Monday, December 21, 2015

நான்மணிக்கடிகை - எது, எதற்குச் சமம் ?

நான்மணிக்கடிகை - எது, எதற்குச் சமம் ?



திரு ஒக்கும், தீது இல் ஒழுக்கம்; பெரிய
அறன் ஒக்கும், ஆற்றின் ஒழுகல்; பிறனைக்
கொலை ஒக்கும், கொண்டு கண்மாறல்; புலை ஒக்கும்,
போற்றாதார் முன்னர்ச் செலவு. 

செல்வம் வேண்டுமா ?

செல்வம் வேண்டாம் என்று யாரவது கூறுவார்களா ?

அந்த செல்வத்தைத் தேடித்தானே இத்தனை அலைச்சல்.

எப்படி அந்த செல்வத்தை அடைவது ?

படிக்க வேண்டுமா ? அதிர்ஷ்டம் வேண்டுமா ? பெரிய ஆட்களின் நட்பு வேண்டுமா ? எது இருந்தால் செல்வத்தை அடையலாம் ?

இது ஒண்ணும் வேண்டாம்.

குற்றம் இல்லாத ஒழுக்கம் இருந்தாலே செல்வம் தானாக வந்து சேரும் என்கிறது நான்மணிக்கடிகை.

அந்த ஒழுக்கமே செல்வத்திற்கு ஒப்பானது.

எப்படி என்று அறிவதற்கு முன்னால், ஒழுக்கம் என்றால் என்ன என்று அறிந்து கொள்வோம்.

ஒழுக்கம் என்றால் ஒழுகுதல்.

வீட்டின் கூரையில் ஒரு சிறு ஓட்டை இருந்தால் அதில் இருந்து நீர் ஒழுகுவதைப் பார்த்து இருப்பீர்கள்.

வீட்டில் குளியல் அறையில் உள்ள குழாய் சரியாக மூடாவிட்டால் நீர் ஒழுக்கிக் கொண்டே இருக்கும்.

அதே போல் நீங்கள் எதை விடாமல் செய்து கொண்டு இருக்கிரீர்களோ அது உங்களது ஒழுக்கம்.

காலையில் எழுந்தவுடன் காபி தினமும் காப்பி குடிக்கிறீர்களா ? அது உங்கள் ஒழுக்கம்.

தினமும் ஒரு மணி நேரம் நடை பயிற்சி செய்கிறீர்களா ? அதுவும் உங்கள் ஒழுக்கம்.

சரி, நான் தினமும் "தண்ணி" அடிக்கிறேன். அதுவும் ஒழுக்கமா ?

நான் தினமும் திருடுகிறேன் ? அதுவும் ஒழுக்கமா ?

மீண்டும் நம் உதாரணத்துக்குப் போவோம்.

நீர் எங்கிருந்து எங்கே ஒழுகுகிறது ? உயர்ந்த இடத்தில் இருந்து தாழ்ந்த இடம் இடம் நோக்கி ஒழுகுகிறது. தாழ்ந்த இடத்தில் இருந்து உயர்ந்த இடம் நோக்கிப் போவது இல்லை.

அதுபோல, சான்றோர், உயர்ந்தோர் செய்த செயல்களை நாம் திரும்ப திரும்பச் செய்தால் அது ஒழுக்கம்.

அந்த ஒழுக்கம் செல்வத்திற்கு இணையானது.

ஒரு மாணவன் தினமும் 2 மணிநேரம் படிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்...அவன் கட்டாயம் நல்ல மதிப்பெண்கள் பெறுவான், நல்ல கல்லூரியில் அவனுக்கு இடம் கிடைக்கும், நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும், நிறைய சம்பளம் கிடைக்கும். செல்வம் கிடைக்கும். அதற்க்கு காரணம் என்ன - ஒழுக்கம்.

ஒருவன் தினமும் பாடல் பயிற்சி செய்கிறான், ஒரு விளயாட்டில் பயிற்சி செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம் ...செய்து கொண்டே இருந்தால் அவன் அந்தத் துறையில் சிறந்து விளங்குவான்.

அப்படி சிறந்து விளங்கினால், அவனுக்கு செல்வமும், பேரும் புகழும் கிடைக்கும் அல்லவா.

எனவே தான்,

திரு ஒக்கும் , தீது இல் ஒழுக்கம்

என்கிறது நான் மணிக்கடிகை.

நான் தினமும் தண்ணி அடிக்கிறேன், புகை பிடிக்கிறேன் என்றால் அதுவும் ஒழுக்கம் தான்.   ஆனால் அது தீய ஒழுக்கம். அது செல்வத்தைத் தராது.

இன்னும் சிந்திப்போம்





Saturday, December 19, 2015

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம் - பகுதி 3

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம் - பகுதி 3



அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.

தெரிந்த குறள் தான். இதில் என்ன புதிதாக இருக்கப் போகிறது ?

அ என்ற எழுத்து எல்லா எழுத்துகளுக்கும் முதலாவது எப்படியோ அப்படியே இந்த உலகுக்கு எல்லாம் இறைவன் முதல்.

இந்த குறள் யாருக்குச் சொல்லப் பட்டது ? ஏன் சொல்லப் பட்டது என்று சிந்திப்போம்.

உலகில் எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. கலை, கவிதை, நாடகம், அறிவியல், மொழி, சரித்திரம் என்று எத்தனையோ புத்தங்கள் இருக்கின்றன.

அத்தனை புத்தகங்களும் ஏதோ ஒரு வழியில் பகுக்கப் பட்டிருக்கிறது. பலப் பல அத்யாயங்களாகப் பிரித்து எழுதப் பட்டிருக்கும்.

ஒவ்வொரு  அத்யாயதிலும் பல  பத்திகளாகப் (para ) பிரிக்கப் பட்டிருக்கும்.

ஒவ்வொரு பத்தியும் பல வாக்கியங்களை கொண்டிருக்கும்.

ஒவ்வொரு வாக்கியமும் பல எழுத்துகளை கொண்டிருக்கும்.

அத்தனை எழுத்துக்கும் மூல எழத்து 'அ' என்ற எழுத்து.

அ என்ற எழுத்து வாயைத் திறந்தாலே வந்து விடும்.அதை நீட்டினால் ஆ. உதட்டை குவித்தால் உ. குவிந்த உதட்டை இன்னும் சுருக்கினால் ஊ என்று அனைத்து எழுத்துகளும் அதில் இருந்து பிறக்கிறது.

எனவே, ஒரு புத்தகம் என்றால் அதைப் பகுத்துக் கொண்டே போனால் அ வில் வந்து நிற்கும்.

அதே போல, இந்த உலகை பகுத்துக் கொண்டே வந்தால், அது இறைவனில் வந்து நிற்கும்.

அ என்ற எழுத்துக்கு முன் எதுவும் இல்லை. அது போல இறைவனுக்கு முன் எதுவும் இல்லை.

அ என்ற எழுத்து தானாகவும் இயங்கும், மற்ற எழுத்துகளை இயங்க வைக்கும், மற்ற எழுத்துகளோடு சேர்ந்தும் இயங்கும்.

அது போல, இறைவனும் தானாகவே இயங்குவான், மற்ற உயிர்களை இயக்குவான், அவற்றுள் இருந்தும் இயங்குவான்.

சரி, இந்த எழுத்து, அதன் பிறப்பு, அதன் சேர்க்கை, அதன் வடிவம் எல்லாம் மொழி அறிவு உள்ளவனுக்குப் புரியும். படிப்பு அறிவு இல்லாதவனுக்கு அ வும் தெரியாது, உ வும் தெரியாது.

அவனுக்கு எப்படி கடவுளை உணர்த்துவது ?

வள்ளுவர், படித்தவனுக்கு மட்டுமே குறளை எழுதினாரா ? படிக்காதவன் குறளை அறிந்து அதன் படி நடக்க வேண்டாமா ? அப்படி என்றால் படித்தவன் , படிக்காதவன் எல்லோருக்கும் புரியும்படி வேறு ஏதாவது உதாரணத்தை எடுத்திருக்கலாமே வள்ளுவர் . ஏன் எடுக்கவில்லை ?

படிக்காதவன் இறைவனை அறிந்து கொள்ள முடியாது என்று நினைத்து விட்டாரா ?

சிந்திப்போம்.

================= பாகம் 2 ===============================================

கடவுள் வாழ்த்தில் ஆரம்பிக்கிறார் வள்ளுவர்.


அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.

இதில் எங்கே வாழ்த்து இருக்கிறது ? வாழ்க என்று சொல்லவே இல்லையே ?

நமச்சிவாய வாழ்க என்று மணிவாசகர் ஆரம்பித்தார் 
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் என்றார் தெய்வப் புலவர் சேக்கிழார் 
தலைவர் அன்னவர்க்கே  சரண் நாங்களே என்றார் கம்பர் 

வணங்குதலும் இல்லை, வாழ்த்தும் இல்லை ...வள்ளுவரில். 

பின் எப்படி இது ஒரு கடவுள் வாழ்த்து ஆகும் ?

கடவுளை வாழ்த்துவதற்கு முன், கடவுள் இருக்கிறார் என்பதை உறுதிப் படுத்த நினைக்கிறார் வள்ளுவர். 

கடவுள் என்று ஒன்று இருந்தால் அல்லவா அதை வாழ்த்த முடியும். 

கடவுள் இருக்கிறார் என்பதற்கு என்ன நிரூபணம் ? அதை உறுதிப் படுத்தி விட்டு, பின் அந்த கடவுளை வாழ்த்தலாம்.

எல்லோரும் கடவுள் இருக்கிறார் என்று மனதில் கொண்டு, நம்பிக்கையின் அடிப்படையில்  கடவுள் வாழ்தை சொன்னார்கள். 

வள்ளுவர் அப்படி செய்யவில்லை. அப்படி செய்திருந்தால், "சரி தான், இது ஏதோ வள்ளுவரின்   நம்பிக்கையின் பாற்பட்ட ஒரு புத்தகம் " என்று மக்கள் இதை ஒதுக்கி விடக் கூடும். 

எனவே, வள்ளுவர் கடவுள் ஒன்று உண்டு என்பதற்கு ஒரு வாதத்தை முன் வைக்கிறார். 

நாம் நாளும் பேசும், எழுதும் மொழிக்கு ஒரு எழுத்து முதலில் இருப்பதை போல , நாம் வாழும் இந்த உலகுக்கும் ஏதோ ஒன்று முதலாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். 

அவர் அகர முதல எழுத்து என்றார். இன்னொரு மொழிக்காரன் உகர முதல என்று சொல்லலாம். மற்றொருவன் எகர முதல என்று சொல்லலாம். எந்த எழுத்து  ஆதி எழுத்து என்பதல்ல வாதம். ஏதோ ஒரு எழுத்து அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பதைப் போல , உலகுக்கு இறைவன் ஆதாரமாக இருக்கிறான் என்கிறான். 

மொழியைப் பகுத்துக் கொண்டே போனால் ஏதோ ஒரு புள்ளியில் வந்து நிற்கும். 

அதைப் போல உலகை பகுத்துக் கொண்டே வந்தால் ஏதோ ஒரு புள்ளியில் வந்து நிற்கும். அந்த புள்ளி இறைவன்.

"ஆதி பகவன்  முதற்றே உலகு" பகவன் என்றால் பகுப்பவன். பிரிப்பவன். அவனில் இருந்து எல்லாம் பிறந்து பிரிந்து பிரிந்து இந்த நிலைக்கு வந்தது. 

மொழியைப் பிரித்தால் அகரத்தில் வந்து நிற்பதைப் போல, உலகைப் பிரித்தால் இறையில் வந்து நிற்கும். 

பிரித்துக் கொண்டிருக்கிறார்கள், இன்றும், 

சரி, இந்த மொழி, சொல், எழுத்து எல்லாம் படித்தவனுக்கு புரிந்த உதாரணங்கள். 

ஏன் வள்ளுவர் படித்தவனுக்கு புரிந்த மாதிரி ஒரு உதாரணத்தை சொல்கிறார்.  படிக்காத  பாமரன் இதை எப்படி புரிந்து கொள்வான் ? என்ற பழைய கேள்விக்கு மீண்டும் போவோம். 

....தொடரும்.

படிக்க படிக்க சந்தேகங்களும் கூடிக் கொண்டே போகிறதே தவிர குறைகிற மாதிரி தெரியவில்லை.

ஒரு கேள்விக்கு விடை கிடைத்தால், அந்த விடையில் இருந்து ஆயிரம் புது கேள்விகள்  பிறக்கின்றன.

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

என்பார் வள்ளுவர். அதாவது, படிக்கப் படிக்க , இன்னும் நமக்கு என்னவெல்லாம் தெரியவில்லை என்ற வியப்பு மேலிடுவது போல, இந்த பெண்ணிடம் பழகும் போது ஒவ்வொரு முறையும் ஏதோ புதிதாக வந்து கொண்டே இருக்கிறது.

ஒரு உதாரணம் பார்ப்போம்.

என் முன்னால் ஒரு பேனா இருக்கிறது.

இது என்ன என்ற கேள்வி எழும் போது --இதன் பெயர் பேனா. இது எழுதுவதற்கு உபயோகமாகும் ஒரு பொருள்  என்ற பதில் வருகிறது.

அந்த பதிலில் இருந்து - இது எதனால் செய்யப் பட்டது, யார் செய்தார்கள், என்ன விலை, எங்கு செய்தார்கள், இதைப் போல வேறு பேனாக்களும் இருக்கிறதா, அவை என்ன, இதில் எழுது பொருள் (ink ) என்ன நிறம், வேறு என்ன என்ன நிறம் எல்லாம் இருக்கிறது, இதை எப்படி செய்கிறார்கள் என்று எத்தனை கேள்வி வருகிறது.

கல்வி ஒரு கடல்.

சொல்லப் போனால் கல்வியின் ஒவ்வொரு பகுதியும் ஒரு கடல் போன்றது. அதனால் தான் மணிவாசகர்

"கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்" என்கிறார்.

கல்வியில் இருந்து தப்பிப் பிழைத்தேன் என்கிறார்.

படிக்காதவனுக்கு சந்தேகங்கள் குறைவு. நம்பிக்கை அதிகம்.

சந்தேகம் எல்லாம் படித்தவனுக்குத் தான் எனவே தான், படித்தவனுக்கு புரிய வேண்டும் என்பதற்காக

அகர முதல எழுத்து எல்லாம்

என்று வள்ளுவர் ஆரம்பிக்கிறார்.

எழுத்து அறிவு உள்ளவனுக்குத் தெரியும் மொழியின் அடிப்படை ஒரு எழுத்து என்று. அவனுக்கு தெரிந்த உதாரணத்தைக் கொண்டு அறியாத கடவுளை காட்டுகிறார் வள்ளுவர்.

படித்தவன் அதோடு நிற்க மாட்டான்....

சரி, கடவுள் என்று ஒருவர் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம், அவரை எதற்கு வணங்க  வேண்டும் என்று கேள்வி கேட்பான்.

அதற்கு அடுத்து விடை சொல்கிறார் வள்ளுவர்....









Friday, December 18, 2015

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம் - பகுதி 2

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம் - பகுதி 2



அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.

தெரிந்த குறள் தான். இதில் என்ன புதிதாக இருக்கப் போகிறது ?

அ என்ற எழுத்து எல்லா எழுத்துகளுக்கும் முதலாவது எப்படியோ அப்படியே இந்த உலகுக்கு எல்லாம் இறைவன் முதல்.

இந்த குறள் யாருக்குச் சொல்லப் பட்டது ? ஏன் சொல்லப் பட்டது என்று சிந்திப்போம்.

உலகில் எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. கலை, கவிதை, நாடகம், அறிவியல், மொழி, சரித்திரம் என்று எத்தனையோ புத்தங்கள் இருக்கின்றன.

