Thursday, July 15, 2021

திருக்குறள் - ஓம்பல் தலை - பாகம் 1

திருக்குறள் - ஓம்பல் தலை - பாகம் 1 


நீங்கள் இன்று இந்த ப்ளாகை வாசிக்கிறீர்கள் என்றால், இதற்குமுன் சில விடயங்கள் நடந்து இருக்க வேண்டும். அவை எல்லாம் ஒழுங்காக நடந்து இருந்தால் தான், நீங்கள் இதை வாசிக்க முடியும். 


அவை என்னென்ன?


முதலில் நீங்கள் பிறந்து இந்தக் கணம் வரை உயிரோடு இருக்க வேண்டும். எத்தனை நோய், எத்தனை ஆபத்துகளை கடந்து வந்து இருகிறீர்கள். சாலையை கடக்கும் போது விபத்து நேர்ந்து இருக்கலாம். அல்லது நீங்கள் செல்லும் வாகனம்  விபத்துக்கு உள்ளாகி இருக்கலாம், நீங்கள் வசிக்கும் இடத்தை வெள்ளம் அடித்துக் கொண்டு போய் இருக்கலாம், இப்படி ஆயிரம் ஆயிரம் ஆபத்துகளில் இருந்து தப்பி வந்து இருகிறீர்கள். எவ்வளவு பெரிய விசயம். 


அடுத்தது, உங்கள் பெற்றோர் உங்களைப் பெற்றெடுக்கும் வரை உயிரோடு இருந்து இருக்க வேண்டும். அவர்கள் இல்லை என்றால் நீங்கள் இல்லை. அவர்கள் எவ்வளவு சிக்கல்களை மீறி பிழைத்து உங்களை பெற்று எடுத்து இருக்கிறார்கள். 


அடுத்தது, அவர்களின் பெற்றோர், அதாவது உங்கள் தாத்தா பாட்டி, 


அவர்களின் பெற்றோர் என்று இந்த பரம்பரை சங்கிலி எத்தனை ஆயிரம் வரும் பின்னோக்கி போகும்? இதில் ஒருவர் அகாலத்தின் மரணம் அடைந்து இருந்தால் கூட நீங்கள் பிறந்து இருக்க மாட்டீர்கள். இந்த குறளை வாசித்து, அட, இவ்வளவு இருக்கிறதா என்று வியந்து இரசிக்க முடியாது. 


சரி, அதோடு போகிறதா, உங்கள் முன்னோருக்கு முன்னால், குரங்கில் இருந்து வந்தோம் என்று சொல்கிறார்கள். அந்த குரங்கு பரம்பரை, அதற்கு முன் அது எதுவாக இருந்ததோ அதன் பரம்பரை என்று இந்த உலகில் முதல் செல் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை ஒரு இடை விடாத சங்கிலி இருந்து வந்து இருக்கிறது. 


அந்த மாபெரும் உயிர் சங்கிலியில் முதல் கண்ணி ஒரு அமீபா அல்லது ஏதோ ஓர் ஒரு செல் உயிரினம். அதன் கடைசி கண்ணி, நீங்கள். 


பிரம்பிப்பாக இருக்கிறது அல்லவா? அத்தனையும் உண்மை. இதில் ஒரு தொடர் விட்டுப் போனாலும், நீங்களும் நானும் இல்லை. 


நீங்கள் அனுபவிக்கும் அத்தனை இன்பங்களுக்கும், உங்களுக்கு முன் இருந்த அத்தனை கோடி உயிர்களும் துணை செய்து விட்டுப் போய் இருக்கின்றன. 


அவவ்ர்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமா? வேண்டாமா? 


உங்கள் அப்பா அம்மா, தாத்தா பாட்டி வரை உங்களுக்குத் தெரியும். அதற்கு முன் கோடானு கோடி உயிர்கள் ஒன்று சேர்ந்து போராடி, அத்தனை ஆபத்துகளையும் தாண்டி உங்களை கொண்டு வந்து சேர்த்து இருக்கிறார்கள். 


அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமா இல்லையா?


அதைத்தான் இந்தக் குறளில் சொல்கிறார்...


பாடல் 


தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/1_15.html


(please click the above link to continue reading)



தென்புலத்தார் = தென் திசையை சேர்ந்தவர்கள் 


தெய்வம் = தெய்வம் 


விருந்தொக்கல் = விருந்து , ஒக்கல் 


தானென்றாங்கு = தான் என்று ஆங்கு 


ஐம்புலத்தாறு = ஐந்து இடத்துக்கும் செய்யும் அற நெறிகளை விடாமல் 


ஓம்பல் தலை = கைக் கொள்ளுதல், சிறந்த அறமாகும் 



இதன் விரிவான விளக்க உரையை நாளை காண்போம். 


1 comment: