Tuesday, June 1, 2021

நள வெண்பா - பெண்மை அரசு

நள வெண்பா - பெண்மை அரசு 


இனி வரும் நாட்களில் பெண்மை என்று ஒரு குணம் இருந்ததாகவும், அந்தக் குணம் பெண்களிடம் இருந்ததாகவும் வரலாற்று புத்தகங்களில் காணலாம்.  பெண்மை என்றால் ஏதோ அடிமைத்தனம் என்ற எண்ணம் பெண்களுக்கு வந்து விட்டது. எப்படியாது இந்தப் பெண் தன்மையை விட்டு ஒழிக்க வேண்டும் என்று பாடு படுகிறார்கள். 


ஆண்கள் என்னவெல்லாம் செய்கிறார்களோ அவற்றை தாங்களும் செய்வோம் என்று பெண்கள் ஆண்மையை ஏற்றுக் கொள்ளும் காலத்தில் இருக்கிறோம். 


நாங்களும் தண்டால், குஸ்தி போடுவோம், பளு தூக்குவோம், படையில், போலீஸ் வேலையில் சேர்வோம், பிள்ளைகளை பார்க்க மாட்டோம் என்று ஒரு புதிய தலைமுறை உருவாகிக் கொண்டு இருக்கிறது. 


அது தவறா, சரியா என்று காலம்தான் சொல்ல வேண்டும். 


அந்தக் காலத்தில், 


தமயந்தி இருந்தாள். அவள் எப்படி இருந்தாள் என்று ஒரு அன்னப் பறவை நள  மன்னனிடம் கூறுகிறது. 


"பெண்மை" என்ற அரசை ஆண்டாளாம்.


அது என்ன அரசு?


"அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களும் நான்கு படைப் பிரிவுகளாக, ஐந்து புலன்களும் அமைச்சர்களாக இருந்து அறிவு புகட்ட, காலில் அணிந்த சிலம்பு முரசாக ஒலிக்க, கண்கள் இரண்டும் வேல் மற்றும் வாள் என்ற ஆயுதமாக இருக்க, நிலவு போன்ற குளிர்ந்த முகம் வெண் கொற்றக் குடையாக இருக்க, பெண்மை என்ற அரசை அவள் ஆண்டாள்" என்கிறார் புகழேந்தி. 


பாடல் 


 நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா

ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்

வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்

ஆளுமே பெண்மை அரசு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post.html


(Please click the above link to continue reading)


நாற்குணமும்  = அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களும் 


நாற்படையா  = நான்கு படைகளாக (இரதம், யானை, குதிரை, காலாட் படை) 


ஐம்புலனும் = ஐந்து புலன்களும் 


நல்லமைச்சா = நல்ல அமைச்சர்களாக இருந்து வழி காட்ட 


ஆர்க்கும் சிலம்பே = ஒலிக்கும் சிலம்பே  (கொலுசு) 


அணிமுரசா = முரசமாக ஒலிக்க 


வேற்படையும் = வேல் படையும் 


வாளுமே  = வாள் படையும் 


கண்ணா  = இரண்டு கண்களாக 


வதன = முகம் 


மதிக் = சந்திரன், நிலவு 


குடைக்கீழ் = வெண் கொற்றக் குடைக் கீழ் 


ஆளுமே பெண்மை அரசு. = பெண்மை என்ற அரசை ஆண்டு கொண்டிருந்தாள் 


நல்ல காலம் புகழேந்தி எழுதி வைத்தார். 


Monday, May 31, 2021

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 10 - இறுதிப் பாகம்

        

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 10 - இறுதிப் பாகம் 



பாடல் 


 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/10.html


(pl click the above link to continue reading)


சுவை = சுவை 


ஒளி = ஒளி 


ஊறு = தொடு உணர்ச்சி 


ஓசை = ஓசை 


நாற்றம் = மூக்கால் நுகர்வது 


மென் றைந்தின் = என்ற ஐந்தின் 


வகை = கூறுபாடுகளை 


தெரிவான் = ஆராய்ந்து அறிபவன் 


கட்டே உலகு = கண்ணதே உலகம் 


( இதன் முந்தைய பகுதிகளை கீழே காணலாம்)


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_20.html







)

ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்பதில் ஐந்தின் வகை பற்றி நாம் சிந்திக்க இருக்கிறோம். 


இதுவரை 


1. மூலப் பிரகிருதியும் அதில் இருந்து பிறந்த பிரகிருதி 

2.  மான் அல்லது மஹத் 

3. அகங்காரம் 

4. மனம் 

5,6,7,8,9 - ஐந்து ஞானேந்திரியங்கள் 

10 - கை 

11 - கால் 

12 - பாயு (மல ஜலம் வெளியேற்றும் உறுப்புகள்) 

13 - வாக்கு 

14 - பிறப்பு உறுப்புகள் 

15 சுவை 

16 ஒளி 

17 ஊறு 

18 ஓசை 

19 நாற்றம் 

வரை சிந்தித்தோம். 


ஞானேந்திரியங்களும், கண்மேந்திரியங்களும், தன் மாத்திரைகள்  தோன்றி விட்டன. 