அத்தனை புத்தகங்களும் ஏதோ ஒரு வழியில் பகுக்கப் பட்டிருக்கிறது. பலப் பல அத்யாயங்களாகப் பிரித்து எழுதப் பட்டிருக்கும்.

ஒவ்வொரு  அத்யாயதிலும் பல  பத்திகளாகப் (para ) பிரிக்கப் பட்டிருக்கும்.

ஒவ்வொரு பத்தியும் பல வாக்கியங்களை கொண்டிருக்கும்.

ஒவ்வொரு வாக்கியமும் பல எழுத்துகளை கொண்டிருக்கும்.

அத்தனை எழுத்துக்கும் மூல எழத்து 'அ' என்ற எழுத்து.

அ என்ற எழுத்து வாயைத் திறந்தாலே வந்து விடும்.அதை நீட்டினால் ஆ. உதட்டை குவித்தால் உ. குவிந்த உதட்டை இன்னும் சுருக்கினால் ஊ என்று அனைத்து எழுத்துகளும் அதில் இருந்து பிறக்கிறது.

எனவே, ஒரு புத்தகம் என்றால் அதைப் பகுத்துக் கொண்டே போனால் அ வில் வந்து நிற்கும்.

அதே போல, இந்த உலகை பகுத்துக் கொண்டே வந்தால், அது இறைவனில் வந்து நிற்கும்.

அ என்ற எழுத்துக்கு முன் எதுவும் இல்லை. அது போல இறைவனுக்கு முன் எதுவும் இல்லை.

அ என்ற எழுத்து தானாகவும் இயங்கும், மற்ற எழுத்துகளை இயங்க வைக்கும், மற்ற எழுத்துகளோடு சேர்ந்தும் இயங்கும்.

அது போல, இறைவனும் தானாகவே இயங்குவான், மற்ற உயிர்களை இயக்குவான், அவற்றுள் இருந்தும் இயங்குவான்.

சரி, இந்த எழுத்து, அதன் பிறப்பு, அதன் சேர்க்கை, அதன் வடிவம் எல்லாம் மொழி அறிவு உள்ளவனுக்குப் புரியும். படிப்பு அறிவு இல்லாதவனுக்கு அ வும் தெரியாது, உ வும் தெரியாது.

அவனுக்கு எப்படி கடவுளை உணர்த்துவது ?

வள்ளுவர், படித்தவனுக்கு மட்டுமே குறளை எழுதினாரா ? படிக்காதவன் குறளை அறிந்து அதன் படி நடக்க வேண்டாமா ? அப்படி என்றால் படித்தவன் , படிக்காதவன் எல்லோருக்கும் புரியும்படி வேறு ஏதாவது உதாரணத்தை எடுத்திருக்கலாமே வள்ளுவர் . ஏன் எடுக்கவில்லை ?

படிக்காதவன் இறைவனை அறிந்து கொள்ள முடியாது என்று நினைத்து விட்டாரா ?

சிந்திப்போம்.

================= பாகம் 2 ===============================================

கடவுள் வாழ்த்தில் ஆரம்பிக்கிறார் வள்ளுவர்.


அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.

இதில் எங்கே வாழ்த்து இருக்கிறது ? வாழ்க என்று சொல்லவே இல்லையே ?

நமச்சிவாய வாழ்க என்று மணிவாசகர் ஆரம்பித்தார் 
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் என்றார் தெய்வப் புலவர் சேக்கிழார் 
தலைவர் அன்னவர்க்கே  சரண் நாங்களே என்றார் கம்பர் 

வணங்குதலும் இல்லை, வாழ்த்தும் இல்லை ...வள்ளுவரில். 

பின் எப்படி இது ஒரு கடவுள் வாழ்த்து ஆகும் ?

கடவுளை வாழ்த்துவதற்கு முன், கடவுள் இருக்கிறார் என்பதை உறுதிப் படுத்த நினைக்கிறார் வள்ளுவர். 

கடவுள் என்று ஒன்று இருந்தால் அல்லவா அதை வாழ்த்த முடியும். 

கடவுள் இருக்கிறார் என்பதற்கு என்ன நிரூபணம் ? அதை உறுதிப் படுத்தி விட்டு, பின் அந்த கடவுளை வாழ்த்தலாம்.

எல்லோரும் கடவுள் இருக்கிறார் என்று மனதில் கொண்டு, நம்பிக்கையின் அடிப்படையில்  கடவுள் வாழ்தை சொன்னார்கள். 

வள்ளுவர் அப்படி செய்யவில்லை. அப்படி செய்திருந்தால், "சரி தான், இது ஏதோ வள்ளுவரின்   நம்பிக்கையின் பாற்பட்ட ஒரு புத்தகம் " என்று மக்கள் இதை ஒதுக்கி விடக் கூடும். 

எனவே, வள்ளுவர் கடவுள் ஒன்று உண்டு என்பதற்கு ஒரு வாதத்தை முன் வைக்கிறார். 

நாம் நாளும் பேசும், எழுதும் மொழிக்கு ஒரு எழுத்து முதலில் இருப்பதை போல , நாம் வாழும் இந்த உலகுக்கும் ஏதோ ஒன்று முதலாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். 

அவர் அகர முதல எழுத்து என்றார். இன்னொரு மொழிக்காரன் உகர முதல என்று சொல்லலாம். மற்றொருவன் எகர முதல என்று சொல்லலாம். எந்த எழுத்து  ஆதி எழுத்து என்பதல்ல வாதம். ஏதோ ஒரு எழுத்து அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பதைப் போல , உலகுக்கு இறைவன் ஆதாரமாக இருக்கிறான் என்கிறான். 

மொழியைப் பகுத்துக் கொண்டே போனால் ஏதோ ஒரு புள்ளியில் வந்து நிற்கும். 

அதைப் போல உலகை பகுத்துக் கொண்டே வந்தால் ஏதோ ஒரு புள்ளியில் வந்து நிற்கும். அந்த புள்ளி இறைவன்.

"ஆதி பகவன்  முதற்றே உலகு" பகவன் என்றால் பகுப்பவன். பிரிப்பவன். அவனில் இருந்து எல்லாம் பிறந்து பிரிந்து பிரிந்து இந்த நிலைக்கு வந்தது. 

மொழியைப் பிரித்தால் அகரத்தில் வந்து நிற்பதைப் போல, உலகைப் பிரித்தால் இறையில் வந்து நிற்கும். 

பிரித்துக் கொண்டிருக்கிறார்கள், இன்றும், 

சரி, இந்த மொழி, சொல், எழுத்து எல்லாம் படித்தவனுக்கு புரிந்த உதாரணங்கள். 

ஏன் வள்ளுவர் படித்தவனுக்கு புரிந்த மாதிரி ஒரு உதாரணத்தை சொல்கிறார்.  படிக்காத  பாமரன் இதை எப்படி புரிந்து கொள்வான் ? என்ற பழைய கேள்விக்கு மீண்டும் போவோம். 

....தொடரும்.







Friday, December 11, 2015

தேவாரம் - உள்ளம் கவர் கள்வன் - முன்னால் இருந்தும் தெரியவில்லை - பாகம் 1

தேவாரம் - உள்ளம் கவர் கள்வன் - முன்னால் இருந்தும் தெரியவில்லை  - பாகம் 1




தோடுடைய செவியன் விடையேறியோர் தூ வெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாட் பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பி மா புரம் மேவிய பெம்மானிவ னன்றே.

மிக பிரபலமான தேவாரப் பாட்டு.

எல்லோரும் அறிந்தது.

ஞானசம்பந்தர் சிறு குழந்தையாக இருக்கும் போது , அவருடைய தந்தையார் அவரை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவிலுக்குள் செல்லுமுன் அங்குள்ள திருக்குளத்தில் நீராடச் சென்றார். ஞான சம்பந்தரை குளக்  கரையில், அமரச் செய்துவிட்டு, அவர் மட்டும் நீராடச் சென்றார்.

தந்தையார் நீரில் மூழ்கியவுடன், தந்தையைக் காணவில்லையே என்று குழந்தையான ஞான சம்பந்தர் அழுதார். அவரின் அழு குரல் கேட்டு பார்வதியும் சிவன் வந்தனர் . பார்வதி தன் ஞானப் பாலை அவருக்குத் தந்தார்.

குளத்தில் இருந்து நீராடி வந்த ஞானசம்பந்தரின் தந்தை , குழந்தையின் வாயில் பால் வடிவதைக் கண்டு, யார் உனக்கு பால் தந்தது என்று கேட்டார்.

குழந்தை மேலே கண்ட பாடலைப் பாடியது என்பது புராணம் தரும் செய்தி.

இந்தத் தேவாரம் காட்டும் சில ஆழ்ந்த கருத்துகளை பார்ப்போம்.

உனக்கு யார் பால் தந்தது என்று தந்தையார் கேட்ட போது , குழந்தை கூறியது  "இவன் அன்றே" என்று.

இதோ இருக்கிறானே இவன் தான் என்று.

அவன் அன்றே என்று சொல்லி இருந்தால் வேறு எங்கோ தூரத்தில் இருக்கிறான் என்று  கொள்ளலாம். இவன் அன்றே என்பது அண்மைச் சுட்டு. அருகில்  உள்ள ஒன்றை சுட்டிக் காட்டுவது.

பக்கத்தில் இருக்கிறான்.

ஞான சம்பந்தருக்குத் தெரிகிறது. அவருடைய தந்தையாருக்குத் தெரியவில்லை.

இப்படித்தான், உண்மை மிக மிக அருகில் இருந்தும், நாம் அதை அறியாமலேயே  எங்கே எங்கே என்று ஊரெல்லாம் தேடிக் கொண்டிருப்போம்.

உண்மை, உங்களுக்கு மிக மிக அருகில் இருக்கிறது. பார்க்கும் கண் வேண்டும்.

ஞானசம்பந்தரின் தந்தை மட்டும் அல்ல, அருகில் இருந்த யாரும் இறைவனை  காணவில்லை. கண்டதாக குறிப்பு ஒன்றும் இல்லை.

அவர்கள் எல்லோரும் வேறு எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள். எதைத் தேடுகிறோமோ அதைத்தானே கண்டடைவோம் ?

தேடுங்கள் , கிடைக்கும் என்றார் இயேசு.

ஆம். தேடியது கிடைக்கும்.

எதைத் தேடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் தொடரும்.





Thursday, December 10, 2015

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம்

திருக்குறள் - அகர முதல எழுத்து எல்லாம் 



அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.

தெரிந்த குறள் தான். இதில் என்ன புதிதாக இருக்கப் போகிறது ?

அ என்ற எழுத்து எல்லா எழுத்துகளுக்கும் முதலாவது எப்படியோ அப்படியே இந்த உலகுக்கு எல்லாம் இறைவன் முதல்.

இந்த குறள் யாருக்குச் சொல்லப் பட்டது ? ஏன் சொல்லப் பட்டது என்று சிந்திப்போம்.

உலகில் எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. கலை, கவிதை, நாடகம், அறிவியல், மொழி, சரித்திரம் என்று எத்தனையோ புத்தங்கள் இருக்கின்றன.

அத்தனை புத்தகங்களும் ஏதோ ஒரு வழியில் பகுக்கப் பட்டிருக்கிறது. பலப் பல அத்யாயங்களாகப் பிரித்து எழுதப் பட்டிருக்கும்.

ஒவ்வொரு  அத்யாயதிலும் பல  பத்திகளாகப் (para ) பிரிக்கப் பட்டிருக்கும்.

ஒவ்வொரு பத்தியும் பல வாக்கியங்களை கொண்டிருக்கும்.

ஒவ்வொரு வாக்கியமும் பல எழுத்துகளை கொண்டிருக்கும்.

அத்தனை எழுத்துக்கும் மூல எழத்து 'அ' என்ற எழுத்து.

அ என்ற எழுத்து வாயைத் திறந்தாலே வந்து விடும்.அதை நீட்டினால் ஆ. உதட்டை குவித்தால் உ. குவிந்த உதட்டை இன்னும் சுருக்கினால் ஊ என்று அனைத்து எழுத்துகளும் அதில் இருந்து பிறக்கிறது.

எனவே, ஒரு புத்தகம் என்றால் அதைப் பகுத்துக் கொண்டே போனால் அ வில் வந்து நிற்கும்.

அதே போல, இந்த உலகை பகுத்துக் கொண்டே வந்தால், அது இறைவனில் வந்து நிற்கும்.

அ என்ற எழுத்துக்கு முன் எதுவும் இல்லை. அது போல இறைவனுக்கு முன் எதுவும் இல்லை.

அ என்ற எழுத்து தானாகவும் இயங்கும், மற்ற எழுத்துகளை இயங்க வைக்கும், மற்ற எழுத்துகளோடு சேர்ந்தும் இயங்கும்.

அது போல, இறைவனும் தானாகவே இயங்குவான், மற்ற உயிர்களை இயக்குவான், அவற்றுள் இருந்தும் இயங்குவான்.

சரி, இந்த எழுத்து, அதன் பிறப்பு, அதன் சேர்க்கை, அதன் வடிவம் எல்லாம் மொழி அறிவு உள்ளவனுக்குப் புரியும். படிப்பு அறிவு இல்லாதவனுக்கு அ வும் தெரியாது, உ வும் தெரியாது.

அவனுக்கு எப்படி கடவுளை உணர்த்துவது ?

வள்ளுவர், படித்தவனுக்கு மட்டுமே குறளை எழுதினாரா ? படிக்காதவன் குறளை அறிந்து அதன் படி நடக்க வேண்டாமா ? அப்படி என்றால் படித்தவன் , படிக்காதவன் எல்லோருக்கும் புரியும்படி வேறு ஏதாவது உதாரணத்தை எடுத்திருக்கலாமே வள்ளுவர் . ஏன் எடுக்கவில்லை ?

படிக்காதவன் இறைவனை அறிந்து கொள்ள முடியாது என்று நினைத்து விட்டாரா ?

சிந்திப்போம்.








Tuesday, November 24, 2015

பெரிய புராணம் - அயலறியாமை வாழ்ந்தார்

பெரிய புராணம் - அயலறியாமை வாழ்ந்தார்


திருநீல கண்டர் , இளமையின் வேகத்தால், காம வயபட்டு , மனைவி அல்லாத இன்னொரு பெண்ணிடம் உறவு கொண்டார். அது கண்டு பொறுக்க மாட்டாத அவரின் மனைவி "திருநீலகண்டத்தின் மேல் ஆணை, நீர் எந்தப் பெண்ணையும் தொடக் கூடாது " என்று கூறினார்.

மனைவியின் வாக்கை ஏற்று, மனைவியை மட்டும் அல்ல, வேறு எந்தப் பெண்ணையும் மனதாலும் நினையாமல் வாழ்ந்து வந்தார்.

சரி, ஏதோ கணவன் மனைவிக்கு இடையில் சண்டை வந்து விட்டது. மனைவியும் ஏதோ சொல்லி விட்டாள் என்று இல்லாமல் அவள் சொன்னதை வேத வாக்காக கொண்டு அவர் வாழத் தொடங்கினார்.

மனைவியோ, கணவனிடம் சண்டை போட்டாள் , எம்மை தொடாதே என்று ஆணையிட்டாளே தவிர வேறு ஒன்றிலும் குறை வைக்கவில்லை.

அவரைத் தொட்டு செய்யும் பணிவிடை தவிர்த்து மீதி அத்தனை காரியங்களையும் செய்து வந்தார்.

அது மட்டும் அல்ல, அவர்களுக்குள் நடந்த இந்த சண்டை, ஊடல், இந்த சங்கல்பம் அக்கம் பக்கம் யாரும் அறியாமல் மறைத்து வைத்தார்.

கணவன் மனைவிக்கு இடையில் ஆயிரம் சண்டை சச்சரவு வரலாம். வரும்.

