Wednesday, July 21, 2021

கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - மன நிலை கூறலாமோ?

கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - மன நிலை கூறலாமோ?



அங்கதனை தூதாக இராவணனிடம் அனுப்பவது என்று முடிவு செய்கிறார்கள். 


இராமன் அங்கதனை அழைத்து, "அங்கதா, நீ அந்த இராவணனிடம் சென்று நான் சொல்லும் இரண்டு விடயங்களைக் கூறி, அதற்கு ஒன்றைப் பதிலாக பெற்றுக் கொண்டு வா" என்கிறான். 


பாடல் 


 'நன்று' என, அவனைக் கூவி, 'நம்பி! நீ நண்ணலார்பால்

சென்று, உளது உணர ஒன்று செப்பினை திரிதி' என்றான்;

அன்று அவன் அருளப் பெற்ற ஆண்தகை அலங்கல் பொன் தோள்

குன்றினும் உயர்ந்தது என்றால், மன நிலை கூறலாமோ?


பொருள்  


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_21.html


(Please click the above link to continue reading)



 'நன்று' என,  = இலக்குவன், வீடணன், அனுமன் ஆகியோர் கூறியதைக் கேட்டு, நல்லது என்று  இராமன் கூறி 


அவனைக் கூவி,  = அங்கதனை அழைத்து 


'நம்பி! = நம்பி 


நீ = நீ 


நண்ணலார்பால் = பகைவர்களிடம்  (இராவணனிடம்) 


சென்று = சென்று


உளது உணர  = மனதில் படும்படி சொல்லி 


ஒன்று  = ஒன்றை பதிலாக 


செப்பினை  திரிதி = பெற்று வா என்றான் 


அன்று = அப்போது 


அவன் = இராமனின் 


அருளப் பெற்ற = அருளைப் பெற்ற 


ஆண்தகை  = ஆண்களில்சிறந்தவனான அங்கதன் 


அலங்கல் பொன் தோள் = மாலை அணிந்த பொன் போன்ற ஒளி விடும் தோள்கள் 


குன்றினும் உயர்ந்தது என்றால் = குன்றை விட பூரித்து உயர்ந்தது என்றால் 


மன நிலை கூறலாமோ? = அவன் மன நிலை எப்படி இருந்தது என்று கூற முடியுமா?


நம்பி என்றால் நற்குணங்கள் நிறைந்தவன் என்று பொருள்.


அங்கதனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. 


ஏன்?


இராமன் , அவனை நம்பி என்று கூறிவிட்டான். இராமனே கூறினான் என்றால் மகிழ்ச்சி இருக்காதா. கம்பன் பாடம் சொல்கிறான் நமக்கு. வேலை வாங்க வேண்டுமா, வேலை செய்பவர்களை பாராட்டு. அவர்கள் உற்சாகத்தோடு வேலை செய்வார்கள். இல்லை என்றால் கடனே என்று செய்வார்கள். எப்பப் பார்த்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருந்தால், யாருக்குத்தான் வேலை செய்ய மனம் வரும். 



பிள்ளையிடம் வேலை சொல்வதாக இருந்தாலும் "என் இராசா இல்ல...குடிக்க கொஞ்சம் தண்ணி தருவியா" என்றால் சந்தோஷமாக ஓடிச் சென்று கொண்டு வருவான். "ஏய், இங்க வா, அந்த தண்ணி பாட்டில எடுத்துட்டு வா" ஒண்ணு செய்ய மாட்டான் இல்லேனா முணு முணுத்துக்கொண்டே  செய்வான். 


கணவன் மனைவியிடமும் அப்படித்தான். 



"ரொம்ப களைப்பா இருக்கு...கொஞ்சம் டீ போட்டுத் தர்றியா" என்று மனைவியிடம் கேட்டால், "இதோ அஞ்சு நிமிஷத்ல " என்று சுட சுட போட்டுத் தருவாள். 



"என்ன இன்னிக்கு டீ போடலியா" என்று அதட்டினால் "இல்லை" னு பதில் வரும். 



இரண்டாவது, இராமன் மற்றவர்களை எல்லாம் விட்டு விட்டு தன்னிடம் வேலை சொன்னான் என்பதில் அங்கதனுக்கு ஒரு மகிழ்ச்சி. 


அப்படி ஒரு தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள பழக வேண்டும். எப்படா பாஸ் வேலை சொல்லுவார் என்று கீழே இருப்பவர்கள் ஏங்க வேண்டும். 


