Showing posts with label குறுந்தொகை. Show all posts
Showing posts with label குறுந்தொகை. Show all posts

Monday, October 29, 2012

குறுந்தொகை - தயிர் சாதமும் புளிக் குழம்பும்


குறுந்தொகை - தயிர் சாதமும் புளிக் குழம்பும்


புதிதாய் திருமணம் முடித்து கணவனோடு அவன் வீட்டிற்கு வந்து இருக்கிறாள். வீடு ஒண்ணும் பெரியது அல்ல. விறகு அடுப்பு. அவன் வெளிய நிமித்தம் வெளியே போய் இருக்கிறான். மதியம் உணவுக்கு வீட்டிற்கு வருவான். புது மனைவி அல்லவா.

அவன் வருவதற்குள் எப்படியாவது உணவு சமைத்து வைத்து விட வேண்டும் என்று பர பர வென்று வேலை செய்கிறாள். அவளுக்கு சமைத்து அவ்வளவா பழக்கம் இல்லை. இருந்தாலும் சுவையான உணவை சமைத்து அவனுக்கு ருசியாக உணவளிக்க வேண்டும் ஆசைப் படுகிறாள். 

சாதம் ஆச்சு. என்ன பண்ணலாம் ?

தயிர் சாதம் பண்ணலாமா ?

கொஞ்சம் சாதத்தை பாத்திரத்தில் போட்டு, அதில் தயிர் விட்டு அவளுடைய காந்தள் மலர் போன்ற விரலால் பிசைகிறாள்.

பிசைஞ்சாச்சு. கைய கழுவனும். துடைக்கணும். அதுக்கெல்லாம் நேரம் இல்லை. அக்கம் பக்கம் பார்த்தாள்.  தன் சேலையில் துடைத்துக் கொள்கிறாள். படபடப்பு...பழக்கம் வேறு இல்லை. அவன் வருவதற்குள் சமைக்க வேண்டுமே என்ற ஆவல். 

விறகு வேறு ஈரமாய் இருக்கிறது. ஒரே புகை. புகை அடித்து அவள் உடல் எல்லாம் புகை வாடை அடிக்கிறது. 

அவனுக்கு புளிக் குழம்பு பிடிக்குமே என்று புளிக் குழம்பு செய்கிறாள். புளித் தண்ணியில், உப்பு, மிளகாய் தூள் எல்லாம் போட்டு விரலால் கலக்குகிறாள். 

அவன் வந்து விட்டான். அவனுக்கு பரிமாறுகிறாள். அவன் ருசித்து சாப்பிடுகிறான். அவன் முகத்தில் உள்ள சந்தோஷத்தை பார்த்து அவளுக்கும் சந்தோஷம்.

அந்த குறுந்தொகைப் பாடல் 

Saturday, August 11, 2012

குறுந்தொகை - பூ உதிரும் ஓசை


குறுந்தொகை - பூ உதிரும் ஓசை


அவளுக்குத் தூக்கம் வரவில்லை.

இரவெல்லாம் விழித்துக்கொண்டிருந்தாள்.

ஊரெல்லாம் தூங்கி விட்டது. 
எங்கும் நிசப்தம். 

அவன் இரவு வருவதாய் சொல்லி இருந்தான்.

அவள் மிக மிக உன்னிப்பாக அவன் வரும் காலடி சப்தம் கேட்கிறதா என்று கவனித்துக் கொண்டு இருந்தாள். 

அவள் வீட்டுக்கு வெளியே சின்ன தோட்டம்.

அந்தத் தோட்டத்தில் உள்ள செடியில் இருந்து மலர் உதிர்கிறது.

அந்த சப்தம் கூட அவளுக்கு கேட்கிறது. 

அவ்வளவு ஆர்வம். 

Friday, July 13, 2012

குறுந்தொகை - கையளவு மனதில் கடலளவு காதல்


குறுந்தொகை - கையளவு மனதில் கடலளவு காதல்


இதயம் என்னவோ ஒரு கை அளவுதான்.

அதில் காதல்  கடலளவு வந்தால் எப்படி அது கொள்ளும்?

நெஞ்சம் கொள்ளாத ஆனந்தத் தவிப்பு.

கேட்கும் ஒலி எல்லாம் அவனாக.

பார்க்கும் ஒளி எல்லாம் அவனாக.

உடலோடு உரசும் உணர்வெல்லாம் அவனாக...

உண்ணும் வெற்றிலையும், பருகும் நீரும் கண்ணன் என்று ஆழ்வார்கள் சொன்னது மாதிரி...