எக்காரணம் கொண்டும், அது வெளியில் தெரியக் கூடாது. அது அவர்களுக்குள்ளேயே இருக்க வேண்டும்.

ஒரு குடும்பத்தின் மானத்தை, ஒரு குயவாணர் குலத்தில் பிறந்த ஒரு பெண் எப்படி கட்டிக் காக்கிறாள் என்று காட்டுகிறார் சேக்கிழார்.

ஒரு குடும்பத்தின் மானம், கௌரவம் அந்த வீட்டின் பெண்ணின் கையில் இருக்கிறது.

அவள் , தவறிப் போய் ஒரு வார்த்தை சொல்லிவிட்டாலும் அந்த குடுமத்தின் மானம் பறி போய் விடும்.

பாடல்

கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம்
பொற்புற மெய் உறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய
இல் புறம்பு ஒழியாது அங் கண் இருவரும் வேறு வைகி
அன்புறு புணர்ச்சி இன்மை அயலறியாமை வாழ்ந்தார்

பொருள்

கற்புறு மனைவியாரும் = கற்பு அமைந்த அந்த மனைவியும்

கணவனார்க்கு = கணவருக்கு

ஆன எல்லாம் = தேவையான எல்லாம்

பொற்புற = பொறுப்புடன்

மெய் உறாமல் = உடல் மட்டும் தொட்டுக் கொள்ளாமல்

பொருந்துவ = தேவையானவற்றை

போற்றிச் செய்ய = விரும்பிச் செய்தார். ஏதோ கடனுக்கு என்று செய்யவில்லை.

இல் புறம்பு ஒழியாது = வீட்டு விஷயம் வெளியில் தெரியாமல்

அங் கண் இருவரும் = அவர்கள் இருவரும்

வேறு வைகி = வேறு வீரு ஆளாக நாட்களை கடத்தி வந்தனர்

அன்புறு = அன்புடன் ஏற்படும்

புணர்ச்சி இன்மை = உடல் உறவு இல்லாமையை

அயலறியாமை வாழ்ந்தார் = வெளியில் உள்ளவர்க்கள் அறியாமல் வாழ்ந்து வந்தனர்.


கணவன் மனைவிக்கு இடையில் சண்டை தான். ஊடல் தான். ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்வது  கூட கிடையாதுதான். இருந்தாலும், அது வெளியில் யாருக்கும்  தெரியாமல் எப்போதும் போல சிரித்து பேசி வாழ்கிறார்கள்.

கணவனுக்கு வேண்டியது எல்லாம் அன்போடு, விருப்போடு சிறப்பாகச் செய்து தருகிரார் அந்தப் பெண். முகம் சுழிப்பது இல்லை. முகத்தை கடு கடு என்று வைத்துக் கொள்வது இல்லை.

ஒரு புடவை  எடுத்துத் தர வில்லை என்றால், ஒரு சினிமாவுக்கு கூட்டிப் போகவில்லை என்றால்  சில வீடுகளில் பெண்மணிகளின் முகம் போகும் போக்கே தனிதான்.

தண்ணீர் செம்பும், கதவும் கிடந்து இடிபடும்.

ஆனால், இந்தப் பெண்ணோ, அன்புடன் சிரித்த முகத்துடன் அனைத்தும் செய்தார்.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

ஒரு விலைமகளின் வீட்டுக்குப் போய் வந்தவனை அடியார்களில் ஒருவனாக  ஏற்றுக் கொள்ளும்  பக்குவமும் துணிவும் வேறு எந்த மதத்துகாவது இருக்குமா ?

மனிதர்கள் பலவீனமானவர்கள்.

தவறு செய்யும் இயல்பு உடையவர்கள்.

அந்த பலவீனங்களை ஏற்றுக் கொண்டது இந்து மதம்.

படிப்பு அறிவு இல்லாதவனுக்கும், பண வசதி இல்லாதவனுக்கும்,  தவறு செய்பவனுக்கும்  நல்ல கதி கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கையை தந்தது இந்த மதம்.


நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, வா என்று அன்போடு அழைத்துக் கொண்டது இந்த மதம்.

மதத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ இல்லையோ,  இப்படி பட்ட தனி மனித  வாழ்க்கையை உயர்த்திப் பிடித்த பெரிய புராணத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் தானே ?

நம் பெருமை நமக்குத் தெரியவில்லை.



Monday, November 23, 2015

பெரிய புராணம் - பெரியவர் பெயர்ந்து நீங்கி - காமத்தை வெல்ல முடியுமா ? - பாகம் 6

பெரிய புராணம் - பெரியவர் பெயர்ந்து நீங்கி - காமத்தை வெல்ல முடியுமா ? - பாகம் 6


திருநீலகண்டர், தன் மனைவி இருக்க, இன்னொரு பெண்ணிடம் சென்று வந்தார். அதைக் கண்டு பொறுக்க முடியாத அவரின் மனைவி, "திருநீலகண்டத்தின் மேல் ஆணை, நீர் வேறு எந்த பெண்ணையும் தொடக் கூடாது " என்று ஆணையிட்டார்.

அதைக் கேட்டவுடன், திருநீலகண்ட நாயனார், அவளை விட்டு மனதாலும், உடலாலும் விலகி, "எம்மை" என்று நீ பன்மையில் சொன்னதனால், மற்ற பெண்களையும் மனதாலும் தீண்டேன் என்றார்.

இங்கே சிறிது நிறுத்தி, திருநீலகண்டரின் இடத்தில் நம்மை வைத்துப் பார்ப்போம்.

படிப்பறிவு இல்லாத, உடல் உழைப்பையே நம்பி வாழும் ஒருவர். ஏழை. அவருடைய மனைவி எந்தப் பெண்ணையும் தொடக் கூடாது என்று சிவனின் மேல் ஆணை என்கிறார். நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம் ?

ஒன்று, மனைவியை அடக்கி அவளை நம் விருப்பத்துக்கு இணங்க வைத்திருப்போம்.

அல்லது,  நீ இல்லாட்டி என்ன,  எச்சில் கையை வீசினா ஆயிரம் காக்கை என்று  வேறு இடம் நாடிப் போயிருப்போம்.

சாதாரண மனிதர்களின் இயல்பு அப்படித்தானே இருக்கும்.

எந்தப் பெண்ணையும் மனதாலும் தீண்டமாட்டேன் என்று ஒதுங்கி நின்றார்.

பாடல்

ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
 பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி 
 ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை
 மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன் என்றார்


பொருள் 

ஆதியார் = எல்லாவற்றிற்கும் முதலான

நீல கண்டத்து  அளவு = திருநீலகண்டத்தவரான சிவனின் மேல்

தாம் கொண்ட ஆர்வம் = தான் கொண்ட ஆர்வம்

பேதியா = குறையாத , மாறாத

ஆணை கேட்ட = "எந்தப் பெண்ணையும் தீண்டக் கூடாது" என்ற அந்த ஆணையக் கேட்ட

பெரியவர் = பெரியவர்

 பெயர்ந்து நீங்கி  = பெயர்ந்து என்றாலும், நீங்கி என்றாலும் ஒரே பொருள் தான். பின் ஏன் சேக்கிழார் இரண்டு வார்த்தைகளைப் போடுகிறார். மனதினால் பெயர்ந்து, உடலால் நீங்கி. மனமும், உடலும் நீங்கியது

ஏதிலார் போல நோக்கி = ஏதிலார் என்றால் முன்னப் பின்ன அறிமுகம் இல்லாதவர்கள்.

ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. 

என்பது வள்ளுவம்.

மற்றவர்களுடைய குற்றங்களை காண்பது போல நம்முடைய குற்றத்தையும் கண்டால், உயிர்களுக்கு ஒரு தீங்கும் வராது.

சொந்த மனைவியை யாரோ ஒரு பெண்ணைப் போல பார்த்தாராம்.

எம்மை என்றதனால் = எம்மை என்று சொன்னதால்

மற்றை = வேறு எந்த

மாதரார் தமையும் = பெண்ணையும்

என் தன் மனத்தினும்  தீண்டேன் என்றார் = என்னுடைய மனத்தாலும் தீண்டேன் என்றார்.


இது நடக்கிற காரியமா ?

சொந்த வீடு. சின்ன குடிசை வீடு. பக்கத்தில் இரதி போல மனைவி படுத்திருக்கிறாள். உடல் தீண்டாவிட்டாலும், மனம் சும்மா இருக்குமா ?

சரி மனைவிதான், உடன் படவில்லை, மற்ற பெண்களையாவது மனம் நினைக்காமல் இருக்குமா ?

காமம் சும்மா இருக்குமா ?

காமத்தை கட்டுப் படுத்த முடியுமா ?

திருநீலகண்ட நாயனாரால் முடிந்தது.

எப்படி ?

எவ்வளவோ படித்தவர்களால் முடியாத அந்த செயலை அவர் எப்படி செய்தார்.

காமம் மோசமானது. அனைத்து குற்றங்களுக்கும் அதுவே காரணம் என்று அறிந்த  மேதாவிகள் கூட அதன் பிடியில் இருந்து தப்பியது இல்லை.

காமம் , சாம்ராஜ்யங்களை புரட்டிப் போட்டிருக்கிறது.

மகுடங்களை , தலை மாற்றி இருக்கிறது.

சக்ரவர்திகளை , காலில் விழ வைத்திருக்கிறது.

அப்பேற்பட்ட காமத்தை படிப்பறிவில்லா, அதிகாரம், புகழ் , செல்வாக்கு , புஜ பலம் இல்லாத  ஒரு ஏழை குயவனால் எப்படி வெல்ல முடிந்தது ?

பக்தி ஒன்றே அவரிடம் இருந்தது. அந்த பக்தி அவருக்கு உதவி செய்தது. 


"ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்  பேதியா "

நீலகண்டத்தின் மேல் கொண்ட ஆர்வம் , அவருக்கு காமத்தை வெல்ல துணை செய்தது. 

பக்தி காமத்தை மட்டுமல்ல, வேறு எந்த தீய குணத்தில் இருந்தும் காக்கும். 

சொல்லப் போனால் , சேக்கிழார் , அதை பக்தி என்று கூட சொல்லவில்லை. இறைவன் மேல் உள்ள   ஆர்வம் என்கிறார். 

காமத்தை விடு என்று சேக்கிழார் சொல்லி இருந்தால் யார் கேட்டிருப்பார்கள் ?

பக்தி காமத்தை வெல்ல வழி வகுக்கும் என்று சொல்லி இருந்தால் கூட யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். 

நேரடியாகச் சொல்லாமல்,

திருநீலகண்டர் என்ற ஏழை குயவானார், இறைவன் மேல் கொண்ட பக்தியால், காமத்தை வென்றார்  என்று சொல்லிச் செல்கிறார். 


அது மட்டும் அல்ல....

===================== பாகம் 2 ===========================================

மனித மனம் எப்போதும் எதையாவது ஒன்றை பற்றிக் கொண்டே இருக்கும். எதையும் பற்றாமல் அதனால் இருக்க முடியாது. 

அதிலும், தீய குணங்களை எளிதில் பற்றிக் கொள்ளும். நல்ல குணங்களைப் பற்ற நாள் ஆகும். 

எனவே தான் பதியும், பாசமும் இருக்க, பசு எப்போதும் பாசத்தையே பற்றும், பதியை விட்டு விட்டு. 

பன்றியோடு சேர்ந்த கன்றும் ஏதோ தின்னும் என்று சொல்ல்வார்கள். ஏன் மாத்திச் சொல்ல முடியவில்லை ? 

கன்றோடு சேர்ந்த பன்றியும் புல் தின்னும் என்று சொல்ல முடியாது. 

ஏன் ?

தீய பழக்கங்கள் எளிதில் வந்து விடும்.

அதனால் தான் அவ்வையார், 

தீயாரை காண்பதுவும் தீது என்றாள் 


தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

தீயவர்களைக் பார்க்கக் கூட கூடாது என்கிறாள். பார்த்தால், கிட்ட வா என்பான். வந்தால் , "வா அப்படியே ஒரு டீ சாப்டுகிட்டே பேசலாம்" என்பான் . ஒன்றிலிருந்து ஒன்றாக பல தீய பழக்கங்கள் வந்து சேரும்.

தீயவன் , தீயவற்றில் காட்டும் ருசி ஒரு புறம். நம் மனம் தீயவற்றை எளிதாகப் பற்றி கொள்ளும் குணம் மறு புறம். 

மனம் எதயாவது ஒன்றைப் பற்றிக் கொண்டுதான் இருக்கும்.

எனவே தான், பற்றை விடச் சொன்ன வள்ளுவர் கூட

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

திருநீலகண்டர் இறைவனைப் பற்றிக் கொண்டார்.  இறைவன் மேல் ஆணை என்று சொன்னவுடன், அவரால் காமத்தை விட முடிந்தது. 

அது மட்டும் அல்ல, மனைவியின் சொல்லை அவர் மதித்தார். "நீ யார் என்னை தடுப்பதற்கு ...நான் ஆம்பிளை எங்க வேண்டுமானாலும் போவேன் வருவேன் " என்று வீரம் பேசவில்லை. 

மனைவியின் சொல்லுக்கு மதிப்பு தரும் அந்த பண்பு எங்கிருந்து வந்தது. 

படித்து வரவில்லை. 

பக்தியினால் கூட வந்திருக்காது. பக்தி , மனைவி பேச்சை கேள் என்று சொல்லித் தருவது இல்லை. 

இறைவன் மேல் பக்தி வரும் போது , அப்படி பக்தி கொண்ட மற்ற நல்லவர்களின் தொடர்பு ஏற்படுகிறது. அந்தத் தொடர்பு அவரை பண் படுத்தியது என்றுதான் கொள்ள வேண்டும். 

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று


அப்படி இருந்தால் , ஏன் மற்றொரு பெண்ணின் வீட்டுக்குப் போனார் என்ற கேள்வி வருகிறது அல்லவா ?  

சேக்கிழார் சொல்கிறார் "இளமை மீதுற...எளியர் ஆனார் " என்கிறார். உணர்ச்சி வசப்பட்டு, தன் வசம் இழந்து தவறு செய்தார் என்று ஒப்புக் கொள்கிறார் செய்கிறார். 

அதை பூசி மெழுகவில்லை. அந்த தவறான செயலுக்கு ஞாயம்  தேடவில்லை. 

தவறு செய்து விட்டார். அதை மனைவி கண்டித்தவுடன், உணர்ந்து மனைவியின் பேச்சைக் கேட்டு, அப்படியே நடந்தார்.

பக்தியின் உச்சம் தொட்டு காட்டுகிறார் சேக்கிழார்.

பக்தி, ஒரு படிக்காத பாமரனை, இந்த அளவுக்கு பக்குவப் படுத்தும் என்றால், மற்றவர்களை அது எந்த அளவுக்கு பண்படுத்தும் என்று சிந்தித்துப் பார்க்கலாம். 

இவர் அப்படி என்றால், அவரின் மனைவி இன்னும் ஒரு படி மேலே போகிறார். 

ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்று சேக்கிழார் அடுத்த பாடல் காட்டுகிறார். 













Friday, November 20, 2015

பெரிய புராணம் - பெரியவர் பெயர்ந்து நீங்கி - காமத்தை வெல்ல முடியுமா ? - பாகம் 5

பெரிய புராணம் - பெரியவர் பெயர்ந்து நீங்கி - காமத்தை வெல்ல முடியுமா ? - பாகம் 5


திருநீலகண்டர், தன் மனைவி இருக்க, இன்னொரு பெண்ணிடம் சென்று வந்தார். அதைக் கண்டு பொறுக்க முடியாத அவரின் மனைவி, "திருநீலகண்டத்தின் மேல் ஆணை, நீர் வேறு எந்த பெண்ணையும் தொடக் கூடாது " என்று ஆணையிட்டார்.

