Wednesday, December 22, 2021

திருக்குறள் - வேள்விப் பயன்

 திருக்குறள் - வேள்விப் பயன் 


விருந்தைப் போற்றுவதால் இம்மை மறுமை பயன்கள் பற்றி கூறினார். 


பயன் என்றால் எவ்வளவு என்று சொல்ல வேண்டும் அல்லவா. சம்பளம் தருகிறேன் என்றால் எவ்வளவு சம்பளம் என்று சொல்ல வேண்டும் அல்லவா? 


வள்ளுவர் சொல்கிறார், "விருந்தின் பயன் இவ்வளவு என்று அறுதி இட்டு கூற முடியாது. அது சொல்லில் அடங்காத அளவுக்கு பெரியது" என்கிறார்.


பொதுவாக வள்ளுவர் பெரியது என்றால் மலை போன்றது, கடல் போன்றது, பனை போன்றது என்று கூறுவார். விருந்தின் பயன் என்பது இவ்வளவு என்று கூற முடியாது, மிகப் பெரியது, அதற்கு ஒரு உதாரணம் கூட சொல்ல முடியாது என்கிறார். 


பாடல் 




இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/12/blog-post_22.html


(Please click the above link to continue reading)


இனைத் = இன்ன, இவ்வளவு 


துணைத்து = அளவுடையது 


என்பது ஒன்று இல்லை = என்று சொல்லும் அளவுக்கு ஒன்று இல்லை. உதாரணம் சொல்ல ஒன்றும் இல்லை 


விருந்தின் = விருந்தைப் பேணுவதின் 


துணைத்துணை = உதவிய அளவு 


வேள்விப் பயன் = வேள்வியின் பயன் 


நமக்கு பொதுவாக வேள்வி என்றால் ஏதோ பூஜை சம்பந்தப் பட்டது என்றுதான் தெரியும்.  


ஐந்து விதமான வேள்விகள் இருக்கின்றன. 

கடவுள் வேள்வி, 

பிரம வேள்வி, 

பூதவேள்வி, 

மானிட வேள்வி, 

தென்புலத்தார் வேள்வி


வேள்வி என்றால் இன்னொரு உயிருக்கு பலன் தருவது. 


கடவுள் வேள்வி - இறைவனுக்கு செய்வது 


பிரம வேள்வி - வேதம் முதலிய அறிவு பொக்கிஷங்களை நமக்குத் தந்த ரிஷிகள், பெரியவர்களுக்கு செய்யும் நன்றி. வள்ளுவருக்கு நீங்கள் ஒரு பூ போட்டால் அது பிரம வேள்வி. 


பூத வேள்வி - பஞ்ச பூதங்களுக்கு செய்யும் வேள்வி. நீர், ஆகாயம், தீ போன்ற பூதங்களுக்கு நன்றி சொல்வது. அவற்றின் உதவியை நாடுவது. அவற்றின் மூலம் தீங்கு வரமால் இருக்க பிரார்த்தனை செய்வது. இரண்டு மூணு வருடம் மழை என்றால் எவ்வளவு பூஜை செய்கிறார்கள்?  பக்கத்து ஊரில் நில நடுக்கம் வந்தால் "ஆண்டவா, என் பிள்ளைகளுக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது" என்று  பிரார்த்தனை செய்வது பூத வேள்வி. 


மானிட வேள்வி - மனிதர்களுக்கு செய்வது. 


தென் புலத்தார் வேள்வி - நம் முன்னோர்களுக்கு செய்வது. 


விருந்தோம்பல் என்பது மனித வேள்வி. அந்த வேள்வியின் பயன் இவ்வளவு என்று உதாரணம் கூற முடியாது என்கிறார். 




No comments:

Post a Comment