Showing posts with label raamaanujar nootraandhadhi. Show all posts
Showing posts with label raamaanujar nootraandhadhi. Show all posts

Saturday, September 26, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - நெஞ்சே உனக்கு நன்றி

இராமானுஜர் நூற்றந்தாதி - நெஞ்சே உனக்கு நன்றி 


நம் மனம் நம் கட்டுக்குள் இருப்பது இல்லை. ஒரு நிமிடம் அமைதியாக இரு என்றால் இருக்காது. குரங்கு போல அங்கும் இங்கும் தாவிக் கொண்டே இருக்கும்.

மனதை கட்டுப் படுத்துவது என்பது சாதாரண வேலை இல்லை.

மனம் இருப்பதால்தானே மனிதன் !

பெரிய பெரிய மகான்கள் எல்லாம் ரொம்ப பிரயத்தனப் பட்டிருக்கிறார்கள்.

மனம் , அது தன் பாட்டுக்கு  வேலை செய்கிறது. அதனால் தான்  நம்மாழ்வார் முதலிலேயே தன் மனதுக்கு சொல்லி விடுகிறார்...அவனை தொழுது எழு என்  மனமே என்று

உடனே மனம் கேட்கும்,  எதற்கு அவனை நான்  தொழ வேண்டும் என்று ? அவன் என்ன அப்படி என்ன பெரிய ஆளா என்று ?

மனதுக்கு சமாதனம் சொல்கிறார்....அவன் யார் தெரியுமா ...

அதற்கு மேல் வேறு இல்லை என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்த நலன்களை  கொண்டவன், மயக்கம் இல்லாத மதி நலம் தருபவன் அவன், அமரர்களுக்கு அவன் அதிபதி, நம்  துன்பங்களை எல்லாம் போக்குபவன் அவன்..எனவே அவனை தொழுது ஏழு என் மனமே "

என்று மனதுக்கு சொல்கிறார்.

" உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன் 
மயர்வற மதிநலம் அருளினன் எவனவன் 
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவனவன் 
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே "


இங்கே, திருவரங்கதமுதனார், இராமானுஜரைப் பற்றி கூறும் போது ,

"என் மனமே, உன்னை நான் அடி பணிகின்றேன். இறை நம்பிக்கை இல்லாதவர்களின் தொடர்பை விடுத்து, இராமானுசரிடம் அன்பு கொள்ளவோர் அடிக் கீழ் என்னை சேர்த்ததற்கு  "

பாடல்

பேரியல்நெஞ்சே! அடிபணிந் தேனுன்னைப் பேய்ப்பிறவிப்
பூரிய ரோடுள்ள சுற்றம் புலத்திப் பொருவருஞ்சீர்
ஆரியன் செம்மை இராமா னுசமுனிக் கன்புசெய்யும்
சீரிய பேறுடை யார் அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே.

பொருள்

பேரியல்நெஞ்சே!  = பெரிய மனமே

அடி பணிந்தேனுன்னைப் = உன்னை அடி பணிந்தேன்

பேய்ப் பிறவிப் = பேய் போன்ற பிறவி கொண்ட

பூரிய ரோடுள்ள = மக்களோடு உள்ள

சுற்றம் புலத்திப்  = உறவை நீக்கி

பொருவருஞ்சீர் = ஒப்பற்ற குணங்கள் உடைய

ஆரியன்= ஆரியன்

செம்மை = சிறந்த

இராமானுச = இராமானுசன்

முனிக் கன்பு செய்யும் = முனிவனுக்கு அன்பு செய்யும்

சீரிய பேறுடை யார் = சீரிய பேறு உடையவர்கள்

அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே = அடிக்கு கீழ் என்னை சேர்ததற்கே.



Saturday, September 19, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - சொல்லுவோம் அவன் நாமங்களே

இராமானுஜர் நூற்றந்தாதி - சொல்லுவோம் அவன் நாமங்களே 


பெரிய பெரிய மகான்கள் தோன்றிய பூமி  இது.எவ்வளவோ நல்ல நல்ல விஷயங்களை எடுத்துச் சொன்னார்கள். அவர்களிடம் இருந்து அந்த நல்ல விஷயங்களைப் பெற்றவர்கள் மற்றவர்களுக்கு அதை சொல்ல மனம் வரவில்லை. அப்படி சொல்லாமல் போனால் அந்த பெரிய உண்மைகள் நாளடைவில் மறைந்து போகும். அது மட்டும்  அல்ல,அதை கண்டு சொன்ன அந்த மகான்களின் பேரும் பெருமையும் மறைந்து போகும்.

தான் கற்ற திவ்ய மந்திரங்களை எல்லோரும் உய்ய ஊருக்கே சொன்னவர் இராமானுஜர்.

அதனால், அதை பெற்றவர்கள்  வாழ்ந்தார்கள்.

அந்த உண்மைகள் நிலைத்தன.

அந்த மந்திரங்களை கண்டு சொன்ன பெரியவர்களின் பெயரும் நிலைத்தது.

அப்பேற்பட்ட மகான் இராமானுஜர். அவரின் பாதார விந்தங்களைச் சேர அவருடைய நாமங்களைச் சொல்லுவோம்.

பாடல்


பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந் தவன் பல்கலையோர்
தாம்மன்ன வந்த இராம னுசன்சர ணாரவிந்தம்
நாம்மன்னி வாழநெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.


பொருள்

(மன்னுதல் என்றால் நிலைத்து இருத்தல்.  இந்த பாசுரத்தில் பல இடத்தில் மன்னு என்ற வார்த்தை  வருகிறது. மன்னு புகழ் கோசலை மணி வயிறு வாய்த்தவன் )


பூமன்னு = பூவில் நிலைத்து வாசம் செய்யும்

மாது = திருமகள்

பொருந்திய  மார்பன் = பொருத்தமாக வந்து சேர்ந்த மார்பை உடையவன்

புகழ்மலிந்த = புகழ் நிறைந்த

பாமன்னு = நிலைத்து நிற்கும் பாடல்களை தந்த

மாறன்  = நம்மாழ்வார்

அடிபணிந் துய்ந் தவன் = திருவடிகளை பணிந்து உயர்ந்தவன்

பல்கலையோர் = பல கலைகளை கற்ற பெரியோர்

தாம்மன்ன = அவர்கள் நிலைத்து நிற்க

வந்த = வந்த

இராம னுசன் = இராமானுசன்

சர ணாரவிந்தம் = திருவடித் தாமரைகளை

நாம்மன்னி = நாம் என்றும் நிலையாக அடைந்து

வாழநெஞ்சே!  = வாழ்வதற்கு நெஞ்சே

சொல்லுவோம்  = சொல்லுவோம்

அவன் நாமங்களே = அவனுடைய நாமாங்களையே

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகர் சொன்ன மாதிரி ,

இராமானுஜர் திருவடிகளை அடைய அவருடைய நாமங்களே துணை



Sunday, July 5, 2015

இராமானுசர் நூற்றந்தாதி - இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே

இராமானுசர் நூற்றந்தாதி - இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே



திருவரங்கத்து அமுதனார் அருளிச் செய்தது இராமனுசர் நூற்றந்தாதி.

