Monday, June 7, 2021

திருக்குறள் - ஆக்கமும் கேடும்

திருக்குறள் - ஆக்கமும் கேடும் 


அற வழியில் சென்றால் வீடு பேறு, சுவர்க்கம் இதெல்லாம் கிடைக்கும் என்று முந்தைய குறளில் சொன்னார்.  


அற வழியில் போனால் மட்டும் தான் கிடைக்குமா? வேற வழியில் போனால் கிடைக்காதா? 


ஒரு ஊருக்கு போக ஒரு வழிதான் இருக்குமா? எப்படி போனால் என்ன? ஊர் போய் சேர வேண்டும். அதுதானே கணக்கு. 


அது ஒரு கேள்வி. அது ஒரு புறம் இருக்கட்டும். 


எனக்கு இந்த சொர்கம், வீடு பேறு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. இல்லாத ஒன்றிற்கு ஏன் கிடந்து இவ்வளவு கஷ்டப் பட வேண்டும்? இருக்குற வரை சந்தோஷமா இருப்போம்.  


சாப்பாடு, வேலை, தூக்கம், டிவி, மொபைல், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று சந்தோஷமாக இருந்து விட்டுப் போவோமே...போகாத ஊருக்கு வழி தேடுவானேன். 


வீடு பேறு விரும்புபவர்கள் அற வழியில் போகட்டும். நான் என் வழியில் போகிறேன். அதில் என்ன தவறு?


இது இரண்டாவது கேள்வி. 


விதண்டாவாதம் பண்ணுகிறவர்கள் இருப்பார்கள்தானே ? அவர்களுக்கும் பதில் சொல்லத்தான் வேண்டும்.


வள்ளுவர் சொல்கிறார். 


"அறத்தினால் பெரிய பெரிய ஆக்கங்கள் வரும். அறத்தை மறந்தால்? அதைப் போல (மறத்தலைப் போல) பெரிய தீங்கு வரவழைக்கும் செயல் வேறு இல்லை" என்கிறார். 


பாடல் 

 

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_7.html


(please click the above link to continue reading)




அறத்தின் = அறத்தை விட 


உங்கு = உயர்ந்த 


ஆக்கமும்  = பெருக்கம் 


இல்லை  = வேறு இல்லை 


அதனை = அந்த அறத்தை 


மறத்தலின் = மறத்தலைப் போல 


ஊங்கில்லை  = பெரியது ஒன்றும் இல்லை 


கேடு = கேடு விழைவிக்க 


எனக்கு வீடு பேறு , சுவர்க்கம் எல்லாம் வேண்டாம். நான் பொய், களவு, இலஞ்சம், கொலை, கொள்ளை என்று அறம் அல்லாத வழியில் போய்க் கொள்கிறேன் என்று சொன்னால், அதைப் போல பெரிய தீங்கு  வேறு எதுவும் இல்லை. 


அற வழியில் சென்றால் நல்லது நடக்கும். 

அற வழியில் செல்லவில்லை என்றால் பெரிய கேடு வந்து சேரும்.


எப்படி பார்த்தாலும், அற வழியில் செல்வதே சிறந்தது என்று வள்ளுவர் கூறுகிறார். 



1 comment:

  1. அற்புதம் அண்ணா விளக்கம்

    ReplyDelete