Thursday, May 31, 2012

ஐந்திணை ஐம்பது - காத்திருந்தவளை பார்த்திருந்தேன்


ஐந்திணை ஐம்பது - காத்திருந்தவளை பார்த்திருந்தேன்


யாராவது உங்கள் வரவுக்காக காத்து இருப்பார்களா?

அவர்கள் அப்படி உங்களுக்காக காத்திருப்பதை மறைந்து இருந்து இரசித்து இருக்கிறீர்களா?

அட, நம்மையும் கூட ஒரு ஜீவன் தேடுகிறதே என்று உள்ளம் சிலிர்த்ததுண்டா ?

அப்படி தன் காதலி தனக்காக காத்திருப்பதை காண விரும்பும் காதலனின் பாடல் இங்கே....

Wednesday, May 30, 2012

கம்ப இராமாயணம் - இராவணனை கொன்றது இராமன் அல்ல!


கம்ப இராமாயணம் - இராவணனை கொன்றது இராமன் அல்ல!


உலகம் எல்லாம் நினைத்து கொண்டு இருக்கிறது இராவணனை கொன்றது இராமன் என்று.

மண்டோதரி சொல்கிறாள், இராமன் அல்ல இராவணனை கொன்றது, மாரன் (மன்மதன்) என்று.

நாள் எல்லாம் அந்த மன்மதன் இராமன் மேல் மலர் கணை தொடுக்காமல் இருந்திருந்தால், இராவணன் சீதையின் மேல் இவ்வளவு காதல் கொண்டு இருக்க மாட்டான், அவனுக்கும் இந்த அழிவு வந்து இருக்காது என்கிறாள். 
மன்மதனின் கணையும், தேவர்களின் வரமும் இராவணனை கொன்றது என்கிறாள்.


'ஆர் அனார்உலகு இயற்கை அறிதக்கார்அவை ஏழும் ஏழும் அஞ்சும்
வீரனார் உடல் துறந்துவிண் புக்கார்கண் புக்க வேழ வில்லால்,
நார நாள் மலர்க் கணையால்நாள் எல்லாம் தோள் எல்லாம்நைய எய்யும்
மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரேவரத்தினாலே!

ஆர் அனார், = யார் அது

உலகு இயற்கை = இந்த உலகத்தின் இயற்கையை

அறிதக்கார்? = அறிய தக்கவர் (யாரும் இல்லை)

அவை ஏழும் ஏழும் அஞ்சும் = அந்த ஈரேழு உலகும் அஞ்சும்

வீரனார் = வீரனான இராவணன்

உடல் துறந்து, = உடலை துறந்து, விட்டு விட்டு

விண் புக்கார் = வானகம் போனான்

கண் புக்க = கணுக்கள் உள்ள (கரும்பு)

வேழ வில்லால், = கரும்பு வில்லால்

நார நாள் மலர்க் கணையால் = மணம் வீசும் மலர்க் கணையால்

நாள் எல்லாம் = எப்போதும்

தோள் எல்லாம் நைய = தோள் வலிக்க வலிக்க

எய்யும் மாரனார் = எய்யும் மன்மதன்

தனி இலக்கை = இராவணன் மார்பில் அம்பு எய்யும் தைரியம் மன்மதன் ஒருவனுக்கு மட்டும் தான் இருந்தது. "தனி இலக்கு"
மனித்தனார் அழித்தனரே, = அந்த மார்பை, அந்த இலக்கை மனிதன் அழித்து விட்டானே

வரத்தினாலே = வரத்தினாலே (ஆற்றலாலே என்று சொல்லவில்லை.)

(Appeal: If you like this blog, please click g+1 button below to express your liking)

திருவாசகம் - அழுதால் உன்னைப் பெறலாமே


திருவாசகம் - அழுதால் உன்னைப் பெறலாமே

"நான் உண்மையானவன் அல்ல.

என் மனமும் சுத்தமானது அல்ல

என் அன்பு போலி அன்பு

இருந்தாலும், உன்னை நினைத்து மனம் உருகி அழுதால் நான் உன்னை அடைய முடியும், 

அதற்கும் நீ தான் அருள் புரிய வேண்டும்" என்று உருகுகிறார் மணி வாசகர்

கம்ப இராமாயணம் - ஓர் அம்பா இராவணனை கொன்றது?