குருவின், ஆசாரியன் மூலமாகத்தான் இறைவனை அடைய முடியும் என்பது நம் முன்னவர்களின் முடிந்த முடிபு.

இறைவனைப் பற்றி நமக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் யாராவது சொன்னால்தானே புரியும்.

தந்தையையே தாய் சொல்லித்தானே தெரிந்து கொள்கிறோம்.

இறைவனை குரு தான் அடையாளம் காட்ட வேண்டும்.

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்றார் அருணகிரிநாதர்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.



அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் என்பார் மணிவாசகர். மணிவாசகருக்கு இறைவனே குரு வடிவாக வந்து உபதேசம் செய்தான். 

முந்திய முதல், நடு, இறுதியும், ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றுஅறிவார்?
பந்து அணை விரலியும், நீயும், நின் அடியார் பழம் குடில்தொறும் எழுந்தருளியபரனே!
செம் தழல் புரை திருமேனியும் காட்டி, திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி,
அந்தணன் ஆவதும் காட்டி, வந்து ஆண்டாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே!

திருவரங்கத்து அமுதனார், இராமானுசரை குருவாகக் கொண்டு, விண்ணப்பம் செய்கிறார்.....

"என் மனம் என்ற வண்டு உன் திருவடித் தாமரைகளை அடைந்தது, தேன் உண்ணும் பொருட்டு. அந்தத் தேனை நீ அந்த வண்டுக்கு அருளிட வேண்டும். அது அல்லாமல் வேறு எதையாவது தந்து என் மனதை மயக்கிடாதே "

என்று  வேண்டுகிறார்.

பாடல்

போந்ததென் னெஞ்சென்னும் பொன்வண்டு உனதடிப் போதில் ஒண்சீர்
ஆம்தெளி தேனுண் டமர்ந்திட வேண்டி,நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமா னுச! இது அன்றி யொன்றும்
மாந்தகில் லாது, இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.

சீர் பிரித்த பின்

போந்தது என் நெஞ்சு என்னும்  பொன் வண்டு உனது அடிப் போதில் ஒண் சீர்
ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி, நின் பால் அதுவே 
ஈந்திட வேண்டும் இராமானுச! இது அன்றி ஒன்றும் 
மாந்த இல்லாது , இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.


பொருள் 

போந்தது = சென்று அடைந்தது

என் நெஞ்சு = என் மனம்

என்னும் = என்ற

பொன் வண்டு = பொன் வண்டு

 உனது அடிப் = உனது திருவடி என்ற

போதில் = மலரில். போது என்றால் மலர். போதொடு நீர் சுமந்து போவார் என்பார் திருநாவுக்கரசர்

மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.


ஒண் சீர் = சிறந்த

ஆம் தெளி தேன் உண்டு = தெளிந்த தேனை உண்டு

அமர்ந்திட வேண்டி = அமர்ந்திட வேண்டி

நின் பால் அதுவே = உன்னிடம் அதுவே

ஈந்திட வேண்டும் = அளித்திட வேண்டும்.  உயர்ந்தவர்கள் , தாழ்ந்தவர்களுக்குத் தருவதற்கு ஈதல் என்று பெயர்.

இராமனுக்கு பெயர் சூட்டும் போது, "இராமன் என்ற பெயர் ஈந்தான்" என்பார் கம்பர்.  அது எப்படி,  வசிட்டர் இராமனை விட உயர்ந்தவர் ? (இது பற்றி பின்னொரு நாளில் சிந்திப்போம் )

இராமானுச!  = இராமானுச

இது அன்றி ஒன்றும் =  இதைத் தவிர வேறு ஒன்றும்

மாந்த இல்லாது  = அருந்த  முடியாது

இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே = இனி வேறொன்றைக் காட்டி என்னை மயக்கி விடாதே.


இராமானுசா ! உன் திருவடி மட்டுமே வேண்டும். வேறு எதுவும் வேண்டாம் என்று  உருகுகிறார். 


Tuesday, April 30, 2013

இராமானுஜ நூற்றந்தாதி - காமமே சிறந்தது ....


இராமானுஜ நூற்றந்தாதி - காமமே சிறந்தது ....


அறம் , பொருள், இன்பம், வீடு என்ற நான்கை சொல்லுகிறார்கள் பெரியவர்கள்.

அற வழியில் பொருள் ஈட்டி, அதன் மூலம் இன்பம் துய்த்து, பின் அதை கடந்து வீடு பேற்றை அடைய வேண்டும் என்பது பொருள்.

இந்த நான்கில் இன்பம், அதாவது காமமும் காதலும் மிக சக்தி வாய்ந்தது.

வலுவானது. காமத்தை வெல்லுவது கடினம்.

அது மனிதனின் இயற்கையோடு ஒன்றியது. அதை அடக்க நினைப்பதும் சிறந்தது அல்ல. அடக்க அடக்க மேலும் பொங்கி வருவது காமம்.

காமத்தை வெல்ல அமுதனார் எளிய வழி சொல்லுகிறார்.

காமம் அப்படியே இருக்கட்டும். அதை அப்படியே கண்ணன் மேல் திருப்பி விடுங்கள். அவ்வளவுதான்.

ஆயர் பாடி கோபிகைகள் அத்தனை பேரும் கண்ணன் மேல் மோகம் கொண்டார்கள் என்று கூறுவது ஒரு  உவமை - ஒரு உருவகம்.

உள் அர்த்தம், உலக மக்களே உங்கள் காமத்தை, இறைவன்பால் திருப்புங்கள் என்பதே.

அப்படி திருப்பும் போது துன்பம் செய்யும் காமம் சீரிய நல்  காமமாக மாறி விடுகிறது. அந்த காமமே நன்மை செய்யும்.

அறம் , பொருள், இன்பம் இந்த மூன்றும் கண்ணன் மேல் காமம் கொள்வதற்குத் தான் என்று கூறினார் இராமனுசர்.

பாடல்

சேமநல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம் அறம்பொருள் வீடிதற் கென்றுரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண்மிசையே


பொருள் 

Saturday, March 9, 2013

இராமானுசர் நூற்றந்தாதி - கலைக் கவி பாடும் பெரியவர்

இராமானுசர் நூற்றந்தாதி - கலைக் கவி பாடும் பெரியவர்

இறைவனை அடைய , முக்தி பெற, உண்மை உணர, வீடு பேறு அடைய பொதுவாகச் சொல்லப்பட்ட வழி கானகம் சென்று, கல் மேலும் , முள் மேலும் நின்று தவம் இயற்றுவது

அது எல்லாம் எல்லாராலும் ஆகின்ற காரியம் அல்ல.

உடலை வருத்தாமல், அன்பால், பக்தியால், ஆசாரியனிடத்தில் சரணடைவதன் மூலம் அவற்றை அடையலாம்

பாடல்


கதிக்குப் பதறிவெங் கானமும் கல்லும் கடலுமெல்லாம்
கொதிக்கத் தவம்செய்யும் கொள்கையற் றேன்,கொல்லி காவலன் சொல்
பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமா னுசனென்னைச் சோர்விலனே.

பொருள்



Friday, March 1, 2013

இராமானுசர் நூற்றந்தாதி - தமிழ்த் தலைவன்


இராமானுசர் நூற்றந்தாதி - தமிழ்த் தலைவன் 


இதற்கு முந்தைய இரண்டு பாசுரங்களில் பொய்கை ஆழ்வாரும், பூதத்தாழ்வாரும் மறையோடு தமிழ் சேர்த்து திருவிளக்கை ஏற்றினார்கள் என்று பார்த்தோம்.

ஞான விளக்கை ஏற்றிய பின் அஞ்ஞான இருள் விலகி ஓட வேண்டியதுதானே.

அந்த ஞான விளக்கில் திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன் என்று பாடினார் பேயாழ்வார்.




அப்படி கண்ட பேயாழ்வாரை "தமிழ்த் தலைவன்" என்று பட்டம் தந்து கொண்டாடுகிறார் திருவரங்கத்து அமுதனார்.

அப்படிப்பட்ட பேயாழ்வாரின் திருவடிகளைப் போற்றும் இராமானுசரிடம் அன்பு பூண்டவர்களின்  திருவடிகளை தலையில் சூடுபவர்கள் என்றும் சிறப்பு உடையவர்கள்.

பாடல்


மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள்
தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன்
பொன்னடி போற்றும் இராமா னுசற்கன்பு பூண்டவர்தாள்
சென்னியிற் சூடும் திருவுடை யாரென்றும் சீரியரே.

பொருள்


Thursday, February 21, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - வேதங்களை காப்பவர்



இராமானுஜர் நூற்றந்தாதி - வேதங்களை காப்பவர் 


வேதம்.

எப்போது அது எழுதப் பட்டது, யார் அதை எழுதினார்கள் என்று தெரியாது.

காகிதமும், அச்சுக் கலையும் , கணணிகளும் இல்லாத காலத்தில் இருந்து அந்த வேதங்களை இன்று வரை நமக்காக பத்திரப் படுத்தி கொண்டு வந்து தந்தது யார் ?

சிதைந்தும் காணமல் போகவும் எவ்வளவோ காரணங்கள் இருந்தும் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படாமல் பத்திரமாக வந்து சேர்ந்து இருக்கிறது என்றால் அது யாரால் ?

எத்தனையோ நல்லவர்கள், பெரியவர்கள் இனி வரும் காலத்தின் சந்ததிகளுக்கும் பயன் பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அந்த வேதங்களை காத்து நம்மிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார்கள்.

அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நாம் நன்றி சொல்வோம்.

பாடல்

இறைவனைக் காணும் இதயத் திருள்கெட ஞானமென்னும்
நிறைவிளக் கேற்றிய பூதத் திருவடி தாள்கள்,நெஞ்சத்
துறையவைத் தாளும் இராமா னுசன்புகழ் ஓதும்நல்லோர்
மறையினைக் காத்த இந்த மண்ணகத் தேமன்ன வைப்பவரே.

 சீர் பிரித்த பின்

இறைவனை காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும் 
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமானுசன் புகழ் ஓதும் நல்லோர் 
மறையினை காத்த இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே 

பொருள்


Tuesday, February 12, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - அன்று ஏற்றிய விளக்கு


இராமானுஜர் நூற்றந்தாதி - அன்று ஏற்றிய விளக்கு  


சமய பெரியவர்களுக்கு ஏதோ ஒரு உண்மை கிடைத்திருக்கிறது. அதை வைத்துக் கொண்டு அவர்கள் சும்மா இருந்திருக்கலாம். இல்லை அதை வைத்து நாலு காசு பண்ணி இருக்கலாம். காசு  பண்ணிய மாதிரி தெரியவில்லை. காலம் காலத்திருக்கு பின் வரும் சந்ததிகளுக்கு எல்லாம் பயன் பட வேண்டும் என்று எழுதி வைத்து விட்டு போய் இருக்கிறார்கள்.

அவர்கள் ஏற்றி வைத்த விளக்கு இன்றும் ஒளி  வீசி , இருள் அகற்றி நம் வாழ்க்கைக்கு வழி காட்டி கொண்டிருக்கிறது 

பாடல் 


வருத்தும் புறவிருள் மாற்ற, எம் பொய்கைப்பி ரான்மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத்
திரித்தன் றெரித்த திருவிளக் கைத்தன் திருவுள்ளத்தே
இருத்தும் பரமன் இராமா னுசனெம் இறையவனே.

பொருள் 

Saturday, February 9, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - வழியைக் கடக்க


இராமானுஜர் நூற்றந்தாதி - வழியைக்  கடக்க


மொழியைக் கடக்கும் பெரும்புக ழான், வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும்நம் கூரத்தாழ் வான்சரண் கூடியபின்
பழியைக் கடத்தும் இராமா னுசன்புகழ் பாடியல்லா
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே.

கூரத்தாழ்வானின் புகழை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மொழியின் எல்லைகளை கடந்தது அவன் புகழ்.

வஞ்சகமான மூன்று கொடிய குணங்களில் இருந்து கடக்க அவன் நாமமே சரண்

நாம் சேர்த்து வைத்த பழியையை கடத்த இராமானுஜனின் புகழ் அல்லால் வேறு ஒன்றும் இல்லம்

பொருள்:

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் = மொழியை கடந்து நிற்கும்  புகழை உடையவன்.

மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம், எந்தன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்,விழியால் மதனை
அழிக்கும் தலைவர், அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும்படி, ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே!       

