அபிராமி அந்தாதி - மனதின் இருள் அகற்றியவள்
சந்தையில் புதிதாக ஒரு பொருள் வந்தால் அதை வாங்க ஆசைப் படுகிறோம். புதிய கை தொலைபேசி, கணணி, சமையலறை சாதனம், புதிய புடவை, புதிய வண்டி என்று பொருள்கள் மேல் ஆசைப் படுகிறோம்.
ஆசைப் பட்டு வாங்கிய பொருள்கள் நமக்கு இன்பம் தருகின்றன. அவற்றின் பலனை அனுபவிக்கிறோம். சந்தோஷமாய் இருக்கிறது. இது இல்லாம எத்தனை நாள் கஷ்டப் பட்டேன் என்று நிம்மதி பெரு மூச்சு விடுகிறோம்.
நாள் ஆக ஆக பொருள் பழையதாகிறது. அடிக்கடி பழுதாகிறது. அதைவிட சிறந்த பொருள் சந்தையில் வருகிறது. நாம் பெருமையாய் நினைத்த பொருள் இன்று நன்றாக இல்லை. சில சமயம் அந்தநாள் எரிச்சல் வருகிறது. " இந்த சனியனை முதலில் தலைய சுத்தி விட்டு எரியனும்...இதை கட்டி யாரு மேய்கிறது ..." என்று அங்கலாய்க்கிறோம்.
பின் கொஞ்சம் தெளிவு வருகிறது. எல்லா சாமானும் இப்படித்தான். வாங்குன கொஞ்ச நாளைக்கு நல்லா இருக்கும். அப்புறம், இப்படித்தான். சரி சரின்னு போக வேண்டியது தான் என்று ஒரு ஞானம் பிறக்கிறது.
அபிராமி, அந்த பொருளாகவும், அந்த பொருள் தரும் சுகமாகவும், அது சுகமா அல்லது சுமையா என்ற குழப்பமாகவும், அந்த குழப்பத்தில் இருந்து வரும் அறிவாகவும் இருக்கிறாள், இதை எல்லாம் அறிந்து கொள்ளும் அருளையும் அவள் எனக்குத் தந்தாள்.
முதலில் பொருட் செல்வம். பின்னர் அருட் செல்வம் ...இரண்டு செல்வத்தையும் தருபவள் அபிராமி.
அவள் என் மனத்தில் வஞ்சமாகிய இருள் ஏதும் இல்லாமல் அத்தனையும் ஒளி வெள்ளமாகச் செய்தாள்.
அவளின் அருளை என்னவென்று சொல்லுவது.
பாடல்