அடுத்ததாக, பஞ்ச பூதங்கள் பற்றி சொல்கிறது சாங்கியம். 


20 = ஆகாயம், வெளி 


21 - நீர் 


22 - நிலம் 


23 - நெருப்பு 


24 - காற்று 


இந்த ஐந்து பூதங்களும், ஐந்து புலன்களோடு தொடர்பு கொண்டவை என்று முந்தைய ப்ளாகில் பார்த்தோம். 


வெளி அல்லது ஆகாயம், காது, கேட்டல் என்பதோடும் 

நிலம், மணம், மூக்கு என்பதோடும் 

நெருப்பு, ஒளி, கண் என்பதோடும் 

நீர், சுவை, நாக்கு என்பதோடும் 

காற்று, தோல், தொடு உணர்வோடும் 


தொடர்பு பட்டன என்று பார்த்தோம். 


ஒரு புறம் இந்த உலகம், பஞ்ச பூதங்கள், ஞான மற்றும் கன்மேந்திரியங்கள், மற்றும் தன் மாத்திரைகள். 


இவை எல்லாம் ஒரு புறம். 


இவற்றை அனுபவிப்பது யார் என்ற பெரும் கேள்வி நிற்கிறது?


கண் அனுபவிக்குமா ? கண்ணுக்குத் தெரியுமா அது ஒரு அழகான பூவை பார்க்கிறது என்று? கண்ணின் வேலை அதற்கு வரும் ஒளியை உள்ளே செல்லுத்துவது. அதற்கு வேறு ஒன்றும் தெரியாது. 

மூளை பார்க்குமா? மூளை பார்க்கும் என்றால் எல்லோரும் ஒரே விதமாக அல்லவா பார்க்க வேண்டும்?


இசை அறிந்தவன் அது இன்ன இராகம் என்கிறான். சுருதி சரி இல்லை என்கிறான். இசை அறியாதவனுக்கு அது ஒரு இனிய சத்தம் அவ்வளவுதான்.  கல்யாணியும், காம்போதியும் இசை அறியாதவனுக்கு ஒன்றுதான். 


கேட்பது காது அல்ல, மூளை அல்ல. முன் சேர்த்த ஞாபகம், அறிவு, கல்வி, அனுபவம் எல்லாம் சேர்ந்த ஒன்று. 


ஒரு பெண்ணைப் பார்த்தால், அவளுடைய தகப்பன் அவளை மகள் என்கிறான், கணவன் மனைவி என்கிறான், பிள்ளை அம்மா என்கிறான். அவள் யார்? பார்ப்பவரின் கோணத்தில் இருந்து பார்ப்பது மாறுபடுகிறது. 


இசை அறிந்தவனுக்கு கல்யாணி. அறியாதவனுக்கு சத்தம். 


உலகம் என்பது நம் உள்ளே உள்ள ஏதோ ஒன்றின் அனுபவப் பொருளாக இருக்கிறது.  


காது சுத்தமாக கேட்கவில்லை என்றால் இசையை எப்படி அனுபவிப்பது? 


அனுபவிக்க இசையும் வேண்டும், கேட்கும் காதும் வேண்டும்,  அதை அறியும் அறிவும் வேண்டும். ஆனால் இந்த மூன்றும் இசையை அனுபவிப்பது அல்ல. 


அந்த அனுபவிக்கும் பொருளை "புருஷன்" என்கிறார்கள். 


24 தத்துவங்கள் மேலே சொன்னது. 


இவற்றை அனுபவிக்கும் புருஷன்  25 ஆவது தத்துவம் என சாங்கிய தத்துவம் மொத்தம் 25.


சாங்கியர்கள் இந்த 25 ஓடு நிறுத்திக் கொண்டார்கள். சைவ சமயம் மேலும் செல்கிறது. சைவ சித்தாந்தம் 36 தத்துவங்களை கொண்டது. 


ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்

பேறா அடியேன், பெறுமாறு உளதோ?

சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்

கூறா உலகம் குளிர்வித்தவனே.


என்பார் அருணகிரிநாதர். 

ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப்


ஆறு ஆறு = 6 x 6 = 36 தத்துவம். 


புருஷன் ஒரு புறம், பிரகிருதி மறு புறம், இவை சேர்ந்த இருபத்தி ஐந்து தத்துவங்கள், இவற்றை அறிவான் கட்டே தங்கும் உலகு என்கிறார் வள்ளுவர். 


புரிந்த மாதிரியும் இருக்கிறது.  புரியாத மாதிரியும் இருக்கிறது அல்லவா. 


நம்மவர்கள் மிக ஆழமாக சிந்தித்து இருக்கிறார்கள். 


சரியோ, தவறோ அது அப்புறம். முதலில் அவை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.


சாங்கிய தத்துவம் பற்றி நிறைய செய்திகள் வலை தளங்களில் கிடைக்கும்.  படித்துப் பாருங்கள். பிரமிப்பு ஏற்படும். எந்த அளவுக்கு நாம் அறிவுத் துறையில் முன்னேறி இருந்திருக்கோம் என்று புரியும். 


சாங்கிய தத்துவத்தை நான் முழுவதுமாக அறிந்து கொண்டு சொல்லவில்லை. இப்படி ஒன்று இருக்கிறது என்று எடுத்துக் காட்டி இருக்கிறேன். நான் கூறியவற்றில் பிழை இருக்கலாம். அது என் அறியாமையில் விழைந்த பிழைதானே அன்றி தத்துவத்தில் உள்ள பிழை அன்று. 


ஆர்வம் உள்ளவர்கள் மேலும் படித்து உணர்வார்களாக. 


இதை அத்தனையும் ஒன்றே முக்கால் அடியில் சொல்லிவிட்டு போய் விட்டார் வள்ளுவர். 


இதற்குள் இவ்வளவு இருக்கும் என்பது பரிமேலழகர் இல்லவிட்டால் நமக்கு தெரிந்தே இருக்காது. 


இனி அடுத்த குறளுக்குச் செல்வோமா ?


Sunday, May 30, 2021

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 9

       

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 9



பாடல் 


 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/9.html


(pl click the above link to continue reading)


சுவை = சுவை 


ஒளி = ஒளி 


ஊறு = தொடு உணர்ச்சி 


ஓசை = ஓசை 


நாற்றம் = மூக்கால் நுகர்வது 


மென் றைந்தின் = என்ற ஐந்தின் 


வகை = கூறுபாடுகளை 


தெரிவான் = ஆராய்ந்து அறிபவன் 


கட்டே உலகு = கண்ணதே உலகம் 


( இதன் முந்தைய பகுதிகளை கீழே காணலாம்)


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_20.html






)

ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்பதில் ஐந்தின் வகை பற்றி நாம் சிந்திக்க இருக்கிறோம். 


இதுவரை 


1. மூலப் பிரகிருதியும் அதில் இருந்து பிறந்த பிரகிருதி 

2.  மான் அல்லது மஹத் 

3. அகங்காரம் 

4. மனம் 

5,6,7,8,9 - ஐந்து ஞானேந்திரியங்கள் 

10 - கை 

11 - கால் 

12 - பாயு (மல ஜலம் வெளியேற்றும் உறுப்புகள்) 

13 - வாக்கு 

14 - பிறப்பு உறுப்புகள் 


வரை சிந்தித்தோம். 


ஞானேந்திரியங்களும், கண்மேந்திரியங்களும் தோன்றி விட்டன. 


இனி அடுத்து வருவது தன் மாத்திரைகள். 


தன் மாத்திரைகள் என்றால் உணர்வு கூறு அல்லது உணர்வின் அடிப்படை என்று கொள்ளலாம். 


முதலில் அவை என்ன என்று பார்த்து விடுவோம். பின் அவை எப்படி மற்றவற்றோடு சேர்கிறது என்று பார்ப்போம். 


சுவை, ஒளி, ஊறு , ஓசை, நாற்றம் (மணம் முகர்தல்) என்ற இந்த ஐந்தும் தன் மாத்திரைகள் என்று அழைக்கப் படுகின்றன


இவை நாம் அறிந்தது தான்.


ஆனால், நாம் அறியாத ஒன்றை சாங்கிய தத்துவம் கூறுகிறது. 


இந்த தன் மாத்திரைகளில் இருந்து தான் பஞ்ச பூதங்கள் தோன்றின என்று. 


நாக்கு சுவையை அறிகிறது. 

கண் காண்கிறது 

செவி கேட்கிறது.


இதற்கும், பஞ்ச பூதங்களுக்கும் என்ன தொடர்பு?


நாக்கு சுவையை அறிகிறது அல்லவா? அப்படி நாக்கு சுவையை அறிய நீர் வேண்டும். நீர் இல்லாவிட்டால் நாக்கு சுவையை அறிய முடியாது. நாக்கு வறண்டு போய் விட்டால், சுவை தெரியாது.  நாக்கு எப்போதும் ஈரப் பதமாகவே இருக்கும்.  நீண்ட நேரம் வெயிலில் அலைந்து திரிந்து, நீர் குடிக்காமல் இருந்தால், நா வறண்டு விடும். அந்த நேரம் உணவு உண்டால் சுவை தெரியாது. உமிழ் நீரில் உணவு கரைந்தால்தான் சுவை தெரியும். 


எனவே, நாக்கு, சுவை, நீர் இவை தொடர்பு பட்டன என்று தெரிகிறது. 



மூக்கு, முகர்ந்து பார்க்கிறது. வாசனை என்பது நிலத்தோடு தொடர்பு பட்டது.  மண் வாசனை என்று சொல்கிறோம் அல்லவா. நீரில் வாசனை இல்லை. தீயில் வாசனை இல்லை. வெளியில் வாசனை இல்லை. மண்ணில் இருந்து தான் வாசனை பிறக்கிறது.  எனவே மூக்கு, வாசனை, மண் இவை தொடர்பு பட்டன என்று தெரிகிறது. 




கண் காண்கிறது. கண் காண வேண்டும் என்றால் பழுதுபடாத கண், அந்த கண் இயங்கும் உடல், அது இயங்க உணவு, பிராண வாயு எல்லாம் இருந்தாலும் போதாது. ஒளி வேண்டும். நல்ல இருட்டில் ஒரு புத்தகத்தை வாசிக்க முடியுமா?  ஒளி வேண்டும் என்றால் நெருப்பு வேண்டும். எங்கே ஒளி இருக்கிறதோ, அங்கே நெருப்பு அல்லது சூடு இருக்கும். ஒளி தரும் பல்பை தொட்டுப் பாருங்கள். சூடாக இருக்கும்.  எனவே, கண், காணுதல், ஒளி, நெருப்பு என்று இவை தொடர்பு பட்டன என்று தெரிகிறது. 


காது கேட்கிறது. கேட்க வேண்டும் என்றால் காதுக்கும், ஒலி எழுப்பும் இடத்துக்கும் இடையே இடைவெளி வேண்டும். அந்த இடைப்பட்ட இடத்தில் காற்று நிரம்பி இருக்க வேண்டும். ஆகாயம் என்றால் வெளி. இடை வெளி. இரண்டு பொருளுக்கு இடையே உள்ள இடம் தான் வெளி அல்லது ஆகாயம் என்று அழைக்கப் படுகிறது. ஆகாயம் என்றால் மேலே பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நான்கு சுவர்களுக்குள் உள்ள இடம் ஒரு ஆகாயம். குடத்துக்குள் உள்ள இடம் ஆகாயம். எனவே , கேட்டல், காது, ஆகாயம் என்று இவை தொடர்பு பட்டன என்று தெரிகிறது. 


அதே போல் தோல்  தொடு உணர்ச்சியைத் தருகிறது. தோல் எப்போதும் காற்றோடு தொடர்பு கொண்டு உள்ளது.  புழுக்கமாக இருந்தாலும், ரொம்ப குளிர்ந்தாலும் நாம் உடலை மூடிக் கொள்கிறோம் அல்லது மின் விசிறியை சுழல விடுகிறோம். ரொம்ப குளிர்கிறது என்று யாரும் கண்ணை மூடிக் கொள்வது இல்லை. எனவே, தோல், தொடு உணர்ச்சி (ஊறு ), காற்று என்ற பஞ்ச பூதம் இவை ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டன என்று புரிகிறது. 


சாங்கியம் ஒரு படி மேலே போகிறது. 


இந்த பஞ்ச பூதங்கள், அந்த ஐந்து தன் மாத்திரைகளோடு தொடர்பு பட்டது என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 


ஆனால், இந்த தன் மாத்திரையில் இருந்து தான் அந்த பூதங்கள் தோன்றின என்கிறார்கள். 


அது எனக்கு விளங்கவில்லை. பல புத்தகங்கள் வாசித்து விட்டேன், சில பெரியவர்கள் சொல்வதையும் கேட்டேன். பிடிபடவில்லை என்பதே உண்மை. 


ஐந்தறிவான் கட்டே தங்கும் உலகு 


என்கிறார் வள்ளுவர். எனக்கு புரியவில்லை. எனவே, என்னிடம் உலகம் தங்காது என்று புரிகிறது. புரிந்து கொள்ள இன்னும் நேரம் வரவில்லை போலும்.  எனக்குப் புரியவில்லை என்பதால் அது தவறு என்று சொல்ல மாட்டேன். அல்லது புரிந்து போல் காட்டிக் கொள்ளவும் மாட்டேன். புரியவில்லை. முயற்சி தொடர்கிறது. வாசிப்பவர்களுக்கு ஆர்வம் இருப்பின், மேலும்  தொடர்ந்து சென்று அறிவார்களாக. 


15 சுவை 

16 ஒளி 

17 ஊறு 

18 ஓசை 

19 நாற்றம் 


என்ற ஐந்து தன் மாத்திரைகளைச் சேர்த்து மொத்தம் இதுவரை  19 தத்துவங்கள் ஆகிவிட்டது. 


இன்னும் ஆறு தத்துவங்கள் இருக்கின்றன. 


அடுத்த ப்ளாகில் அவற்றை சிந்திப்போம். அதோடு இந்த 25 தத்துவங்களும் பூர்த்தி அடையும். (அப்பாட, ஒரு வழியாக முடியப் போகிறது என்று தோன்றுகிறதோ?)


இன்னும் ஒரே ஒரு ப்ளாகு தான். பல்லைக் கடித்துக் கொண்டு அதையும் வாசித்து விடுங்கள். மனதின் ஓரத்தில் ஒரு பொறியாய்  கிடக்கட்டும். யாருக்குத் தெரியும்? அது என்று பற்றி பெரு நெருப்பாய் விளைந்து பயன் செய்யும் என்று. 





Saturday, May 29, 2021

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 8

      

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 8



பாடல் 


 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/8.html


(pl click the above link to continue reading)


சுவை = சுவை 


ஒளி = ஒளி 


ஊறு = தொடு உணர்ச்சி 


ஓசை = ஓசை 


நாற்றம் = மூக்கால் நுகர்வது 


மென் றைந்தின் = என்ற ஐந்தின் 


வகை = கூறுபாடுகளை 


தெரிவான் = ஆராய்ந்து அறிபவன் 


கட்டே உலகு = கண்ணதே உலகம் 


( இதன் முந்தைய பகுதிகளை கீழே காணலாம்)


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_20.html




)

ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்பதில் ஐந்தின் வகை பற்றி நாம் சிந்திக்க இருக்கிறோம். 


இதுவரை 


1. மூலப் பிரகிருதியும் அதில் இருந்து பிறந்த பிரகிருதி 

2.  மான் அல்லது மஹத் 

3. அகங்காரம் 

4. மனம் 

5,6,7,8,9 - ஐந்து ஞானேந்திரியங்கள் 


வரை சிந்தித்தோம். 


இனி மேலே செல்வோம். 


கண் என்ற ஞானேந்திர்யம் பார்க்கும். எவ்வளவு தூரம் வரை பார்க்கும்?  நாம் இருக்கும் இடத்தில் உள்ளதைப் பார்க்கலாம். சாளரத்தை திறந்து வைத்தால் இன்னும் கொஞ்சம் தூரம் தெரியும். அடுத்த தெருவில், அடுத்த ஊரில், அடுத்த நாட்டில் உள்ளதை பார்க்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? இருந்த இடத்தில் இருந்தே கண் பார்க்குமா என்றால் பார்க்காது. 


அந்தக் கண்ணை அந்த இடத்துக்குக் கொண்டு சென்றால் பார்க்கும். அங்கு எப்படி போவது? போவதற்கு கால் என்ற கருவி வேண்டும். வேண்டும். 


நாக்கு சுவைக்கும். பல்வேறு விதமான சுவைகளை அறிந்து சொல்லும். ஆனால், அதுவே உணவை வாயில் போட்டுக் கொள்ளுமா?  உணவை எடுத்து வாயில் போட கை என்ற கருவி வேண்டும். காலால் உணவை வாயில் போட முடியுமா? 


சரி, காலும் கையும் இருந்தால் போதுமா?  இவை அனைத்தும் வேலை செய்ய சக்தி வேண்டாமா? ஒருவனை பத்து நாள் பட்டினி போட்டுவிட்டு, அவன் முன் இனிமையான ஒரு இராகத்தைப் பாடி, இது என்ன இராகம் சொல் என்றால் சொல்லுவானா? பசி காதை அடைக்குது, ஒண்ணுமே கேட்கவில்லை என்று தானே சொல்லுவான். 


சரி, உணவு கொடுக்கலாம், சக்தி கிடைக்கும். ஆனால், அதன் கழிவுகளை வெளியேற்ற வேண்டுமே? போட்டுக் கொண்டே இருந்தால் போதுமா? கழிவுகள் வெளியேற வேண்டாமா? ஞானேந்திரியங்கள் சரியாக வேலை செய்ய வேண்டுமானால் கழிவுகள் வெளியேற வேண்டும்.  தினம் மூன்று வேளை சாப்பிடலாம் ஆனால் மல ஜலம் கழிக்கக் கூடாது என்றால் எப்படி இருக்கும்? வயிறு வெடித்து இறந்து போவான். 


சரி, கை,கால், உணவு, மல ஜலம் கழிக்க ஏற்பாடு செய்தாகி விட்டது. போதுமா? ஞானேந்திரியங்கள் வேலை செய்யுமா? முடியாது. இன்னும் ஒரு முக்கியமான ஒன்று வேண்டும். அது தான் வாயு. பிராண வாயு, சுவாசம் இல்லாமல் எதுவும் வேலை செய்யாது. நமக்கு வெளிப்படையாகத் தெரிவது மூச்சு காற்று ஒன்று தான். ஆயுர் வேதத்தில் நம் உடம்பில் பல் வேறு விதமான வாயுக்கள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். சில வாயுக்குள் கீழ் நோக்கி செல்லும், சில மேல் நோக்கி செல்லும் என்றெல்லாம் வகுத்து வைத்து இருக்கிறார்கள். 


கீழே செல்ல வேண்டிய வாயு மேலே வந்தால், acidity என்கிறோம். நெஞ்சை கரிக்கிறது என்கிறோம். ஏப்பம் வருகிறது. வாயு குத்துகிறது என்கிறோம். உடம்பு பூராவுமே காற்றின் ஓட்டத்தில் இயங்குகிறது என்கிறார்கள். 


இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் மிக வலிமையான பாத்திரங்கள் யார் யார்? அனுமனும், பீமனும். இருவரும் வாயு குமாரார்கள். உடம்புக்கு வலிமை சேர்ப்பது வாயு. வாயுவை கட்டுப் படுத்தினால் வலிமை வரும் என்று சொல்லாமல் சொன்ன விடயம் அது. 


சரி, கை, கால், மல ஜல உறுப்புகள், வாயு எல்லாம் இருந்தால் போதுமா? நான் இருந்தேன், இவற்றை அறிந்தேன். ஒரு நாள் நான் இறந்து போவேன். அப்படி எல்லோரும் இறந்து போவார்கள். அப்புறம்? யார் இந்த ஐந்தை அறிவார்கள்? பிறவி தொடர வேண்டும் அல்லவா?உயிர்கள் நிலைக்க வேண்டும் அல்லவா? எனவே அதற்கு தேவையான பிறப்பு உறுப்புகள் வேண்டும். 


எனவே, ஐந்து ஞானேந்திரியங்கள் இயங்க  ஐந்து கன்மேந்திரியங்கள் வேண்டும். 


கர்மம் + இயந்திரம் = கன்மேந்திரியம் 


வேலை செய்யும் உறுப்புகள். 


அவையாவன

10 - கை 

11 - கால் 

12 - பாயு (மல ஜலம் வெளியேற்றும் உறுப்புகள்) 

13 - வாக்கு 

14 - பிறப்பு உறுப்புகள் 


இதில் வாக்கு என்பது எப்படி செயற் கருவி ஆகும்? 


தெருவில் போய்க் கொண்டு இருக்கிறோம். நம்மிடம் ஒருவர் "மணி என்ன ?" என்று கேட்கிறார். நாம் கடிகாரத்தைப் பார்த்து மணி சொல்கிறோம். நம்மை செயல் பட வைத்தது எது? அவர் கேட்ட கேள்வி. அந்த வாக்கு நம்மை செயல் பட வைத்தது.  நாம் ஒருவரிடம் வழி கேட்கிறோம். அவர் சொல்கிறார். அல்லது தெரியாது என்கிறார். அவரை செயல் பட வைத்தது எது? நம் வாக்கு. 


வாக்கு ஒரு செயல் கருவியாகவும் செயல் படும். 


ஐம்பூதங்களை அறிந்து கொள்ள இந்த பதினான்கு தத்துவங்கள் போதுமா? 


போதாது. இன்னும் கொஞ்சம் வேண்டும்.


அவை என்னென்ன?  


மேலும் சிந்திப்போம். 


(ரொம்ப அலுப்பாக இருக்கிறதோ? எப்படா இது முடியும் என்று இருக்கிறதோ?)


Thursday, May 27, 2021

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 7

     

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 7 



பாடல் 


 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/7.html


(pl click the above link to continue reading)


சுவை = சுவை 


ஒளி = ஒளி 


ஊறு = தொடு உணர்ச்சி 


ஓசை = ஓசை 


நாற்றம் = மூக்கால் நுகர்வது 


மென் றைந்தின் = என்ற ஐந்தின் 


வகை = கூறுபாடுகளை 


தெரிவான் = ஆராய்ந்து அறிபவன் 


கட்டே உலகு = கண்ணதே உலகம் 


( இதன் முந்தைய பகுதிகளை கீழே காணலாம்)


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_20.html



)

ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்பதில் ஐந்தின் வகை பற்றி நாம் சிந்திக்க இருக்கிறோம். 


இதுவரை 


1. மூலப் பிரகிருதியும் அதில் இருந்து பிறந்த பிரகிருதி 

2.  மான் அல்லது மஹத் 

3. அகங்காரம் 


இது வரை பார்த்தோம். 


4. மனம்: அகங்காரத்துக்கு மூன்று குணங்கள் உண்டு என்று பார்த்தோம். அதில் சாத்வீகம் மிகுந்து நிற்கும் போது அதில் இருந்து வெளிப்படுவது மனம். அகங்காரம், புத்தி, சித்தம், மனம் என்பன ஒன்று போல் தோன்றினாலும், அவற்றிற்கு தனித்தனியே வேலைகள் உண்டு. அவற்றைச் சிந்திக்க தலைப்பட்டால் இன்னும் விரியும். ஆர்வம் உள்ளவர்கள் தேடுவார்களாக.  


மனம் என்பது வெளிப்படையாகத் தெரிவது இல்லை. அது எப்படி இருக்கும், கறுப்பா, சிவப்பா? பெரியதா, சிறியதா? அது எப்படி வேலை செய்கிறது என்று நமக்குத் தெரிவதில்லை. அது உள்ளே இருக்கிறது என்பதால் அதற்கு "அந்தக் கரணம்" என்று பெயர். 


நம் உடலில் உள்ள கருவிகளை இரண்டு விதமாக பிரிக்கலாம்....செயற் கருவி, உணர்வு கருவி என்று. 


மனம் என்பது செயல் கருவியாகவும் இருக்கிறது, உணர்வு கருவியாகவும் இருக்கிறது. 


இது பற்றி மேலும் சிந்திக்க இருக்கிறோம். 


5,6,7,8,9 - ஐந்து ஞானேந்திரியங்கள்: மனதில் இருந்து ஐந்து ஞானேந்திரியங்கள் தோன்றுகின்றன.   ஞானேந்திரியங்களுக்கு உணர்வு கருவிகள் என்று பெயர். அவையாவன கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்பன. 


இதில் என்ன ஞானம் இருக்கிறது? 


இதில் ஞானம் இல்லை. ஆனால், இவற்றின் மூலம் நாம் ஞானத்தைப் பெறுகிறோம். 


நமக்கு ஞானம் அல்லது அறிவு எப்படி வருகிறது. 


படித்து வரலாம் (கண்)

கேட்டு வரலாம் (காது)

இப்படி ஒவ்வொரு கருவிகள மூலமாக நாம் அறிவைப் பெறுகிறோம். ஞானத்தைப் பெற உதவுதால் இவை ஞானேந்திரியங்கள் என்று அழைக்கப் படுகின்றன. 


இது எப்படி உருவாகிறது என்றால், அகங்காரத்தில் உள்ள முக்குண கூட்டால், சத்வம் மிகும் போது, ரஜோ குணத்தின் உதவியோடு இந்த ஞானேந்திரியங்கள் தோன்றுகின்றன என்று சாங்கிய தத்துவம் கூறுகிறது. 


இந்தப் புலன்கள் அல்லது ஞானேந்திரியங்கள் தனித்து இயங்க முடியாது. அவை இயங்க இன்னும் கொஞ்சம் வேண்டும். 


அவை என்னென்ன ?


நாளையும் சிந்திப்போம். 



Wednesday, May 26, 2021

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 6

    

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 6



பாடல் 


 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/5_26.html


(pl click the above link to continue reading)


சுவை = சுவை 


ஒளி = ஒளி 


ஊறு = தொடு உணர்ச்சி 


ஓசை = ஓசை 


நாற்றம் = மூக்கால் நுகர்வது 


மென் றைந்தின் = என்ற ஐந்தின் 


வகை = கூறுபாடுகளை 


தெரிவான் = ஆராய்ந்து அறிபவன் 


கட்டே உலகு = கண்ணதே உலகம் 


( இதன் முந்தைய பகுதிகளை கீழே காணலாம்)


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_20.html



)

ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்பதில் ஐந்தின் வகை பற்றி நாம் சிந்திக்க இருக்கிறோம். 


மூலப் பிரகிருதியும் அதில் இருந்து பிரகிர்தியும் தோன்றியது என்று பார்த்தோம்.  அதைத் தொடர்ந்து ஆத்மா உண்டானதையும், அந்த ஆத்மாவுக்கு பிரகிருதியே ஒரு அனுபவ களமாக ஆனதையும் சிந்தித்தோம். 


அடுத்தது, அகங்காரம் பற்றி சிந்திக்க இருக்கிறோம் 


உலகைப் பற்றி ஆராய முற்பட்டபோது, மேலை நாட்டினர் தங்களுக்கு வெளியே உள்ள பொருள்களை பற்றி சிந்திக்கத் தலைப் பட்டார்கள். 


ஏன் ஆப்பிள் கீழே விழுகிறது, ஏன் நீராவி பொருள்களை தள்ளுகிறது, ஏன் காந்தம் இழுக்கிறது, என்று வெளி உலகை ஆராயத் தலைப்பட்டார்கள். 


கீழை நாடுகள், உள்நோக்கி தேடத் தொடங்கினார்கள். அவர்களுக்கு வெளி உலகம் ஒரு பெரிய சவாலாகத் தெரியவில்லை.  அக உலகைப் புரிந்து கொண்டால் வெளி உலகை புரிந்து கொள்ள முடியும் என்று நினைத்தார்கள். 


அது அப்படி இருக்கட்டும். 


அகங்காரம். அகம் என்றால் உள், கரம் என்றால் தன்மை. நமது உள் தன்மை பற்றியது அகங்காரம். நான், எனது, என்ற எண்ணங்களை தோற்றுவிப்பது.  நம்மை உலகில் இருந்து பிரித்து அறியச் செய்வது. நான் வேறு, உலகம் வேறு என்ற அறிவைத் தருவது அகங்காரம். 


இந்த அகங்காரத்தில் இருந்து தான் மனம், புத்தி, சித்தம், ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியகள் எல்லாம் தோன்றுகின்றன. 


மொத்தம் பதினாறு விடயங்கள் இந்த அகங்காரத்தில் இருந்து தோன்றுகின்றன. 


இந்த அகங்காரமும் முக்குண கூட்டு உடையது. 


ஒவ்வொரு குணமும் அதோடு இணையும் போது பல்வேறு விடயங்கள் தோன்றுகின்றன. 


எது எப்படி தோன்றுகிறது என்பதை நாளை பார்ப்போம். 




பிரக்ருதி என்பது ஒரு ஆற்றல் என்று சொல்கிறார்கள். இந்த ஆற்றலை அறியும் ஒரு பொருள் வேண்டும் அல்லவா? ஆற்றல் என்பது தானே பரிணமிக்க முடியாது. ஆற்றல் என்றால் அது எதன் மீதாவது செயல் பட்டால்தான் அது ஆற்றல் என்று தெரியும். 


உதாரணமாக, புவிஈர்ப்பு விசை பொருள்களை தன் பால் இழுக்கிறது. காந்தம் இழுக்கிறது. ஆற்றல், விசை என்பது அது அல்லாத ஒன்றின் மேல் செயல்பட்டாக வேண்டும். அந்த ஒன்றுதான் ப்ரஞ்கை அல்லது புருஷன் அல்லது ஆத்மா என்று கூறுகிறார்கள். ஒரு universal consiousness. உலகாளாவிய தண்ணுர்வு என்று கொள்ளலாம். 


இந்த பிரக்ருதி ஆத்மாவோடு கலக்கும் போது இந்த உலகம் பிறக்கிறது. அதுதான் படைப்பின் முதல். தொடக்கம். 


பிரக்ருதி ஆத்மாவோடு கலந்து உலகம் பிறந்தாலும், அந்த ஆத்மா அனுபவிக்கும் களமாகவும் அது இருக்கிறது. 


முதல் தத்துவம் பிறந்து விட்டது. அதாவது நாம் காணும், அனுபவிக்கும் இந்த உலகம் பிறந்து விட்டது. 


இனி அடுத்த தத்துவத்துக்குள் நுழைவோம். 


இரண்டாவது தத்துவம் "மான்". இதை  மஹத் என்பார்கள். ஆத்மா பிரக்ருதியை உணர, அதோடு சம்பந்தப் படுத்த இது உதவுகிறது. இதில் இருந்து தான் இந்திரியங்கள், அவை அறியும் உணர்வுகள், எல்லாம் பிறக்கின்றன.  இந்த "மான்" இலும் சத்வ, ரஜோ, தமோ குணங்கள் உண்டு. 

அதில் இருந்துதான் உயிர்கள் அந்தக் குணங்களைப் பெறுகின்றன. 

இந்த "மான்: என்பது எந்த ஒரு உடலோடும் சம்பந்தப் படாதது. ஒரு பேருணர்வு. எப்படி உடல் இல்லாமல் உணர்வு மட்டும் இருக்க முடியும் என்பது பற்றி அறிய மேலும் இதை ஆழமாக படிக்க வேண்டும். 


பிரக்ருதியில் இருந்து மஹத் அல்லது "மான்" என்பது உருவாயிற்று. 


அதன் அடுத்த பரிணாம வளர்ச்சி அகங்காரம் என்று கூறப் படுவது. 




Monday, May 24, 2021

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 5

   

திருக்குறள் - வகை தெரிவான் கட்டே உலகு - பாகம் 5 



பாடல் 


 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/5.html


(pl click the above link to continue reading)


சுவை = சுவை 


ஒளி = ஒளி 


ஊறு = தொடு உணர்ச்சி 


ஓசை = ஓசை 


நாற்றம் = மூக்கால் நுகர்வது 


மென் றைந்தின் = என்ற ஐந்தின் 


வகை = கூறுபாடுகளை 


தெரிவான் = ஆராய்ந்து அறிபவன் 


கட்டே உலகு = கண்ணதே உலகம் 


( இதன் முந்தைய பகுதிகளை கீழே காணலாம்)


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2021/05/2_20.html



)

ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்பதில் ஐந்தின் வகை பற்றி நாம் சிந்திக்க இருக்கிறோம். 


மூலப் பிரகிருதியும் அதில் இருந்து பிரகிர்தியும் தோன்றியது என்று பார்த்தோம். 


பிரக்ருதி என்பது ஒரு ஆற்றல் என்று சொல்கிறார்கள். இந்த ஆற்றலை அறியும் ஒரு பொருள் வேண்டும் அல்லவா? ஆற்றல் என்பது தானே பரிணமிக்க முடியாது. ஆற்றல் என்றால் அது எதன் மீதாவது செயல் பட்டால்தான் அது ஆற்றல் என்று தெரியும். 


உதாரணமாக, புவிஈர்ப்பு விசை பொருள்களை தன் பால் இழுக்கிறது. காந்தம் இழுக்கிறது. ஆற்றல், விசை என்பது அது அல்லாத ஒன்றின் மேல் செயல்பட்டாக வேண்டும். அந்த ஒன்றுதான் ப்ரஞ்கை அல்லது புருஷன் அல்லது ஆத்மா என்று கூறுகிறார்கள். ஒரு universal consiousness. உலகாளாவிய தண்ணுர்வு என்று கொள்ளலாம். 


இந்த பிரக்ருதி ஆத்மாவோடு கலக்கும் போது இந்த உலகம் பிறக்கிறது. அதுதான் படைப்பின் முதல். தொடக்கம். 


பிரக்ருதி ஆத்மாவோடு கலந்து உலகம் பிறந்தாலும், அந்த ஆத்மா அனுபவிக்கும் களமாகவும் அது இருக்கிறது. 


முதல் தத்துவம் பிறந்து விட்டது. அதாவது நாம் காணும், அனுபவிக்கும் இந்த உலகம் பிறந்து விட்டது. 


இனி அடுத்த தத்துவத்துக்குள் நுழைவோம். 


இரண்டாவது தத்துவம் "மான்". இதை  மஹத் என்பார்கள். ஆத்மா பிரக்ருதியை உணர, அதோடு சம்பந்தப் படுத்த இது உதவுகிறது. இதில் இருந்து தான் இந்திரியங்கள், அவை அறியும் உணர்வுகள், எல்லாம் பிறக்கின்றன.  இந்த "மான்" இலும் சத்வ, ரஜோ, தமோ குணங்கள் உண்டு. 

அதில் இருந்துதான் உயிர்கள் அந்தக் குணங்களைப் பெறுகின்றன. 

இந்த "மான்: என்பது எந்த ஒரு உடலோடும் சம்பந்தப் படாதது. ஒரு பேருணர்வு. எப்படி உடல் இல்லாமல் உணர்வு மட்டும் இருக்க முடியும் என்பது பற்றி அறிய மேலும் இதை ஆழமாக படிக்க வேண்டும். 


பிரக்ருதியில் இருந்து மஹத் அல்லது "மான்" என்பது உருவாயிற்று. 


அதன் அடுத்த பரிணாம வளர்ச்சி அகங்காரம் என்று கூறப் படுவது.