பசி போகும்...பாடல் வரும்...

தூக்கம் போகும்...ஏக்கம் வரும்...

நாள் எது, தேதி என்று தெரியாது...

இத்தனை அவஸ்தையும் இந்த சின்ன மனதிற்குள்...தாங்க முடியுமா ?

அவள், தோட்டத்தில் உள்ள பலா மரத்தைப் பார்க்கிறாள்.

பெரிய பலாப் பழம் பழத்து தொங்குகிறது.

அதன் காம்போ மிக மிக சிறியது...

அவள் மனம் நினைக்கிறது...

"ம்ம்ம்...இந்த பலாப் பழம் போன்ற என் பெரிய இனிய காதலுக்கு, அதை தாங்கி நிற்கும் சின்ன காம்பு போல என் மனம்"...


Monday, June 4, 2012

குறுந்தொகை - வராட்டாலும் பரவாயில்லை...


குறுந்தொகை - வராட்டாலும் பரவாயில்லை...


அவன் இருக்கும் இடம் என் ஊரை விட்டு ரொம்ப தள்ளி இருக்கிறது.

என்னை பார்க்க அடிக்கடி வருவான்.

என் மேல் அவனுக்கு அவ்வளவு அன்பு.

அவன் வரும் வழியோ சரியான சாலை வசதி இல்லாத, மலை பாங்கான இடம்.

அங்கே மரத்திற்கு மரம் குரங்குகள் தாவிக் கொண்டு இருக்கும்.

ஒரு நாள் அப்படித்தான்,தாவும் போது, ஒரு ஆண் குரங்கு கை தவறி கீழே விழுந்து இறந்து விட்டது.

அதன் பிரிவை தாங்காத பெண் குரங்கு, முழுதும் வளராத தன் குட்டியையை அதன் உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தானும் அந்த மலையில் இருந்து கீழு விழுந்து உயிரை விட்டுவிட்டது.

குரங்குக்கும் கை தவறும் ஆபத்தான இடம் அவன் வரும் வழி.

அது மட்டும் அல்ல, குரங்குகள் கூட தங்கள் ஜோடிகளிடம் அபரிமிதமான அன்பை செலுத்தும் ஊர் அவன் ஊர்.

அவன் வரவில்லை என்றால் அவனை தேடுகிறது.

வரவேண்டும் என்றால், இவ்வளவு ஆபத்தை கடந்து வர வேண்டுமே ?

அவனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விட்டால். அதுக்கு அவன் வராமலேயே இருப்பது நல்லது.

இப்படி அந்த குறுந்தொகை காதலியின் மனம் கிடந்து அலை பாய்கிறது.


Friday, May 11, 2012

குறுந்தொகை - காணமல் போன காதலன்


குறுந்தொகை - காணமல் போன காதலன்



அவள், அவளுடைய காதலனை சில நாட்கள் காணாமல் வருந்துகிறாள்.

சங்க காலம் என்பது இப்ப உள்ளது மாதிரியா ?

செல் போன், லேன்ட் லைன், இ- மெயில் எல்லாம் இல்லாத காலம்.

ஒரு வேளை அவனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு இருக்குமோ என்று அஞ்சுகிறாள்.

இல்ல, தன்னை மறந்து வேறு யாருடனோ சென்றிருப்பானோ என்று சந்தேகம் கொள்கிறாள்.

தன் பயத்தை, சந்தேகத்தை தன் தோழியிடம் சொல்லுகிறாள்.

தோழி ரொம்ப practical and bold . ஒண்ணும் பயப்படாதடி, எங்க போயிருவான் உன் ஆளு...

தரைய கீறி பூமிக்குள்ளா போயிருவானா, இல்ல வானத்துல ஏறி பரந்துருவானா, இல்ல தண்ணி மேல நடந்து எங்காவது போயிருவானா ? ஊர் ஊரா, வீடு வீடு போய் தேடி கண்டு பிடிச்சு கொண்டு வர்றேன் பாரு என்று அவளுக்கு ஆறுதல் சொல்லுகிறாள் தோழி...


அந்த குறுந்தொகைப் பாடல்...



Wednesday, May 9, 2012

குறுந்தொகை - ஆணுக்கு வெட்கம் வருமா ?


குறுந்தொகை - ஆணுக்கு வெட்கம் வருமா ?


அந்த காலத்தில் ஒரு ஆண் மகன் ஒரு பெண்ணை விரும்பி அவர்கள் திருமணத்திற்கு தடை வந்தால் ஆண்மகன் மடலேறுவது என்று ஒரு வழக்கம் உண்டு.

