Thursday, October 14, 2021

திருக்குறள் - அன்புடைமை - ஒரு முன்னோட்டம்

திருக்குறள் - அன்புடைமை - ஒரு முன்னோட்டம் 


வாழ்வின் நோக்கம் அன்பின் விரிவாக்கம். 


அவ்வளவுதான். 


எப்படி பார்த்தாலும், அடிப்படை அன்பு மேலும் மேலும் விரிந்து கொண்டே போவதுதான் நோக்கம். 


குழந்தையாக, சிறுவனாக இருக்கும் போது, அதன்  அன்பு எல்லாம் தன் மேலேயே இருக்கிறது. எல்லாம் தனக்கு வேண்டும் என்று குழந்தை நினைக்கும். 


வளர்ந்து, திருமணம் ஆன பின், தனக்கென்று ஒருத்தி (வன்) வந்த பின், அவள் மேல் அன்பு பிறக்கிறது. அவளுக்கு பிடிக்கும் என்று சிலவற்றை செய்கிறான். அவளுக்கென்று நேரம் ஒதுக்குக்கிறான். 


ஆனால், கணவன் மனைவி அன்பு பரிமாற்றத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அவள் எனக்கு இன்பம் தருகிறாள், எனக்கு உதவி செய்கிறாள் எனவே நான் அவள் மேல் அன்பு செய்கிறேன் என்று அன்பு செலுத்துவதில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. 


பிள்ளை வந்த பின் அந்த அன்பு மேலும் விரிகிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிள்ளை மேல் அன்பு பிறக்கிறது. பிள்ளையை பார்க்கும் போது அன்பு, அது பேசும் போது, அதை தழுவிக் கொள்ளும் போது இன்பம் பிறக்கிறது. அன்பு வருகிறது. 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_14.html


(Please click the above link to continue reading)



இல்வாழ்க்கை, 

வாழ்க்கைத் துணைநலம், 

புதல்வர்களைப் பெறுதல் 


என்று மூன்று அதிகாரங்களை பார்த்தோம்.


அடுத்தது, அன்பு, குடும்பத்தைத் தாண்டி, சமுயாத்தின் மேலும் பரவுகிறது. தன் பிள்ளையை போல் மற்ற பிள்ளைகள் மேலும் அன்பு பிறக்கும். அடுத்த வீட்டுக் காரன், அயல் வீட்டுக் காரன், நட்பு, சுற்றம் என்று அன்பு மேலும் விரிகிறது. 


பிள்ளை வந்த பின் தான் அன்பு என்றால் என்ன என்றே ஒருவனுக்கு புலப்படுகிறது.  அந்த அன்பு சமுதாயத்தின் மேலும் விரியும். 


எனவே அடுத்த அதிகாரம் 


"அன்புடைமை"


அன்பு அருளாக வேண்டும். 


தொடர்புடையார் மாட்டு செய்வது அன்பு. 


தொடர்பிலார் மாட்டும் செய்வது அருள். 


அன்பு அருளாக வேண்டும். 


இனி, அன்புடைமை பற்றி காண இருக்கிறோம். 



No comments:

Post a Comment