என்பது அபிராமி அந்தாதி.



வஞ்ச முக்குறும்பாம் = வஞ்சகம் செய்யும் மூன்று கெட்ட  குணங்கள். கல்வி செல்வம், குல செருக்கு என்று கொள்ளலாம். அல்லது காமம், குரோதம் மாச்சர்யம் என்றும் கொள்ளலாம். அந்த மூன்று கெட்ட குணங்கள் என்ற

குழியைக் கடக்கும் = குழியில் விழுந்து விடாமல் அதை தாண்டிப் போய்


நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின் = நம் கூரத்தாழ்வானின் திருவடிகளை அடைந்த பின்

பழியைக் கடத்தும் = நாம் செய்த பழிகளை கடத்தும்.

முன்பு செய்த பழிக்குத் துணை, அவன் பன்னிரு தோள்கள் என்பார் அருணகிரி.

இராமா னுசன்புகழ் பாடியல்லா = இராமானுஜன் புகழ் பாடுவதைத் தவிர

வழியைக் கடத்தல் = வழியை கடந்து செல்லுதல். வழி என்றால் நல்ல வழி மட்டும் தான். பெரியவர்கள் கெட்ட  வழியையை சொல்லுவது இல்லை.

நெறியல்லா நெறிதன்னை நெறியாக முயல்வனே என்பார் மணிவாசகர். நெறி அல்லாத நெறி தீ நெறி.

துணையோடு அல்லது நெடு வழி போகேல் என்றாள் அவ்வைப் பாட்டி.

வைகுண்டம் எவ்வளவு தூரம்?

அவ்வளவு தூரம் துணை இல்லாமல் போகலாமா ?

இராமானுஜன் திருவடிகளே துணை.

எனக்கினி யாதும் வருத்தமன்றே.= எனக்கு இனிமேல் ஒரு வருத்தமும் இல்லை.



Tuesday, February 5, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - நான் யார் உன்னைப் புகழ


இராமானுஜர் நூற்றந்தாதி - நான் யார் உன்னைப் புகழ 

உணர்ச்சி வெள்ளம் பொங்கி வரும்போது வார்த்தைகள் பயனற்று போய்  விடும். 

எவ்வளவோ பேச வேண்டும் என்று நாள் கணக்காக திட்டமிட்டு போவான்...காதலியை பார்த்தவுடன் வார்த்தை ஒன்றும் வெளியே வராது ... ஏன் ? உணர்ச்சி மிகுதியால் வார்த்தை தடுமாறும், நாக்கு குழறும்...

கண்ணோடு கண்ணினை நோக்கின் வாய் சொற்கள் என்ன பயனும் இல என்பார் வள்ளுவர். சொற்களால் ஒரு பயனும் இல்லை. 

இராமானுஜரை புகழ்ந்து பாட வேண்டும் என்று நினைக்கிறார். என்ன பாடினாலும் திருப்தி இல்லை. 

மனதில் உள்ள அத்தனை பக்தியும், அன்பும் பாடலில் வர வில்லை. மத்தவங்க எல்லாம் எவ்வளவு அழகாகப் பாடி இருக்கிறார்கள் . .... என்    பாட்டும் இருக்கிறதே ...கத்து குட்டி எழுதின பாட்டு மாதிரி என்று தன்  பாடல்களைப் பற்றி தானே நொந்து கொள்கிறார்...

வார்த்தைகளுக்கு எட்டாத அன்பு, மரியாதை பக்தி ....

பாடல் 


இயலும் பொருளும் இசையத் தொடுத்து, ஈன் கவிகளன்பால்
மயல்கொண்டு வாழ்த்தும் இராமா னுசனை,மதியின்மையால்
பயிலும் கவிகளில் பத்தியில் லாதவென் பாவிநெஞ்சால்
முயல்கின் றனன் அவன் றன்பெருங் கீர்த்தி மொழிந்திடவே


பொருள் 

Friday, February 1, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - இறைவன் இருக்கும் இடம்


இராமானுஜர் நூற்றந்தாதி -  இறைவன் இருக்கும் இடம் 


இறைவன் எங்கே இருப்பான் ? இதற்கு மட்டும் விடை கிடைத்துவிட்டால் எவ்வளவு நல்லா இருக்கும் ?

விடை கிடைத்து விட்டது என்றே வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி யோசிப்போம்.

இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் . அவன் எங்கோ ஒரு இடத்தில் இருக்க வேண்டும்.

 வைகுண்டாமோ, கைலாசமோ, ஏதோ ஒரு இடத்தில் இருக்க வேண்டும் அல்லவா ?

சரி, அங்க தனியா உட்கார்ந்து கொண்டு அவன் என்ன செய்வான் ? போர் அடிக்காதா அவனுக்கு ?

இங்க அவனுடைய பக்தர்கள் அவனுக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இங்கு வந்தால் அவனுக்கும் சந்தோஷம் , அவன் பக்தர்களுக்கும் மகிழ்ச்சி.

இது நமக்குத் தெரிகிறது . அவனுக்கும் தெரியும் தானே ? அப்படினா அவன் எங்கு இருப்பான் ?

அடியார்கள் மத்தியில் அவன் இருப்பான் அல்லவா ?

நேரே அங்க போனால் அவனைப் பார்த்து விடலாமே ?

அவன் அங்க இருப்பானான்னு உங்களுக்கு சந்தேகம் இருக்கா ? நான் சொன்னா நம்ப மாட்டீங்க...

அபிராமி பட்டர் சொன்னா நம்புவீங்களா ?


பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்  என்பார் அபிராமி பட்டர்.

அடியார்கள் பின்னாடியே போனேன் என்கிறார் பட்டர்.



போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ... என்பார் நாவுக்கரசர்.

மலரோடு நீர் சுமந்து போவார்கள், அவர்கள் பின் நான் செல்லும் சுவடே தெரியாமல் நானும் செல்வேன் என்கிறார் நாவுக்கரசர்.

ஔவையார் சொன்னா ?


பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே


மாணிக்க வாசகர் சொன்னா ?

உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடுவு ளிருக்கும்அரு
ளைப் புரியாய் பொன் னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே. 



சுந்தர மூர்த்தி நாயனார், திருத்தொண்டர் தொகையில்,  சொல்கிறார்

தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று


வள்ளுவர் சொன்னால் கேட்பீங்களா ?

பற்றுக பற்றற்றான் பற்றினை என்று பற்றினை துறந்த துறவிகளின் , அடியார்களின் பற்றை பற்றச் சொல்கிறார் வள்ளுவர் ....


திருவரங்கத்து அமுதனார் இராமானுஜர் என்ற அடியாரை பற்றிக் கொண்டார்


அமுதனார் கூறுகிறார், இராமானுஜர் எனக்கு கிடைத்த செல்வம்.

எனக்குத் தெரியும், ஆண்டவனை விட்டு விட்டு இப்படி இந்த இராமானுஜர் பின்னாலேயே நான் சென்று அவரே கதி என்று கிடப்பதால், அவரைப் பற்றிய  இந்த அந்தாதியை கூட இந்த உலகத்தவர்கள் குறை சொல்லக் கூடும்.

அந்த குறை கூட எனக்கு புகழ் தான், சந்தோஷம் தான்...

ஏன் என்றால், குறை எல்லாம் ஆண்டவனை விடுத்து இராமானுஜரை புகழ்வதை பற்றித்தான் ...இது ஒரு குறையா ? இதை விட எனக்கு வேறு என்ன பாராட்டு இருக்க முடியும் ....உண்மையான பக்தர்களுக்கு என் பாடல் புரியும்..அவர்கள் இதில் குற்றம் காண மாட்டார்கள்....

பாடல்

எனக்குற்ற செல்வம் இராமா னுசனென்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னியசீர்
தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா
இனக்குற்றம் காணகில் லார், பத்தி ஏய்ந்த இயல்விதென்றே.

பொருள்

எனக்குற்ற செல்வம் = எனக்கு உற்ற செல்வம் = எனக்கு கிடைத்த செல்வம்

இராமா னுசனென்று = இராமானுசன் என்று

இசையகில்லா = என்னோடு இசையாத, ஒத்துப் போகாத

மனக்குற்ற மாந்தர் = மனதில் குற்றம் உள்ள மாந்தர்கள்

பழிக்கில் = பழி சொன்னால்

புகழ் = அதுவும் எனக்கு புகழ் தான்

அவன் = இராமானுசன்

மன்னியசீர் = நிலைத்த பெருமை

தனக்குற்ற அன்பர் = அவனுடைய அன்பர்கள்

அவந்திரு நாமங்கள் = அவனுடைய (இராமானுசனின்) நாமங்கள்

சாற்றுமென் = சாற்றும் என்  = சொல்லும் என்னுடைய

பா இனக்குற்றம் = பாவின் (பாடலின் ) குற்றம்

 காணகில் லார் = காண மாட்டார்கள்
 பத்தி ஏய்ந்த = பக்தி நிறைந்த, ஏறிய

இயல்விதென்றே = இயல்பு இது என்றே.

Thursday, January 31, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - நான் பெற்ற செல்வம்



இராமானுஜர் நூற்றந்தாதி -  நான் பெற்ற செல்வம் 


இறைவன் பெரியவனா அடியார்கள் பெரியவர்களா என்றால் எல்லா மதமும் அடியவர்கள் தான் என்று கூறும் 


பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்  என்பார் அபிராமி பட்டர்.

போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ... என்பார் நாவுக்கரசர். மலரோடு நீர் சுமந்து போவார்கள், அவர்கள் பின் நான் செல்லும் சுவடே தெரியாமல் நானும் செல்வேன் என்கிறார் நாவுக்கரசர். 

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே

மற்ற மதங்களை காட்டிலும் வைணவம் ஒரு படி மேலே. அடியவர்களையும் ஆசாரியர்களையும் அது மிகவும் கொண்டாடுகிறது. 

அமுதனார் கூறுகிறார், இராமானுஜர் எனக்கு கிடைத்த செல்வம். எனக்குத் தெரியும், ஆண்டவனை விட்டு விட்டு இப்படி இந்த இராமானுஜர் பின்னாலேயே நான் சென்று அவரே கதி என்று கிடப்பதால், அவரைப் பற்றிய  இந்த அந்தாதியை கூட இந்த உலகத்தவர்கள் குறை சொல்லக் கூடும். அந்த குறை கூட எனக்கு புகழ் தான், சந்தோஷம் தான்...ஏன் என்றால் குறை எல்லாம் ஆண்டவனை விடுத்து இராமானுஜரை புகழ்வதை பற்றித்தான் ...இது ஒரு குறையா ? இதை விட எனக்கு வேறு என்ன பாராட்டு இருக்க முடியும் ....உண்மையான பக்தர்களுக்கு என் பாடல் புரியும்..அவர்கள் இதில் குற்றம் காண மாட்டார்கள்....
பாடல் 

எனக்குற்ற செல்வம் இராமா னுசனென்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னியசீர்
தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா
இனக்குற்றம் காணகில் லார், பத்தி ஏய்ந்த இயல்விதென்றே.

பொருள் 

Saturday, January 26, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - எனக்கேதும் சிதைவில்லையே


இராமானுஜர் நூற்றந்தாதி - எனக்கேதும் சிதைவில்லையே 

என்னைப் புவியில் ஒருபொருளாக்கி, மருள்சுரந்த
முன்னைப்பழவினை வேரறுத்து, ஊழிமுதல்வனையே
பன்னப்பணித்த இராமானுசன் பரன்பாதமுமென்
சென்னித் தரிக்கவைத்தான், எனக்கேதும் சிதைவில்லையே,

என்னைப் புவியில் ஒருபொருளாக்கி - பொருளாக்கி என்றால் என்ன ? 

என்ன இந்த பாட்டு ரொம்ப கடினமா இருக்கே. இதற்கு பொருள் என்ன ? என்று நாம் கேட்பது உண்டு அல்லவா ? 

பொருள் தெரிந்தால் பாடல் இனிக்கும். 

இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன என்ற கேள்விக்கு விடை கண்டால், வாழ்வு இனிக்கும். அர்த்தம் இல்லாமல் எப்படி வாழ்வது ?
 
போற்றி என் வாழ் முதலாகிய பொருளே என்பார் மணிவாசகர். நம் வாழ்வின் முதல் பொருள் இறைவன். அவன் தான் உண்மை, அவன் தான் வாழ்வின் அர்த்தம். 

பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே

என்பார் அபிராமி பட்டர். 

நம்மையும் ஒரு பொருளாக்கி, நாய் சிவிகை (பல்லக்கு) ஏற்றி வைத்து என்பது திருவாசகம் 

அர்த்தம் இல்லாத என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவர் இராமானுஜர்


அருள் சுரந்த - சுரத்தல் என்றால் தானாகவே வருவது. சுவையான உணவைப் பார்த்தால் உமிழ் நீர் சுரக்கும். குழந்தை அழுவதைப் பார்த்தால், தாய்க்கு பால் சுரக்கும். நம் துன்பத்தைப் பார்த்தால் பெரியவர்களுக்கு நம் மேல் அருள் சுரக்கும். 

அவள் நமக்கு முன்சுரக்கும் இன் அருளே
என்னப் பொழியாய், மழை ஏல் ஓர் எம்பாவாய்!
 
என்பது மணிவாசகம்.நமக்கு அருள்வதில் இறைவனுக்கும் இறைவிக்கும் போட்டி. அவளுக்கு முன்னாடி ஓடி வந்து அவன் அருள்வானாம்.

எனக்கு அருள் சுரந்த இராமானுஜனே.


முன்னைப்பழவினை வேரறுத்து - நம்முடைய பழைய வினைகளின் வேரை அறுத்து. வேரை அறுத்துவிட்டால் மீண்டும் முளைக்காது. 

சிந்தை மகிழ சிவபுராணம் தன்னை  முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் என்பார் மாணிக்க வாசகர்.

வினை ஓட விடும் வடி வேல் என்பது அருணகிரி வாக்கு 

எந்தன் முன் வினைகளின் வேரை அறுத்தவன் இராமானுஜன்....

 
ஊழிமுதல்வனையே பன்னப்பணித்த இராமானுசன் = பன்னுதல் என்றால் புகழுதல், ஆராய்ந்து சொல்லுதல். அப்படி ஊழி முதல்வனாகிய திருமாலை பாடப் பணித்த இராமானுசன் 

பாதமுமென் சென்னித் தரிக்கவைத்தான் = அவனுடைய பாதங்களை என் தலையின் மேல் சூடிக் கொள்ள வைத்தான்

பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.

என்பது அபிராமி பட்டர் வாக்கு. 

நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்வேன் என்பார் பட்டர் அபிராமி அந்தாதியில் 

திருவடிகளைப் பற்றி பேசாத பக்தி இலக்கியம் ஒன்று இல்லை. 


எனக்கேதும் சிதைவில்லையே - இராமானுஜன் பாதங்களை என் தலை மேல் சூடிக்கொண்ட பின் எனக்கு ஒரு சிதைவு இல்லை. சிதைவு என்றால் உடைத்தல், பிரிதல். ஒரு பக்கம் பொருள் ஆசை, பொன்னாசை, மண்ணாசை மறு பக்கம் இறைவன், ஆன்மீகம், பக்தி, முக்தி என்று எல்லோரும் பிரிந்து கிடக்கிறோம். இதுவும் வேணும், அதுவும் வேணும். சில சமயம் இதன் பின்னால் போகிறோம், சில சமயம் அதன் பின்னால். ஒன்றில்லும் முழுமை கிடையாது. பிரிந்து, சிதைந்து கிடக்கிறோம். இராமானுஜன் பாதம் பட்டவுடன் சிதைவு ஒன்று இல்லாமல் மனம் ஒருமுகப் பட்டது.




Tuesday, January 22, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - அடியார்க்கு அடியார்


இராமானுஜர் நூற்றந்தாதி - அடியார்க்கு அடியார் 


இந்த மனம் இருக்கிறதே, இது ஒரு விசித்தரமான ஒன்று. 

நம்முடைய மனம் தான். இருந்தும் நாம் சொல்வதை கேட்பது இல்லை. 

பார்க்காதே என்றால் பார்க்கும். தொடாதே என்றால் தொடும். இருப்பதை விட்டு விட்டு இல்லாததற்குப் பறக்கும். 

மனதை அடக்க வேண்டும் என்று நினைத்தால், அது நம்மை அடக்க முயற்சி செய்கிறது. 

மனம் நம்மை நல்ல வழியிலும் இழுத்துச் செல்லும், கெட்ட வழியிலும் இழுத்துச் செல்லலாம்.

மனதை வலு கட்டாயாமாக ஒரு வழியில் செலுத்தினால், நிச்சயம் அது நம் கட்டுபாட்டை மீறி எதிர் திசையில் ஓடும். 

அதை, அதன் வழியில் போய், கொஞ்சம் கொஞ்சமாக நம் வழிக்கு கொண்டு வர வேண்டும். 
 
அமுதனார் சொல்கிறார், 

என் மனமே, உன்னை நான் அடி பணிகிறேன். கெட்ட பசங்க சவகாசத்தை விடுத்து, இராமானுஜரின் மேல் அன்பு செய்யும் நல்லவர்களின் திருவடிக்கீழ் என்னை கொண்டு சேர்த்ததற்கு 

பாடல் 

பேரியல் நெஞ்சே ! அடிபணிந்தேனுன்னைப், பேய்ப்பிறவிப்
பூரியரோடுள்ள சுற்றம் புலர்த்திப், பொருவருஞ்சீர்
ஆரியன் செம்மை இராமானுச முனிக்கன்பு செய்யும்
சீரியபேறுடையார், அடிக்கீழென்னைச் சேர்த்ததற்கே.

பொருள் 

Friday, January 18, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - அறியாமலே நிகழ்ந்தது


இராமானுஜர் நூற்றந்தாதி - அறியாமலே நிகழ்ந்தது 


வாழ்க்கையில் சில பேரை பார்த்து இருப்பீர்கள்...என்ன சொன்னாலும் அதற்க்கு எதிர் மறையான ஒன்றை சொல்லுவதில் அவர்களுக்கு ஒரு அற்ப சந்தோஷம் இருக்கும். 

நான் இன்று முதல் உணவில் கட்டுப் பாடோடு இருக்கப் போகிறேன் என்று சொன்னால், "அது எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான், மீண்டும் பழைய உணவு முறைக்கு மாறிருவ பாரு " என்று சொல்வார்கள். 

இப்படி எதைச்சொன்னாலும் ஒரு முட்டு கட்டை போடுவது அவர்கள் இயல்பு. 

கோவில், இறை வணக்கம் என்று சொன்னால் உடனே, சாமியாவாது, மண்ணாவது என்று சொல்லி விடுவார்கள். 

அவர்களை விட்டு விலகி இருப்பது நல்லது. அவர்கள் தாங்களும் செய்ய மாட்டார்கள், செய்பவர்களையும் செய்ய vidaamal, ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள். 

யாரை விலக்க வேண்டும் என்று சொல்லியாகி விட்டது. 

யாரோடு சேர வேண்டும் ?  

நாம் எதைச் செய்ய முயல்கிறோமோ, அதில் நாட்டம் உள்ளவர்கள், அதில் சாதனை புரிந்தவர்கள்...அப்படி பட்டவர்களோடு நாம் இருக்க வேண்டும். அவர்கள் சொல்லுவது ஏதாவது காதில் விழும், அவர்கள் செய்வதைப் பார்த்து நாமும் ஏதாவது கற்றுக் கொள்ளலாம்...

பாடல்  

கள்ளார்பொழில் தென்னரங்கன்  கமலப்பதங்கள் நெஞ்சில்
கொள்ளாமனிசரை நீங்கி  குறையல் பிரானடிக்கீழ்
விள்ளாதவன்ப னிராமாநுசன் மிக்க சீலமல்லால்
உள்ளாதென்னெஞ்சு  ஒன்றறியேனெனக்குற்ற பேரியல்வே.

சீர் பிரித்த பின் 

கள் ஆர் பொழில் தென் அரங்கன் கமலப் பாதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிராண்டிக் கீழ் 
விள்ளாத அன்பன் இராமானுஜன் மிக்க சீலம் அல்லால் 
உள்ளாத என் நெஞ்சு ஒன்றறியேன் எனக்கு உற்ற பெரிய இயல்பே 

பொருள் 

Tuesday, January 15, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - நாமம் நாவில் அமரும்படி


இராமானுஜர் நூற்றந்தாதி - நாமம் நாவில் அமரும்படி 


என் நாவில் ஏதேதோ தேவை இல்லாத விஷயங்கள் எல்லாம் வந்து கொண்டு இருக்கிறது. பொய், புறம் சொல்லுவது, முகஸ்துதி சொல்லுவது, பயனற்ற விஷயங்களைப் பேசுவது என்று தேவை இல்லாமால் பல விஷயங்களை பேசிக் கொண்டிருக்கிறது என் நாக்கு. 

இராமானுசரே, எனக்க ஒரே ஒரு வேண்டுகோள் தான் உண்டு. இரவும் பகலும் உன் நாமம் மட்டும் என் நாவில் தங்கி இருக்கும்படி செய்து விடும்...வேறு எதுவும் வேண்டாம்....

எங்கே நாவில் நாமம் நின்றால், ஒரு வேலை நடந்து எங்காவது போய் விடுமோ என்று அஞ்சி, நாமம் அமரும் படி வேண்டுகிறார். 

பாடல்

சொல்லின் தொகைகொண் டுனதடிப்போதுக்குத் தொண்டுசெய்யும்
நல்லன்பரேத்து முன்நாமமெல்லா மென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலு மமரும்படிநல் கறுசமயம்
வெல்லும்பரம விராமாநுச விதென் விண்ணப்பமே.

சீர் பிரித்த பின் 

சொல்லின் தொகை கொண்டு உனது அடிப் போதுக்கு தொண்டு செய்யும் 
நல்ல அன்பர் ஏத்தும் உன் நாமம் எல்லாம் எந்தன் நாவினுள்ளே 
அல்லும் பகலும் அமரும்படி நல்க அறு சமயம்
வெல்லும் பரம ராமானுஜ இது என் விண்ணபமே

பொருள்

Sunday, January 13, 2013

இராமானுஜர் அந்தாதி - பழுதான பேரின்பம்


இராமானுஜர் அந்தாதி - பழுதான பேரின்பம் 


நயந்தரு பேரின்பம் எல்லாம் பழுதென்று நண்ணினர் பால்
சயந்தரு கீர்த்தி இராமாநுசமுனி தாளிணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே!



நயம் தரும் பேரின்பம் எல்லாம் பழுது என்று - பேரின்பம் எப்படி பழுது ஆகும் ?

நிறைய வியாக்கியானங்கள் எழுதப்பட்டு உள்ளன. சிலவற்றைப் பார்ப்போம். 

1. பெரியவர்கள் தீயவை, தீமை, சிற்றின்பம் போன்றவற்றை நேரடியாகச் சொல்வது இல்லை. தீய நெறியை 

நெறி அல்லாத நெறி தன்னை 
நெறியாகக் கொள்வேனே 
சிறு நெறிகள் சேராமே 
பெறு நெறியே சேரும் வண்ணம் 
குறி ஒன்றும் இல்லாத கூத்தன் தன் கூத்தை எனக்கு 
அறியும் வண்ணம் அருளியவாறு யார் தருவார் அச்சோவே என்று பாடுகிறார் மணிவாசகர்.

தீ நெறி என்று சொல்லவில்லை....நெறி அல்லாத நெறி என்று குறிப்பிடுகிறார். 

கொடிய நஞ்சு உள்ள பாம்பை நல்ல பாம்பு என்று கூறுகிறோம் அல்லவா "? அது போல் இங்கே மங்கலமாக புலன் இன்பத்தை பேரின்பம் என்று குறிப்பிட்டார்.

2. பேரின்பம் என்றால் முக்தி, வீடு பேறு, சொர்க்கம் என்று சொல்லலாம். இறைவன் அடியாருக்கு அது எல்லாம் பழுது தான். அவர்களுக்கு மிகுந்த விருப்பம் உள்ளது அவன் அழகில் தோய்வதுதான்

இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் 
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே 

என்று சொர்கமும், முக்தியும், இந்திர லோகமும் வேண்டாம் என்று அவனை கண்டு கழிப்பதிலேயே அவர்களுக்கு ஆனந்தம் கிடைத்து விடுகிறது. 

3. பேரின்பம் அடைய வேதங்களும் சாஸ்திரங்களும் ஞான, கர்ம, பக்தி மார்கங்களை காட்டுகின்றன. வைணவ அடியார்கள் அதை எல்லாம் பழுது என்று விட்டுட்டு ஆச்சாரியன் திருவடிகளே சரணம் என்று இருந்து விடுவார்கள். 

நயந்தரு பேரின்பம் எல்லாம் பழுதென்று நண்ணினர் பால்
சயந்தரு கீர்த்தி இராமாநுசமுனி தாளிணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே!

ஆச்சாரியனின் நாமங்களை சொல்வதும், அவன் திருவடிகளை பற்றிக் கொள்வதும் தவிர அவர்களுக்கு பெரிய இன்பம் ஒன்றும் இல்லை....

Saturday, January 12, 2013

இராமானுஜர் நூற்றந்தாதி - மனமே ஒத்துக் கொள்


இராமானுஜர் நூற்றந்தாதி - மனமே ஒத்துக் கொள் 

நல்லது என்று தெரிந்தாலும் இந்த மனம் அதை விட்டு விட்டு மற்றவற்றின் பின் செல்கிறது. சொன்னால் எங்கே கேட்கிறது. கேட்டாலும் ஒரு கணம் கேட்க்கும் அடுத்த கணம் குரங்கு போல் வேறொன்றுக்குத்  தாவி விடும். எனவே, ஏ மனமே, நான் சொல்வதை கேளு, திருவரங்கத்து அமூதனார் பாடிய இராமானுஜர் நூற்றந்தாதியை ஒழுங்காகப் படி என்று வேண்டுகிறார் வேதப் பிரகாசர். 