மடலேறுதல் என்றால் என்ன ?

பனை ஓலையில் ஒரு குதிரை செய்து, அதில் ஏறி உட்கார்ந்து கொண்டு, தன் படத்தையும், அந்த பெண்ணின் படத்தையும் வரைந்து அந்த படத்தை எடுத்துகொண்டு 
அந்த பொம்மை குதிரையின் மேல் ஏறிக் கொண்டு, அந்த பெண்ணின் வீட்டுக்கு முன்னால் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டியது.

ஊரில் எல்லாருக்கும் இந்த பையன் அந்த பெண்ணை விரும்புகிறான் என்று தெரிந்து விடும். 

அந்த பெண்ணை வேறு யார் கல்யாணம் பண்ணிக் கொள்வார்கள் அந்த ஊரில் ?

எப்படி நம்ம ஆளு technique ? 

வேற வழி இல்லாமல் பெண்ணை பெற்றவர்கள் அந்த பையனுக்கே கல்யாணம் செய்து கொடுத்து விடுவார்கள். 

நம்ம ஆளுங்க கில்லாடிங்க.

இங்க குறுந்தொகையில் இவர் என்ன நினைக்கிறார் பாருங்கள்...

அப்படி எல்லாம் செஞ்சு இந்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால், 
நாளைக்கு ஊருக்குள்ள என்ன பேசுவாங்க ?

"இந்தா போறான்ல, அந்த தங்கமான பொண்ணோட புருஷன் இவன் தான், அவளை கட்டிக்க, அந்த காலத்ல என்ன கூத்து அடிச்சான் தெரியுமா" 
என்று சொல்வார்கள், அதை கேட்கும் போது எனக்கு வெட்கம் வரும் என்று தலைவர் இப்பவே வெட்கப் படுகிறார்...

அந்த ரௌசு விடும் பாடல்...


அமிழ்துபொதி செந்நா வஞ்ச வந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப்
பெறுகதில் லம்ம யானே பெற்றாங்
கறிகதில் லம்மவிவ் வூரே மறுகில்
நல்லோள் கணவ னிவனெனப்
பல்லோர் கூறயா நாணுகஞ் சிறிதே   

அந்த காலத்ல இப்ப உள்ள மாதிரி பேப்பர் பேனா எல்லாம் கிடையாது. 

ஓலை சுவடியில எழுதணும். 

ஓலை சுவடி ரொம்ப கிடைக்காது. 

எனவே சொல்ல வேண்டியத சுருக்கமா சொல்ல வேண்டிய நிர்பந்தம். 

நம்ம, கொஞ்சம் பாடலை தளர்த்தி பதம் பிரித்தால் எளிதாகப் புரியும்


Saturday, April 28, 2012

குறுந்தொகை - அவன் பொய் சொல்ல மாட்டான்

குறுந்தொகை - அவன் பொய் சொல்ல மாட்டான்


சோலைகள் எல்லாம் பூத்து குலுங்குகின்றன. கார் காலம் வந்து விட்டதோ ? இருக்காது. அவன் போகும் போது என்ன சொல்லி விட்டுப் போனான் ? கார் காலத்தில் வந்து விடுவேன் அப்படினு தான சொன்னான் ? அவன் இன்னும் வரல...அதுனால இது கார்காலமா இருக்காது....

Thursday, April 26, 2012

குறுந்தொகை - அவர் எப்படி இருக்காரோ ?

குறுந்தொகை - அவர் எப்படி இருக்காரோ ?

கணவன் வெளியூர் போனால், மனைவி அவனைப் பற்றி கவலைப் படுவாள். சரியான நேரத்துக்கு சாபிட்டாரோ இல்லையோ, புது இடத்துல தூக்கம் வருமோ இல்லையோ, மாத்திரை எல்லாம் சரியான நேரத்துக்கு மறக்காம சாப்பிடணுமே, என்று ஆயிரம் கவலை இருக்கும்.

ஆனா ஊர் என்ன சொல்லும் ? "புருசன பிரிஞ்சு ஒரு நிமிஷம் கூட இருக்க முடியலையோ ? அதுக்குள்ள  தேடிருச்சோ ?" என்று நையாண்டி செய்யும்.

பெண்ணின் மனதை யார் தான் புரிந்து கொள்ள முடியும் ?

இங்கே ஒரு கணவனை பிரிந்த குறுந்தொகை பெண் சொல்கிறாள்: