Wednesday, July 28, 2021

விவேக சிந்தாமணி - மூடரை மூடர் கொண்டாடியது போல

 விவேக சிந்தாமணி - மூடரை மூடர் கொண்டாடியது போல 


ஒரு ஊர்ல ஒரு கழுதை இருந்தது. அந்தக் கழுதை இராத்திரி ஆனா, ஊருக்கு வெளியே உள்ள ஒரு காட்டுக்குப் போய், சத்தம் போட்டு தன்னுடைய இனிய குரலால் பாடும்.  அந்தக் காட்டுல ஒரு பேய் இருந்து வந்தது. அந்த பேய்க்கு இந்த கழுதையின் பாட்டு ரொம்ப பிடித்துப் போய் விட்டது. 


"ஆஹா, கழுதையாரே உன்னுடைய குரல் வளமே வளம். என்ன அருமையா பாடுற...இன்னும் கொஞ்சம் பாடு " என்று இரசித்துக் கேட்கும். 


அதைக் கேட்ட உடன், கழுதைக்கு பெருமை தாங்காது. நம்மை விட்டா இனிமையா பாட இந்த உலகத்ல யாரும் இல்லைன்னு பெருமிதம் கொள்ளுமாம். 


ஊருக்குள்ள இப்படி நிறைய கழுதைகளும், பேய்களும் இருக்கின்றன. 


முட்டாளை பெரிய ஆள் என்று போற்றுவதும், அதைக் கேட்ட அந்த முட்டாள், நம்மை விட பெரிய புத்திசாலி இந்த ஈரேழு பதினாலு உலகிலும் கிடையாது என்று நினைப்பதும், நாளும் நடப்பது தானே....


பாடல் 


கழுதை காவெனக் கண்டுநின் றாடிய வலகை

தொழுது மீண்டுமக் கழுதையைத் துதித்திட வதுதான்

பழுதி லாநமக் கார்நிக ராமெனப் பகர்தல்

முழுது மூடரை மூளர்கொண் டாடிய முறைபோல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_28.html



(pl click the above link to continue reading)


கழுதை  = கழுதை 


'கா' வெனக் = காள் காள் என்று பாடியதைக் 


கண்டு  = கண்டு 


நின் றாடிய = நின்று, அந்தப் பாட்டுக்கு ஆடிய 


வலகை = பேய் 


தொழுது = அந்தக் கழுதையை தொழுது 


மீண்டும் = மீண்டும் 


அக் கழுதையைத் = அந்தக் கழுதையை 


துதித்திட = போற்றிட 


அதுதான் = அந்தக் கழுதையும் தான் 


பழுதி லா = குற்றமில்லாத 


நமக் கார் = நமக்கு யார் 


நிக ராமெனப் = நிகராம் என 


பகர்தல் = சொல்லி 


முழுது மூடரை = முழு முட்டாளை 


மூளர்கொண் டாடிய முறைபோல் = முட்டாள் கொண்டாடியது போல 


சங்கீதம்னா என்ன என்று கழுதைக்கும் தெரியாது, பேய்க்கும் தெரியாது. 


நாட்டுக்குள்ள நிறைய பேய்கள், பல கழுதைகளை பாராட்டிக் கொண்டு இருக்கின்றன. 


இத்தனை பேய்கள் பாராட்டுகிறதே, அது தப்பாவா இருக்கும் என்று மற்றவர்களுக்கும் ஒரு சந்தேகம் வரத் தான் செய்யும். 


எத்தனை பேர் பாராட்டுகிறார்கள் என்பதல்ல முக்கியம். 


பாராட்டுபவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். 


ஒரு முட்டாளை இன்னொரு முட்டாள் பாராட்டினால் பாராட்டி விட்டுப் போகட்டும். 


நமக்கு என்ன?



3 comments:

  1. ஆமாம் அண்ணா ....பாராட்டிவிட்டுப் போகட்டுமே ...நமக்கென்ன - சரிதான்..

    ReplyDelete
  2. நிறைய ஆட்கள் நாட்டுக்குள் இப்பிடி இருக்கிறார்கள்

    ReplyDelete