கம்ப இராமாயணம் - ஓர் அம்பா இராவணனை கொன்றது?


மண்டோதரி புலம்புகிறாள். 

இராவணன் எப்பேர்பட்ட வீரன். 

அவனை ஓர் அம்பா கொல்ல முடியும்?

அவனை ஓர் மானிடன் கொல்ல முடியுமா ? 

ஒரு மானிடனுக்கு இவ்வளவு வீரமா ? 

என்று கேட்பதன் மூலம் அவ்வளவு இருக்காது என்று சொல்கிறாள். 

திருக்குறள் - காதல் என்றும் புதிது


திருக்குறள் - காதல் என்றும் புதிது



நாம் புதியதாய் ஒன்றை படித்து அறிந்து கொள்ளும் போது நமக்கு ஒரு சந்தோஷம் வரும் தானே?

"அட, இதை இத்தனை நாள் அறியாமல் போனோமே" என்று தோன்றும்.
தெரிந்த பின், ஒரு சந்தோஷம் தோன்றும். மேலும் மேலும் அந்த விஷயத்தை பற்றி அறிந்து கொள்ள தோன்றும்.


அது போல, இந்த பெண்ணுடன் பழகும் ஒவ்வொரு நாளும் புதியதாய் இருக்கிறது.


அந்த சிணுங்கல், அந்த வெட்கம், அந்த கனிவு, பரிவு, பாசம், என்று ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று புதியதாய் இருக்கிறது.

ஒரு விஷயத்தை படித்து அறிந்தவுடன் , அந்த விஷயம் நமக்கு பழையதாகிப் போகிறது.


அதில் உள்ள சுவாரசியம் குறைந்து விடுகிறது.


ஆனால், நம் அறியாமை மட்டும் அப்படியே இருக்கிறது.


அது மேலும் மேலும் புதிய விஷயங்களை அறிந்து கொள்ள தூண்டிக் கொண்டே இருக்கிறது.


அறிய அறிய நம் அறியாமை புதிது புதிதாக தோன்றுவதைப் போல, இந்த பெண்ணோடு பழகும் போது ஒவ்வொரு தடவையும்
ஏதோ புதியதாய் தோன்றி கொண்டே இருக்கிறது.


கம்ப இராமாயணம் - இராமனின் சகோதர சோகம்


கம்ப இராமாயணம் - இராமனின் சகோதர சோகம்


இந்திரஜித்தின் அம்பினால் இலக்குவன் அடிபட்டு மூர்ச்சையாகிக் கிடக்கிறான்.

அவன் இறந்து விட்டானோ என்று எண்ணி, இராமன் புலம்புகிறான்.

"என் தந்தை தசரதன் இறந்தான், 

இந்த உலகம் எல்லாம் ஆளும் அரசுரிமையை தந்தேன், 

அப்போது எல்லாம் நீ என்னுடன் இருக்கிறாய் என்ற தைரியத்தில் இருந்தேன்.

இப்போது நீ போய் விட்டாய்.

என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன்.

நான் இனிமேல் உயிரோடு இருக்க மாட்டேன்...நானும் உன்னோடு வந்து விடுகிறேன்" என்று கதறுகிறான் இராமன்.


நெஞ்சை உருக்கும் சோகம்.

Tuesday, May 29, 2012

கம்ப இராமாயணம் - இராவணன் ஏன் இறந்தான்?


கம்ப இராமாயணம் - இராவணன் ஏன் இறந்தான்?


விபீஷணனை தொடர்ந்து மண்டோதரி வருகிறாள்.

இராவணன் மேல் விழுந்து புலம்புகிறாள்.

தாரை புலம்பலும், மண்டோதரி புலம்பலும் மிக மிக அர்த்தம் உள்ள புலம்பல்கள்.

அவர்களின் அறிவு திறம் வெளிப்படும் இடம்.

சோகமும், விரக்தியும், மனச் சோர்வும், கவித்துவமும் நிறைந்த பாடல்கள்.


