஒன்றாகச் சேர்ந்து

இமைக்கின்றது அன்ன = இமைப்பது போல

முடி படி நெடிதின் வைத்தான் = முடி தரையில் படுமாறு நீண்ட நேரம் வைத்தான்

ஏதோ கடனுக்கு விழுந்து எழுந்தரிப்பது மாதிரி அல்ல. அவள் காலடியில் தன் தலையை நீண்ட நேரம் வைத்தான்.

இதை விட ஒருவன் எவ்வளவு கீழே இறங்கி வர முடியும்.





1 comment:

  1. அப்பொழுது அவன் என்னவில்லாம் யோசித்திருப்பான்?!

    காதலும் காமமும் ஒரு புறம். தன்னிழிவு ஒரு புறம். நாணம் ஒரு புறம். இப்படி நடக்கின்றதே என்ற வருத்தம் ஒரு புறம்...

    ReplyDelete