Tuesday, July 27, 2021

திருக்குறள் - அறனிழுக்கா இல்வாழ்க்கை

திருக்குறள் - அறனிழுக்கா இல்வாழ்க்கை


முந்தைய குறளில் துறவறத்தை விட இல்லறமே சிறந்தது என்று கூறினார். அதே கருத்தை மேலும் வலியுறுத்துகிறார் இந்தக் குறளில். 


பாடல் 


 ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து


பொருள்  


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_27.html


(pl click the above link to continue reading)


ஆற்றின் = வழியில், நல்ல வழியில் 


ஒழுக்கி = நடத்திச் சென்று, நடக்கச் செய்து 


 அறனிழுக்கா = அறவழியில் இருந்து தவறாத 


 இல்வாழ்க்கை = இல்வாழ்கை 


நோற்பாரின் = தவம் நோற்பாரின், தவம் மேற் கொள்வாரின் 


நோன்மை  = வலிமை, சிறப்பு 


உடைத்து = உடையது.


அதாவது, தவம் மேற்கொள்வாரின் வாழ்கையை விட, இல்வாழ்கை உயர்ந்தது என்கிறார். 


கொஞ்சம் விரித்து பொருள் காண்போம். 


"ஒழுக்கி" ஒழுகி என்றால் தான் ஒழுகுதல். ஒழுக்கி என்றால் மற்றவர்களை நடத்திச் செல்லுதல்? 


யாரை ஒழுக்கி?  பிரம்மச்சாரி, வானப்ரஸ்தம், துறவு மேற்கொண்டவர்களை அவர்கள் அறத்துக்கு ஏற்ப வாழ்வை நடத்த உதவி செய்து என்று பொருள் கொள்ள வேண்டும். 


மற்றவர்களுக்கு, அற வழியில் செல்ல உதவி செய்கிறேன் பேர்வழி என்று தான் அற நெறியை கை விட்டு விடக் கூடாது என்பதற்காக "அறனிழுக்கா இல்வாழ்க்கை" என்றார். 


எல்லோருக்கும் நினைப்பு என்ன என்றால், தவம் செய்பவர்கள் பெரியவர்கள், உயர்ந்தவர்கள் என்று. 


திருவள்ளுவர் அதை மறுதலிக்கிறார்.  தவம் முயல்வாரைவிட இல்லற வாழ்வில் உள்ளவன் உயர்ந்தவன் என்கிறார். 


சரி, அப்படி என்றால், துறவறம் என்று ஒன்று எதற்கு? பேசாமல் எல்லோரும் இல்லறத்திலேயே இருந்து விடலாமே. துறவறத்தை விட இல்லறம் உயர்ந்தது என்றால், ஏன் தவம், விரதம் என்று துன்பப் பட வேண்டும் ? 


பின் வரும் குறள்களில் துறவறத்தை தூக்கிப் பிடிக்கிறார் வள்ளுவர்.


அப்படி என்றால் என்ன தான் சொல்ல வருகிறார்?


படிக்கப் படிக்கப் புரியும். இப்போது சொன்னால் குழப்பமே மிஞ்சும். 


பொறுமையுடன் ஒவ்வொன்றாக வாசித்துக் கொண்டே போனால், எல்லாம் தெளிவாகும். 


என்ன அவசரம்...மெதுவாக படிப்போமே....


2 comments:

  1. வணக்கம் அண்ணா

    அதானே என்ன அவசரம் ....

    ReplyDelete
  2. காத்திருக்கிறோம்

    ReplyDelete