பாடல்  

நயந்தரு பேரின்பம் எல்லாம் பழுதென்று நண்ணினர் பால்
சயந்தரு கீர்த்தி இராமாநுசமுனி தாளிணை மேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே!

பொருள்..... 

இராமனுஜ நூற்றந்தாதி - அவன் அருளாலே அவன் தாள் வணங்கி


இராமனுஜ நூற்றந்தாதி - அவன் அருளாலே அவன் தாள் வணங்கி


பெண்களுக்கு பிறந்த வீட்டை வருவது கடினமான செயல். என்னதான் புகுந்த வீட்டுக்குப் போக ஆசை இருந்தாலும், பிறந்த வீட்டை சந்தோஷமாக விட்டு விட்டு போக மாட்டார்கள். ஆனால் திருமகள் கதை வேறு. அவள் தன் பிறந்த இடமான தாமரை மலரை விட்டு, திருமாலின் மார்பில் வந்து வாழ சந்தோஷமாக வந்தாளாம். நிறைய பெண்கள் கணவன் வீட்டில் இருப்பார்கள். மனம் எல்லாம் பிறந்த வீட்டிலேயே இருக்கும். புகுந்த வீட்டில் பொருந்தாது. திருமகள் வந்து பொருந்திய மார்பன் திருமால்.

புகழ் கிடைப்பதற்கு அரிதான ஒன்று. கிடைப்பது அரிது. கிடைத்த பின் அதை தக்க வைத்துக் கொள்வது அதனினும் அரிது. அப்படிப்பட்ட புகழ் நம்மாழ்வார்க்கும் அவர் பாடல்களிலும் மலிந்து கிடந்தது. அவ்வளவு புகழ்.

அப்படி பட்ட நம்மாழ்வாரின் பாதம் பணிந்து  வாழ்தவர் பல கலைகளை கற்று தேர்ந்த இராமானுஜர்.

அப்படிப் பட்ட இராமனுஜரின் பாதரா விந்தங்களில் நாம் வாழ அவன் நாமங்களையே சொல்லுவோம். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகர் சொன்னது போல, அவன் நாமங்களைக் ஜெபித்து, அவன் திருவடிகளை அடைவோம்.

 
பாடல்



பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ்மலிந்த
பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந் தவன் பல்கலையோர்
தாம்மன்ன வந்த இராம னுசன்சர ணாரவிந்தம்
நாம்மன்னி வாழநெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.



பொருள்



பூமன்னு = (தாமரை) பூவில் நிரந்தரமாக வசிக்கும்

மாது = திருமகள்

பொருந்திய மார்பன் = எல்லாவிதத்திலும் பொருந்திய மார்பன் (made for each other)

புகழ்மலிந்த = புகழ் நிறைந்த

பாமன்னு = நீண்டு நிலைக்கும் பாசுரங்களை தந்த

மாற னடிபணிந் து = மாறன் (நம்மாழ்வார்) அடி பணிந்து

உய்ந்தவன் = வாழ்ந்து வந்தவன்

பல்கலையோர் = பல கலைகளும்

தாம்மன்ன வந்த = அவைகளே அவனிடம் வந்து நிலை பெற்று இருக்க

ராமாநுசன் = இராமானுஜன்

சரணாரவிந்தம் = பாதார விந்தங்களை

நாம்மன்னிவாழ = நாம் அடைந்து வாழ

நெஞ்சே = என் மனமே

சொல்லுவோமவன் நாமங்களே = சொல்லுவோம் அவன் நாமங்களே

பெயரில் என்ன இருக்கிறது ? பெயரில் எல்லாம் இருக்கிறது. தனிமையில் இருக்கும் போது நீங்கள் நேசிப்பவரின் பெயரை மெல்ல உச்சரித்துப் பாருங்கள்...பெயர் இனிக்கும்.

இராமா உன் நாமம் எவ்வளவு ருசியாக இருக்கிறது என்கிறார் தியாகராஜர்

(
ஓ ராம நீநாம ஏமி ருசிரா
ஓ ராம நீநாம ஏமி ருசிரா
ஸ்ரீராம நீநாம எந்த ருசிரா || )


முதலில் அவன் பெயரைக் கேட்டாள், பின் அவன் குணங்களை கேட்டாள், பின் அவன் இருக்கும் ஊரைக் கேட்டாள்..பின் அவன் மேல் பைத்தியமாய் ஆனாள் என்று உருகுகிறார் நாவுக்கரசர்....

முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.

Thursday, January 10, 2013

இராமனுஜ நூற்றந்தாதி - என்ன செய்தால் மரண பயம் வராது


இராமனுஜ நூற்றந்தாதி - தனியன் 1 

என்ன செய்தால் மரண பயம் வராது ?


தனியன் என்பது வைணவ இலக்கியங்களில் ஒரு ஆழ்வாரையோ அல்லது ஒரு சமயப் பெரியவரை பற்றியோ கூறும் முன்னர் அவரைப் பற்றி போற்றி துதிக்கும் பாடல்கள். 

தனியன் என்றே ஏன் பேர் வந்தது ?

தனித்து நிற்பதால் தனியன் என்று வந்து இருக்கலாம். 

இறைவனைப் பாடாமல் தனி மனிதனைப் பாடியதால் அதற்க்கு தனியன் என்று பெயர் வந்து இருக்கலாம். 

இராமனுஜ நூற்றந்தாதியில் மூன்று தனியன்கள் உள்ளன. 

முதல் தனியனை இயற்றியது வேதப் பிரான் பட்டர் என்பவர்.  

நல்லா படிச்சிருக்கேன், நான் ஏன் fail  ஆகப் போகிறேன் ? நல்லா வேலை செஞ்சிருக்கேன், எனக்கு ஏன் இந்த வருடம் பதவி உயர்வு கிடைக்காது ? என்று பலர் சொல்லி கேட்டிருக்கிறோம். 

என்ன செய்தால் மரண பயம் வராது ? 

மரண பயம் இல்லாதவர் யார் ? மரணம் தவிர்க்க முடியாது தான் என்றாலும், தொடர்ந்து வரும் பாவ புண்ணியம் இவற்றின் பலன்களை எப்படி தவிர்ப்பது ?

வேதப் பிரான் கூறுகிறார் 

பாடல்