இதனால், அவன் தோள்கள் விம்மி புடைத்தன....அப்படி என்றால் மனம் எவ்வளவு மகிழ்ந்திருக்கும் என்று கம்பர் கேட்கிறார். 



நல்லா இருக்கா ?


Tuesday, July 20, 2021

திருக்குறள் - வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்

 திருக்குறள் - வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்


இல்லறத்துக்கு உள்ள பதினொரு கடமைகள் சொல்லி விட்டார். அடுத்து என்ன?


இந்த பதினொரு கடமைகளை செய்ய பொருள் வேண்டுமே? பிரம்மச்சாரி, வானப்ரஸ்தம், துறவு இவற்றில் உள்ளவர்கள், தென்புலத்தார், சுற்றம், தான், விருந்து, கை விடப் பட்டவர்கள், ஏழைகள், அனாதையாக இறந்தவர்கள் என்று இவர்களுக்கு எல்லாம் உதவி செய்ய பொருளுக்கு எங்கே போவது?


நாலு பேருக்கு நல்லது செய்வது என்றால் எதுவும் தவறு இல்லைன்னு தவறான வழியில் பணம் சம்பாதித்து இந்த உதவிகளைச் செய்யலாமா? 


அது கூடாது. அற வழியில் பொருள் ஈட்டி, அதை மேற்கண்ட வழிகளில் செலவு செய்ய வேண்டும் என்கிறார். 


சரி, அப்படிச் செய்தால் என்ன கிடைக்கும் அல்லது அப்படி செய்யாவிட்டால் என்ன நிகழும்?


பாடல் 


பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_20.html


(pl click the above link to continue reading)



பழியஞ்சிப் = பழிக்கு பயந்து 

பாத்தூண் = பகிர்ந்து உண்ணும் 

உடைத்தாயின் வாழ்க்கை = வாழ்கை உடைத்தாயின் 

வழியெஞ்சல் = வழியின் மிச்சம் 

எஞ்ஞான்றும் இல் = எப்போதும் இல்லை 


பழியஞ்சிப் = பழிக்கு பயந்து. தவறு செய்ய பயப்பட வேண்டும். என்னை யார் என்ன செய்து விட முடியும் என்ற தைரியம், நான் திறமையானவன், நான் செய்யும் தவறுகளை யாரும் கண்டு பிடிக்க முடியாது,  என்ற தைரியம் தான் குற்றங்களுக்கு மூலம். பழிக்கு அஞ்ச வேண்டும். 


இதற்கு உரை எழுதிய பரிமேலழகர் கூறுவார் 


"பாவத்தான் வந்த பிறன் பொருளைப் பகுத்து உண்ணின், அறம் பொருளுடையார் மேலும், பாவம் தன் மேலுமாய் நின்று வழி எஞ்சும் ஆகலின், 'பழி அஞ்சி' என்றார்."


அதாவது, ஒருவருடைய பொருளை நாம் திருடி அதில் தர்மம் செய்தால், அந்தத் தர்மத்தின் பலன் யாரிடம் இருந்து திருடினோமோ அவர்களுக்கும், திருடிய குற்றத்தின் பாவம் நமக்கும் வந்து சேரும் என்கிறார். 



"அறம் பொருளுடையார்" = நல்லறத்தின் பலன் யாருடைய பொருளோ அவர்களுக்கும் 

 "மேலும், பாவம் தன் மேலுமாய் நின்று" = பாவம் தனக்கும் வந்து சேரும் என்கிறார். 


ஊரெல்லாம் கொள்ளை அடித்து அன்ன தானம் செய்தால், புண்ணியம் வராது, பாவம்தான் வரும். 


தவறான வழியில் பணம் சேர்த்து, வள்ளுவர் சொன்னார் "தெய்வத்துக்கு" செய்ய வேண்டும் என்று கோவில் உண்டியலில் போட்டால் புண்ணியம் வராது. 


பாத்தூண் = பகிர்ந்து உண்டால். யாரோடு பகிர்ந்து உண்ண வேண்டும்? மேலே சொன்ன பதினொரு பேருடன் பகிர்ந்து உண்ண வேண்டும். அலுவலகத்தில் உள்ள மேலதிகாரி, கடை முதலாளி, அரசாங்க அதிகாரிகள் அவர்களோடு பகிர்ந்து உண்ணச் சொல்லவில்லை. 