மடோதரியின் புலம்பலில் இருந்து ஒரு பாடல்.


இராவணன் இறந்ததற்கு எவ்வளவோ காரணங்கள்...

அவன் ஜானகி மேல் கொண்ட காதல்.

ஜானகியின் கற்பு.

சூர்பனகியின் இழந்த மூக்கு

தசரதனின் கட்டளை

அதை ஏற்று வந்த இராமனின் பணிவு

எல்லாவற்றிற்கும் மேலாக இந்திரனின் தவம்

இவ்வளவும் ஒன்றாகச் சேர்ந்து இராவணின் உயிரை கொண்டு சென்று விட்டது என்கிறாள்.

கந்தர் அலங்காரம் - வயதான காலத்தில்


கந்தர் அலங்காரம் - வயதான காலத்தில்


சிறை படாத நீர் போல் காலம் கசிந்து கொண்டே இருக்கிறது.

நமக்கும் வயது ஏறும். படித்தது மறக்கும். 

நம் உடல் அவயங்கள் நாம் சொல்வதை கேட்காத காலம் வரும்.

நம் உறவினார்களும் நண்பர்களும், "அடடா, எப்படி இருந்த ஆளு, இப்படி ஆய்டானே என்று நினைத்து வருந்தும் காலம் வரும்.

அப்போது, முருகா, உன்னை வணங்கும் செயலன்றி வேறு ஒன்றும் அறியேன்....

அருணகிரி நாதர் கரைகிறார்....

கம்ப இராமாயணம் - யாருடைய பிழை?


கம்ப இராமாயணம் - யாருடைய பிழை?


இராமன் கானகம் போக வேண்டும் என்ற செய்தியை கேட்ட இலக்குவன் கோபத்தால் கொந்தளிக்கிறான்.

அவன் கோபம் எல்லோர் மேலும் பாய்கிறது. 

தசரதனையும், பரதனையும் கொன்று, அவர்களுக்கு துணையாக யார் வந்தாலும் அவர்களையும் கொன்று இந்த அரசை உனக்கு தருவேன் என்று மிகுந்த கோபம் கொண்டு இராமனிடம் சொல்லுகிறான்.


அவனை சமாதானப் படுத்துகிறான் இராமன்.

நதியில் நீர் இல்லை என்றால் அது நதி செய்த குற்றம் இல்லை, 

மழை பொழியாத விதியின் குற்றம். 

அது போல் என்னை கானகம் போகச் சொன்னது தந்தையின் குற்றம் அல்ல, 

தாயின் குற்றம் அல்ல, பரதனின் குற்றம் அல்ல, விதியின் குற்றம். இதற்க்கு யார் மேல் கோபிப்பது என்று அவனை சமாதனப் படுத்துகிறான்.


நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மைஅற்றே,
பதியின் பிழை அன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்றுமைந்த!
விதியின் பிழைநீ இதற்கு  என்னை வெகுண்டது?’ என்றான்.

நதியின் பிழை அன்று = நதியின் குற்றம் அல்ல

நறும் புனல் இன்மை = நல்ல தண்ணீர் இல்லாதது. மேலோட்டமாகப் பார்த்தால், தண்ணி இல்லாதது நதியின் குற்றம் அல்ல என்று சொல்லத் தோன்றும். கம்பர் கொஞ்சம் அழுத்தம் கொடுக்கிறார். "நல்ல" தண்ணி இல்லாதது நத்யின் குற்றம் அல்ல. நதியில் நல்ல தண்ணி தான் வரும், ஊரில் உள்ளவர்கள் அதில் கழிவு நீரை சேர்த்து விடுவதால் அது கெட்ட நீராக மாறி விடுகிறது. அது போல் நம் தாயும் தந்தையும் நல்லவர்கள் தான், ஆனால் யாரோ அவர்கள் மனதை கெடுத்து இருக்கலாம் என்று ஒரு அர்த்தம் கொள்ளலாம்.