அதைக் கேட்டவுடன், திருநீலகண்ட நாயனார், அவளை விட்டு மனதாலும், உடலாலும் விலகி, "எம்மை" என்று நீ பன்மையில் சொன்னதனால், மற்ற பெண்களையும் மனதாலும் தீண்டேன் என்றார்.

இங்கே சிறிது நிறுத்தி, திருநீலகண்டரின் இடத்தில் நம்மை வைத்துப் பார்ப்போம்.

படிப்பறிவு இல்லாத, உடல் உழைப்பையே நம்பி வாழும் ஒருவர். ஏழை. அவருடைய மனைவி எந்தப் பெண்ணையும் தொடக் கூடாது என்று சிவனின் மேல் ஆணை என்கிறார். நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம் ?

ஒன்று, மனைவியை அடக்கி அவளை நம் விருப்பத்துக்கு இணங்க வைத்திருப்போம்.

அல்லது,  நீ இல்லாட்டி என்ன,  எச்சில் கையை வீசினா ஆயிரம் காக்கை என்று  வேறு இடம் நாடிப் போயிருப்போம்.

சாதாரண மனிதர்களின் இயல்பு அப்படித்தானே இருக்கும்.

எந்தப் பெண்ணையும் மனதாலும் தீண்டமாட்டேன் என்று ஒதுங்கி நின்றார்.

பாடல்

ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
 பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி 
 ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை
 மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன் என்றார்


பொருள் 

ஆதியார் = எல்லாவற்றிற்கும் முதலான

நீல கண்டத்து  அளவு = திருநீலகண்டத்தவரான சிவனின் மேல்

தாம் கொண்ட ஆர்வம் = தான் கொண்ட ஆர்வம்

பேதியா = குறையாத , மாறாத

ஆணை கேட்ட = "எந்தப் பெண்ணையும் தீண்டக் கூடாது" என்ற அந்த ஆணையக் கேட்ட

பெரியவர் = பெரியவர்

 பெயர்ந்து நீங்கி  = பெயர்ந்து என்றாலும், நீங்கி என்றாலும் ஒரே பொருள் தான். பின் ஏன் சேக்கிழார் இரண்டு வார்த்தைகளைப் போடுகிறார். மனதினால் பெயர்ந்து, உடலால் நீங்கி. மனமும், உடலும் நீங்கியது

ஏதிலார் போல நோக்கி = ஏதிலார் என்றால் முன்னப் பின்ன அறிமுகம் இல்லாதவர்கள்.

ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. 

என்பது வள்ளுவம்.

மற்றவர்களுடைய குற்றங்களை காண்பது போல நம்முடைய குற்றத்தையும் கண்டால், உயிர்களுக்கு ஒரு தீங்கும் வராது.

சொந்த மனைவியை யாரோ ஒரு பெண்ணைப் போல பார்த்தாராம்.

எம்மை என்றதனால் = எம்மை என்று சொன்னதால்

மற்றை = வேறு எந்த

மாதரார் தமையும் = பெண்ணையும்

என் தன் மனத்தினும்  தீண்டேன் என்றார் = என்னுடைய மனத்தாலும் தீண்டேன் என்றார்.


இது நடக்கிற காரியமா ?

சொந்த வீடு. சின்ன குடிசை வீடு. பக்கத்தில் இரதி போல மனைவி படுத்திருக்கிறாள். உடல் தீண்டாவிட்டாலும், மனம் சும்மா இருக்குமா ?

சரி மனைவிதான், உடன் படவில்லை, மற்ற பெண்களையாவது மனம் நினைக்காமல் இருக்குமா ?

காமம் சும்மா இருக்குமா ?

காமத்தை கட்டுப் படுத்த முடியுமா ?

திருநீலகண்ட நாயனாரால் முடிந்தது.

எப்படி ?

எவ்வளவோ படித்தவர்களால் முடியாத அந்த செயலை அவர் எப்படி செய்தார்.

காமம் மோசமானது. அனைத்து குற்றங்களுக்கும் அதுவே காரணம் என்று அறிந்த  மேதாவிகள் கூட அதன் பிடியில் இருந்து தப்பியது இல்லை.

காமம் , சாம்ராஜ்யங்களை புரட்டிப் போட்டிருக்கிறது.

மகுடங்களை , தலை மாற்றி இருக்கிறது.

சக்ரவர்திகளை , காலில் விழ வைத்திருக்கிறது.

அப்பேற்பட்ட காமத்தை படிப்பறிவில்லா, அதிகாரம், புகழ் , செல்வாக்கு , புஜ பலம் இல்லாத  ஒரு ஏழை குயவனால் எப்படி வெல்ல முடிந்தது ?


பக்தி ஒன்றே அவரிடம் இருந்தது. அந்த பக்தி அவருக்கு உதவி செய்தது. 


"ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்  பேதியா "

நீலகண்டத்தின் மேல் கொண்ட ஆர்வம் , அவருக்கு காமத்தை வெல்ல துணை செய்தது. 

பக்தி காமத்தை மட்டுமல்ல, வேறு எந்த தீய குணத்தில் இருந்தும் காக்கும். 

சொல்லப் போனால் , சேக்கிழார் , அதை பக்தி என்று கூட சொல்லவில்லை. இறைவன் மேல் உள்ள   ஆர்வம் என்கிறார். 

காமத்தை விடு என்று சேக்கிழார் சொல்லி இருந்தால் யார் கேட்டிருப்பார்கள் ?

பக்தி காமத்தை வெல்ல வழி வகுக்கும் என்று சொல்லி இருந்தால் கூட யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். 

நேரடியாகச் சொல்லாமல்,

திருநீலகண்டர் என்ற ஏழை குயவானார், இறைவன் மேல் கொண்ட பக்தியால், காமத்தை வென்றார்  என்று சொல்லிச் செல்கிறார். 


அது மட்டும் அல்ல....



Wednesday, November 18, 2015

இராமாயணம் - அறம் கடந்தவர் செயல் இது

இராமாயணம் - அறம் கடந்தவர் செயல் இது


எவ்வளவோ தவறு செய்பவர்கள் எல்லாம் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.  பணம், செல்வாக்கு, அரசியல் அதிகாரம் , புகழ் என்று திருப்தியாகத்தான் இருக்கிறார்கள். நல்ல வழியில் செல்பவர்கள் துன்பப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதை எல்லாம் பார்க்கும் போது , நல்ல வழியில் செல்ல வேண்டும் என்று யாருக்கு நாட்டம் வரும்?  பேசாமல் நாமும் அல்லாத வழியில் சென்று நாலு காசு பார்த்தால் என்ன என்றுதான் நல்லவர்கள் மனத்திலும் தோன்றும்.

இராவணனைப் போல் அதிகாரமும், செல்வாக்கும், புகழும், வீரமும் , செல்வமும் கொண்டவர் யார் ?

இராவணன் காலத்தில் வாழ்ந்தவர்கள், இராவணனைப் பற்றி என்ன நினைத்திருப்பார்கள் ? இவனுக்கு அழிவே இல்லை. இவனை யார் எதிர்க்க முடியும் என்றுதான் நினைத்து இருப்பார்கள்.

ஒரே ஒரு தவறு செய்தான்.

மாற்றான் மனைவியை அபகரித்தான்.

அந்த ஒரு அறம் பிறழ்ந்த செய்கை அவனை எங்கு கொண்டு நிறுத்தியது தெரியுமா ?

இராவணனின் முதல் நாள் போர். அனைத்து ஆயுதங்களையும் இழந்து தனியாக நிற்கிறான். யுத்தத்தில் தோல்வி என்றால் என்ன என்று முதல் முதலில் அறிகிறான்.

அப்படி நிற்கும் இராவணனின் நிலையை கம்பன் படம் பிடிக்கிறான்.

தனிமையில் நிற்கிறான் இராவணன். ஆயுதம் எல்லாம் இழந்து, இருபது கைகளும் ஆல மரத்தின் விழுதுகள் போல தொங்குகின்றன. வெட்கத்தில் தலை குனிந்து நிற்கிறான். காலினால் தரையை கீறிக் கொண்டு நிற்கிறான். அறம் பிறழ்ந்து நடப்பவர்கள் கதி எல்லாம் இப்படிதான் ஆகும் என்று உலகே அவனைக் கண்டு நகைத்ததாம்.

பாடல்

'அறம் கடந்தவர் செயல் இது' என்று, உலகு எலாம் ஆர்ப்ப,
நிறம் கரிந்திட, நிலம் விரல் கிளைத்திட, நின்றான்--
இறங்கு கண்ணினன், எல் அழி முகத்தினன், தலையன்,
வெறுங் கை நாற்றினன், விழுதுடை ஆல் அன்ன மெய்யன்.

பொருள்

'அறம் கடந்தவர் செயல் இது' என்று, = அறத்தை மீறியவர்களின் நிலை இது என்று

உலகு எலாம் ஆர்ப்ப, = அனைத்து உலகும் ஆரவாரிக்க . நல்லா வேணும். நல்லா வேணும் என்று உலகம் சந்தோஷத்தில் குதிக்க.

நிறம் கரிந்திட = முகம் கருத்து

நிலம் விரல் கிளைத்திட = கால் விரல் நிலத்தை கிண்ட

நின்றான் = நின்றான்

இறங்கு கண்ணினன் = கண் தரையைப் பார்க்க, தலை கவிழ்ந்து

எல் அழி முகத்தினன் தலையன் = எழில் அழிந்த முகத்தோடு

 ,
வெறுங் கை நாற்றினன் = வெறும் கையுடன்

விழுதுடை ஆல் அன்ன மெய்யன் = விழுதுகள் போல கைகள் தொங்கும் உடலைக் கொண்டவன் ஆனான்.

இராவணின் கதி இது.

இராமாயணம் படிப்பது கதைக்கோ, கவி நயத்துக்கோ அல்ல. வாழ்கையை செம்மையாக  வாழ.




 

Sunday, November 15, 2015

பெரிய புராணம் - திருநீல கண்ட நாயனார் - எம்மை தீண்டாதீர் - காமத்தை வெல்ல முடியுமா - பாகம் 4

பெரிய புராணம் - திருநீல கண்ட நாயனார் - எம்மை தீண்டாதீர்  - காமத்தை வெல்ல முடியுமா  - பாகம் 4



திருநீலகண்டரைப் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். பெரிய புராண பாடல்களை படிக்கும் போது மீண்டும் மீண்டும் ஏதேதோ புதிய அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

முன்பெல்லாம், பெரிய புராணம் என்றால் ஏதோ ஒரு சில பக்திமான்களின் கதை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதில் அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், மற்றும் ஞானசம்பாந்தரைத் தவிர வேறு யாரையும் தெரியாது. இந்த நால்வரைப் பற்றியும் நிறைய படித்தும் கேட்டும் இருப்பதால் புதிதாக என்ன அறிந்து கொள்ளப் போகிறோம் என்ற நினைப்பில் பெரிய புராணத்தை படிக்காமலேயே விட்டு விட்டேன்.

அது எவ்வளவு பெரிய பிழை என்று இப்போது புரிகிறது.

கொட்டிக் கிடக்கிறது சைவ சித்தாந்தமும், பக்தியும், வாழ்க்கையும்.

அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னி  பிணைந்து கிடக்கிறது.

அள்ள அள்ள குறையாத பொக்கிஷம். ஆனந்த தேன் ஊற்று பெரிய புராணம்.

அப்படி என்ன பெரிய புராணத்தில் சிறப்பு இருக்கிறது என்று கேட்டால், அதை கடைசியில் பார்ப்போம்.

இப்போது சில பாடல்கள்.

திருநீலகண்டர், மண் பானை செய்து அதை விற்பனை செய்து வாழ்ந்து வருபவர். அவருக்கு சிவன் மேல் பக்தி. அவரைப் பற்றிய கதை.

சிவன் மேல் பக்தி என்றாலும் , காமம் விடவில்லை. அது யாரை விட்டது ?

மனைவி இருக்கும் போது, ஒரு விலை மகளிடம் தொடர்பு கொண்டார்.

பாடல்

அளவு இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி.
வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும்
உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்
இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார்.

பொருள்

அளவு இலா = இவ்வளவு என்று கணிக்க முடியாத

மரபின் வாழ்க்கை = அவ்வளவு காலம் வாழ்ந்த வாழ்கை. பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் வாழ்கை

மண் கலம் = மண் பாண்டங்களை

அமுதுக்கு ஆக்கி = உண்பதற்காக ஆக்கி

வளர் இளம் திங்கள் = வளரும் இளமையான நிலாவை

கண்ணி = சூடிய

மன்று உளார் = மன்றத்தில் உள்ளார்

அடியார்க்கு என்றும் = அடியவர்களுக்கு என்றும் (சிவனடியார்களுக்கு என்றும்)

உளம் மகிழ் சிறப்பின் மல்க = உள்ளம் மகிழும் படி  சிறப்பாக

ஓடு அளித்து = திருவோடுகளை செய்து கொடுத்து

ஒழுகும் நாளில் = வாழும் நாளில்

இளமை மீது ஊர = இளமை மிகுந்து வர

இன்பத் துறையினில்= இன்பம் என்ற துறையில்

எளியர் ஆனார்.= வலிமை இழந்து எளியவர் ஆனார்

இதில் என்ன இருக்கிறது என்று தானே நினைக்கத் தோன்றுகிறது ?

பரம்பரை பரம்பரையாக குயவனாராக இருந்து வருபவர். இன்று நேற்று அல்ல, அளவு இல்லாத காலமாய் குயவனார் பரம்பரை.

எனவே பெரிய படிப்பு ஒன்றும் படித்திருக்க வழி இல்லை.

பெரிய சொத்து பத்து ஒன்றும் இருக்க வழி இல்லை.

அதற்கும் மேலே, விலை மகளிரிடம் சென்று வருகிறார்.

நாளும் வெயிலில் , சகதியில் கிடந்து உழலும் அவர் ஒன்றும் பெரிய சிவப்பாக அழகாகவும் இருக்க வழி இல்லை.

இப்படிப்பட்ட, படிக்காத, காலணா சொத்து இல்லாத, கண்ட பெண்களிடம் சென்று வரும் ஒருவரை  நாயன்மார் என்று சிவன் கோவிலில் வைத்து வழிபடும்  துணிவு வேறு எந்த மதத்துக்காவது உண்டா ?

அவரைப் பற்றி சோழ நாட்டின் முதலைமைச்சர் சேக்கிழார் பாடுகிறார்.

நீ படிக்காதவனாக இருந்து விட்டுப் போ.

பணம் காசு இல்லாதவனாக இருந்து விட்டுப் போ.

பரத்தைகளிடம் செல்லும் ஒழுக்க குறைவுள்ளவனாக இருந்துவிட்டுப் போ.

பக்திக்கு இது ஒன்றும் தடை இல்லை என்று பறை சாற்றியது நம் மதம்.

அது மட்டும் அல்ல.


=============== பாகம் 2 ================================================

காமம் !

வாழ்வின் மிகப் பெரிய சந்தோஷம் இது. மிகப் பெரிய துக்கமும் இதுவே.

காமத்தில் கிடந்து தவிக்காத ஆள் யார் உண்டு.

மோகத்தை கொன்று விடு; அல்லால் என் மூச்சை நிறுத்தி விடு என்று மோகத் தீயில் தவித்தார் பாரதியார்.

சாதாரண தீ சுட்டால் நீரில் குளித்தால் அந்த சூடு தணிந்து விடும்.

காமத் தீ அப்படி அல்ல.

நீரில் குளித்தாலும் சரி, மலையின் மேல் ஏறி நின்றாலும் சரி, எங்கு போனாலும்  விடாது.

ஊரு ளெழுந்த வுருகெழு செந்தீக்கு
நீருட் குளித்து முயலாகும்-நீருள்
குளிப்பினுங் காமஞ் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினுங் காமஞ் சுடும்.      

