Monday, July 26, 2021

கம்ப இராமாயணம் - இரண்டின் ஒன்றே துணிக

கம்ப இராமாயணம் - இரண்டின் ஒன்றே துணிக 


அங்கதனை தூது அனுப்புவது என்று முடிவு ஆகி விட்டது. அங்கதனுக்கும் அதில் பெரிய மகிழ்ச்சி. 


இராவணனிடம் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்கிறான் அங்கதன். 


அதற்கு இராமன் 


"ஒண்ணு சீதையை விட்டு விட்டு உன் உயிரை காத்துக் கொள். அல்லது சண்டை போட்டு உன் தலைகள் பத்தும் போர்க் களத்தில் சிதறி விழும். இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்து எடுத்துக் கொள் என்று சொல்லிவிட்டு வா" என்கிறான். 



பாடல் 




 'என் அவற்கு உரைப்பது?' என்ன,  ' "ஏந்திழையாளை விட்டுத


தன் உயிர் பெறுதல் நன்றோ? அன்றுஎனின்,  தலைகள் பத்தும்


சின்னபின்னங்கள் செய்ய, செருக்களம் சேர்தல்  நன்றோ?


சொன்னவை இரண்டின் ஒன்றே துணிக!" எனச் சொல்லிடு' என்றான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_26.html


(pl click the above link to continue reading)


 'என் அவற்கு உரைப்பது?' என்ன = இராவணனுக்கு என்ன தூது செய்தி சொல்லட்டும் என்று அங்கதன் கெட்ட போது 


"ஏந்திழையாளை = அழகிய ஆபரணங்களை அணிந்த சீதையை 


விட்டுத் = சிறையில் இருந்து விடுவித்து 


தன் உயிர் பெறுதல் நன்றோ? = உன்னுடைய உயிரை தக்க வைத்துக் கொல்லுதல் நல்லதா 


அன்றுஎனின்,  = இல்லை என்றால் 


தலைகள் பத்தும் = பத்துத் தலைகளும் 


சின்னபின்னங்கள் செய்ய = சின்னா பின்னாமாக 


செருக்களம் சேர்தல்  நன்றோ? = போர்க் களத்தில் விழுந்து கிடப்பது நல்லதா 


சொன்னவை இரண்டின் = நான் சொன்ன இந்த இரண்டில் 


ஒன்றே துணிக!" = ஒன்றை தேர்ந்து எடுப்பாயாக 


எனச் சொல்லிடு' என்றான். = என்று சொல்லி விட்டு வா என்றான். 


சில கெட்ட காரியங்களை செய்யத் தொடங்கி விட்டால் பின் அதை நாமே நினைத்தால் கூட விட முடியாது. 


சரி,  இது சரிப்பட்டு வராது என்று இராவணன் சீதையை விட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் ?


அவனுக்கு அது பெரிய தலை குனிவாகப் போய் இருக்கும். எல்லோரும் அவனை பார்த்து சிரிப்பார்கள். அவன் வீரம், மானம், பெருமை எல்லாம் சிறுத்து விடும். இராமனிடம் பயந்து விட்டான் என்று எதிரிகள் அவனை ஏளனம் செய்வார்கள். 


எனவே, சீதையை சிறை விடுவது என்பது முடியாத காரியமாகப் போய் விட்டது. 


உடன் பிறந்த தம்பி இறந்தான், பெற்ற பிள்ளை இறந்தான், இருந்தும் முடியவில்லை. கடைசியில் அவனிடம் இருந்தது காமம் அல்ல. பிடிவாதம். நான் விடுவதா என்ற அகம்பாவம். 


விடாவிட்டால், சண்டை போட்டு உயிரை விட வேண்டி வரும். 


சிந்திக்க வேண்டும். 


கெட்ட செய்கைகளை ஆரம்பிக்கவே கூடாது. பின் அது நம்மை விடாது, நாம் விட்டு விடலாம் என்று நினைத்தால் கூட. 


ரொம்ப ஏன் சிந்திப்பான்? காப்பி, அதை விட முடிகிறதா? 


ஒரு தடவைதானே என்று ஆரம்பித்த எத்தனை கெட்ட பழக்கங்கள் ஒட்டிக் கொண்டு விடுகின்றன. 


மாற்றான் மனைவி மேல் கொண்ட ஆசை அவனை எங்கு கொண்டு நிறுத்தியது? 


அது அறத்தின் வலிமை. 




No comments:

Post a Comment