அற்றே, = அது அன்றி

பதியின் பிழை அன்று; = தசரதனின் பிழை அன்று

பயந்து = பயந்து...எதுக்கு பயப்படனும் ? குழந்தைக்கு என்ன கொடுத்தால் என்ன ஆகுமோ, என்று பயந்து பயந்து வளர்த்தவள் கைகேயி. இன்னொரு பொருள், பாராட்டி/சீராட்டி

நமைப் புரந்தாள் = நம்மை வளர்த்தவள் (கைகேயி)

மதியின் பிழை அன்று = அவள் மதியின் பிழை அன்று

மகன் பிழை அன்று; = மகனின் பிழை அன்று (பரதன்) 

மைந்த! = மகனே (இலக்குவனே)

விதியின் பிழை; = விதியின் பிழை

நீ இதற்கு என்னை வெகுண்டது?’ என்றான். = இதுக்கு போய் ஏன் கோபித்துக் கொள்கிறாய்

இவ்வளவு சொன்ன பின்னும் இலக்குவன் சமாதானம் ஆனானா? 

இல்லை.

"விதிக்கும் விதி காணும் என் விற்தொழில் காண்டி என்றான்" என்று சண்ட மாருதாமாய் புறப்படுகிறான்...

அது அடுத்து வரும் blog குகளில் பார்ப்போம் 


கம்ப இராமாயணம் - இராவணன் தழுவிய பெண்கள்


கம்ப இராமாயணம் - இராவணன் தழுவிய பெண்கள்


இராவணன் இறந்து கிடக்கிறான்.

குப்புற விழுந்து கிடக்கிறான்.

அகன்ற மார்பு. பரந்து விரிந்த இருபது கைகள். 

பார்பதர்ற்கு அவன் நிலத்தை கட்டி பிடித்து கொண்டு கிடப்பது போல 

இருக்கிறது. 

விபீஷணன் அவன் மேல் விழுந்து கதறி கதறி அழுகிறான்.

மண்டோதரி புலம்பலை விட சோகம் ததும்பும் பாடல்கள் விபீஷணன் துக்கம் ததும்பும் பாடல்கள்.

அதில் இருந்து இன்னொரு பாடல்...

கலிங்கத்துப் பரணி - விடுறா, ஆனா விடாதடா

கலிங்கத்துப் பரணி - விடுறா, ஆனா விடாதடா


கலிங்கத்துப் பரணி என்ற நூல் ஜெயங்கொண்டார் என்ற புலவரால் எழுதப் பட்டது.

எழுதிய காலம் கி.பி. 1112 என்று சொல்கிறார்கள்.

ஆயிரம் வருஷம் முந்தியது.

குலோத்துங்க மன்னன் கலிங்கத்தை வென்றதை பாராட்டி எழுதிய பாடல்.

பரணிக்கு ஒரு புலவன் ஜெயங்கொண்டார் என்று சிறப்பு பெற்றவர்.

காதல், வீரம், அந்த கால வாழ்கை முறை, என்று பல விஷயங்களை சேர்த்து எழுதி இருக்கிறார்.

அதில் கடை திறப்பு என்று ஒரு பகுதி.

ஜொள்ளர்களுக்கு பெரிய விருந்து.

வள்ளுவரின் காமத்துப் பாலோடு போட்டியிடும் பாடல்கள்.


படித்து முடித்தவுடன், உதட்டோரம் ஒரு மெல்லிய புன்னகையையை வரவழைக்கும் பாடல்கள்.

கடை (வாசல்) திறப்பு என்ற பகுதியில், வீரர்கள் போர் முடிந்து வீட்டிற்கு வருகிறார்கள்.

அவர்களின் மனைவியோ, காதலியோ அவர்கள் மேல் ஊடல் கொண்டு கதவை திறக்காமல் முரண்டு பண்ணுகிறார்கள்.

அவர்களை சமாதனம் பண்ணி கதவை திறக்க சொல்லும் பாடல்களின் தொகுப்பு.

romance இன் உச்ச கட்டம் !


Monday, May 28, 2012

திரு மந்திரம் - எப்படி இறைவனை அறிவது?


திரு மந்திரம் - எப்படி இறைவனை அறிவது?


இறைவன் உண்டா ? உண்டு என்றால் அவனை எப்படி அறிவது ?

மனிதன் சிந்திக்க தொடங்கிய காலம் தொட்டு இந்த கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.

