Tuesday, December 14, 2021

திருக்குறள் - விதைக்காமல் விளையும் பயிர்

திருக்குறள் - விதைக்காமல் விளையும் பயிர் 


நேரடியாக புரிந்து கொள்ள முடியாத குறள்களில் இதுவும் ஒன்று. 


"விருந்தினர்களை போற்றி, அவர்களுக்கு உணவு அளித்து அதில் உள்ள மிச்சத்தை உண்பவன் நிலத்தில் விதை போடவும் வேண்டுமா? என்று குறள் கேட்கிறது. 


வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார்?


விதை போடாமலேயே அவன் நிலத்தில் பயிர் விளையும் என்கிறார். 


பாடல் 


வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சின் மிசைவான் புலம்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/12/blog-post_14.html


(Please click the above link to continue reading)



வித்தும் = விதையும் 


இடல்வேண்டும்  = இட வேண்டுமா? நட வேண்டுமா? 


 கொல்லோ  = அசைச் சொல் 


விருந்தோம்பி = விருந்தைப் போற்றி 


மிச்சின் = மிச்சம் இருப்பதை 


மிசைவான் = உண்பவன் 


புலம் = தோட்டம், வயல், நிலம் 


வீட்டுக்கு வந்த விருந்தினர்களை உபசரித்து, அவர்கள் உண்டது போக மிச்சம் இருப்பதை உண்டு வாழ்பவன் வீட்டுத் தோட்டத்தில் விதை போடாமலேயே பயிர் வளரும் என்கிறார். 


அது எப்படி என்று சொல்லவில்லை. பல உரை ஆசிரியர்கள் உரை செய்தாலும் யாரும் அது எப்படி என்று சொல்லவில்லை. பரிமேலழகரும் சொல்லாமல் மேலே சென்று விடுகிறார். 


ஒன்று, ஒரு அழகுக்காக, மிகுதியாக சொல்லி இருக்கலாம். நிலா போல முகம் என்று கூறுவது இல்லையா. 


அல்லது, ஏதோ ஒரு ஆழ்ந்த பொருள் இருக்கலாம், நமக்குத் தெரியவில்லை. 


அல்லது, ஏதேனும் எழுத்து அல்லது சொல் காலப் போக்கில் மாறி இருக்கலாம். நமக்குத் தெரியவில்லை. 


எப்படியாக இருந்தாலும், விருந்தை உபசரிப்பதன் இம்மைப் பலன் பற்றி கூறுகிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். 


மேலே செல்வோம். 




No comments:

Post a Comment