உடைத்தாயின் வாழ்க்கை = அப்படிப்பட்ட வாழ்கை ஒருவன் வாழ்ந்தால் 


வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் = இது கொஞ்சம் சிக்கலான இடம்.  எஞ்ஞான்றும் என்றால் எப்போதும் என்று அர்த்தம். அவன் இல்வாழ்க்கை என்ற பயணம் ஒரு போதும் தடை படாது. அவன் வழி தடை படாது. 


சிலர் நினைக்கலாம், இப்படி எல்லோருக்கும் செய்து கொண்டிருந்தால் நாம் பொருள் எல்லாம் இழந்து ஒன்றும் இல்லாமல் போய் விடுவோம். அப்புறம் ஒரு அறமும் செய்ய முடியாது. அது எல்லாம் நின்று போகும் என்று நினைக்கலாம். வள்ளுவர் சொல்கிறார், "பயப்படாதே. ஒரு போதும் தடை வராது. எங்கிருந்தாவது வரும்" என்கிறார். 


"எங்காயிணும் வரும் ஏற்பவருக்கு இட்டது" என்று அருணகிரி நாதர் கூறியது போல. 


எப்படி இல் வாழ்கை வாழ வேண்டும் என்று ஒவ்வொரு படியாக கையை பிடித்து நம்மை அழைத்துச் செல்கிறார். 


எவ்வளவு பெரிய வழிகாட்டி நூல். 


வாழ்கையை இந்த அளவுக்கு ஆழமாய், ஆராய்ந்து, ஒரு சமுதாய பொறுப்பு உணர்வுடன் சொல்ல யாரால் முடியும்? 


படிப்போம், அறிவோம். வாழ்வில் கடை பிடிப்போம். 








Monday, July 19, 2021

சிலப்பதிகாரம் - உண்டு கொல்?

சிலப்பதிகாரம் - உண்டு கொல்?


தன் கணவன் கள்வன் அல்ல என்று அறிந்த பின், கண்ணகி எழுந்து நடக்கிறாள். அவள் கோபம் கொப்பளிக்கிறது.


"இதெல்லாம் ஒரு ஊரா? கற்புள்ள பெண்களும் இந்த ஊரில் இருக்கிறார்களா? சான்றோர்களும் இந்த ஊரில் இருக்கிறார்களா? தெய்வம் என்று ஒன்று இருக்கிறதா"' என்று கோபத்தில் கேட்கிறாள். அவளின் ஏக்கம், கோபம், வார்த்தைகளில் வெடிக்கிறது. எல்லாம் இரண்டு இரண்டு தடவை கேட்கிறாள். 


"இருக்கா, இருக்கா" என்று சந்தேகம், இருந்தும் இப்படி நடக்குமா என்ற வெறுப்பு, ஆயாசம், தனக்கு இழைக்கப்பட்ட அநீதி எல்லாம் அந்த கேள்விகளில் தொக்கி நிற்கிறது. 


பாடல் 


 பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்

கொண்ட கொழுந ருறுகுறை தாங்குறூஉம்

பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்

சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்?

தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?

வை வாளின் தப்பிய மன்னவன் கூடலில்

தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?’


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_19.html

(please click the above link to continue reading)


 பெண்டிரும் உண்டுகொல் = பெண்களும் இருக்கிறார்களா? 


 பெண்டிரும் உண்டுகொல் = பெண்களும் இருக்கிறார்களா? 


கொண்ட = கட்டிய 


கொழுந ருறுகுறை = கொழுநருக்கு உறு குறை = கணவனுக்கு வந்த பெரிய குறையினை 


தாங்குறூஉம்  = பொறுத்துக் கொள்ளும், சகித்துக் கொள்ளும் 


பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் = பெண்களும் இருக்கிறார்களா? இருக்கிறார்களா? 



சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்? = கற்று அறிந்து, ஒழுக்கத்தில் சிறந்த சான்றோரும் இருக்கிறார்களா? 


தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்? = தெய்வம் என்று ஒன்று இருக்கிறதா? 


வை வாளின் = கூரிய வாள் அறம் 


தப்பிய = தவறிய 


மன்னவன் கூடலில் = பாண்டிய மன்னனின் நாட்டில் 


தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல் ?’ = தெய்வம் என்று ஒன்று இருக்கிறதா?


என்ன சொல்ல வருகிறார் இளங்கோ அடிகள்?


ஒரு நாட்டில் அறம் நிலைக்க வேண்டும் என்றால், அது கற்புடைய பெண்கள் இருந்தால், சான்றோர் இருந்தால் தான் நடக்கும். 


கற்புடைய பெண்கள் இல்லை என்றால், அறம் நிலைக்காது. 


இந்த பாண்டிய நாட்டில் அறம் தவறி விட்டது. அப்படி என்றால் இந்த நாட்டில் கற்புடைய பெண்கள் இல்லாமலா போய் விட்டார்கள்? சான்றோர் என்று யாரும் இல்லையா? தெய்வம் கூடவா இல்லாமல் போய் விட்டது? 


இவ்வளவு பேர் இருந்துமா அறம் தவறி விட்டது? அப்படி என்றால் யார் தான் இந்த அறத்தை தாங்கிப் பிடிப்பது? என்று கேட்கிறாள்.


அறம் பிழைக்க வேண்டும் என்றால், சான்றோர் வேண்டும். 


சான்றோர் இருந்தும், சில சமயம் அவர்கள் வாய் மூடி மௌனமாக இருந்து விடுகிறார்கள். அவர்களின் அந்த மௌனம் எவ்வளவு பெரிய அழிவுக்கு வழி கோலுகிறது! நாடே அழிந்தது. 


கௌரவர் அவையில் சான்றோர் மெளனமாக இருந்ததால் மாபாரத போர் வந்தது. எவ்வளவு அழிவு. 


அறத்தைத்  தாங்கிப் பிடிக்க வேண்டும். இல்லை என்றால் பேரழிவு திண்ணம். 


எவள் சேலையை எவன் பிடித்து இழுத்தால் எனக்கு என்ன என்று இருந்தால், குலம் வேர் அறுபட்டு போகும்.


கதை ஒரு பக்கம் இருக்க, நீதியை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். 






Sunday, July 18, 2021

கம்ப இராமாயணம் - ஒள்ளியது உணர்ந்தேன்

 கம்ப இராமாயணம் - ஒள்ளியது உணர்ந்தேன் 


பகை என்று வந்து விட்டால் அதை சாம, தான, பேத, தண்டத்தால் தீர்க்க முயல வேண்டும். 


முதலில் சமாதானத்திற்கு முயல வேண்டும். எடுத்தவுடனேயே சண்டைக்குப் போகக் கூடாது. முடியவில்லை என்றால் எதிரியின் பலத்தைக் குறைக்க வேண்டும் (பேதம்), அதுவும் இல்லை என்றால் தானம் செய்து, பொருள் கொடுத்து பகையை முடிக்க வேண்டும். இது எதுவும் நடக்கவில்லை என்றால், கடைசியில் தண்டம் அதாவது தண்டனை அல்லது போர் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். 


சமாதானத்தின் முதல் முயற்சி தூது அனுப்புவது. நமது இல்லக்கியங்களில் பல தூதுகள் நிகழுந்து இருக்கின்றன. எல்லா தூதும் தோல்வியில்தான் முடிந்தது ஒன்றே ஒன்றைத் தவிர. 


பாண்டவர்களுக்காக, கண்ணன் தூது போனான். தூது தோற்று, சண்டை மூண்டது. 


முருகனுக்காக வீரபாகு தூது போனார், தூது தோற்றது.சண்டை வந்தது. 


இராமனுக்காக அங்கதன் தூது போனான். தூது தோற்று சண்டை மூண்டது. 


வெற்றி பெற்ற தூது சுந்தரருக்காக் சிவ பெருமான் சென்ற காதல் தூது. அது வென்றது. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


இங்கே அங்கதன் தூது பற்றி பார்ப்போம். 


கம்ப இராமாயணத்தில் ஒரு சிறு பகுதி. மிக அழகான பகுதி.  சில சிக்கல்களை விடுவிக்கும் பகுதி. 


படையோடு இராமன் இலங்கையை சூழ்ந்து நிற்கிறான். இலங்கையின் வடக்குப் புற வாசல் அருகே இராவணனை எதிர்பார்த்து நிற்கிறான்.  இராவணன் வரவில்லை. 


அருகில் நின்ற வீடணனிடம் இராமன் கூறுவதாக இந்தப் பகுதி ஆரம்பிக்கிறது. 


பாடல் 


வள்ளலும் விரைவின் எய்தி, வட திசை வாயில் முற்றி, 

வெள்ளம் ஓர் ஏழு-பத்துக் கணித்த வெஞ் சேனையோடும்,

கள்ளனை வரவு நோக்கி, நின்றனன்,  காண்கிலாதான்,

'ஒள்ளியது உணர்ந்தேன்' என்ன, வீடணற்கு உரைப்பதானான்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_18.html


(please click the above link to continue reading)



வள்ளலும் = வள்ளலாகிக்ய இராமனும் 


விரைவின் எய்தி = விரைந்து சென்று அடைந்து 


வட திசை வாயில் முற்றி,  = இலங்கையின் வடக்குப் புற வாயிலை அடைந்து 


வெள்ளம் ஓர் ஏழு-பத்துக் = எழுபது வெள்ளம் சேனைகளோடு 


கணித்த = எழுபது வெள்ளம் என்று கண்ணிதுச் சொல்லப்பட்ட 


வெஞ் சேனையோடும், = கொடுமையான சேனைகளோடு 


கள்ளனை வரவு நோக்கி = கள்ளமாக ஜானகியை கவர்ந்து சென்ற இராவணனின் வரவு நோக்கி 


நின்றனன் = இராமன் நின்றான் 


காண்கிலாதான், = இராவணன் வராததால் அவனை காண முடியாமல் இருந்தான் 


'ஒள்ளியது உணர்ந்தேன்' = ஒளி பொருந்திய, அதாவது புகழுக்கு உரிய செயல் ஒன்றை உணர்ந்தேன் 

என்ன = என்று 


வீடணற்கு உரைப்பதானான்: = வீடணனுக்கு சொல்லத் தொடங்கினான் 




Saturday, July 17, 2021

திருக்குறள் - ஓம்பல் தலை - பாகம் 2

 

திருக்குறள் - ஓம்பல் தலை - பாகம் 2

(இதன் முதல் பாகத்தை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம். 

https://interestingtamilpoems.blogspot.com/2021/07/1_15.html )


பாடல் 


தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை


பொருள் 


தென்புலத்தார் = தென் திசையை சேர்ந்தவர்கள் 


தெய்வம் = தெய்வம் 


விருந்தொக்கல் = விருந்து , ஒக்கல் 


தானென்றாங்கு = தான் என்று ஆங்கு 


ஐம்புலத்தாறு = ஐந்து இடத்துக்கும் செய்யும் அற நெறிகளை விடாமல் 


ஓம்பல் தலை = கைக் கொள்ளுதல், சிறந்த அறமாகும் 



https://interestingtamilpoems.blogspot.com/2021/07/2_17.html


(pl click the above link to continue reading)



சில சமயம், ஒரு காரணமும் இல்லாமல் நாம் சந்தோஷமாக இருப்போம். ஏன் என்று தெரியாது. சில சமயம், நாம் நினைக்காத சில நன்மைகள் தாமே நமக்கு வந்து சேரும். முடியாது என்று நினைத்து இருப்போம், அது எளிதாக முடிந்து விடும். இது எங்க முடியப் போகிறது என்று மலைத்து இருப்போம், சட்டென்று முடிந்து விடும். 


அது எப்படி நிகழ்கிறது?


அதெல்லாம் தற்செயல் (random incident) என்று புறம் தள்ளிவிடலாம். 


நம் தமிழ் என்ன சொல்கிறது என்றால்...


நாம் இதற்கு முன் பிறந்து இறந்து இருப்போம் அல்லவா? அந்தப் பிறவியில் நம் பிள்ளைகள் நமக்கு சிரார்த்த கடன்கள் செய்தால், அந்த சிரார்த்ததின் பலன் நமக்கு இந்தப் பிறவியில் நன்மையாக வந்து சேர்கிறது.எதிர்பாராத நன்மைகளாக வந்து சேர்கிறது. 


உடல்தான் மடிகிறதே தவிர உயிர் வேறு வேறு உடலில் பயணம் செய்கிறது. அந்த உடலுக்கு, பிறவிக்கு அவர்கள் செய்யும் சிரார்த்த பலன்கள் வந்து சேர்கின்றன. 


இந்த பலன்களை யார் கொண்டு போய் சேர்ப்பது?


அங்கு தான் குறள் வருகிறது. 


"தென் புலத்தார்" ...தென் புலத்தார் என்பவர்கள் தேவர்கள். அவர்களின் வேலை சிரார்த்த பலன்களை கொண்டு சேர்ப்பது. 


இல்லறத்தில் இருப்பவன், அந்த தென் புலத்தாருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும்.  


உங்களுக்கு இந்த கடவுள், தென் புலத்தார், சிரார்த்தம் என்பவற்றில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.  நீங்கள் இன்று இந்த இன்பங்களை அனுபவிக்கக் காரணமாக இருந்த உங்கள் முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு வாய்ப்பாக இதைக் கருதி செய்யலாம். உங்கள் முன்னோர்கள் பற்றி உங்களுக்கு சந்தேகம் இருக்காதே?


அடுத்தது, "தெய்வம்".  நம் இலக்கியங்கள் பெரும்பாலானவை தெய்வம் உண்டென்று நம்பின. எனவே, தெய்வத்திற்கு செய்ய வேண்டிய முறைமைகளை ஒரு இல்லறத்தான் செய்ய வேண்டும். 


அடுத்தது,  "விருந்து". விருந்து என்றால் புதுமை என்று பொருள். நமக்கு முன் பின் தெரியாத ஒருவர் நம் வீட்டுக்கு வந்தால் அவர் விருந்தனர். என் பெற்றோர், என் உடன் பிறப்புகள் என் வீட்டுக்கு வந்தால், அதற்கு விருந்து என்று பெயர் அல்ல. முன்ன பின்ன அறியாதவன் வந்தாலே அவனை உபசரிக்க வேண்டும் என்றால் மற்றவர்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?


அடுத்து, "ஒக்கல்" என்றால் சுற்றத்தார். உறவினர். உறவினரை பேண வேண்டும் என்பதை ஒரு கடமையாக வைத்தது நம் பண்பாடு. 


அடுத்தது, "தான்". இங்கு தான் வள்ளுவர் உயர்ந்து நிற்கிறார். எல்லோரையும் பார்த்துக் கொண்டு, உன்னை நீ கவனிக்காமல் விட்டு விடாதே. உன்னையும் நீ போற்றி பாதுகாக்க வேண்டும் என்கிறார். 


எனவே, இல்வாழ்வான் என்பவன்

1. பிரமச்சாரி 

2. வானப்ரஸ்ததில் உள்ளவன் 

3. துறவி 

4. காக்கப் பட வேண்டியவர்களால் கை விடப் பட்டவர்கள் 

5. ஏழ்மையில் வாடுபவர்கள் 

6. அனாதையாக இறந்தவர்கள் 

7.  தென் புலத்தார் 

8. தெய்வம் 

9. விருந்தினர் 

10. சுற்றம் 

11. தான் 


என்ற இந்த பதினொரு பேருக்கு உதவி செய்ய வேண்டும். அது இல்லற தர்மம். கடமை. 


இந்த பதினொரு கடமைகளை செய்வதாக இருந்தால் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் ஈடுபடு. இல்லை என்றால், இல்லறம் உனக்கு அல்ல என்கிறார் வள்ளுவர். 


இல்லற கடமைகளை சொல்லியாகிவிட்டது. 


இதற்கு மேல் இல்லறத்தில் என்ன இருக்கும் ? மூன்று குறள்தான் ஆகி இருக்கிறது. இன்னும் ஏழு குறளில் என்ன சொல்லி இருப்பார்? 



Thursday, July 15, 2021

திருக்குறள் - ஓம்பல் தலை - பாகம் 1

திருக்குறள் - ஓம்பல் தலை - பாகம் 1 


நீங்கள் இன்று இந்த ப்ளாகை வாசிக்கிறீர்கள் என்றால், இதற்குமுன் சில விடயங்கள் நடந்து இருக்க வேண்டும். அவை எல்லாம் ஒழுங்காக நடந்து இருந்தால் தான், நீங்கள் இதை வாசிக்க முடியும். 


அவை என்னென்ன?


முதலில் நீங்கள் பிறந்து இந்தக் கணம் வரை உயிரோடு இருக்க வேண்டும். எத்தனை நோய், எத்தனை ஆபத்துகளை கடந்து வந்து இருகிறீர்கள். சாலையை கடக்கும் போது விபத்து நேர்ந்து இருக்கலாம். அல்லது நீங்கள் செல்லும் வாகனம்  விபத்துக்கு உள்ளாகி இருக்கலாம், நீங்கள் வசிக்கும் இடத்தை வெள்ளம் அடித்துக் கொண்டு போய் இருக்கலாம், இப்படி ஆயிரம் ஆயிரம் ஆபத்துகளில் இருந்து தப்பி வந்து இருகிறீர்கள். எவ்வளவு பெரிய விசயம். 


அடுத்தது, உங்கள் பெற்றோர் உங்களைப் பெற்றெடுக்கும் வரை உயிரோடு இருந்து இருக்க வேண்டும். அவர்கள் இல்லை என்றால் நீங்கள் இல்லை. அவர்கள் எவ்வளவு சிக்கல்களை மீறி பிழைத்து உங்களை பெற்று எடுத்து இருக்கிறார்கள். 


அடுத்தது, அவர்களின் பெற்றோர், அதாவது உங்கள் தாத்தா பாட்டி, 


அவர்களின் பெற்றோர் என்று இந்த பரம்பரை சங்கிலி எத்தனை ஆயிரம் வரும் பின்னோக்கி போகும்? இதில் ஒருவர் அகாலத்தின் மரணம் அடைந்து இருந்தால் கூட நீங்கள் பிறந்து இருக்க மாட்டீர்கள். இந்த குறளை வாசித்து, அட, இவ்வளவு இருக்கிறதா என்று வியந்து இரசிக்க முடியாது. 


சரி, அதோடு போகிறதா, உங்கள் முன்னோருக்கு முன்னால், குரங்கில் இருந்து வந்தோம் என்று சொல்கிறார்கள். அந்த குரங்கு பரம்பரை, அதற்கு முன் அது எதுவாக இருந்ததோ அதன் பரம்பரை என்று இந்த உலகில் முதல் செல் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை ஒரு இடை விடாத சங்கிலி இருந்து வந்து இருக்கிறது. 


அந்த மாபெரும் உயிர் சங்கிலியில் முதல் கண்ணி ஒரு அமீபா அல்லது ஏதோ ஓர் ஒரு செல் உயிரினம். அதன் கடைசி கண்ணி, நீங்கள். 


பிரம்பிப்பாக இருக்கிறது அல்லவா? அத்தனையும் உண்மை. இதில் ஒரு தொடர் விட்டுப் போனாலும், நீங்களும் நானும் இல்லை. 


நீங்கள் அனுபவிக்கும் அத்தனை இன்பங்களுக்கும், உங்களுக்கு முன் இருந்த அத்தனை கோடி உயிர்களும் துணை செய்து விட்டுப் போய் இருக்கின்றன. 


அவவ்ர்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமா? வேண்டாமா? 


உங்கள் அப்பா அம்மா, தாத்தா பாட்டி வரை உங்களுக்குத் தெரியும். அதற்கு முன் கோடானு கோடி உயிர்கள் ஒன்று சேர்ந்து போராடி, அத்தனை ஆபத்துகளையும் தாண்டி உங்களை கொண்டு வந்து சேர்த்து இருக்கிறார்கள். 


அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமா இல்லையா?


அதைத்தான் இந்தக் குறளில் சொல்கிறார்...


பாடல் 


தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/1_15.html


(please click the above link to continue reading)



தென்புலத்தார் = தென் திசையை சேர்ந்தவர்கள் 


தெய்வம் = தெய்வம் 


விருந்தொக்கல் = விருந்து , ஒக்கல் 


தானென்றாங்கு = தான் என்று ஆங்கு 


ஐம்புலத்தாறு = ஐந்து இடத்துக்கும் செய்யும் அற நெறிகளை விடாமல் 


ஓம்பல் தலை = கைக் கொள்ளுதல், சிறந்த அறமாகும் 



இதன் விரிவான விளக்க உரையை நாளை காண்போம். 


Wednesday, July 14, 2021

சிலப்பதிகாரம் - ஈது ஒன்று

 சிலப்பதிகாரம் - ஈது ஒன்று 


கண்ணகி சூரியனிடம் கேட்கிறாள் "என் கணவன் கள்வனா" என்று. காய் கதிர் செல்வனும் "உன் கணவன் கள்வன் அல்லன்" என்று சொல்லி விடுகிறான். 


இங்கே சூடு பிடிக்கிறது கிளைமாக்ஸ். 


அதில் நுழைவதற்கு முன்னால், தன் கணவன் வேறு ஒரு பெண்ணிடம் சென்றான் என்பது கண்ணகிக்குத் தெரியும்; குன்றென இருந்த செல்வம் அனைத்தையும் கரைத்தான் என்று அவளுக்குத் தெரியும்; நாடு விட்டு நாடு கன்னைகியை நடத்தியே கூட்டி வந்தான் என்பதும் அவளுக்குத் தெரியும்.


இத்தனையும் அவள் பொறுத்துக் கொள்கிறாள். 


ஏன்?  


கோவலனோடு சண்டை போட்டு இருக்க வேண்டாமா? ஊரை எரிக்கும் வண்மை உள்ள அவள், குறைந்த பட்சம் இது பற்றியெல்லாம் பேசியாவது இருக்க வேண்டாமா?  கண்டித்து இருக்க வேண்டாமா? 


பஞ்சாயத்தை கூட்டி நியாயம் கேட்டிருக்க வேண்டாமா? கோவலன் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி அவனை உண்டு இல்லை என்று செய்திருக்க வேண்டாமா?  


பெண் என்றால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டுமா? ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், பெண் அமைதியாக இருக்க வேண்டுமா?   இதையெல்லாம் இந்தக் கால பெண்களிடம் சொன்னால், சிரிப்பார்கள். 


அது அல்ல செய்தி. 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_14.html

(click the above link to continue reading)


குடும்பத்துக்குள் தவறு நடக்கும். தவறை சரி என்று சொல்ல வரவில்லை. தவறுகளை பொறுக்க முடியாவிட்டால், ஒரு நொடியில் குடும்பம் அழிந்து போகும். அநியாயம், தவறு இவை எல்லாம் குடும்பத்தில் நடக்கவே செய்யும். 


பொறுத்துதான் போக வேண்டும். சகிக்கத்தான் வேண்டும். வேறு வழி இல்லை. 


ஆ...பெண்ணுக்கு வந்தால் சகிக்க வேண்டும், பொறுக்க வேண்டும் என்று சொல்ல வேண்டியது. இதுவே ஆணுக்கு வந்தால் இப்படி சொல்வீர்களா? பெண் என்றால் ஒரு ஏமாளி என்று ஒரு நினைப்பு...


அந்த எண்ணமும் தவறு. 


மூத்த மகனுக்கு வர வேண்டிய அரசை, சின்னம்மா தட்டிப் பறித்து தன் மகனுக்குக் கொடுத்தாள், இராமயணத்தில். அது தவறு தானே. அது மட்டும் அல்ல, இராமனை காட்டுக்கும் விரட்டி விட்டாள். இராமன் என்ன தவறு செய்தான்? அவனை ஏன் நாட்டை விட்டு விரட்ட வேண்டும்?   


இராமன் சண்டை போடவில்லை. அப்பாவுக்கு சின்னம்மா மேல் அன்பு அதிகம். அதைப் பயன் படுத்தி அவள், நியாயம் இல்லாமல் அரசையும் பிடுங்கிக் கொண்டு, நாட்டை விட்டும் விரட்டி விடுகிறாள். 


இராமன் பொறுத்துக் கொண்டான். புன்னகையோடு ஏற்றுக் கொண்டான்.  


இராமன் நினைத்து இருந்தால், ஒரு நொடியில் கைகேயியையும் பாரதனையுக் சிறையில் அடைத்து இருக்க முடியும். 


குடும்பம் என்றால் இதெல்லாம் இருக்கும். சகிக்கத்தான் வேண்டும். 


நீதி, நேர்மை, நியாயம் என்று கொடி பிடித்தால் அவை ஜெயிக்கும், குடும்பம் தோற்றுப் போகும். 


இவற்றை எல்லாம் எப்படி சொல்லி புரிய வைப்பது? 


கணவன் தவறு செய்தால் விவாகரத்து, பெற்றோர் கண்டித்தால் காவல் துறையில் புகார், ஆசிரியர் அடித்தால் அவருக்கு சிறைத் தண்டனை என்ற காலத்துக்கு வந்து விட்டோம். 


கதைக்கு வருவோம். 


பாடல் 


என்றனன் வெய்யோன்; இலங்கு ஈர் வளைத் தோளி

நின்றிலள்-நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி:

‘முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும்

நிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள்! ஈது ஒன்று:


பொருள் 



இன்றைய முன்னுரை சற்றே நீண்டு விட்டதால், பொருள் பற்றி நாளை சிந்திக்க இருக்கிறோம்