புத்தகங்களை படித்து அவனை அறிந்து கொள்ள முடியுமா ?

அறிந்தவர்களை கேட்டால் சொல்லுவார்களா ?

அவர்களை எப்படிநம்புவது ?

நிறைய குழப்பம் இருக்கிறது.

திருமூலர் ஒரு வழி சொல்கிறார்.


இறைவனை முதலில் ஒருவர் அறிகிரா்...அவருடைய சொந்த முயற்ச்சியில்.

அறிந்த பின் அவர் அதை மற்றவர்களுக்குச் சொல்கிறார்.

சொல்வதை கேளுங்கள். சும்மா கேட்டால் மட்டும் போதாது, அதை அனுபவ பூர்வமாக உணருங்கள்.

உணர்ந்த பின், நீங்கள் அதை அப்படியே நம்பாதீர்கள். நீங்க போய் திரும்பவும் படியுங்கள்.

அப்படி படித்து, உணர்ந்த பின், நீங்கள் உயர்ந்த நிலை அடைவீர்கள் என்கிறார்.

முத்தொள்ளாயிரம் - சைட் அடிக்கும் பெண்கள்


முத்தொள்ளாயிரம் - சைட் அடிக்கும் பெண்கள்


நமக்கு பிரியமானவர்களோடு இருக்கும் போது, அந்த நேரம் நீண்டு கொண்டே போகக் கூடாதா என்று இருக்கும்.

அவர்களோடு எவ்வளவு பேசினாலும், பார்த்தாலும் போதாது.

இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று மனம் ஏங்கும்.

அவளுக்கு அந்த ஊர் அரசன் மேல் கொள்ளைக் காதல். 

அவன் குதிரையின் மேல் போகும் போது வரும் போது பார்த்து அவன் பால் மனதை பறிகொடுத்து விட்டாள்.

கதவின் மறைவில் நின்று அவன் வரும் போதும் போகும் போதும் பார்ப்பாள்.

நிறைய நேரம் பார்க்க ஆசை தான், ஆனால் அவன் ஏறிச் செல்லும் குதிரை மிக வேகமாக சென்று விடுகிறது.

அவள் அந்த குதிரையிடம் பேசுகிறாள்.

"போர்க் களத்தில் வேகமாக செல்கிறாய், சரி. ஊருக்குள் என்ன எதிரிகளா இருக்கிறார்கள், ஏன் இவ்வளவு அவசரம், கொஞ்சம் மெதுவாத்தான் போயேன். நான் இன்னும் கொஞ்சம் அவனை பார்த்து இரசிப்பேன்ல" என்று குதிரையிடம் முறை இடுகிறாள். 

அந்த ஜொள்ளு பாடல் 

திருக்குறள் - என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்


திருக்குறள் - என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்


அவள்: என்ன, இன்னைக்கு என்னவோ புதுசா பாக்கிற மாதிரி பாக்கிற என்னை

அவன்:உன் கண்ணு இருக்கேஅதை இன்னைக்கு எல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கலாம்...அவ்வளவு அழகு...

அவள்: அவ்வளவுனா எவ்வளவு ?

அவன்: ம்ம்ம்.உன் கண்ணு ஐஸ்வர்யா ராய் கண்ணு மாதிரி so beautiful...

அவள்: (சற்று கோபத்துடன்) நீ ஐஸ்வர்யா ராய் கண்ணை பாத்து இருக்கியா ?

அவன்:நேர்ல இல்லஇந்த சினிமா மாத இதழ்ல வருதே...அதுல பார்த்தது தான் ...

அவள்:அப்ப நீஇந்த பொண்ணுங்க படத்தை எல்லாம் பார்த்து ஜொள்ளு விடுற...அப்படி தான ?

அவன்: அப்படி இல்ல...சும்மா அப்படி இப்படி புரட்டும் போது கண்ணுல படும் போது பாக்குறது தான் ....


அவள்: இல்லநீ வேணும்னே தேடிப் போய் பாக்குற ... என் கண்ணுல எல்லாம் அது பட மாட்டேங்குதே.. உன் கண்ணுல மட்டும் எப்படி படும்... ஏன்னா நீ அதைத் தேடிப் போய் பாக்குற...உனக்கு வர வர என்னை பிடிக்கலஅது தான் மத்த பொண்ணுங்க படத்தை எல்லாம் பாக்குற..



