புறநானூறு - இறப்பதன் முன், நினைத்ததை செய்
நிறைய நல்ல விஷயங்களை தள்ளிப் போட்டு கொண்டே போகிறோம். ரிடையர் ஆனபிறகு படிக்க, பார்க்க என்று பல விஷயங்களை வைத்திருக்கிறோம்.
அது வரை இருக்க வேண்டுமே ? இறப்பு என்பது நம் கையிலா இருக்கிறது ? அல்லது அது சொல்லிக் கொண்டு வருமா ?
எது செய்ய வேண்டும் என்று நினைகிறீர்களோ, அதை செய்யுங்கள். தள்ளிப் போடாதீர்கள்
பாடல்
இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்
காடுபதி யாகப் போகித் தத்தம்
நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே;
அதனால் நீயும் கேண்மதி அத்தை; வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பிலாஅ அவிப்புழுக்கல்
கைக்கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோன் ஈயப்பெற்று
நிலங்கல னாக விலங்குபலி மிசையும்
இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே.
பொருள்