குறுந்தொகை - தயிர் சாதமும் புளிக் குழம்பும்
புதிதாய் திருமணம் முடித்து கணவனோடு அவன் வீட்டிற்கு வந்து இருக்கிறாள். வீடு ஒண்ணும் பெரியது அல்ல. விறகு அடுப்பு. அவன் வெளிய நிமித்தம் வெளியே போய் இருக்கிறான். மதியம் உணவுக்கு வீட்டிற்கு வருவான். புது மனைவி அல்லவா.
அவன் வருவதற்குள் எப்படியாவது உணவு சமைத்து வைத்து விட வேண்டும் என்று பர பர வென்று வேலை செய்கிறாள். அவளுக்கு சமைத்து அவ்வளவா பழக்கம் இல்லை. இருந்தாலும் சுவையான உணவை சமைத்து அவனுக்கு ருசியாக உணவளிக்க வேண்டும் ஆசைப் படுகிறாள்.
சாதம் ஆச்சு. என்ன பண்ணலாம் ?
தயிர் சாதம் பண்ணலாமா ?
கொஞ்சம் சாதத்தை பாத்திரத்தில் போட்டு, அதில் தயிர் விட்டு அவளுடைய காந்தள் மலர் போன்ற விரலால் பிசைகிறாள்.
பிசைஞ்சாச்சு. கைய கழுவனும். துடைக்கணும். அதுக்கெல்லாம் நேரம் இல்லை. அக்கம் பக்கம் பார்த்தாள். தன் சேலையில் துடைத்துக் கொள்கிறாள். படபடப்பு...பழக்கம் வேறு இல்லை. அவன் வருவதற்குள் சமைக்க வேண்டுமே என்ற ஆவல்.
விறகு வேறு ஈரமாய் இருக்கிறது. ஒரே புகை. புகை அடித்து அவள் உடல் எல்லாம் புகை வாடை அடிக்கிறது.
அவனுக்கு புளிக் குழம்பு பிடிக்குமே என்று புளிக் குழம்பு செய்கிறாள். புளித் தண்ணியில், உப்பு, மிளகாய் தூள் எல்லாம் போட்டு விரலால் கலக்குகிறாள்.
அவன் வந்து விட்டான். அவனுக்கு பரிமாறுகிறாள். அவன் ருசித்து சாப்பிடுகிறான். அவன் முகத்தில் உள்ள சந்தோஷத்தை பார்த்து அவளுக்கும் சந்தோஷம்.
அந்த குறுந்தொகைப் பாடல்