அவன்: சரி இனிமேல் அந்த மாதிரி புத்தகத்தையே பாக்கல போதுமா...?


அவள்: ம்ம்ம்ம்...


அவன்: அதை கொஞ்சம் சிரிச்சிகிட்டு தான் சொல்லேன் ...


அவள்: ம்ம்ம்.. போய் ஐஸ்வர்யா ராய் கிட்ட சொல்லுஅவ ஈ நு பல்லை காட்டிட்டு சொல்லுவா...


 நினைத்திருந்து நோக்கினும் காயும், ‘அனைத்துநீர்
 யாருள்ளி நோக்கினீர்’ என்று.

நினைத்திருந்து =அவளையே நினைத்து
நோக்கினும் = பார்த்தாலும்
காயும் = சண்டை பிடிக்கும்
அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர்’ என்று.= யாரை நினைத்து நீ என்னை இப்படி பார்க்கிறாய் என்று (யாருள்ளி = யார் + உள்ளி . உள்ளி = நினைத்து)

நான் அவளின் அங்க அழகை இரசித்தாலும், "என் அழகை வேறு ஒரு பெண்ணின் அழகோடு ஒப்பிட்டுத் தானே நீ இரசிக்கிறாய் (நினைத்திருந்து), இப்படி ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒரு பெண் (அனைத்துநீர்) என்றால், எத்தனை பெண்களை நீ நினைத்து கொண்டு என்னை இரசிக்கிறாய்" என்று என் மேல் கோவப் படுவாள்.


(Appeal to the reader: If you like this blog, please click the g+1 button below this blog to express your liking and recommendation. It is just a click. That is all needed, that too, if you like the blog. Thanks)

Sunday, May 27, 2012

கம்ப இராமாயணம் - நைந்த தம்பிகள்


கம்ப இராமாயணம் - நைந்த தம்பிகள்


பதினாலு வருடங்கள் இராமனோடு காடு மேடு எல்லாம் அலைந்து, உறங்காமல் கண் விழித்து நைந்து போய் நந்தி கிராமம் வருகிறான் இலக்குவன்


அங்கே, பதினாலு வருடம் இராமன் பாதுகைகளை வைத்து, தவ வேடம் பூண்டு, உடலும் உள்ளமும் உருகி நைந்து போய் இருக்கிறான் பரதன்.

எதிர் வந்த இலக்குவனை பரதன் வரவேற்கிறான்.

ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி கண்ணீர் விட்டனர். 

சுற்றி இருந்த மக்கள் எல்லாம், இதில் அதிகம் நைந்தது யார் என்று வருத்ததோடு பார்த்தனர்.

அந்த மனதை உருக்கும் பாடல்....

ஐங்குறுநூறு - காலையில் வந்த மாலைப் பொழுது.



ஐங்குறுநூறு - காலையில் வந்த மாலைப் பொழுது.


காதலனை பிரிந்து இருக்கிறாள்.

பிரிவு அவளை வாட்டுகிறது.

மாலை வருகிறது.

ரொம்ப கஷ்டப் பட்டு மாலை பொழுது சென்றது.

பின் இரவு.

மறு நாள் காலை வந்தது.

மதியம் வரவேண்டும்.

மதியம் வரவில்லை , மாலை வந்து விட்டது.

அவள் அந்த மாலைப் பொழுதிடம் கோவிக்கிறாள்.

"என்ன, அதுக்குள்ள வந்துட்ட. இப்ப தான போன...அதுக்குள்ள வந்துட்ட...
ஹும்ம்..உன்னை யார் கேக்குறது..." 

கம்ப இராமாயணம் - ஜொள்ளு விடும் பெண்கள்

கம்ப இராமாயணம் - ஜொள்ளு விடும் பெண்கள்



இராமன் மிதிலை வீதியில் நடந்து வருகிறான்.