 நீரில் குளித்தாலும் காமம் சுடும்.  குன்றேறி, யாருக்கும் தெரியாமல் குகைக்குள்  ஒளிந்து நின்றாலும் காமம் சுடும் என்கிறது நாலடியார்.

சாதாரண தீ , தொட்டால் தான் சுடும். காமமோ தொடாமல் விலகி நின்றாலும் சுடும்  என்கிறது குறள் .

தொடிற்சுடி னல்லது காமநோய் போல
விடிற்சுட லாற்றுமோ தீ,

சாதாரண தீயால் அதை விட்டு விலகி நின்றபின் காமத்தைப் போல சுட முடியுமா  என்று வினவுகிறார் வள்ளுவர்.

மணிவாசகர், அப்பர் முதல் அனைத்து சித்தர்களும் காமத்தீயால் வெந்து நொந்தார்கள்.

அருணகிரி நாதர் சிற்றின்பத்தில் மூழ்கி பட்ட பாடும் நாம் அறிந்ததே.

கம்பராமாயணம் முழுவதும் காதலும் காமமும் கலந்ததே.

சீதை மேல் இராமன் கொண்ட காதல், இராமன் மேல் சீதை கொண்ட காதல், இராமன் மேல்   சூர்பனகை கொண்ட காமம், இலக்குவன் மேல் சூர்பனகை கொண்ட  காமம், சீதை மேல் இராவணன் கொண்ட காமம், என்று காப்பியம் முழுவதுமே  இந்த காதலும் காமமுமே நிறைந்து நிற்கிறது.

காமத்தை வெல்ல முடியுமா ? வென்றவர்கள் யாராவது இருக்கிறார்களா ? காமத்தை வெல்ல முடியும் என்றால் எப்படி வெல்வது ? அதற்கு என்ன வழி ?

எல்லா புலவர்களும் காமத்தால் வரும் கஷ்டம் பற்றி புலம்புகிறார்கள். இறைவா என்னை இந்த காமச் சுழலில் இருந்து காப்பாற்று என்று கதறி இருக்கிறார்கள்.

தெய்வப் புலவர் சேக்கிழார் ஒருவர் தான் , அந்த காமத்தில் இருந்து விடுபட வழி சொல்லித் தருகிறார்.

எப்படி என்று பார்ப்போம்....

====================== பாகம் 3 ==========================================

காமம், யாரை விட்டு வைத்தது ?

எல்லாம் படித்த பராச முனிவர் மச்சகந்தியிடம் மயங்கினார்

ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த இந்திரன் அகலிகையிடம் மயங்கினான்

நாரத முனிவருக்கு ஏற்ப நயம்பட உரைத்த நா கொண்ட இராவணன் சீதையிடம் மயங்கினான்.

திருநீலகண்டர், படிப்பு அறிவு இல்லாதவர். ஏழை குடும்பத்தில் வந்தவர். இலட்சுமி போன்ற அழகான மனைவி இருக்க, இன்னொரு பெண்ணிடம் சென்று வந்தார். அதானால், அவருடைய மனைவி அவர் மேல் கோபம் கொண்டார்.

வீட்டில் இரண்டு பேரும் ஒன்றாக இருந்தார்கள். அவருக்கு வேண்டிய எல்லாம்  அவருடைய மனைவி செய்வார். ஆனால், அவரை தொட விட மாட்டார். தனிப் படுக்கைதான்.

பாடல்

ஆன தம் கேள்வர் அங்கு ஓர் பரத்தை பால் அணைந்து நண்ண
மானமும் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை
ஏனைய எல்லாம் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார்;
தேன் அலர் கமலப் போதில் திருவினும் உருவம் மிக்கார்.



பொருள்

ஆன தம்  = தனக்கு என்று ஆன

கேள்வர் = துணைவர்.  சேக்கிழார் தேர்ந்து எடுத்து சொற்களைப் போடுகிறார். கேள்வன் என்று இருந்திருக்க வேண்டும்.  கேள்வர் என்று பன்மையில் வருகிறது. மரியாதை நிமித்தம் என்றும் கொள்ளலாம். தன்னைத் தவிர மற்ற பெண்களுக்கும் உறவாக இருந்ததால் கேள்வர் என்று பன்மையில் கூறினார் என்றும் கொள்ளலாம்.


அங்கு = அந்த இடத்தில்

ஓர் பரத்தை பால் = ஒரு விலை மகளிடம்

அணைந்து = உடன் இருந்து

நண்ண = மீண்டும் மனை வர

மானமும் பொறாது = அவமானம் அடைந்து

வந்த ஊடலால் = அதில் வந்த ஊடலால்

மனையின் வாழ்க்கை = வீட்டு வாழ்க்கையில்

ஏனைய எல்லாம் செய்தே = மற்றது எல்லாம் செய்து. உணவு சமைத்துத் தருவார், ஆடைகள் எடுத்துத் தருவார்...

உடன் உறைவு இசையார் ஆனார் = கூடி இருப்பதற்கு ஒத்துக் கொள்ளவில்லை

தேன் அலர் = தேன் சிந்தும்

கமலப் = தாமரைப்

போதில் = பூவில்

திருவினும் = திருமகளை விட

உருவம் மிக்கார். = அழகு உடைய அவர்

மனைவி இலட்சுமியை விட அழகானவராக இருந்தாலும்  விலை  மகளிடம்  அவருக்கு நாட்டம்.

காமம் யாரை விட்டது ?

தங்கச் சிலை போன்ற மனைவி அருகில்.

மனைவியை அவர் ஆசையுடன் நெருங்குகிறார். அவளின் ஊடலைத் தீர்த்து, அவளோடு கூட....

அவர் நினைத்தது ஒன்று...நடந்தது வேறு ஒன்று.....

================== பாகம் 4 =============================================

மனைவியின் ஊடலை தீர்க்க எண்ணி , மனைவியை அணைக்க அவள் அருகில்  நெருங்கினார்.

"என்னை ஒண்ணும் தொட வேண்டாம் " என்று சொல்ல நினைத்தார் அவரின் மனைவி.

உடனே அவள் மனதில் ஒரு சிந்தனை ஓடியது.

இவர் ஏற்கனவே பல பெண்களை நாடுபவர். இப்ப நாம வேறு "என்னைத் தொடாதே" என்று சொன்னால், சரிதான் இதுதான் சாக்கு என்று அந்த பெண்களின்  வீடே கதி என்று அங்கேயே போய் விடுவார்.

என்ன செய்யலாம் என்று யோசித்து அந்த பெண் ஒன்று சொன்னாள் ...

"என்னை மட்டும் அல்ல, நீர் வேறு எந்தப் பெண்ணையும் தீண்டக் கூடாது " என்று  ஆணையிட்டார்.

பாடல்

மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று
பூண் தயங்கு இளமென் சாயல் பொன் கொடி அனையார் தம்மை
வேண்டுவ இரந்து கூறி மெய் உற அணையும் போதில்,
‘தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம்’ என்றார்.

பொருள்

மூண்ட = தோன்றிய. தீ போல் மூண்ட

அப் புலவி = அந்த ஊடல்

தீர்க்க = தீர்க்க வேண்டி

அன்பனார் = திருநீல கண்ட நாயனார்

முன்பு சென்று = மனைவியின் முன் சென்று

பூண் தயங்கு = பூண் போன்ற அணிகலன்கள் அவளின் அழகின் முன் தயங்கி பின்னாலே போக

 இளமென் சாயல் = இளமையான மென்மையான

பொன் = பொன் போன்ற பொலிவுடன் கூடிய

கொடி = கொடி போன்ற

அனையார் தம்மை = அவரின் மனைவியை

வேண்டுவ இரந்து = அவளுக்கு என்ன வேண்டுமோ அவற்றை கேட்டு

கூறி = அதற்கு வேண்டியதை கூறி

மெய் உற அணையும் போதில் = அணைக்கப் போகும் போது

‘தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம்’ என்றார். = திருநீலகண்டத்தின் மீது ஆணை எம்மை தீண்டாதீர் என்றார்.


தீண்டுவீர் ஆயின் என்னை என்று சொல்லவில்லை. எம்மை என்றார்.

அடுத்து என்ன நடந்தது ?






Thursday, November 12, 2015

பெரிய புராணம் - திருநீல கண்ட நாயனார் - உடன் உறவு இசையார் - காமத்தை வெல்ல முடியுமா - பாகம் 3

பெரிய புராணம் - திருநீல கண்ட நாயனார் - உடன் உறவு இசையார் - காமத்தை வெல்ல முடியுமா  - பாகம் 3



திருநீலகண்டரைப் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். பெரிய புராண பாடல்களை படிக்கும் போது மீண்டும் மீண்டும் ஏதேதோ புதிய அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

முன்பெல்லாம், பெரிய புராணம் என்றால் ஏதோ ஒரு சில பக்திமான்களின் கதை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதில் அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், மற்றும் ஞானசம்பாந்தரைத் தவிர வேறு யாரையும் தெரியாது. இந்த நால்வரைப் பற்றியும் நிறைய படித்தும் கேட்டும் இருப்பதால் புதிதாக என்ன அறிந்து கொள்ளப் போகிறோம் என்ற நினைப்பில் பெரிய புராணத்தை படிக்காமலேயே விட்டு விட்டேன்.

அது எவ்வளவு பெரிய பிழை என்று இப்போது புரிகிறது.

கொட்டிக் கிடக்கிறது சைவ சித்தாந்தமும், பக்தியும், வாழ்க்கையும்.

அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னி  பிணைந்து கிடக்கிறது.

அள்ள அள்ள குறையாத பொக்கிஷம். ஆனந்த தேன் ஊற்று பெரிய புராணம்.

அப்படி என்ன பெரிய புராணத்தில் சிறப்பு இருக்கிறது என்று கேட்டால், அதை கடைசியில் பார்ப்போம்.

இப்போது சில பாடல்கள்.

திருநீலகண்டர், மண் பானை செய்து அதை விற்பனை செய்து வாழ்ந்து வருபவர். அவருக்கு சிவன் மேல் பக்தி. அவரைப் பற்றிய கதை.

சிவன் மேல் பக்தி என்றாலும் , காமம் விடவில்லை. அது யாரை விட்டது ?

மனைவி இருக்கும் போது, ஒரு விலை மகளிடம் தொடர்பு கொண்டார்.

பாடல்

அளவு இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி.
வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும்
உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்
இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார்.

பொருள்

அளவு இலா = இவ்வளவு என்று கணிக்க முடியாத

மரபின் வாழ்க்கை = அவ்வளவு காலம் வாழ்ந்த வாழ்கை. பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் வாழ்கை

மண் கலம் = மண் பாண்டங்களை

அமுதுக்கு ஆக்கி = உண்பதற்காக ஆக்கி

வளர் இளம் திங்கள் = வளரும் இளமையான நிலாவை

கண்ணி = சூடிய

மன்று உளார் = மன்றத்தில் உள்ளார்

அடியார்க்கு என்றும் = அடியவர்களுக்கு என்றும் (சிவனடியார்களுக்கு என்றும்)

உளம் மகிழ் சிறப்பின் மல்க = உள்ளம் மகிழும் படி  சிறப்பாக

ஓடு அளித்து = திருவோடுகளை செய்து கொடுத்து

ஒழுகும் நாளில் = வாழும் நாளில்

இளமை மீது ஊர = இளமை மிகுந்து வர

இன்பத் துறையினில்= இன்பம் என்ற துறையில்

எளியர் ஆனார்.= வலிமை இழந்து எளியவர் ஆனார்

இதில் என்ன இருக்கிறது என்று தானே நினைக்கத் தோன்றுகிறது ?

பரம்பரை பரம்பரையாக குயவனாராக இருந்து வருபவர். இன்று நேற்று அல்ல, அளவு இல்லாத காலமாய் குயவனார் பரம்பரை.

எனவே பெரிய படிப்பு ஒன்றும் படித்திருக்க வழி இல்லை.

பெரிய சொத்து பத்து ஒன்றும் இருக்க வழி இல்லை.

அதற்கும் மேலே, விலை மகளிரிடம் சென்று வருகிறார்.

நாளும் வெயிலில் , சகதியில் கிடந்து உழலும் அவர் ஒன்றும் பெரிய சிவப்பாக அழகாகவும் இருக்க வழி இல்லை.

இப்படிப்பட்ட, படிக்காத, காலணா சொத்து இல்லாத, கண்ட பெண்களிடம் சென்று வரும் ஒருவரை  நாயன்மார் என்று சிவன் கோவிலில் வைத்து வழிபடும்  துணிவு வேறு எந்த மதத்துக்காவது உண்டா ?

அவரைப் பற்றி சோழ நாட்டின் முதலைமைச்சர் சேக்கிழார் பாடுகிறார்.

நீ படிக்காதவனாக இருந்து விட்டுப் போ.

பணம் காசு இல்லாதவனாக இருந்து விட்டுப் போ.

பரத்தைகளிடம் செல்லும் ஒழுக்க குறைவுள்ளவனாக இருந்துவிட்டுப் போ.

பக்திக்கு இது ஒன்றும் தடை இல்லை என்று பறை சாற்றியது நம் மதம்.

அது மட்டும் அல்ல.


=============== பாகம் 2 ================================================

காமம் !

வாழ்வின் மிகப் பெரிய சந்தோஷம் இது. மிகப் பெரிய துக்கமும் இதுவே.

காமத்தில் கிடந்து தவிக்காத ஆள் யார் உண்டு.

மோகத்தை கொன்று விடு; அல்லால் என் மூச்சை நிறுத்தி விடு என்று மோகத் தீயில் தவித்தார் பாரதியார்.

சாதாரண தீ சுட்டால் நீரில் குளித்தால் அந்த சூடு தணிந்து விடும்.

காமத் தீ அப்படி அல்ல.

நீரில் குளித்தாலும் சரி, மலையின் மேல் ஏறி நின்றாலும் சரி, எங்கு போனாலும்  விடாது.

ஊரு ளெழுந்த வுருகெழு செந்தீக்கு
நீருட் குளித்து முயலாகும்-நீருள்
குளிப்பினுங் காமஞ் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினுங் காமஞ் சுடும்.        

 நீரில் குளித்தாலும் காமம் சுடும்.  குன்றேறி, யாருக்கும் தெரியாமல் குகைக்குள்  ஒளிந்து நின்றாலும் காமம் சுடும் என்கிறது நாலடியார்.

சாதாரண தீ , தொட்டால் தான் சுடும். காமமோ தொடாமல் விலகி நின்றாலும் சுடும்  என்கிறது குறள் .

தொடிற்சுடி னல்லது காமநோய் போல
விடிற்சுட லாற்றுமோ தீ,

சாதாரண தீயால் அதை விட்டு விலகி நின்றபின் காமத்தைப் போல சுட முடியுமா  என்று வினவுகிறார் வள்ளுவர்.

மணிவாசகர், அப்பர் முதல் அனைத்து சித்தர்களும் காமத்தீயால் வெந்து நொந்தார்கள்.

அருணகிரி நாதர் சிற்றின்பத்தில் மூழ்கி பட்ட பாடும் நாம் அறிந்ததே.

கம்பராமாயணம் முழுவதும் காதலும் காமமும் கலந்ததே.

சீதை மேல் இராமன் கொண்ட காதல், இராமன் மேல் சீதை கொண்ட காதல், இராமன் மேல்   சூர்பனகை கொண்ட காமம், இலக்குவன் மேல் சூர்பனகை கொண்ட  காமம், சீதை மேல் இராவணன் கொண்ட காமம், என்று காப்பியம் முழுவதுமே  இந்த காதலும் காமமுமே நிறைந்து நிற்கிறது.

காமத்தை வெல்ல முடியுமா ? வென்றவர்கள் யாராவது இருக்கிறார்களா ? காமத்தை வெல்ல முடியும் என்றால் எப்படி வெல்வது ? அதற்கு என்ன வழி ?

எல்லா புலவர்களும் காமத்தால் வரும் கஷ்டம் பற்றி புலம்புகிறார்கள். இறைவா என்னை இந்த காமச் சுழலில் இருந்து காப்பாற்று என்று கதறி இருக்கிறார்கள்.

தெய்வப் புலவர் சேக்கிழார் ஒருவர் தான் , அந்த காமத்தில் இருந்து விடுபட வழி சொல்லித் தருகிறார்.

எப்படி என்று பார்ப்போம்....

====================== பாகம் 3 ==========================================

காமம், யாரை விட்டு வைத்தது ?

எல்லாம் படித்த பராச முனிவர் மச்சகந்தியிடம் மயங்கினார்

ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த இந்திரன் அகலிகையிடம் மயங்கினான்

நாரத முனிவருக்கு ஏற்ப நயம்பட உரைத்த நா கொண்ட இராவணன் சீதையிடம் மயங்கினான்.

திருநீலகண்டர், படிப்பு அறிவு இல்லாதவர். ஏழை குடும்பத்தில் வந்தவர். இலட்சுமி போன்ற அழகான மனைவி இருக்க, இன்னொரு பெண்ணிடம் சென்று வந்தார். அதானால், அவருடைய மனைவி அவர் மேல் கோபம் கொண்டார்.

வீட்டில் இரண்டு பேரும் ஒன்றாக இருந்தார்கள். அவருக்கு வேண்டிய எல்லாம்  அவருடைய மனைவி செய்வார். ஆனால், அவரை தொட விட மாட்டார். தனிப் படுக்கைதான்.

பாடல்

ஆன தம் கேள்வர் அங்கு ஓர் பரத்தை பால் அணைந்து நண்ண
மானமும் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை
ஏனைய எல்லாம் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார்;
தேன் அலர் கமலப் போதில் திருவினும் உருவம் மிக்கார்.



பொருள்

ஆன தம்  = தனக்கு என்று ஆன

கேள்வர் = துணைவர்.  சேக்கிழார் தேர்ந்து எடுத்து சொற்களைப் போடுகிறார். கேள்வன் என்று இருந்திருக்க வேண்டும்.  கேள்வர் என்று பன்மையில் வருகிறது. மரியாதை நிமித்தம் என்றும் கொள்ளலாம். தன்னைத் தவிர மற்ற பெண்களுக்கும் உறவாக இருந்ததால் கேள்வர் என்று பன்மையில் கூறினார் என்றும் கொள்ளலாம்.


அங்கு = அந்த இடத்தில்

ஓர் பரத்தை பால் = ஒரு விலை மகளிடம்

அணைந்து = உடன் இருந்து

நண்ண = மீண்டும் மனை வர

மானமும் பொறாது = அவமானம் அடைந்து

வந்த ஊடலால் = அதில் வந்த ஊடலால்

மனையின் வாழ்க்கை = வீட்டு வாழ்க்கையில்

ஏனைய எல்லாம் செய்தே = மற்றது எல்லாம் செய்து. உணவு சமைத்துத் தருவார், ஆடைகள் எடுத்துத் தருவார்...

உடன் உறைவு இசையார் ஆனார் = கூடி இருப்பதற்கு ஒத்துக் கொள்ளவில்லை

தேன் அலர் = தேன் சிந்தும்

கமலப் = தாமரைப்

போதில் = பூவில்

திருவினும் = திருமகளை விட

உருவம் மிக்கார். = அழகு உடைய அவர்

மனைவி இலட்சுமியை விட அழகானவராக இருந்தாலும்  விலை  மகளிடம்  அவருக்கு நாட்டம்.

காமம் யாரை விட்டது ?

தங்கச் சிலை போன்ற மனைவி அருகில்.

மனைவியை அவர் ஆசையுடன் நெருங்குகிறார். அவளின் ஊடலைத் தீர்த்து, அவளோடு கூட....

அவர் நினைத்தது ஒன்று...நடந்தது வேறு ஒன்று.....





Wednesday, November 11, 2015

பெரிய புராணம் - திருநீல கண்ட நாயனார் - காமத்தை வெல்ல முடியுமா - பாகம் 2

பெரிய புராணம் - திருநீல கண்ட நாயனார் - காமத்தை வெல்ல முடியுமா  - பாகம் 2


திருநீலகண்டரைப் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். பெரிய புராண பாடல்களை படிக்கும் போது மீண்டும் மீண்டும் ஏதேதோ புதிய அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

முன்பெல்லாம், பெரிய புராணம் என்றால் ஏதோ ஒரு சில பக்திமான்களின் கதை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதில் அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், மற்றும் ஞானசம்பாந்தரைத் தவிர வேறு யாரையும் தெரியாது. இந்த நால்வரைப் பற்றியும் நிறைய படித்தும் கேட்டும் இருப்பதால் புதிதாக என்ன அறிந்து கொள்ளப் போகிறோம் என்ற நினைப்பில் பெரிய புராணத்தை படிக்காமலேயே விட்டு விட்டேன்.

அது எவ்வளவு பெரிய பிழை என்று இப்போது புரிகிறது.

கொட்டிக் கிடக்கிறது சைவ சித்தாந்தமும், பக்தியும், வாழ்க்கையும்.

அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னி  பிணைந்து கிடக்கிறது.

அள்ள அள்ள குறையாத பொக்கிஷம். ஆனந்த தேன் ஊற்று பெரிய புராணம்.

அப்படி என்ன பெரிய புராணத்தில் சிறப்பு இருக்கிறது என்று கேட்டால், அதை கடைசியில் பார்ப்போம்.

இப்போது சில பாடல்கள்.

திருநீலகண்டர், மண் பானை செய்து அதை விற்பனை செய்து வாழ்ந்து வருபவர். அவருக்கு சிவன் மேல் பக்தி. அவரைப் பற்றிய கதை.

சிவன் மேல் பக்தி என்றாலும் , காமம் விடவில்லை. அது யாரை விட்டது ?

மனைவி இருக்கும் போது, ஒரு விலை மகளிடம் தொடர்பு கொண்டார்.

பாடல்

அளவு இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி.
வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும்
உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்
இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார்.

பொருள்

அளவு இலா = இவ்வளவு என்று கணிக்க முடியாத

மரபின் வாழ்க்கை = அவ்வளவு காலம் வாழ்ந்த வாழ்கை. பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் வாழ்கை

மண் கலம் = மண் பாண்டங்களை

அமுதுக்கு ஆக்கி = உண்பதற்காக ஆக்கி

வளர் இளம் திங்கள் = வளரும் இளமையான நிலாவை

கண்ணி = சூடிய

மன்று உளார் = மன்றத்தில் உள்ளார்

அடியார்க்கு என்றும் = அடியவர்களுக்கு என்றும் (சிவனடியார்களுக்கு என்றும்)

உளம் மகிழ் சிறப்பின் மல்க = உள்ளம் மகிழும் படி  சிறப்பாக

ஓடு அளித்து = திருவோடுகளை செய்து கொடுத்து

ஒழுகும் நாளில் = வாழும் நாளில்

இளமை மீது ஊர = இளமை மிகுந்து வர

இன்பத் துறையினில்= இன்பம் என்ற துறையில்

எளியர் ஆனார்.= வலிமை இழந்து எளியவர் ஆனார்

இதில் என்ன இருக்கிறது என்று தானே நினைக்கத் தோன்றுகிறது ?

பரம்பரை பரம்பரையாக குயவனாராக இருந்து வருபவர். இன்று நேற்று அல்ல, அளவு இல்லாத காலமாய் குயவனார் பரம்பரை.

எனவே பெரிய படிப்பு ஒன்றும் படித்திருக்க வழி இல்லை.

பெரிய சொத்து பத்து ஒன்றும் இருக்க வழி இல்லை.

அதற்கும் மேலே, விலை மகளிரிடம் சென்று வருகிறார்.

நாளும் வெயிலில் , சகதியில் கிடந்து உழலும் அவர் ஒன்றும் பெரிய சிவப்பாக அழகாகவும் இருக்க வழி இல்லை.

இப்படிப்பட்ட, படிக்காத, காலணா சொத்து இல்லாத, கண்ட பெண்களிடம் சென்று வரும் ஒருவரை  நாயன்மார் என்று சிவன் கோவிலில் வைத்து வழிபடும்  துணிவு வேறு எந்த மதத்துக்காவது உண்டா ?

அவரைப் பற்றி சோழ நாட்டின் முதலைமைச்சர் சேக்கிழார் பாடுகிறார்.

நீ படிக்காதவனாக இருந்து விட்டுப் போ.

பணம் காசு இல்லாதவனாக இருந்து விட்டுப் போ.

பரத்தைகளிடம் செல்லும் ஒழுக்க குறைவுள்ளவனாக இருந்துவிட்டுப் போ.

பக்திக்கு இது ஒன்றும் தடை இல்லை என்று பறை சாற்றியது நம் மதம்.

அது மட்டும் அல்ல.


=============== பாகம் 2 ================================================

காமம் !

வாழ்வின் மிகப் பெரிய சந்தோஷம் இது. மிகப் பெரிய துக்கமும் இதுவே.

காமத்தில் கிடந்து தவிக்காத ஆள் யார் உண்டு.

மோகத்தை கொன்று விடு; அல்லால் என் மூச்சை நிறுத்தி விடு என்று மோகத் தீயில் தவித்தார் பாரதியார்.

சாதாரண தீ சுட்டால் நீரில் குளித்தால் அந்த சூடு தணிந்து விடும்.

காமத் தீ அப்படி அல்ல.

நீரில் குளித்தாலும் சரி, மலையின் மேல் ஏறி நின்றாலும் சரி, எங்கு போனாலும்  விடாது.

ஊரு ளெழுந்த வுருகெழு செந்தீக்கு
நீருட் குளித்து முயலாகும்-நீருள்
குளிப்பினுங் காமஞ் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினுங் காமஞ் சுடும்.          

 நீரில் குளித்தாலும் காமம் சுடும்.  குன்றேறி, யாருக்கும் தெரியாமல் குகைக்குள்  ஒளிந்து நின்றாலும் காமம் சுடும் என்கிறது நாலடியார்.

சாதாரண தீ , தொட்டால் தான் சுடும். காமமோ தொடாமல் விலகி நின்றாலும் சுடும்  என்கிறது குறள் .

தொடிற்சுடி னல்லது காமநோய் போல
விடிற்சுட லாற்றுமோ தீ,  

சாதாரண தீயால் அதை விட்டு விலகி நின்றபின் காமத்தைப் போல சுட முடியுமா  என்று வினவுகிறார் வள்ளுவர்.

மணிவாசகர், அப்பர் முதல் அனைத்து சித்தர்களும் காமத்தீயால் வெந்து நொந்தார்கள்.

அருணகிரி நாதர் சிற்றின்பத்தில் மூழ்கி பட்ட பாடும் நாம் அறிந்ததே.

கம்பராமாயணம் முழுவதும் காதலும் காமமும் கலந்ததே.

சீதை மேல் இராமன் கொண்ட காதல், இராமன் மேல் சீதை கொண்ட காதல், இராமன் மேல்   சூர்பனகை கொண்ட காமம், இலக்குவன் மேல் சூர்பனகை கொண்ட  காமம், சீதை மேல் இராவணன் கொண்ட காமம், என்று காப்பியம் முழுவதுமே  இந்த காதலும் காமமுமே நிறைந்து நிற்கிறது.

காமத்தை வெல்ல முடியுமா ? வென்றவர்கள் யாராவது இருக்கிறார்களா ? காமத்தை வெல்ல முடியும் என்றால் எப்படி வெல்வது ? அதற்கு என்ன வழி ?

எல்லா புலவர்களும் காமத்தால் வரும் கஷ்டம் பற்றி புலம்புகிறார்கள். இறைவா என்னை இந்த காமச் சுழலில் இருந்து காப்பாற்று என்று கதறி இருக்கிறார்கள்.

தெய்வப் புலவர் சேக்கிழார் ஒருவர் தான் , அந்த காமத்தில் இருந்து விடுபட வழி சொல்லித் தருகிறார்.

எப்படி என்று பார்ப்போம்....





Wednesday, November 4, 2015

பெரிய புராணம் - திருநீல கண்ட நாயனார் - இளமை மீது ஊர - பாகம் 1

பெரிய புராணம் - திருநீல கண்ட நாயனார் - இளமை மீது ஊர - பாகம் 1


திருநீலகண்டரைப் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். பெரிய புராண பாடல்களை படிக்கும் போது மீண்டும் மீண்டும் ஏதேதோ புதிய அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

முன்பெல்லாம், பெரிய புராணம் என்றால் ஏதோ ஒரு சில பக்திமான்களின் கதை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதில் அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், மற்றும் ஞானசம்பாந்தரைத் தவிர வேறு யாரையும் தெரியாது. இந்த நால்வரைப் பற்றியும் நிறைய படித்தும் கேட்டும் இருப்பதால் புதிதாக என்ன அறிந்து கொள்ளப் போகிறோம் என்ற நினைப்பில் பெரிய புராணத்தை படிக்காமலேயே விட்டு விட்டேன்.

அது எவ்வளவு பெரிய பிழை என்று இப்போது புரிகிறது.

கொட்டிக் கிடக்கிறது சைவ சித்தாந்தமும், பக்தியும், வாழ்க்கையும்.

அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னி  பிணைந்து கிடக்கிறது.

அள்ள அள்ள குறையாத பொக்கிஷம். ஆனந்த தேன் ஊற்று பெரிய புராணம்.

அப்படி என்ன பெரிய புராணத்தில் சிறப்பு இருக்கிறது என்று கேட்டால், அதை கடைசியில் பார்ப்போம்.

இப்போது சில பாடல்கள்.

திருநீலகண்டர், மண் பானை செய்து அதை விற்பனை செய்து வாழ்ந்து வருபவர். அவருக்கு சிவன் மேல் பக்தி. அவரைப் பற்றிய கதை.

சிவன் மேல் பக்தி என்றாலும் , காமம் விடவில்லை. அது யாரை விட்டது ?

மனைவி இருக்கும் போது, ஒரு விலை மகளிடம் தொடர்பு கொண்டார்.

பாடல்

அளவு இலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி.
வளர் இளம் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு என்றும்
உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்
இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார்.

பொருள்

அளவு இலா = இவ்வளவு என்று கணிக்க முடியாத

மரபின் வாழ்க்கை = அவ்வளவு காலம் வாழ்ந்த வாழ்கை. பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் வாழ்கை

மண் கலம் = மண் பாண்டங்களை

அமுதுக்கு ஆக்கி = உண்பதற்காக ஆக்கி

வளர் இளம் திங்கள் = வளரும் இளமையான நிலாவை

கண்ணி = சூடிய

மன்று உளார் = மன்றத்தில் உள்ளார்

அடியார்க்கு என்றும் = அடியவர்களுக்கு என்றும் (சிவனடியார்களுக்கு என்றும்)

உளம் மகிழ் சிறப்பின் மல்க = உள்ளம் மகிழும் படி  சிறப்பாக

ஓடு அளித்து = திருவோடுகளை செய்து கொடுத்து

ஒழுகும் நாளில் = வாழும் நாளில்

இளமை மீது ஊர = இளமை மிகுந்து வர

இன்பத் துறையினில்= இன்பம் என்ற துறையில்

எளியர் ஆனார்.= வலிமை இழந்து எளியவர் ஆனார்

இதில் என்ன இருக்கிறது என்று தானே நினைக்கத் தோன்றுகிறது ?

பரம்பரை பரம்பரையாக குயவனாராக இருந்து வருபவர். இன்று நேற்று அல்ல, அளவு இல்லாத காலமாய் குயவனார் பரம்பரை.

எனவே பெரிய படிப்பு ஒன்றும் படித்திருக்க வழி இல்லை.

பெரிய சொத்து பத்து ஒன்றும் இருக்க வழி இல்லை.

அதற்கும் மேலே, விலை மகளிரிடம் சென்று வருகிறார்.

நாளும் வெயிலில் , சகதியில் கிடந்து உழலும் அவர் ஒன்றும் பெரிய சிவப்பாக அழகாகவும் இருக்க வழி இல்லை.

இப்படிப்பட்ட, படிக்காத, காலணா சொத்து இல்லாத, கண்ட பெண்களிடம் சென்று வரும் ஒருவரை  நாயன்மார் என்று சிவன் கோவிலில் வைத்து வழிபடும்  துணிவு வேறு எந்த மதத்துக்காவது உண்டா ?

அவரைப் பற்றி சோழ நாட்டின் முதலைமைச்சர் சேக்கிழார் பாடுகிறார்.

நீ படிக்காதவனாக இருந்து விட்டுப் போ.

பணம் காசு இல்லாதவனாக இருந்து விட்டுப் போ.

பரத்தைகளிடம் செல்லும் ஒழுக்க குறைவுள்ளவனாக இருந்துவிட்டுப் போ.

பக்திக்கு இது ஒன்றும் தடை இல்லை என்று பறை சாற்றியது நம் மதம்.

அது மட்டும் அல்ல.




திருவாசகம் - காணவும் நாணுவேன்

திருவாசகம் - காணவும் நாணுவேன் 


ஒரு நண்பரையோ உறவினரையோ நீண்ட நாள் பார்க்காமல் இருந்து பின் பார்த்தால் நமக்குள்ளே ஒரு நாணம் வரும் அல்லவா ?

எவ்வளவு நாள் ஒன்றாகப் பழகி இருந்தோம், நடுவில் இத்தனை நாள் பார்க்காமல், பேசாமல் இருந்து விட்டோமே. ஒரு கடிதமாவது போட்டிருக்கலாம். ஒரு போன் பண்ணி இருக்கலாம் என்று மனதுக்குள் ஒரு சிறு குறு குறுப்பு ஓடும் அல்லவா ? அது போல

இறைவா, என் வாழ்கையில் எத்தனையோ நிகழ்வுகள். அவற்றிற்கு இடையே உன்னை நான் நினைக்கவும் இல்லை, பார்க்க வரவும் இல்லை. ஒரு வேளை நீ நேரில் வந்து நின்றால் , எனக்கு உன்னை பார்க்க கூச்சமாக இருக்கும் என்கிறார் மணிவாசகர்.

அடடா, நமக்கு எவ்வளவு நல்லது செய்திருக்கிறான் இந்த இறைவன். அவனை ஒரு தரம் போய் பார்க்கவில்லையே. இப்போது எந்த முகத்தோடு அவனை சந்திப்பது என்ற நாணம் எனக்கு வரும் என்கிறார் மணிவாசகர்.

பாடல்



காணும தொழிந்தேன் நின்திருப்
பாதங் கண்டுகண் களிகூரப்
பேணும தொழிந்தேன் பிதற்றும
தொழிந்தேன் பின்னைஎம் பெருமானே
தாணுவே அழிந்தேன் நின்னினைந்
துருகுந் தன்மைஎன் புன்மைகளாற்
காணும தொழிந்தேன் நீயினி
வரினுங் காணவும் நாணுவனே.

சீர் பிரித்த பின்

காணும் அது ஒழிந்தேன்  நின் திருப் பாதங்கள் கண்டு கண் குளிரப் 

பேணும் அது ஒழிந்தேன் பிதற்றும் அது ஒழிந்தேன் பின்னை எம் பெருமானே

தாணுவே அழிந்தேன் நின்னை நினைந்து உருகும் தன்மை என் புன்மைகளால் 

காணும் அது ஒழிந்தேன் நீயினி வரினும்  காணவும் நாணுவனே.


பொருள்

காணும் அது ஒழிந்தேன் = உன்னை பார்பதையும் விட்டு விட்டேன்

நின் திருப் பாதங்கள் = உன் திருவடிகளை

கண்டு = கண்டு

கண் குளிரப் = கண் குளிர

பேணும் அது ஒழிந்தேன் = போற்றுவதையும் விட்டு விட்டேன்

பிதற்றும் அது ஒழிந்தேன் = உன் பெருமைகளை உன்மந்தம் அடைந்து பேசுவதையும் விட்டு விட்டேன்

பின்னை = அப்புறம்

எம் பெருமானே = எம் பெருமானே

தாணுவே = நிலையானவனே

அழிந்தேன்= நான் கெட்டேன்

நின்னை = உன்னை

நினைந்து உருகும் தன்மை = நினைத்து உருகும் தன்மை

என் புன்மைகளால் = என்னுடைய சிறிய குணங்களால்

காணும் அது ஒழிந்தேன் = கண்டு கொள்ளவும் தவறினேன்

நீ இனி  வரினும் = நீ இனிமேல் வந்தாலும்

காணவும் நாணுவனே.= உன்னை நேரில் பார்பதற்கும் நான் வெட்கப் படுவேன்




Tuesday, November 3, 2015

திருக்குறள் - பெரியோர் துணை

திருக்குறள் - பெரியோர் துணை 


வாழ்க்கையில் முன்னேற நாம் எத்தனையோ புத்தகங்களைப் படிக்கிறோம். மேலும் இப்போது இணைய தளங்களில் எவ்வளவோ அறிவு பொக்கிஷங்கள் கொட்டிக் கிட்டக்கின்றன. Wikdipedia , கூகிள் , ப்ளாகுகள் என்று ஆயிரம் ஆயிரம் வலை தளங்கள் அறிவை நம் இல்லதிற்குள்ளேயே கொண்டு வந்து கொட்டுகின்றன.  உலகில் எதைப் பற்றிய தகவல் வேண்டுமானாலும் சில நொடிகளில் அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறது.

இருந்தும், நம் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. இன்னும் சொல்லப் போனால், பிரச்சனைகள் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது.

ஏன் ? அறிவு ஒரு தீர்வு இல்லையா ? ஞானம் வழி காட்டாதா ?  பெரியவர்கள் எல்லோரும் ஞானத்தைப் பற்றி மிக உயர்வாகச் சொல்லி இருக்கிறார்களே. பின் ஏன், இத்தனை அறிவு இருந்தும் நாம் மகிழ்ச்சியாக இல்லை ?

வாழ்கை சிறக்க வேண்டும் என்றால், படிப்பறிவு, புத்தக அறிவு மட்டும் போதாது.

இன்னும் சொல்லப் போனால், சில சமயம் புத்தகங்கள் நம்மை குழப்பக் கூடும்.  ஒன்றுக்கு ஒன்று முரணான தகவல்களைத் தந்து நம்மை குழப்பத்தில் ஆழ்த்தக் கூடும்.

வாழ்கை சிறக்க வேண்டும் என்றால் இரண்டு விசயங்களை சொல்கிறார் வள்ளுவர் - அற வழியில் செல்ல வேண்டும், இரண்டாவது பெரியவர்களின் துணை வேண்டும்.

பாடல்


அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மை 
திறனறிந்து தேர்ந்து கொளல்.

பொருள்

அறனறிந்து = அறத்தினை அறிந்து

மூத்த வறிவுடையார் = மூத்த அறிவுடையார்

கேண்மை = நட்பு

திறனறிந்து = அவர்களின் திறமையினை அறிந்து

தேர்ந்து  கொளல் = தேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பாப்போம்.

அறன் அறிந்து - அதாவது நமக்கு முதலில் அறம் என்றால் என்ன என்று தெரிய வேண்டும். சும்மா முட்டாளாக இருந்து கொண்டு பெரியவர்களின் துணையை நாடுகிறேன் என்றால் அது உதாவது. அறம் என்றால் என்ன அறிந்து கொண்ட பின், அதில் சிக்கல்கள் வரும், குழப்பங்கள் வரும், அதன் முரண்களில் சிக்கித் தவிப்போம். அப்போது, பெரியோர்களின் துணையை நாட வேண்டும்.

இராமன், அறம் என்ன என்பதை வசிட்டரிடம் இருந்து கற்றுக் கொண்டான். அவன் கற்ற அறம் மாதரையும் தூதரையும் கொல்லக் கூடாது என்பது. தாடகை என்ற ஒரு பெண்  இராம இலக்குவனர்களை கொல்ல எதிர் நிற்கிறாள். அவளைக் கொல்லலாமா , கொல்லக் கூடாதா என்ற குழப்பம் வருகிறது இராமனுக்கு.  அப்போது விஸ்வாமித்திரன் சொல்லக் கேட்டான்.

மூத்த அறிவுடையார் = அது என்ன மூத்த அறிவுடையார் ? எதில் மூத்தவர்கள் ? நம் வீடுகளில் வயதானவர்கள் அடிக்கடி சொல்வதை நாம் கேட்டிருப்போம் "நான் வயசுல பெரியவன் டா ...பெரியவங்க சொன்னா கேக்கணும் " என்று. வயதால் மூத்தால் மட்டும் போதாது.  இதற்கு உரை எழுதிய பரிமேல் அழகர் சொல்கிறார் "அறிவாலும், சீலத்தாலும், காலத்தாலும் மூத்தவர்கள்" என்று. வயது மட்டுமே போதும் என்றால் கடல் ஆமை மூன்னூறு ஆண்டுகள் வாழும், அது சொல்வதைத்தான் கேட்க வேண்டும். அறிவும், ஒழுக்கமும் வேண்டும். அவையும் நம்மை விட அவர்களிடம் அதிகம் இருக்கிறதா என்று பார்த்து அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். சில பேரிடம் அறிவு இருக்கும். வயதும் இருக்கும். ஒழுக்கம் இருக்காது. மூளை பூராவும் குறுக்கு சால் ஓட்டும். குயுக்தி இருக்கும். குள்ளநரித்தனம் இருக்கும். அவர்கள் பெரியவர்கள் இல்லை.


திறன் அறிந்து = ஒருவர் ஒன்றில் பெரியவர் என்றால் அவர் அனைத்து விஷயத்திலும் பெரியவராக  இருக்க வேண்டிய அவசியம் இல்லை. யாரிடம் என்ன திறமை  இருக்கிறது என்று அறிந்து (திறன் அறிந்து) பின் அந்த விஷயத்தில் அவர் சொல்வதை கேட்க்க வேண்டும். 

கேண்மை = திறமை உள்ளவர்களை வேலைக்கு வைத்துக் கொள் என்று சொல்லவில்லை. அவர்களிடம் நமக்கு வேண்டிய போது சென்று யோசனை கேட்டுக் கொள்ளச் சொல்லவில்லை. அவர்களது நட்பைப் பெற வேண்டும் என்கிறார்  வள்ளுவர். ஏன் என்றால் அவர்கள் நம்மோடு நட்பாக இருந்தால் நம்மிடம் உள்ள   நிறை குறைகள் அவர்களுக்குத் தெரியும். அதற்கு தகுந்த மாதிரி  யோசனை சொல்வார்கள். 

தேர்ந்து கொளல் = தேர்ந்து கொள்ள வேண்டும் என்றால் அவர்களை சிறப்பித்து, உயர்வு செய்து, மரியாதை செய்து அவர்களது நட்பை கொள்ள வேண்டும். 

இந்த ப்ளாகை படித்து விட்டீர்கள்தானே ?

கண்ணை மூடி ஒரு நிமிடம் யோசியுங்கள்.

உங்கள் நட்பு வட்டாரத்தில் அறிவில், ஒழுக்கத்தில், காலத்தில் உங்களை விட  மூத்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று. 

நிறைய பேர் இருந்தால் நல்லது.

இல்லை என்றால், ஏன் இல்லை என்று சிந்தியுங்கள். யார் யாரை துணை கொள்ளலாம் என்று  ஒரு பட்டியல் போடுங்கள். அவர்கள் நட்பைப் பெற முயலுங்கள். 

இப்படி பத்து குறள் சொல்லி இருக்கிறார், பெரியாரை துணை கோடல் என்ற அதிகாரத்தில். 

கொட்டி குவித்து விட்டுப் போய் இருக்கிறார்கள். வெட்டி எடுத்துக் கொண்டு வாருங்கள். 

வாழ்கை சிறக்கும். 

சிறக்கட்டும்.


Thursday, October 29, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - வருத்தம் அனைத்தும் போக

இராமானுஜர் நூற்றந்தாதி - வருத்தம் அனைத்தும் போக



உலகில் எல்லா உயிர்களும் இன்பத்தையே விரும்புகின்றன. அதை வேண்டியே முயற்சியும் செய்கின்றன. இருந்தும் துன்பம் வருகிறது.

ஏன் ?

துன்பத்திற்கு மூல காரணம் என்ன ?

காமம் - வெகுளி - மயக்கம் எந்த மூன்றும் தான் துன்பத்திற்கு காரணம்.

காமம் புரிகிறது - ஆசை, பற்று. பொருளின் மேல், புகழின் மேல், பெண்ணின் மேல், இப்படி ஆயிரம் பற்றுகள்.

வெகுளி - கோபம். ஆசைப் பட்டது கிடைக்காவிட்டால் கோபம் வருகிறது. கோபத்திற்கு காரணம் ஆசை.

மயக்கம் - எது சரி, எது தவறு / எது உண்மை, எது பொய் / எது நிரந்தரமானது, எது நிரந்திரம் இல்லாதது என்ற குழப்பம் மயக்கம் எனப்படும்.

இந்த மூன்றும் நம் துன்பத்திற்கு காரணம்.

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக் கெடும் நோய்

என்பார் வள்ளுவர்.

இந்த மூன்றும் எப்படி போகும் ?

ஆசாரியனின் பாதங்களைப் பிடித்தால் காமம், வெகுளி , மயக்கம் என்ற இந்த மூன்றும்  போகும். அவை போய் விட்டால் துன்பம் தானாக ஓடிவிடும்.


அமுதனார் சொல்கிறார்.

"எனக்கும் வருத்தம் இருந்தது. ஆனால், அந்த வருத்தம் இப்போது இல்லை.  போய் விட்டது.

எப்படி தெரியுமா ?

வார்த்தைகளுக்கு எட்டாத பெரும் புகழை உடைய நம் கூத்தாழ்வானின் திருவடிகளை அடைந்த பின் , எனக்கு இராமனுஜரின் புகழைப் பாடும் தைரியம் வந்து விட்டது. இனி மேல் இந்த பிறவி என்ற பெரும் வழியைக் கடந்து விடுவேன். எனக்கு இப்போது எந்த வருத்தமும் இல்லை. "


பாடல்

மொழியைக் கடக்கும் பெரும்புகழான், வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும்நம் கூரத்தாழ் வான்சரண் கூடியபின்
பழியைக் கடத்தும் இராமா னுசன்புகழ் பாடியல்லா
வழியைக் கடத்தல் எனக்கினி யாதும் வருத்தமன்றே.


பொருள் 


மொழியைக் = வார்த்தைகளை 

கடக்கும் = தாண்டி, வார்த்தைகளுக்கு அடங்காத 

பெரும்புகழான் = பெரிய புகழை உடையவன் 

வஞ்ச முக்குறும்பாம் = வஞ்சகமான மூன்று குறும்பான 

குழியைக் கடக்கும் = குழியை கடக்க உதவும் 

நம் = நம்முடைய 

கூரத்தாழ் வான்  = கூரத்தாழ்வானை 

சரண் கூடியபின் = சரணம் அடைந்த பின் 

பழியைக் கடத்தும் = பழியை கடக்கும் 

இராமா னுசன் = இராமானுசன் 

புகழ் பாடியல்லா = புகழைப் பாடி 

வழியைக் கடத்தல் = வழியைக் கடப்பது 

எனக்கினி யாதும் வருத்தமன்றே. = எனக்கு + இனி + யாதும் + வருத்தம் + அன்றே 

அது என்ன முக்குறும்பு ? 

குறும்பு என்றாலே செய்வதோ சொல்வதோ ஒன்றாக இருக்கும், ஆனால் அதற்குப் பின்னால்  வேறு ஒன்று இருக்கும். இந்த காம வெகுளி மயக்கம் என்ற மூன்றும்   முதலில் நல்லது போலத் தோன்றினாலும், பின்னாளில் வருத்தத்தில் கொண்டு போய் விட்டு விடும். 

முந்தைய பாடலில் இராமனுசன் மேல் தனக்கு அன்பில்லை, பக்தி இல்லை என்று கூறினார். பின் கூரத்தாழ்வானின் சரணம் புகுந்த பின், பயம் தெளிந்து விட்டது. இனி இராமானுஜரின் புகழைப் பாடலாம் என்று நினைக்கிறார்.

அது மட்டும் அல்ல, அபப்டி அவர் புகழ் பாடுவதன் மூலம், இந்த பிறவி என்ற நீண்ட பாதையை கடந்து விட முடியும் என்ற நம்பிக்கையும் அவருக்கு வருகிறது. இனி ஒரு கவலை இல்லை என்கிறார். 

ஆசாரியன் மேல் அவ்வளவு பக்தி. அவ்வளவு நம்பிக்கை.


Monday, October 26, 2015

திருக்குறள் - பெய் எனப் பெய்யும் மழை

திருக்குறள் - பெய் எனப் பெய்யும் மழை 


எல்லோருக்கும் தெரிந்த குறள் தான். தெய்வத்தை தொழாமல், கணவனை தொழுது எழுவாள். அவள் பெய் என்றால் மழை பெய்யும்.

குறள்

தெய்வம் தொழாஅள், கொழுநன்-தொழுது எழுவாள்,
‘பெய்’ என, பெய்யும் மழை.

பொருள்

தெய்வம்= தெய்வத்தை

தொழாஅள் = தொழ மாட்டாள்

கொழுநன் = கணவனை

தொழுது எழுவாள் = தொழுது எழுவாள்

‘பெய்’ என, பெய்யும் மழை.= அவள் பெய் என்றால் மழை பெய்யும்

அஹா, இந்த வள்ளுவர் பெரிய ஆணாதிக்க வர்கத்தை சேர்ந்தவராக இருப்பார் போல் இருக்கிறதே.

மனைவி எதற்காக கணவனை தொழ வேண்டும் ? ஏன் கணவன் மனைவியை தொழக் கூடாது ?

பெண் அடிமை தனத்திற்கு வக்காலத்து வாங்குவது போல் இருக்கிறதே இந்தக் குறள் என்று கொடி பிடிப்பதற்கு முன்னால் சற்று ஆழ்ந்து யோசிப்போம்.


இது யாருக்குச் சொல்லப் பட்ட குறள் ?

பெண்ணுக்கா ? கணவனை தொழுது எழு என்று பெண்ணுக்கு சொல்லவா இந்த குறள் முனைகிறது ?

இல்லை, இது கணவனுக்குச் சொல்லப் பட்ட குறள் .

உன் மனைவி உன்னை தெய்வமாக நினைத்து தொழ வேண்டும் என்றால், நீ தெய்வம் போல நடந்து கொள் என்று கணவனுக்குச் சொல்லப் பட்ட குறள் .

தெய்வம் என்ன செய்யும் ?

படைத்து, காத்து, அழிக்கும் முத்தொழிலையும் செய்யும்.

மனைவிக்கு வேண்டியதை கொடுத்து, அவளை காப்பாற்றி, அவளுக்கு எதிரான எல்லாவற்றையும்  அழிக்கும் கணவன் , அந்த பெண்ணுக்கு தெய்வம் தான்.

அப்படி ஒரு கணவன் வாய்த்தால் , எந்த பெண்ணும் அவனை தொழத் தயங்க மாட்டாள்.

நிஜமாவே இந்த குறளுக்கு இதுதான் அர்த்தமா ?

வள்ளுவர் கணவன் என்ற சொல்லைப் போடவில்லை. கொழுநன் என்ற சொல்லை உபயோகப் படுத்துகிறார்.

கொழு கொம்பு, கொடியை தாங்குவதைப் போல கணவன் மனைவியை தாங்க வேண்டும் என்ற கருத்து வரும்படி கொழுநன் என்ற சொல்லை இங்கே போடுகிறார் வள்ளுவர்.

அது தொழுது எழுவாள் ? எழுந்த பின் தானே தொழ முடியும் ? தொழத பின் எழுந்தாள் என்றால் படுத்துக் கொண்டே தொழுவதா ?

அதாவது, கணவனுக்கு அருகில் மனைவி படுத்திருக்கிறாள்.

விழிப்பு வந்து விட்டது. எழுந்திருக்கவில்லை. கணவனை பார்க்கிறாள். அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறான். நாள் எல்லாம் உழைத்த அசதி.

நமக்காகத்தானே இத்தனை பாடு படுகிறான், பாவம்,  என்று அவள் மனதில் ஒரு  அன்பு பிறக்கிறது அவன் மேல். அவளை அறியாமலேயே அவள் கைகள் அவனை  வணங்குகின்றன. இது நீ பெரியவன், நான் தாழ்தவள் என்பதால் வந்தது அல்ல.

எனக்காக நீ எவ்வளவு கஷ்டப் படுகிறாய் என்ற நன்றி உணர்வில் வந்த தொழுதல்.


அதெல்லாம் போகட்டும், கடவுளை தொழ மாட்டாள் என்று எதுக்குச் சொல்லணும்  ?

கணவன் அருகில் படுத்து இருக்கிறான். கணவனும் எழவில்லை. அவளும் இன்னும் எழுந்து நீராடி தூய்மையாக வில்லை. எனவே தெய்வத்தை தொழ முடியாது. கணவன் அருகில் தானே இருக்கிறான் ...அவனை தொழுகிறாள்.


அவ்வளவு அன்யோன்யம் அவர்களுக்குள்ளே.

சரி, அது போகட்டும், அது என்ன பெய் எனப் பெய்யும் மழை ? ஊருக்குள் போய் எந்தப்  பெண்ணிடமாவது மழை பெய்ய சொல்லி பாருங்கள். எந்த பெண் சொன்னாலும் மழை  பெய்யாது. அப்படி என்றால் வள்ளுவர் அப்படி ஒரு உதாரணத்தை ஏன் போட்டார் ?

மழை பெய்தும் கெடுக்கும், காய்ந்தும் கெடுக்கும். வேண்டிய நேரத்தில் பெய்யாது. வேண்டாத நேரத்தில் பெய்து துன்பத்தை கொடுக்கும்.

நமக்கு எப்போது வேண்டுமோ அப்போது மழை பெய்தால் அது எவ்வளவு இனிமையாக இருக்கும் ?

அந்த அளவு இனிமையானவள் பெண் - பெய் என்றால் பெய்யும் மழை எவ்வளவு இனிமையோ  அது போன்றவள் பெண்.

இப்போது சொல்லுங்கள், வள்ளுவர் ஆணாதிக்க சிந்தனை கொண்டவரா ?

ஒவ்வொரு வார்த்தையையும் தேர்ந்து எடுத்து குறளை வடித்து இருக்கிறார்.








Friday, October 23, 2015

இராமானுஜர் நூற்றந்தாதி - பக்தி இல்லாத என் நெஞ்சால்

இராமானுஜர் நூற்றந்தாதி - பக்தி இல்லாத என் நெஞ்சால் 


நம்மைப் பார்த்து "நீங்கள் யார் " என்று கேட்டால் நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். நம்முடைய வீர தீர பிராதாபங்களை எடுத்து  அடுக்குவோம். நம்மிடம் சொல்லிக் கொள்ளும் படி ஒன்றும் இல்லாவிட்டாலும்,  நம் பரம்பரையில்  சில பல தலைமுறைகளுக்கு முன்னால் யாராவது எதையாவது சாதித்து இருந்தால் அதைச் சொல்லி நம்மை அதோடு  தொடர்பு படுத்தி பெருமை கொள்வோம்.

அடக்கம் என்பது அணுவளவும்  கிடையாது.

ஆரவமுதனார் சொல்கிறார்

"சொல்லையும் பொருளையும் இசையோடு சேர்த்து, அன்போடு இராமனுஜரை எத்தனையோ பேர் பாடி இருக்கிறார்கள். எனக்கு புத்தி இல்லாமல், கவிதை எழுதி பழகும் நான், இந்தப் பாவி,  இராமானுஜரின் பெருமைகளை பாட முயல்கின்றேன் "

என்ன ஒரு அடக்கம் 


பாடல்

இயலும் பொருளும் இசையத் தொடுத்து, ஈன் கவிகளன்பால்
மயல்கொண்டு வாழ்த்தும் இராமா னுசனை,மதியின்மையால்
பயிலும் கவிகளில் பத்தியில் லாதவென் பாவிநெஞ்சால்
முயல்கின் றனன் அவன் றன்பெருங் கீர்த்தி மொழிந்திடவே.


பொருள்

இயலும் = சொல்லும் (சப்தமும்)

பொருளும் = சொல்லின் பொருளும்

இசையத் தொடுத்து = இசையோடு சேர்த்து

ஈன் கவிகளன்பால் = ஈன் + கவிகள் + அன்பால் = ஈனுகின்ற என்றால் பெற்று  எடுக்கின்ற   என்று பொருள். பசு கன்று ஈன்றது என்று சொல்லுமாப் போல். கவிதை  மனதில் கருக் கொண்டு, நாளும் வளர்ந்து பின் ஒரு குழந்தை பிரசவத்தில்  வருவது போல கவியின் மனதில் இருந்து கவிதை பிறக்கிறது. அப்படி, வரும் கவிதையும் , அன்பால்  வந்தது.

மயல்கொண்டு = ஆசை கொண்டு

வாழ்த்தும் = வாழ்த்தும்

இராமா னுசனை = இராமானுஜரை

மதியின்மையால் = அறிவு இல்லாமையால்

பயிலும் கவிகளில் = படித்துக் கொண்டிருக்கும் கவிதையில்

பத்தியில் லாதவென் = பக்தி இல்லாத என்

பாவிநெஞ்சால் = பாவி நெஞ்சால்

முயல்கின் றனன் = முயற்சி செய்கிறேன்

அவன் றன் = அவன் தன்

பெருங் கீர்த்தி = பெரிய புகழை

மொழிந்திடவே = சொல்லி விடவே .


என்னிடம் பக்தியும் இல்லை, அன்பும் இல்லை, கவி பாடும் திறமையும் இல்லை என்று எவ்வளவு தன்னடக்கத்துடன் கூறுகிறார்.






Tuesday, October 20, 2015

இராமானுசர் நூற்றந்தாதி - பழியும் புகழும்

இராமானுசர் நூற்றந்தாதி - பழியும் புகழும் 


எதைச் செய்தாலும் குற்றம் காண்பதற்கு என்றே சிலர் இருப்பார்கள். நல்லவற்றை விட்டு விட்டு , குறைகளையே தேடி கண்டு கொள்ளும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.


பாடல்

எனக்குற்ற செல்வம் இராமா னுசனென்று இசையகில்லா
மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னியசீர்
தனக்குற்ற அன்பர் அவந்திரு நாமங்கள் சாற்றுமென்பா
இனக்குற்றம் காணகில் லார், பத்தி ஏய்ந்த இயல்விதென்றே.

பொருள்

எனக்குற்ற = எனக்கு உற்ற = எனக்கு கிடைத்த

செல்வம் = செல்வம்

இராமா னுசனென்று = இராமானுஜன் என்று

இசையகில்லா = ஏற்றுக் கொள்ளாத

மனக்குற்ற = மனதில் குற்றம் உள்ள

மாந்தர் = மக்கள்

பழிக்கில் = பழி சொன்னால்

புகழ் = அதுவும் புகழே

அவன் = இராமானுஜரின்

மன்னிய = நிலைத்த

சீர் = சிறந்த

தனக்குற்ற = அவனுக்கு உரிய

அன்பர் = அன்பர்கள்

அவந்திரு நாமங்கள் = அவனுடைய திரு நாமங்களை

சாற்றுமென்பா = சாற்றும் + என் + பா = சொல்லும் என் பாடல்கள்

இனக்குற்றம் = இந்த குற்றங்களை

காணகில் லார் = காண மாட்டார்கள்

பத்தி = பக்தி

ஏய்ந்த  இயல்விதென்றே.= ஏற்ற இயல்பு இது என்று சொல்லுவார்கள்

ஏன் பழி போடுகிறார்கள் ? இந்த பாடல்களில் அப்படி என்ன பழி சொல்லும் படி இருக்கிறது ?


அமுதனார், வேதம், சாஸ்திரம், போன்றவற்றில் சொன்னவைகளை எல்லாம் விட்டு விட்டார். இராமானுசர் ஒருவரே எல்லாம் என்று அவரைப் பற்றிக் கொண்டார். ஆசாரியனே எல்லாம் , ஆண்டவன் கூட கிடையாது என்று அவர் கூறியதை பெரும்பாலோனோர் ஏற்றுக் கொள்ளாததில் வியப்பு இல்லை.

ஆசாரியன், குரு இல்லாமல் இறைவனை, உண்மையை அறிய முடியாது.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று பாடினார் அருணகிரிநாதர்.

தாயாய் வருவாய் அருள்வாய் குகனே என்று சொல்லி இருக்கலாம்.

தந்தையாய் வருவாய் அருள்வாய் குகனே என்று சொல்லி இருக்கலாம்.

ஏன் குருவாய் வருவாய் என்றார் என்றால் குரு தான் நமக்கு இறைவனை காட்ட முடியும்.

தாய்தான் நமக்கு தந்தையை காட்டுகிறாள். "அப்பா பாரு..." என்று பிள்ளைக்கு அப்பாவை அறிமுகப் படுத்துபவள் தாய். தாய் சொல்லாவிட்டால் , தந்தை யார் என்றே தெரியாமல் போய் விடும்.

தந்தை, கைபிடித்து அழைத்துப் போய் பள்ளியில் சேர்த்து குருவை அறிமுகப் படுத்துகிறார். எனவே தான் "தந்தையோடு கல்வி போம்" என்று சொன்னார்கள்.

குருதான், நமக்கு இறைவைனை அறிமுகப் படுத்த வேண்டும்.

அப்படி இராமானுசரையே எல்லாம் என்று கொண்டாடிய என் பாடல்கள் பிழை என்று சொன்னால்  அதுவே கூட அதற்கு புகழ் தான் என்கிறார்.

அது எப்படி பழியே புகழாகும் ?

என்ன பழி போடுகிறார்கள் - ஆசாரியனே எல்லாம் என்று இந்த அமுதனார் கூறுகிறார், ஆண்டவனே ஆசாரியனுக்கு அடுத்தபடிதான் என்று கூறுகிறார் என்றெலாம்  பழி போடுவார்கள்.

அமுதனாருக்கு சந்தோஷம். அது தானே அவருக்கு வேண்டும். இப்படி எல்லோரிடமும் போய் சொல்லி ஆசாரியனின் புகழை  பரப்ப இந்த பழி கூட உதவும் என்கிறார்.

பக்தி உள்ளவர்களுக்கு அது புரியும் என்கிறார். பக்தி உள்ளவர்கள், இராமானுசரின் மேல் அன்பு கொண்டவர்கள் இந்தப் பாடல்களில் குறைகளை காண மாட்டார்கள் என்கிறார்.

மாலுமி இல்லாத கப்பல், ஓட்டுனர் இல்லாத வண்டி போல ஆகிவிடும் ஆசாரியன் இல்லாத  வாழ்கை.