அங்குள்ள பெண்கள் எல்லாம் அவன் அழகில் மயங்கி அவம் மேல் மையல் கொள்கின்றனர்


  
மன்மதனும் தன் மலர் அம்புகளை எய்த வண்ணம் இருக்கிறான்.

அம்பு எய்து எய்து அவன் அம்புராத் துணியில் உள்ள அம்பு எல்லாம் தீர்ந்து விட்டது 

பாவம் அவனும் தான் என்ன செய்வான்.அம்பு இல்லாமல் நிராயுத பாணியாய் நிற்கிறான் வேற என்ன செய்வது என்று

தெரியாமல் கையை அவனுடைய வாளின் மேல் வைத்தானாம்....




கம்பரின் அந்த அருமையான கவிதை..  




Saturday, May 26, 2012

முத்தொள்ளாயிரம் - கூடிழந்த சிலந்தி


முத்தொள்ளாயிரம் - கூடிழந்த சிலந்தி


காக்கை குருவி எங்கள் ஜாதி என்றான் பாரதி.

மீன் பிடிக்கும் வலையையை கொலை கருவியாகப் பார்த்தார் வள்ளலார்.

கவிஞர்கள் என்றுமே உயிர்களிடம் ஆழ்ந்த அன்பு கொண்டவர்கள்.

முத்தொள்ளாயிரம் என்ற சங்க இலக்கியத்தில், கூடு இழந்த சிலந்தியைப் பற்றி இங்கு ஒரு கவிஞர் கவல்கிறார்.

இலங்கை வேல் கிள்ளி என்று ஒரு அரசன். அவன் பிறந்தது ரேவதி நட்சத்திரத்தில் 

அவன் பிறந்த நாள் வெகு விமரிசையாக கொண்டாடப் படுகிறது.

ஒரே பாட்டும்,கூத்தும் ஊரே விழாக் கோலம் பூண்டு இருக்கிறது.

கவிஞர் பார்க்கிறார். இவ்வளவு கோலா கலம் என்றால் வீடு எல்லாம் வெள்ளை அடிப்பார்கள் தானே?

அதற்கு முன்னால் ஒட்டடை அடிப்பார்கள்..அப்ப அந்த சிலந்தி அதன் வீட்டினை இழக்குமே என்று கவலைப் படுகிறார். 


அந்தணர் ஆவொடு பொன் பெற்றார்நாவலர்
மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் -எந்தை
இலங்கிலைவேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ?
சிலம்பி தன் கூடிழந்தவாறு

அந்தணர் = அந்தணர்கள்

ஆவொடு = பசு மாடு மற்றும்

பொன் பெற்றார் = பொன் பர்சில்களைப் பெற்றுச் சென்றனர்

நாவலர் = எழுத்தாளர்கள்/புலவர்கள்

மந்தரம் போல் = மந்திர மலையை போல

மாண்ட களிறு ஊர்ந்தார் = பெரிய யானையை பரிசாகப் பெற்று அதன்

மேல் ஊர்ந்து சென்றனர்

எந்தை = எம்முடைய தந்தை

இலங்கிலைவேல் கிள்ளி = இலங்கிலைவேல் கிள்ளி

இரேவதி நாள் என்னோ? = பிறந்த ரேவதி நட்சத்திரமான இன்று

சிலம்பி = சிலந்தி

தன் கூடிழந்தவாறு = தன்னுடைய கூட்டினை இழந்தது

இது அந்த சிலந்திக்கு மட்டுமா பாடிய பாடல்.

உலகில் எத்தனையோ சந்தோஷங்கள் நடந்து கொண்டிருந்தாலும் ஏதோ ஒரு இதயம் ஏதோ ஒரு சோகத்தில் அழது கொண்டுதான் இருக்கும்.

அந்த உயிர் தான் இந்த பாடலில் வரும் சிலந்தியோ ?

கம்ப இராமாயணம் - பார்வை எனும் விஷம்


கம்ப இராமாயணம் - பார்வை எனும் விஷம்


மனிதன் எல்லா இன்பத்தையும் தனியாக அனுபவிக்க முடியும், காதலும் கலவியும் தவிர.

காதலுக்கு இன்னொரு உயிர் வேண்டும்.

என் சந்தோஷத்திற்கு என்னை விட நீ முக்கியம் என்று ஒருவன்/ள் ஒத்துக்கொள்ளும் இடம் காதல்.

இராவணன் காதலுக்கு ரொம்ப ஏங்கி இருப்பானோ ?

அவனுக்கு வேண்டியது எல்லாம் கிடைத்தது, அவன் வீரத்திற்கு பயந்து 
அவன் வேண்டி கிடைக்காதது, ஜானகியின் காதல்.


போரில் இராவணன் இறந்த பின், விபீஷணன் அவன் மேல் விழுந்து அழுகிறான்...

எந்த விஷமும், உண்டால் தான் உயிரைப் பறிக்கும்.

ஆனால், இந்த சீதை என்ற விஷமோ கண்ணில் பார்த்த மாத்திரத்திலேயே உன் உயிரை பறித்து விட்டதே என்று புலம்புகிறான்.



உண்ணாதே உயிர்உண்ணாது ஒருநஞ்சு சனகி என்னும் பெருநஞ்சு உன்னைக்
கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர்நீயும் களப்பட்டாயே
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்றினித்தான் எண்ணுதியோ எண்ணில் ஆற்றல்
அண்ணாவோ அண்ணாவோ அசுரர்கள்தம் பிரளயமே அமரர் கூற்றே

உண்ணாதே = சாப்பிடாமல்

உயிர்உண்ணாது = உயிரை எடுக்காது

ஒருநஞ்சு = எந்த நஞ்சும்

சனகி என்னும் = ஜானகி என்ற

பெருநஞ்சு = பெரிய நெஞ்சு

உன்னைக் = உன்னை

கண்ணாலே நோக்கவே = கண்ணால் பார்த்த மாத்திரத்தில்

போக்கியதே உயிர் = உன் உயிரை போக்கி விட்டதே

நீயும் = நீயும்

களப்பட்டாயே = களத்தில் இறந்து பட்டாயே

எண்ணாதேன் = சிந்திக்கத் தெரியாதவன் (என்று நீ சொல்லிய)

எண்ணிய சொல் = நான் சிந்தித்து சொல்லிய சொல்லை

இன்றினித்தான் = இன்று இனிதான்

எண்ணுதியோ = எண்ணப் போகிறாயோ?

எண்ணில் ஆற்றல் = எண்ணிலாத ஆற்றல் (கொண்ட)

அண்ணாவோ அண்ணாவோ = அண்ணனே அண்ணனே

அசுரர்கள் தம் பிரளயமே = அசுரர்களின் பிரளயம் போல உள்ளவனே

அமரர் கூற்றே = அமரர்களின் (தேவர்களின்) எமனே


கம்ப இராமாயணம் - இறப்பிலும் ஓர் கம்பீரம்


கம்ப இராமாயணம் - இறப்பிலும் ஓர் கம்பீரம்


சாக யாருக்குத்தான் பிடிக்கும்? சிரித்துக் கொண்டே யாராவது இறந்திருக்கிறார்களா?

வாழ்க்கை என்பதே சாவோடு கொண்ட ஒரு தொடர் போராட்டாம் தானோ?

"சாமாறே விரைகின்றேன்" என்றார் மணி வாசகர்.

அருணகிரி நாதர் முதல் பாரதியார் வரை காலனை கண்டு பயந்திருக்கிறார்கள்.

"காலா, நீ கிட்டே வா, உன்னை எட்டி உதைக்கிறேன்" என்று அவர்கள் சொன்னாலும், அந்த பயம் தெரியாமல் இல்லை.

பட்டினத்தார் கூட இறப்புக்கு அப்புறம் என்ன ஆகுமோ என்று ரொம்ப வாழும் போது கவலைப் பட்டிருக்கிறார்.


இராமாயணத்தில் இராவணன் இறந்து கிடக்கிறான்.

இறந்த அவன் உடலை கம்பன் வர்ணிக்கும் அழகே அழகு.

சாவை கூட இவ்வளவு கவித்துவமாக சொல்ல முடியுமா ?

இறந்து கிடக்கும் அவன் முகம் உயிரோடு இருந்ததை விட மூன்று மடங்கு பொலிவாய் இருந்ததாம்.